Everything posted by island
-
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்-சிறீதரன் சந்திப்பு; தீர்வு விடயத்தை ஒரு பொதுவேலைத்திட்டத்தின் ஊடாக அணுகுவதற்கும் இணக்கம்
புலம் பெயர் புலிவால்களாக இருப்பதை விட அநுர பிரிகேட்றுக்கு போய்வருவது நல்லதே. புலிவால்களாக குண்டு சட்டிக்குள் குதிரையோடுகவர்களாக இருக்காமல் அங்கு சென்று சற்றே என்றாலும் அறிவை பெற்று வந்து அறிவார்ந்த தமிழ் தேசியவாதிகளாகவாவது மாறட்டும்.
-
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்-சிறீதரன் சந்திப்பு; தீர்வு விடயத்தை ஒரு பொதுவேலைத்திட்டத்தின் ஊடாக அணுகுவதற்கும் இணக்கம்
உங்களுக்கு ஏற்கனவே சொல்லியாச்சு. உங்களிடம் இருந்து பாராட்டு கிடைத்தால் தான் நான் கவலைப்படவேண்டும். எனது கருத்தை நீங்கள் வெறுத்தால் அந்த கருத்து சரியானது என்பதால் மிக்க மகிழ்சசி எனக்கு உண்டாகும். எனவே, நன்றி விசுகு.
-
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்-சிறீதரன் சந்திப்பு; தீர்வு விடயத்தை ஒரு பொதுவேலைத்திட்டத்தின் ஊடாக அணுகுவதற்கும் இணக்கம்
@விசுகு நீங்கள் எனது கருத்தை விரும்பி விருப்ப புள்ளி இட்டால் ஐயோ நான் மொக்குதனமான கருத்தை எழுதிவிட்டேனோ என் று கவலையுறுவேன். ஆனால், நீங்கள் மைனஸ் புள்ளியிடும் போது நான் சரியாக நேர்மையாக சிந்தித்து கருத்தெழுதி உள்ளேன் என்று அக மகிழ்வேன். நன்றி விசுகு.
-
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்-சிறீதரன் சந்திப்பு; தீர்வு விடயத்தை ஒரு பொதுவேலைத்திட்டத்தின் ஊடாக அணுகுவதற்கும் இணக்கம்
ஒட்டு மொத்த தேசியம் பேசிய கட்சிகளை மக்கள் நிராகரித்துள்ளார்கள். அதிலும் வரட்டு தமிழ் தேசியம் பேசும் சைக்கிள் கட்சி பெற்ற வாக்குகள் ஒட்டு மொத்தமாக அகில இலங்கை ரீதியாக 39894 மட்டுமே. படு தோல்வி. யாழ்பாணத்தில் சைக்கில் கும்பல் பெற்ற வாக்குகளும் மூன்றே மாதம் அரசியல் செய்த அர்சனாவின் சுயேட்சை குழு பெற்ற வாக்குகளும் கிட்ட தட்ட சமமானவையே. அதாவது சுயேட்சைக்குழு 27855. சைக்கிள் குழு 27986. சென்ற முறையை விட அரைவாசி குறைவு. விருப்புவாக்கில் கஜேந்திரகுமாரும் சுமந்திரனும் பெற்ற விருப்பு வாக்குகள் கிட்டத்தட்ட சமமானதே. எனவே, மக்கள் கூறிய செய்தி வரட்டு தமிழ் தேசியத்தை கைவிடுங்கள் என்பதாகும். சைக்கில் கும்பலை தோற்கடித்த மக்கள் சொல்லிய செய்தி புலம் பெயர் நாடுகளில் இருந்து சைக்கில் கும்பலை ஆதரித்த சுயநல புலிவால் கும்பல்களுக்கும் சேர்தது தான். இதன் திரு கஜேந்திரகுமார் அவர்களும் சற்றே உணர்திருக்கிறார் போலவே தெரிகிறது. அவரது போக்கில் மாற்றம் ஏற்பட்டால் அது வரவேற்கத்தக்கதே. தனது முன்னைய அரசியலை திருத்தி அவர் சரியான பாதையில் பயணிக்கும் போது இந்த புலம்பெயர் புலிவால்கள் அவருக்கும் துரோகிப்பட்டம் சூட்டுவார்கள். ஆனால் இந்த சுயநல கும்பலை புறக்கணித்து அவர் இனியாவது சரியான பாதையில் பயணிக்க வேண்டும்.
-
சிவஞானம் சிறீதரன் அரசமைப்புக் கவுன்ஸில் உறுப்பினராகத் தெரிவு
அரசியலமைப்பு கவுன்சில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கவேண்டியவர். அரசியலமைப்பு உருவாக்க குழுவுக்கு துறைசார் ஆலோசனைகளை வழங்கும் பேராசானாக இருக்கவேண்டியவரை தமிழன் என்ற ஒரே காரணத்திற்காக புறக்கணித்திருக்கிறார்கள். இருந்தாலும் இவரின் புலமையின்றி அரசியலமைப்பை வரையமுடியாது என்ற உண்மையை மனமார உணர்ததால் பின்கதவால் இவரின் புலமைசார் அறிவை பெறுமுகமாக உறுப்பினராக தேர்தெடுத்து இவரின் புலமையை பயன்படுத்த உள்ளார்கள்.
-
இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் இராமநாதன் அர்ச்சுனா கன்னியுரை
- இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் இராமநாதன் அர்ச்சுனா கன்னியுரை
ஒரு காலத்தில் எதிர்கட்சி தலைவராக இருந்த அ. அமிர்தலிங்கம் அவர்கள் பாராளுமன்றத்தில் ஆற்றும் ஆங்கில உரைகள் கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதரக மட்டத்தில் இருந்த ராஜதந்திரிகள் மட்டத்தில் பிரபல்யமாக இருந்தது. அதை கேட்கவே தூதரகங்களில் உள்ள பல ராஜதந்திரிகள் பாராளுமன்ற கலரிக்கு வருவதுண்டு. ஆனால் இந்த attraction ஐ வைத்து முழுமையான சர்வதேச பரப்புரைகளை அன்றைய தமிழர் தரப்புகள் செய்து அதை ஒரு political investment ஆக மாற்றவில்லை. ஆகவே, இவ்வாறான உரைகளை தாண்டி ஒட்டு மொத்தமான தமிழர் தரப்பால் செய்யப்படும் அரசியல் தான் படிப்படியாக எமக்கு பலனைத் தரும். தமிழரிடையே மட்டும் பெயரெடுப்பதற்காக பேசப்படும் வீர உரைகளால் கிஞ்சித்தும் பிரயோசனம் இல்லை. நினைவேந்தலுக்கு முழுமையான தடை இருக்கும் போது மகிந்த காலத்தில் பெட்டிப்பாம்பாக இருந்த கஜே இப்போது அதற்கான அனுமதியை அரசு உத்தியோகபூர்வமாக கொடுத்த பின்னர் அது போதாது என்று முழங்குவது தமிழரிடையே பெயரெடுக்கவும் இதை பேசுவதால் அரசங்கத்தான் எனக்கு எந்த ஆபத்தும் வராது என்ற துணிச்சல் மட்டுமே. இதனைத் தாண்டி மக்களின் வாழ்க்கைப் பிரச்சனைகள் பல உண்டு. அவைகள் பற்றி கவனமெடுக்க வேண்டும் ஆக்கபூர்வ நடைமுறை அரசியலை செய்ய வேண்டும்.- டபிள்யு எம்.மெண்டிஸ் நிறுவனத்தின் மதுபான உற்பத்தி உரிமம் இடைநிறுத்தம்
அதுக்கு Remy martin இருக்கு தானே!- டபிள்யு எம்.மெண்டிஸ் நிறுவனத்தின் மதுபான உற்பத்தி உரிமம் இடைநிறுத்தம்
பாராட்டப்பட வேண்டிய நடவடிக்கை. இவ்வாறான பெரு நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்வதை தடுத்து நிறுத்தி அரச வருமானத்தை அதிகரிக்க வழிசெய்யும். இவ்வாறாக Corruption ஐ ஒழிப்பது நாட்டை பொருளாதார வளர்சசிக்கு இட்டு செல்வதற்கான முதல் படி. Welldone NPP.- இந்தியாவுக்கு உண்மையான நண்பனாக இருப்பது தமிழீழம் மட்டுமே – பழ. நெடுமாறன்
அந்த சரியான நேரத்தை தீர்மானித்திருக்க வேண்டியது தீர்க்கதரிசனமான என்று கூறப்படும் தலைமையே தவிர எம்மை போன்ற சாமான்யர்கள் அல்ல. இவ்வுலகில் வாழும் சாமான்ய மக்கள் எப்படி தம் வாழ்வில் தமது இயலுமைகளை கணக்கிட்டுத் தீர்மானங்களை எடுத்து தமது வாழ்வை நடத்துகிறார்களோ, தம் வாழ்க்கைப் பயணத்தில் தமது இயலுமைகளை தாண்டி தம்மால் எடுக்கப்படும் ரிஸ்க் என்பது தமது குடும்பத்தையோ, தமது பிள்ளைகளையோ காவு கொள்ளுமென தமது உள்ளுணர்வாலோ அறிவாலோ உணர்ந்தால் அதை தவிர்தது எப்படி பொறுப்புணர்வுடன் வருமுன் காப்போனாக தமது பிள்ளைகளுக்கோ, குடும்பத்திற்கோ ஆபத்துவராமல் நடந்து கொள்கிறார்களோ அதை விட அதிகமான பொறுப்புணர்வு பெரும் மக்கட்கூட்டத்தை முழுமையாக பொறுப்பெடுத்து அரசியல் செய்யும் அரசியல் தலைமைக்கும் உண்டு. இவ்வாறு சுலபமாக மற்றயவர்களுக்கு “சுத்துமத்து” என்று எம்மால் ஒரு “பிராண்ட்” கொடுத்து விட்டு அதை அடிப்படையாக வைத்து அரசியல் தீர்மானங்களை எடுக்க முடியுமென்றால் எமக்கு சர்வதேச நாடுகள் கொடுத்த “ பயங்கரவாதி “ என்ற “பிராண்ட்” ஐ ஏற்கத்தான் வேண்டும். நாம் மற்றயவர்களுக்கு கொடுத்த “பிராண்ட்” என்பது எமக்குள் மட்டும் பேசி பொழுது போக்க மட்டுமே எமக்கு உதவும். ஆனால் உலகம் எமக்கு கொடுத்த “பிராண்ட்” எமது நியாயமான அரசியல் கோரிக்கைகளை கூட வலுவிழக்க வைத்துவிட்டது. எரிக் சோல்ஹைம் வந்தது சமாதான பேச்சுவார்ததைக்கு அனுசரணை வழங்க மட்டுமே. எப்போது இருதரப்பும் பேச்சுவார்ததையை முறித்து யுத்தத்தை தொடங்கினார்களோ அத்துடன் அவரின் பணியும் முடிந்துவிட்டது. மீள பேச்சுவார்ததை மேசைக்கு இருதரப்பையும் கொண்டுவர அவர் பல தடவை முயற்சித்ததை பத்திரிகைகளில் பார்ததோம. தானே. இருவரும் அதை உதாசீனம் செய்தால் அவரால் என்ன செய்ய முடியும்? புண்ணுக்கு வலியா? மருந்துக்கு வலியா?- தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளை நினைவுகூருவதும் ஜேவிபியின் நினைவுகூரல்களும் ஒரே மாதிரியானவை - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
நான. கூறியது வெளி நாட்டில் உள்ளவர்களை போல் எந்த ஐடியாவும் இல்லாமல் வெறும. கொடி பிடிக்கும் அரசியலை செய்வது பற்றி அல்ல. ஜேவிபி யை போல தம்மை காலத்திற்கு ஏற்ப தகவமைத்துக் கொண்டு அறிவார்ந்த அரசியல் செய்வது பற்றியே. சும்மா தோன்றிய ஐடியா மட்டுமேயொழிய வேறொன்றும் இல்லை. அது தப்பாய் போய்விடுமென்றால் விட்டுடுங்க. ஆனால், கஜனுக்கு ஒருக்கா அறிவிச்சு அதை stop பண்ண சொல்லுங்கோ. அந்தாள் நான் சொன்னதை கேட்டுட்டு காலை எழும்பி முதல் வேலையா வழக்கு போட நீதிமன்றம் தேர்தல் திணைகளம் என்று அலைந்து அந்த கட்சியை இயங்க அனுமதி கேட்டாலும் கேட்டுடும். 😂- கஜேந்திரகுமார் பொன்னம்பலம்-சிறீதரன் சந்திப்பு; தீர்வு விடயத்தை ஒரு பொதுவேலைத்திட்டத்தின் ஊடாக அணுகுவதற்கும் இணக்கம்
@goshan_cheநீலன் திருச்செல்வம் என்றுமே அரச எம்பியாக இருக்கவில்லை. இறக்கும் போதும் அவர் தமிழர் விடுதலைக்கூட்டணி உறுப்பினராகவே இருந்தார் என்பதே எனது ஞாபகம்.- தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளை நினைவுகூருவதும் ஜேவிபியின் நினைவுகூரல்களும் ஒரே மாதிரியானவை - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
அதை தான் கூறுகிறேன். முன்னர் புலிகளால் தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட வி. பு. ம.மு கட்சியை மீண்டும் விண்ணப்பபிப்பதன் மூலம் புதுப்பிப்பதற்கான அனுமதியை எடுத்து அக்கட்சியில் அரசியல் போராளிகள் இயங்கும் போது அது சிறப்பாக இருக்குமல்லவா?- பார் அனுமதி பெற்றவர்கள் யார்?; இன்று மாலை தெரிந்துவிடும்
உண்மை தான் அந்த குறையை தமிழர் தேசிய அரசியல்வாதிகள் யாரோ ஒருவரோ பலரோ தீர்த்துள்ளனர்.- கஜேந்திரகுமார் பொன்னம்பலம்-சிறீதரன் சந்திப்பு; தீர்வு விடயத்தை ஒரு பொதுவேலைத்திட்டத்தின் ஊடாக அணுகுவதற்கும் இணக்கம்
இறந்து போன யாரையும் கூட்டிவர முடியாது. ஆனால் இன்று வரட்டு தமிழ் தேசியம் பேசி தம் பக்கத்தில் எல்லாவற்றையும் நியாயப்படுத்தி வருவோர் இவ்வாறான அரசியல் எமக்கு எப்படி பேரிழப்பை தந்தது, எனவே இனிமேல் அறிவுபூர்வ அரசியல் செய்ய வேண்டும் என்று எண்ணிப்பார்கக இவைகளை சுட்டிக்காட்டுதல் முக்கியம் இல்லையா? (உங்கள் திறமையான வாதத்தால் பிணை எடுத்ததற்கு உங்களுக்கு ஒரு நன்றி கூட கிடைத்துள்ளது. வாழ்த்துகள் கோசான்😂) just joke அந்நேரத்தில் சர்வதேச அனுசரணையுடன் அந்த தீர்வு திட்ட அடிப்படையில், ஒரு பேச்சுவார்ததையை நடத்தியிருந்தால், அந்த தீர்வுத்திட்டத்தை யாராலும் சாவடிக்க முடிந்திராது. மாறாக அதில் உள்ள குறைபாடுகள் களையப்பட்டு அது ஒரு தீர்வாக வந்திருக்க கூடிய சாத்தியத்தை நீங்கள் முற்றாக நிராகரிக்கின்றீர்களா? அதை போன்றதொரு தீர்வை இனி பெற முடியுமா? அதற்கான உலக சூழல் உள்ளதா?- தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளை நினைவுகூருவதும் ஜேவிபியின் நினைவுகூரல்களும் ஒரே மாதிரியானவை - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
நினைவு கூரலுக்கு அனுமதி அளிக்கப்பட்டுருகிறது தானே. முன்பு மகிந்த கோட்டபாய காலத்தில் இதை கேட்கும. துணிச்சல் கஜேந்திரகுமாருக்கு இருக்கவில்லை. நினைவு கூரலுக்கு அனுமதி அளித்த அரசாங்கம் புலிகள் தடை செய்யப்பட்ட அமைப்பு என்பதால் தன் இலட்சனைகளை பாவிப்பது சட்ட மீறல் என்பதையே குறிப்பிட்டனர். ஜேவிபி யை போல புலிகளுக்கும் இரு முறை தடை நீக்கப்பட்டது. விடுதலைப்புலிகள் மக்கள் முன்னணி என்ற கட்சியே இலங்கை தேர்தல் திணைக்களத்தில் உத்தியோகபூர்வமாக பதிவு செய்யப்பட்டது. அது புலிகளாலேயே கலைக்கப்பட்டு விட்டது. அதன் தலைவரும் கொல்லப்பட்டு விட்டார். கஜேந்திரகுமார் வழக்கு பதிவு செய்வதன் மூலம் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு காலாவதியான அந்த கட்சியை மீள பதிவு செய்ய அனுமதி பெற்று முன்னாள் போராளிகளில் அறிவுசார் ஆளுமை உள்ளவர்களை கொண்டு அக் கட்சியை இயக்கும்படி செய்யலாம். அவர்கள் காலத்திற்கு ஏற்ப தம்மை தகவமைத்து அரசியல் செய்வது சிறப்பாக இருக்கும். அவர்கள் படிப்படியாக தமது அரசியல் முதிர்சசி மூலம் கட்சியை கட்டியெழுப்பி ஒரு காலத்தில் தமது மடிந்த போராளிகளுக்கு ஜேவிபி போல தமது அடையாளங்களுடன் நினைவு வணக்கம் செய்யும் நிலையை உருவாக்க முடியும். செய்வாரா?- பார் அனுமதி பெற்றவர்கள் யார்?; இன்று மாலை தெரிந்துவிடும்
கொழும்பு, கம்பஹா மக்கள் தொகை அனிப்படையில் பெரிய மாவட்டங்கள். கொழும்பு Metropolis city . அவற்றுக்கு முறையே 24,18 என்றுவர சிறிய மாவட்டமான கிளிநொச்சிக்கு மூன்றாவது இடத்தில் 16 அனுமதிகள். கிளிநொச்சி றெக்கோட் இந்த விஷயத்தில்.- கஜேந்திரகுமார் பொன்னம்பலம்-சிறீதரன் சந்திப்பு; தீர்வு விடயத்தை ஒரு பொதுவேலைத்திட்டத்தின் ஊடாக அணுகுவதற்கும் இணக்கம்
இல்லை. அப்படி இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அரசியலமைப்பு அறிஞராகவும் சர்வதேச அளவில் பல நாட்டு ராஜதந்திரிகளிடையே மதிக்கப்படுபவராகவும் இருந்து, “இலங்கை பிரிக்கப்பட முடியாத இரு அலகுகளை கொண்ட ஒன்றியம்”என்ற அரசியலமைப்பு தீர்வு வரைவை எழுதிய நீலன் திருச்செலவம் 1997ல் தற்கொலை குண்டுதாரி ஒருவரால் படுகொலை செய்யப்படும் போது அவர் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்க வில்லைத் தானே! ( இதை தான் சொல்வது கழுதை தேய்ந்து கட்டெறும்பானது என்று. அப்படியான ஒரு தீர்வு வரைவை பற்றி பேசுவதை கூட தமிழ் மக்களால் இன்று நினைத்து பார்க்க கூட முடியாது.13 ஐ ஆவமு நீக்காமல் விடப்பா என்று அநுராவை பார்த்து கெஞ்சவேண்டிய நிலை)- கஜேந்திரகுமார் பொன்னம்பலம்-சிறீதரன் சந்திப்பு; தீர்வு விடயத்தை ஒரு பொதுவேலைத்திட்டத்தின் ஊடாக அணுகுவதற்கும் இணக்கம்
கஜேந்திரகுமார் அவருடன் சுற்றி இருக்கும் குதிரை கஜேந்திரன் போன்ற களிமண் மண்டைகளின் பேச்சை கேட்காமல் ஜதார்த்தவாதியாக மாறி அரசியல் தீர்வு விடயத்தில் செயற்பட்டால் அது வரவேற்கப்பட வேண்டியதே.- 2015 ஆம் ஆண்டின் மைத்திரியின் அரசு மீது அன்று வைத்த அதே கண்மூடித்தனமான விசுவாசத்தை இன்று அநுர மீதும் வைத்திருக்கிறார்களா தமிழர்கள்?
கோசான், எனக்கும் அவர்களுக்கும் எந்த தனிப்பட்ட கோபதாபமும் இல்லை. அவர்களின் மோசமான அரசியலையே விமர்சிதேன். அவர்கள் மனம் புண்படும் என்பதற்காக அவர்களின் தவறுகளை விமர்சிக்கக கூடாது என்பது உங்கள் வேண்டுகோள். ஒற்றுமை என்பது neutral ஆக தமிழ் மக்களுக்காக அறிவுசார் அரசியல் செய்யும் போதே சாத்தியம். இவர்களது பழைய கறள்கட்டிய கிணற்றுத்தவளை உதவாக்கரை அரசியலுக்கு சிஞ்சா போட்டு தான் ஒற்றுமை வரும் என்றால் அப்படியான மக்களுக்கு எந்த பிரயோசனமும் அற்ற ஒற்றுமைநால் எந்த பயனும் இல்லை. என்பிபி க்கு தமிழர் வாக்களித்ததும் அதனால் தான். வேறு ஒரு திரியில் நான் கூற வந்த அதே கருத்தையே நீங்களும் உங்கள் பாணியில் கூறியுள்ளதை உங்களுக்கு ஞாபகப்படுத்துகிறேன்.- முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
அருமையான கருத்து. எனது பாணியில் நான் கூறுவதற்கும் இதற்கும் கருதியலில் வேறுபாடு இல்லை. நன்றி.- 2015 ஆம் ஆண்டின் மைத்திரியின் அரசு மீது அன்று வைத்த அதே கண்மூடித்தனமான விசுவாசத்தை இன்று அநுர மீதும் வைத்திருக்கிறார்களா தமிழர்கள்?
மீள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றிகள்.- 2015 ஆம் ஆண்டின் மைத்திரியின் அரசு மீது அன்று வைத்த அதே கண்மூடித்தனமான விசுவாசத்தை இன்று அநுர மீதும் வைத்திருக்கிறார்களா தமிழர்கள்?
நீங்கள் கூறிய இந்த Supporters கள் போற்றிப் புகழுவது போல் பாசாங்கு செய்து தமது சுயநல அரசியலை வளர்தது கொள்கிறார்களே தவிர நீங்கள் கூறியதைப் போல் அரசியல் தீர்வு முயற்சியில் கிஞ்சித்தும் முன் நகரவில்லை. அதை செய்யும் திறமையும் இவர்களுக்கு இல்லை. இந்த Supports தங்களது அரசியல் கொள்கைகளுடனும், அவர்கள் தற்போது செய்துவரும் அரசியல் மூலமோ இவர்களால் இலங்கையில் எந்த அரசியல் தீர்வையும் காணமுடியாது மட்டுமல்ல அதை நெருங்கக் கூட முடியாது. அரசியலமைப்பு மூலமான எந்த தீர்வும் இலங்கையில் வாழும் பெரும்பான்மை சமூகமான சிங்கள மக்களின் ஒத்துழைப்புடன் மட்டுமே சாத்தியம். உலக நாடுகள் கூட அதையே வலியுறுத்தும். புலிகள் பலமாக இருக்கும் போதே உலக நாடுகள் அதையே வலியுறுத்தின என்பது உங்களுக்கும் தெரியும். அப்படி இருக்கும் போது இன்றைய டுபாக்கூர் அமைப்புகளின் நிலை எப்படி இருக்கும். நாம் விரும்புகிறோமோ இல்லையோ அதுவே reality. இதற்கு தமிழர் சார்பில் Neutral ஆன தமிழ் அமைப்புகள் மூலம் மக்களின் அபிலாசைகள் நியாயப்பாடுகள், பாதிப்புக்கள் குறித்த தெளிவான பரப்புரைகளை பெரும்பான்மை மக்கள் மத்தியிலும் செய்து அவர்களின் ஆதரவுடனேயே நிரந்தரமான அரசியல் தீர்வை காண முடியும். இந்த Supporters களுக்கு தமிழ் மக்களின் நல்வாழ்வில் உண்மையான அக்கறை இருந்தால் தங்கள் லூசுத்தனமான அரசியலை விடுத்து இப்படியான neutral அமைப்புகளுடன் இணைந்து வேலை செய்து மக்களின் நன்மைக்கான பங்களிப்பினை வழங்கலாம். மற்றப்படி Supports இன் சொந்த அரசியல் என்பது குண்டு சட்டிக்குள் குதிரையோட்டும் பயன்றற அரசியலே. 2009 க்கு முன்னரான Supporters என்பது புலிகளை இராணுவரீதியில் பலப்படுத்துவதன் மூலம் தமிழரின் அரசியல் பலத்தை உயர்த்தி ஓரு நியாயமான அரசியல் தீர்வை காணவேண்டும் என்ற அவாவின் அடிப்படையில் பரவலாக உருவானது. அது புலிகளுக்கு பலத்தை வழங்கியது. ஆனால், இன்றைய Supporters இன் நோக்கம், “ போற்றிப் பாடடி பெண்ணே தேவர் காலடி மண்ணே” என்ற ரேஞ்சில் மட்டுமே உள்ளதேயொழிய எந்த தெளிவான அறிவுசார் அரசியல் மயப்பட்டதல்ல. அவ்வாறான அறிவுசார் அரசியலில் அவர்களில் பெரும்பான்மையினர் வளர்தெடுக்கப்படவும் இல்லை. அவர்களும் என்ன செய்வார்கள் வச்சுக்கோண்டா வஞ்சகம் செய்கிறார்கள்.- 2015 ஆம் ஆண்டின் மைத்திரியின் அரசு மீது அன்று வைத்த அதே கண்மூடித்தனமான விசுவாசத்தை இன்று அநுர மீதும் வைத்திருக்கிறார்களா தமிழர்கள்?
நீங்கள் கூறியது உண்மையானால், நடைமுறை சாத்தியமான தீர்வுகளைப் பற்றி பேசிய மென்போக்கு த்திழ் தேசியம் பேசிய அரசியல்வாதிகளை துரோகிகள் பட்டம் சூட்டி ஒதுக்கி விட்டு வரட்டு தேசியம் பேசிய சைக்கிள் தரப்பை புலம் பெயர் தேசியவாதிகள் ஆதரித்தது ஏன்? ஶ்ரீலங்காவில் கடும் போக்கு மகிந்த, கோட்டபாய போன்றோர் பதவிக்கு வருவதை விரும்பியது ஏன்? ஒப்பீட்டு ரீதியில் சற்றே மென்போக்கு கொண்ட, ஆனால் அநுரா போல் அல்லாமல் தமிழரின் அடையாளத்தை ஏற்றுக்கொண்ட ஶ்ரீலங்கா அரச தரப்புகளைக் கூட கடுமையாக எதிர்தத்துடன் கடும்போக்கு தரப்புகள் வந்து தமிழ் மக்களை அடக்குவதே தேசியத்துக்கு நல்லது என்று புலம் பெயர் தரப்புகள் விரும்பியது ஏன்? ( யாழில் கூட அது எழுதப்பட்டது ஞாபகம் உள்ளது.)- 2015 ஆம் ஆண்டின் மைத்திரியின் அரசு மீது அன்று வைத்த அதே கண்மூடித்தனமான விசுவாசத்தை இன்று அநுர மீதும் வைத்திருக்கிறார்களா தமிழர்கள்?
நான் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இந்த கருத்தை கூறவில்லை கோஷான். இலங்கை அரசின் யுத்த குற்றங்களைப் பேசிக்கொண்டு தமிழரிடையே உசுப்பேற்றும் கருத்துக்களை பேசுவோரிடை மட்டுமே இதைக் கூறுகிறேன். “ஶ்ரீலங்கா அரசு மட்டுமே நேர்மையற்றது, நாம் மிக நேர்மையாக அறத்துடன் எமது போர் நடவடிக்கைகளை மேற்கொண்டோம்”, என்று வரலாற்று உண்மைகளைத் திரித்து மக்களையும் அடுத்த தலைமுறையையும் உணர்சசிவசப்படுத்துபவர்களை நோக்கியே, அப்படியில்லை நம் பக்கமும் யுத்த நடவடிக்கையில் நேர்மை இருக்கவில்லை, அவர்களுக்கு இணையாக பல சம்பவங்களை எமது தரப்பும் செய்தது என்ற உண்மையை சுட்டிக்காட்டவே அதைக் குறிப்பிட்டேன். இதை தமிழரிடையே சுட்டிக் காட்டுவதால் அது தமிழருக்கு தீர்வு கிடைப்பதில் இடைஞ்சலை உண்டாக்கும் என்ற உங்களது கருத்தை நான் ஏற்கவில்லை. நிற்க, புலிகள் செய்த குற்றங்களை தமிழ் மக்கள் செய்ததாக எடுத்து கொள்ள வேண்டியதில்லை, தமிழ் மக்களுக்கும் இதற்கும் ஒரு தொடர்பும் இல்லை. புலிகளின் தவறுகளை தூக்கி சுமக்க வேண்டிய தேவை தமிழ் மக்களுக்கு இல்லை என்ற உங்களுடைய கருத்தை வரவேற்கிறேன். உண்மையில் மிக சிறந்த உலக அரசியல் தெளிவு கொண்ட பாரவை அது. ஆனால், உங்களுடைய இந்த தெளிவு ஐநாவில் மனித உரிமை கூட்டங்களில் அரசு சார்பற்ற தமிழர் அமைப்புகள் சார்பாக யுத்தக்குற்றங்கள் பற்றி சர்வதேச ராஜதந்திரிகளுடன் கடந்த 15 வருடங்களாக பேசுவதாக கூறிவரும் தமிழர் அமைப்புகளுக்கு உள்ளதா? நான் பார்த்தளவில் ஐநாவில் தமிழர் சார்பாக செல்வோர் எல்லாம் நீங்கள் கூறியதைப் போல் தெளிவான சிந்தனையுடன் குறைந்தது வெளிப்பார்வைக்காவது தம்மை மக்களின் பிரதிநிதிகளாக நடந்து கொள்வதில்லை. கிட்டத்தட்ட புலிகளின் பேச்சாளர்கள் போலவே அவர்கள் நடந்து கொள்ளும் போது இங்கு நீங்கள் கூறியது எப்படி சாத்தியமாகும்? ஜநா மனித உரிமை அமர்வுகளிலோ அல்லது சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளுக்கோ, சர்வதேச பத்தியாளருக்கோ சுமந்திரன் தன்னிச்சையாக இவ்வாறு கூறியிருந்தால் அது தவறான செயல். ஆனால், அப்படி தன்னிச்சையாக சர்வதேச அரங்கில் கூறியிருந்தாரா அல்லது பத்திரிகையாளர் சந்திப்பில் அவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில் அப்படி கூறியிருந்தாரோ, அல்லது தமிழர் அமைப்புகளுடன் பேசும் போது மட்டும் அதைக் கூறினாரோ என்பது குறித்த எந்த தெளிவான செய்தியோ ஆதாரங்களோ இல்லை. மக்களின் பணத்தை சுருட்டிய புலம் பெயர் திருட்டு தேசியவாதிகளினது கூற்றுகளை மட்டும் வைத்து இதை எடை போட முடியாது. - இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் இராமநாதன் அர்ச்சுனா கன்னியுரை
Important Information
By using this site, you agree to our Terms of Use.