Everything posted by vasee
-
பாட்டுக் கதைகள்
ஏதோ இந்த வரி நன்றாக இருப்பது போல உணர்கின்றேன், உங்கல் எழுத்துக்கள் நாளுக்கு நாள் முன்னேற்றம் காட்டுகிறது, கலை கலைக்காகவே என படித்தவர்களுக்குள் கும்மியடிக்கும் இலக்கிய வட்டத்திற்குள் புகாமல் எங்களை போன்றவர்களை மனதில் வைத்து இதே போலவே தொடர்ந்து எழுதுங்கள்😁.
-
அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!
பன்னாடை என்பது தவறாக பயனில் உள்ளது என்பதனால் வழமையாக பயன்படுத்தும் அந்த பதத்தினை பயன்படுத்தவில்லை என்றே குறிப்பிட்டேன். இந்தியாவில் தடை செய்யப்பட்ட புலிகளை தமது சுயநலத்திற்கு பயன்படுத்தும் ஒரு தரப்பின் மீது குற்றம் சாட்டும் நீங்களும் மற்றவர்களும் ஏன் மறுதரப்பு புலிகளை தமது நலனுக்கு பயன்படுத்தும் போது அது தொடர்பாக ஒரு சிறு கருத்து கூட தெரிவிக்கவில்லை என்பதுதான் ஆச்சரியமான விடயம். எனது முதல் கருத்தில் அனைவரும் புலிகளை தமது சுய இலாபத்திற்கு பயன்படுத்துகிறார்கள் என பொதுவாக கூறியது (அது ஒரு சாதாரணமாக கூறிய விடயம் மட்டுமே) உங்களுக்கு எனோ ஏற்கமுடியாமல் இருந்துள்ளது, இந்த விடயங்களை சாதாரணமாக காடந்து போகவேண்டும் என நான் கருதுவது உங்களுக்கு ஏற்கமுடியாமல் இருக்கலாம், அதற்கு நீங்கள் கூறும் காரணங்கள் எனக்கு உடன்பாடாக இருக்கவேண்டும் என நீங்கள் எதிர்பார்க்க முடியாது. தமிழ்நாட்டில் உள்ள எந்தகட்சியினாலும் இலங்கையில் உள்ள தமிழர்க்கு தீர்வு ஏற்படாது, அவர்களுக்குள்ளிருக்கும் பிரச்சினையில் நாங்கள் புகுந்து ஒரு தரப்பினை ஆதரிப்பது அல்லது ஒரு தரப்பினை எதிர்ப்பது தேவையில்லாத விடயம். ஆனால் எந்த தரப்பின் பொய்ப்பரப்புரையினையும் எதிர்ப்பதில் தப்பில்லை, அதில் ஒரு தரப்பிற்கு மட்டும் பாரபட்சம் காட்டக்கூடாது.
-
அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!
Perception என்பது ஒரு வடி தட்டு மாதிரி (பொதுவாக பன்னாடை என்பார்கள் - பன்னாடை நல்லவற்றை விட்டு விட்டு தேவையற்றதனை தக்க வைப்பதால் அது பின்னாளில் ஒரு வசவு சொல்லாக அர்த்தம் கொள்ளப்பட்டு விடுகிறது என்பதால் வடி தட்டு என கூறியுள்ளேன்) தமக்கு தேவையானவற்றை எடுத்துவிட்டு மற்றவற்றை விட்டு விடும், விடயங்களை எமது பார்வையில் பார்க்காமல் அதன் போக்கில் பார்ப்பதே சிறப்பு.
-
சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் உறவுகள் உங்களின் பெயரை எழுதவும்
நானும் பார்க்கவில்லை.
-
அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!
மண்ணின் மைந்தர்கள்தான் தமிழ்நாட்டினை ஆட்சி செய்ய வேண்டும் என வலியுறுத்துபவர்கள் மற்ற மொழி பேசும் மக்களுகெதிராக அரசியல் செய்வதற்காக தமிழ்தேசியத்தினை முன்னிருத்த வேறு மொழி பின்புலம் கொண்டவர்கள் தமிழ்நாட்டில் அரசியல் செய்வதற்கு அனைத்தும் திராவிடம் எனும் போர்வையில் திராவிட அரசியல் செய்யவதற்கு வசதியாக பிராமணர்கள்தான் அனைவருக்கும் எதிரிகள் எனும் நிலையினை உருவாக்கி அதன் அடிப்படையில் அனைவரையும் தமக்கு சார்ப்பார்க்க முயன்றவர்களுக்கு போட்டியாக திராவிட கொள்கைக்கு எதிராக தற்போது தமிழ்தேசியம் அவர்கள் இருப்பிற்கு அச்சுருத்தலாகி உள்ளதால் கடைசியாக புலிகளையும் திராவிட புலிகளாக்கி உள்ளார்கள். யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன். இவர்களுக்குள் உள்ள புடுங்குபாட்டிற்கு இங்கு நாம் ஏன் முரண்பட வேண்டும்.
-
பதியம்
கிட்டத்தட்ட இரண்டு வார காலம் ஆகிய நிலையில்........ மிளகாய் ஒட்டு ஓரளவிற்கு பார்ப்பதற்கு சரியாக உள்ளது போல தெரிகிறது. + ஆனால் தக்காளி ஒட்டு இலைகள் வளர்ந்தாலும் அதன் தண்டு வாடிகின்றமை அது சரியான நிலயில் இல்லை என்பதால் அதனை அகற்றிவிட்டு மீண்டும் இரண்டு தக்காளி ஒட்டு வைத்துள்ளேன். முந்தய கத்தரி ஒட்டின் கட்டினை பிர்த்து விட்டேன்.
-
சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் உறவுகள் உங்களின் பெயரை எழுதவும்
இனி இந்தியணியில் நீடிப்பது கடினமாக இருக்கும். இந்தியணி அவுஸில் ஏற்பட்ட தோல்வியின் பின்னர் உள்ளூர் போட்டிகளில் அனைத்து வீரர்களும் கட்டாயம் விளையாட வேண்டும் என இந்திய கிரிக்கட் நிர்வாகம் முடிவெடுத்திருந்த நிலையில் தற்போது இடம்பெறும் ரஞ்சி போட்டியில் ரோகித்(3), கில்(4), ஜெஸ்வால்(4) மற்றும் பந்த்(1) நால்வரும் ஒட்டு மொத்தமாக சேர்த்து 12 ஒட்டங்களுக்குள் ஆட்டம் இழந்துள்ளார்கள்.
-
அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் இன்று பதவியேற்பு!
ட்ரம்பினை மட்டும் குறிப்பிடவில்லை அவரது போட்டியாக உள்ளவர்கள் கூட சரியான முடிவுகளை எடுப்பதற்கான சரியான உளநிலையில் இல்லாதவர்களாக இருக்கிறார்கள், மற்றய நாடுகளில் ஒரு தரப்பு மட்டும் அவ்வாறிருக்கும் ஆனால் இங்கு எந்த பக்கம் போனாலும் பிரச்சினையாக இருக்கிறது, இது எதனால் உருவாகிறது? இரண்டு கட்சிகளிலும் வேறு மாற்று தலைமைகள் இல்லையா?
-
அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் இன்று பதவியேற்பு!
பைடன், ட்ரம்ப், கமலா........, ஏன் அமெரிக்காவில் தலைவர்களுக்கு பஞ்சமா?
-
சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் உறவுகள் உங்களின் பெயரை எழுதவும்
இந்திய இரசிகர்களால் கிரிக்கெட்டின் தெய்வம் என கொண்டாடும் சச்சினின் எதிர்கால மருமகன் எனும் ஒரு கருத்தும் நிலவுகிறது, கவலையே வேண்டாம் கண்டிப்பாக அணியில் இடம் பிடிப்பார்.
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
https://fotoforensics.com/tutorial-ela.php இந்த ELA படத்தில் படம் உண்மையான படத்தினை விட சிறிதாக்கப்பட்டுள்ளது போல தெரிகிறது, புலிகளின் தலைவரின் இடுப்பு பட்டி வரையும் படத்தின் இரு பக்கமும் குறுகலாக்கப்பட்டுள்ளது மேலே உள்ள இணைப்பில் கீழ் வருமாறு உள்ளது. Scaling a picture smaller can boost high-contrast edges, making them brighter under ELA. Similarly, saving a JPEG with an Adobe product will automatically sharpen high-contrast edges and textures, making them appear much brighter than low-texture surfaces. குறித்த இணையத்தில் குறிப்பிட்ட படத்தினை தரவேற்றிய போது ஏற்பட்ட வித்தியாசம் சீமானின் இடது கை (தோளுக்கு கீழான பகுதியில்) நீண்ட நீள்சதுர வடிவ வெள்ளை பகுதி தெரிகிறது (முதலாவது இற்கும் இரண்டாவது இற்குமிடையே உள்ள வித்தியாசம்) இரண்டாவது ELA இது படத்தினை வெட்டும்போது இழக்கப்பட்டதாக கருதுகிறேன், இந்த விடயத்தினைத்தான் முன்னர் உணர முடியாமல் இருந்தது இப்போது இந்த படத்தில் இது தெரிகிறது. இரண்டாவது ELA இல் ஒளி வித்தியாசம் அதிகமாக உள்ளதாக கருதுகிறேன்.
-
சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் உறவுகள் உங்களின் பெயரை எழுதவும்
உங்களின் நல்ல காலம் இந்திய இரசிகர்களின் கெட்ட காலம் இவர்களி இருவரும் விளையாடுகிறார்கள், போனசாக கில்லும் உள்ளார் என கருதுகிறேன், கில்லும் உள்ளார் என்றால் என்டர்டெய்மென்ட் உறுதிதான். 25 பேர் கொண்ட அணியினை எடுத்துள்ளார்கள் அதில் இருவரும் உள்ளனர், சில வேளை கடைசி நேரத்தில் உக்கார வைத்து விடக்கூடும்.
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
மன்னிக்கவும் கோசான் ELA இல் இரு வேறு ஒளி அமைப்பும் சரியாக தெரிகிறது, எனது கவனம் இரண்டு படங்களும் இணைக்கப்படும் பகுதி சிறப்பாக ஒரே படம் போல் காணப்பட்டதால் மற்ற விடயத்தினை கவனிக்காமலே கூறிவிட்டேன், மற்றது இத்தான் முதல் தடவை ELA ஆய்வு செவதால் எனது கருத்து தவறாக இருக்க வாய்ப்புள்ளது ஆனால் சீமானி இடது கை புலிகளின் தலைவரின் படத்துடன் இணையும் பகுதியில் ELA ஒரே படம் என தெளிவாக காட்டுகிறது, உண்மையாக இந்த ELA குளப்பமாக உள்ளது ஆனால் சாதாரணமாக பார்க்கும் போதே மேலே குறிப்பிட்ட காரணிகளின் மூலம் இரு வேறு படங்கள் என தெளிவாக தெரிகிறது. இது ஒரு எடிட் செய்யப்பட்ட ELA இருக்க வாய்ப்புள்ளது இணைக்கும் பகுதியில் செலுத்திய கவனத்தினை மற்ற பகுதிகளில் செய்யாமல் விட்டிருக்கலாம் (நீங்கள் குறிப்பிட்ட இரண்டு வேறு ஒளி அமைப்பு) . இந்த குறிப்பிட்ட பகுப்பாய்வு செய்யும் அனுபமிக்கவர்கள்தான் கூற வேண்டும் இந்த ELA போலியானதா இல்லையா என.
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
ELA படத்தினை எடிட் செய்து தவறுகளை மறைக்க வாய்ப்புள்ளதுதான்.
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
ஓணாண்டி இணைத்த ELA இல் அது காணப்படவில்லை அதுதான் ஆச்சரியமாக இருக்கிறது, ஆனால் சும்மா பார்க்கும் போது இரு வேறுபட்ட ஒளி அமைப்பு ப்யன்படுத்தப்பட்டதால்தான் நீங்கள் கூறுவது போல புலிகளின் தலைவர் படத்தில் பளீர் ஒளியும் சீமான் படத்தில் மென் ஒளியும் காணப்படுகிறது. பொதுவாக ELA இல் அது தெளிவாக தெரியும் ஆனால் இந்த ELA இல் இது தெரியவில்லை அதுதான் ஆச்சரியமாக இருக்கிறது.
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
ரசோதரன் நீங்கள் இணைத்த புட்டின் படத்தில் சீமான் படத்தினை பொருத்தியது மிக தெளிவாக தெரிகிறது, சீமானின் இடது கை புட்டின் படத்துடன் இணையும் பகுதிகளில் ஆனால் ஓணாண்டியின் ELA இல் இரண்டு சீமானும் புலிகளின் தலைவர் உள்ள படமும் மிக ஒத்த பொருத்தத்துடன் உள்ளதுதான் ஆச்சரியமாக இருக்கிறது அனால் சில மேலே நான் குறிப்பிட்ட வித்தியாசங்களை மற்றும் கவிஅருணாசலம் கூறிய வலது கை போன்றவற்றை தவிர்த்து பார்த்தால் இது உண்மையான படம் என்பதாக ELA கூறுகிறது.
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
இந்த சீமான் படமும் புலிகளின் தலைவரின் படமும் இரு வேறு வேறு வகையான ஒளியமைப்பினை பயன்படுத்தி உள்ளமை தெரிகிறது சீமானின் படத்தில் கூரை ஒளி அமைப்பு அல்லது கூரை தெறிப்பு ஒளி அமைப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது(Softener) மறு வளமாக புலிகளின் தலைவரின் புகைப்படத்தில் நேரடி ஒளி அமைப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் இரண்டு உருவத்திற்கும் வேறு வேறுபட்ட குவியத்தூரம் காணப்படுகிறது Focal length. இவற்றினை பார்க்கும் போது இரு வேறு படங்களாக இருப்பதாக கருதுகிறேன் (எனது கருத்து தவறாக இருக்கலாம்).
-
'நீங்கள் எப்போது வாழப் போகிறீர்கள்?' - ரசிகர்களுக்கு நடிகர் அஜித் கூறியது என்ன?
இது எமது சமூகத்தில் படித்தவர்கள் என்றவுடன் அவர்களுக்கு கொடுக்கப்படும் மரியாதை நிமித்தம் எமது சமூகத்தில் மட்டும் நிலவுகிற நிலை காணப்படுகிறது. எமது கல்வி காலனித்துவ நிர்வாக அடிப்படை நோக்கில் உருவாக்கப்பட்டிருக்கலாம் என கருதுகிறேன், பெரும்பாலும் இந்த கல்வியின் பிரச்சினை பெட்டிக்கு வெளியே நின்று சிந்திப்பதனை தவிர்த்து சிறிய மாற்றம் வழமையான வேலையில் ஏற்பட்டால் கூட என்ன செய்வதென தெரியாமல் விழி பிதுங்கி நிற்கும் நிலை உள்ளவர்களாகவும், உறுதியான முடிவெடுக்க தெரியாதவர்களாகவும் இருக்கிறார்கள். இது ஓர் ஆட்ட்டு மந்தை போல சிந்திக்க மட்டும் வைப்பதற்கான கல்வி முறையாக இருக்கின்றது, குறிப்பிட்ட வேலையினை மிக சரியாக செய்தால் போதுமானது. ஒரு தவறு நிகழ்ந்தால் அது தவறு என்பதனை உணர்ந்து திருத்துவதற்கு பதிலாக பெரிய அளவிற்கு நிலமையினை மாற்றிவிடுகின்ற நிலை காணப்படுகிறது, இதற்கு காரணம் பரீட்சையில் கேள்விக்கு சரியான விடையினை வழங்கி வந்த ஒருவர் பரீட்சையில் ஏற்படும் பெறுபேறு குறைகள் அவர்களை பாதிக்கிறது, அது போல நடைமுறை வாழ்க்கையிலும் தாம் மிக சரியாக இருக்க எதிர்பார்க்கிறார்கள் அதனால் தவறுகளை ஏற்றுகொள்ளும் பக்குவம் அவர்களிடம் இருப்பதில்லை. எனக்கு எதியோப்பிய, எத்ரித்திய நண்பர்கள் கிடைக்கவில்லை ஆனால் சூடான், சோமாலிய நண்பர்கள் இருக்கிறார்கள் அவர்கள் சிந்தனை மிக சிறப்பாகவும் இருக்கும் ஆனால் சில விடயங்களில் விடாப்பிடியாக பிற்போக்குவாதிகளாக இருப்பார்கள் (பெண்கள் விடய்ததில்) அதற்கு மதம் ஒரு காரணமாக இருக்கலாம், ஆனால் அதனை தவிர்த்து பார்த்தால் எம்மவர்களை விட அவர்கள் சிலபடி கூட என கருதுகிறேன் (எனது கருத்து தவறாக இருக்கலாம்). வேலையிடத்தில் சில வருடங்களுக்கு முன்னர் ஒரு பயிற்சி நிகழ்வில் ஒரு எழுத்து மூலமான செய்தி குறிப்பினை முதலாவதாக உள்ளவரிடம் கொடுத்து அதில் உள்ள விடயத்தினை அப்படியே அடுத்தவருக்கு வாய் மூலமாக சொல்லுமாறும், அதன் பின்னர் அந்த செய்தியினை கேட்டவர் அதே செய்தியினை அடுத்தவருக்கு வாய் மூலமாக சொல்லுமாறு கூறப்பட்டது, இது ஒரு பல் சமூகம் கொண்ட ஒரு அணியில் நிகழ்ந்தது இறுதியாக அந்த செய்தியினை கேட்டவர் அதனை பகிரங்கமாக செய்தியினை தெரிவிக்க வேண்டும். அந்த செய்தியினை கூறியவர் மிக குறைந்த வரியில் சுருக்கமாக ஒரு செய்தியினை கூறினார் அதனை கேட்ட பெரும்பாலானோருக்கு அதிர்ச்சியாக இருந்தது ஒரு சாதாரண செய்தி ஒரு மோசமான செய்தியாக மாறியிருந்தது, எழுத்து மூலமாக கொடுக்கப்பட்ட செய்தியிலிருந்து முற்றிலும் வேறுபாடாக அந்த செய்தியிருந்தது. இந்த விடயத்தில் பெரிய பங்கை வகித்தது அந்த அணியில் இருந்த ஒவ்வொருவரின் Perception தான் காரணம். அவர்களே அறியாமல் தமது புரிதல்களை செய்தியாக்கியுள்ளார்கள், எமது சமூகத்தில் உள்ள அடிப்படையான விடயங்களையே படித்தவர்களும் என கூறிகொள்ளப்படும் தர்ப்புகளும் தொடர்கின்றனர். அதிக கல்வி அறிவுகொண்ட சமூகம் என எம்மை நாமே கூறிக்கொண்டாலும் அந்த கல்வி அவர்களது சமூக பண்பாட்டு வளர்ச்சிக்கு எனத வகையிலும் உதவவில்லை. தமது சரி பிழைகளை கூட உணரமுடியாத சிந்தனையற்றவர்களாகவே படித்தவர்களும் இருக்கிறார்கள், ரசோதரன் கூறுவது போல வெறும் தொழில்கல்வியாகவே எமது கல்வி உள்ளது, மற்றவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதனை அமைதியாக உள்வாங்க முடியாமல், தாங்களாகவே ஒரு அனுமானத்துடன் முடிவிற்கு வந்து தவறான புரிதல்களுடன் இருக்க்கிறார்கள், இதற்கு எல்லாம் தெரியும் எனும் மாயையினை தாமாகவே உருவாக்கி அதனை நம்புகின்றவர்களாகவும் மாறிவிடுகிறார்கள். எமது சமூகம் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகமாக இருந்தும் அதனை பற்றி கவலை கொள்ளாமல் மற்ற சமூகத்தில் உள்ள குறைபாடுகளை எள்ளி நகையாடுவதில் இன்பம் காணுபவர்களாக இருக்கிறோம், ஆனால் எமது சமூக மாற்றத்திற்கு இந்த கற்றவர்களின் பங்களிப்பு முற்று முழுதாக இல்லாத நிலையே காணப்படுகிறது, "மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே,. சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே" எமது சமூகத்தின் இந்த இழி நிலை சங்க காலத்திலிருந்து இருக்கின்றது என தெளிவாக தெரிகின்றது.
-
யாழ். நாகர் கோவில் கடற்கரையில் ஒதுங்கிய மிதவையில் 18 புத்தர் சிலைகள்!
ஜல சமாதி என கேள்விப்பட்டதாக நினைவுள்ளது, இது ஆரம்ப கால நாகரிகத்தின் ஒரு பகுதியாக இருந்திருக்கலாம், ஆனால் நீரில் உடல்களை விடுவது சுகாதார கேடு என்பதால் இப்படி மாறியிருக்கலாம். ஆனால் தீபெத்தில் பெளத்த துற்விகளை ஆகாயத்தில் அடக்கம் செய்வது என உடல்களக் கூறாக்கி கழுகிற்கு போடுவார்களாம் என கேள்விப்பட்டுள்ளேன்.
-
'நீங்கள் எப்போது வாழப் போகிறீர்கள்?' - ரசிகர்களுக்கு நடிகர் அஜித் கூறியது என்ன?
இதற்கு காரணம் விடயங்களை எமது தனிப்பட்ட நிலையில் (Perception) இருந்து அணுகுவதால் இவ்வாறு ஏற்படுகிறது,மற்றவர்கள் கூறுவதனை கூட கேட்பதற்கு தயாராக இருப்பதில்லை. இந்தியர்களும் எம்மவர்களுக்கும் உள்ள பொதுவான ஒற்றுமை, யாராவது இருவர் கதைக்கும் போது அந்த சம்பாசனைக்குள் இடையில் புகுந்து அந்த சம்பாசனையினை முறித்து தான் கூறுவதனை முதன்மைபடுத்த முயல்வார்கள். ஒரு சம்பாசனைக்குள் குறுக்கிடுவதற்காக மன்னிப்பு கேட்பதும் இல்லை, மற்றவர்கள் கூறுவதனை பொறுமையாக கேளாமல் அரைகுறையாக விளங்கிகொண்டு தேவையில்லாமல் சம்பாசனைகளை குறுக்கிடுவார்கள். தமது பார்வையில் இருப்பது போல உலகம் இயங்க வேண்டும் என நினைப்பார்கள், இந்த மாதிரியான ஸ்ரியோரைப்பான சிந்தனைகள் படித்தவர்களிடமும் காணப்படுகிறது. மிகைப்படுத்தப்பட்ட சுயவிம்ப மாயை சாதி, மதம் என இல்லாத ஒரு விம்பத்திற்குள் தாம் இருப்பதனை கூட உணரமுடியாத பாமரர்களாக படித்தவர்களும் இருக்கிறார்கள். இதனை தமது தனித்துவம் என தவறாக நினைத்து பூனை கண்ணை மூடி பாலை குடிப்பது போல உலகத்தினை பார்க்க விரும்புகிறார்களில்லை, இவர்கள் உலக பயணங்கள் மூலம் பல்வேறுபட்ட சமூகங்களை பார்த்தாலும் அவர்களில் மாற்றம் ஏற்படாது. இவர்கள் சுய விமர்சனங்களை விரும்புவதில்லை, தமது தவறுகளுக்கும் நியாயம் கற்பிப்பதில் காலத்தை விரயம் செய்கிறவர்கள். இதற்கு எமது கல்வி முறையும் ஒரு காரணமோ என தோன்றுகிறது, சிந்திக்கும் ஆற்றல் அற்ற ஒரு கற்ற சமூகத்தினை உருவாக்குவதில் எமது கல்வியும் ஒரு காரணமாக உள்ளதா?
-
மதுபானசாலைகளுக்கான அனுமதி விவகாரம் : உண்மைகளை உடன் வெளியிடுங்கள்; இல்லையேல், நீங்களும் ஊழல்வாதிகள்தான் - சுமந்திரன்
மகிந்த மாட்டுப்பட்டாலும் சிறியரை ஊழலில் சிக்கவைக்க முடியாது அவ்வளவு தொழில் சுத்தம், அது சுமத்திரனுக்கு தெரியாமல் இருக்காது, இருந்தாலும் ஏன் இப்படி அடிக்கடி மதுபான சாலைகளுக்கான அனுமதி விசாரணை வேணும் என கோருகிறார்?
-
நாட்டிற்கு வந்த சுமார் 30 கப்பல்கள் திரும்பிச் சென்ற அவலம்
2023 ஆண்டிற்கான அரச செலவு 5357 பில்லியன் ரூபா என கூறுகிறார்கள், கடந்த ஆண்டிற்கான் மொத பொதுச்செலவு அதனைவிட அதிகமாக வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 2023 பொதுச்செலவில் 43% (2456 Billion) கடனுக்கான வட்டி செலுத்துதலுக்காக செலவழிக்கப்படுவதாக தரவுகள் கூறுகின்றன, இலங்கை அரசு 2028 வரை கடன் மீளழிப்பு மற்றும் வட்டி செலுத்துவதனை இடைநிறுத்தியுள்ளமையால் இவை உள்நாட்டு கடனுக்கான வட்டியாக இருக்கலாம். அரச ஊழ்யர்களுக்கான சம்பள கொடுப்பனவு இரண்டாவது பெரிய செலவாக உள்ளது (1005 Billion) , இது கிட்டதட்ட கடனுக்கான வட்டிக்கொடுப்பனவின் அரைவாசி செலவாக உள்ளது. 2028 இல் அரசு கடன் மீளழிக்க தொடங்கும் போது இன்னும் இந்த சுமை அதிகரிக்கும், இந்த இடைப்பட்ட காலகட்டத்தில் (2025 -2028)நிலமையின் தீவிரத்தினை உணர்ந்து அரச ஊழியர்கள் வேலைகளில் கவனம் செலுத்த வேண்டும்.
-
நாடளாவிய ரீதியில் ஆலயங்களிலும் வீடுகளிலும் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் பண்டிகை
தமிழர்கள் மட்டுமல்ல உலகில் தற்போதய மதங்கள் உருவாவதற்கு முன்னரே இயற்கை தெய்வ வழிபாடு இருந்துள்ளது, பயத்தினடிப்படையிலேயே இந்த வழிபாடு நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகின்றது. ஆனால் பொங்கல் நிகழ்வு ஒன்றும் சாமி கண்ணை குத்தும் என்று பாமரர்களை ஏமாற்றும் ஒரு மத நிகழ்வல்ல மாறாக கோசான் கூறுவது போல உலக மக்கள் கொண்டாடும் அறுவடை தின கொண்டாட்டம். அறுவடைக்கு உதவிய இயற்கைக்கு நன்றி சொல்லும் நிகழ்வாக அது பின்னாளில் மாறியிருக்கலாம், அதனை மத உரிமை கொண்டாடும் பரிதாப நிலையில் தற்போது பொங்கல் உள்ளது. பொங்கலுக்கு மத சாயம் பூச விளைவது இல்லாத ஒன்றை உருவகிக்கும் ஒரு முயற்சி.
-
பதியம்
மிளகாய், மற்றும் தக்காளி என இரு வெவ்வேறாக ஒட்டுக்கள் சுண்டைங்காய் செடியில் இன்று வைத்துள்ளேன்.
-
புட்டினுடனான சந்திப்புக்கு ஏற்பாடு – ட்ரம்ப் அறிவிப்பு!
இந்த பெரிய எனும் நினைப்புத்தான் பேரழிவுகளுக்கு காரணம், கேர்க்ஸில் உள்ள உக்கிரேனிய இராணுவத்தளபதி ஒலே கூறிய விடயம், இரஸ்சிய இராணுவம் தனது சிறிய இழப்பு ஏற்பட்டவுடன் அப்பகுதியில் இருந்து உடனடியாக பின் வாங்கிவிடுகிறார்கள், ஆனால் உக்கிரேன் தொடர்ந்து இழப்புக்க்களுக்கும் மத்தியில் இடங்களை தக்கவைக்க வேண்டிய நிலை உள்ளது என கூறுகிறார். இரஸ்சியா பெரிது சிறிது என நினைப்பதாக நினைக்கவில்லை அவர்கள் இந்த போரை அதன் நுட்பத்துடன் அணுகின்றார்கள், இங்குதான் மேற்கு தவறிழைக்கிறது நாம் விரும்புவதனை அவர்கள் செய்வார்கள் என எதிர்பார்ப்பது. எந்த விடய்ங்களையும் பின்புலமில்லாமல் சிந்திப்பது கடினம் (Bias), ஆனால் அவ்வாறு சிந்திக்க தொடங்கினால் பிரச்சினை வெளியில் இருந்து வருவதில்லை நாமாகவே உருவாக்குறோம் என்பது புரியும். 😁