Jump to content

vasee

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    1782
  • Joined

  • Last visited

  • Days Won

    2

Everything posted by vasee

  1. இல்லை, அவர் மாறமாட்டார் எனவே கருதுகிறேன். கடந்த ஆண்டு இறுதியில் அமெரிக்கா வழங்கிய ஆயுதம், இரஸ்சியாவின் கண்ணிவெடிகளில் இரஸ்சிய இராணுவம் சிக்குவதாக கூறிய இரஸ்சிய அறிக்கையினை வைத்து தானாகவே ஒரு செய்தியினை தயாரித்துள்ளது போல தெரிகிறது, இந்த செய்தியினை எந்த தரப்பும் அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தவில்லை என கருதுகிறேன். நாங்கள் அணிந்து கொண்டிருக்கும் நிறக்கண்ணாடியூடாக பார்த்தால் அந்த காட்சிகள் அந்த குறிப்பிட்ட நிறத்திலே தெரியும் அதனைதான் Biased என கூறுகிறார்கள். உங்கள் நகைசுவை புரிகிறது.
  2. கடந்த வாரத்திற்கு முந்தய வாரத்தில் ஒருவரை சந்திக்கும் நிலை ஏற்பட்டது. எடுத்தவுடனேயே கோபத்துடன் கூறினார் நீங்கள் கூறினீர்கள் 2025 வரை வட்டி விகிதம் அதிகரிக்காது என ஆனால் தற்போது வட்டி விகிதம் அதிகரிக்கிறது, வீட்டு கடன் கட்டுவதில் சிரமாக உள்ளதாகக்கூறினார். ஆம் அவர் எனது அபிப்பிராயத்தினை கேட்டிருந்தார் அது கோவிட் கட்டுபாடுகள் முடிவடைந்த கால கட்டம், அவர் என்னிடம் கேட்ட கேள்வி வட்டி விகிதத்தில் ஏதாவது மாற்றம் ஏற்படுமா? அவுஸ்ரேலிய அரசுகளும் வங்கிகளும் வட்டி விகித அதிக்ரிப்பு 2025 பின்னரே ஏற்படும் என கூறுகின்றன ஆனால் எனக்கு தெரியாது ஏனவே கூறியிருந்தேன், அத்துடன் கோவிட் பொருளாதார தூண்டலின் காரணமாக பணவீக்கம் ஏற்படும் என நான் கருதுவதாக கூறினேன் எனது கருத்து தவறாக இருக்கலாம் என கூறியிருந்தது எனது நினைவில் இருந்தது. அவர் Fixed / variable வீட்டு கடன் தொடர்பாக ஆர்வம் காட்டுவதாக் காண்பித்தார், அதனால் நானும் அது தொடர்பாக எந்த அறிவுரையும் கூறவில்லை. ஆனால் அவர் தனது வீட்டை விற்று அதனைவிட ஒரு பெரிய வீட்டினை வாங்கியிருந்தார் தற்போது வீட்டுக்கடன் மிக பெரியளவில் ஏற்பட்டு விட்டது வட்டி விகித அதிகரிப்பினால் அவ்ர் நிலை மோசமாக உள்ளது. பின்னர் என்னிடம் மீண்டும் எனது கருத்தினை கேட்டார் வட்டி விகிதம் குறைய வாய்ப்புள்ளதா என, இந்த முரை தெளிவாக இல்லை அதிகரிக்கவே வாய்ப்புள்ளது என கூறிவிட்டு வந்துவிட்டேன். கடந்த வாரம் வட்டி விகிதம் அதிகரிக்கப்படாது என அனைவரும் எதிர்பார்க்க மத்திய வங்கி 25 புள்ளிகள் அதிகரித்துள்ளது. மே மாத இறுதியில் எதிர்பார்க்கப்பட நுகர்வோர் விலைசுட்டெண் 0.40 அதிகரித்திருந்ததே இதற்கு காரணம் ஆனால் மக்கள் அதனை கவனிக்க தவறியிருந்தார்கள். அதில் வீட்டு விலை, உணவு, போக்குவரத்து அந்த விலை அதிகரிப்பிற்கு காரணமாக இருந்தது. இந்த மாத நடுப்பகுதியில் முக்கிய 4 வங்கிகளும் இந்த வட்டி விகித அதிகரிப்பினை அமுல்படுத்தவுள்ளது. consumer confident, China PMI என்பன சரிவு ஏற்பட்டாலும் பணவீக்கம் குறைவதாக இல்லை அதற்கு காரணம் பெற்றோலிய பொருளின் விலையேற்றம் போக்குவரத்து உணவுப்பொருலின் விலையில் நேரடித்தாக்கம் ஏற்படுத்துகிறது. China PMI சுட்டெண் சரிவினால் மூலப்பொருளின் ஏற்றுமதியில் தங்கியிருக்கும் அவஸ்ரேலியாவிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த மாத இறுதியில் வெளிவரும் நிகர்வோர் விலைசுட்டெண்ணும், இந்த வாரத்தில் வெளிவரவுள்ள வேலையின்மை தரவுகளும் எதிர்கால வட்டி விகிதத்தினை தீர்மானிக்கும் சக்தியாகவுள்ளது, இந்த இரண்டு விடயங்களும் கடந்த மாதத்தில் அதிகரித்து வருவது கலைக்குரிய அம்சமாகவுள்ளது. வேலைகளை தக்க வைத்தல் அத்துடன் பக்க வருவாயினை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும், இது எல்லோருக்கும் ஒரு கடினமான காலமாக உள்ளது. தேவையற்ற ஆடம்பர போலி கவுரத்திற்கான செலவுகளை குறைத்தல், தேவையற்ற பெரிய கடனை சுமப்பதால் குடும்பத்தில் நிம்மதி இழப்பு, அதிகரித்த வேலையினால் முக்கியமான் குடும்ப நேர இழப்பு ஏற்படும்.
  3. உங்கள் கருத்திற்கு நண்றி, நான் கூற முனைவது கொங் கொங்கில் சீனாவின் ஒரு நாடு இரு நிர்வாக அலகு எனும் முறை (Special administrative region) போன்ற ஒரு முறைமை, அதற்கும் இந்திய நாட்டில் உள்ள தமிழ் நாட்டில் உள்ள அரசியல் முறைமைக்கும் தொடர்பு இருக்காது என கருதுகிறேன். அதாவது இலங்கையின் வட கிழக்கிற்கும் தமிழ்நாட்டிற்கும் அரசியல் ரீதியான தொடர்பு இருக்காது.
  4. பிச்சைகாரனுக்கு தெரிவு இருப்பதில்லை என தெரிவிப்பார்கள், ஆனால் உக்கிரேனிற்கு இந்த பாதகமான சூழலிலில் ஒரு தெரிவு இருப்பதாக கருதுகிறேன். இது ஒரு முட்டாள்தனமான உதாரணமாக இருக்கலாம் ஆனால் இந்த விடயத்திற்கான உதாரண விளக்கமாக் கூறுகிறேன். இலங்கையின் ஒன்றிணைந்த வடகிழக்கினை தமீழீழ தனிநாடாக்குவதற்காக மேற்கொண்ட இலங்கையின் இறைமைக்குள் நிகழ்ந்த அரசியல் போர் முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்துள்ளது, இந்த நிலையில் வட கிழக்கில் தொடரும் நில இழப்பினை தவிர்க்க ஏதோ ஒரு வகையில் வடகிழக்கு மாகாண சபைகள் இந்தியாவின் ஒரு நிழல் நிர்வாக அலகு போல செயற்படும் நிலை உருவாகி இலங்கையின் வட கிழக்கின் மீதான பிடி தளருமாயின், இலங்கையின் வட கிழக்கு இந்தியாவின் பகுதியாக மாறுவதினை விட அதனை தனிநாடாக இலங்கையே முதலாவதாக அங்கீகரிக்கலாம், அவ்வாறானதோர் நிலை ஏற்படாதா இந்த கிழக்கு உக்கிரேன் பகுதிகளுக்கு? இலங்கையில் மேலே கூறியவாறு நிகழ்வதற்கு ஏதாவது வாய்ப்பு இருப்பதாக கருதுகிறீர்களா? போரை நாடாத்தும் இரு தரப்பிற்கும் போரினால் அனுகூலம் இல்லை, ஆரம்பத்தில் சில நாடுகளுக்கு பொருளாதார ரீதியாகவும், அரசியல், இராணுவ ரீதியாக நன்மை இருந்தது ஆனால் தற்போது அந்த நிலை தலைகீழ் மாற்றம் ஏற்பட்டுள்ளது, அதனால் அவர்கள் போரை தொடர விரும்ப மாட்டார்கள்.
  5. இந்த நிகழ்வு இரஸ்சிய உக்கிரேன் போர் வெகு விரைவில் முடிவுக்கு வரப்போவதனை உறுதிப்படுத்துவதாக உணருகிறேன். நாடுகள் சவால்கலை எதிர்நோக்கும் தற்போதய உலக ஒழுங்கினை தொடர்ந்து பேண பல பிரயத்தனங்களை கிழக்காசியாவிலும், கிழக்கு ஐரோப்பாவிலும் பதட்ட நிலையினை நீடிப்பதன் மூலம் தக்கவைக்கலாம் என ஒரு புறம் முயற்சிக்க, இந்த நாடுகளுக்கிடையே ஏற்பட்டுள்ள இந்த இழுபறி நிலை உலக பொருளாதாரத்திலும், உலக அமைதியிலும் பெரும் தாக்கத்தினை என்றுமில்லாதவாறு ஏற்படுத்தியுள்ளது. தற்போதய உலக ஒழுங்கினை தொடர இழுபறிநிலையினை இந்த நாடுகள் பேணுவதால் ஏற்படும் குறுங்கால அவகாசத்தினை விட அது ஏற்படுத்தும் பொருளாதார நெருக்கடி நாடுகளின்நிகழ்கால உலக ஒழுங்கினை பேணுவதற்கு பதிலாக அதிக பாதிப்பினை உருவாக்கும் என்பதனை உணர இந்த நாடுகள் தாமாகவே இந்த குளற்படிகளை எந்தவித முன்னறிவித்தலுமின்றி கைவிடும் என்ற உண்மை உணர்தலின் வெளிப்பாடாக தொடர்ச்சியாக தம்மை வெளிச்சத்திற்குள் வைக்க முயல்வதற்காகவே இந்த நிகழ்வு நிகழ்ந்துள்ளதாக கருதுகிறேன், இது தமது தலையில் தாமே மண்ணை போடும் நிலை. இதனால்தான் ஆரம்பத்திலேயே மற்றவர்களில் முற்று முழுதாக தங்கியிருக்காமல் தமது நலஙளை மட்டும் முதன்மைபடுத்தி செயற்பட வேண்டும் (அது போரோ அல்லது சமாதானமோ) என தொடர்ச்சியாக கூறப்பட்டது. இந்த போர் சடுதியாக முடிவுக்கும் வரும் என கருதுகிறேன்.
  6. சீனா ஒரு யுத்தத்தினை ஆரம்பிக்காது என நம்புகிறேன். அமெரிக்காவினை பொறுத்தவரை அதன் பொருளாதார வளர்ச்சி சராசரியாக 2.5 விகிதம் எனும் அளவிலேயே உள்ளது, இந்த ஆண்டு முதல் காலாண்டில் ஒரு வருடத்திற்கான பொருளாதார வளர்ச்சி 1.3% குறைவடைந்துள்ளது, இந்த நிலை மோசமாவதற்கான சூழ்நிலையே தற்போதுள்ளது. அமெரிக்கா தனது கடன் விகிதத்தினை பொருளாதார வளர்ச்சியுடன் ஒப்பிடும் போது இந்த நிலையில் (அரை பங்கிற்கு பொருளாதார வளர்ச்சி சுருங்கினால்) கடன் சுமை இரட்டிப்பு அழுத்தத்தினை ஏற்படுத்தும் அது அமெரிக்காவின் பொருளாதாரத்தினை முறிக்கும் அதனை தவிர்க்க வேண்டுமாயின் அமெரிக்க தனது பொருளாதார வளர்ச்சியினை குறைந்த பட்சம் 4% ஆக அதிகரிக்க வேண்டும் அதற்கான சூழ்நிலையினை இந்த போர்கள் ஏற்படுத்தாது. இன்று ஒபெக் மற்றும் ஒபெக் + நாடுகள் தமது பெற்றோலிய உற்பத்தியினை நாளொன்றிற்கு 1 மில்லியன் பரல்களாக குறைக்க முடிவெடுத்துள்ளார்கள், இது மேலதிகமாக வழங்கல் சங்கிலியில் பாதிப்பினை ஏற்படுத்தும். உடனடியாக போரை நிறுத்தாவிட்டால் ஒட்டு மொத்த உலகும் பாதிப்பிற்குள்ளாகும், ஆனால் எதற்காக அமெரிக்கா இந்த போரை தொடர விரும்புகிறது என்பது விளங்கவில்லை, அத்துடன் கிழக்காசிய பகுதியில் போர் பதற்றத்தினை உருவாக்குகிறது என்பது புரியவில்லை. ஆனால் இரஸ்சியா பெற்றோலிய உற்பத்தி நாடுகளில் தனது ஆதிக்கத்தினை செலுத்துவது தெளிவாக தெரிகிறது இதன் மூலம் தனது பொருளாதாரத்திற்கு மேற்கு நாடுகளின் பொருளாதார தடையினால் ஏற்பட்ட நெருக்கடியினை தளர்த்த முயல்வதாக தெரிகிறது. தற்போதுள்ள உலக அமைதியின்மைக்கு காரணமாக இருப்பதற்கு காரணமான அமெரிக்க பொருளாதார நெருக்கடிக்கு முடிவு வரும்வரை உலகில் போரும் பொருளாதார நெருக்கடியும் தொடரலாம்.
  7. உங்கள் கருத்திற்கு நன்றி.
  8. இரஸ்சிய, உக்கிரேன் போரினால் உலகில் பெரியளவில் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது, முக்கியமாக வழங்கல் சங்கிலியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது இந்த போர் ஆரம்பித்த காலத்திலிருந்தே கூறப்பட்டாலும் பெரிதாக ஊடகங்கள் அதனை கவனிக்கவில்லை(அல்லது திட்டமிட்டே தவிர்க்கிறார்கள் மேற்குலக ஊடகங்கள் என நினைக்க தோன்றுகிறது). துறைமுகங்களில் ஏற்படும் சுணக்கம் கொள்கலனின் தட்டுப்பாடு அதிகரித்த நடைமுறை செலவு என வழங்கல் சங்கிலி பாதிப்பினை ஏற்படுத்துகின்ற வேளையில் உற்பத்திகள் பெருமளவில் நகர்த்தப்படாமல் பண்டகசாலைகளில் தேங்குகின்றன, உற்பத்திக்கு மூலப்பொருளினை பெறுவதில் சிரமம் ஏற்படுவதால் உற்பத்திகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. வேலையின்மையுடன் பணவீக்கமும் ஏற்படுகின்றது தற்போது பொருளாதார சரிவு பற்றி மேலோட்டமாக பேசும் மேற்கு ஊடகங்கள் இரஸ்சிய உக்கிரேன் போர் தொடர்ந்தால் 1929 ஏற்பட்டதினை போல (Great depression) ஒரு பொருளாதார பிரச்சினைக்கு முகம் கொடுக்க நேரலாம். இந்த நிலையில் இன்னொரு போரினை உலகம் விரும்பாது, ஆனால் அமெரிக்கா மட்டும் விரும்ப கூடும் ஏனெனில் அதன் அதிகரிக்கும் கடன் அதன் மத்திய வங்கி என்பன சேர்ந்து 10 ஆண்டுகளில் அமெரிக்காவின் உலக பொருளாதார மேலாதிக்க நிலையிலிருந்து கீழிறக்கிவிடும், அப்படி நிகழாமல் இருக்க ஒட்டு மொத்த உலக பொருளாதாரத்தினையும் கீழிறக்கினால் அதிலிருந்து தப்பலாம் என ஏதாவது கணக்கு வைத்திருக்கலாம்.
  9. இந்த தலைப்பிற்கும் பாரதியார் கவிதைக்கும் ஏதாவது தொடர்புள்ளதா? அப்படி ஒரு கவிதை வாசித்தாக நினைவுள்ளது. தென்னிந்திய திரைப்பட அமைப்புகள் ஏதாவது ஒன்றில்தான் இந்த மாதிரி பெயர் பதிவுகள் செய்யப்பட்டிருக்கும் என கருதுகிறேன் அங்கு ஒரே பெயரில் இன்னொரு படம் பதிவு செய்ய முடியாது என கருதுகிறேன், அப்படி பதிவு செய்யாவிட்டால் அங்கு எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என கருதுகிறேன். படத்தின் பெயரை வேறு ஒரு பெயராக மாற்ற முடியாதா? படத்தின் தரம் மூலம் பதில் சொல்வதே நன்றாக இருக்கும் என கருதூகிறேன்(எனது கருத்து தவறாக இருக்கலாம்).
  10. சீனாவினை விட ஜப்பானே அதிகளவில் அமெரிக்க அரச பணமுறிகளில் முதலிட்டுள்ளது என கருதுகிறேன். எதற்காக பணமுறிகளில் இந்த இரண்டு நாடுகளும் முதலிடுகின்றன என முன்னர் ஒரு திரியில் விவாதிக்கப்பட்டுள்ளமையால் சுருக்கமாக கூறினால், உலக வர்த்தகத்தில் ஒரு நாட்டின் ஏற்றுமதியானது இறக்குமதியினை விட அதிகரிக்கும் (BOF)போது அந்த நாட்டின் நாணயத்தின் பெறுமதி அதிகரிக்கும். ஒரு நாட்டின் நாணயத்தின் பெறுமதி அதிகரிக்கும் போது இயல்பாகவே அந்த நாட்டின் பொருளின் விலை அதிகரிக்கும் அதனால் அது சர்வதேச சந்தையில் போட்டியினை இழக்கும், இதனை தவிர்ப்பதற்காக வலிந்து தமது நாணயத்தின் பெறுமதியினை குறைக்க இரண்டு தெரிவுகள் உண்டு 1. தங்கத்தினை வாங்குதல் 2. அமெரிக்க அரச பணமுறியினை வாங்குதல். இதில் இரண்டாவது தெரிவு இலாபமானதும் அதிக திரவத்தன்மை கொண்டதுமாகும் (வட்டி மற்றும் பணமுறியினை விற்கும் போது அது உடனடியாக அமெரிக்க நாணயமாக மாறும்). அமெரிக்காவின் கடன் பிரச்சினைக்கு காரணம் கோவிட் காலத்தில் ஏற்படுத்திய பொருளாதார தூண்டல் மட்டும் காரணம் அல்ல என கருதுகிறேன். பொதுவாக அரச செலவினை அதிகரிக்கும் போது மிகப்பெரிய பாதீடு அது பொருளாதாரத்தினை தூண்டும்(Keynes multiplier) ஆனால் இவ்வாறான நிலை தோன்றுவதற்கு மூலகாரணம் அமெரிக்காவின் மத்திய வங்கியின் தவறான அணுகுமுறைக்களே காரணம் 2008 வீட்டு விலை சரிவின் பின்னர் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியிலிருந்து மீழ இதே பொருளாதார தூண்டல் முரையினை கையாண்டனர் என கருதுகிறேன்(அமெரிக்காவில் உள்ள வருமான இடைவெளி பல பொருளாதார பிரச்சினைகளை உருவாக்குகின்றதுதான்). சில பொருளாதார நிபுணர்கள் இந்த பொருளாதாரதூண்ட்டலை seaming paradox என கூறுகிறார்கள்(அதாவது மககளிடம் பணமுறிகளை விற்று பெறும் பணம் மூலம் எவ்வாறு பொருளாதாரத்தினை தூண்ட முடியும் என) இவ்வாறான செயற்பாடுகள் கடன் வாங்குதலை அதிகரிக்கும் இந்த கடன் அதிகரிப்பு தொடர்ச்சியாக அமெரிக்காவினை மேலும் கடன் தொள்ளைக்குள் கொண்டு செல்லும், அதே திரியில் அமெரிக்காவின் கடன் 10 ஆண்டுகளில் கிட்டத்தட்ட மொத்த பாதீட்டில் குறைந்த பட்சம் 6 இல் 1 எனும் விகிதத்திற்கு அதிகரிக்கும் என்பதனை மாதிரிகளின் மூலம் கூறப்பட்டுள்ளடது. விவேக் இராம்சுவாமி எனும் இந்திய வம்சாவளி அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ள இவர் அமெரிக்க நாணயத்தினை மீண்டும் தங்க தரம் போன்றதோர் (Commodity pecged) மதிப்பீட்டு நிலையினை மீழ உருவாக்க வேண்டும் என கூறுகிறார். தற்போதுள்ள அமெரிக்க நாணயம் வெறும் முகப்பெறுமதி நாணயம் அதனால் பணவீக்கம் ஏற்படும், அத்துடன் தற்போது உலக அளவில் ஏற்படும் அமெரிக்க நாணயத்தின் உலக நாணய கையிருப்பு நாணயம் எனும் நிலைக்கு ஏற்படும் அச்சுறுத்தலுக்கு இது ஒரு மாற்றாக இருக்கலாம். 1970 பின் அமெரிக்கா தனது தங்க தர நிலையினை கைவிட்ட பின்னர் மேற்கு நாடுகளில் Stagflation உருவானது(வேலையின்மையும், பணவீக்கமும்), அதற்கு காரணம் பெற்றோலிய பொருள்கலின் விலை அதிகரிப்பே, தற்போது ஒட்டு மொத்த உலகும் அதே திசையில் எதிர்வரும் காலங்களில் பயணிப்பதற்கான விடயங்கள் பெற்றோலிய உற்பத்தி நாடுகளாலும் இரஸ்சிய உக்கிரேன் யுத்தத்தால் ஏற்படலாம். அமெரிக்க கையிருப்பு நாணயதிற்கு மாற்று நாணயம் வருமா(தனிய ஒரு நாணயம் என்றில்லாமால் பல யூரோ, யுவான், ஜென் என பல)? அது தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளதாக கருதுகிறேன் உடனடியாக அல்ல 10 ஆண்டு காலத்தில் அதற்கு காரணம் அமெரிக்க பொருளாதார கொள்கைகளும் அமெரிக்க மத்திய வங்கிகளுமே காரணமாகும் வெளியில் இருந்து அல்ல.
  11. இரஸ்சிய ஊடகங்களில் வெளியான பென்டகன் குண்டு வெடிப்பு புரளியால் பங்கு சந்தை பாதிப்பு, AI துணைகொண்டு உருவாக்கப்பட்ட புகைப்படங்களை யாழில் தடை செய்யப்பட்ட RT போன்ற ஊடகங்கள் காவி வந்திருந்ததாக கூறப்படுகிறது. இந்த RT ஊடக்த்தினை யாழில் தடை செய்யப்பட்டபோது அதற்கு எதிர்ப்பு தெரித்தவர்களில் நானும் ஒருவன். தற்போது யாழின் முடிவு சரியானதுதான் என்பதை காலம் உணர்த்தியுள்ளது. https://nypost.com/2023/05/22/ai-generated-photo-of-fake-pentagon-explosion-sparks-brief-stock-selloff/
  12. வாக்கு அரசியலா என்பது தெரியவில்லை, ஏனென்றால் தமிழர்கள் அவுஸ்ரேலியாவில் சிங்களவர்களை விட கூட வசிக்கிறார்கள் என கருதுகிறேன், செயற்பாடு மற்றும் அவுஸ்ரேலிய நாட்டின் தேசிய நலனும் எமக்கெதிராக இருந்தது என கருதுகிறேன்.
  13. சாகவச்சேர் காவல்நிலைய தாக்குதல் தொடர்பாக பசீர் காக்கா எழுதிய ஆக்கம் முன்னர் படித்திருப்பேன் என கருதுகிறேன், அதில் உள்ள தகவல் அனைத்தும் மறந்துவிட்டேன், அதில் குறிப்பாக ஒரு விடயம் மட்டும் நினைவில் உள்ளது, காவல்நிலையத்தில் இருந்த தொலைபேசி இணப்பை துண்டிக்க ஒரு கொழுவி ஒன்றில் ஈனைக்கப்பட்ட கயிற்றின் மூலம் முயற்சிப்பார் ஆனால் அவரால் அதனை அறுக்க முடியவில்லை எனவும் (தான் அப்போது ஒல்லியாக இருந்தமையால் முடியவில்லை என நகைசுவையாக குறிப்பிட்டிருந்தார்) வீதியால் துவிச்சக்கரவண்டியில் சென்ற ஒருவரின் துணையுடன் பின்னர் அதனை செய்து முடித்தாக நினைவுள்ளது.
  14. நன்றி உங்களது தகவலுக்கு, அவுஸ்ரேலியாவில் தமிழர்களின் அரசியல் முயற்சிகளைவிட சிங்களவர்கள் (குறிப்பாக கல்வி சார் சமூகம்) தொடர்ச்சியாக மேலாதிக்கம் செலுத்தினர், பத்திரிகைகளின் ஆக்கங்கள் எழுதுவதிலிருந்து, தமிழர் தொண்டு நிறுவனங்களை முடக்குவது என தீவிரமாக செயல்பட்டனர். அவுஸ்ரேலியாவில் உள்ள தமிழர்களிடையே (பெரும்பாலான தமிழர்கள்) தாம் மற்ற நாடுகளில் உள்ள தமிழர்களைவிட கல்வியில் உயர்ந்தவர்கள் எனும் எண்ணம் இருந்தது(ஆனாலும் என்னைப்போலவே பல கல்வி சார்பற்ற அகதிகளாக வந்த தமிழர்கள் இருந்தார்கள்) அதனால் மற்ற நாடுகளைபோல இலகுவாக தமிழர் ஓரணியில் நின்று சிங்களத்தின் படுகொலைகளை வெளிப்படுத்தமுடியவில்லை. இந்த கல்விசார் சமூகம் ஒரு வித்தியாசமான உலகில் வாழ்ந்தார்கள், வாழ்கின்றார்கள், அவர்களது வீடுகளில் சிங்கள கலைப்படைப்புகள் வீட்டு வரவேற்பறைகளில் காணப்படும். ஒரு சாதாரண மனித அவலத்தை கூட கண்டும் காணாமல் கடந்த சமூகமாக இருக்ககூடியளவில் இருந்தார்கள். ஆனால் முழுக்க முழுக்க அவர்களில் குற்றம் சொல்லி கடந்துவிடமுடியாது, இரண்டு சமூகமாக தமிழர்கள் இங்குள்ளார்கள் என்பதே இந்த பிரச்சினைகளுக்கு காரணம்.
  15. ஒப்பீட்டளவில் கனடிய தமிழர்கள் அவுஸ்ரேலிய தமிழர்களை விட பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் செல்வாக்கு செலுத்துகின்றனர், 2009 இல் அவுஸ்ரேலிய முன்னாள் இடதுசாரிக்கட்சியினை சேர்ந்த பிரதமரின் சிட்னி உத்தியோகபூர்வ இல்லத்திற்கு முன்பாக தமிழர்கள் அமைதியான முறையில் வீதி மறியல் செய்திருந்தனர், அப்போது பிரதமர் அலுவலகம் அமைதி காத்திருந்தது, பின்னர் ஆட்சிக்கு வந்த வலதுசாரி கட்சி இலங்கைக்கு விஜயம் செய்து இலங்கையில் தமிழருக்கு எந்த பிரச்சினையுமில்லை என்ற விடயத்தினை கூறியிருந்தது, அத்துடன் நிற்காமல் இலங்கைக்கு கடற்கலஙளையும் வழங்கியிருந்தது.
  16. 2 வாரங்களுக்கு ஒரு முறை உங்களது பங்கு இலாபத்தினை நிறுவனம் வளங்குகிறது, அதனை DEEL எனும் நிறுவனத்தினூடாக வளங்குகிறது, டீல் நிறுவனத்திற்கு உங்களது அடையால உருதிப்படுத்தல் செய்யப்பட்ட பின்னர் நீங்கள் விரும்ம்பும் மார்க்கம் மூலமாக உங்கள் பணத்தினை பெறலாம், Bank transfer Support 180+ currencies Revolut Only available in USD PayPal Only available in USD Wise Instant and supports 7+ currencies Payoneer Only available in USD Coinbase Supports 5 cryptocurrencies Binance International Only available in BUSD முதலில் பணத்தினை பெறுவதற்கான ஆணையினை நிறுவனத்திற்கு வழங்கியபின் 24 மனித்தியாலத்திற்குள் டீல் நிறுவனத்தினிடமிருந்து உங்களது பணம் தயாராக உள்ளது எனும் தகவல் வழங்கும் அந்த தகவல் கிடைத்தவுடன் உங்கள் வங்கிக்கணக்கிற்கோ அல்லது நீங்கள் விரும்பும் மேலே குறிப்பிட்டவற்றில் ஏதாவது ஒரு முறையில் உங்கள் பணத்தினை பெற்றுகொள்ளலாம்.
  17. தற்போதுள்ள அமெரிக்க கடன் (தோரயமாக 31 ரில்லியன் என எடுத்து கொண்டால்) மற்றும் தற்போதுள்ள வட்டி விகிதம் 5%(இது மிகவும் அதிகம் ஆனால் புதிய சாதாரண பணவீக்கம் 1.5 இலிருந்து 2.5% எனும் நிலைக்கு மாறியுள்ளமையால் ஒரு கணிப்பிற்காக 5% எடுக்கப்பட்டுள்ளது சராசரியாக 2% வட்டி விகிதம் அமெரிக்க பணமுறி வழங்கி வந்துள்ளது) அந்த வகையில் 2% interest paid = 1 trillion 5% interest paid = 2.5 trillion அமெரிக்க வருட பாதீடு ஏறத்தாழ 6 ரில்லியன் என கருதுகிறேன். 10 ஆண்டுகளின் பின்னர் அமெரிக்க அரசு கிட்டத்தட்ட 6 இல் 1 பகுதியினையோ அல்லது அதற்கு அதிகமாகவோ தனது பாதீட்டில் செலவு செய்ய நேரிடும். கடனுக்கான வட்டி ஆண்டிற்கு 6.8% அதிகரித்து செல்லுகிறது கணிப்பிற்காக 5% பயன்படுத்தப்பட்டுள்ளது
  18. அமெரிக்கா அரசியல் நிலவரம் பெரிதாக தெரியாது அதனால் புள்ளி விபரங்கள் சரியா என்பதும் தெரியாது. ஆனால் பொதுவாக உள்ள நடைமுறை இடது சாரி அரசுகள் பெரும்பாலும் மக்கள் நலனை முன்னிறுத்தி செலவுகலை செய்யும் (தற்போதுள்ள பைடன் அரசு இடது சாரி அரசு என நினைக்கிறேன்). அவை பொதுசெலவை அதிகரித்து அதிகபடியான வேலைவாய்ப்பை உருவாக்குவார்கள்(Keynesian model). பொது செலவினை அதிகரிக்கும் போது அந்த நாட்டில் உள்ள மக்களின் சேமிப்பு பழக்கத்திற்கு ஏற்ப பொருளாதாரம் தூண்டப்படும், இதனை Keynesian multiplier என்பதாக நினைவுள்ளது, சேமிப்பு பழக்கம் குறைவாக இருக்கும் போது இந்த பொருளாதார தூண்டல்(multiplier) அதிகமாக இருக்கும். இதனால் பற்றாக்குறை பாதீடு உருவாகும், பணவீக்கம் அதிகரிக்கும். மறுவளமாக வலதுசாரி அரசு நிறுவனங்களின் அரசாக செயற்படும் சிறிய பாதீட்டினை உருவாக்கும், சாதாரண மக்களைவிட நிறுவனங்களின் நன்மையில் அதிகம் கவனம் செலுத்துவார்கள், வருமான ஏற்றத்தாழ்வு அதிகரிக்கும், பொருளாதார சுருக்கம் ஏற்படும், ஒரு நிலையற்ற பொருளாதாரம் உருவாகும் மிக சிறிய சதவிகித நபர்கள் நாட்டின் செல்வத்தின் பெரும்பகுதியினை அபகரித்து கொள்வார்கள் இதனால் பொருளாதார சரிவுகள் காலா காலத்தில் ஏற்படும். அடிப்படையில் நிகழும் பொருளாதார சரிவுகளுக்கு பெரும்பாலும் வலது சாரி அரசுகளை கண்ணை மூடிக்கொண்டு குற்றம் சாட்டலாம் ஆனால் நிலமைக்கு ஏற்ப செயற்படாமல் எப்போதும் போல செயற்படும் இடதுசாரி அரசுகளும் குற்றவாளி ஆகிறார்கள். கீன்ஸ் தனது கொள்கையில் பொருளாதாரம் சிறப்பாக செயற்படும் போது பொது செலவை குறைக்க வேண்டும் (பணவீக்கம் குறையும் அதனால் ஏற்படும் வேலையின்மை அதிகரிப்ப்பு கட்டுப்படுத்தப்படும்), பொருளாதாரம் மந்தமாக இருக்கும்போது பொது செலவை அதிகரிக்க வேண்டும் என கூறியுள்ளார். தற்போதுள்ள பைடன் அரசு பொது செலவை குறைக்க முயற்சிக்கிறதா அல்லது வழமையான இடது சாரி அரசுகள் போல பொது செலவினை அதிகரிக்கின்றதா என தெரியவில்லை ஆனால் பணவீக்கம் அதிகரித்துள்ளது. வட்டி செலுத்தும் நிலை தொடர்ந்து அதிகரிக்கும் இதனால் பணவீக்கம் தொடர்ந்தும் அதிகரிக்கும்(மறைமுகமாக பணவீகம் அதிகரிக்கும்) அது பொருளாதார சுருக்கத்தினை ஏற்படுத்தும், தற்காலிகமாக வட்டிவீத அதிகரிப்பு போன்றவற்றின் மூலமாக படகில் ஏற்படும் துளைகளின் மூலமாக உள்ளே வரும் தண்ணீரை அடைப்பதை போல தற்காலிக தீர்வுகளை நாடலாம். நீண்ட கால அடிப்படையில் அமெரிக்க பொருளாதாரம் ஒரு தீர்க்க முடியாத நோயிற்குள் சென்று கொண்டுள்ளது, அரசியல் கட்சிகளுக்கு இவை தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.
  19. மன்னிக்கவும் எனது கருத்துக்களை தவிர்த்திருக்கலாம் (ரஞ்சித்தின் கருத்தினை வாசித்த பின்னர் எனது தவறை உணர்கிறேன்).
  20. மன்னிக்கவும் காலம் தாழ்த்தி பதிலளிப்பதற்கு (சமீப காலமாக வேலைப்பளு காரணமாக இந்த தவறுகள் நிகழ்கிறது). ஒரு சிங்கள தளபதி ஒரு பிராந்தியத்தினை பிடித்து இளைஞர்களை கொன்றும் சிறைப்பிடித்தும் தென்பகுதிக்கு அனுப்பியவேளை அங்கு கூட்டத்தினை கூட்டி அந்த பிள்ளைகளின் பெற்றோரிடம் சொன்னாராம் ஒவ்வொரு 200 இளைஞர்களை கொன்றால் எதிர்காலத்தில் உருவாக இருக்கும் ஒரு புலியினை கொல்லலாம் என்றாராம். அந்த இராணுவ அதிகாரி இறந்த பின்னர் அவருக்கான நினைவு சின்னம் ஒன்றினை இராணுவத்தினர் தாம் நிலை கொண்டிருந்த பிரதேசத்தில் அமைத்திருந்தனர், அந்த இராணுவ நிலைகலை அழிக்க சென்ற புலிகளுக்கு அவர்களது தலைமையினால் வழங்கப்பட்ட உறுதியான உத்தரவு சண்டை பிரதேசத்தில் அமைந்திருக்கும் அந்த நினைவு சின்னத்தின் மீது எந்த கீறலும் விழ கூடாது என்பதாக கேள்விப்பட்டேன்.
  21. மன்னிக்கவும் உங்கள் பதிவிற்கு காலம் தாழ்த்தி பதிலளிப்பதற்கு, நீங்கள் கூறும் விடயமும் நான் கூறும் விடயமும் வேறு வேறாக இருக்கும் என கருதுகிறேன் கீழே உள்ள காணொளியில் நான் கூறிய விடயங்களை மேலோட்டமாக கூறுகிறார்கள்.
  22. நான் உங்கள் உணர்வுகளை மதிக்கிறேன், அதனால் பதிலிடவிரும்பவில்லை, ஆனாலும் நீங்கள் மீண்டும் என்னை தவறாகவே புரிந்து கொண்டுள்ளமையாக உணருகிறேன், நீங்கள் என்னை புரிந்து கொள்வதால் எனக்கும் இலாபமில்லைதான் ஆனால் நான் கூறிய கருத்தினை மற்றவர்கள் விளங்கிகொள்வதாலும் எனக்கு எந்த நன்மையுமில்ல்லை (சரியான கருத்தாக இருந்தால்). நாம் எவ்வாறிருக்கிறோமோ அவ்வாறே எமது சமூகமும், உலகமும் இருக்கும், நீங்கள் உலகை பார்த்து சிரித்தால் அது உங்களுக்கு பதிலிலுக்கு சிரிப்பை கொடுக்கும், நீங்கள் வேறு ஏதாவதொன்றை கொடுத்தால் அந்த வேண்டாத வேறொன்று உங்களிடமே வந்து சேரும் (கல்லறைகளுக்கான மரியாதையினை பற்றி கூறுகிறேன்). நாம் எல்லோரும் எதோ ஒரு வகையில் நல்ல விடயங்களை மற்றவர்களிடம் கற்றுகொள்கிறோம், நான் உங்களிடமும் கற்றுக்கொண்டிருக்கிறேன் ஒவ்வோர் யாழ்கள உறவுகளிடமும் கற்றுகொண்டுள்ளேன், மற்றவர்களுக்கு எப்படியோ தெரியாது யாழ் என்னை மேம்படுத்தியுள்ளது பல வகையில், அதனால் உங்கள் அனைவரின் மேலும் எனக்கு மதிப்புள்ளது, உரிமையும் உள்ளது, சில சமயம் அந்த உரிமையில் எனது கருத்தினை வைக்கிறேன்.
  23. நன்றி, இணையவன் உங்கள் கருத்திற்கு. நன்றி அனைத்து யாழ்கள உறவுகளுக்கும் மறைமுகமாகவும் நேரடியாகவும் எனது கருத்திற்கு பதிலளித்தமைக்கு, இணையவன் தவிர்த்து பல உறவுகளுக்கு கல்லறைகளில் அவமரியாதை செய்வது மோசமான செயல் என்பது புரியாமல் இருப்பதனை உணரமுடிகிறது. இதில் எனது தவறும் உண்டு என்னால் அதனை இலகுவாக அனைவருக்கும் விளங்கப்படுத்தமுடியவில்லை, சிறந்த ஆசிரியர் கடைநிலை மாணவருக்கும் புரியுமாறு படிப்பிக்க வேண்டும், நான் ஆசிரியருமில்லை, ஆனால் பெரும்பாலனோர் எனது கருத்தினை உள்வாங்கியுள்ளார்கள் என்பதனை அவர்களது கருத்திலிருந்து அறிய முடிகிறது, இது ஒரு ஆரோக்கியமான விடயம் முதலில் ஒரு விடயத்தினை உள்வாங்கியுள்ளனர், இனி கல்லறைகளை காணும்போது அவர்களது கல்லறை தொடர்பான இதுவரைகாலமும் இருந்த புரிதலில் ஒரு மாற்றம் ஏற்படலாம், சாதாரணமாக கடந்து விடமாட்டார்கள் என நம்புகிறேன்.
  24. இந்த பெண்மணியின் செயல் கேவலமானது, கல்லறையில் போய் அவமரியாதை செய்வது கேவலமான செயல்பாடு. இவரது வெறுப்பை வேறு வழியில் காட்டியிருக்கலாம். இதனை பாராட்டும் சமூகமாக நாங்கள் மாறிகொண்டிருப்பது வேதனைக்குரியது.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.