Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலவர்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by புலவர்

  1. https://www.bbc.co.uk/sport/olympics/paris-2024/medalsரஸ்யா இல்லாததுதான் மற்றவர்களுக்கு கொண்டாட்டம்
  2. எவ்வளவு கஸ்ரப்பட்டு கடன்பட்டு குடும்பத்தை கரைசேர்க்க வேண்டும் என்ற கனவுடன் இருந்திருப்பார்.இவர் பணத்தோடு போகிறார் என்று தெரிந்தவ்கள்தான் இந்தக் கொடுமையைச் செய்திருக்கிறார்கள்..இவர்களைக் கடவுள்தான் தண்டிக்க வேண்டும்
  3. ரணில் ஒரு குள்ள நரி என்பதை மீண்டும் காட்டி விட்டார். கட்சி சின்னத்தில் இல்லாதுசுயேச்சையாக புதிய சின்னத்தில் நிற்பது சஜித்தின் கட்சியில் இருப்பவர்களையும் மகிந்தவின் கட்சியில் உள்ளவர்களையும் தான் ஐதேகட்சியின் வேட்பாளர் இலலை பொது வேட்பாளர் என்று மாயையக் காட்டி அவர்களை இழுக்கப் பார்க்கிறார்.என்னைப் பொறுத்தவரையில் ரணில் ஸனாதிபதியாவதை விரும்பவில்i. உடனே ராஜபக்சேக்களுக்கு கருத்து எழுதுவதாக நினைக்கக் கூடாது.மகிந்த தரப்பு ஜனாதிபதியானால் கோத்தாவின் காம் போல மீண்டும் ஒரு அரகல வரும்.மேற்குலகம் அதனை சில தந்திரங்களைக் கையாண்டு ஊக்கவிக்கும்.ஏனெ;னறால் மகிந்த தரப்பு நேரடியாக சீனாவை ஆதரிக்கும். ஆனால் ரணில் சீனாவை எதிர்க்கமாட்டார் ஆனார் எதிர்பது போல பாவனை காட்டி மேற்குலகை ஏமாற்றுவார். சிங்களவர்களுக்கு பரும்பும்>பாணும்>மின்சாரமும்>எண்ணெையும் கொடுத்தால் அவர்கள் பேசாமல் இருப்பார்கள்.தமிழர்களுக்கு ஒரு மண்ணும் கிடைக்காது. தமிழர்கள் அனைத்து கட்சிகளும் ஒருமித்து பொது வேட்பாளருக்கு ஒரு வாக்கை மட்டும் போடவேண்டும். அன்றேல் ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்க வேண்டும்.ரணிலை இந்தத் தேர்தலோடு வீட்டுக்கு அனுப்ப வேண்டும். ஆனால் அந்தக் குள்ள நரிதேர்தலில் தோற்றும் ஜனாதிபதியான குள்ளநரி.
  4. உண்மையில் பிரான்சில் நடக்கும் அதிபர் தெரிவுதான் மிகச்சரியான ஜனநாயகத்தை வெளிப்படுத்துகிறது.சிறிலங்கா ஜனாதிபதித் தெரிவில் செலவைக்குறைக்கும் முகமாக இப்படி விதிகளை அமைத்தார்கள் என்று நினைக்கிறேன்.
  5. எப்படித் திரண்டாலும் தமிழர் ஒருவர் சிறிலங்காவின் ஜனாதிபதியாக வர முடியாது. ஆனால் தமிழர்கள் இதனை தங்களின் சுயநிர்ணய உரிமைக்கான வாக்கெடுப்பாகப் பயன்படுத்தலாம். அதற்கு தமிழரசுக்கட்சியும் தமித்தேசிய முண்ணனியும் பொது வேட்பாளரரை ஆதரிக்க வேண்டும். இங்கே சிக்கல் என்ன டவென்றால் பொது வேட்பாளரை நிநறுத்துவதற்கு ஒப்பந்தம் போட்டிருக்கும் கட்சிகளும் அரசியல் விமர்சகர்களும் இந்திய நலனை முன்னிறுத்துபவர்கள். அவர்கள்13 மேல் எதனையும் கேட்க மாட்டார்கள். அவர்கள் உண்மையிலேயே வெளித்தூண்டல்கள் இன்றி பொது வேட்பாளரை நிறுத்தினால் வரவேற்கலாம். சுமத்திரன் பொது வேட்பாளரைப் புறக்கணிப்பதாக ஏற்கனவே அறிவித்து விட்டார். மாவையும் சிறிதரனும் வழமை போல் மதில மேல் பூனையாக இருக்கிறார்கள். கஜேந்திரகுமார் சுகவீனம் காரணமாக நடப்பு அரசியலில் நேரடியாக இல்லை. அதனால் முன்னனி எப்போதும் போல புறக்கணிப்பு நிலைப்பாட்டில் உள்ளது.
  6. அதன் இணைப்பை முடிந்தால் இணைக்கவும். தமிழ்பொதுவேட்பாளரை நிறுத்திற ஆட்கள் ஒரு வாக்கை மட்டும் செலுத்த வலியுறுத்த வேண்டும் இல்யைேல் பேசாமல் இருக்கலாம்.
  7. ரணில் மகிந்தவின் மொட்டுக்கட்சியில் இருந்து எத்தனை எம்பிக்களை இழுத்தெடுத்தாலும் ராஜபக்டீசக்களின் ஆதரவு இல்லாமல் ஒண்ணும் புடுங்க முடியாது. சிங்களவர்களைப் பொறுத்தவரையில் மகிந்த நவீன துட்டகைமுணு. பார்க்கிறவரகளின் புலன் வேறு எங்கும் போகமால் திசை திருப்புவதற்காகக்தான் பெண்கள் நகைகளை அணிகிறார்கள் என்பது சரிதான் .
  8. வடிவாய்ப் பாருங்கள் சிறி காப்பு மட்டுமா தெரியுது?முக்கியமான தடயம் இருக்கு வடிவாயப்பாருங்கோ.
  9. அது மகிந்தவின்ர மனிசிதான். கிளியராய் தெரியுதே. அது மகிந்தவின்ர மனிசிதான். கிளியராய் தெரியுதே. அட நான் பாதிப்படம் பார்த்து ஊகித்து எழுதிவிட்டு பார்த்தால் குமாரசாமியர் முழுப்பட்ததையும் போட்டுவிட்டார்.
  10. கமலம் என்றால் தாமரை என்பது. தமிழ்தானே வேர்ச்சொல் சமஸ்கிருதம் வேர்ச்சொல் என்று போட்டிருக்கிறார்கள்.
  11. பொது வேட்பாளர் விடயத்தில் 2 முக்கிய தமிழ்க்கட்சிகள் கைச்சாத்திடவில்லை..ருகட்சிகளையும் இணைத்து இதனைச் செயல்படுத்தாவிட்டால் இந்தப் பொதுவேட்பாளர் விடயம் பிசுபிசுத்துப் போய்விடும்.மாவையும் சிறிதரனும் பொது வேட்பாளரை நிறுத்துவதற்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருந்தவர்கள். ஆனால் சுமத்திரன் அதற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தார்.தமிழரசுக்கட்சிக்குள் தீரமானங்களை எடுப்பதில் இன்னமும் சுமத்திரனின்கையே ஓங்கி நிற்கிறது.பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான ஒப்பந்தத்தில் கைஎழுத்திட்ட அரசியல்வாதிகளும் பத்தி எழுத்தாளர்களும் முழுக்க முழுக்க இந்தியாவின் நலனைப் பேணுபவர்கள். அவர்களால் 13 இற்கு மேல்போக முடியாது.அடுத்து பொது வேட்பாளரை நிறுத்தினால் ஒரு வாக்கை மட்டும் பொது வேட்பாளருக்கு அளிக்க வேண்டும். 2வது 3வது வாக்குகளை அளிப்பது பொதுவேட்பாளரை நிறுத்துவதை அர்த்தமற்றதாக்கிவிடும். இதுபற்றி தெளிவுபடுத்தப்படவில்லை.
  12. அதே மாதிரி அந்தக் கட்சிக்கு ஆதரவும் கொடுக்க ஆட்கள் இருக்கிறார்கள். அந்தப் பட்டியலில் நம்மவர்களும் இந்தியர்களும் இருக்கிறார்கள். பிரக்சிற் வாக்கெடுப்பின்போது பிரக்சிற்றுக்கு ஆதரவாக தமிழர்களில் 99 வீதமானவர்கள் இருந்தார்கள். அவர் சொன்ன காரணம் ஐரோப்பிய நாடுகளிலிருந்து மக்கள் இங்கு வருகிறார்கள் என்பதே. ஐரோப்பா தமழ்மக்கள் செறிந்து வாழ்கிறார்கள். அந்த வகையில ஐரோப்பிய ஒன்றயத்தில் இருப்பது நல்லது என்று தமிழ்மக்களின் சார்பு நிலையில் இருந்து கூட அவர்கள் யோசிக்கவில்லை.அவர்களுக்கு யாரும் வெளியில் இருந்து வரக்கூடாது.தாங்கள் இங்கேயே பிறந்து வளர்ந்த மாதிரி எண்ணம்.உண்மையில் ஐரோபாவில் வந்தவர்களை அங்கே வாழ வசதியில்லாமல் வந்தவர்கள் என்ற குருட்டுக்கண்கொண்டு பார்க்கிறார்கள். உண்மையில் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் இஙகிலாந்தை விட நல்ல வசதியான வாழ்க்கை இருக்கிறது.நம்மவர்கள் வருவது ஆங்கில மூலக்கல்வி என்ற ஒன்றுக்காககத்தான் என்பதே.
  13. சுமத்திரன் தமிழப் பொதுவேட்பாளரை எதிர்க்கிறார். மாவையும் சிறிதரனும் ஆதரிக்கின்றனர்.தமிழரசுக்கட்சியின் சார்பில் பொதுவேட்பாளர் என்றால் மாவைத்தான் தள்ளி விடுவார்கள்.
  14. தென்னிலங்கையில் இருந்து தமிழர்களின் சுயநிர்ணய உரிமயை ஓங்கி ஒலித்த குரல் மெளனமாகிவிட்டது.ஆழ்ந்த இரங்கல்
  15. தமிழ்மக்கள் ஒரு வாக்கை மாத்திரமே செலுத்த வேண்டும். இரண்டாம் தெரிவை செய்ய இடமளித்தால் பொது வேட்பாளர் தெரிவே தேவையற்றதாகி விடும்.
  16. தமிழர்கள் இந்தமுறை யாருக்கு வாக்குப் போட வேணும் என்று சொல்ல சம்பந்தரும் இல்லை.
  17. ஆரம்பத்தில் அர்ச்சுனாவின் குற்றச்சாட்டுகள் அவர் மீது ஒரு நன்மதிப்பை ஏற்படுத்தியது உண்மைதான் . பொது மக்களும் அவருக்கு ஆதரவாக இருந்த காரணத்தால் அவர் போகப் போக தன்னை ஒரு ஹீரோவாக எண்ணத்தலைப்பட்டு விட்டார்.அவர் சொன்ன குற்றச்சாட்டுக்கள் இலங்கை முழுவதும் ஏன் உலகம் முழுவதும் உள்ள அரசாங்க வைத்தியசாலைகளில் நடக்கின்ற விடயங்கள் தான். சாவகச்சேரி வைத்திய சாலையில் இருந்த 28 வைத்தியர்களில் ஒரு வைத்தியர் கூட நல்லவரில்லையா? ஏன் அவருடைய கருத்துடன் ஒத்துப் போகாமல் முரண்படுகிறார்கள்.பொதுமக்களின் வரிப்பணத்தில் இலவசக்கல்வியைப்படித்து விட்டு வெளிநாடுகளுக்குப் போய் சொகுசு வாழ்க்கை வாழ முயலாமல் தாயகத்திலேயே கடமையாற்றும் வைத்தியர்களை ஒருசில வைத்தியர்கள் விடும் பிழைக்காக ஒட்டுமொத்த வடமாகாண வைத்தியர்களையே பிழையெனக் கூறுவதும் அதனை வைத்தியர் சங்கத்தில் சொல்லிப் பேசித் தீர்க்காமல் பொதுவெளியிலும் சமூகவலைத்தளங்களிலும் போட்டு விளம்படுத்துவதும் அவர் விளம்பரப் பிரியர் என்பதைக்காட்டுகிறது. என்று தொலைக்காட்சிப் பேட்டியில் அட்டகாசமாக சிரித்தாரோ அன்றே அவர் மேல் இருந்த மதிப்பு குறையத் தொடங்கி விட்டது. சாவகச் சேரி வைத்திய சாலைக்கு வீடியோக்காரர்களையும் கூட்டிக் கொண்டு வந்து வைத்தியர் ரஜீவை வெளியேறச் சொல்லி அவர் கதிரையில் இருந்து கால்மேல்கால் போட்டு இருந்தாரோ அது ஒரு படித்தவன் செயலாகத் தெரியாவில்லை. ஒர வெறித்தான சினிமா பைத்திய ரசிகனாகவே அவரை அடையாளம் காட்டியது.இத்தனைக்கும் வைத்தியர் ரஜீவ் ஆத்தரப்படாமல் நிதானம் காட்டியது பேற்றத்தக்கது.தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் தேவையற்ற வித்தில் அரசியலைக்கலந்து அரசியல்வாதிகளை உள்ளே இழுத்துப் பேசுவது. அவர் கொஞ்சம் உளவியல் ஆலோசனை தேவைப்படும் ஒருவராக மாற்றியுள்ளது.
  18. திமுகவும் அதன் தோழமைக்கட்சியான திராவிடர்கழகமும் பார்ப்பான் என்று சொல்லுவது சரிஎன்றீல் உது எப்படித்தவறாகும்.சண்டாளர் என்ற சொல் அயோக்கியர் என்ற கருத்திலேயே ஈழம் உட்பட தமிழர் வாழும் இடங்களில் புழக்கத்தில் உள்ளது.வேங்கை வயலில் மலத்தைக் கலந்தவனைக் பிடிக்காத தமிழக அரசை கண்டிக்காத திருமா வகையறாக்கள் ஸ்டாலனுக்கு துதி பாடுவதற்காக இப்படிச் சாதிச்சங்ககங்களை கொம்பு சீவி விடுகிறார்கள்.
  19. இன்று ருவிற்றர் மற்றும் பல சமூகவலைத்தளங்களில் நாம் தமிழர் தம்பிகள் அந்தப்பாட்டை பரப்பி அதகளப்படுத்தியிருக்கிறார்கள்..திமுக அரசு சாட்டைையை அச்சுறுத்த நினைத்து நாட்டையை மேலும் பிரபலப்படுத்தியதுமல்லாமல் அந்தப்பாட்டை உலகம் முழுவதும் கேட்க வைத்து விட்டார்கள். போதாக்குறைக்கு சீமானும் பாடி முடிந்தால் கைது பண்ணிப்பார் என்று சவால்விட்டிருக்கிறார்.
  20. 143 இடங்கள் என்பதும் ஆபத்தாகப் பார்க்கப் பட வேண்டிய ஒன்றுதான். பிரித்தானியாவிலும் இனவாதக்கட்சி ஒன்றுக்கு 5 ஆசனங்கள் கிடைத்திருக்கின்றன.
  21. சிறிய அணிகளில் சிறப்பான ஆட்டங்களை வெளிப்படுத்திய சுவிஸ்>ஓஸ்ரியா>துருக்கி அணிகள் வெளியேறி விட்டன. முதல்சுற்றுக்களில் சிறப்பான ஆட்டங்களை வெளிப்படுத்ததாத இங்கிலாந்து .பிரான்ஸ்.கொலண்ட் ஸ்பானிய அணிகள் உள்ளே வந்து விட்டன.
  22. அந்தப் போட்டித் தொடரில் பிரேசிலை பிரேசில் மண்ணிலேயே 7-1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் துவைத்து எடுத்தவர்கள். அந்த உலகக் கோப்பையை வென்ற பின்னர். சின்ன சின்ன அணிகளிடம் அடிவாங்குகிறார்கள். முன்பெல்லாம் அதிக தடைவைகள் உலகக் கோப்பையிலும் சரி ஐரோப்பிய கிண்ணப் போட்டிகளிலும் சரி அதிக தடைகைைள் இறுதிப் போட்டியில் விளையாடிய அணி என்றால் அது ஜேர்மன் அணிதான். தற்போதையை அணியை அடியோடு மாற்ற வேண்டும். விளையாட்டில் கோல்களை அடிக்க வேண்டும். அதுலவும் ஸ்பானியா நேரத்தோடு கோல் போட்டிருந்த நிலையில் கடைசி நிமிடம் வரைக்கும் கோல்கள் போடாது இழுத்தடித்தது பெரும்பிழை. பரீட்சைக்கு முதலே படித்து ஆயத்தமாகாமல் கடைசிநாள் பஸ்சுக்குள் படித்து சோதனை எழுதின மாதிரித்தான் இதுவும். மேலதிக நேரத்தில் ஸ்பானியாவைpன் ஆதிக்கமே அதிகரித்திருந்தது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.