Everything posted by nochchi
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
காலச்சிறையுடைத்து ஈழத்திசை காட்ட வாழ்வை ஈந்தளித்த மாவீர மறவர்களே வீரவணக்கம்!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
மாயக் கண்கொண்டு நான் தந்த விருந்துமன்னன் பசி தீர்த்ததோமேலும் என்னென்ன பரிமாறு என்றுஎன்னை ருசி பார்த்ததோபாதி இச்சைகளை பார்வை தீர்க்கின்றதுமீதி உண்டல்லவா மேனி கேட்கின்றது..................
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
ஈழம் உருப்பெறக் கருமையில் நுளைந்து கடமையை முடித்த நடுகல் நாயகரே கருவிழிமீது ஒளியென வாழ்ந்து காவியம் பாடுகின்றீர்!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
எல்லாளனாய்ப் பிறந்து எதிரியின் மார்பேறி திமிர்முறித்துப் பயிரான கரும்புலி மறவரே கோலம்மாறிக் கொடுமைகள்எங்கள் காலைச்சுற்றிக்கடிவாளம் போடினும்கரும்புலிமறவரேபோற்றுகின்றோம்உங்கள் வீரத்தையே - நாம்போற்றுகின்றோம்!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
காலவெள்ளத்துள் கரையாது வாழும் மறவர்களே வீரவணக்கம்! எல்லாளனாய்ப் பிறந்து எதிரியின் மார்பேறி திமிர்முறித்துப் பயிரான கரும்புலி மறவரே கோலம்மாறிக் கொடுமைகள் எங்கள் காலைச்சுற்றிக் கடிவாளம் போடினும் கரும்புலிமறவரே போற்றுகின்றோம் உங்கள் வீரத்தையே - நாம் போற்றுகின்றோம்!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
விழிமூடித்துயில்கின்ற வீரரே உங்கள் குருதியில் உயிரான தமிழீழதேசத்தை காணும்வரை எம்மை உரமேற்றி நடமாடத் துணையாக இருப்பீரே! வீரவணக்கம் வீரர்களே!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கம்.- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
100 வீதம் உண்மை- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
தீண்டாய் மெய் தீண்டாய் தாண்டாய் படி தாண்டாய்ஒரு விரல் வந்து உன்னைத் தீண்டியதோஉன் நரம்போடு வீணை மீட்டியதோஉன் உயிர்க்குள்ளே காதல் அம்பைத் தொடுத்திட்டதோவிழியோடும் தீண்டல் உண்டு விரலோடும் தீண்டல் உண்டுஇரண்டோடும் பேதம் உள்ளதுவிழித்தீண்டல் உயிர் கிள்ளும் விரல் தீண்டல் உள்ளம் கிள்ளும்அதுதானே நீ சொல்வது......................- இரசித்த.... புகைப்படங்கள்.
ஆனந்தமாக அனுபவிக்கும் கிளிகளின்முன் அண்டங்களைக் கடந்து உயரப்பறந்தாலும் மனிதன் தோற்றேவிடுகிறான்!- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
மலர்கள் கேட்காமலே மலர்ந்து இப்பூமியை அலங்கரித்துவிட்டு உதிர்ந்துவிடுகிறது எங்கள் மாவீரர்கள்போல்!- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கலாநிதி:குமாரசாமியண்ணா புத்தன் யூனியர் நிழலி கிருபன் மற்றும் அண்மையில் பிறந்தநாளைக் கொண்டாடிய கள உறவுகள் அனைவருக்கும் பிறந்தநாள் வாழ்த்துகள் உரித்தாகுக.- நாட்டுப் பற்றாளர் - அம்பலவாணர் குமாரவேலு ஆசிரியர் அவர்கள்
தமிழீழ விடுதலைப்புலிகளெனும் அமைப்பைத் தமது தேவைக்கேற்றவாறு எவர் சுட்டினாலும் இவர்போன்ற நாட்டுப்பற்றாளர்களே ஒரு மாபெரும் மக்கள்சக்தியென்ற குறியீட்டடைவின் கரணியர்களாவர். எல்லாக்காலங்களிலும் புலிகளைப் பாதுகாத்து பராமரித்து நின்ற பரவாயிரம் நாட்டுப்பற்றாளர்களைக் கொண்டது எம்தேசமென்பதை இன்றையகாலமும் பதிவுசெய்கிறது. அகங்காரத்தோடு ஆதிக்க சக்திகள் அழித்தவிட்டோமென்று கூச்சலிட அமைதியாக ஆயிரமாயிரம் நாட்டுப்பற்றாளர்களால் புலத்திலும் தாய்நிலத்திலும் போராட்டம் தொடர்கிறதெனில் அதன் முன்னோடிகளாக எம்முன் தெரிவோர் இவர்போன்ற நாட்டுப்பற்றார்களே. அன்னைபூபதியம்மா முதல் புலத்திலே எரிதனலாய்ப்போன செந்தில்குமரன்வரை உலகுக்கு ஒரேசெய்தியையே இவர்கள் சொல்லிநிற்கின்றார்கள். தமிழினம் வீழ்ந்தோமென அடிமைப்பட்டிருக்காதென்பதே அது. இவரகள் எத்தக் கட்டளைகட்டுகும் செயற்படாத செம்மையாளர்கள். நான் கண்ட காட்சியொன்று அப்போது ஊடகப்பரப்பு குறுகியகாலம். அவரொரு ஆசான். திருநெல்வேலிச் சந்தியிலே தமிழீழ விடுதலைப்புலிகளின் தகவற்பலகையொன்றிருந்தது அதிலே தினமும் நிகழும் முதன்மைச்செய்திகளை பதிவுசெய்வதே அவரது பணி. காலையிலே அதனை செய்துவிட்டே அவர்தனது வேலைக்குச் செல்வார். இப்படிக் களப்பணிமுதல் மனிதநலப்பணிவரை பல்வேறு தளங்களிலே செயலாற்றிய நாட்டுபற்றாளர்கள் என்றும் போற்றப்படவேண்டியோரே. அன்னைபூபதிதினமே அனைத்துநாட்டுபற்றாளருக்குமான தினமாகும். இந்த ஆண்டும் எமைக்கடந்து போகிறது. இந்தநாளிலே எமக்கு அண்மையாக நடைபெறும் நினைவு வணக்க நிகழ்விலே இணைந்து இவர்போற்றோருக்காக ஒருகணம் தலைசாயப்பதும் எமது கடமையாகும். தந்தையாரின் வழியிலே இவரது தனயனும் பேரனும்தமிழ்த்தொண்டாற்றுவதானது தலைமுறைகளைக் கடந்தும் தமிழ்நிலைக்கும் என்ற நம்பிப்க்கையை வலுப்படுத்தகிறதெனலாம்.- "சினிமா... பைத்தியங்கள்" என்றால் இவர்கள் தான்.
இதனைத்தான் கிந்திய ஆளும்வர்கமும் ஒற்றைவாத பொருண்மியச் சக்திகளும் விரும்புகின்றன.- தன் வாழ்நாளை தாய்நாட்டின் விடியலுக்காக அர்ப்பணித்த பிரிகேடியர் சசிக்குமார்.
தன் வாழ்நாளை தாய்நாட்டின் விடியலுக்காக அர்ப்பணித்த பிரிகேடியர் சசிக்குமார். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது மீது தாக்குதல் நடத்துவதற்கு முன்னரும், எதிரிகளின் படைப் பலம் , படைக் கட்டமைப்புக்கள் போன்றவற்றினைத் தெரிந்து தகவல் கொடுக்கவும் , எதிரியின் அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணித்துப் பின் போராளிகளின் நடவடிக்கை சமர்களுக்கான தகவல்களை வழங்குவதற்கும் வேவுப்பிரிவு தேசியத்தலைவரால் உருவாக்கபட்டது. அதற்காக அல்லும் பகலும் தன் உழைப்பாலும் போராளிகளின் ஈகத்திற்க்கு உயிர்கொடுத்து வரைபடைமுலம் உயிரோட்டம் கொடுத்தவர்களில் பிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் பங்கும் அளப்பெரியது என்றால் மிகையாகாது.படைப் பலம் , படைக் கட்டமைப்புக்கள் போன்றவற்றினைத் தெரிந்து தகவல் கொடுக்கவும் , எதிரியின் அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணித்துப் பின் போராளிகளின் நடவடிக்கை சமர்களுக்கான தகவல்களை வழங்குவதற்கும் வேவுப்பிரிவு தேசியத்தலைவரால் உருவாக்கபட்டது. அதற்காக அல்லும் பகலும் தன் உழைப்பாலும் போராளிகளின் ஈகத்திற்க்கு உயிர்கொடுத்து வரைபடைமுலம் உயிரோட்டம் கொடுத்தவர்களில் பிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் பங்கும் அளப்பெரியது என்றால் மிகையாகாது. தேசியத்தலைவரின் வழிகாட்டலில் இத் தளபதியில் வளர்ப்பில் வார்த்தெடுத்த பல போராளிகள் , தங்கள் ஈகத்தால் எம் தாய்மண்ணில் பல சரித்திரம் எழுதி சென்றார்கள். பின் தளத்தில் சென்று குறைந்த இழப்பில் , பல வழிகளை தன் வரைபடம் நேர்த்தியான ஆற்றல் மூலம் வடிவமைத்து திட்டமிட்டு தலைமையிடம் சமர்பிக்கும் நேர்த்தியான தேசத்தின் மீது கொண்ட உயிரோட்டத்தால் தேசியத்தலைவரிடம் மதிப்பும் – நம்பிக்கையும் கொண்டு விளங்கினார் பிரிகேடியர் சசிக்குமார் அவர்கள். போராளிகள் மத்தியில் பிரிகேடியர் ” சசிக்குமார் மாஸ்ரர் ” என அன்புடன் மரியாதையுடன் அழைக்கப்பட்டு வேவுத்திட்டமிடல்கள் மூலம் பல தாக்குதல் நடத்தியமையாலும் மேலும் வேவுத் திட்டமிடளாலும் பெரும் மதிப்புடன் நாளும் போராளிகள் மனதில் இடம் பிடித்தார். ஆயினும் மக்கள் மத்தியில் அறியாதிருந்தும் இப்படியான் ஒரு தளபதி உள்ளார் என்றும் வெளியில் தெரியா வெளிச்சமாக நாளும் தேசப்பணிகளைத் தொடர்ந்தார் . பூநகரி – பலாலி – ஆனையிறவு – எல்லாளன் ( அனுராதபுரம் ) நடவடிக்கையில் இவரின் தேசக்கடமை முழு வீச்சுடன் விரிந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆயினும் தன் வாழ்நாளை தாய்நாட்டின் விடியலுக்காக அர்ப்பணித்த பிரிகேடியர் சசிக்குமார் அவர்களின் வாழ்வியல் எப்படி இருக்கும் என்பதற்கு ஓர் உதாரணமாகவும் – அவர் சிறப்புத் தளபதியாக இருந்த வரைபடைத்துறையில் – அவர் வழிகாட்டலில் வேவுப்புலிகள் பிரிவின் ஈகத்தை தியாக உணர்வை அவர்கள் தாய்நாட்டிற்காக அர்ப்பணித்த பெரும் தியாகங்கள் சொல்லில் அடங்காதவை. ஆயினும் விடுதலை சுவடுகள் என்றுமே உங்கள் மனதை தாய்மண்ணின் நினைவுடன் ஆளட்டும் , பிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரர் விடுதலைப் பயணத்தில் அவரின் கடமை எவ்வளவு முக்கியம் வாய்ந்தது என்பதையும் வேவுப்புலிகளின் ஈகத்தையும் ஓர் கணம் உணர்ந்து பாருங்கள் பின்வருமாறு விபரிக்கும் வேவுப்புலிகளின் வாழ்வியலிலிருந்து தமிழீழ மண்ணில் பல சிங்களப் படைமுகாம் தாக்குதலின் திட்டமிடலையும் வெற்றியையும் விளங்கிக் கொள்ள வேண்டுமானால் , எங்களது வேவு வீரர்களைப் புரிந்து கொள்ள வேண்டும். அனைத்து தாக்குதல்களையும் பின்னூட்டத்தில் வேவுப்புலிவீரர்கள் பெற்றுத்தந்த வெற்றி யாவும் என்பதை யாவரும் மறந்ததில்லை. ஆயினும் வெளிச்சத்திற்கு இந்த விடுதலை உரங்கள் தெரிவதில்லை என்பதே உண்மை எங்களது வேவு வீரர்கள் அபூர்வமான மனிதர்கள். சாவுக்கும் அஞ்சாத அவர்களது வீரத்தை எண்ணிப்பாருங்கள். அது போற்றுதற்குரியது. பகைவனின் நெஞ்சுக்கூட்டுக்கு மேலேறி வேவு பார்த்துவிட்டு மீளும் அந்த மனத்துணிவு அபாரமானது அது ஒரு இணைதேட முடியாத நெஞ்சுறுதி! தாங்கள் கொண்ட இலட்சியத்தில் அவர்கள் எத்துணை பற்றுக் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். அந்த இலட்சியத்திற்காகத் தங்களது இன்னுயிரையே துச்சமெனத் தூக்கி எறிய மனமுவந்து நிற்கும் அவர்களது தியாக உணர்வு , மேன்மை மிக்கது உன்னதமானது ! தாயகத்தின் மீதும் தாயகத்து மக்கள் மீதும் அவர்கள் கொண்டிருந்த நேசம் இருக்கிறதே …. அது சாதாரணமானதல்ல. அது ஒரு அளவு கடந்த காதல் தளர்ச்சியற்ற பிணைப்பு அந்த வீரர்களின் ஒவ்வொரு அசைவுக்குப் பின்னால் இருந்தும் , எதிரியின் அரண்களுக்கு மத்தியில் நின்று அவர்கள் எடுத்த ஒவ்வொரு முடிவிற்குப் பின்னால் இருந்தும் , அவர்களை இயக்கிக்கொண்டிருந்த உந்துவிசை – அவர்களுடைய அந்த ” மனநிலை ” தான். எங்கள் அன்னைபூமியை ஆக்கிரமித்து நிற்கும் சிங்களப் படைகளின் மிகப் பெரியதும் , மிகவும் பாதுகாப்பானதுமான பல தலைமையகப் படையரணுக்குள் வேவுப்புலி வீரர்களின் தடம் பதிந்துள்ளது. பன்னாட்டு சக்திகளும் – சிறீலங்கா அரசும் இணைந்து எம் மக்களைக் கொன்று குவித்து இனவழிப்பை அரங்கேற்றிய இனவெறியர்களுக்கு எதிராக விடுதலை தாகத்துடன் பல போராரிகளுடன் இணைந்து களமாடி முள்ளிவாய்க்கால் மண்ணில் 2009ம் வருடம் வைகாசி 15ம் நாள் ஆயிரம் ஆயிரம் மாவீரர்களுடன் இணைந்தார். இன்றும் தமிழீழ தேசம் மாபெரும் தளபதியை இழந்து தவிக்கும் தவிப்பை உணர்ந்து நாளை ஆயிரம் ஆயிரம் சசிக்குமார்கள் உருவாகி அவர் விட்டுசென்ற பணியை ஏற்று தமிழீழம் மலர வைப்போம்.http://www.kuriyeedu.com/?p=68556- 2009 மே மாதம், கறுப்பு மாதம்.
இணைப்புக்கு நன்றி தமிழ்சிறியவர்களே! இந்ததிரியை இறுதிக்கட்ட இனஅழிப்புத் தொடர்பான பதிவுகளை மட்டும் இணைக்கும் திரியாகப்பயன்படுத்தி இதனுடன் தொடர்புடைய படங்களை இணைத்துப் பேணுவது நல்லது. யாராவது இதனை ஒரு நிரற்படுத்தப்பட்ட சான்றாவணமாக வைத்துள்ளார்களோ யாரறிவார். எனவே எங்கெல்லாம் கிடைக்கிறதோ இதுபோன்ற பதிவுகள் அனைத்தையும் இணைத்து ஒரு ஆவணத்திரியாக இதைப்பேணுவதூடாக இளையோருக்கு இதனைக்கொண்டு செல்லமுடியுமென எண்ணுகின்றேன். நன்றி- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அண்மையில் பிறந்தநாளைக்கொண்டாடிய அனைத்து யாழுறவுகளுக்கும் இனியபிறந்தநாள் வாழ்துகளைப் பகிர்வதோடு 65வது மைல்கல்லை எட்டி நிற்கும் நகைச்சுவைத் தென்றலான "சுவி" ஐயா அவர்களுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!- "சினிமா... பைத்தியங்கள்" என்றால் இவர்கள் தான்.
இதைப்பார்த்போது அதிர்ச்சியடைந்தேன். இன்னும் ஆயிரம் வருடமம் சென்றாலும் தமிழகம் மாறாது.- தேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.
தமிழ்சிறியவர்களே, அவசியமானதிரியொன்று பதிவுகளும் அப்படியே. தொடர்க. நன்றிகளும் வாழ்த்துகளும் ...... இந்தப்படத்தையும் எமது வீரர்களையும் பார்க்கும்போது கண்கள் தன்வழியே கரைகிறது.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
புரட்சிகரத்தமிழ்தேசியனுக்கும் கடந்த வாரங்களில் பிறந்தநாளைக் கொண்டாடிய கள உறவுகளுக்கும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!- கேணல் கிட்டு, லெப்.கேணல் குட்டிசிறி உட்பட.... பத்து மாவீரர்களின் நினைவுநாள்.
கிந்தயச் சதிக்குப்பலியாகி தமிழீழவர் மனங்களில் நிலையாகி வீரத்தின் மணிமுடிதனையேந்தி தமிழ் வாழும்வரை வாழ்வாகிய வரலாற்று நாயகரே வீரவணக்கங்கள்!- 1 comment
- 1 review
- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
இனிமேலும் ஓயோம் என்று வித்தாகி வீழ்ந்துவிட்ட மாவீரச் செல்வங்களே சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன்!- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Joella Meera Kugan nige பிரியசகி (108 years old) Mohanraj (30 years old) தீபா என்றென்றும் நலமாக வளமாக வாழ்கவென வாழ்துகின்றேன்- சிரிக்க மட்டும் வாங்க
நல்லதொரு திரியைத் தொடங்கிய நந்தனுக்கும் நகைச்சுவைகளை இணைக்கும் உறவுகளுக்கும் நன்றிகள்.சிரிப்பதற்கான பொழுதுகளை தேடும் சூழலில் சிரிக்க மட்டும் வாங்க அழகான தலைப்பு. தொடர்க. - இன்றைய மாவீரர் நினைவுகள் ..
Important Information
By using this site, you agree to our Terms of Use.