Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

nochchi

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by nochchi

  1. எம் மனமெங்கும் நினைவுகளில் நிறைந்துலவும் மாவீரர்களே வீரவணக்கம்.உங்கள் இலட்சியம் ஒருநாள் ஈடேறும். தாயகவெளிகளில் நீங்கள் மீண்டும் நிமிர்வீர்கள்.
  2. தமிழர்கள் மட்டுமல்ல முழு ஈழத்தீவுமே கொண்டாடவேண்டிய தாய். முள்ளியவளை மண்ணிலேயிருந்து தமிழுக்குப் பெருமை சேர்த்த தாயே வாழ்த்துகின்றோம்.
  3. Israel's Arab Warriors : Israel இராணுவத்தில் அரேபிய முஸ்லிம்கள் | Niraj David's Nitharsanam | IBC இந்தத் திரியோடு தொடர்புடைய செய்தியைக் கொண்டுள்ளதால் இணைத்துள்ளேன். நன்றி
  4. ப.வி.அமைப்பைப் பலவீனப்படுத்த ஒரு கத்தியாகப் பயன்படுத்த முனைய அது வளர்ந்து பெரும் வாளாக நிற்பதாகப் பல ஆய்வாளர்கள் சுட்டுகின்றனர். உலகறிந்த உண்மைதானே. பின்லாடனை வளர்த்தார்கள் கொன்றார்கள். தமக்குப்படியாத கடாபியை மக்களை வைத்துக் கொன்றார்கள். சதாமை கொன்றார்கள். சதாமுக்கு மரண தண்டனை சரியென்றால் நெத்தனயாகுவுக்கு என்ன தண்டனை கொடுப்பார்கள். எனவே இது ஒரு திருகுதாள உலகு. இதில் நாம் எமத இனத்துக்காகச் சிந்திக்கவும் செயற்படவும் வேண்டும். நன்றி.
  5. எப்போது வினாத் தொடுப்பீர்! ---------------------------------------------- எரிகின்ற காசாவிலிருந்து என்னதான் கிடைக்கும் எலும்புகளும் கிடைக்காது ஏனென்றால் பார்வைக்குக் சிறுமீன்போல் திமிங்கலமாய் நெளிகின்ற இஸ்ரவேலே விழுங்கிவிடும் அப்போ எதற்காக இந்தப் போருக்குள் மேற்கு மேய்கிறது அரபுலகை வெட்டுகின்ற தங்கக் கத்தியாக இஸ்ரவேல் இருக்கிறது அதனால் இருக்குமோ! எவளவு மக்கள் எவளவு பலஸ்தீனர் எவளவு சிறுவர்கள் எவளவு குழந்தைகள் எவளவு மழலைகள் அழிந்தொழிந்து போனாலும் அதைப்பற்றிக் கவலையேது! எமக்குத் தேவை எமது தேவைகள் நிறைவேற எந்தடையும் இல்லாத உலக வெளிதேவை ஊடறுப்போர் யாரெனினும் நாளையது இஸ்ரவேலேயானாலும் பாலஸ்தீனத்தை வைத்தே படை நடாத்தி அடக்கிடுவோம் இனமென்ன நாடென்ன எமக்கேதும் கவலையில்லை கவலையெல்லாம் எம்மிருப்பே காரணத்தை அறியாத உலகின் கடைநிலை மனிதனது தலைமேலும் கவிறது யுத்தவெறிச் செலவு! கண்ணாடி மாளிகையில் போர் நடக்கும் இடங்களிலே விழுகின்ற தலைக் கணக்கு எழுதுகின்ற ஐ நாவோ வெற்றுக் கடதாசி வெறும் பேச்சு நிறுவனமாய் போனதினை அறியாமல் மக்களது அங்கலாய்ப்பு! உலக மக்களெல்லாம் இனக்கொலைகளுக்கு எதிராகக் குரல்கொடுக்கத் துணியாவிடில் தம் நலன்களுக்காக இனங்களை அழிக்கத் துணிந்திடும் ஆதிக்க சக்திகளின் தொடர்கதையாய் உலகழியும் நிலைதோன்றும் முன்னாலே உலகே விழித்தெழமாட்டாயா! இனக் கொலைகளின் பின்னிற்கும் ஆதிக்க உலகினது முகத்திலே நீ அறைந்து எப்போது வினாத் தொடுப்பாய் அதுவரை இவர்களது ஆட்டங்கள் ஓயாது! தம் தேவைகளை அடைவதற்கு அரசுகளை அழித்தொழித்து கைப்பாவை அரசுகளை நிறுவி ஆட்டுவிக்கும் ஆதிக்க உலகினது அடிமைகளாய் உலக மக்கள் உள்ளவரை ஓயாது போர்முனைகள் தணிவதும் மூள்வதுமாய் உலகம் துயரத்துள் சிதைகிறது சிதைவினிலே வாழ்கின்ற சீர் மிகு நாடுகளோ மனித உரிமையின் காவலராய் வேடமிடும் அற்பத்தனத்தாலே அழிகின்ற உலகமதை யார் வருவார் காத்திடவே! நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  6. அடைக்கலம் கொடுத்தவர்களது நோக்கத்தை இஸ்லாமியர்கள் புரிந்துகொள்ள வாய்ப்பில்லை. ஏனென்றால் அவர்களால் மதக்கடமைகளைக் கடந்து வரமுடியாது. இதற்கு ஒரேவழி அரச மற்றும் பொதுமக்களின் சொத்துகளுக்குச் சேதம் விளைவிப்போரை அவர்களது நாட்டுக்கே அனுப்பிவைப்பது நல்லது. அவர்கள் தமது நாட்டில் போய் தமது கடமையை செய்ய வேண்டியதே.
  7. எல்லாம் ஆதிக்க சக்திகளுக்கே வெளிச்சம். இங்கே அணுகுண்டின் அழிவைக் கண்ட நாடு யப்பான். அணுகுண்டைப் போட்டநாடு அமெரிக்கா. ஆனால், அந்தப் பெரும் அழிவின் பின்னும் அணுகுண்டின் மீதான பாசத்தை வல்லாண்மை மிகு நாடுகள் கைவிடவில்லை. அமெரிக்காவை யாரும் தண்டிக்கவும் இல்லை. உலகை அழிக்கும் வல்லமையோடு இன்றும் இந்த நாடுகள் சர்வசாதாரணமாக மனிதஉரிமை மண்ணாங்கட்டி என்று பேசியவாறு மனித குலத்தை அழிக்க வல்ல அணு ஆயுதங்களோடு நடமாடுகின்றன. இன்றைய நாளில் 9 நாடுகள் அணு ஆயுதங்களைக் கொண்டுள்ளதாக இணையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ரஸ்யா 1458தயார்நிலையிலும் 3039பயன்படுத்தக்கூடிய நிலையிலும்,அமெரிக்கா 1389தயார்நிலையிலும் 2361பயன்படுத்தக்கூடிய நிலையிலும்;, சீனா350, பிரான்ஸ்290,பிரித்தானியா225,பாகிஸ்தான்165,இந்தியா156,இஸ்ரவேல்90, வட கொரியா 40 - 50 பயன்படுத்தக்கூடிய நிலையிலும் வைத்திருக்கின்றன. மறைநிலையாக எத்தனை நாடுகள் வைத்திருக்கின்றவோ தெரியாது. இந்த உலகிடம் மனிதாபிமானத் எதிர்பார்த்தல் சாத்தியமுள்ளதா? உலக நாடுகள் தத்தமது நாட்டின் பட்டினியைப் போக்குவதற்குச் செலவழிப்பதைவிட பலநூறுமடங்கு ஆயுத தளபாடங்களுக்குச் செலவழிக்கின்றன. இந்த உலகம் இயற்கையாக அழிகிறதோ இல்லையோ மனிதர்களால் அழிக்கப்படுவதற்கான எல்லாம் தயார்நிலையில் உள்ளதாகவே தென்படுகிறது. இதில் யாரிடம் அணுகுண்டு இருக்கவேண்டுமென யார் தீர்மானிப்பது? இந்த வல்லாண்மை நாடுகளால் அணு ஆயுதக்களைவைச் செய்யும் தற்துணிவுள்ளதா? பயணத்தின்போது சுண்டிவிடத்தயாரானநிலையில் பெட்டிகளோடு திரிகிறார்கள். இவர்களை இந்த உலகு ஏதோ காப்பர்கள் போல நோக்கியவாறு அழிகிறது. நன்றி.
  8. பெரும்பாலான மேலைத்தேய நாடுகளின் பார்வையில், தம்மைத் தவிர யாரிடமும் அணுகுண்டு இருக்கக்கூடாது என்பதே. ஆனால் கைமீறிவிட்டது. தற்போது அதனை அனைத்துலக அணு ஆயுதப் பரவல் தடுப்பு அமைப்பின் ஊடாகக் கட்டுப்படுத்த முயற்சிக்கிறார்கள். ஆனாலும் அச்சத்தின்பாற்பட்டு முஸ்லிம் நாடுகள் அணு ஆயுதரீதியில் முழுமையடைவதை அவை எதிர்க்கின்றன. அப்படி அவர்கள் அச்சப்படக் கரணியமாக அமெரிக்காவினது நடவடிக்கையும் உள்ளது. இதிலே மேற்கினது சுரண்டலாதிக்கம் ஓயும்வரை போர்கள் ஓயாது.
  9. Vela incident : Does Israel really have nuclear weapons? | Niraj David's Nitharsanam | Israel Weapon இஸ்ரேலிடம் உண்மையிலேயே அணு ஆயுதங்கள் உள்ளதா? நிராஜ் டேவிட் ஒரு அப்பாவி நாடான இஸ்ரேலைப்போய் இப்பிடி அபாண்டமா பழி சுமத்தலாமா ஐயா!
  10. American nurse who got out of Gaza describes desperation she saw காஸாவில் இருந்து வெளியே வந்த அமெரிக்க மருத்துவத்தாதி(எ.ம.ச) தான் கண்ட விரக்தியோடு விவரிக்கிறார்
  11. 33வது நாளில் இஸ்ரேலுக்கு பேரிடி-நெதன்யாகுவுக்கு எதிராக திரும்பிய அமெரிக்கா-7 நாடுகள் அதிரடி முடிவு
  12. உண்மை, மதங்களைக் கடந்து மனிதத்தை நேசிக்காதவரை வாய்ப்பில்லை. அதற்கான எந்தவொரு முன்னெடுப்பும் அரசுகளிடமோ மதபீடங்களிடமோ இல்லை.
  13. ஹிட்லரை மிஞ்சிய இஸ்ரேல் பிரதமர்..? - 7ம் திகதி கொழும்பு குழுங்க வேண்டாமா..?
  14. இஸ்ரேல் மீது பாய்ந்த 8000 ராக்கெட்டுகள்! 4000 பேர் மரணம் | THUPPARIYUM SHAMBU
  15. தந்தையின் பிரிவினால் துயருற்றிருக்கும் யாயினி அவர்களோடும் அவரது குடும்பத்தினரோடும் ஆழ்ந்த இரங்கலைப் பகிர்ந்துகொள்வதோடு, ஆத்மா சாந்தியடைப் பிரார்த்திப்போமாக.
  16. Gaza -வுக்குள் நகரும் Israel இராணுவம்..அடுத்து என்ன? | Niraj David's Nitharsanam | IBC Tamil | Hamas
  17. சாத்தான்கள் 'சாது' காளாக மாறி வேதம் ஓதுகிறார்களாம். அதனால் எவளவு பலஸ்தீனர் இஸ்ரேலால் கொல்லப்பட்டாலும் பரவாயில்லை பயங்கரவாதத்தை அனுமதிக்க முடியாதாம். அரச பயங்கரவாதம் அனுமதிக்கக்கூடியதாம். இது இவர்களின் சந்தர்ப்பவாத சனநாயகம். ?????????????????
  18. நன்றி இங்கே நான் 'அமைதிகாத்தல்' என்பதை பக்கச்சார்பற்றிருத்தல் என்று குறிப்பிட்டிருக்க வேண்டும். யாரையும் எதையும் அறியவேண்டாம் என்று எங்கேயும் நான் சுட்டவில்லை. அறிவதன்வழியே நாம் எதைக் கற்றுக்கொள்கின்றோம். எந்த அடைவுகளை எட்டுகின்றோம் என்பதை திட்டமிட்ட நிலப்பறிப்பையும் இன அழிவையும் எதிர்கொள்ளும் இனமென்ற நிலையில் இருந்து நோக்க வேண்டும். பலஸ்தீனப்பகுதிகளில் இன்று நெந்தன்யாகு செய்வதையே (டட்லியிலிருந்து ரணில்வரை) கந்தளாய் முதல் மயிலந்தமடு வரை நில அபகரிப்பு சிங்களக்குடியேற்றம் எனத் தொடர்கிறது. எதுவும் செய்ய முடியாதவர்களாகப் புலம்பெயர் தமிழர்களாகிய நாமும் இருக்கின்றோம். இதிலே நாம் யார் பக்கம்? நன்றி
  19. ஆதிக்க சக்திகளின் கைப்பாவைகளாகிவிட்ட போரை ஆதிக்க சக்திகளால் மட்டுமே நிறுத்த முடியும் என்பதையே ஐநாவிலே குப்பையில் போடப்பட்ட போர்நிறுத்தம் கோரிய மனு சுட்டுகிறது. ஐ.நா 2008இல் தமிழீழத்திலேயே தோற்றுவிட்டது. எனவே அது ஐ.நா சபையல்ல அறிக்கைச்சபை மற்றும் ஆக்கிரமிப்பு நாடுகளுக்கான சபை போன்ற பாத்திரங்களையே வகிக்கிறது. ஐ.நா உண்மையில் அதிகாரமுள்ள சபையெனில் சிறிலங்காவால் தமிழீழத் தமிழர்கள் மியன்மாரால் ரொகிங்கியர்கள் துருக்கியால் குர்திஸ்கள் இந்தியாவில் காஸ்மீர் மணிப்பூர் என இன அழிவுகள் தொடராது தடுக்கப்பட்டிருக்கும். ஐ.நாவில் கூடும் ஆதிக்க சக்திகளின் சதுரங்க ஆடுகளமாகிவிட்டபின் ஐ.நாவை அப்பாவி மக்கள் நம்புவதால் பயன் உண்டா? நன்றி
  20. இங்கே யாழிலும் இருதரப்பு ஆய்வாளர்களது(யூத,பலஸ்தீன)கருத்துகளிலும் ஒருவகைக் கணக்கெடுப்பு மனப்பாங்கு மிளிர்வதை நீங்கள் அவதானித்திருப்பீர்கள் என்றே நம்புகின்றேன். அதனையும் யோசியத்தோடு ஒப்பிடலாமா? இங்கே நான் குணா அவர்களது பார்வை சரியானது என்ற நோக்கில் எழுதவில்லை. மனிதப் பேரவலம் ஒன்று நடந்துகொண்டிருக்கும் வேளையில், பெரும் இனஅழிவைச் சந்தித்த தமிழ் இனத்தின் முகமாக இருக்கும் புலத்தமிழரில் ஒரு பகுதியினர் துடுப்பாட்டப் போட்டியின் வர்ணனைபோன்று எழுதும் மனப்பக்குவத்தைப் பெற்றிருப்பதுகூட பெரும் வளர்முகம்தான். யூதரும், பலஸ்தீனரும் தத்தமது இறைமைக்கான போராட்டத்தில் இதில் தமிழீழத்தவர் வெறும் பார்வையாளராக மட்டுமே இருக்கமுடியும். யூதருக்குப் பலம் வாய்ந்த பல்வகைப் படைகளுடனும், பலம்வாய்த அரசாகவும், மேற்கினது செல்லப்பிள்ளையாகவும், பலஸ்தீனருக்கு ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசும் படைகளுமாகவும் அயலிலே அவர்களுக்கு கைகொடுக்கப் பெரும் அரபு நாடுகளுமாக இரு பெரும் அணிகளாக உலகே பிரிந்து நின்று உதவுகிறது. ஆனால், தமிழீழத்தவர் மீதான இன அழிப்பில் உலகோ ஒரு நேர்கோட்டில் நின்று எம்மை அழிப்பதற்கு உதவியது. உலகின் இந்த அசைவின் ஊடாகவே எதிர்காலத்தை நோக்க வேண்டியுள்ளது. ஏனென்றால் இந்த உலகினது ஏழை நாடுகள் பல திவாலாகியது தனியே கொரோனா மட்டுமல்ல. ரஸ்ய – உக்ரேன் போரும் ஒரு கரணியமென்பது அனைவரும் அறிந்தது. இன்று பல வளர்ந்த நாடுகள் உக்ரேனுக்கு முண்டுகொடுத்து விழிபிதுங்கி நிற்பதையும் காணமுடிகிறது. ரஸ்ய – உக்ரேன் போராகட்டும், யூதப் – பலஸ்தீனப் போராகட்டும் இதிலே தமிழரது வகிபாகம் ஏதாவது சாத்தியமா? நாமே நீரினுள் வீழ்ந்த எறும்புபோல் தத்தளிக்கின்றோம். இந்த நிலையிலிருந்து இந்தப்போரழிவை நோக்காவிடினும் அமைதிகாத்தாலே போதுமானது. இரு தேசங்களதும் பின்னணிகளையும் வரலாற்று அசைவுகளையும் கற்றிதல், தேடல் எமது நிலைகுறித்த ஒரு சரியான பார்வைக்கு வழிவகுக்குமாயின் பயனுடையதாகும். யூதர்களோ பலஸ்தீனர்களோ ஒருவருக்கொருவர் சளைத்தவரல்ல என்பதுபோன்றே தற்போதைய மனிதப்படுகொலைகள் சுட்டுகின்றன. ஆதிக்க சக்திகளின் அடக்குமுறைக்குப் எப்போதும் முதற்பலியாவது அப்பாவி மக்களே என்பதை இவ்வுலகு அறிந்திருந்தும் அதை அனுமதித்திருப்பதை எப்படி நோக்குவது. யூதப் பொதுமக்களை கமாஸ் கொன்றது பயங்கரவாதமென்றால், இஸ்ரேல் பலஸ்தீனப் பொதுமக்களைக் கொல்வதும் பயங்கரவாதமென்றே கொள்ளமுடியும். இரு பயங்கரவாதமும் உலகுக் கேடனதே. இரண்டும் ஒரே கனதியானவையே. நாமும் இனஅழிப்பிற்குள்ளாகும் இனமென்றவகையிலே உலகில் நடைபெறும் இன அழிப்புகளை நோக்க வேண்டியவராயுள்ளோம். நன்றி
  21. இஸ்ரேலின் யுத்தத்தில் அமரிக்க போர்க்கப்பல் எதற்காக? Israel Palestine War?/ kUNA kAVIYALAHAN இந்தத் திரியோடு தொடர்புடையதால் இணைத்துள்ளேன்.
  22. அப்படி நடந்தால் நல்லது. ஆனால், நான் நம்பவில்லை. கொல்லப்பட்டு தெருவோரத்திலே வீசப்பட்டிருக்கும் பலஸ்தீனர் மீது யூதாஸ் உச்சாபோவதைக் கண்டிக்க யாருமில்லை. இந்த இலட்சணத்தில் எங்களைப்பற்றிப் பேசுவார்கள்?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.