Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாத்தியார்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by வாத்தியார்

  1. உங்களுக்காகத்தான் இந்த ஒரு வசனத்தையும் அதில் எழுதியிருந்தேன் 😊
  2. உங்களுக்கு என்ன பிரச்சனை 😂 வழக்குத் தோல்வி....... சுமந்திரனின் அசட்டையீனம் அல்ல அவர் வேண்டுமென்றே சரியான முறையில் அந்த வழக்கையே தோல்வி அடைய வைத்து அரச பக்கம் கட்டிட வேலைகளை தொடர எதிர்மறையாக அனுமதி வாங்கிக் கொடுத்துள்ளார் சில கருத்துக்களை ஏற்றுக் கொள்ள முடியாத பட்சத்தில்....... நீங்கள் எழுதும் நளினங்கள் எங்களுக்கு விளங்கும்😇
  3. தமிழரசு கேட்டு உருவான ஒரு 75 வருடம் பழமை வாய்ந்த கட்சி இப்போது பிழையான மேய்ப்பரின் கையில் சொல்ல முடியாத அளவிற்கு மேய்ப்பர் மாற்றத்தை விரும்புகின்றார் அனுராவின் ஆசியை பெறுவதுடன் நிற்காமல் ஆட்சியிலும் பங்கு கிடைக்கலாம் மேய்ப்பருக்கு
  4. பழைய பூங்கா ஒரு பசுமைத் திட்டத்தின் கீழே பாதுகாக்கப்பட வேண்டிய பகுதி . அதில் இதுவரை எந்த ஒரு ஆட்சியாளர்களும் கை வைக்கவில்லை ....... ஆனால் இப்போது சுமந்திரனின் வழக்குத் தள்ளுபடிசெய்யப்பட்டது அரசாங்கத்திற்கு ஆதரவாக முடிந்துவிட்டது மக்களுக்கு சுமந்திரனால் நன்மை கிடைக்கும் என்பவர்களுக்கு....... இனியாவது நல்ல ஒரு சட்டத்தரணியைப் பார்த்து சரியான முறையில் வழக்கைப் போடச் சொல்லுங்கள்😂
  5. ஸ்ரீமா சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் தமிழ் நாட்டிற்கு திருப்பி அனுப்பப் பட்ட மலையாகத் தமிழர்களின் நிலை என்ன என்பது யாருக்காவது தெரியுமா ? அவர்களுடைய நிலை தொடர்பாக ஒரு ஆய்வு நடத்தப்பட்டால் அவர்கள் எப்படி தமிழ் நாட்டிலே வாழ்கின்றார்கள் என்பது தெரியும் சொந்த மக்களையே சிலோன்காரன் வந்துட்டான் என்று அலறிய தமிழ் நாட்டவர்கள் இருக்க....... அவர்களை இப்போது சுமந்திரன் இல்லை அனுர அனுப்பினாலும் அவர்களின் வெளியேற்றத்திற்கெதிரான பொறுப்புக்கு கூறலை யாரும் செய்யமாட்டார்கள். கோத்தா கொழும்பில் இருந்து தமிழர்களை வெளியேற்ற முயன்று இப்போ அவரின் நிலையே கவலைக்கிடம் 😂 சுமனும் பாத்து சூதானமாக நடந்து கொள்ள வேண்டும் 😅
  6. என்னாது ஒருவாட்டி நீங்க சொல்வீங்க..... கருத்தைப்பார் நல்லாயிக்கீதா ...... சொன்னவனா.... அது யாருன்னு பாக்காதே..... அப்பிடீன்னு... மறுக்காலை வந்து குந்திக்கின்னு ..... நீ ஏன் வாத்தின்னு பேரை வைச்சுக்கிட்டேனு கேக்கிறாப்பல...... என்னாய்யா இது ............ சாமி இதுக்கு எனக்கு விளக்கம் வேணாம்😂 சுமந்திரன் எந்தூண்டு பெரியாம் தலீவர்...... அவரு சும்மா அறிக்கை உடலாம்......... 😇நாம யாரு .......வரியக் கட்டி வாறீக 🤣
  7. இயற்கை அனர்த்தத்தை காரணமாக்கி ஒரு இடத்தில் இரு நூற்றாண்டுகளாக வாழ்ந்த மக்களை வெளியேற்றி பின்னர் அங்கே ஏற்படும் வெற்றிடத்தை நிரப்ப இங்கேயிருந்து அங்கே மக்களைக் குடியேற்றி எல்லா மக்களின் மனதுகளையும் குழப்பி சலுகைகளைக் கொடுத்து மனதுகளை மாற்றி இங்கே பார்..... அங்கே பார்..... தெரிகின்றதா ஒளி வட்டம்..... என்று ஆர்ப்பரித்து......... சாமிப்பிள்ளையை சமி பிலே.... ஆக்கி மயில்வாகனத்தை மல்லி வானே.... யாக்கி இது புத்தன் இயேசு பிறந்த பூமி என்று மகாவம்சத்தையே மாற்றி..... இப்படியே மாற்றத்தையே வேண்டும் வேண்டும் என..... மக்களை ஏய்ப்பதே இந்த அரசியல்வாதிகளின் தொழில் . அதற்கு வக்காலத்து வேறை....... 😂
  8. இப்படியான ஒரு கருத்து பொதுவாக எல்லோருக்கும் பொருந்தாது கலவரத்தால் பாதிக்கப்பட்டு பாடசாலை செல்லப்பயந்து உயிர் அச்சம் கருதி பெற்றோரால் கட்டாயமாக வெளி நாடுகளுக்கு அனுப்பப்பட்டவர்கள் லட்சக்கணக்கில் இருக்கின்றார்கள். அவர்கள் வந்தபோது ஜெர்மனி சென்றால் பாத் ரூம் கழுவலாம் பாரிஸ் சென்றால் தூசு தட்டலாம் இத்தாலி சென்றால் சாப்பாட்டு மேசை துடைக்கலாம் என்ற நினைப்பில் வரவில்லை ஒரு சில காலத்தில் திரும்பவும் நாட்டு நிலைமை சரி வந்துவிடும் 70 களில் ஜேவிபி ஐ அழித்தமாதிரி தமிழர்களின் போராட்டமும் அழிந்துவிடும் என்று நினைத்த பெற்றோர்களும் இருந்தார்கள் காலப்போக்கில் நிலைமையை உணர்ந்தவர்கள் தான் ஐரோப்பாவில் தங்களுக்கு கிடைத்த வேலைகளை செய்து பணம் ஈட்ட ஆரம்பித்தார்கள் இது என் அனுபவமும் கூட
  9. இங்கே யாரும் மலையக்த் தமிழ் மக்களுக்கு எதிரான விதத்தில் ஒரு கருத்தைத் தன்னும் எழுதவில்லை. ஒரு வேளையில் அவர்கள் வடக்கில் குடியேற்றப்பட்டால் எந்த விதத்தில் அவர்கள் முன்னேற்றம் இருக்கும்..... . வடக்கு மக்கள் அவர்களை எப்படி அனுசரித்துச் செல்வார்கள்....... . அவர்கள் ஒருவேளை அழைத்துவரப் பட்டால்..... தமிழ் அரசியல் வாதிகள் அவர்களுடைய வாழ்வாதாரத்திற்கு உறுதி அளிப்பார்களா ....... அன்றைய கால கட்டத்தில் வீட்டுப் பணிப்பெண்களாக தோட்ட வேலைகளுக்காக வடக்கு மக்கள் அவர்களை அழைத்து வந்து எப்படியான விதத்தில் வேலை வாங்கினார்கள் என்பதையெல்லாம்....... உணர்ந்த வகையில் தான் இந்த அழைப்பை நாங்கள் நிராகரிக்கின்றோம். இதையே மடைமாற்றி அவர்கள் வருவதை இவர்கள் விரும்பவில்லை அவர்கள் வந்தால் இவர்களுக்கு ஒத்துவராது இவர்கள் அவர்களை மதிக்காமல் பார்க்கின்றார்கள் என்ற வகையில் கருத்துக்களைத் திரித்து எழுதுவதால் எல்லாம் சரியென்றாகி விடாது. மலையக மக்கள் மலையகத்தில் சுதந்திரமாக தங்கள் உரிமைகளை அனுபவித்து வாழ வேண்டும் .மலையகம் மலையகத் தமிழர்களுடைய தாயகம் . இதை எந்தக்கொம்பன் வந்தாலும் மாற்ற முடியாது இலங்கையில் வாழும் தமிழர்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாக வடக்கில் மட்டும் ஒதுக்கி மிகுதி நாடு முழுவதும் சிங்களம் தன் கால்களை அகட்டி வைக்க வசதிகள் செய்து கொடுப்பவர்களை அல்லது அப்படிச் செய்ய நினைப்பவர்களை இனம் கண்டு தமிழர்களின் அரசியலில் இருந்து முழுமையாக ஒதுக்கி வைக்க வேண்டும்
  10. தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு உரிய உரிமைகளை பெற்றுக் கொடுக்க வேண்டிய கடமை அந்த இடங்களில் அரசியல் செய்யும் கட்சிகளுக்கும் அரசுக்கும் நிச்சயமாக இருக்கு . ஆனால் சிங்கள அரசுக்கும் மலையக அரசியல் வாதிகளுக்கும் மனம் இல்லை .எந்த ஒரு மலையாகத் தமிழ் அரசியல் கட்சியும் சிங்கள அரசிற்கெதிரான ஒரு சிறு அளவிலான அகிம்சைப் போராட்டத்தையும் செய்யும் நிலையில் இல்லை. மலையக மக்களை இப்படியான சங்கடத்தில் வைத்திருந்தாலே அவர்களுக்கு வாக்கு வேட்டை செய்ய வசதியாக இருக்கும்- இப்போது அனுரா திசாநாயக்க நாட்டின் தலைவராக வந்திருப்பதால் அவரின் மீதான தனிப்பட்ட ஒரு நம்பிக்கையினால் பல உலக நாடுகளும் அவருக்கான ஆதரவைத் தெரிவித்து வரும் நிலையில் இந்த NPP அரசால் இந்த மலையக மக்களுக்கு ஒரு தீர்வு கிடைக்கும் என மலையக மக்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர் இந்த நிலையில் அரச நிர்வாகத்தினர் யாரையும் கூட்டாக வேறு இடத்தில் குடியேற அனுமதிக்க மாட்டார்கள். மனோ கணேசனின் ஒரு பேட்டி பார்த்தேன் அதில் அவரே சொல்கின்றார் லட்சக்கணக்கில் மக்களை இடம்பெயர வைத்தால் எங்கள் பிரதி நிதித்துவம் பாராளுமன்றில் இல்லாம போய்விடும்.என்று ஆகவே அரசியல்வாதிகள் தங்கள் முனைப்பில் கருத்தாக இருக்கின்றார்கள் என்பது அவருடைய அந்தக் கூற்றில் இருந்து தெரிய வருகின்றது அடுத்து நீங்கள் கூறுவது போல ஒரு சில நூறு அல்லது ஆயிரம் மலையக மக்களை முதலில் வடக்கு கிழக்கில் குடியேற்றி அவர்களுக்கான ஆவனங்களை செய்து கொடுக்கலாம் என்பது . வடக்கு கிழக்கு மக்களின் தேவைகளுக்காக மட்டுமே இந்த நூறு அல்லது ஆயிரம் மக்களும் பயன்படுத்தப்படுவார்கள். மலையக மக்களின் குழந்தைகளின் கல்வி என்பது கேள்விக்குறி ஆக்கப்படும் அந்த மாணவர்களால் வடக்கு கிழக்கு மாணவர்களின் போட்டிக் கல்வி முறையில் தேற முடியாத சந்தர்ப்பங்கள் அதிகமாக உருவாகும். . இப்படிப் பல சிக்கல்களினால் அவர்களின் முன்னேற்றம் இன்னும் சில தசாப்தங்களுக்குப் பின்தள்ளப்படும்
  11. கதையின் நகர்வு மிக்கது திறமையாக இருந்தது எங்கள் ஊரில் ஒரு வீட்டில் ஒரு மாமரம் இருந்தது. அதன் கொப்புகள் இரண்டு அயல் வீட்டாரின் வேலிக்கு மேலாக சென்று அவர்களின் காணிக்குள் நீண்டு இருந்தது, அவர்கள் இரு குடும்பத்திற்கும் இடையில் நல்ல சுமுகமான உறவு இருக்கும் வரை மாமரம் காய்க்கும் போது பக்கத்து வீட்டுக்காரர் அதை அனுபவித்து வந்தனர் . சில காலங்களின் பின்னர் இரு குடும்பத்தாருக்கும் இடையில் உறவு ஏதோ ஒரு காரணத்தால் முறிந்து விட்டது. அடுத்த நாள் அந்த மாமரத்தின் இரு கொப்புக்களும் மரத்தின் உரிமையாளரால் வெட்டப்பட்டு விட்டன. இதில் ஒரு முக்கியமான விடையம்..... அந்த இரு குடும்பத்தவர்களும் ஒரே பெற்றோருக்குப் பிறந்த இரு சகோதரிகள்😂
  12. சரி உங்கள் கருத்துப்படியே செல்வோம் ஆனால் முதலில் சில கேள்விகளுக்கு நேர்மையான பதில் வேண்டும்.... 1.மலையகத்தில் வாழும் அடிமட்ட மக்களுக்கான உதவிகளையும் வாழ்வாதாரத்திற்காக தேவைகளையும் அவர்களுடை நிலத்திலேயே வைத்து செய்ய முடியாதா? 2.முடியாது என்றால் என்ன காரணம் ? (சிங்கள அரசு செய்து கொடுக்காது என்பது அபத்தமான ஒரு பதிலாக இருக்கும் ஏனெனில் வடக்கு கிழக்கிலும் சிங்கள அரசு மக்களுக்கு ஏதும் பெரிதாகச் செய்து விடவில்லை) 3.தங்கள் உரிமைகளை தேவைகளை பெற்றுக்கொள்ளவதற்காக எந்த வகையில் அந்த மக்கள் முயற்சி செய்கின்றார்கள் ? 4.எந்த அரசியல் தலைவர்கள் அவர்களுடைய தேவைகளையும் வசதிகளையும் செய்து கொடுப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்கள் ? மனோ கணேசன் கூட காணி உரிமை என்பதைக் கூறாமல் மக்களுக்கான நிலங்கள் கிடைக்காவிட்டால்....... மட்டுமே....... (வடிவாகக் கவனிக்க வேண்டிய இடம்) வட கிழக்கிற்குச் செல்ல மக்கள் தயார் என்று அறிவிப்புச் செய்ததை நியாயப்படுத்தும்அரசியல்வாதிகள் அரசியல் லாபம் தேட முயற்சிக்கவில்லையா ? முடிந்தால் அரசியல் பசப்பு வார்த்தைகளை அள்ளி வீசாமல் பதில் தாருங்கள் 😂
  13. அதாவது ஏழைகள் எங்கும் எப்போதும் உங்கள் கருத்தின்படி குடியேறிகளாக வாழ முடியும் ஆனால் அவர்களிடமிருந்து உறிஞ்சப்பட்ட ரத்தத்திற்கான விலை கிடைக்காது அல்லது கிடைக்கவும் தேவையில்லை அவர்களுக்கு அவர்களின் நிலத்திலேயே பாதுகாப்பான வீடு கிடைக்கக் கூடாது அதற்குப் பதிலாக இன்னொரு இடத்தில் அவர்களை மீண்டும் ஒருமுறை,,,,,,, இன்னும் ஒரு 200 ஆண்டுகளுக்கு அகதிகளாக குடியமர்த்தி விட்டால் உங்களின் தலைவருக்கு தகுந்த சன்மானம் கிடைக்கும் 😇
  14. சிங்கள இன மக்களுடன் சேர்ந்து வாழ முடியாது என்று ஆயுத ரீதியாகப் போராடிய தமிழ் மக்கள் வாழும் ஒரு நிலப்பகுதியில் ....... எங்களுக்கு எங்கள் உரிமை வேண்டும்... எங்களை இந்த நாட்டின் மக்களாக ஏற்றுக்கொள்ளுங்கள். எங்கள் நிலத்தில் எங்கள் சந்ததியினருக்கு கல்வி உரிமையைக் கொடுங்கள்.... நாங்கள் காடு அழித்து கடும் துயர் மத்தியிலும் நாட்டிற்காக எங்கள் வியர்வையைச் சிந்தி உருவாக்கிய இந்த நிலத்தில் எங்களுக்கும் பங்கு வேண்டும் .... என்று அகிம்சை வழியில் போராடும் மக்களை எப்படி அழைத்துச் சென்று வாழ வைக்க முடியும்? சரி அப்படி ஒரு நிலை வந்தால் 200 ஆண்டுகள் உழைப்பினாலும் கடும் துயரங்களின் மத்தியிலும் உருவாக்கப்பட்ட அந்த நில புலன்களின் நன்மைகளை யார் அனுபவிக்கப் போகின்றார்கள்? (இதுக்கை வேறை மலையகம் சிங்களரின் தாயகமாம்)
  15. எவ்வளவுதான் தான் கல்வி அறிவு இருந்தாலும் சில சந்தர்ப்பங்களில் பட்டறிவு தான் கை கொடுக்கும்....😅 என்ற வசனம் சுமந்திரனின் கருத்திற்குப் பொருத்தமானது என்பதற்கான சில ஆதாரமான விஷயங்களை சொன்னால்...... இவர் கீழே மேலே நடுவிலே என்று ஆர்ப்பரிக்கின்றார்😂
  16. சுமந்திரனை நம்பி யாரும் இந்த அழைப்பினைக் கருத்தில் எடுக்க வேண்டாம் என்பதே எமது கருத்து. அரசியலில் மட்டும் தான் இதனால் அவருக்கு ஆதாயம் என்று பலரும் நினைக்கலாம். ஆத்மீகம் என்றும் ஒன்று உள்ளதே அதுவும் இப்போது ஆதாயம் தேடும் மார்க்கமாக மாறிவிட்டதே
  17. முதலில் நடக்கக் கூடிய விஷயங்களை பற்றிப் பேசுவோம் வடக்கிலேயே காணிகள் அற்ற..... வீடுகள் அற்ற..... பல குடும்பங்கள் வீடமைப்புத் திட்டங்கள் மூலம் அதனப் பெற்று வாழும் இடங்களை பாருங்கள். மழைக்காலம் வெளியே செல்ல முடியாத அளவில் வெள்ளம் .....சரியான வீதிகள் இல்லை..... மின்சாரம் இல்லை...... போக்குவரத்து சுத்தமாக இல்லை இப்படியான நிலையில் இருக்கும் போது----- இன்னும் குடியேற்றம் வீடமைப்பு என்று வாய்ச சவடால் விடுவது சுமோவிற்கும் மனோவிற்கும் புதிதல்ல ஏற்கனவே முஸ்லீம்கள் ஓட்டுமடத்தில் வாழும் நிலையைப் பாருங்கள் முதலில் அவர்களுக்கு ஒரு சுகாதாரமான வாழ்க்கை வாழ ஆவன செய்ய வக்கில்லாத சுமோ........ மலையகத்தில் இருந்து மக்களை வரச் சொல்வது எப்படியான ஒரு கயமைத் தனமானது என்று எல்லோருக்கும் விளங்கும் 😂
  18. பின்னை என்ன? அவன் அவன் வீடு அவனுக்கே உரித்தானது. வெள்ளம் வந்தது... புயல் வந்தது... இனியும் வரப்போகுது..... எல்லாரும் மேட்டுப்பக்கம் போய் வேறை வீடுகளில் இருங்கோ எண்டால் எப்படி? இருக்கும் காணிகளை பங்கிட்டாலே அவர்களுக்கு ஒரு வளமான வாழ்வு அவர்களின் தாயகத்திலேயே (ஆம் மலையகம் அவர்களின் தாயகமே) கிடைக்கும் அவர்கள் விரும்பினால் வரலாம்.... வடக்கு மக்கள் உதவிகள் செய்யலாம் ஆனால் அவர்களை சும்மா பலிக்கடாவைப் போலப் பாவிக்க முடியாதல்லவா .... அனுராவை அசர வைக்கலாம் எண்ட நோக்கில் சுவும் மனோவும் வெளிக்கிட்டவை பிசுபிசுத்துப் போயிட்டுது இப்ப கப்சிப். முதல்ல மனோவை வந்து சுமந்திரண்டை காணியிலை இருக்கச் சொல்லுங்கள் 😁
  19. வட கிழக்குத் தமிழர்கள் மட்டும் இலங்கையில் தங்கள் உரிமைகளுக்கான போராட்டங்களை முன்னெடுக்கலாம் . மலையக மக்கள் மட்டும் அப்படியே எல்லாவற்றையும் துறந்து இன்னொரு பிரதேசத்தில் ஏதும் இல்லாதவர்களாக, குடியேறிகளாக வாழ வேண்டுமா? அவர்களுடைய பிரச்சனைகளுக்காக அவர்கள் போராடும் நிலையில் நாம் வட கிழக்குத் தமிழர்கள் அவர்களுக்கான தார்மீக ஆதரவை வழங்குவதுதான் சிறப்பான தெரிவாக இருக்கும் இன்றும் தமிழ் நாட்டில் எந்த உரிமையும் இல்லாமல் வாழும் வட கிழக்குத் தமிழர்களின் நிலை எல்லோருக்கு தெரியும் வடகிழக்கில் குடியேறி வாழ்ந்த இஸ்லாமிய சகோதரர்களுடைய நிலை போராட்ட காலத்தில் எப்படி இருந்தது இப்போது எப்படியான நிலையில் உள்ளது என்பதும் யாவரும் அறிந்ததே.
  20. இலங்கைக்கு அடிமைகளாக இருந்தவர்களை இப்போது இலங்கைத் தமிழர்களும் அவர்களை அடிமைகளாக மாற்றலாம் என்ற ஒரு முயற்சிகவே இந்த வரவேற்பினை நான் பார்க்கின்றேன் மலையகம் இந்திய வம்சாவழித் தமிழர்களின் தாயகம். அங்கெ அவர்களுக்கு உரிய உரிமைகள் அதாவது முதன்மையாக காணி உரிமை இல்லை . பல சதாப்தங்களாக மாறி மாறி வந்த சிங்கள அரசுகளும் தமிழ் அரசியல் கட்சிகளும் குறிப்பாக மலையகத் தமிழக கட்சிகளும் அந்த மக்களுடைய வாழ்வுரிமையை எந்த விதத்திலும் மேம்படுத்தல் செய்யாமல் தங்கள் அரசியல் தேவைகளுக்காக ஏற்ற நேரத்தில் வாய்ப்பு பேச்சுக்களால் ஏமாற்றி வந்துள்ளனர். மனோ கணேசன் மீண்டும் மலையக மக்களை ஏமாற்றி அல்லது அவர்களை முன்னிறுத்தித் தனது அரசியல் ஆதாயத்தை தேட முயல்கின்றார். மலையக மக்களின் வாழ்வாதாரம் பெரும் தோட்டம் மற்றும் சிறு தோட்டங்களை நம்பி இருக்கும் நிலையில்..... வட கிழக்கில் அகதிகளாக அவர்களை மீண்டும் ஒருமுறை இடம்பெயர வைக்க முயற்சிப்பதா ? அந்த முடிவு எப்போதும் அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு முடிவாகவே இருக்கும் மனோ கணேசன் யார்? அவர் ரணிலை இத்தனை காலம் ஆதரித்தவர் இப்போது சஜித் அவர்களின் ஆதரவாளர்.. அனுராவின் ஆட்சிக்கு எதிராக வினையாற்ற மலையக மக்களை பகடைக் காய்களாகப் பயன்படுத்த நினைக்கின்றார் மனோ கணேசன் . அதற்கு எங்கள் தமிழ் மக்கள் கடந்த தேர்தலில் நிராகரித்த சஜித்தின் ஆதரவு நிலையில் இருக்கும் சுமந்திரனும் துதி பாடுகின்றார் . மலையகத்தில் மலையக மக்களின் வாழ்வாதாரம் மற்றும் உரிமைகள் பேணப்பட்டு அவர்களை அவர்களின் இடத்திலேயே வாழ வழி சமைக்க வேண்டும். மலையகம் இந்திய வம்சாவழித் தமிழர்களின் தாயகம் என்று ரோஹண விஜேவீர 70 களிலேயே அறை கூவியிருந்தார்
  21. இலங்கையில் ஒற்றை ஆட்சி முறை சிறப்பாகச் செயல்படுகின்றது போர்க் குற்றத்திற்கான விசாரணை உள்நாட்டுப் பொறிமுறையில் இடம்பெறவேண்டும் . போர்க் குற்றம் தொடர்பாக சிங்கள ராணுவம் மட்டுமல்ல விடுதலைப் புலிகளும் விசாரிக்கப்பட வேண்டும் இலங்கைத் தமிழ் மக்களுக்கான தீர்வு புதிய அரசியலமைப்பின் பிரகாரம் ஏக்க ராஜ்ஜியத்தில் ஆராயப்படும் . இப்படியான செய்திகளைத் தான் அதிகமாக வாசிக்கக் கூடியதாக இருக்கின்றது .
  22. புயல் மழை வரும் முன்னர் அவருடைய அறிக்கைகளை பார்த்து விட்டு யார் இந்த பிரதீபராஜா என்று விசாரித்தால் அவர் ஒருவிதத்தில் ஏற்கனவே அறிமுகமானவர் தான். மிகவும் கரிசனையுடன் தனது ஒவ்வொரு வானிலை அறிக்கைகளையும் வெளியிட்டிருந்தார் மிகுந்த திறமையான முறையில் வெளி வந்த அவரது அறிக்கைகளை உலகம் பூராகவும் இருந்து அவதானித்தவர்கள் பலர்.
  23. இல்லை என்று கூறுபவர்களிடம் எப்படி ஆதாரத்தை எதிர்பார்க்கலாம் இருக்கு என்பவர்கள் தானே இல்லை என்பதற்கு எதிராக தங்களது ஆதாரங்களை வெளியிட வேண்டும்.
  24. எங்கள் ஊரில் பனை ஓலை மற்றும் மட்டைகள் கொண்டு உயரமாக ஒரு மேடை போல அமைத்து அதற்குள் உணவுப்பண்டங்களை வாழை இலையில் சுற்றி ( பொங்கல் , மோதகம் , கொழுக்கட்டை போன்றவையே ) வைத்துப் பின்னர் எரிய விடுவார்கள் - எரிந்து முடிந்ததும் நாங்கள் முண்டியடித்து அந்த வெக்கைக்குள்ளும் உள்ளே இருக்கும் உணவுப்பண்டங்களை எடுத்துக் கொள்வோம் 😂 இந்த மாவளி பற்றி அறிந்திருக்கவில்லை
  25. ஒரு சிலர் பதில் சொல்லாமல் கேள்வி கேட்பதிலேயே குறியாக இருப்பார்கள் . சுமந்திரன் அவர்கள் ஆடிய ஆட்டத்தினால் தான் கடந்த தேர்தலில் மக்களால் தமிழர்களின் அரசியல் மேடையில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டவர். இப்படி நடக்கும் வாய்ப்பு இருக்கும் என்று ஏற்கனவே அவதானமாக இருந்த சுமந்திரன் தமிழரசு கட்சியை தன வசப்படுத்தி இப்போதும் பின் கதவால் நுழைய நேரம் பார்த்துக் கொண்டிருக்கின்றார் எத்தனை தரம் தேர்தலில் போட்டியிட்டாலும் சுமந்திரனுக்கு இனிமேல் தேசியப்பட்டியலைத் தவிர வேறு வழியில்லை அதனால் தான் இப்போது கிழக்கில் சாணுக்கு முழம் போடுகின்றார் சரி அய்யா ஜஸ்டின் அவர்களே சுமந்திரனால் தமிழர்களுக்கு நிகழ்ந்த அதிசயங்களை நீங்களே ஒரு பட்டியலில் தாருங்களேன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.