Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாத்தியார்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by வாத்தியார்

  1. இந்த பரிசளிப்பு நாடளாவிய ரீதியில் மாணவர்களைத் தேர்ந்தெடுத்து நடைபெற்றிருக்கின்றது எல்லோருக்கும் வாழ்த்துகள்
  2. https://newuthayan.com/article/ இப்படி ஆதாரத்தை இணைத்திருந்தால் நான் அதை அழுத்தியிருக்கவே மாட்டேன். உதயனின் தரம் எப்படி என்று பலருக்கும் தெரியும் இணைப்பில் உதயனுக்கு விளம்பரம் நடக்கின்றதா என்ற ஒரு சந்தேகம் இருக்கின்றது😜
  3. இணைப்பை அழுத்திப் பார்த்தால் அங்கேயும் அனாமதேயம் தான் முக நூல் பதிவுகள் அவ்வளவு உண்மைகளைக் கொண்டு வருகின்றது என்றால் எதற்கு மற்றைய ஊடகங்கள் சீமானுக்காகவோ விஜய்க்காகவோ அல்லது வேறு எந்த அமைப்பிற்காகவோ மக்களை முட்டாளாக்குவது என்பது அற்ப செயல் மக்கள் நிறையவே தெரிந்து வைத்திருக்கின்றார்கள்
  4. இஞ்சை பாருங்கோ கிரிக்கெட்டிலை நிறையத் தெரிந்த ஒருவருடைய நிலையும் ஒன்றுமே தெரியாத ஒருவருடைய நிலையும் இப்ப ஆருக்கு வெற்றி😂
  5. எதிரிக்கு எதிரி நண்பர்கள் என்ற ரீதியில்.... பா ஜ க அதை புரிந்துகொண்டு அதிமுக NDA இலிருந்து வெளியேறுவதைக் கண்டும் காணாமலும் விட்டால் மட்டுமே விஜய் அதிமுக கூட்டணி உருவாகும் என நினைக்கிறேன். விஜய் + அதிமுக + பா ஜ க வுடன் இணைந்த கூட்டணி வெற்றிக் கூட்டணியாக அமைந்தாலும் அந்தக் கூட்டணி விஜயின் அரசியல் எதிர்காலத்தை சூனியமாக்கிவிடும். இந்த உங்களின் கருத்தில் வேறுபாடு இல்லை. இதை விட விஜய் தனித்தோ அல்லது இந்திரா காங்கிரசுடனோ கூட்டணி வைத்து போட்டியிட்டு தி முக வை தோற்கடிக்கலாம் ஆனால் எடப்பாடியார் தான் முதல்வராவார். இதற்காக விஜய் அரசியலுக்கு வரவில்லை ஆகவே இன்னும் காலம் இருக்கின்றது. ஆலோசனைகள் செய்து தனித்து நிற்பதென்ற முடிவை விஜய் எடுத்தால் அவருடை எதிர்கால அரசியல் பிரகாசமாக இருக்கும்.
  6. கிருஷ்ணருக்கு இன்னொரு பெயர் ஜஸ்டின் என்று இப்ப தான் கேள்விப்படுகின்றேன். எங்களைக் கம்சர்கள் என்று விழிக்காதவரை ஓகே😂 நீங்கள் அர்ஜுனன் இல்லைத்தானே 🤣
  7. இல்லையே உங்கள் கருத்துப்படி மூலைக்குள் மாட்டுப்பப்பட்டவர் சீமான் & காம்ப்ஸ்.. வழக்கு இரண்டும் பாலியல் ரீதியான வழக்கு.. இரண்டிலும் மிரட்டல் உள்ளது ( சீமான் மிரட்டியதாகவும் கதைகள் உள்ளன )... இரண்டு வழக்கிலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மனுதாரர்களை பாலியல் தொழிலாளிகள் என பரப்புரை செய்கின்றார்கள்... ஆனால் ஒரே ஒரு வித்தியாசம் காம்ப்ஸ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் இருந்திருக்கின்ரார் சீமான் அப்படி இல்லை காரணம் வழக்கின் தன்மை தான் அதைவைத்தே நானும் அப்படிக் கருத்தை எழுதினேன் ஆரம்பத்தில் உங்கள் உதாரணம் என்னைப் போன்றவர்களுக்கு அப்படித்தான் விளங்கியிருக்கும்
  8. இந்த வழக்கில் யாருமே தண்டனை பெரிதா சிறிதா என்ற நோக்கில் வாதாடவில்லை. எப்படியும் இது தண்டனைக்குரிய வழக்கு இல்லை என்று எல்லோருக்கும் ஏற்கனவே தெரிந்து தான் இருந்தது அவதூறான வார்த்தைகளை பயன்படுத்தியதை யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை அதற்காக சிறை என்பதெல்லாம் ஒரு பரப்புரை இங்கே சீமானபிமானம் எங்குமே இல்லை நீதி நியாயம் வழக்கு என்று வந்து விட்டால் அண்ணன் தம்பி மாமன் மச்சான் சித்தப்பா பெரியப்பா ..........அவரா கொ.ப.செ துரை ? 😂
  9. ஒருவரால் கேட்கப்படும் மன்னிப்பு என்பது எழுத்து மூலம் கேட்கப்படும் பொது அந்த எழுத்தில் பிரயோகிக்கப்படும் வார்த்தைகள் அந்த மனிதனுடைய மன்னிப்பின் தன்மையை வெளிக் கொண்டு வரும் இது எனது நிலைப்பாடு ஆனால் வாய் மொழியால் கேட்கும் மன்னிப்பு என்பதன் ஆழம் அவர் முகத்தில் தெரியும் அப்போது அவரால் நடிக்க முடிந்தால் நாம் ஒன்றுமே செய்ய முடியாது
  10. நீ களவெடுத்தியா? ஆமா சார் ..... மன்னிச்சு விடுங்கள் சார்..... என்றபோதும் ஓகே இவருக்கு கசையடி பத்து என்ற ரீதியில் விசாரணையும் தீர்ப்பும் இருந்தால் எப்படி ? ஏன் களவெடுத்தாய் ? அதை வைத்து என்ன செய்தாய் ? அந்தக் களவுக்கு அந்த இடத்தை எப்படித் தேர்ந்தாய் ? உனக்கு அங்கெ களவெடுக்கலாம் என்று எப்படித் தெரியும்? எத்தனை நாள் காத்திருந்தாய்? என்று இத்யாதிக் கேள்வி கேட்டால்...... அதற்கான விடைகளுடன்மன்னிப்பும் கோரினால்..... கிடைக்கும் தண்டனை வித்தியாசமாக தானே இருக்கும் ஆனால் கேட்கும் மன்னிப்பு என்பது ஒன்றுதான் இதில் உணர்ந்து கேட்பது என்பது நடிப்பாக இருக்கும் பட்சத்தில் நாம் ஒன்றுமே செய்ய முடியாது 😂
  11. மகிந்த மற்றும் சோனியாவின் பங்களிப்புடன் இனவழிப்பு நடந்த முள்ளிவாய்க்காலையும் சீமானின் பாலியல் ரீதியிலான தாக்குதலையும் ஒன்றாக பார்க்க முடியாது என்பதே எனது கருத்து அதற்கான பதிலே இரண்டு குற்றங்களையம் ஒரே தண்டனைக்கு உட்படுத்த நினைப்பது தவறு என்பது மற்றும்படி மன்னிப்பு என்பது மனித பண்பு தான் அநீதி இழைக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு இழப்பதற்கு ஒன்றுமே இல்லை என்ற நிலைக்கு ஒருவனைத் தள்ளி விட்டு அவனிடம் மன்னிப்புக் கேட்பவன் உலகில் இருந்தாலும் அந்த மன்னிப்பை யாருமே ஏற்றுக் கொள்ளப்போவதில்லை
  12. நீங்கள் சீமான் மனித தன்மையற்ற அல்லது மனிதாபிமானமற்ற முறையில் வழக்கின்போது கதைக்கலாமா என்று கேட்டால்..... இல்லைத் தம்பி ஜஸ்டின் நான் அப்படிச் சொல்லவில்லை அதற்கான மன்னிப்பை சீமான் கேட்டுக் கொண்டார்..... என்பதை வரவேற்றேன் அவரை அதற்காகப் பாராட்டுவது உங்களுக்குத் பிடிக்கவில்லை என்றால் நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது அடுத்து நீங்கள் கூறிய உதாரணம் பிழை என்றேன் அதற்காக வாத்தியார் என்ற பெயரை என் மாத்த வேண்டும் கருத்தப் பாருங்க தம்பி அதற்கான பதிலளித்த தாருங்கள் நான் ஒரு நாளும் பெயரைப் பார்த்துக் கருத்து எழுதுவதில்லை உங்களுக்கு எப்படி வசதி....
  13. என்னப்பா இது காம்ப்ஸ் செய்த குற்றமும் பின்னணியும் எப்படியானது என்பதும் சீமான் எந்த அளவில் குற்றவாளி என்பதும் குழந்தைப் பிள்ளைக்கும் தெரியும் சிறைத் தண்டனை கிடைக்கும் வழக்குகளுக்கும் குடும்ப நல வழக்குகளுக்கும் வித்தியாசம் தெரியாமல் தம்பி ஜஸ்டின் அமெரிக்கா வழக்கை உதாரணம் காட்டுகின்றார் .
  14. கிணத்தடியில் இருந்த வாளியைக் களவெடுத்த ஒருவரையும் இரட்டைக் கொலை செய்து நகைகளைக் கொள்ளையடித்த ஒருவரையும் ஒப்பீடு செய்தல் முறையா .... நீதிக்கு முன்னர் யாவரும் சமமே என்று கூறினாலும் தண்டனையில் வேறுபாடு உள்ளதல்லவா அதை போலத்தான் இதுவும்
  15. என்னா ?? இப்படி ஒரு குண்டைத் தூக்கிப் போடுகிண்றீர்கள் அப்ப இந்தச் சுமைதாங்கிகளின் நிலை....... 😂
  16. மன்னிப்புக் கேட்பது என்பது ஒன்றும் மனிதர்களுக்கு புதியது அல்ல . மனித மாண்புகளில் ஒன்று தான்.... விட்ட தவறை உணர்ந்து பாதிக்கப்பட்ட ..அல்லது பாதிக்கப்பட்டதாக நினைத்துக் கொண்டு தடங்கல்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கும்....இன்னொருவரிடம் மன்னித்து விடுங்கள்... எதோ தவறுதலாகப் பேசிவிட்டேன் என்பது . விட்ட தவறுகளை ? கண்டும் காணாதது போல கடந்து செல்லும் மனிதர்களை விட இங்கே சீமான் பரவாயில்லை . மறப்போம் மன்னிப்போம் என்ற வார்த்தை என்பது பலரது அரசியல் வாழ்க்கை யிலும் பெரிய திருப்பங்களையும் வெற்றிகளையும் கொடுத்திருக்கின்றது இப்போது சீமானிற்கு இன்னும் 4% வாக்குகள் அதிகரித்திருக்கும் தலைவர்யா அவர்
  17. இதன் அடிப்படையில் விஜய் தனது நேர ஒழுங்கமைப்பில் கவனம் செலுத்தவில்லை என்பது தெரிகின்றது விஜயிடம் எந்தவிதமான ஒழுங்கமைப்புக்களும் இருக்காது என்பது உளவுத்துறைக்குத் தெரிந்தும் வேண்டுமென்றே பாராபட்சமாக இருந்ததா? அவர் வரும் வரை மக்கள் கூட்டத்தை நெருக்கமான கூட்டமாக மாறுவதை காவல்துறை அவதானித்து தகுந்த நடவடிக்கை எடுத்திருக்கலாம் அல்லவா ? விஜயின் அரசியலை அவரால் தான் தீர்மானிக்க முடியும் அவரின் ஆதரவை எந்த விலை கொடுத்தாவது நாங்கள் வாங்கி விட வேண்டும் என பல கட்சிகளும் போடும் போட்டி அவருடைய வாக்கு வங்கியை அறை கூவுகின்றது எதுவுமே எளிதில் அனுமானிக்க முடியாது விஜய் + இந்திரா காங்கிரஸ் + எடப்பாடி என்ற கூட்டணி மட்டும் இன்னும் வெளியே தெரியவில்லை வந்தால் எப்படி இருக்கும் என்பதே எனது கேள்வி
  18. இதில் ஒரு சிலர் அரசியல் கட்சிகளில் பதவிகளில் இருப்பவர்கள் எனவும் அரசல் புரசலாகப் பேசப்படுகின்றது
  19. அப்படி நினைத்தே நாங்களும் குண்டக்க மண்டைக்கா தெரிவு செய்திருந்தோம் நமக்கு மட்டும் சரியா அமையுதில்லை இருந்தாலும் எங்களையும் இரண்டு பேர் தாங்கிப் பிடிப்பதை பார்க்க ஒரு ஆறுதல் 😂
  20. விஜய் இப்ப தான் கட்சி தொடக்கி இருக்கார். ஒரு தேர்தலைக் கூட எதிர்கொள்ளவில்லை தேர்தலை எதிர்கொள்வதற்கான.... அதற்கான ஆயத்தங்களில் ஈடுபடுகின்றார். ஆனால் இதுவரை அவரை ஒரு நடிகனாகவே மக்கள் அறிந்துள்ளார்கள் அரசியலில் எப்படிச் செயற்படுவார் என்பதை மக்கள் அவருடைய திரைப்படங்களை வைத்தே அளவிட்டுள்ளார்கள் இது உண்மையா? இல்லை அவர் சினிமா மூலம் மக்களை ஏமாற்றிருக்கின்றாரா? என்பது யாருக்கும் வெளிச்சம் இல்லை தி மு க எட்டு சதாப்தங்கள் கண்ட ஒரு கட்சி. ஏன் விஜயின் வரவை பார்த்து அச்சப்படுகின்றனர் என்பது தான் என்னுடைய கேள்வி. அது கொசுறு என்றால் கொசுறாகவே போயிடும். ஆனால் இவர்கள் விஜயை ஒரு பெரிய யானையாகக் காட்ட முயற்சிக்கின்றார்கள் எதற்காக ஒருவேளை எடப்பாடி யின் எதிர் வாக்குக்களை விஜய் பக்கம் திருப்பவா? தி மு க வை எடப்பாடியார் முந்தும் வேளையில் இந்த விளையாட்டால் விஜயால் எடப்பாடிக்கு ஆப்பா ? அதை உணர்ந்த எடப்பாடியார் விஜயை தன்னுடன் இழுக்க முயல்கின்றாரா ? அதற்கான மாமா வேலையை பா ஜ க பயமுறுத்தி செயல்படுத்த நினைக்கின்றதா ? இப்படிப் பல கேள்விகள் உள்ளது இந்தியா என்பது அரசியல் மாபியாக்கள் கூட்டணி எப்போதும் எதுவும் நடக்கலாம்
  21. பையன் களத்தில் இப்படி சலிப்பாக எழுதியதை இப்ப தான் பார்க்கின்றேன் ❤️வீரப்பையன் விரையில் உடல்நலம் தேறி கலகலப்பாக வேண்டும்
  22. ஆர். பாலகிருஷ்ணன் திராவிடவியல் ஆய்வாளர் அடுத்து மூன்னாள் நீதியரசர் சந்துரு இவருடைய தீர்ப்புக்கள் பலதும் திராவிட கொள்கையின் அடிப்படையிலான தீர்ப்புகள் . ( நான் தீர்ப்புக்களை பிழை என்று கூறவில்லை. ) உதாரணம் 1.கோவில்களில் பெண்கள் பூசை செய்யும் குருக்கள் ஆகலாம். 2.சாதி பாகுபாடு இல்லாமல்எல்லாருக்கும் ஒரே சுடுகாடு வேண்டும் அடுத்து எழுத்தாளர் எஸ்.வி.ராஜதுரை இவர் சிறு வயதிலேயே தி மு க ஆர்வலர் பின்னர் கம்யூனிஸ்ட் ஆக மொத்தம் கலை இலக்கிய வாதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் என்று இறக்கி விடப்பட்ட இந்த தி மு க ஆதரவு செயற்பாட்டாளர்களால் எப்படி விஜயைக் குறை கூறாமல் இருக்க முடியும்
  23. அரசியலில் யாரும் ஓடிப்பிடித்து விளையாட முடியாது என்பதை உணர விஜய்க்கு மூன்று நாட்கள் தேவைப்பட்டிருக்கின்றது. அவ்வளவுதான் தம்பி விஜயுடன் நாங்கள்.... அண்ணா விஜயுடன் நாங்கள்.... நம்ம பிள்ளை விஜயுடன் நாங்கள்..... நிற்போம் என்ற வார்த்தைகள் தான் காதில் கேட்கின்றது தி மு க வும் அதன் காவல்துறையும் தான் மக்களுடன் நாங்கள்..... மக்களின் நலன்களுக்காக நாங்கள்..... என்று கூவியவர்கள். ஆனாலும் சரியான நேரத்தில் மக்களைக் கவிழ்த்து விட்டார்கள்
  24. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் விசுகு அண்ணை
  25. விஜய் கைது என்பது தமிழ் நாட்டையே பிரளயமாக்கும் என்பது ஆழும் தரப்பினருக்குத் தெரியும் அதே வேளை இந்த அனர்த்தத்தில் ஆழும் தரப்பினரின் பங்கு என்ன என்பது எல்லோருக்கும் தெரியும் விஜய் குற்றவாளி என்றால் காவல் துறைக்குப் பொறுப்பான ஸ்டாலினும் குற்றவாளி தான் சிறிய கைதுகளுடன்.... விசாரணைக்கு குழுக்களின் அறிக்கைகளைத் தயாரிப்பதில் இழுத்தடிப்புச் செய்து...... இந்தப் பிரச்சனையை மழுங்கடித்து விடுவார்கள்.இரு தரப்பினரும்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.