Everything posted by வாத்தியார்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நாளைய போட்டி---- இன்றைய நிலையில்..... பாட் லக் மெம்பெர்க்ஸுக்கும்🤣 குட் லக் மெம்பெர்க்ஸுக்கும்🤣 இடையிலான ஒரு போட்டி களத்தில் ....... பாட் லக் மெம்பெர்ஸ் எல்லோரும் இங்கே குழுமியிருக்கின்றார்கள் சோ........ 😂
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
தீவார் என்று குறிப்பிட்டு அவர்களுக்கு நல்லூரைப் பற்றி அறிய வாய்ப்பில்லை என்ற பொது எனக்கும் மதியத்தில் இருந்து ஒரு கொந்தளிப்பு என்னுள்ளே ஏற்பட்டது தான் . பின்னர் யோசித்தால் இலங்கையே ஒரு தீவு அதற்குள்ளும் தீவாரா ஏன்று நட்பு ரீதியாக எதிர்க்க கருத்தை வைக்கவில்லை. ஆனாலும் தீவானாக நாங்கள் ..... வேண்டாம் ........நட்பு சேர்ந்தே பயணிப்போம்
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
சும்மா கதையைப் புகட்டி சொல்லக்கூடாது நல்லூர்க் கோயில் இருந்த இடத்தின் அருகில் முசுலீம்கள் குடியேறியதால் அந்தக் கோயிலின் விருத்தியை தடை செய்வார்கள் என்ற நோக்கில் பேரம் பேசி அது நடைபெறாததால் பன்றி உள்ளே வந்து அவர்கள் வெளியே சென்றது தான் வரலாறு. ஆக நல்லூர்க் கந்தன் அங்கேயேதான் அப்போதும் இருந்தார் குடியேறிய முஸ்லீம்களால் கோயிலின் வளர்ச்சி தான் தடைபட்டது நீங்கள் கூறுவது போல முஸ்லீம்கள் இருந்த இடத்தில் கோயில் கட்டப்படவில்லை . விருத்தி செய்யப்பட்டு உள்ளது
-
யாழில் ஒருவீட்டுக்கு இரண்டு உறுதிகள் - இளங்குமரன் எம்.பி
இயங்காக் குமாரன் எழுதி வைத்து வாசித்து அரசுக்கு முண்டு கொடுக்காமல்........ கிடைக்கும் சந்தர்ப்பத்திலாவது மக்களது யதார்த்தமான பிரச்சனைகளையும் அதற்கான தீர்வுகளையும் பற்றிக் கதைக்க வேண்டும் மக்களது காணிகளை அவர்களிடம் உறுதி இல்லை அவர்கள் உரிமை கோரவில்லை என்று அரசு கபளீகரம் செய்ய முடியாது பதிவு செய்யப்படாத கணிகளைக் கூட பதிவு செய்து உரிமையாளர்களிடம் கையளிப்பதே அரச நியதி மற்றும் நீதி
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அறுபது நாட்களாக எம்மை அடக்கி வைத்திருந்த அந்த அடிமைச் சங்கிலி இன்று உடைத்தெறியப்பட்டு::::: விடுதலை::: விடுதலை::::🤣 என்ற கோசம் மட்டுமே என் காதில் கேட்கின்றது:😂 அந்த இரண்டு வெள்ளைத் துரைமார்களும் இப்போது என்பின்னால் :::😇 இப்போதும் நான் அழைக்கிறேன் வாருங்கள் சேர்ந்தே பயணிப்போம் 😅
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
என் தலைமையில் ஒரு புரட்சியா 🤣 ஒரு நாளும் நடக்காது என்று பலரும் நினைக்கின்றார்கள் 😅 ஆனால் விளையாட்டே நடக்குமா ஏன்ற கேள்விக்கு யாரும் பதில் தரவில்லை -------😂
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
போன வருஷம் நல்ல வருமானம் அந்த மாதிரி விளைச்சல்😂 அதுக்கு முதலும் அப்பிடித்தான் இந்த வருஷம் என்ன மாதிரி...... நால்லாத்தான் இருக்கு..... ஆனாலும்.... அறுவடை செய்பவன் கொள்ளைக்காரன்..... அள்ளிக் கொண்டு சென்று விட்டான்...... பக்கத்து வீட்டான் பயிரை பிடுங்கி விட்டான் .......😇 என்பது போன்ற கருத்துக்கள் மேலோங்கி நிற்கின்றன ஒரு விளையாட்டின் வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பது அன்றைய நாள் அந்த நாள் என்றால் சும்மா அல்ல அங்கேயே எல்லாம் அடங்கி இருக்கும் .. அணிகளின் நிலை..... தலைமைத்துவம் எடுக்கும் முடிவு .... பயிற்சியாளரின் பரிந்துரை ..... அன்றைய காலநிலை அதாவது முக்கியமாக மழை .... இப்படி பல தடைகளையும் தாண்டும் அணிதான் கோப்பையைத் தூக்கலாம் 😅
-
அர்ச்சுனா எம்பிக்கு புள்ளி வைத்த அரச தரப்பு: சபையில் வெடித்தது புதிய சர்ச்சை!
இந்த வழக்கை ஒரு சமூக ஆர்வலர் தாக்கல் செய்துள்ளார் அடுத்து தாக்கல் செய்த வழக்கை விசாரணைக்கு எடுக்கலாமா இல்லை அதை அப்படியே கைவிடலாமா என்பதே கேள்வியாக இருக்கும். அதை ஆராய்ந்த நீதிபதிகள் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளலாம் எனவும் அந்த விசாரணை நடைபெறும் திகதியையும் அதற்கான ஆயத்தங்களை செய்யுமாறும் பணித்துள்ளது விசாரணை வரும் பொது தான் தெரியும் அடுத்த நடவடிக்கைகள் அதுவரை இடைவேளை,,,,,, வைத்தியர் அர்ச்சுனா வென்று கனகாலம்......
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
1986 ஆரம்பத்தில் ஈரோஸ் இயக்கம் மன்னார் பள்ளிவாசலில் வைத்து மூன்று முஸ்லிமகளைக் கிரனைட் வீசிக் கொன்றனர். 1986 ஜூலை 23 அன்று அப்துல் அஸீஸ் ஜலீல் மாஸ்ரர் மற்றும் இப்றாஹிம் வெள்ளை என்போர் யாழ்ப்பாணத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டனர். 1987 இல் மார்கழி 30ம் திகதி காத்தான்குடியில் 28 முஸ்லிம் மக்கள் கொல்லப்பட்டனர். 6.1.88 வீரகேசரி செய்திப்படி காத்தான்குடி எல்லையில் 60 குடியிருப்புகள் எரிக்கப்பட்டன. 1988 ஜனவரி 22ம் நாள்; மன்னாரில் அரசாங்க அதிபராக (புயு) கடமையாற்றிய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எம்.எம். மக்பூல் அவர்கள் புலிகளின் ஜேம்ஸ் அணியால் சுட்டுக்கொல்லப்பட்டார். முஸ்லிம் கல்விமான்களை அழிக்கும் திட்டத்துடன் இப்படுகொலை புரியப்பட்டது. 19.3.88 வீரகேசரி செய்திப்படி நிந்தவூரில் 7 பேரை கடத்திச் சென்றனர். 1988 பங்குனியில் கல்முனையில் 25 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். 1988 கார்த்திகை மாதம் ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப், ஈ.என்.டி.எல்.எவ் இணைந்து உருவாக்கிய தமிழ் தேசிய இராணுவம் சம்மாந்துறை, நிந்தவூர், சாய்ந்தமருவைச் சேர்ந்த முஸ்லிம் பொலிசார் 42 பேரை மட்டும் தேர்ந்தெடுத்து படுகொலை செய்தனர். தமிழ் பொலிசார் விடுவிக்கப்பட்டனர். 2.2.89 வீரகேசரி செய்திப்படி கல்முனையில் கைது செய்தவர்களை விடுவிக்கக் கோரி நடந்த ஆர்ப்பாட்டம் மீது வீசிய கிரனைட் குண்டு வெடித்ததில், இருவர் கொல்லப்பட ஏழு பேர் காயமடைந்தனர். 7.3.89 வீரகேசரி செய்திப்படி கல்முனையைச் சேர்ந்த 600 தமிழர்கள், தமிழ் முஸ்லிம் மக்களுக்கு தனித்தனியான உதவி அரசாங்கப்பிரிவுகள் வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். 11.4.89 வீரகேசரி செய்திப்படி கிண்ணியாவில் 5 முஸ்லிம் மக்கள் கொல்லப்பட்டனர். 4.12.89 வீரகேசரி செய்திப்படி காத்தான்குடியில் மூன்று முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். 10.12.89 வீரகேசரி செய்திப்படி 12 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். 89 பாராளுமன்ற தேர்தலில் முஸ்லிம் மக்களின் வாக்கில் 75 சதவீதத்தை முஸ்லிம் காங்கிரஸ் பெற்றிருந்தது. அதேநேரம் 4 தொகுதிகளை வென்றது. 1.2.90 வீரகேசரி செய்திப்படி புலிகள் காத்தான்குடியில் ஊரடங்குச் சட்டத்தை பிரகடனம் செய்து, வீடுவீடாக சோதனை செய்தனர். 30 பேரை கைது செய்தனர். அத்துடன் சம்மாந்துறையில் மாகாணசபை உறுப்பினர் மன்சூர் சுட்டுக் கொல்லப்பட்டார். கல்முனையைச் சுற்றி வளைத்து 40 பேரை கைது செய்து கொண்டு சென்றனர். இதை அடுத்து காத்தான்குடியிலும், கல்முனையிலும் கடைகள் மூடப்பட்டன. முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் குழு உறுப்பினர் மருதூர் கனி கடத்தப்பட்டார். இவர்களை விடுவிக்கக் கோரி கல்முனையில் புலிகளின் அலுவலகத்தின் முன் போராட்டம் நடத்திய மக்கள் மேல், புலிகள் சுட்டதில் 17 பேர் காயம் அடைந்தனர். அவர்களை வைத்தியசாலை கொண்டு சென்ற நிலையில், அங்கு வந்த புலிகள் வைத்தியசாலையை சுற்றி வளைத்தபின், ஐவரை சுட்டுக் கொன்றதுடன், வைத்தியர் உட்பட 10 பேரை கைது செய்து கொண்டு சென்றனர். 7.2.90 வீரகேசரி செய்திப்படி அக்கரைப்பற்றில் கனிபா என்பவரிடம் பணம் தரும்படி கோரி மறுத்த நிலையில் சுட்டுக் கொல்லப்பட்டார். 10.7.90 வீரகேசரி செய்திப்படி ஏறாவூரில் இரண்டு முஸ்லிம் மக்களை கடத்தி சென்றனர். 1990 யூன் 11 க்கு பின்பாக வடக்கு கிழக்கில் யுத்தம் தொடங்கிய முதல் இரண்டு மாதத்தில் 300 பேர் அளவில் புலிகளால் கொல்லப்பட்டனர். அத்துடன் கிழக்கில் மட்டும் 1500 க்கும் மேற்பட்ட முஸ்லிம்;கள் தமிழ் தேசிய போராட்டம் தொடங்கிய பின் புலிகள் மற்றும் ஏனைய இயக்கங்களால் கொல்லப்பட்டனர். 1990.7.16 வீரகேசரி செய்திப்படி மட்டக்களப்பு குருக்கள் மடத்தில் 68 முஸ்லிம் ஹஜ் பயணிகளை கடத்திக் கொன்றனர். மொத்தமாக அங்கு 150 பேர் கொல்லப்பட்டனர். அத்துடன் ஏறாவூரில் 62 பேரை கடத்தினர். 31.7.1990 வீரகேசரி செய்திப்படி அனுராதபுர மாவட்ட உடுப்பலாவ சின்னசிப்பிக்குளத்தில் 10 முஸ்லிம்கள் கொல்லப்பட்ட பின் கிணற்றில் போடப்பட்டனர் 1.8.90 வீரகேசரி செய்திப்படி அக்கரைப்பற்று வயல்களில் வேலை செய்து விட்டு வந்த 17 முஸ்லிம்கள் கடத்தப்பட்ட பின் கொல்லப்பட்டனர். 1.8.90 வீரகேசரி செய்திப்படி கந்தாளாயில் 5 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். 3.8.1990 திகதி காத்தான்குடி பள்ளிவாசலில் 104 முஸ்லிம்கள் தொழுதுகொண்டிருக்கும் போது பின்னாலிருந்து சுட்டுக்கொல்லப்பட்டனர். 86 முஸ்லிம்கள் காயமடைந்திருந்தனர். தமிழர்களை தலைகுனிய வைத்த இந்த தாக்குதலை புலிகள் அமைப்பின் கரிகாலன், நியுட்டன், அலெக்ஸ், ரஞ்சித் அப்பா ஆகியோர் தலைமை தாங்கியிருந்தனர். 3.8.1990 வீரகேசரி செய்திப்படி மஜீத்புரம் பகுதி வயலில் இருந்து திரும்பிய 7 முஸ்லிம்கள் கடத்தப்பட்டு கொல்லப்பட்டனர். அத்துடன் சம்மாந்துறையில் முஸ்லிம் தந்தையும் மகனும் சுட்டுக் கொல்லப்பட்டனர். 7.8.90 வீரகேசரி செய்திப்படி அம்பாறையில் 18 முஸ்லிம் விவசாயிகள் கொல்லப்பட்டனர். அக்கரைப்பற்றில் 6 பேர் கொல்லப்பட்டதுடன், 10ம் திகதிக்கு முன்னர் அம்பறையை விட்டு முஸ்லிம்;கள் வெளியேறிவிட வேண்டும் என்ற துண்டுப் பிரசுரமும் போடப்பட்டது. 11.8.90 ஏறவூரில் 120 பேர் படுகொலை செய்யப்பட்டனர். நிராயுதபாணிகள் மீது மேற்கொள்ளப்பட்ட இக்கோழைத் தாக்குதலையும் புலிகள் இயக்க உறுப்பினர்களான கரிகாலன், நியூட்டன், ரஞ்சித் ஆகியோர் முன்னின்று செய்தனர். 13.8.90 வீரகேசரி செய்திப்படி செங்கலடியில் 5 முஸ்லிம் மக்கள் கொல்லப்பட்டனர். 13.8.90 ஐலண்ட் பத்திரிகை செய்திப்படி கடந்த 24 மணித்தியாலத்தில் 200 தமிழர் மற்றும் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். 13.8.90 ஐலண்ட் பத்திரிகை செய்திப்படி ஏறாவூரில் 4 முஸ்லிம் கிராமங்கள் மேல் நடத்திய தாக்குதலில், 119 முஸ்லிம் மக்கள் கொல்லப்பட்டனர். 60 பேர் காயம் அடைந்தனர். 13.8.90 ஐலண்ட் செய்திப்படி சம்மாந்துறையில் 6 முஸ்லிம் விவசாயிகள் கொல்லப்பட்டனர். 15.8.90 வீரகேசரி செய்திப்படி அக்கரைப்பற்றில் 8 முஸ்லிம் மக்கள் கொல்லப்பட்டனர். 1.9.1990 காத்தான்குடியில் மூன்று கிராமத்தில் 5 பள்ளிவாசல் மற்றும் 55 வீடுகள் எரிக்கப்பட்டன. 16.9.90 புனாவை என்ற கிராமத்தில் 7 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். 25.9.90 வீரகேசரி செய்திப்படி கல்முனை கடலில் வைத்து மூன்று முஸ்லிம் மீனவர்கள் கொல்லப்பட்டனர். 3.10.90 வீரகேசரி செய்திப்படி மருதமுனையில் இரண்டு முஸ்லிங்கள் கடத்தப்பட்டனர். 1990 ஐப்பசி மாதம் 18 முதல் 30 ம் திகதி வரையான காலப்பகுதியில் யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா மாவட்டங்களில் வாழ்ந்து வந்த 85 000 ற்கு மேற்பட்ட முஸ்லிம்களின் அனைத்து சொத்துக்களையும் பகல்கொள்ளையிட்ட பின்பு புலிகளால் வெளியேற்றப்பட்டனர். 15.11.90 வீரகேசரி செய்திப்படி மன்னாரில் இருந்து புலிகளால் துரத்தப்பட்ட முஸ்லிம்கள் தமது இருப்பிடத்துக்கு திரும்பிய போது, புலிகள் சுட்டதில் ஒருவர் மரணம். ஆறு பேர் காயம் அடைந்தனர். 1992.4.26 இல் அழிஞ்சிப் பொத்தனையிலும், ஆவணியில் பள்ளித்திடலிலுமாக மொத்தம் 300 க்கு மேற்பட்ட முஸ்லிம்கள் புலிகளால் வெட்டியும் சுட்டும் கொல்லப்பட்டனர்
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
குஜராத்தில் பல ஆயிரம் முஸ்லீம்கள் கொலை ok யாழ்ப்பாணத்தில் முஸ்லீம்கள் பலர் கொலை செய்யப்பட்டு அடித்து விரட்ட பட்டதை பற்றி என்ன சொல்வீர்கள் பயங்கரவாதப் பட்டியலில் இருந்த விடுதலைப் புலிகள் சர்வதேசத்துடன் பேசியிருக்கின்றார்கள் அமேரிக்கா தடை செய்த மோடி மட்டும் இந்தியாவை ஆள முடியாதா? பயங்கரவாதம் என்பது எல்லா அரசுகளிடமும் அமைப்புக்களிடமும் தேவைகேற்ப தலை தூக்கும்..... போராட்ட அமைப்புக்கள் தமிழ் ஈழத்தில் பல தருணங்களிலும் பயங்கர வாதத்தில் ஈடுபட்டவர்களே
-
பிரிகேடியர் பால்ராஜ் - போராளிகளால் பூஜிக்கப்பட்ட, எதிரிகளால் வியந்து போற்றப்பட்ட தமிழர்களின் ஒப்பற்ற தளபதி
தளபதி பால்ராஜ் அவர்கள் தனது ஆரம்ப விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் உறுப்பினராக இருந்து பின்னர் தன்னை விடுதலைப் புலிகளுடன் இணைத்துக் கொண்டவர் என்பது பலருக்கும் தெரியாது . வீர வணக்கங்கள்
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
இந்தியாவை எதிர்க்கின்றேன்........ என்ற போர்வையில் பாகிஸ்தானுக்காக வரிந்து கட்டி இறங்கினால்........ அது சொந்த செலவில் சூனியம் வைப்பது மாதிரி தான்..... பயங்கரவாதம் என்றால் முதல் மனதில் தோன்றும் நாடு பாகிஸ்தான்
-
பொது பாதுகாப்பு அமைச்சராக கேரி ஆனந்தசங்கரி நியமிக்கப்பட்டுள்ளார்
நிதி ஒதுக்கீடு கூடிய பதவி என்றால் மக்களுக்கு நிறைய வசதிகளை செய்து கொடுக்க முடியும் பொது மக்கள் பாதுகாப்பு என்ற பதவிக்கு இவரை நியமித்தது இவருக்கு ஒரு சவாலாக இருக்கும் என நினைக்கின்றேன். கனடாவில் பொது மக்களின் பாதுகாப்பிற்கான சட்டங்களில் பல ஓட்டைகள் உள்ளன எல்லாவற்றையும் சரிப்படுத்தி தனது அரசியல் வாழ்க்கையில் இன்னும் பல படிகள் ஏறி சாதனைகள் படைக்க வாழ்த்துக்கள்🙏
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
போட்டியில் வெற்றி பெற்ற செம்பாட்டானுக்கு வாழ்த்துக்கள் 😂 இப்படிக்கு இயங்குமாரன் 😜
-
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இலங்கை தமிழர்களின் எதிர்கால அரசியல் தலைவராக வருவாரா?
2010 இல் த தே ம மு உருவாக்கப்பட்ட பொது நிராகரிக்கப்பட்ட பலர் இன்று கஜேந்திர குமார் அவர்களால் தனது கூட்டணியில் உள்வாங்கப்பட்டுள்ளனர். அதற்கான காரணம் சென்ற பாராளுமன்றத் தேர்தலில் அனுரா அலையிலும் அர்ச்சுனாவின் தாக்கத்தினால் அவர் இழந்த வாக்குக்களே ஆனாலும் அவர் இப்போதும் தன்னை முன்னிறுத்தி தன்னுடைய சுயநல ஆதிக்கத்திற்கு மக்களை பலிக் கடாவாக்க முயற்சிப்பது தவறு - மக்களுக்கான அரசியல் வேறு......... மக்கள் எதிர்பார்ப்பார்கள் என்று செய்யும் அரசியல் வேறு.... அதாவது மக்களை உசுப்பேத்தும் அரசியல் செய்யும் வரை உண்மையான மக்களின் தலைவராக கஜேந்திரன் பொன்னம்பலத்தினால் வரமுடியாது
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நாளைக்கும் பாக்கிஸ்தான் இந்தியாவைத் தாக்கும் என்ற காரணத்தால் லக்னோவில் நடைபெற இருக்கும் பெங்களூருக்கு எதிரான விளையாட்டு இடை நிறுத்தப்படும். இதை நான் ஆமோதித்து வரவேற்கின்றேன் 🙂 ஆனால் ஹைதராபாத்தில் கல்கத்தா ஆடும் பொது மட்டும் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு விளையாட்டு நடைபெறும் என்றால் 😇 மீண்டும் போராட்டம் வெடிக்கும்..... 😂 மழையும் வராது வெய்யிலில் எல்லோரும் காய்ந்து வேடிக்கை மட்டும் பார்க்கலாம்.... 🤣
-
தெரிவானார் புதிய பாப்பரசர்
புதிய பாப்பரசர் தன்னை பதின்னாலாவது லியோ என்று அழைப்பதில் பிரச்னை இல்லை, அமெரிக்காவின் இரண்டாம் த்ரம்ப் வத்திக்கானை அமெரிக்காவுடன் இணைப்பாரா இல்லையா அல்லது ஏதாவது பிசகு இருக்கா என்று இவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் அதுவரைக்கும் தெரிவான பாப்பரசர் உலக சமாதானத்தை நிலை நிறுத்த தன்னுடைய ஆளுமையை பிரயோகிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்🙏
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நாளைக்கு என் தலைமையில் இந்த மண்ணில் பல போராட்டங்கள் நடைபெறும் எதிரிகளை புற முதுகோடு வைத்து எங்கள் கொள்கைகளை ( இருந்தால்த்தானே ) 😅முன்னிறுத்தி.... மூச்சு வாங்குது.... இருந்தாலும் ....😂 சென்னை இந்த முறை கோப்பையைத் தூக்காவிட்டால் நான் எனது பதவியத் துறந்து விடுவேன்......🤣 இப்படிக்கு உங்கள் தம்பி இயங்காக் குமாரன் 😜
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
iPl என்றால் என்ன கொக்கா என்று நினைக்கக் கூடாது அவர்கள் நினைப்பது மட்டுமே இங்கே செல்லுபடி ஆகும்: அதற்கேற்றவாறே விதிகளை அமைத்துள்ளார்கள் எல்லாம் ரசிகர்களின் தலைவிதி முதல்வர் நந்தனாருக்கு வாழ்த்துக்கள் அவரைப் பின்தொடரும் அடியார்க்கும் வாழ்த்துக்கள்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
முதல்வர் நந்தனாருக்கு வாழ்த்துக்கள் 😃
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சீ இண்டைக்கு எண்டு பாத்து இந்த மழை வந்துச்சா 🙂 விளையாட்டு தொடர்ந்து நடந்திருந்தால்..... இந்தச் செம்பாட்டான் மேலை ஏறி விழுந்து உருண்டு பிரண்டு சிரிச்சிருக்கலாம்-🤣🤣 மழையும் அவங்க பக்கமே நிக்குதே 😇
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
முதல்வர் சேர்த்து வைத்திருக்கும் சொத்து இந்தப் போட்டி முடியும் வரை அவரைக் காக்கும் . அவருடை சொத்துக்கள் இன்னும் பல மடங்காகும் வாய்ப்புக்களும் இருக்கின்றன.😂 எதற்கும் முதல்வருக்கு ஒரு வாழ்த்தைப் போட்டு வைப்போம் 😅 முதல்வர் நந்தனாருக்கு வாழ்த்துக்கள்😇
-
இறுதி யுத்தத்தில் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் இராணுவத்தினால் போலீசாரிடம் கையளிக்கப்பட்டுள்ளது
ஒருவர் நகைகளைக் கேட்டால் பிரச்சனை வரும் என்கிறார் இன்னொருவர் திரும்பக் கேட்பவர்கள் சிறைக்குப் போக வேண்டும் என்கிறார் நான் பாவப்பட்ட மக்கள் சிறைக்குச் செல்லாமல் பிரச்சனைகளை எதிர்கொள்ளாமல் தங்கள் நகையைத் திரும்பப் பெற்றுக்கொள்ள என்ன செய்யலாம் எனக் கூறினேன். இதை விளங்காமல் பலரும் பல மாதிரி விளக்கம் தருகின்றார்கள் நிழலி கூறியது போல 2002 இல் எனக்கு நேரடியாக மிரட்டல் வந்தது அடுத்த முறை இந்தப்பாதையால் நீங்கள் யாழ் செல்வதாக இருந்தால் உங்கள் பெயர் எங்கள் பட்டியலில் நிதி உதவி அளிப்பவர் என இருக்க வேண்டும் என்றார்கள் . நானும் சரி எனக் கூறிவிட்டு கடந்து சென்று விட்டேன். பின்னர் எங்களிடம் நிதி சேகரிக்க வந்த அந்த நல்ல மனிதர் 2009 க்குப் பின்னர் கேரளாவில் பல கோடி வியாபாரம் செய்து வருகின்றார். அதில் எனது பங்கும் இருக்கும் ஆனால் கேட்டாலும் திரும்பாத தரமாட்டார்😂
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சென்னை மன்னர்களின் ஆட்டத்தை ஒரு மாதிரி அடக்கியாச்சு ராஜஸ்தான் அரச பரம்பரையும் ஆட்டம் ஆடி அடங்கி விட்டது அடுத்து அடுத்து ஹைதராபாத்..... கொல்கத்தா..... அடங்க..... ஒரு நெருப்பு அலை வரும் அந்த அலையில் டெல்லியும் லக்னோவும் கருகிவிட பஞ்சாப்பும் குஜராத்தும் மும்பாயும்..... பெங்களூருக்கு எதிராக...... தனித்து நிற்கும்.... எனக் காண்டம் கதை சொல்கின்றது 😇
-
இறுதி யுத்தத்தில் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் இராணுவத்தினால் போலீசாரிடம் கையளிக்கப்பட்டுள்ளது
புலிகள் புலிகள் என் சிங்கள தேசியவாதிகள் சிங்கள மக்களை ஏமாற்றியது போல...... தமிழ்த் தேசியவாதிகளும்...... எல்லோரும் அல்ல ஒரு சில தேசியம் பேசும் அரசியல்வாதிகள்...... விடுதலைப் புலிகளை முன் வைத்து..... பயங்கரவாதத் தடைச்ச சட்டத்தை முன்வைத்து மக்களை ஏமாற்றுகின்றார்கள். அப்படியான கருத்தாகவே கந்தையா அண்ணையின் கருத்தும் இருக்கின்றது . இன்றைய நிலையில் ......