Everything posted by வாத்தியார்
-
நடிகை பாலியல் வழக்கு.. நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் சீமான்! வழக்கை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்
இந்த வழக்கில் யாருமே தண்டனை பெரிதா சிறிதா என்ற நோக்கில் வாதாடவில்லை. எப்படியும் இது தண்டனைக்குரிய வழக்கு இல்லை என்று எல்லோருக்கும் ஏற்கனவே தெரிந்து தான் இருந்தது அவதூறான வார்த்தைகளை பயன்படுத்தியதை யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை அதற்காக சிறை என்பதெல்லாம் ஒரு பரப்புரை இங்கே சீமானபிமானம் எங்குமே இல்லை நீதி நியாயம் வழக்கு என்று வந்து விட்டால் அண்ணன் தம்பி மாமன் மச்சான் சித்தப்பா பெரியப்பா ..........அவரா கொ.ப.செ துரை ? 😂
-
நடிகை பாலியல் வழக்கு.. நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் சீமான்! வழக்கை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்
ஒருவரால் கேட்கப்படும் மன்னிப்பு என்பது எழுத்து மூலம் கேட்கப்படும் பொது அந்த எழுத்தில் பிரயோகிக்கப்படும் வார்த்தைகள் அந்த மனிதனுடைய மன்னிப்பின் தன்மையை வெளிக் கொண்டு வரும் இது எனது நிலைப்பாடு ஆனால் வாய் மொழியால் கேட்கும் மன்னிப்பு என்பதன் ஆழம் அவர் முகத்தில் தெரியும் அப்போது அவரால் நடிக்க முடிந்தால் நாம் ஒன்றுமே செய்ய முடியாது
-
நடிகை பாலியல் வழக்கு.. நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் சீமான்! வழக்கை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்
நீ களவெடுத்தியா? ஆமா சார் ..... மன்னிச்சு விடுங்கள் சார்..... என்றபோதும் ஓகே இவருக்கு கசையடி பத்து என்ற ரீதியில் விசாரணையும் தீர்ப்பும் இருந்தால் எப்படி ? ஏன் களவெடுத்தாய் ? அதை வைத்து என்ன செய்தாய் ? அந்தக் களவுக்கு அந்த இடத்தை எப்படித் தேர்ந்தாய் ? உனக்கு அங்கெ களவெடுக்கலாம் என்று எப்படித் தெரியும்? எத்தனை நாள் காத்திருந்தாய்? என்று இத்யாதிக் கேள்வி கேட்டால்...... அதற்கான விடைகளுடன்மன்னிப்பும் கோரினால்..... கிடைக்கும் தண்டனை வித்தியாசமாக தானே இருக்கும் ஆனால் கேட்கும் மன்னிப்பு என்பது ஒன்றுதான் இதில் உணர்ந்து கேட்பது என்பது நடிப்பாக இருக்கும் பட்சத்தில் நாம் ஒன்றுமே செய்ய முடியாது 😂
-
நடிகை பாலியல் வழக்கு.. நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் சீமான்! வழக்கை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்
மகிந்த மற்றும் சோனியாவின் பங்களிப்புடன் இனவழிப்பு நடந்த முள்ளிவாய்க்காலையும் சீமானின் பாலியல் ரீதியிலான தாக்குதலையும் ஒன்றாக பார்க்க முடியாது என்பதே எனது கருத்து அதற்கான பதிலே இரண்டு குற்றங்களையம் ஒரே தண்டனைக்கு உட்படுத்த நினைப்பது தவறு என்பது மற்றும்படி மன்னிப்பு என்பது மனித பண்பு தான் அநீதி இழைக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு இழப்பதற்கு ஒன்றுமே இல்லை என்ற நிலைக்கு ஒருவனைத் தள்ளி விட்டு அவனிடம் மன்னிப்புக் கேட்பவன் உலகில் இருந்தாலும் அந்த மன்னிப்பை யாருமே ஏற்றுக் கொள்ளப்போவதில்லை
-
நடிகை பாலியல் வழக்கு.. நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் சீமான்! வழக்கை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்
நீங்கள் சீமான் மனித தன்மையற்ற அல்லது மனிதாபிமானமற்ற முறையில் வழக்கின்போது கதைக்கலாமா என்று கேட்டால்..... இல்லைத் தம்பி ஜஸ்டின் நான் அப்படிச் சொல்லவில்லை அதற்கான மன்னிப்பை சீமான் கேட்டுக் கொண்டார்..... என்பதை வரவேற்றேன் அவரை அதற்காகப் பாராட்டுவது உங்களுக்குத் பிடிக்கவில்லை என்றால் நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது அடுத்து நீங்கள் கூறிய உதாரணம் பிழை என்றேன் அதற்காக வாத்தியார் என்ற பெயரை என் மாத்த வேண்டும் கருத்தப் பாருங்க தம்பி அதற்கான பதிலளித்த தாருங்கள் நான் ஒரு நாளும் பெயரைப் பார்த்துக் கருத்து எழுதுவதில்லை உங்களுக்கு எப்படி வசதி....
-
நடிகை பாலியல் வழக்கு.. நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் சீமான்! வழக்கை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்
என்னப்பா இது காம்ப்ஸ் செய்த குற்றமும் பின்னணியும் எப்படியானது என்பதும் சீமான் எந்த அளவில் குற்றவாளி என்பதும் குழந்தைப் பிள்ளைக்கும் தெரியும் சிறைத் தண்டனை கிடைக்கும் வழக்குகளுக்கும் குடும்ப நல வழக்குகளுக்கும் வித்தியாசம் தெரியாமல் தம்பி ஜஸ்டின் அமெரிக்கா வழக்கை உதாரணம் காட்டுகின்றார் .
-
நடிகை பாலியல் வழக்கு.. நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் சீமான்! வழக்கை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்
கிணத்தடியில் இருந்த வாளியைக் களவெடுத்த ஒருவரையும் இரட்டைக் கொலை செய்து நகைகளைக் கொள்ளையடித்த ஒருவரையும் ஒப்பீடு செய்தல் முறையா .... நீதிக்கு முன்னர் யாவரும் சமமே என்று கூறினாலும் தண்டனையில் வேறுபாடு உள்ளதல்லவா அதை போலத்தான் இதுவும்
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
என்னா ?? இப்படி ஒரு குண்டைத் தூக்கிப் போடுகிண்றீர்கள் அப்ப இந்தச் சுமைதாங்கிகளின் நிலை....... 😂
-
நடிகை பாலியல் வழக்கு.. நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் சீமான்! வழக்கை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்
மன்னிப்புக் கேட்பது என்பது ஒன்றும் மனிதர்களுக்கு புதியது அல்ல . மனித மாண்புகளில் ஒன்று தான்.... விட்ட தவறை உணர்ந்து பாதிக்கப்பட்ட ..அல்லது பாதிக்கப்பட்டதாக நினைத்துக் கொண்டு தடங்கல்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கும்....இன்னொருவரிடம் மன்னித்து விடுங்கள்... எதோ தவறுதலாகப் பேசிவிட்டேன் என்பது . விட்ட தவறுகளை ? கண்டும் காணாதது போல கடந்து செல்லும் மனிதர்களை விட இங்கே சீமான் பரவாயில்லை . மறப்போம் மன்னிப்போம் என்ற வார்த்தை என்பது பலரது அரசியல் வாழ்க்கை யிலும் பெரிய திருப்பங்களையும் வெற்றிகளையும் கொடுத்திருக்கின்றது இப்போது சீமானிற்கு இன்னும் 4% வாக்குகள் அதிகரித்திருக்கும் தலைவர்யா அவர்
-
விஜயின் அரசியல் எதிர்காலத்தை கரூர் அனர்த்தம் தீர்மானிக்குமா?
இதன் அடிப்படையில் விஜய் தனது நேர ஒழுங்கமைப்பில் கவனம் செலுத்தவில்லை என்பது தெரிகின்றது விஜயிடம் எந்தவிதமான ஒழுங்கமைப்புக்களும் இருக்காது என்பது உளவுத்துறைக்குத் தெரிந்தும் வேண்டுமென்றே பாராபட்சமாக இருந்ததா? அவர் வரும் வரை மக்கள் கூட்டத்தை நெருக்கமான கூட்டமாக மாறுவதை காவல்துறை அவதானித்து தகுந்த நடவடிக்கை எடுத்திருக்கலாம் அல்லவா ? விஜயின் அரசியலை அவரால் தான் தீர்மானிக்க முடியும் அவரின் ஆதரவை எந்த விலை கொடுத்தாவது நாங்கள் வாங்கி விட வேண்டும் என பல கட்சிகளும் போடும் போட்டி அவருடைய வாக்கு வங்கியை அறை கூவுகின்றது எதுவுமே எளிதில் அனுமானிக்க முடியாது விஜய் + இந்திரா காங்கிரஸ் + எடப்பாடி என்ற கூட்டணி மட்டும் இன்னும் வெளியே தெரியவில்லை வந்தால் எப்படி இருக்கும் என்பதே எனது கேள்வி
-
யாழில் காணி உறுதிப்பத்திரம் தொடர்பான முறைப்பாட்டின் கீழ் பெண் சட்டத்தரணி கைது
இதில் ஒரு சிலர் அரசியல் கட்சிகளில் பதவிகளில் இருப்பவர்கள் எனவும் அரசல் புரசலாகப் பேசப்படுகின்றது
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
அப்படி நினைத்தே நாங்களும் குண்டக்க மண்டைக்கா தெரிவு செய்திருந்தோம் நமக்கு மட்டும் சரியா அமையுதில்லை இருந்தாலும் எங்களையும் இரண்டு பேர் தாங்கிப் பிடிப்பதை பார்க்க ஒரு ஆறுதல் 😂
-
கரூர் துயரம் : தமிழக அரசுக்கு முக்கிய வேண்டுகோள் வைத்த சமூக செயற்பாட்டாளர்கள்.
விஜய் இப்ப தான் கட்சி தொடக்கி இருக்கார். ஒரு தேர்தலைக் கூட எதிர்கொள்ளவில்லை தேர்தலை எதிர்கொள்வதற்கான.... அதற்கான ஆயத்தங்களில் ஈடுபடுகின்றார். ஆனால் இதுவரை அவரை ஒரு நடிகனாகவே மக்கள் அறிந்துள்ளார்கள் அரசியலில் எப்படிச் செயற்படுவார் என்பதை மக்கள் அவருடைய திரைப்படங்களை வைத்தே அளவிட்டுள்ளார்கள் இது உண்மையா? இல்லை அவர் சினிமா மூலம் மக்களை ஏமாற்றிருக்கின்றாரா? என்பது யாருக்கும் வெளிச்சம் இல்லை தி மு க எட்டு சதாப்தங்கள் கண்ட ஒரு கட்சி. ஏன் விஜயின் வரவை பார்த்து அச்சப்படுகின்றனர் என்பது தான் என்னுடைய கேள்வி. அது கொசுறு என்றால் கொசுறாகவே போயிடும். ஆனால் இவர்கள் விஜயை ஒரு பெரிய யானையாகக் காட்ட முயற்சிக்கின்றார்கள் எதற்காக ஒருவேளை எடப்பாடி யின் எதிர் வாக்குக்களை விஜய் பக்கம் திருப்பவா? தி மு க வை எடப்பாடியார் முந்தும் வேளையில் இந்த விளையாட்டால் விஜயால் எடப்பாடிக்கு ஆப்பா ? அதை உணர்ந்த எடப்பாடியார் விஜயை தன்னுடன் இழுக்க முயல்கின்றாரா ? அதற்கான மாமா வேலையை பா ஜ க பயமுறுத்தி செயல்படுத்த நினைக்கின்றதா ? இப்படிப் பல கேள்விகள் உள்ளது இந்தியா என்பது அரசியல் மாபியாக்கள் கூட்டணி எப்போதும் எதுவும் நடக்கலாம்
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
பையன் களத்தில் இப்படி சலிப்பாக எழுதியதை இப்ப தான் பார்க்கின்றேன் ❤️வீரப்பையன் விரையில் உடல்நலம் தேறி கலகலப்பாக வேண்டும்
-
கரூர் துயரம் : தமிழக அரசுக்கு முக்கிய வேண்டுகோள் வைத்த சமூக செயற்பாட்டாளர்கள்.
ஆர். பாலகிருஷ்ணன் திராவிடவியல் ஆய்வாளர் அடுத்து மூன்னாள் நீதியரசர் சந்துரு இவருடைய தீர்ப்புக்கள் பலதும் திராவிட கொள்கையின் அடிப்படையிலான தீர்ப்புகள் . ( நான் தீர்ப்புக்களை பிழை என்று கூறவில்லை. ) உதாரணம் 1.கோவில்களில் பெண்கள் பூசை செய்யும் குருக்கள் ஆகலாம். 2.சாதி பாகுபாடு இல்லாமல்எல்லாருக்கும் ஒரே சுடுகாடு வேண்டும் அடுத்து எழுத்தாளர் எஸ்.வி.ராஜதுரை இவர் சிறு வயதிலேயே தி மு க ஆர்வலர் பின்னர் கம்யூனிஸ்ட் ஆக மொத்தம் கலை இலக்கிய வாதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் என்று இறக்கி விடப்பட்ட இந்த தி மு க ஆதரவு செயற்பாட்டாளர்களால் எப்படி விஜயைக் குறை கூறாமல் இருக்க முடியும்
-
'வேண்டுமென்றே காலதாமதம்' - கரூர் நெரிசல் எஃப்.ஐ.ஆரில் கூறப்பட்டுள்ளது என்ன?
அரசியலில் யாரும் ஓடிப்பிடித்து விளையாட முடியாது என்பதை உணர விஜய்க்கு மூன்று நாட்கள் தேவைப்பட்டிருக்கின்றது. அவ்வளவுதான் தம்பி விஜயுடன் நாங்கள்.... அண்ணா விஜயுடன் நாங்கள்.... நம்ம பிள்ளை விஜயுடன் நாங்கள்..... நிற்போம் என்ற வார்த்தைகள் தான் காதில் கேட்கின்றது தி மு க வும் அதன் காவல்துறையும் தான் மக்களுடன் நாங்கள்..... மக்களின் நலன்களுக்காக நாங்கள்..... என்று கூவியவர்கள். ஆனாலும் சரியான நேரத்தில் மக்களைக் கவிழ்த்து விட்டார்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் விசுகு அண்ணை
-
'வேண்டுமென்றே காலதாமதம்' - கரூர் நெரிசல் எஃப்.ஐ.ஆரில் கூறப்பட்டுள்ளது என்ன?
விஜய் கைது என்பது தமிழ் நாட்டையே பிரளயமாக்கும் என்பது ஆழும் தரப்பினருக்குத் தெரியும் அதே வேளை இந்த அனர்த்தத்தில் ஆழும் தரப்பினரின் பங்கு என்ன என்பது எல்லோருக்கும் தெரியும் விஜய் குற்றவாளி என்றால் காவல் துறைக்குப் பொறுப்பான ஸ்டாலினும் குற்றவாளி தான் சிறிய கைதுகளுடன்.... விசாரணைக்கு குழுக்களின் அறிக்கைகளைத் தயாரிப்பதில் இழுத்தடிப்புச் செய்து...... இந்தப் பிரச்சனையை மழுங்கடித்து விடுவார்கள்.இரு தரப்பினரும்
-
'வேண்டுமென்றே காலதாமதம்' - கரூர் நெரிசல் எஃப்.ஐ.ஆரில் கூறப்பட்டுள்ளது என்ன?
அரசியலில் இன்னும் பக்குவம் அடையவில்லை என்பதையும் அவருடன் சேர்ந்திருக்கும் யாருமே சரியான ஒரு அரசியல் பாதையை விஜய்க்கு வகுத்துக் கொடுக்க முடியாதவர்களுமாக இருப்பதையும் இந்த ஒளிந்து இருக்கும் நிலை காட்டுகின்றது ஆனாலும் அரசியலுக்கு வந்துவிட்டால் படிப்பினைகளைக் கற்றுக் கொண்டு முன்னேறலாம் என்பது விஜயிக்குத் தெரியாமலா இருக்கும் விஜய் என்ற ஒரு மக்கள் ரசிக்கும் நபரை அரசியலில் யாருமே எதிர்கொள்ள விரும்ப மாட்டார்கள் அப்படியான நிலையில் விஜய் கட்சி ஆரம்பித்து நேரடியாகவே ஆழும் தரப்பினரை குறி வைத்தால் அவர்கள் சும்மா இருப்பார்களா ? அல்லது அந்த விஜயின் கட்சியையே கருவிலே அழிக்க நினைப்பார்களோ? ஆகவே தான் விஜயின் குஞ்சுகளுக்கு கொஞ்சம் புத்தி இருக்கின்றது என்றே நான் நினைக்கின்றேன்.
-
'வேண்டுமென்றே காலதாமதம்' - கரூர் நெரிசல் எஃப்.ஐ.ஆரில் கூறப்பட்டுள்ளது என்ன?
ஒரு கட்சியைப் பதிவு செய்யும் பொது தேர்தல் ஆணையம் இதையெல்லாம் கேட்டுத்தான் பதிவு செய்திருக்கும். இப்ப அது அல்ல பிரச்னை வரப்போகும் ஆபத்தை முன் கூட்டியே காவல்துறை அவதானிக்கவில்லையா ? அல்லது நடக்கட்டும் பின்னர் மெதுவாக நாங்கள் உள்ளே செல்வோம் என்ற முன்னேற்பாட்டுடன் இருந்தார்களா ? அரசியலுக்காக மக்களை பலிக்கடாவாக்க நினைக்கும் கட்சிகளுக்கு காவல்துறை துணை போகின்றதா ? விரைவில் தெரிய வரும் விஜய் காவல்துறைக்குத் தெரியாமல் கரூரில் இருக்க முடியாது காவல்துறை அனுமதி கிடைத்து அவர் அங்கு தொடர்ந்தும் இருந்திருந்தால் இந்த அவலத்தைக் காரணம் காட்டியே அலுவலை முடித்திருப்பார்கள் தி மு க என்ன சும்மா ஒரு கட்சியா எம் ஜி ஆரை,ஜெயலலிதாவை எதிர்த்து நின்றும் இன்னும் அழியாத ஒரு கட்சி
-
'வேண்டுமென்றே காலதாமதம்' - கரூர் நெரிசல் எஃப்.ஐ.ஆரில் கூறப்பட்டுள்ளது என்ன?
இங்கே நான் விஜய்க்கு செம்பு தூக்க வரவில்லை ஆனாலும் எல்லாமே அறிந்த..... அறிந்து கொண்டிருந்த.... அல்லது இப்படி நடக்கலாம்..... ஆபத்தாக முடியலாம்.... என்று எச்சரிக்கை செய்த அந்தக் காவல் துறை.... எந்த நடவடிக்கையையும் எடுக்காமல் த வெ க பொறுப்பாளர்களிடம் மட்டுமே மேற்கூறிய பரிந்துரைகளையும் எச்சரிக்கைகளையும் செய்திருப்பது சரியா? தாமாகவே ஒரு நடவடிக்கையை எடுத்திருக்க முடியாதா? அந்த இடத்தின் கொள்ளளவு தெரிந்தும் மேலதிகமான அளவிற்கு மக்களை அனுமதித்த காவல் துறையின் செயல் சரியானதா? விஜய் கரூரில் தொடர்ந்தும் தங்கியிருந்தால்..... (மக்களுடன் மக்களாக நிற்கிறேன் என்ற நிலையில்) இன்னும் பல இழப்புக்கள் அங்கே ஏற்பட்டிருக்கலாம் சமயோசிதமாக அவர் கரூரில் இருந்து வெளியேறியதால் இன்னும் பல உயிர்களும் அழிவுகளும் தவிர்க்கப்பட்டிருக்கின்றது. காவல்துறை மக்களுக்கானது
-
காங்கேசன் துறைமுகத்தை சர்வதேச துறைமுகமாக மாற்ற முடியாததற்கான காரணம், பலாலி விமான நிலைய சம்பந்தமான மக்கள் இழப்பீடுகள் குறித்து பிமல் ரத்நாயக்க கேள்வி
யார் கேள்வி கேட்டது யாரிடம் என்ற விபரத்தைப் புரியாமல் ........ அல்லது வேண்டுமென்றே திரித்து வீர கேசரி ....... லூசுப் பயல்கள்
-
ஒரு பயணமும் சில கதைகளும்
சுப்ரா பாதம் என்ற ஜெய்கணேஷ் நடித்த பக்திப் படம் சிறு வயதில் பார்த்தேன் விஷ்ணுவின் ஒரு அவதாரம் தான் நாராயணா என்று அறிந்தேன் ஓம் நமோ நாராயணா....
-
ஒரு பயணமும் சில கதைகளும்
யசோதரன் எங்களுக்குப் படம் காட்டப்போகின்றார் என பெரிதாக இந்தக் கதையை வாசிக்காமல் சென்று விட்டேன் இப்போது அப்படி என்ன தான் எழுதுகின்றார் என் ஒரு எட்டு எட்டிப் பார்க்கலாம் என்று வந்தால் ..... மிகுதிக் கதை எப்போது வரும் என்ற ஆவலுடன் காத்திருக்கின்றேன் கதையும்..... கதையுடன் சேர்ந்து வரும் செய்திகளும்.... சம்பவங்களும்...... நன்றாக இருக்கின்றது என்பதை விட...... மிகுதி இப்போது வரும் என்ற எண்ணமே அதிகமாக இருக்கின்றது தொடருங்கள்
-
விருது கேட்க போன எடப்பாடி பழனிசாமி ஏன் முகத்தை மூடிக்கொண்டு வரணும்?”- சீமான் அட்டாக்!
தமிழ் நாட்டில் எந்த ஒரு நடிகரும் அரசியலில் சடுதியாக கட்சி ஆரம்பித்து பெரும் வெற்றி பெற்ற சரித்திரம் இல்லை . பலரும் MGR இன் அரசியல் வரலாற்றை சரியாக அறியாமல் அவரைப் போல வர ஆசைப்படுகின்றனர். இதில் விஜயும் அடக்கம் . சீமானின் அரசியல் வேறு அவர் களத்தை நன்கு அறிந்தே வேலை செய்கின்றார் . இப்போதும் அவர் உடனடியாக முதல்வராக வருவேன் அல்லது வரவேண்டும் என்று அடம்பிடிக்கவில்லை. யசோதரன் கூறும் வெற்றிடம் ஸ்டாலினுக்குப் பின்னர் வர வாய்ப்புக்கள் உள்ளன. சீமான் அதுவரை காத்திருக்க வாய்ப்புக்கள் அதிகமே தவிர குறையாது.