Everything posted by ரசோதரன்
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
அடிக்கடி நடப்பது போலவே நாலு, ஐந்து விக்கெட்டுகள் விழுந்த பின் வந்தவர்கள் நின்று விளையாடுகின்றார்கள். நல்ல 'பின் புத்தி' உள்ளவர்கள்...............🤣 பின்னுக்கு வரப் போகும் நிலைமைகளையும் முன்னேயே கணித்து திட்டமிடுபவர்கள் என்ற குற்றமற்ற பொருளில் அந்த நாட்களில் இந்த முதுமொழியைச் சொல்லியிருப்பார்கள் போல.................👍.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
இலங்கை அணியில் யார் விளையாடினாலும், அது தோற்கத்தான் போகின்றது.............. ஆனால் 'இளசா போடுங்கோ, இளசா போடுங்கோ ...........................' என்று பையன் சார் கேட்கிறதிலயும் ஒரு நியாயம் இருக்குது....................😜.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
🤣............... வளவுக்குள்ள வாழைக்குலை ஒன்றை பழுத்திட்டுதே என்று இப்ப கிட்டடியில் வெட்டினோம்........... இந்தப் பிள்ளைகளை பார்க்க அந்த பழுத்த வாழைக்குலை தான் ஞாபகத்தில் வருகின்றது............ வர வர என்னுடைய போக்கே சரியில்ல............ காய்களை பார்க்க வேண்டிய இடத்திலும் பழங்கள் தான் கண்ணுக்குத் தெரியுது.............. ஒரு துறவியாக, ஞானியாக மாறிக் கொண்டிருக்கின்றேன் போல..............😜.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
இந்த மகளிர் கிரிக்கெட்டில் துடுப்பாட்ட வரிசை தலைகீழாக இருக்க வேண்டும் என்று ஒரு எழுதாத சட்டம் இருக்கின்றதா............. முதலில் வருபவர்கள் தத்தித் தத்தி அவுட் ஆகின்றார்கள்............ பின்னால் வருபவர்கள் நிதானமாக நின்று அடித்து விளையாடுகின்றார்கள்.......... வங்கதேசம் 69 க்குள் அவுட் ஆகவில்லயே என்ற ஒரு ஆதங்கம் தான் இப்படிக் கண்டபடி யோசிக்க வைக்குது..................😜.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
🤣................. நான் ஒரு தனித் துண்டில் எழுதி வைப்பதாக நினைத்தேன். அதற்குப் பிறகு விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தென் ஆபிரிக்கா வெற்றி................. வெறுமனே நினைத்ததற்கே இப்படி என்றால், எழுதி வைத்திருந்தால் என்னவாகி இருக்குமோ...............😜.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
👍.............. தோனி ரியலி கிரேட் தான்.............. கடைசி வருடம் விளையாடாமல் விட்டிருக்கலாம்......... பல ஜாம்பவான்களும் இப்படித் தான்......... கடைசியில் இழு இழு என்று இழுத்துவிடுவார்கள்............
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
🤣.............. இந்த தோணி, கப்பல் என்று சொல்லிச் சொல்லியே போன ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் புயலில் மாட்டுப்பட்டது போல சின்னாபின்னமாகியது.................🤣.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
🤣............. டென்மார்க்கில் இருந்து எறியப்பட்ட கற்கள் இலக்கு தவறி இந்திய வீராங்கனைகளின் தலைகளில் விழுந்ததாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.................. இந்தியாவை நம்பியோர் கைவிடப்படுவார்..................🤣.
-
கரூரில் இறந்தவர்கள் குடும்பத்திடம் வீடியோ காலில் விஜய் பேசியது என்ன?
விஜய் 41 குடும்பங்களையும் பனையூருக்கு வரச் சொல்லவில்லையே என்று ஆறுதல்பட்டுக் கொள்ள வேண்டியது தான்.....................🫣. 'ரசிகர்களா, நடிகர்களா.............. தமிழ்நாட்டில் இதில் எவருக்கு அதிக உளவியல் ஆலோசனைகள் தேவை..........' என்று ஒரு வழக்காடு மன்றமே வைக்கலாம் போல............... முழுச்சட்டையையும் கிழிக்காமல் விடமாட்டார்கள்............
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
இத்தனை வருடங்கள் தோற்றாகி விட்டது, அப்படியே இந்த வருடமும் இந்தியா தோற்று, அகஸ்தியனை அரியணையில் ஏற்ற வேண்டும் என்பது மட்டுமே எனது நோக்கம்..........🤣. இன்றைக்கு Mooney அடித்தார்........... அடுத்த போட்டியில் Sunny என்று ஒருவர் வந்து அடிப்பார்............ இப்படித்தானே போட்டிகள் தாறுமாறாக போய்க் கொண்டிருக்கின்றன..........ஆனால் ஃபைனலில் எதுவுமே மாறாது............🤣.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
🤣.................. இந்த பெண் பிள்ளைகள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக விளையாடுகின்றார்கள். புரியாத புதிராகவே இருக்கின்றார்கள்................................... வீடுகளில் தான் அப்படி இருக்கின்றார்கள் என்றால், போட்டிகளிலும் இப்படியா இருப்பது.................🤣.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
15 பேரில் ஒரு 10 பேர்கள் வரை, நான் உட்பட, சும்மாதான் கிறுக்கியிருக்கின்றோம் போல...... ஏதோ இப்போதைக்கு காற்று என் பக்கம் வீசுது..............🤣. அதுவே தான்....... கடந்த ஐபிஎல் அது ஒரு சரித்திரம், பையன் சார்............. அதில் 5, 6, 7 என்று தொடராக முட்டைகள் வாங்கியவர்கள் பலர்................ ஆனால் நந்தனும், புலவரும் அப்படியே ஒன்று, இரண்டாகவே நின்றார்கள்................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
🤣............. சர்வர், நிறைய முட்டைகளை வாங்கி அடிக்கி வையப்பா........... இவர்கள் இப்படி மாறி மாறி வென்றால், நிறைய கோப்பி போட வேண்டும் போல...................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
துண்டில் ஈழப்பிரியன் அண்ணாவின் பெயரை எழுதிய உடனேயே, அன்றைக்கு 69 அடித்த தென் ஆபிரிக்கா இன்றைக்கு எங்கேயோ போயிட்டுதே.............🤣. கிரிக்கெட்டிலும் எதுவும் நடக்கலாம் போல.................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
அண்ணாவின் பெயரையும் சேர்த்து எழுதுவதில் என்ன தயக்கம், இப்பவே எழுதுவோம் என்று நினைத்து, அண்ணாவின் தெரிவுகளையும் ஒரு தடவை போய்ப் பார்ப்போம் என்று பார்த்தால்.................... 30) ஆரம்ப சுற்று போட்டியில் முதல் இடம் பிடிக்கும் அணி எது? தென்னாபிரிக்கா .............. ஜக்கம்மா, அக்கம்மா, எந்த அம்மா துணைக்கு வந்தாலும் நிலைமை கொஞ்சம் கஷ்டம் போலத்தான் தெரியுது, அண்ணா.................🤣.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
69.................. என்ன ஒரு தெய்வீக எண்............ இது ஒரு கிரிக்கெட் ஸ்கோர் மாதிரி தெரியவில்லை, யாரோ பிறந்த வருடம் மாதிரித் தான் தெரிகின்றது..................😜.
-
கரூர் துயரம் : தமிழக அரசுக்கு முக்கிய வேண்டுகோள் வைத்த சமூக செயற்பாட்டாளர்கள்.
ஹேமமாலினி ஏற்கனவே சொல்லிவிட்டார். பாஜக என்றால் யார் என்று தெரியும் என்பதால், நாங்கள் எவரும் அவர்களின் கருத்தை இங்கே ஒரு பொருட்டாக கொண்டு வருவது கூட இல்லை. கும்பமேளாவில் இறந்தால் சொர்க்கத்திற்கு போகலாம் என்று சொல்லும் கூட்டம் அது.............🫣. என்ன நடந்தது என்பதில் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு பார்வைகள் இருக்கும். அவை பெரும்பாலும் அவர்களின் முன்னைய ஆதரவு - எதிர்ப்பு நிலையை ஒட்டியே இருக்கும். ஆனால் இந்த தலைவர்கள் எல்லோரும் இப்போது என்ன சொல்கின்றார்கள், என்ன செய்கின்றார்கள், எப்படி நடந்து கொள்கின்றார்கள் என்பதில் பல பார்வைகள் இருக்கமுடியாது.
-
கரூர் துயரம் : தமிழக அரசுக்கு முக்கிய வேண்டுகோள் வைத்த சமூக செயற்பாட்டாளர்கள்.
நான் அந்த 100 பேர்களின் பெயர்களை இங்கே போட்டாலும், நீங்கள் அவர்களில் ஒருவர் விடாமல் ஏதோ சொல்லத்தான் போகின்றீர்கள். அதை உங்கள் தரப்பின் பார்வையாக எடுத்துக் கொள்கின்றோம். நீங்கள் திமுகவால் இறக்கி விடப்பட்ட 100 பேர்கள் என்று இவர்களைச் சொல்கின்றீர்கள். நான் அவர்களாகவே முன்வந்து தமிழ் சமூகத்தின் மேல் இருக்கும் அக்கறையில் இதைச் செய்கின்றார்கள் என்கின்றேன். நான் கூட அந்த அக்கறையினால் தான் விஜய்க்கும், அவரது நடவடிக்கைகளுக்கும் எதிராக என்னால் முடிந்த இடங்களில் என் கருத்துகளை பதிவு செய்து கொண்டிருக்கின்றேன்.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
🤣........... அந்த முகபாவங்கள் காட்டுகின்ற பிள்ளை............... இப்ப சசியையே தீண்டுவார் இல்லை, அதால அந்தப் பிள்ளையும் இப்ப அவுட் ஆஃப் ஃபோகஸில் போயிட்டுது..........🤣.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
👍.................... நான் கிரிக்கெட்டை மட்டுமே பார்ப்பதாக இருக்கின்றேன், பையன் சார்...................🤣
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
நான் வங்கதேசம் தான் மிகக் குறைவான ஓட்டங்கள் எடுப்பார்கள் என்று தெரிவு செய்திருக்கின்றேன். அக்கம்மாவும், ஜக்கம்மாவும் கைவிடமாட்டார்கள்............... வங்கதேசம் ஏதாவது ஒரு போட்டியில் 99 ஓட்டங்கள் மட்டுமே எடுக்கத்தான் போகின்றார்கள்...................😜.
-
கரூர் துயரம் : தமிழக அரசுக்கு முக்கிய வேண்டுகோள் வைத்த சமூக செயற்பாட்டாளர்கள்.
மக்கள் அவரை கைவிட்டு விடுவார்கள் என்று தான் நானும் நினைக்கின்றேன். ஆனாலும் அவரது இளம் ரசிகர்கள் பலர் அவருடன் சேர்ந்தே நிற்பார்கள், ஆனால் அது ஒரு அரசியல் சக்தியாக அவரை தக்கவைக்க போதியதில்லை. இன்றைய நிலையில் பல் எதிர்க் கட்சிகள் அவரை உடனடியாக கைவிடப் போவதில்லை. 'தவிர்க்க முடியாத விபத்து.............' என்று சொன்ன சீமானுக்கு தம்பி விஜய் அவருக்கே அருகே வரப் போவதில்லை என்று தெரிந்துவிட்டது. இனிமேல் அவர் எதிர்ப்பக்க வாக்குகளையே நோக்கிப் பேசவேண்டும், பேசுகின்றார். ஒரு 20 அல்லது 30 தொகுதிகளை மட்டுமே கொடுத்து விஜயை மடக்கிப் போடலாம் என்று எடப்பாடியார் நினைக்கின்றார். கடைசியில் எடப்பாடியாரின் கொங்குநாடும் இந்த முடிவால் அவரது கைவிட்டுப் போகப் போகின்றது.
-
கரூர் துயரம் : தமிழக அரசுக்கு முக்கிய வேண்டுகோள் வைத்த சமூக செயற்பாட்டாளர்கள்.
எஸ்.வி. ராஜதுரை, சந்துரு, பாலகிருஷ்ணன் போன்றோரையும் அப்படியே ஒரு கூடைக்குள் போட்டு மூடி விட முடியாது தானே, கோஷான். விஜய்யின் காணொளியை பார்த்த பின், தமிழ்நாட்டில் இருந்து அகற்றப்பட வேண்டிய முதலாவது விஷம் விஜய் என்று தான் தோன்றுகின்றது. சீமானும், சாதிக் கட்சிகளும் கூட விஜய்யை விட பல மடங்குங்கள் சமூகத்திற்கு ஆபத்தில்லாதவர்கள்.
-
கரூர் துயரம் : தமிழக அரசுக்கு முக்கிய வேண்டுகோள் வைத்த சமூக செயற்பாட்டாளர்கள்.
கரூர் துயரம் : தமிழக அரசுக்கு ’முக்கிய’ வேண்டுகோள் வைத்த சமூக செயற்பாட்டாளர்கள்! Published On: 2 Oct 2025, 7:33 PM | By Pandeeswari Gurusamy கரூரில் நடந்த பெருந்துயர சம்பவத்தில் விஜய் உள்ளிட்ட அனைவரையும் சட்டத்தின் முன் நேர்நிறுத்த தமிழ்நாடு அரசு தயங்கக்கூடாதென சமூக செயற்பாட்டாளர்கள் கூட்டறிக்கை ஒன்றை இன்று (அக்டோபர் 2) வெளியிட்டுள்ளனர். கரூரில் நடிகர் விஜய் கலந்து கொண்ட பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. இந்த நிலையில் மூன்னாள் நீதியரசர் சந்துரு, ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ், எம்.ஜி.தேவசகாயம் ஐஏஎஸ், எழுத்தாளர் எஸ்.வி.ராஜதுரை, ஊடகவியலாளர் ‘தி இந்து’ என்.ராம், வழக்குரைஞர் ஹென்றி டிபேன், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் உள்ளிட்ட கலை இலக்கிய வாதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் என 100க்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில், “கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி இரவு 7.20 மணியளவில் கரூரில் வேலுசாமிபுரம் பகுதியில் தமிழக வெற்றிக் கழகம் நடத்திய “சாலையில் காட்சிதரும் – ரோடு ஷோ” நிகழ்வில் அதன் தலைவர் நடிகர் விஜய் அவர்களைக் காணவந்த பொதுமக்களில் 41பேர் கூட்ட நெரிசலில் சிக்கி மரணமடைந்துள்ளனர். இதனால் ஆற்றொணா துயரத்திலும் கடும் மனவுளைச்சலிலும் தமிழக மக்கள் தவித்து வரும் இவ்வேளையில், தவறான தகவல்களைப் பரப்பி இந்த மரணங்கள் உதாசீனப்படுத்தப்படுவதைக் காணச்சகியாமல் நாங்கள் இந்தக் கூட்டறிக்கையினை வெளியிடுகின்றோம். விஜய் அரசியல் கட்சி துவங்கியதிலோ தனது கட்சியினரை அவர் சந்திப்பதிலோ எவருக்கும் மாறுபட்ட கருத்து இல்லை. நாட்டின் குடிமக்கள் எவரொருக்குமானது போலவே அது அவருக்குரிய சனநாயக உரிமை. ஆனால் அவர் தனது கட்சியினரையும் ரசிகர்களையும் சந்திக்கத் தெரிவுசெய்துள்ள முறை, இந்த நாட்டின் அரசியல் முதிர்ச்சிக்கும் பொதுவாழ்க்கைக்கும் தனிமனித கண்ணியத்திற்கும் உகந்ததல்ல என்பதுடன், அதுவே இந்தப் பேரழிவுக்கும் இட்டுச்சென்றுள்ளது எனவும் சுட்டிக்காட்டுகிறோம். கரூருக்கும் முன்னதாக விக்கிரவாண்டி, மதுரை, திருச்சி, அரியலூர், நாகை ஆகிய இடங்களில் விஜய்யின் கூட்டங்கள் இந்தப் பேரழிவுக்கான முன்னோட்டம் போலவே நடந்திருக்கின்றன. போக்குவரத்து விதிகளைக் கடைபிடிக்காமலும் பொதுமக்களுக்கு அச்சமூட்டும் வகையிலும் வாகனங்களில் பயணம் செய்தது, பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியது மற்றும் மின் கம்பங்கள், மரங்கள், அருகமைக் கட்டிடங்கள் ஆகியவற்றில் ஏறி சேதப்படுத்தியது என அவரது கட்சியினர் பொறுப்புணர்வின்றியும் கட்டுப்பாடற்றும் சுயஒழுங்கின்றியும் நடந்துகொண்டனர். அவர்களில் பெரும்பாலோர் முப்பது வயதுக்குட்பட்டவர்கள், புதிதாக அரசியல் ஆர்வம் கொண்டவர்கள், விஜய்யின் சொல்லுக்கு கட்டுப்படக்கூடியவர்கள். அத்துமீறல்களுக்காக அவர்களைக் கண்டித்து, நல்வழிப்படுத்த அவர் அறிவுறுத்தியிருக்க வேண்டும். ஆனால் விஜய் அப்படியான முயற்சியெதையும் மேற்கொள்ளாமலும் அவர்களது அத்துமீறல்களை ரசிப்பவராகவும், அவர்கள் அவ்வாறு இருப்பதுதான் தனது பலமென்று கருதியும் அவற்றை இயல்பானதாக்க முயற்சித்தன் விளைவே இந்த அநியாய மரணங்கள். விஜய், அறிவித்திருந்த நேர அளவுக்குள் கரூருக்கு வராமல் தன்னைக் காண்பதற்காக திரண்டிருந்தவர்களை 7 மணிநேரத்திற்கும் மேலாக காக்கவைத்ததும், அங்கு குடிநீர், உணவு, கழிவறை உள்ளிட்ட அடிப்படைத்தேவைகள் போதுமானதாக இல்லாதிருந்ததும், கூட்டத்திற்குள் வந்த பிறகும் முகம் காட்டாமல் மக்களை தன் வண்டிக்குப் பின்னேயே அலையவிட்டதும்தான் உயிரிழப்புக்குக் காரணம் என்பதை காணொளிச்சான்றுகள் காட்டுகின்றன. ஆனால் இந்த உயிரிழப்புகளுக்குப் பின்னே “திட்டமிட்ட சதி” இருப்பதாகவும் விஜய் மீது எந்தத் தவறுமில்லையெனவும் உண்மைக்கு மாறான ஒரு கட்டுக்கதையை விஜய்யின் ஆதரவாளர்கள் சிலர் பரப்பத் தொடங்கினர். மணிப்பூர் உள்ளிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த இயற்கைப் பேரிடர்கள், மோதல்கள், கலவரங்கள், ஒடுக்குமுறைகள் பற்றி விசாரிக்கப் போயிராத தேசிய ஜனநாயகக் கூட்டணி, கரூர் மரணங்கள் பற்றி ஆராய தனது நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்றை அனுப்பியுள்ளதும் அந்தக் குழுவினர் “சதி” கட்டுக்கதையை வலுப்படுத்தும் விதமாக கருத்து தெரிவித்து வருவதும் ஏற்கத்தக்கதல்ல. தன் கண்முன்னேயே விபரீதம் நடப்பதைப் பார்த்தப் பிறகும் அதில் கவனம் செலுத்தி நிலைமையைச் சீராக்காமல் அங்கிருந்து வெளியேறிப் போய் இரண்டு நாட்கள் அமைதிகாத்த விஜய், இந்தக் கட்டுக்கதை கொடுத்த தைரியத்தில் 30.9.2025 அன்று ஒரு காணொளியை வெளியிட்டுள்ளார். தன்னால்தான் இந்தச் சாவுகள் நிகழ்ந்தன என்பது பற்றிய குற்றவுணர்ச்சியோ வருத்தமோ தார்மீகப் பொறுப்பேற்போ இல்லாத அவரது காணொளி விளக்கத்தில் அரசின் மீது பழிசுமத்திவிட்டு தப்பித்துவிடும் உள்நோக்கமே துருத்திக் கொண்டுள்ளது. கலையும் இலக்கியமும் சமூகத்தை மேம்படுத்துவதாக, விடுதலை உணர்வைத் தருவதாக, அடிமைச்சிந்தனைக்கு எதிராக தன்மதிப்புணர்வைத் தூண்டுவதாக இருக்க வேண்டும். ஆனால் விஜய்யின் அணுகுமுறை நேர்மைத்தன்மையற்றதாகவும், தனது ரசிகர்களை வேண்டுமென்றே தவறாக வழிநடத்துவதாகவும் உள்ளது. உழைப்பும், பொது சிந்தனையும், சமூக அக்கறையுமற்ற வழியில் அதிகாரத்தைப் பெறும் முனைப்பு மேலோங்கியுள்ளது. இழைத்துவிட்ட குற்றத்திலிருந்து தப்பிப்பதற்காக, இதுவரை தனது கொள்கை எதிரி என்று குறிப்பிட்டு வந்த வலதுசாரிகளை அண்டி நிற்கவும் தயாராகிவிட்டார் என்பதை அவரது அடுத்தடுத்த நகர்வுகள் உணர்த்துகின்றன. எவ்வளவு கொடிய தீங்கினையும் இழைத்துவிட்டு வதந்திகளையும் கட்டுக்கதைகளையும் களமிறக்கி தப்பித்துவிட முடியும் என்கிற விஜய்யின் கெடுநோக்கம் தடுக்கப்பட வேண்டும். ரசிக மனப்பான்மையில் அவரது பின்னே திரண்டுள்ள சிறார்களையும் இளைஞர்களையும் மீட்டெடுத்து சமூகப் பொறுப்புணர்வும் தன்மதிப்பும் உள்ளவர்களாக, தமது உள்ளாற்றல்கள் மூலம் வியத்தகு சாதனை புரிபவர்களாக வளர்த்தெடுப்பதில் கலை இலக்கியவாதிகளுக்கும் கூட்டுப்பொறுப்பு உள்ளதென உணர்கிறோம். விஜய்யின் முந்தைய நிகழ்வுகள், விளைவுகள் குறித்த மதிப்பீட்டின் அடிப்படையில் கரூரில் மேற்கொண்டிருக்க வேண்டிய கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் தமிழ்நாடு அரசு கண்டறிய வேண்டும். வருங்காலத்தில் இதுபோன்ற அவலங்கள் உருவாகாமல் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வழிவகைகள் கண்டறியப்பட வேண்டும். சட்டத்தின் ஆட்சியை உறுதிசெய்ய, கரூர் உயிரிழப்புகளுக்கு காரணமான விஜய் உள்ளிட்ட அனைவரையும் சட்டத்தின் முன் நேர்நிறுத்த தமிழ்நாடு அரசு தயங்கக்கூடாதென வலியுறுத்துகிறோம். மேலும், கரூர் நிகழ்வைக் காரணம் காட்டி சமூக, சனநாயக, பண்பாடு மற்றும் அரசியல் இயக்கங்களின் கருத்துரிமை, கூட்டம் கூடும் உரிமை, சங்கம் சேரும் உரிமை, போராடும் உரிமை ஆகியவற்றை தீர்மானிக்கும் அதிகாரத்தை காவல்துறையிடம் ஒப்படைத்துவிடக் கூடாது. அரசமைப்பு உரிமைகளான அவற்றைக் காப்பாற்றுவதில் தனக்குள்ள பொறுப்பினை தமிழ்நாடு அரசு உறுதியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்துகிறோம்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
வங்காளதேசத்திலும் பெண்கள் கிரிக்கெட் விளையாடுகின்றார்கள் என்று எனக்கு முன்னரே ஒருவரும் சொல்லவில்லை..................... ஏதோ எட்டாவது அணியாக உள்ளே பிடித்துப் போட்டிருக்கின்றார்கள் என்று நான் நினைத்துவிட்டேன்....................😜. 'இன்று கறுப்பு பிட்சில் வெள்ளைப் பந்து போட்டார்கள்................' என்று கலர் கலராக காமெண்ட்ரி சொல்லும் வசீயின் காமெண்ட்ரி மிஸ்ஸிங்..............❤️.