Everything posted by யாயினி
-
அமெரிக்கா முழுவதும் கடும் பனிப்புயல் – 18 மாநிலங்களில் அவசரநிலை அறிவிப்பு
கனடாவிலும் தான் நிறையச் சினோ கொட்டிட்டு.
-
முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
தயவு செய்து அரசியல்வாதிகளையோ அல்லது அரசியல் சார்ந்த கருத்துக்களையோ யாரும் இதற்குள் விதைக்காமல் இருந்தால் நன்று..காரணம் இந்த அரசியல் வாதிகள் நினைத்திருந்தால் கஸ்ரப்பட்ட மக்களுக்கு எவ்வளவோ செய்திருக்கலாம்..அவர்கள் தங்களுக்கு வேண்டியவர்களையும், தங்களையும் மட்டுமே வளர்த்துக் கொண்டு வாழ்ந்தார்கள், வாழ்கிறார்கள், வாழவும் போகிறார்கள்.ஆகவே ஏராளனுக்கும் மற்றவர்களுக்கும் இது ஒரு பணிவான வேண்டுகோளாக இருக்கும் என்று நினைக்கிறேன்.நன்றி.
-
என்னை அரசியலில் இருந்து ஓரங்கட்ட முடியாது – எஸ்.சிறிதரன்
ஆ..அப்படியா..ஊரில் இன்னும் கொஞ்சம் பார் திறக்க இடம் இருக்கோ....உங்களிடம் எல்லாம் எப்படி பிள்ளைகள் படித்தார்களோ..?
-
முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
என்னைப் பொறுத்த மட்டில் உங்கள் செயல்பாடுகள் எதற்கும் நான் தடங்கலாக இருக்க போவதில்லை.என்னால் முடியும் போது ஏதாவது செய்வேன் அவ்வளவு தான்.பயளாளிகளை கஸ்ரப்படுத்தாமல் இருந்தால் சரி.நன்றி.
-
முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
நான் எழுதும் கருத்து சிலருக்கு சங்கடமாக இருக்கலாம்..வேணாம் எழுதாமல் போவதே மேல்.நன்றி.
-
மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற வடமாகாண தைப்பொங்கல் விழா!
மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற வடமாகாண தைப்பொங்கல் விழா! பிரதம விருந்தினர்களாக அழைக்கப்பட்ட அமைச்சர், பிரதி அமைச்சர் கலந்து கொள்ளவில்லை! written by admin January 18, 2026 மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற வடமாகாண தைப்பொங்கல் விழா – பிரதம விருந்தினர்களாக அழைக்கப்பட்ட அமைச்சர், பிரதி அமைச்சர் கலந்து கொள்ளவில்லை. வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகு ஆண்டுதோறும் நடத்தும் வடமாகாண தைப்பொங்கல் விழா- 2026 இவ் வருடம் மன்னார் மாவட்டத்தின் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற திருக்கேதீஸ்வரம் திருக்கோயில் மூன்றலில் இன்றைய தினம் (18) ஞாயிற்றுக்கிழமை காலை நடை பெற்றது. வடக்கு மாகாண கல்வி. அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன் தலைமையில் இடம்பெற்ற குறித்த விழாவில் விருந்தினர்களாக கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இ.சந்திரசேகர், வடக்கு மாகாண ஆளுநர் நா வேதநாயகன், கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் ஆர். எச். உபாலி சமரசிங்க ஆகியோர் அழைக்கப் பட்டதோடு, சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண பிரதம செயலாளர் தனுஜா முருகேசன் மற்றும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர். எனினும் குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்த கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இ.சந்திரசேகர்,கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் ஆர். எச். உபாலி சமரசிங்க ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. இந்த நிலையில் இந்த நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை (18) காலை 9 மணியளவில் வடக்கு மாகாண கல்வி. அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன் தலைமையில் சிறப்பாக ஆரம்பமானது. இதன் போது விருந்தினர்களாக வடக்கு மாகாண ஆளுநர் நா வேதநாயகன் கலந்து கொண்டு சிறப்பித்த தோடு அழைக்கப்பட்ட ஏனைய விருந்தினர்கள் கலந்து கொண்டனர். இதன் போது சம்பிரதாய பூர்வமாக புதிர் எடுக்கும் நிகழ்வுகள் திருக்கேதீஸ்வரம் மாளிகைத் திடலில் இடம்பெற்றது. தொடர்ந்து விருந்தினர்கள் சம்பிரதாய பூர்வமாக திருக்கேதீஸ்வரர் ஆலயத்திற்கு ஆழைத்து வரப்படுவதுடன் அங்கு விசேட நிகழ்வு தொடர்ந்து இடம் பெற்றது. மேலும் பொங்கலைச் சிறப்பிக்கும் வகையில் மன்னார் மாவட்ட கலை மன்றங்களுக்கான ஆற்றுகை பொருட்களும், விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணப் பொருட்களும் வழங்கப்படமை குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2026/226770/
-
🍔 TGI Fridays இன் 16 கிளைகள் மூடப்படுகின்றன – 456 ஊழியர்கள் வேலை இழப்பு
🍔 TGI Fridays இன் 16 கிளைகள் மூடப்படுகின்றன – 456 ஊழியர்கள் வேலை இழப்பு written by admin January 18, 2026 ஐக்கிய இராச்சியத்தில் (UK) உள்ள பிரபல அமெரிக்க உணவகச் சங்கிலியான TGI Fridays, தனது 16 கிளைகளை நிரந்தரமாக மூடுவதாக அறிவித்துள்ளது. இது பிரித்தானியாவின் வர்த்தகத் துறைக்கு (High Street) மற்றுமொரு பேரிடியாக அமைந்துள்ளது. நிர்வாக சிக்கல்கள் காரணமாக எடுக்கப்பட்ட இந்த அதிரடி முடிவினால், நூற்றுக்கணக்கான ஊழியர்கள் தங்களது வேலைவாய்ப்புகளை இழந்துள்ளனர். எஞ்சியுள்ள 33 கிளைகள் ஒரு புதிய மீட்பு ஒப்பந்தத்தின் (Rescue deal) மூலம் தொடர்ந்து இயங்கும். இதன் மூலம் சுமார் 1,384 பணியாளர்களின் வேலைவாய்ப்பு பாதுகாக்கப்பட்டுள்ளது. TGI Fridays-ன் பிரித்தானிய கிளைகளை நிர்வகித்து வந்த ‘லிபர்ட்டி பார் அண்ட் ரெஸ்டாரன்ட்’ (Liberty Bar and Restaurant) குழுமம் நிதி நெருக்கடியால் நிர்வாகிகளிடம் (Administrators) ஒப்படைக்கப்பட்டது. வாடிக்கையாளர் வருகை குறைவு, அதிகரித்த செயல்பாட்டுச் செலவுகள் மற்றும் பொருளாதார நெருக்கடி ஆகியவை இம்முடிவுக்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது. மூடப்பட்டவற்றில் மின்னார், எடின்பர்க், ரீடிங், ஸ்டீவனேஜ் மற்றும் காவென்ட்ரி உள்ளிட்ட 16 நகரங்களில் உள்ள கிளைகள் இதில் அடங்கும். Tag Words: #TGIFridaysUK #RestaurantClosures #UKHighStreet #HospitalityNews #JobLosses #Administration #RetailCrisis #UKNews2026 https://globaltamilnews.net/2026/226780/
-
20 நிமிடங்களில் கசிப்பு தயாரிக்கக்கூடிய சாதனம் ஒன்றை கண்டுபிடித்த நபர், பொலிசாரால் கைது!
இது உங்கள் கண்டுபிடிப்பா சிறியண்ண....🤭
-
டிரம்பும் அவரது வம்பும் – கைமாறியதா நோபல் பரிசு? ஓர் பார்வை!
டிரம்பும் அவரது வம்பும் – கைமாறியதா நோபல் பரிசு? ஓர் பார்வை! written by admin January 17, 2026 வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ, தனக்கு வழங்கப்பட்ட உயரிய ‘அமைதிக்கான நோபல் பரிசை’ அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்புக்கு வழங்கி தனது விசுவாசத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்! இது உலகளவில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. 🧐" width="16" height="16" style="box-sizing: border-box; outline: 0px; margin: 0px; padding: 0px; border: 0px; max-width: 100%; vertical-align: top; height: auto;"> உண்மையில் நோபல் பரிசை இப்படி கைமாற்ற முடியுமா? மரியாவுக்கு ஏன் நோபல் பரிசு❓" width="16" height="16" style="box-sizing: border-box; outline: 0px; margin: 0px; padding: 0px; border: 0px; max-width: 100%; vertical-align: top; height: auto;"> காசா போன்ற போர்ச் சூழல் இல்லாத ஒரு நாட்டின் எதிர்க்கட்சித் தலைவருக்கு எதற்காக இந்த அங்கீகாரம்? பல்வேறு தரப்பினரும் இந்தக் கேள்வியை எழுப்பி வருகின்றனர். டிரம்ப் மீது தனக்கிருக்கும் விசுவாசத்தைக் காட்ட மரியா செய்த இந்தச் செயல் ஒரு “ட்விஸ்ட்” ஆக மாறியுள்ளது. 📜" width="16" height="16" style="box-sizing: border-box; outline: 0px; margin: 0px; padding: 0px; border: 0px; max-width: 100%; vertical-align: top; height: auto;"> ஆல்ஃபிரட் நோபல்: டைனமைட்டைக் கண்டுபிடித்த இவர், தன் கண்டுபிடிப்பு அழிவுக்குப் பயன்படுவதைக் கண்டு வருந்தி, மனிதகுல முன்னேற்றத்திற்காகப் பாடுபடுபவர்களுக்குத் தனது சொத்தின் பெரும்பகுதியை பரிசாக அறிவித்தார். இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம், அமைதி மற்றும் பொருளாதாரம். இந்த துறைகளில் சாதனை பட்த்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. அதன் அடிப்படையில் 18 காரட் தங்கப் பதக்கம், தனித்துவமான நோபல் பட்டயம் மற்றும் சுமார் 11 லட்சம் அமெரிக்க டொலர் பரிசுத் தொகை வழங்கப்படுகிறது. 🚫" width="16" height="16" style="box-sizing: border-box; outline: 0px; margin: 0px; padding: 0px; border: 0px; max-width: 100%; vertical-align: top; height: auto;"> இது குறித்து நோபல் கமிட்டி கொடுத்த “அதிர்ச்சி” விளக்கம்! மரியா தனது பதக்கத்தை டிரம்பிடம் ஜனவரி 15-ல் ஒப்படைத்தார். ஆனால், இது குறித்து நோபல் கமிட்டி ஜனவரி 16-ல் விளக்கம் ஒன்றை அளித்துள்ளது: “நோபல் பரிசும், அதைப் பெற்றவரும் பிரிக்க முடியாதவர்கள். மரியா தனது தங்கப் பதக்கத்தை (பொருளை) யாருக்கு வேண்டுமானாலும் தானமாகக் கொடுக்கலாம். ஆனால், ‘நோபல் வெற்றியாளர்’ என்கிற பெருமை மரியாவுக்கு மட்டுமே சேரும்; அது டிரம்புக்குப் போகாது!” அதாவது, நோபல் பரிசை ரத்து செய்யவோ, பெயரை மாற்றவோ சட்டப்படி இடமில்லை என கமிட்டி கறாராகக் கூறிவிட்டது. டிரம்ப் நீண்ட காலமாக இந்த விருதிற்காகக் காத்திருக்கும் நிலையில், மரியாவின் இந்த முயற்சி டிரம்ப் ஆதரவாளர்களுக்கு மகிழ்ச்சியைத் தந்தாலும், கமிட்டியின் விளக்கம் ஒரு தர்மசங்கடத்தை உருவாக்கியுள்ளது. 😊" width="16" height="16" style="box-sizing: border-box; outline: 0px; margin: 0px; padding: 0px; border: 0px; max-width: 100%; vertical-align: top; height: auto;"> இது போன்ற சுவாரஸ்யமான உலகச் செய்திகளுக்குத் தொடர்ந்து இணைந்திருங்கள்! #DonaldTrump #MariaCorinaMachado #NobelPeacePrize #InternationalNews #Venezuela #PoliticalTwist #NobelCommittee #TrendingNews #TamilNews #WorldPolitics இது பற்றிய உங்கள் கருத்து என்ன? டிரம்புக்கு நோபல் பரிசு வழங்கப்பட வேண்டுமா? கீழே கமெண்ட் செய்யுங்கள்! 👇" width="16" height="16" style="box-sizing: border-box; outline: 0px; margin: 0px; padding: 0px; border: 0px; max-width: 100%; vertical-align: top; height: auto;"> டிரம்பும் அவரது வம்பும் - கைமாறியதா நோபல் பரிசு? ஓர் பார்வை! - Global Tamil News
-
கல்வி சீர்திருத்தத்திற்கு எதிர்ப்பு: விமல் வீரவன்ச சத்தியாக்கிரக போராட்டம்!
அனுராவின் காலில் எல்லாம் தொட்டுக் கும்பிடுகிறார்கள்.அவரும் ஒரு சாதரண மனிதர் தானே ஏன் இவ்வளவு கோமாளித்தனம் செய்கிறார்கள்...ஆலாத்தி, பூச்செண்டு, காலில் தொட்டுக் கும்பிடுதல் கடவுளே..
-
டுபாயில் கைதுசெய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட பாதாள உலக கும்பல் தொடர்பில் வெளியான தகவல்!
🚨 டுபாயில் கைது செய்யப்பட்டு இன்று இலங்கை கொண்டு செல்லப்பட்ட பெண் – திடுக்கிடும் தகவல்கள்! 🚨 🚨 தடுபாயில் பதுங்கியிருந்த பாரிய குற்றவாளிகள் மூவர் அதிரடியாக இலங்கைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்! 🚨 written by admin January 16, 2026 டுபாயில் கைது செய்யப்பட்டு இன்று இலங்கை கொண்டு செல்லப்பட்ட பெண் – திடுக்கிடும் தகவல்கள்! சர்வதேச சிவப்பு வாரண்ட் (Red Warrant) பிறப்பிக்கப்பட்டு, துபாயில் வைத்து கைது செய்யப்பட்ட பெண், குற்றப்புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகளால் இன்று இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டார். இவருடன் பாரிய குற்றச்செயல்களுடன் தொடர்புடைய மேலும் இரு சந்தேகநபர்களும் அழைத்து வரப்பட்டுள்ளனர். இவ்விவகாரம் தொடர்பாக மேலதிக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி உள்ளன. கைது செய்யப்பட்டுள்ள பெண் (மேலனி டி சில்வா), தற்போதைய சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்கவின் மைத்துனி எனவும், அவரது தனிப்பட்ட செயலாளராகப் பணியாற்றியவர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் (CCD) முன்னாள் பொறுப்பதிகாரியும், W15 ஹோட்டல் மீதான சட்டவிரோதத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவருமான பிரதான பொலிஸ் பரிசோதகர் அன்சிலம் டி சில்வாவின் மனைவி ஆவார். இவர் அபுதாபியில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் கணக்கு உத்தியோகத்தராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கை மூவரடங்கிய மேல்நீதிமன்ற நீதியரசர்கள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைகள் இதுவரை முறையாகச் செயல்படுத்தப்படாமைக்கு, இவரின் செல்வாக்கே காரணம் எனப் பேசப்படுகிறது. இலங்கையில் இடம்பெற்ற பாரிய குற்றச்செயல்களுடன் நேரடியாகத் தொடர்புடைய இந்த நபர்களிடம் CID அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். சர்வதேச பொலிஸாரின் (Interpol) சிவப்பு வாரண்ட் (Red Notice) மூலம் தேடப்பட்டு வந்த, இலங்கையில் பாரிய குற்றச்செயல்களுடன் தொடர்புடைய இருவர் மற்றும் அரசாங்க நிதி மோசடி செய்த பெண் ஒருவர் இன்று (2026 ஜனவரி 16) அதிகாலை துபாயிலிருந்து இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டனர். கைது செய்யப்பட்ட ஏனைய இருவரின் விபரங்கள். கந்தானையைச் சேர்ந்த 30 வயது நபர்: இவர் 2025 ஜூலை 3ஆம் திகதி வாகனத்திற்குள் வைத்து ஒருவரைச் சுட்டுக் கொன்ற சம்பவத்துடன் நேரடியாகத் தொடர்புடையவர். எல்பிட்டியவைச் சேர்ந்த 52 வயது நபர்: உஸ்மங்கொட பகுதியை மையமாகக் கொண்டு இயங்கிய பல திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர். இலங்கை பொலிசாரின் வேண்டுகோளுக்கிணங்க, துபாய் மற்றும் அபுதாபி பொலிஸார் இவர்களைக் கைது செய்திருந்தனர். சர்வதேச நாடுகளுக்கிடையிலான நாடுகடத்தல் சட்டங்களின் கீழ், குற்றப்புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகள் இவர்களைக் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக நாட்டுக்கு அழைத்து சென்றுள்ளனர். இவர்கள் மூவரில் பெண் சந்தேகநபர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் (CID) ஒப்படைக்கப்பட்டுள்ளார். ஆண் சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைக்காக களனி மற்றும் எல்பிட்டிய பிரிவு குற்றப்பலனாய்வு பணியகங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இலங்கை பொலிஸாரால் இதுவரை 95 சிவப்பு வாரண்டுகள் பெறப்பட்டுள்ள நிலையில், அதன் பயனாக 2024 இல் 10 பேரும், 2025 இல் 11 பேரும் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #SriLanka #PoliceNews #CrimeUpdate #Interpol #RedNotice #DubaiArrest #CID #Justice #PublicSafety #SriLankaPolice #LKA #BreakingNewsSriLanka #CrimeInvestigation#SriLanka #BreakingNews #CrimeInvestigation #CID #DubaiArrest #JusticeForSriLanka #LegalSystem #PoliceUpdate #SriLankaPolice #LegalNews #SriLankaPolitics #MelanieDeSilva #CurrentAffairsSL #LKA https://globaltamilnews.net/2026/226655/
-
🚨 புதிய உலக ஒழுங்கிற்குத் தயாராகும் கனடா!
🚨 புதிய உலக ஒழுங்கிற்குத் தயாராகும் கனடா! written by admin January 16, 2026 கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னி, சீனாவுடனான நாட்டின் உறவில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றத்தை அறிவித்துள்ளார். பெய்ஜிங்கிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள அவர், சீனாவுடனான கனடாவின் கூட்டாண்மை “புதிய உலக ஒழுங்கிற்கு (New World Order) நம்மைச் சிறப்பாகத் தயார்படுத்துகிறது” என்று தெரிவித்துள்ளார். கடந்த எட்டு ஆண்டுகளில் சீனாவிற்குச் செல்லும் முதல் கனடியப் பிரதமர் மார்க் கார்னி ஆவார். அமெரிக்காவுடனான வர்த்தகப் பதற்றங்கள் மற்றும் உலகளாவிய பொருளாதார மாற்றங்களுக்கு மத்தியில், கனடா தனது வர்த்தகப் பாதைகளை மாற்றியமைக்கத் தொடங்கியுள்ளது. அமெரிக்காவை மட்டுமே நம்பியிருக்காமல், அடுத்த 10 ஆண்டுகளில் அமெரிக்கா அல்லாத நாடுகளுக்கான ஏற்றுமதியை 50% அதிகரிக்கக் கனடா திட்டமிட்டுள்ளது. கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு (LNG) மற்றும் விவசாயப் பொருட்களுக்கான வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. கனடா சீன மின்சார வாகனங்கள் (EV) மீதான வர்த்தக வரிகளைக் குறைக்கவும், பதிலுக்குச் சீனா கனடிய விவசாயப் பொருட்கள் (Canola) மீதான வரிகளைக் குறைக்கவும் இணக்கம் காணப்பட்டுள்ளது. பருவநிலை மாற்றம், உலகளாவிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை ஆகியவற்றில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட உறுதி பூண்டுள்ளன. “உலகம் பிரிவினையாலும் குழப்பத்தாலும் சூழப்பட்டுள்ள இந்த நேரத்தில், கனடாவும் சீனாவும் இணைந்து செயல்படுவது உலகிற்கே ஒரு முன்மாதிரியாக அமையும்” என்கிறார் பிரதமர் மார்க் கார்னி. அமெரிக்காவின் புதிய வர்த்தகக் கொள்கைகளால் (Tariffs) கனடா எதிர்கொள்ளும் பொருளாதாரச் சவால்களைச் சமாளிக்க, இந்தச் சீனப் பயணம் ஒரு முக்கியத் திருப்பமாகக் கருதப்படுகிறது. #Canada #China #Mark Carney #NewWorldOrder #GlobalPolitics #TradeNews #CanadaChinaRelation #BreakingNews #TamilNews #கனடா #சீனா #மார்க் கார்னி #உலகஅரசியல் Global Tamil News🚨 புதிய உலக ஒழுங்கிற்குத் தயாராகும் கனடா! - Global Tami...கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னி, சீனாவுடனான நாட்டின் உறவில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றத்தை அறிவித்துள்ளார். பெய்ஜிங்கிற்கு…
-
பிரித்தானியாவில் மனைவியை கொடூரமாகக் கொலை செய்த இலங்கைத் தமிழருக்கு ஆயுள் தண்டனை!
பிரித்தானியாவில் மனைவியை கொடூரமாகக் கொலை செய்த இலங்கைத் தமிழருக்கு ஆயுள் தண்டனை! written by admin January 16, 2026 இங்கிலாந்தின் லிவர்பூல் (Liverpool) நகரில், பிரிந்து வாழ்ந்த தனது மனைவியை மக்கள் நடமாட்டம் உள்ள கடையொன்றில் வைத்து இரக்கமற்ற முறையில் குத்திக் கொலை செய்த இலங்கைத் தமிழருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 47 வயதான நிமலராஜா மதியபரணம் என்பவரே இந்த அதிர்ச்சிகரமான குற்றத்தைச் செய்தவர். செஃப்டன் (Sefton) பகுதியில் உள்ள ஒரு கடையில் பணிபுரிந்து வந்த தனது மனைவி நிலானி நிமலராஜாவை (44), கடந்த ஜூன் 20 அன்று மதியபரணம் கத்தியால் தாக்கிப் படுகொலை செய்தார். நிலானி தனது மகள்களுடன் அந்தக் கடைக்கு மேல் உள்ள ஒரு பிளாட்டில் வசித்து வந்தார். 🔪" width="16" height="16" style="box-sizing: border-box; outline: 0px; margin: 0px; padding: 0px; border: 0px; max-width: 100%; vertical-align: top; height: auto;"> நீதிபதி பிரையன் கம்மிங்ஸ் கே.சி (Justice Brian Cummings KC) முன்னிலையில் நடைபெற்ற விசாரணையில், நிலானியின் உடலில் 14 கத்திக்குத்து காயங்களும், 4 வெட்டுக் காயங்களும் இருந்ததாக மருத்துவ அறிக்கைகள் தெரிவித்தன. “கொலை செய்யும் நோக்கத்துடன் மட்டுமே” மதியபரணம் அங்கு சென்றதாக நீதிபதி சுட்டிக்காட்டினார். 💢" width="16" height="16" style="box-sizing: border-box; outline: 0px; margin: 0px; padding: 0px; border: 0px; max-width: 100%; vertical-align: top; height: auto;"> ஒரு குடும்ப நிகழ்வுக்குத் தன்னை அழைக்காததால் ஏற்பட்ட கடும் கோபமே இந்த கொலைக்குத் தூண்டுதலாக இருந்துள்ளது. தாக்குதலுக்கு முன்பே மதியபரணம் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி, ஆக்ரோஷமாக நடந்துகொண்டவர் என்பதும், தனது மனைவி மற்றும் மகளைத் தொடர்பு கொள்ளக் கூடாது என்ற நீதிமன்றத் தடையை அவர் மீறியிருந்ததும் விசாரணையில் உறுதியானது. 💔" width="16" height="16" style="box-sizing: border-box; outline: 0px; margin: 0px; padding: 0px; border: 0px; max-width: 100%; vertical-align: top; height: auto;"> இந்தத் தாக்குதலின் போது 18 வயதான மூத்த மகள் அளித்த வாக்குமூலம் நீதிமன்றத்தையே உலுக்கியது: “அம்மாதான் எனக்கு எல்லாமே. இந்தச் சம்பவத்தால் நான் என் அம்மா, அப்பா, வீடு என அனைத்தையும் இழந்துவிட்டேன். தந்தையர் குடும்பத்தைப் பாதுகாப்பவர்களாக இருக்க வேண்டும், அதை அழிப்பவர்களாக இருக்கக் கூடாது. என் தந்தை எனக்குத் துரோகம் இழைத்துவிட்டார்.” ⚖️" width="16" height="16" style="box-sizing: border-box; outline: 0px; margin: 0px; padding: 0px; border: 0px; max-width: 100%; vertical-align: top; height: auto;"> தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட நிமலராஜா மதியபரணத்திற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அவர் குறைந்தபட்சம் 28 ஆண்டுகள் சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும், அதுவரை அவர் விடுதலைக்காக விண்ணப்பிக்க முடியாது என்றும் நீதிபதி தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட நிலானி, ஒரு கனிவான மற்றும் ஒழுக்கமான பெண்ணாக வாழ்ந்தவர் என்பதை நீதிபதி தனது தீர்ப்பில் பதிவு செய்தார். #UnitedKingdom #Liverpool #CrimeNews #JusticeForNilani #TamilNews #UKCourt #DomesticViolence #BreakingNews #LiverpoolCrime #SrilankanTamilNews https://globaltamilnews.net/2026/226663/
-
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வீடு வசதி இல்லாமல் வாழும் அனைத்து மக்களுக்கும் வீட்டு வசதியை பெற்றுக் கொடுப்பதே எமது நோக்கமாகும் - ஜனாதிபதி
யாழ்ப்பாணத்தில் ‘தமக்கென ஒரு இடம் – அழகான வாழ்க்கை’ அநுர ஆரம்பித்து வைத்தார்! written by admin January 16, 2026 யாழ்ப்பாணத்தில் ‘தமக்கென ஒரு இடம் – அழகான வாழ்க்கை’ அநுர ஆரம்பித்து வைத்தார்! ‘தமக்கென ஒரு இடம் – அழகான வாழ்க்கை’ என்ற தொனிப்பொருளின் கீழ், நாடு முழுவதும் 31,218 புதிய வீடுகளை நிர்மாணிக்கும் தேசிய வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் போரால் பாதிக்கப்பட்டு வீடுகளின்றித் தவிக்கும் 2,500 குடும்பங்களுக்கான வீடுகளை நிர்மாணிக்கும் விசேட வேலைத்திட்டம் இன்று வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணம், சாவகச்சேரி – மீசாலை கிழக்கில் தெரிவு செய்யப்பட்ட பயனாளி ஒருவரின் வீட்டுக்கான அடிக்கல், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில், குறித்த பயனாளியின் குடும்பத்தாரால் நடுகை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து மீசாலை வீரசிங்கம் ஆரம்பப் பாடசாலை மைதானத்தில் நடைபெற்ற பிரதான நிகழ்வில், பயனாளிகளுக்கான வீட்டு மானியக் காசோலைகள் மாண்புமிகு ஜனாதிபதி முன்னிலையில் வழங்கி வைக்கப்பட்டது. நீண்டகாலமாக தற்காலிக வசிப்பிடங்களில் வாழ்ந்து வரும் இடம்பெயர்ந்த குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கிலும், அவர்களுக்குப் பாதுகாப்பானதொரு எதிர்காலத்தை உருவாக்கும் நோக்கிலும் இவ்வீட்டுத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இந்நிகழ்வில், மற்றும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் உரையாற்றினர். அதனைத் தொடர்ந்து மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், வீடமைப்பு அமைச்சர் கலாநிதி எச்.எம்.சுசில் ரணசிங்க, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால, வடமாகாண ஆளுநர் ந. வேதநாயகன் , யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜெ.றஜீவன், எஸ்.ஸ்ரீபவானந்தராஜா க.இளங்குமரன் ஆகியோர் கலந்துகொண்டனர். https://globaltamilnews.net/2026/226630/
-
முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
சுகாதாரமற்ற இடங்களுக்கு போகும் போது உங்கள் நலனிலும் கவனம் எடுங்கள் ஏராளன்.
-
யாழிணைய நிர்வாகி திரு மோகன் அவர்களின் அருமைத் துணைவியார் இன்று (14-01-2026) காலமானார்.
ஆ.......நம்பவே முடியாதிருக்கிறது.....மோகண்ணாவிற்கும், பிள்ளைகளுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.🙏
-
சிறீதரனை பதவிவிலகுமாறு பணிப்புரை! எடுக்கப்பட்ட அதிரடி தீர்மானம்
நான் அறிந்தவரையில் இவரது எடுபிடிகளும் கோடீஸ்வரர்களாகிக் கொண்டு தான் இருக்கிறார்கள்..யாழ் கச்சேரிக்கு ஏதாவது அலுவல் செய்யப் போனால் அங்கு லட்சக்கணக்கில் கேட்கிறார்களாகம்.அதுவும் பெண்கள்.ஆகவே சிறிதரன் மற்றும் இன்னும் சிலரை மக்கள் வீட்டுக்கு அனுப்புவதே சிறந்தது.
-
எனது அரசியல் பயணம் தடையின்றித் தொடரும்.. டக்ளஸ் தேவானந்தா
தீவூப்பகுதியில் காணாமல் போன ஒவ்வொரு பெண் பிள்ளைகளின் அவலக் குரல்களும் இவரது அரசியல் பற்றி சொல்லும் என்று நினைக்கிறேன்.
-
இலங்கையைச் சுற்றும் ஆபத்து - யாழ். பல்கலையின் புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா விடுக்கும் முக்கிய தகவல்கள்
இன்று மாலை 5.05 மணியளவில் உடுதும்பர பகுதியில் 2.2 ரிக்டர் அளவுகோலில் சிறிய அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.. Rj.Chandru Report
-
யாழில் 3012 குடும்பங்களுக்கு மலசலக்கூட வசதி இல்லை!
இதில் அனைவரும் ஒன்று சேர்ந்து உதவ வேண்டும் என்பது எனது விருப்பம் ..சோ..முடிந்தவர்கள் யாயினி பாக்கிற வேலை பாருங்களன் என்று மனதுக்குள் தன்னும் திட்டாமல் பங்காளிகளாக மாறுவீர்கள் என்று நம்புறன்.மாதந்தம் கொண்டாங்களுக்கு மொய் எழுதிறதில் கொஞ்சம், சுற்றுலாக்களுக்கு ரிக்கற் போடுவதில் கொஞ்சம்,உணவங்களுக்கு போறதில் கொஞ்சம் ,புத்தகங்களுக்கு போறதில் கொஞ்சம் ,இப்படி நிறைய செலவுகளிலிருந்து சிறிதளவு எங்கள் மக்களுக்காகவும் ஒதுக்குவோமே..✍🤭
-
முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
இல்லத் தாத்தா..ஏராளன் புலரில் தற்போது எப்படி இயங்குகிறாரோ அப்படியே விடுவது தான் சிறந்தது..பாவம் தன் முயற்சியால் ஏற்படுத்திக் கொண்ட விடையத்திற்கு எந்த வித இடையூறும் இல்லாமல் இருக்க வேணும்.ஏராளனுக்கு புதியவற்றை இணைக்க விருப்பம் இருந்தாலும் போக, போக அது ஒரு தலையிடியாக மாறக் கூடாது.அவர்களது மற்ற உறுப்பினர்களும் எல்லாவற்றுக்கும் ஒத்துளைப்பார்கள் என்று இல்லை.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
தயவு செய்து இந்த ஆண்டு யாழ் புதிப்புக்கும் போது அல்லது நேரம் கிடைக்கும் போது உள் பெட்டி திருத்தம் செய்து தாங்கள்.கடந்த காலங்களில் திருத்தம் செய்த போதிருந்தே முன் பிருந்த மாதிரி ஒன்றுமே பதி விட முடியாமல் போய் விட்டது..நான் சிரமம் தர விரும்பாத காரணத்தினால் ஒன்றும் கேட்பதிலலை.நன்றி
-
கனடாவில் சிகிச்சைக்கு சென்ற யுவதியிடம் தமிழ் மருத்துவர் பாலியல் சேட்டை..!
- வெனிசுலா ஜனாதிபதி மதுரோவும் அவரது மனைவியும் அமெரிக்க இராணுவத்தினரால் கைது!
வெனிசுலாவிலுள்ள அமெரிக்கப் பிரஜைகளுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை written by admin January 3, 2026 அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் (U.S. State Department) இன்று (ஜனவரி 3, 2026) வெனிசுலாவில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழலைக் கருத்திற்கொண்டு, அங்குள்ள அமெரிக்கப் பிரஜைகளுக்கு மிக முக்கியமான பாதுகாப்பு எச்சரிக்கையை (Security Alert) விடுத்துள்ளது. தலைநகர் காரகாஸில் இன்று அதிகாலை நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தனது பயண ஆலோசனையை (Travel Advisory) மிக உயர்ந்த நிலைக்கு (Level 4: Do Not Travel) உயர்த்தியுள்ளது. 📝 எச்சரிக்கையின் முக்கிய அம்சங்கள்: Shelter in Place: வெனிசுலாவில் தற்போது இருக்கும் அனைத்து அமெரிக்கப் பிரஜைகளும் பாதுகாப்பான இடங்களுக்குள்ளேயே (வீடுகள் அல்லது தங்கும் இடங்கள்) இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பாதுகாப்புச் சூழல் சாதகமாக இருக்கும்போது, உடனடியாக வெனிசுலாவை விட்டு வெளியேறுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர். 2019 முதல் காரகாஸில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மூடப்பட்டுள்ளதால், அவசர காலங்களில் அமெரிக்க அரசாங்கத்தால் நேரடி உதவிகளை வழங்க முடியாது என்பதை இராஜாங்கத் திணைக்களம் தெளிவுபடுத்தியுள்ளது. குண்டுவெடிப்புகள், சிவில் அமைதியின்மை மற்றும் தன்னிச்சையான கைதுகள் போன்ற அபாயங்கள் இருப்பதால் எக்காரணம் கொண்டும் வெனிசுலாவுக்குப் பயணம் செய்ய வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் புதிய உத்தரவுப்படி, ஜனவரி 1, 2026 முதல் 39 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு அமெரிக்காவுக்குள் நுழையப் புதிய விசா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதில் மாலி, புர்கினா பாசோ, நைஜர் உள்ளிட்ட நாடுகள் அடங்கும். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளபடி, “Operation Absolute Resolve” என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸ் ஆகியோர் அமெரிக்கச் சிறப்புப் படைகளால் கைது செய்யப்பட்டு, நியூயோர்க்கிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அமெரிக்க மத்திய விமானப் போக்குவரத்து நிர்வாகம் (FAA), வெனிசுலாவின் வான்பரப்பில் (Maiquetia FIR) அனைத்து அமெரிக்க வணிக மற்றும் சிவில் விமானங்கள் பறப்பதற்கு முழுமையான தடை விதித்துள்ளது. தொடர்ச்சியான இராணுவ நடவடிக்கைகள் மற்றும் “ஜிபிஎஸ் ஜாமிங்” (GPS Jamming) காரணமாக விமானப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இபிரியா (Iberia), ஏவியன்கா (Avianca) உள்ளிட்ட பல சர்வதேச விமான நிறுவனங்கள் காரகாஸிற்கான சேவைகளை நிறுத்தியுள்ளன. அத்துடன் வெனிசுலாவில் சிக்கியுள்ள வெளிநாட்டுப் பிரஜைகளைப் பாதுகாப்பாக வெளியேற்ற அந்தந்த நாடுகள் தீவிர முயற்சிகளை எடுத்து வருகின்றன: இந்த நிலையிலேயே காரகாஸில் உள்ள அமெரிக்கத் தூதரகம் தனது பிரஜைகளை “இருந்த இடத்திலேயே இருக்குமாறு” (Shelter in Place) உத்தரவிட்டுள்ளது. நிலைமை சீரானதும், இராணுவப் பாதுகாப்புடன் கூடிய வெளியேற்ற நடவடிக்கைகள் (Evacuation) முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரித்தானிய வெளியுறவுத்துறை (FCDO), வெனிசுலாவில் உள்ள தனது நாட்டு மக்களை அவசர காலத் திட்டங்களை (Personal Emergency Plan) தயார் நிலையில் வைத்திருக்குமாறும், எல்லைகள் மூடப்பட வாய்ப்புள்ளதால் எச்சரிக்கையாக இருக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது. இத்தாலி, பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் போன்ற நாடுகள் தமது பிரஜைகளின் விபரங்களைச் சேகரித்து வருகின்றன. கொலம்பியாவில் உள்ள தமது தூதரகங்கள் ஊடாக இந்த மீட்புப் பணிகளை ஒருங்கிணைக்கத் திட்டமிட்டுள்ளன. வெனிசுலாவிலிருந்து அதிகப்படியான அகதிகள் (Refugees) வரக்கூடும் என்பதால், கொலம்பியா எல்லையில் தனது இராணுவத்தைத் தயார் நிலையில் நிறுத்தியுள்ளது. இதேவேளை ரஷ்யா, சீனா, ஈரான் மற்றும் கியூபா ஆகிய நாடுகள் அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை “இறையாண்மை மீதான அத்துமீறல்” எனக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஆனால் அர்ஜென்டினா அதிபர் ஜேவியர் மைலி போன்ற சில தலைவர்கள் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஐநா பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ் இது ஒரு “ஆபத்தான முன்னுதாரணம்” எனக் கவலை தெரிவித்துள்ளார். Tag Words: #TravelAlert #StateDepartment #USVenezuelaConflict #ShelterInPlace #Level4TravelAdvisory #CaracasAttacks #InternationalSecurity #TamilNewsWorld https://globaltamilnews.net/2026/225599/- 🏥 பாரதிராஜா அவசர சிகிச்சைப் பிரிவில் ) அனுமதிக்கப்பட்டுள்ளார்
🏥 பாரதிராஜா அவசர சிகிச்சைப் பிரிவில் ) அனுமதிக்கப்பட்டுள்ளார் written by admin January 3, 2026 இயக்குநர் இமயம்’ பாரதிராஜா அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த டிசம்பர் 27, 2025 அன்று பாரதிராஜாவுக்கு திடீரென மூச்சுத்திணறல் (Respiratory problems) மற்றும் சோர்வு ஏற்பட்டதையடுத்து, அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில் இன்று (ஜனவரி 3, 2026) அவருக்குத் திடீரென மூச்சுத்திணறல் அதிகரித்ததால், மேல் சிகிச்சைக்காக சென்னை எம்ஜிஎம் (MGM) மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்குள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை அளித்து வருகின்றனர். நீர்ச்சத்து குறைபாடு மற்றும் நுரையீரல் தொடர்பான தொற்றுகள் காரணமாக அவர் சிகிச்சை பெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பயப்படும்படி ஏதுமில்லை என்றும், வழக்கமான உடல்நலப் பரிசோதனை மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே அவர் மருத்துவமனையில் இருப்பதாக அவரது தரப்பினர் முன்னதாகத் தெரிவித்தனர். இருப்பினும், தற்போது அவர் ஐசியூவில் இருப்பதால் ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர். 💔 பின்னணி: கடந்த 2025-ஆம் ஆண்டு மார்ச் மாதம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா காலமானார். மகனின் மறைவு பாரதிராஜாவை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கியது. இதன்பின்னர் அவர் மலேசியாவில் உள்ள தனது மகள் வீட்டில் சில காலம் தங்கியிருந்துவிட்டு அண்மையில்தான் சென்னை திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது. 84 வயதான பாரதிராஜா ’16 வயதினிலே’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகி ஏராளமான வெற்றி திரைப்படங்களை கொடுத்தார். கிராமத்து கதைகளை மையப்படுத்தி திரைப்படங்கள் எடுத்து பெரிய ஹிட் கொடுத்த அவா் பல திரைப்படங்களில் நடித்துள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது Tag Words: #Bharathiraja #MGMHospital #ChennaiNews #KollywoodUpdates #IyakkunarImayam #GetWellSoon #TamilCinema #HealthUpdate #BreakingNewsTamil https://globaltamilnews.net/2026/225602/ - வெனிசுலா ஜனாதிபதி மதுரோவும் அவரது மனைவியும் அமெரிக்க இராணுவத்தினரால் கைது!
Important Information
By using this site, you agree to our Terms of Use.