Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாயினி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by யாயினி

  1. ஈரான் மீதான தாக்குதலை கண்டித்து இங்கு அந்த நாட்டவர்கள் போரட்டத்தில் இறங்கி உள்ளதாக காலையில் அறிந்தேன்.நான் அடிக்கடி டவுண்ரவுன் பக்கம் போவதால் யாராவது ஏதாச்சும் எடுத்து சொல்வார்கள். பொருட்களின் விலைகளும் கூடலாம்.✍
  2. கனடாவில் இந்த தடவை பனி கொட்டி இன்னும் சிலர் இயல்பாக வெளியில் போக இயலாத நிலை.சில இடங்களில் பனியை அள்ளி எடுக்கும் போது மண்ணையும் சேர்த்து எடுக்கபட்டுள்ளதால் பஸ் தரிப்பு இடங்களுக்கு அருகில் இலகுவாக வயோதிபர்கள், இயலாதவர்கள் தெரிலிலிருந்து கரைக்கு மாறிக் கொள்ள இயலாத நிலையும் ஏற்பட்டுள்ளது.பஸ் தரிப்பு இடங்களுக்கு அருகில் மிகவும் அவதானமாக பார்த்து போவது நன்று.
  3. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் 12 விமானச் சேவைகள் ரத்து written by admin March 1, 2026 வளைகுடா பிராந்தியத்தில் வான்பரப்பு மூடப்பட்டுள்ளதால், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் துபாய், ரியாத், தம்மாம் மற்றும் குவைத் உள்ளிட்ட நகரங்களுக்கான 12 விமானச் சேவைகளை ரத்து செய்துள்ளது. பயணிகள் விமான நிலையத்திற்குப் புறப்படுவதற்கு முன் விமான நிறுவனத்தைத் தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். பயணிகளின் பாதுகாப்பு மற்றும் நலனைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது. ரத்து செய்யப்பட்டுள்ள விமானங்களின் விபரங்கள்: விமான இலக்கம் புறப்படும் இடம் – சேருமிடம் UL 231 கொழும்பு – துபாய் UL 232 துபாய் – கொழும்பு UL 225 கொழும்பு – துபாய் UL 226 துபாய் – கொழும்பு UL 217 கொழும்பு – தோஹா UL 218 தோஹா – கொழும்பு UL 253 கொழும்பு – தம்மாம் UL 254 தம்மாம் – கொழும்பு UL 265 கொழும்பு – ரியாத் UL 266 ரியாத் – கொழும்பு UL 229 கொழும்பு – குவைத் UL 230 குவைத் – கொழும்பு பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியங்களுக்கு வருத்தம் தெரிவித்துள்ள ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், மேலதிக விபரங்களுக்குத் தமது உத்தியோகபூர்வ இணையத்தளம் அல்லது அழைப்பு மையத்தைத் (Call Center) தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. வான்பரப்பில் ஏவுகணைத் தாக்குதல் அபாயம் உள்ளதாலேயே, பயணிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடாது என்ற நோக்கில் இந்த ரத்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ரத்து செய்யப்பட்ட விமானங்களுக்கான மாற்றுப் பயணத் திகதிகள் அல்லது பணம் மீளப் பெறுவது (Refund) குறித்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. #FlightAlert #SriLanka #SriLankanAirlines #MiddleEastWar #TravelUpdate #ColomboAirport https://globaltamilnews.net/2026/229935/
  4. இந்த தாக்குதல் ஆரம்பித்ததின் பின்னர் யாழ்ப்பாண மக்கள் பெற்ரோலுக்கு வரிசைக்கு நிக்கிறார்கள்.
  5. பிறந்த வாழ்த்துக்கள் சிறியண்ணா.அடிக்காடி மருத்துவமனை பக்கம் போகாமல் நலமோடு வாழ வேண்டுகிறேன்.🖐அடுத்த தேர்தலில் செலவிடுவற்காக காசு சேர்க்க லண்டன் வரவிருக்கிறாராம் அர்ச்சுணா.கூப்பிடுங்கோ ...😀
  6. மட்டக்களப்பு மாநகர எல்லைக்குள் தொடரும் காட்டு யானைகள் அட்டகாசம் 22 Feb, 2026 | 04:28 PM மட்டக்களப்பு மாநகர எல்லைக்குட்பட்ட மாந்தீவு பகுதிக்குள் ஏற்கனவே புகுந்திருந்த கட்டு யானைகள் ஞாயிற்றுக்கிழமை (22) திருப்பந்துறை பிரதேசத்திற்குள் நுழைந்து அட்டகாசம் ஏற்படுத்தியுள்ளன. கடந்த ஐந்து தினங்களாக தொடர்ந்து அப்பகுதியில் காட்டு யானைகள் உட்பகுந்து நெற்பயிர்கள் மற்றும் ஏனைய பயிர் வகைகளையும் துவம்சம் செய்வதாக அப்பகுதி பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர். யானைகள் மனித மோதலுக்கு நிரந்தர தீர்வு இதுவரையில் எட்டப்படவில்லை என மக்கள் அங்கலாய்க்கின்றனர். இதேவேளை வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள உத்தியோகஸ்த்தர்களும், அப்பகுதி பொதுமக்களும் இணைந்து குறித்த காட்டு யானைகளை அப்பகுதிகளிலிருந்து வெளியேற்ற நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு காட்டு யானைகளில் அட்டகாசத்தாலும் நடமாட்டத்தாலும், வழமை போன்று தமது அன்றாட செயற்பாடுகளில் ஈடுபட முடியதுள்ளதாகவும், மிகுந்த அச்சத்தின் மத்தியிலேயே தாம் நடமாடுவதாகவும் அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்தனர். மட்டக்களப்பு மாநகர எல்லைக்குள் தொடரும் காட்டு யானைகள் அட்டகாசம் | Virakesari.lk
  7. நூற்றாண்டை எட்டும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழ் நாவல்! written by admin February 22, 2026 யாழ்ப்பாணத்துப் பிள்ளையார் கோயில் திருப்பணிக்கு உதவினார் மலாயாவின் முஸ்லிம் மன்னர்! 1927 இல், மலாயாவில் வெளியான புலம்பெயர்ந்த ஈழத்தமிழ் நாவல் ஒன்று, இம்மாதம் யாழ்ப்பாணத்தில் மீளவும் அச்சிடப்பட்டு வெளியாகின்றது. சாம்பசிவம் – ஞானாமிர்தம் என்ற இந்த நாவலுக்குக் கதைக்களம் அன்றைய மலாயா-சிங்கப்பூரும் இலங்கையும். நாவலை எழுதியவர், யாழ்ப்பாணம், காரைநகர், சம்பந்தர்கண்டியைச் சேர்ந்த அருணாசலம் நாகலிங்கம் (1901-1979). அவர், அப்பொழுது, கோலப்பிலா திறைசேரியில் முதன்மை எழுதுவினைஞராகப் பணியாற்றிக்கொண்டிருந்தார். நாவல், கோலாலம்பூரின் லாஸர் அண்ட் சன்ஸ் அச்சகத்தில் 1000 பிரதிகள் அச்சிடப்பட்டது. இந்த நாவலின் விற்பனையால் வரும் பணத்தில், காரைநகர், மருதடிப் பிள்ளையார் கோயிலின் பாழடைந்த திருக்குளத்தைச் சீரமைத்துக் கட்ட நாவலாசிரியர் எண்ணியிருந்தார்; செய்துமுடித்தார். கோயில் என்பதற்கு அப்பால், இக்குளத்தின் ஊர்ப்பயன்பாடு, நீர்ப்பயன்பாடு, கால்நடைகளின் பயன்பாடு என்பன அவர் சிந்தனையில் முன்னின்றதை நூன்முகத்தால் அறிந்துகொள்ளலாம். புலம்பெயர்ந்த ஈழத்தமிழ் எழுத்தை ஊக்குவித்து, அக்காலத்தில் 100 வெள்ளி பணம் கொடுத்து, பிள்ளையார் கோயில் திருப்பணிக்கு உதவியவர், அன்றைய மலே கூட்டாட்சி அரசுகளின் (Federated Malay States) நகரி செம்பிலான் (Negeri Sembilan) மன்னராக இருந்த, சேர். முகமது ஷா. பின்னாளில் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியரான, R. P. சேதுப்பிள்ளை; அக்காலத்தில் ஈழத்து முன்னணி நாவலாசிரியரும் இந்துசாதனப் பத்திராசிரியருமான (உலகம் பலவிதம்) ம. வே. திருஞானசம்பந்தப்பிள்ளை; யாழ்ப்பாண வரலாற்றாய்வாளர், செ. இராசநாயக முதலியார்; புனித பத்திராசிரியர் கல்லூரித் தமிழ்ப் பண்டிதர், வ. சு. இராச ஐயனார், ஆகியோர் நாவலுக்கு முன்னுரை வழங்கியிருந்தனர். சாதி, சமயம், சமூகம், சீதனம், மதுவையும் புலாலையும் தவிர்த்தல், பண்பாட்டு அடிமைத்தனம், பயிர்த்தொழில், உள்ளூர் உற்பத்தி போன்ற விடயங்களில், காந்தியக் கருத்துக்களை, தமிழ்ச் சிந்தனை மரபுப் பின்னணியுடனும், இலக்கிய மேற்கோள்களுடனும் நாவலாசிரியர் முன்வைக்கிறார். இரண்டாம் உலகப்போரின் யப்பானிய ஆட்சிக்காலத்தில், கோலப்பிலா மருத்துவ மனைக்கு முதன்மை எழுதுவினைஞராகப் பணிமாறிய அவர், சிங்கப்பூரில் நிறுவப்பட்ட சுபாஸ் சந்திர போஸின் இந்திய அரசுக்கும் ஆதரவளித்துள்ளார். 1947 இல் காரைநகர் திரும்பிவிட்டார். கோலப்பிலாவில் தமிழ்ப்பள்ளி நிறுவி அதன் முகாமையாளராகவும், முருகன் கோயில் முகாமையாளராகவும் இயங்கிய இந்த நூலாசிரியர், ஊரிலும் காரைநகர்ச் சிவன் கோயில் குடமுழுக்கு (1970), அனைவருக்கும் ஆலய வழிபாட்டுரிமை, நூற்பதிப்புகள் என, பல்வேறு சமய, சமூகப் பணிகளில் பங்குகொண்டு, 1979 இல் இயற்கை எய்தினார். 25-02-1901 இல் பிறந்த நாகலிங்கம் அவர்களுக்கு இது 125 ஆவது ஆண்டு. அவரை, 1975 இல் மல்லிகை பத்திரிகை பேட்டிகண்டு, அட்டைப்படத்துடன் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது. படங்களுடன் வெளியான முதலாவது ஈழத்தமிழ் நாவல் அவருடையது என சில்லையூர்ச் செல்வராசன் குறிப்பிட்டுள்ளார். இந்த நாவல் ஏற்கனவே வலைத்தளங்களில் பதிவிடப்பட்டுள்ளது. இப்பொழுது மீளச்சில் வெளியிடுபவர், நா. பாலக்கிருஷ்ணன், சம்பந்தர்கண்டி,காரைநகர். அம்பலம். நூற்றாண்டை எட்டும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழ் நாவல்! - Global Tamil News
  8. 36 ஆண்டு கால ஏக்கம் – மயிலிட்டி காணிக்கை மாதா ஆலயத்திற்கு அனுமதி கிடைக்குமா? written by admin February 22, 2026 மயிலிட்டி மக்களின் ஆன்மீக அடையாளமான புனித காணிக்கை மாதா ஆலயத்தில் வழிபாடு செய்வதற்கு, கடந்த 36 வருடங்களாக அனுமதி மறுக்கப்பட்டு வரும் அவலநிலை தொடர்கிறது. இம்முறையாவது திருவிழாவை நடத்த அனுமதி கிடைக்குமா என்ற ஏக்கத்துடன் மக்கள் காத்திருக்கின்றனர். 📍" width="16" height="16" style="box-sizing: border-box; outline: 0px; margin: 0px; padding: 0px; border: 0px; max-width: 100%; vertical-align: top; height: auto;"> இந்த ஆலயம் 1850 ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்ட மிகப்பழைமையான கத்தோலிக்க ஆலயமாகும். சுமார் 52 பரப்பு நிலப்பரப்பில் ஆலயம், மயிலிட்டி றோ.க பாடசாலை, கன்னியர் மடம், பங்கு பணிமனை மற்றும் தோட்டக்காணிகள் அமைந்துள்ளன. 1990-ஆம் ஆண்டு உள்நாட்டு யுத்தம் காரணமாக மக்கள் வெளியேறிய பின், இப்பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக்கப்பட்டு இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இந்த நிலையில் திருவிழாவை ஆலயத்திலேயே கொண்டாடுவதற்கு அனுமதி கோரி ஜனாதிபதி, கடற்தொழில் அமைச்சர், வடமாகாண ஆளுநர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இராணுவத் தளபதி எனப் பல தரப்பினரிடம் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், இதுவரை இராணுவத் தரப்பிலிருந்து முறையான சாதகமான பதில்கள் கிடைக்காததால், இம்முறையும் திருவிழா தடைபட்டு விடுமோ என்ற அச்சத்தில் மயிலிட்டி மக்கள் உள்ளனர். “எம் பாட்டன் பூட்டன் தொழுத ஆலயம், எம் மண்ணின் அடையாளம் மீண்டும் எமக்குக் கிடைக்க வேண்டும்” – இதுவே மயிலிட்டி மக்களின் ஒரே கோரிக்கையாக உள்ளது. 36 ஆண்டு கால ஏக்கம் - மயிலிட்டி காணிக்கை மாதா ஆலயத்திற்கு அனுமதி கிடைக்குமா? - Global Tamil News
  9. மீண்டும் நிலவுக்கு மனிதர்கள்! நாசாவின் வரலாற்றுப் பயணம்! written by admin February 22, 2026 அரை நூற்றாண்டு கால காத்திருப்பு முடிவுக்கு வருகிறது! நாசா (NASA) தனது அதிரடித் திட்டமான ஆர்டெமிஸ் (Artemis) திட்டத்தின் மூலம், நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் மனிதர்களை நிலவுக்கு அனுப்பத் தயாராகி வருகிறது. 📍" width="16" height="16" style="box-sizing: border-box; outline: 0px; margin: 0px; padding: 0px; border: 0px; max-width: 100%; vertical-align: top; height: auto;"> இது நிலவில் தளம் அமைப்பதற்கான முதல் படியாகக் கருதப்படுகிறது. இந்தப் பயணத்தில் முதல் முறையாக ஒரு பெண் விண்வெளி வீரரும், ஒரு கறுப்பின விண்வெளி வீரரும் நிலவைச் சென்றடைய உள்ளனர். வெறும் தரையிறங்குவது மட்டுமல்லாமல், செவ்வாய் கிரகப் பயணத்திற்கான ஒரு முன்னோட்டமாகவும் இந்தத் திட்டம் அமையவுள்ளது. உலகின் சக்திவாய்ந்த SLS (Space Launch System) ரொக்கெட் மற்றும் ஓரியன் (Orion) விண்கலம் இதில் பயன்படுத்தப்படுகின்றன. பாதுகாப்பு காரணங்கள் மற்றும் தொழில்நுட்ப சோதனைகளைப் பொறுத்து ஏவுதளத் தேதிகளில் மாற்றங்கள் இருக்கலாம். இது விண்வெளி ஆய்வில் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கமாகும்! 🚀" width="16" height="16" style="box-sizing: border-box; outline: 0px; margin: 0px; padding: 0px; border: 0px; max-width: 100%; vertical-align: top; height: auto;"> #NASA #Artemis #MoonMission #SpaceNews #ScienceTamil #Astronauts #MoonLanding #SpaceExploration #நாசா #விண்வெளி #நிலவு #ஆர்டெமிஸ் மீண்டும் நிலவுக்கு மனிதர்கள்! நாசாவின் வரலாற்றுப் பயணம்! - Global Tamil News
  10. வாழ்நாள் சாதனையாளர் விருதினைப் பெற்ற ஈழத்து மெல்லிசை மன்னர் M.P.பரமேஷ் Dec 17, 2020 அன்றும் இன்றும் என்றும் இசையை தனது வாழ்க்கையாக்கியவர். என்றும் நான் என் இசைப் பயணத்தை நிறுத்தவில்லை நிறுத்தப் போவதுமில்லை என்று இன்றும் உற்சாகத்துடன் தினமும் பாடல்கள் எழுதி இசையமைத்து பாடி வருகிறார் ஈழத்து மெல்லிசை மன்னர் M.P.பரமேஷ். தனது காதலிக்கு எழுதிய ‘உனக்கு தெரியுமா நான் உன்னை நினைப்பது’ என்ற கவிதையை, இசையமைத்து, காதலிக்காக பாடி, அதை இலங்கையின் முதலாவது தமிழிசைத் தட்டில் பதிவு செய்து வெளியிட்டவர் இவர். அவரின் காதலி “சங்கீத பூஷனம்“ சிவமாலினிதான் இவர் சாதனை புரிய காரணமானவர் என்றே சொல்லலாம். இருவருக்கும் திருமணம் ஆனதும் மாலினி அவர் கணவருடன் சகல மேடைகளிலும் பாடி வந்தார். அவர் ஒரு ‘சங்கீத பூஷணம்’ என்பதால் சினிமா பாட்டுகள் பாடும் பொழுது மிகவும் எதிர்ப்புகளை சந்தித்தார். ஒரு ‘சங்கீத பூஷணம்’ கர்னாடக சங்கீத கச்சேரிகளில் மட்டும்தான் பாட வேண்டும். சினிமா பாடல்கள் பாடி சங்கீதத்தை அவமதிக்கக் கூடாது என்றெல்லாம் குற்றம் சாட்டப்பட்டார். அதையெல்லாம் பொருட்படுத்தாமல் ‘சினிமா பாடலும் இசைதான்’ என்று பதில் சொல்லிவிட்டு தன் கணவருடன் தொடர்ந்து பாடினார் மாலினி. மாலினி மீது வைத்த காதல்தான் ‘உனக்கு தெரியுமா நான் உன்னை நினைப்பது’ பாடல் உருவாகி இலங்கையின் இசை வரலாற்றில் அழிக்க முடியாத சாதனை படைக்க காரணமான பாடலாகும். அதைத் தொடர்ந்து M.P.பரமேஷ் நீயின்றி நிலவு போகாதே தூர போகாதே நீ வாழுமிடமெங்கே மனமாளிகை ரோஜா எழுதுகிறேன் பாட்டு அழைக்குமோசை கேக்கலையா பாடலெனக்கிது முதல் தரம் தான் என்ற பாடல்களையும் எழுதி, இசையமைத்து பாடினார். இந்த 8 பாடல்களையயும் 3 இசைத் தட்டுகளில் வெளியிட்டார். இவைகளில் முதலாவதாக வெளியிடப்பட்ட இசைத் தட்டில் இருந்த ‘உனக்கு தெரியுமா’ பாடல் சாதனை படைத்தது. அது மட்டுமல்லாது 4-வது இசைத் தட்டில் சிங்கள பாடல்களையும் வெளியிட்டார். இந்த சிங்கள பாடல்கள் ஏற்கனவே மற்ற 3 தமிழிசை தட்டுகளிலும் M.P.பரமேஷ் அவர்களின் வரிகளிலும், இசையமைப்பிலும் வெளிவந்த பாடல்கள்தான். பின் வரும் இந்த 4 பாடல்களும் தமிழிலிருந்து சிங்கள மொழிக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பாடல்களாகும். உனக்கு தெரியுமா / Thigu neela asthekai பாடலெனக்கிது முதல் தரம் தான் / Agasagevan அழைக்குமோசை கேக்கலையா / sulanga selavanai மனமாளிகை ரோஜா / Thura arte athithe ஒரு இசையமைப்பாளர் பாடகர் கவிஞர் என்பதையும் தாண்டி அந்த காலத்தில் வெளியிடப்பட்ட இசைத் தட்டுகள், இன்டர்நெட் மற்றும் எந்த டெக்னாலஜி இல்லாத காலத்தில் பட்டி தொட்டி எல்லாம் ஒலிக்க செய்தார். இவரது புகழ் இந்தியாவரை ஒலித்தது. இந்த இசைத் தட்டுகளை வெளியிட வேண்டிய சிந்தனை எப்படி வந்தது என்று கேட்டோம். “இசைத் தட்டுகளை வெளியிட வேண்டிய காரணம் எனது இசைக் குழு தொடர்ந்து இயங்காமல் போனதுதான். எனது பாடசாலை தோழர்களையும், மற்றும் சில இசைக் கலைஞர்களையும் இணைத்துதான் முதலில் எனது இசைக் குழுவை ஆரம்பித்தேன். அதில் பெரிய வருமானம் வரவில்லை. எனக்கும் அது குறிக்கோளாக இல்லை. ஆனால், ஒவ்வொரு மனிதருக்கும் வாழ்வில் வயதுக்கேற்ற மாற்றம் வரும். எனது இசைக்குழு நண்பர்கள் அவரவர் வாழ்க்கையை கவனிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். வேலைக்கு சென்று பணம் சம்பாதிக்கவும், சிலருக்கு வெளிநாடு செல்லவும், கப்பலுக்கு வேலைக்கு செல்லவும் வாய்ப்புகள் கிட்டியது. அவர்கள் என் இசைக் குழுவை விட்டு சென்றதும் புதிய தரமான கலைஞர்கள் கிடைக்கவில்லை. கிடைத்தால் அவர்கள் நிலையாக எம்முடன் இருக்க முடியவில்லை. இலங்கையில் இசைக் கலைஞர்கள் பெரியளவில் கிடைப்பது கஷ்டம். அதனால் எனது இசைக் குழு தொடர்ந்து இயங்க முடியவில்லை. இந்த இசை நிகழ்ச்சிகளில் நாம் பெருமளவில் சினிமா பாடல்களை பாடினாலும் நான் எனது சொந்த பாடல்களையும் இயற்றி இசையமைத்து பாடினேன். அந்த பாடல்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன. அதில் சில ‘உனக்கு தெரியுமா’, ‘மீனிசை பாடிவரும்’, ‘யாழ் பாடி யாழ்பணம்’, ‘திருகோணமலை எங்கள் நாடு’ என்ற பாடல்கள் மிகவும் பிரபலமானவை. “இந்த பிரபலமான பாடல்களை இசைத் தட்டுகளில் பதிவு செய்து விடு” என்று எனக்கு மூத்த கலைஞர்களின் அறிவுரை கிடைக்க அதை பின்பற்றினேன். இசைத் தட்டுகள் வெளியிடும் முன் “இசைத் தென்றல்” என்ற பெயரில் மேடை நிகழ்ச்சிகளை செய்து மிகவும் புகழ் பெற்றோம். அப்போது எனது அம்மாவின் வேண்டுகோளுக்கிணங்கி என் தம்பியை எம்முடன் இணைத்துக் கொண்டேன். தம்பி மேடை நிகழ்ச்சிகளில் வாத்தியக் கருவி(keyboard) வாசிப்பவராக இருந்தார். அத்துடன் வாத்தியக் கருவி ஒருங்கமைப்பாளராக(orchestrator)வும் இருந்தார். அவரை மூத்த கலைஞர்கள் வழி நடத்தினார்கள். மூத்த கலைஞர்களிடம் எனக்கு என்ன தேவை என்று சொல்லி விடுவேன், அவர்கள் தமது வேலைகளை திறம்பட செய்வார்கள். நான் பாடல் வரிகள் எழுதுவது, இசையமைப்பு, பாடுவது, விளம்பர வேலைகள் பொருளாதார சிரமங்களை சமாளிப்பது என்று பொறுப்புக்களை கவனித்ததால் எனது படிப்பை நிறுத்தி விட்டு கொழும்பு சென்று தங்கி இசைத் தட்டு வெளியிடும் முன்னேற்றப்பாடுகளில் தீவிரமாக இருந்தேன். என் நண்பனும், எனது இசைக் குழுவில் முக்கிய நபராக இருந்த மகேஷ் எனக்கு பொருளாதார ரீதியில் மிகவும் உதவி செய்தார். என் தம்பியின் படிப்பு கெட்டுவிட கூடாதென்பததிற்காக நான் அவரை தொந்தரவு செய்யவில்லை. நான் இசையமைத்த பாடல்களை பதிவு செய்யும்பொழுது, இலங்கை வானொலியில் வேலை செய்த அத்தனை இசைக் கலைஞர்களையம் நாடினேன். அவர்கள் மிகவும் திறமையான வாத்திய இசைக் கலைஞர்கள். அந்தக் காலத்தில் அவர்களுக்கு கட்டுப்பாடு இருந்தது, அதாவது, அவர்கள் இலங்கை வானொலிக்கு மட்டுமே பணி புரிய வேண்டும் என்பது தான். நான் தேவையான நபர்களை தொடர்பு கொண்டு அனுமதி பெற்று அத்தனை வாத்திய கலைஞர்களையும் எனது பாடல்களை பதிவு செய்யும்பொழுது அவர்களை பயன்படுத்தி ஒழுங்கு செய்தேன். அந்த கலைஞர்கள் ஆங்கில notation வாசிக்கும் வழக்கமற்றவர்கள். ஹிந்துஸ்தானிய notationதான் எனது பாடல்கள் பதிவு செய்யும் பொழுது பாவிக்கப்பட்டன. ஹிந்துஸ்தானிய ஸ்வாரத் தட்டுகளை எனக்கோ என் தம்பிக்கோ எழுத தெரியாது. நான் அத்தனை கலைஞர்களுடனும் இருந்து எனக்கு தேவையானவற்றை கேட்டும், சொல்லியும், பாடியும் பெற்றுக் கொண்டேன். அந்த நேரத்தில் சகல விதத்திலும் எனக்கு உதவி செய்தவர் ஒரு பெரும் திறம் கலைஞர் Pappa Myskin அவர்கள். மூத்த கலைஞர்களாகிய இலங்கை வானொலி கலைஞர்கள் தான் எனது பாடல்களுக்கு சினிமா பாடல்களின் பின்னணி இசைத் தரம் இணைத்தவர்கள். ஆனால், இந்த நேரத்தில்.. இப்போதைய காலக்கட்டத்தில் எனது தம்பி “அனைத்துப் பாடல்களையும் நான்தான் இசையமைத்தேன்…” என்று சொல்வது பச்சைப் பொய். அத்துடன் “நான்தான் சகல ஸ்வாரத் தட்டுகளை notation எழுதினேன்” என்று சொல்வது அந்த ஹிந்துஸ்தானிய notation-களை எழுதிய சகல கலைஞர்களையும் அவமானப்படுத்தும் பொய்யாகும். இதை, நான் இங்கே தெளிவாக பதிவு செய்கிறேன். இசைத் தட்டுகளில், இசையமைப்பில் ஏன் அவர் பெயர் இருக்கின்றது என்று சிலர் கேட்டனர். தனது பெயரை போடாமல்விட்டால் பிரிந்துவிடுவேன் என்று சொல்வார். அதனால்தான் போட வேண்டியதாகிவிட்டது. எனக்குத் தெரியாமல் record-ல் பெயர்களை மாற்றினார். records print ஆகி வரும்பொழுதுதான் நானே அதைப் பார்த்தேன். அப்போதே எனக்கு அதிர்ச்சியாகத்தான் இருந்தது. ஆனாலும், எதையும் மாற்ற முடியவில்லை… அதற்கான பணம் அப்போது என்னிடம் இல்லை. இசையமைப்பில் வேண்டுமென்றே என் அனுமதியின்றி அவர் பெயரையும் போட்டுக் கொண்டார். என் பெயரை அதிலிருந்து அவர் அழிக்காமல்விட்டது எனது அதிஷ்டம்தான். எல்லாவற்றையும் தம்பிதானே என்று விட்டு விட்டேன். தனது பெயரை உரிமை இல்லாமல் போட்ட பின்னரும் என்னை விட்டு பிரிந்து போய் சொந்தமாக இசைக் குழு ஒன்றை அமைத்தார். அந்தக் காலத்தில் அவர் வேண்டுமென்றே செய்த தவறை இன்றும் கடைபிடிக்கிறார். இத்தனை காலமும் நான் இதைப் பற்றி பொருள்படுத்தாமல் இருந்தேன். குடும்ப விடயம் என்று கருதி வெளியில் பேசுவதில்லை. இப்பொழுது நான் பேசியாக வேண்டும். நான் இசையமைத்த சகல பாடல்களுக்கும் எனது மகள் பிரபாலினிதான் வாரிசு. வேறு யாரும் இதை உரிமை கொண்டாட என் அனுமதி இல்லை. இசையமைப்புக்கும், வாத்தியக் கருவி ஒருங்கமைப்புக்கும் வித்தியாசம் தெரியாத என் தம்பி இன்றும் குழப்பத்தில் “எனது பாடல்களுக்கெல்லாம் நான்தான் இசையமைப்பாளர்” என்று சொல்லிக் கொள்வது தவறு மற்றும் பொய். என் மனைவிக்கு என் காதலை தெரிவிக்க நான் எழுதி இசையமைத்து பாடிய “உனக்கு தெரியுமா” பாடலுக்கும் இதுதான் நிலைமை…” என்று வருத்தத்துடன் தெரிவித்தார். கவிஞர், பாடகர், இசையமைப்பாளர் ஈழத்து மெல்லிசை மன்னர் M.P. பரமேஷ் அண்ணா அவர்கள். இதுவரையிலும் 2000 பாடல்களுக்கு மேலே இசையமைத்து தயாராக வைத்திருக்கிறார், ஆனாலும், பொருளாதார ரீதியில் எல்லாவற்றையும் தரமான முறையில் பதிவு செய்து வெளியிட முடியாததால் சில நூறு பாடல்களை மட்டுமே பதிவு செய்தும், மீள் பதிவு செய்தும் வருடா வருடம் வெளியிடுகிறார். இலங்கையை பொறுத்தவரை சினிமா இப்பொழுதுதான் வளர்ந்து வருகிறது, அங்கே அந்த காலத்தில் சினிமாவில் இசையமைத்து பெயரும் புகழும் சம்பாதிக்க முடியாது என்பதை விட வாய்ப்புகள் குறைவு என்றே சொல்ல வேண்டும். ஆனால் M.P.பரமேஷ் அவர்கள் இந்திய நடிகர்கள் அளவுக்கு புகழ் பெற்றிருந்தார். 30 வருட போரில் மக்கள் உயிர்களை, உடமைகளை மட்டும் இழக்கவில்லை. அவர்கள் கலையை, கலைஞர்களின் படைப்புகளை, உணர்வுகளை இழந்துவிட்டார். M.P.பரமேஷ் அவர்களை போன்ற அற்புதமான மூத்த கலைஞர்களை ஈழத்து மக்கள்கூட மறந்துவிட்டார்கள் என்பது கவலைக்குரிய விடயம்தான். 1986-ல் ஜெர்மனி சென்ற M.P.பரமேஷ் அவர்கள் தொடர்ந்தும் இசையுடன் வாழ்ந்து வருகிறார். அவர் மனைவி மாலினி 2000-ம் ஆண்டு இறையடி அடைந்துவிட்டார். பரமேஷ் மாலினி தம்பதியினருக்கு 6 குழந்தைகள், அனைவரும் இசையில் ஆர்வமுள்ளவர்கள். பரமேஷ் மாலினியின் மூத்த மகளான, ஈழத்து மெல்லிசை குயில் “பிரபாலினி பிரபாகரன்” இலங்கையின் முதல் தமிழ் பெண் இசையமைப்பாளர் என்ற பெருமைக்குரியவர். பிரபாலினி இந்தியாவில் 2016 முதல் ஈழத் தமிழ் மகளாக எடிசன் விருது பெற்ற பெருமைக்குரியவர். இசையில் அமைதியாக பல தரப்பினருடன் இணைந்து பணி புரிந்து வருகிறார். ரசிகர்களால் Queen Cobra என்று அழைக்கப்படுபவர் இந்த ஈழத் தமிழ் மகள். கடந்த ஆண்டு M.P.பரமேஷ் அவர்கள் தனது இசை வாழ்வின் GOLDEN JUBILEE விழாவைக் கொண்டாடினார். உலகெங்கும் வாழும் பல கலைஞர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். பல விருதுகளை பெற்ற பரமேஷ் அவர்களுக்கு 2019ல் ஜெர்மனியில் வெற்றி மணி பத்திரிகையின் வாழ்நாள் சாதனையாளர் விருது, மற்றும் tamil mirror canadaவின் வாழ்நாள் சாதனையாளர் விருதும் கிடைக்கப் பெற்றார். இன்றும் தனது மனைவிக்காக பாடல்கள் எழுதி இசையமைத்து வெளியிட்டு வரும் அன்பு காதலன்! காதல் உள்ளவரை உங்கள் இசை என்றும் ஒலித்துக்கொண்டே இருக்கும்! பரமேஷ் அவர்களின் பாடல்களை itunes, sportify மற்றும் சகல digital platformகளிலுல் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். https://tamilcinetalk.com/tamil-eelam-singer-music-director-m-p-paramesh-story/?fbclid=IwY2xjawQHO3BleHRuA2FlbQIxMQBzcnRjBmFwcF9pZBAyMjIwMzkxNzg4MjAwODkyAAEe2q5jz2lmVoJjwhQzLpT-_KzevRtxbdRhbeZO_gmz0eVEv49ugEjaVTP1z4Y_aem_F1pbhkZepXLubhEFf3n9wg
  11. வைத்தியசாலையில் தங்கி இருக்கும் அழவுக்கு ரோசா குத்தி விட்டதா...? காலையில் யாழில் புதியவர் ஒருவரை இன்ரவியூ எடுத்து கொண்டு இருந்தாரே..🤭.சரி பூரண நலம் பெற்று வீடு திரும்புங்கோ சிறியண்ண.👋
  12. இவரது தொலைபேசி இலக்கம் புதுக்குடியிருப்பு ·என்ற ஒரு பக்கத்தில் பகிரப்பட்டு இருந்தது.இப்போதும் அந்தப் பக்கத்தில் வேலை தேவைப்படுவோருக்காக இணைப்புக்கள் குடுக்கப்பட்டு இருக்கிறது.தப்பான இடம் என்று தெரிந்தும் உடல் உறுப்பை கூட இழக்கும் அளவுக்கு போனவர்களுக்காக என்ன செய்வது..மன்னார் பகுதிக்கு அரசாங்கத்தின் உதவி தொகை போய் உள்ளதாகவும் அதற்கு என்ன நடந்தது என்று தெரியாமலிருக்கிறது என்றும் எழுதுகிறார்கள்.அந்த துறை சார்ந்தவர்களுக்கு கொஞ்சம் அழுத்தம் குடுத்தால் மட்டுமே பணத்திற்கு என்ன நடந்தது என்பது வெளி வரும். சிலரோடு தொடர்பு வைத்தால் அனுப்பும் பணம் முடிந்ததும் மீளவும் தொடர்பு கொண்டு உதவி கேட்பார்கள் கவனம்.தொலைபேசி இலக்கம் - 077 763 2388.
  13. தனித்து விடப்படும் முதியவர்கள் By Nillanthan - 4 months ago Less than a minute FacebookTwitterGoogle+WhatsappShare via Email புலம்பெயர்ந்த தமிழர் ஒருவர் அண்மையில் ஊருக்கு வந்திருந்தார். அவருடைய ஊரில் அவருக்குத் தூரத்து உறவான ஒரு முதிய பெண் தனித்து வசிக்கிறார்.பெரிய வீடு;வசதியான குடும்பம்;ஆனால் பிள்ளைகள் இல்லை. காசு உண்டு. ஆனால் பராமரிக்க ஆளில்லை. அவருடைய வீட்டுக்கு அருகில் உள்ள ஒரு படை முகாமில் இருப்பவர்கள் அவருக்குச் சாப்பாடு கொடுக்கிறார்கள். ஆனால் அவர் பல நாட்கள் குளித்திருக்கவில்லை என்றும் அவருடைய சுத்தம் சுகாதாரத்தைத் தொடர்ச்சியாகக் கவனிப்பதற்கு அங்கே ஆட்கள் இல்லையென்றும் நண்பர் சொன்னார். அப்படியென்றால் அவரை அழைத்துக் கொண்டு வந்து ஒன்றில் அரச முதியோர் இல்லத்தில் சேர்க்கலாம் அல்லது கட்டணத்தோடு முதியோரைப் பராமரிக்கும் இல்லங்களில் இணைக்கலாம்.போதியளவு பணம் இருந்தாலும் பராமரிக்க ஆளில்லாமல் தவிக்கும் முதியோரை கட்டணம் பெற்றுக்கொண்டு பராமரிக்கும் இல்லங்களில் சேர்க்கலாம்.எனவே அந்த முதிய பெண்ணை ஏதாவது ஒரு முதியோர் இல்லத்தில் இணைத்தால் என்ன என்று நண்பரிடம் கேட்டேன். அதற்கு நண்பர் சொன்னார்,”குறிப்பிட்ட மூதாட்டிக்கு 80 வயதுக்கு மேலாகிறது. இனி அவர் தனது வீட்டிலிருந்து வேரைப் பிடுங்கிக்கொண்டு வேறொரு இடத்துக்கு வரத் தயாராக இல்லை.எல்லாவிதமான அசௌகரியங்கள், பற்றாக்குறைகளோடும் தான் பிறந்து,வளர்ந்து,திருமணம்செய்து சந்தோஷமாக வாழ்ந்த அந்த வீட்டிலேயே இருந்து இறந்து போகத்தான் விரும்புவார் என்று தோன்றுகிறது. அவரை இந்த வயதில் வேரை அறுத்துக் வெளியே எடுப்பது சாத்தியமா?” என்று. அது சாத்தியமா இல்லையா என்பதல்ல பிரச்சினை. அவருடைய “குவாலிட்டி ஒஃப் லைஃப் “- வாழ்க்கைத் தரம் உயர்வானதா? என்பதுதான் இங்கு பிரச்சனை. அவரைப் போன்ற பல முதியவர்கள் தாங்கள் பிறந்து வளர்ந்த ஊரை விட்டு வெளியே வரத் தயாராக இல்லை. தாங்கள் பிறந்து வளர்ந்த அந்த வீட்டுக்குள் எல்லா விதமான பற்றாக்குறைகளோடும் ஆபத்துக்குகளோடும் சீவிப்பதில் அவர்கள் மன நிறைவடைகிறார்கள்.இங்கே அடிப்படைக் கேள்வி ஒன்று எழுதுகிறது.”குவாலிட்டி ஒஃப் லைஃப் ” என்பது மனதால் அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதா?அல்லது உடலால் நவீன மருத்துவத் தராதரங்களுக்கு ஏற்ப பராமரிக்கப்படுகிறவர்களாக இருப்பதா? எனக்குத் தெரிந்த பல முதியவர்கள் குறிப்பாக 80 வயதுக்கு மேலானவர்கள் தாம் பிறந்து வளர்ந்த வீட்டிலேயே இருந்து சாவதைத்தான் தமது வாழ்க்கை தரத்தில் உயர்ந்த நிலை என்று கருதுவதாகத் தெரிகிறது. ஆனால் பராமரிப்பின்றி தனிமையில் உழல்வதை விடவும் முதியோர் இல்லங்களில் சக வயதினரோடு இருப்பது சந்தோஷமானது என்று கருதும் முதியோரும் உண்டு.ஓர் ஆசிரியை வெளிநாட்டுக்குப் போகும்போது தன் தகப்பனை அரசு முதியோர் இல்லத்தில் இணைத்துவிட்டுச் சென்றார்.நாடு திரும்பியதும் தகப்பனை வீட்டுக்கு அழைத்து வரச் சென்ற போது தகப்பன் மறுத்துவிட்டார்.இங்கே எனது வயதொத்தவர்களோடு சந்தோஷமாக இருக்கிறேன். இது எனக்கு விருப்பமாக இருக்கிறது. என்று கூறி அந்த முதியவர் அங்கேயே தங்கி விட்டார். ஆனால் இது மிகச் சிறிய தொகை. பைபிளில் கூறப்படுவது போல “பிள்ளைகள் இருக்கவும் மலடுகளாய்போன பெற்றோரின்” தொகை அதிகமுடைய ஒரு சமூகம் இது.போர் பிள்ளைகளைத் தின்றுவிட்டது.புலப்பெயர்ச்சி பிள்ளைகளைப் பெற்றோரிடம் இருந்து பிரித்துவிட்டது.பெற்றோர் பிள்ளைகளுக்கு இறுதிக் கிரியைகளைச் செய்யும் ஒருகாலம் வந்தபோது பிள்ளைகள் தூர தேசத்திலாவது உயிர் பிழைத்திருக்கட்டும் என்று பெற்றோரே அனுப்பி வைத்தார்கள்.எனவே முதியோர் தனித்துவிடப்படுதல் என்பது போரின் நேரடி விளைவுதான்.தவிர குடும்பங்களில் விழுமியங்கள் சீரழிந்ததன் விளைவுந்தான். இங்கு மூன்று உதாரணங்களைக் கூறலாம். முதலாவது உதாரணம், வன்னியில் நடந்தது.அங்குள்ள முன்னணிப் பாடசாலை ஒன்றுக்கு பழைய மாணவர்கள் சிலர் இணைந்து ஒரு சிற்றுண்டிச் சாலையைக் கட்டிக் கொடுத்தார்கள். அந்த சிற்றுண்டிச் சாலையை தமது பள்ளிக் காலத்தில் தமது வகுப்பு தோழர்களாக இருந்து பின்னர் போரில் நாட்டுக்காக தங்கள் உயிரைக் கொடுத்த தியாகிகளுக்கு அர்ப்பணித்திருந்தார்கள்.அப்பழைய மாணவர்களில் ஒருவர் என்னைச் சந்தித்தார். அவரிடம் நான் கேட்டேன்“அந்த சிற்றுண்டிச் சாலையைத் திறக்கும் வைபவத்திற்கு குறிப்பிட்ட தியாகிகளின் பெற்றோரை அழைத்தீர்களா?” என்று. அப்பொழுதுதான் ஒரு விடயம் தெரியவந்தது. அந்தத் தியாகிகளில் ஒருவருடைய பெற்றோர் எங்கே இருக்கிறார் என்று யாருக்கும் தெரியாது. அந்தத் தியாகி ஒரு சிறந்த உதைப்பந்தாட்ட வீரர்.அவரைத் தவிர ஏனைய சகோதரர்கள் ஏற்கனவே புலம்பெயர்ந்து விட்டார்கள். அவர்தான் பெற்றோருக்கு உதவியாக இருந்தார். கடைசிக் கட்டப் போரில் கட்டாய ஆட் சேர்ப்பின்போது அவர் போருக்குள் இணைக்கப்பட்டார்.போர்க்களத்தில் உயர்நீத்தார்.தாயும் போரில் கொல்லப்பட்டு விட்டார்.தனித்து விடப்பட்ட தந்தையை புலம்பெயர்ந்து வாழும் ஒரு பிள்ளை உறவினர் ஒருவருக்கூடாக முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டார்.மேற்படி தகவல்களைச் சேகரித்த பழைய மாணவர்கள் அந்த முதியோர் இல்லத்துக்கு வந்துவிட்டார்கள்.ஆனால் அவர் விடுமுறையில் சென்று விட்டதாக முதியோர் இல்லத்தில் கூறப்பட்டது. விசாரித்தபோது தெரிந்தது, வெளிநாட்டில் வாழும் ஒரு பிள்ளை தாயகத்துக்கு வந்திருந்தபடியால் தகப்பனைப் பார்ப்பதற்காக முதியோர் இல்லத்தில் இருந்து அவரை தான் இருக்கும் இடத்துக்கு எடுத்திருக்கிறார். பழைய மாணவர்களில் ஒருவர் அந்தப் பிள்ளையின் கைபேசி இலக்கத்தை எடுத்து அவரோடு கதைத்திருக்கிறார்.அவரையும் முதியவரையும் சந்திப்பதற்காக வரப்போவதாகவும் கூறியிருக்கிறார்.ஆனால் அதன்பின் அந்தப் பிள்ளை தொடர்பு எடுக்கவில்லை மட்டுமல்ல, தகப்பனைக் கொண்டுவந்து இல்லத்தில் சேர்த்துவிட்டு வெளிநாட்டுக்குப் போய் விட்டார். இரண்டாவது உதாரணம், ஒரு பேராசிரியர்.பல மாதங்களுக்கு முன்பு அவர் இறந்தபொழுது அவருடைய உடலை யாழ் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்துக்கு கொடுக்குமாறு கேட்டிருந்தார்.அவரும் அவருடைய மனைவியும் யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில்தான் வசித்து வந்தார்கள். யாழ்ப்பாணத்தின் உயர் கல்வி நிறுவனம் ஒன்றின் பீடாதிபதியாக இருந்தவர் அவர். மூன்றாவது உதாரணம்,ஓர் அரசியல் செயற்பாட்டாளர்.ஈழ விடுதலைப் போராட்டத்தின் முக்கிய மொழிபெயர்ப்பாளர்.நோர்வியின் அனுசரணையுடனான சமாதான முயற்சிகளின்போது பெரும்பாலான எல்லாப் பேச்சுவார்த்தைகளிலும் அவருடைய முகம் உண்டு. அவருக்கு ஒரே பிள்ளை. அவரும் புலம்பெயர்ந்து விட்டார்.2009க்கு பின் அவரை தன்னுடன் வந்து இருக்குமாறு பிள்ளை அழைத்திருக்கிறார். ஆனால் இந்த முதியவர் தாயகத்தை விட்டு வெளியேபோக விரும்பவில்லை.எனவே அவருடைய பிள்ளை அவரை மாதாந்தம் பெருந்தொகை பணத்தை அறவிடும் தனியார் முதியோர் இல்லம் ஒன்றில் சேர்த்து விட்டார்.அந்த மொழிபெயர்ப்பாளர் அந்த முதியோர் இல்லத்தில்தான் உயர்நீத்தார். நான்காவது உதாரணம்,சில மாதங்களுக்கு முன் நடந்தது.புலம்பெயர்ந்து ஐரோப்பாவில் வசிக்கும் எனது நண்பர்,ஒர் அரசியற் செயற்பாட்டாளர், அண்மையில் தனது தகப்பனாரைப் பராமரிப்பதற்கு யாரையாவது ஒழுங்கு செய்ய முடியுமா என்று கேட்டார். இந்த விடயத்தில் முதியோர் இல்லத்துக்குப் போக விரும்பாத முதியவர்களைப் பராமரிப்பதற்கு ஊரில் யாராவது உதவியாளரைக் கண்டுபிடித்தால் அது நல்லது. இரண்டாவது தெரிவு,மானிப்பாயில் உள்ள மருத்துவர் கிரீன் ஞாபகார்த்த மருத்துவமனையில் முதியோரைப் பராமரிப்பதற்கான ஒரு கட்டமைப்பு உண்டு. அங்கு பயிற்றப்பட்ட தாதியர்கள் உண்டு.அவர்களைச் சம்பளத்துக்கு வேலைக்கு அமர்த்தலாம். மூன்றாவது தெரிவு,செக்யூரிட்டி நிறுவனங்களிடம் தொடர்பு கொண்டு வீட்டுக்கு ஒரு செக்யூரிட்டியை வேலைக்கு அமர்த்தலாம்.இந்த ஏற்பாடு எல்லா முதியவர்களுக்கும் பொருந்தாது.தன்னுடைய அலுவல்களைத் தானே கவனிக்கக்கூடிய அளவுக்குத் தெம்பாக உள்ள முதியவர்களுக்குத்தான் பொருந்தும். நான்காவது ஏற்பாடு,வீட்டில் கண்காணிப்புக் கமராவைப் பொருத்துவது. இதுவும் தானாக இயங்கும் முதியவர்களுக்குத்தான் பொருந்தும்.ஆனால் கமரா சரிவர இயங்கவில்லை என்றாலோ அல்லது கமராவின் கண்காணிப்பு வீச்சுக்கு வெளியே முதியவர் போய்விட்டாலோ அதன் பின் அவருடைய நடமாட்டங்களைக் கவனிக்க முடியாது.இதில் கமராவைத் தொடர்ச்சியாக அடிக்கடி பார்க்க வேண்டியிருக்கும். யாழ்ப்பாணத்தில் ஒரு வீட்டில் அவ்வாறு கமரா பொருத்தப்பட்டிருந்தது.பிள்ளைகள் முதியோரின் நடமாட்டத்தைக் கமரா மூலம் கண்காணிக்க முடிந்தது.ஆனால் ஒருநாள் முதியவரைக் காணவில்லை.இரண்டாம் நாளும் காணவில்லை.பிள்ளைகள் அயலவர்களோடு தொடர்புகொண்ட பொழுது ஆயலவர்கள் வீட்டு வளவில் கமராவின் கண்காணிப்பு வீச்சுக்கு வெளியே முதியவர் விழுந்து கிடக்கக் கண்டுபிடித்தார்கள்.ஆனால் கண்டுபிடித்தபொழுது முதியவருக்கு உயிர் இருக்கவில்லை. அவர் இறந்து இரண்டு நாட்களாகி விட்டது. இந்த ஏற்பாடுகளில் ஏதாவது ஒன்றைத் தெரிவு செய்யும்படி எனது நண்பரிடம் சொன்னேன்.தனித்து விடப்பட்ட முதியவர்களுக்காகக் காசு செலவழிக்கத் தயாராக இருப்பவர்களுக்குத்தான் இந்தத் தெரிவுகள்.இல்லையென்றால் ஏதாவது முதியோர் இல்லத்துக்குத்தான் போக வேண்டும். Geriatrician என்று அழைக்கப்படுகின்ற முதியோர் துறைசார் மருத்துவர்கள் தமிழில் மிகக்குறைவு.அதுமட்டுமல்ல முதியோரைப் பராமரிப்பதற்கான பயிற்றப்பட்ட தாதியர்களும் தமிழ்பகுதிகளில் குறைவு.இக்கட்டுரையில் முன்பு குறிப்பிடப்பட்ட மானிப்பாய் கிரீன் ஞாபகார்த்த மருத்துவமனையில் முதியோர் பராமரிப்புக்கென்று பயிற்சிகளை வழங்கும்(Institute of Medical Sciences) “மருத்துவ விஞ்ஞான நிறுவனம்” என்ற நிறுவனம் உண்டு.2013இலிருந்து முதியோரைப் பராமரிப்பதற்குரிய தொழில்சார் பயிற்சிகளை வழங்கிவருகிறது.இங்கு வழங்கப்படும் தொழில்சார் பயிற்சியானது இலங்கைத் தீவின் தேசிய தொழில்சார் தகமை மட்டத்தில் நான்காவது மட்டத்துக்குரியது. ஐந்தாவது தொழிற்சார் தகமை மட்டும்தான் டிப்ளமோ. அப்படிப் பார்த்தால் தமிழ்ப்பகுதிகளில் இப்பொழுது இயங்கிக் கொண்டிருக்கும் முதியோரைப் பராமரிக்கும் தாதியர்கள் அனைவருமே குறைந்தபட்சம் டிப்ளோமா தரத்துக்குரிய தொழில் தகமையைக்கூட கொண்டிருக்கவில்லை.ஆனால் மேற்கத்திய நாடுகளில் அது நான்கு ஆண்டுகாலப் பட்டப்படிப்பாகவும் காணப்படுகிறது. வடக்கில் மானிப்பாய் கிரீன் ஞாபகார்த்த மருத்துவமனையில் மட்டும்தான் அவ்வாறான கற்கை நெறி உண்டு.அதேசமயம் முதியோரியல் துறைக்குரிய மருத்துவ நிபுணர்களின் தொகையும் குறைவு. ஆனால் தமிழர் தாயகத்தில் வடக்கில் மட்டும் 60வயது கடந்த முதியோர் மொத்தம் இரண்டு இலட்சத்து 29ஆயிரத்து867பேருக்கு மேல் உண்டு.இதில் யாழ்ப்பாணத்தில் மட்டும் ஒரு லட்சத்து 54ஆயிரத்து 626 முதியோர் உண்டு. வடக்கில் மட்டும் மொத்தம் 28 முதியோர் இல்லங்கள் உண்டு.இவற்றுள் ஆகப் பெரியது கைதடியில் உள்ள அரச முதியோர் இல்லந்தான்.அங்கே 200க்கும் குறையாத முதியோர் உண்டு.அதாவது வடக்கில் மட்டும் மொத்த ஜனத்தொகையில் கிட்டத்தட்ட 20 விகிதம் முதியவர்கள். எனக்குத் தெரிந்து புலம் பெயர்ந்துபோன பிள்ளைகளில் ஒரு பகுதியினர் தமது முதிய பெற்றோரைப் பராமரிப்பதற்காக ஊரில் குறிப்பிட்ட காலத்துக்கு வந்து தங்கி நிற்கிறார்கள்.அதிகம் பிள்ளைகளைப் பெற்ற பெற்றோருக்கு தொடர்ச்சியாக யாராவது ஒரு பிள்ளை வீட்டில் நிற்கின்றது.அது ஒரு கொடுப்பினை.ஆனால் எல்லாருக்கும் இல்லை. எனவே தமிழ் மக்கள் இதுதொடர்பில் வேகமாக முடிவெடுக்க வேண்டும்.தாயகத்தில் உள்ள அரசியல் கட்சிகளும் செயற்பாட்டாளர்களும் புலம் பெயர்ந்த தமிழர்களும் சேர்ந்து இதுதொடர்பாக பொருத்தமான முடிவுகளை எடுக்கலாம்.இதுவிடயத்தில் பின்வரும் விடயப்பரப்புகளின் மீது கவனத்தைக் குவிக்கவேண்டும்.முதலாவதாக எத்தனை முதியவர்கள் தனித்து விடப்பட்டிருக்கிறார்கள் என்பது தொடர்பாக சரியான புள்ளி விபரங்களைச் சேகரிப்பது. இரண்டாவது,முதியோரை பராமரிப்பதற்கான நிறுவனங்களைக் கட்டியெழுப்புவது.மூன்றாவது,பராமரிப்பாளர்களைப் பயிற்றுவிக்கும் கற்கை நெறிகளை குறைந்தபட்சம் தனியார் கல்விக் கட்டமைப்புகளுக்கு ஊடாகத் தொடங்குவது.இது ஒரு தேசியக் கடமை. முதியோர் இல்லங்களைக் கட்டியெழுப்புவது என்பது தமிழ்த் தேசிய நோக்கு நிலையில் இருந்து பார்த்தால் தேச நிர்மாணத்தின் ஒரு பகுதிதான். முதியோரைப் பராமரிப்பதற்கு மட்டுமல்ல கைவிடப்பட்ட முன்னாள் இயக்கத்தவர்கள்,விதவைகள்,மாற்றுத் திறனாளிகள்,மனநலம் பாதிக்கப்பட்டவர்கள்,போதைப்பொருள் பாவனையாளர்கள் போன்ற எல்லாத் தரப்பினரையும் பராமரிப்பதற்கான கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும்.இவையாவும் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான கட்டமைப்புகள்தான். இனப்பிரச்சனைக்குத் தீர்வு வரும்வரையிலும் இந்தக் கட்டமைப்புகளை ஒத்தி வைக்க முடியாது. பராமரிக்கப்பட வேண்டிய பிரிவினர் பராமரிக்கப்படாமல் அனாதைகளாக விடப்படுவது என்பது ஒரு தேசிய அவமானம்.எனவே தேசத்தைக் கட்டியெழுப்புவதன் ஒரு பகுதியாக மேற்கண்ட நிறுவனங்களைக் கட்டியெழுப்ப வேண்டும்.நான் இந்தக் கட்டுரையை எழுதி முடிக்கும்போது எங்கேயோ ஒரு தொலை கிராமத்தில் யாரோ ஒரு முதியவர் உதவிக்கு ஆளில்லாமல் இறந்து போயிருக்கலாம். https://www.nillanthan.com/
  14. தமிழர்கள் ஏன் கறுப்புக்கொடி ஏற்றுகின்றார்கள் ? written by admin February 13, 2026 பல்கலைக்கழக மாணவர்களின் கறுப்புக்கொடி போராட்டத்தை சட்டவிரோதமானது என அறிவித்துள்ள பல்கலைக்கழ மானியங்கள் ஆணைக்குழுவின் கருத்து பிழையானது என தெரிவித்துள்ள ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி, போராட்டத்துக்கான காரணத்தைக் கண்டறிந்து அதனைத் தீர்ப்பதற்கு முயற்சிக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. இது குறித்து ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி (சங்கு சின்னக் கட்சி) சார்பில் அதன் பேச்சாளர் சுரேஷ் க.பிரேமச்சந்திரன் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலையே அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில், “இலங்கை சுதந்திரம் அடைந்ததிலிருந்து மிக நீண்டகாலமாக சுதந்திர தினத்தையும் அதற்குப் பின்னர் 1972ஆம் ஆண்டு இலங்கை குடியரசாகிய போது கொண்டுவரப்பட்ட குடியரசு அரசியல் சாசனத்திற்கு எதிராகவும் தமிழ் மக்கள் கறுப்புக்கொடி போராட்டங்களை முன்னெடுத்து வந்துள்ளமையுடன் அவற்றை கரிநாள்களாகவும் பிரகடனப்படுத்தி வந்துள்ளனர். இலங்கை என்பது சிங்கள, தமிழ் இராசதானிகளாக பிளவுபட்டு இருந்ததென்பதும் 1883ஆம் ஆண்டு காலனித்துவ ஆட்சியாளர்களான பிரித்தானியர்களால் தமது நிர்வாக வசதிக்காக ஒன்றாக்கப்பட்டது என்பதுதான் வரலாறு. ஒன்றிணைத்த இராசதானிகளை சிலோன் என்ற பெயரில் சூழ்ச்சியின் காரணமாக பெரும்பான்மையினமான சிங்கள தரப்பிடம் கையளித்து விட்டுச் சென்றார்கள் என்பதும் வரலாறு. ஆகவே, இவ்வாறான சுதந்திர தினத்தையோ அல்லது குடியரசு தினத்தையோ தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதுடன் பெரும்பான்மை சிங்கள அரசுகளால் தமிழ் மக்களின் மொழியுரிமை, வாழ்விட உரிமை, கல்வி உரிமை, வேலைவாய்ப்புக்கான உரிமை போன்றவை பல்வேறு வழிகளில் நிராகரிக்கப்பட்டு தமது சுதந்திரத்தைத் தாமே பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிலைக்கு தமிழ் மக்கள் தள்ளப்பட்டதன் காரணமாகத்தான் இங்கு நீண்டதோர் ஆயுதப்போராட்டமே நடைபெற்றது. எனவே, தமிழ் மக்கள் ஏன் போராடுகிறார்கள்? அரசின் தமிழர்களுக்கு எதிரான அனைத்துச் செயற்பாடுகளையும் ஏன் எதிர்க்கிறார்கள்? ஏன் கறுப்புக்கொடி ஏற்றுகின்றார்கள்? ஏன் ஊர்வலங்களையும் கவனவீர்ப்புப் போராட்டங்களையும் நடத்துகின்றார்கள்? – என்பதற்கு அரசு சரியான தீர்வைக் கண்டுகொள்ள வேண்டுமே தவிர, ஜனநாயகபூர்வமான எதிர்ப்பைக் காட்டும் மக்களையோ மாணவர்களையோ தண்டிப்பதானது ஜனநாயக விரோதமானதும் சட்டவிரோதமானதுமாகும். இலங்கையின் அடிப்படை உரிமைகளில் பேச்சுரிமை, எழுத்துரிமை, ஒன்றுகூடுவதற்கான உரிமை, ஜனநாயக வழிமுறைகளில் கறுப்புக்கொடி ஏற்றுதல் உட்பட எதிர்ப்புத் தெரிவிப்பதற்கான உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. இலங்கையில் துக்கத்தை வெளிப்படுத்துவதற்கு கறுப்புக்கொடி ஏற்றுவது இயல்பானது. தமிழ் மக்கள் அடக்கப்பட்டு ஒடுக்கப்படுகின்றார்கள் என்பதும் தமிழ் மக்களுக்கு முழுமையான சுதந்திரம் கிடைக்கவில்லை என்பதும் துக்ககரமான செயற்பாடே. அவ்வாறான துக்ககரமான செயற்பாட்டின்போது பல்கலைக்கழகத்திலோ அல்லது வேறு எந்த இடத்திலோ கறுப்புக் கொடி கட்டுவது சட்டவிரோதம் என சட்டத்தில் எங்கும் குறிப்பிடப்படவில்லை. மக்களுக்கோ அன்றில் சொத்துக்களுக்கோ எவ்வித இடையூறும் விளைவிக்காமல் மக்கள் தமது எதிர்ப்பைக் காட்டுவது என்பது ஜனநாயகபூர்வமான நடவடிக்கையே. கடந்த 4ஆம் திகதி யாழ் பல்கலைக்கழத்தில் கறுப்புக்கொடி ஏற்றிய மாணவர்களுக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும், அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என பல்கலைக்கழக மானிய ஆணைக்கழகம் கோருவதும் அதனைப் பல்கலைக்கழக நிர்வாகம் ஏற்பதும் சட்டவிரோதமானதுடன் ஜனநாயக விரோதமானதுமாகும் என ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி கருதுகின்றது. மாணவர்களின் அடிப்படை உரிமைகளிலோ ஜனநாயக வழிமுறையிலான போராட்டங்களிலோ தலையீடு செய்யாமல் அவர்கள் சுதந்திரமாகவும் அச்சவுணர்வின்றியும் தமது கல்வியைத் தொடர பல்கலைக்கழக ஆசிரிய சமூகம் அதற்கான பொதுவெளியை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றோம். பல்வேறுபட்ட மாணவர் போராட்டத்தை நடத்தி மிகப் பிரமான்டமான அறகலய போராட்டத்தின் மூலம் ஆட்சிக்கு வந்தவர்கள் தமிழ் மாணவர்களின் ஜனநாயக பூர்வமான போராட்டங்களை நசுக்குவதோ அன்றி அவர்களைத் தண்டிப்பதோ சரியானதா என்பதை ஆட்சியிலிருப்பவர்கள் சிந்திக்க வேண்டும்.” – என்றுள்ளது. தமிழர்கள் ஏன் கறுப்புக்கொடி ஏற்றுகின்றார்கள் ? - Global Tamil News
  15. யாழ். துப்பாக்கி சூட்டு சம்பவம் – மனித உரிமை ஆணைக்குழு விசாரணை written by admin February 11, 2026 யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி பகுதியில் 17 வயது சிறுவன் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் தொடர்பில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) தனது விசாரணைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளது. சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் தலைமையிலான குழுவினர் நேற்று (செவ்வாய்க்கிழமை) நேரில் சென்று ஆய்வுகளை மேற்கொண்டனர். துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட இடம் மற்றும் வாகனத்தின் நிலை ஆகியவற்றை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர். சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறை உத்தியோகத்தர்கள் மற்றும் அந்தப் பகுதியில் கடமையில் இருந்தவர்களிடம் ஆரம்பகட்ட தகவல்கள் கோரப்பட்டுள்ளன. துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட போது வாகனத்தில் பயணித்த ஏனைய இருவரிடமும், உயிரிழந்த சிறுவன் அல்பினோ அருள் பயாஸின் உறவினர்களிடமும் விரிவான வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன. உயிரிழந்த சிறுவனின் நெற்றியில் தோட்டா பாய்ந்திருப்பதாக உடற்கூற்று ஆய்வில் தெரியவந்துள்ள நிலையில், இது திட்டமிட்ட கொலையா அல்லது தற்காப்பு நடவடிக்கையா என்பது குறித்து ஆணைக்குழு தீவிரமாக ஆராய்ந்து வருகிறது. இந்தச் சம்பவம் இலங்கையின் மனித உரிமை வரலாற்றில் மீண்டுமொரு கறையாகப் பார்க்கப்படுகிறது. காவல்துறையினா் ஒரு வாகனத்தை நிறுத்த முற்படும்போது, வாகனத்தின் டயர்களை இலக்கு வைக்காமல் பயணிகளின் தலையை இலக்கு வைத்துச் சுடுவது “அதிகார துஷ்பிரயோகம்” என மனித உரிமை ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இந்த அறிக்கை, நீதிமன்ற விசாரணைகளில் ஒரு முக்கிய ஆவணமாகப் பயன்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
  16. சூரியன் எப்.எம் வானொலி முகப் புத்தக பக்கத்தில் பிள்ளையின் காயப்பட்ட பக்கங்களளை மறைக்காமல் போட்டிருக்கிறார்கள்.ரத்தக் காயங்கள், தையல் வேறு போட்டு இருக்கிறார்கள்.குறிப்பிட பட்ட ஆசிரியர் என்று சொல்லப்படுபவர் அதற்கு எந்த வித தகுதியும் அற்றவர் என்று நான் நினைக்கிறேன்.
  17. போனகிழமை செய்தியில் படித்தேன் இதே பகுதியில் படிக்கும் மாணவர் ஒருவரின் தந்தை இறந்துள்ளார்.இதே பிரச்சனை தான்.இந்தப் பள்ளியில் தானோ கவனிக்கவில்லை.அவரும் ஒரு கவ்லி தொடர்பான பணியாளர் தான்.
  18. நீங்கள் முதலில் எழுதியிருந்ததற்கு நான் தான் சிரிப்பு குறி போட்டிருந்தேன்..இப்போ எடுத்து விட்டேன்.அங்கே நான் எந்த நக்கல் நளினமும் செய்யவில்லை... நீங்கள் சொல்லி இருந்தவை எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ள முடியாமலிருக்கிறது. காரணம்.எத்தனையோ யூருப்பர்ஸ் அடுத்தவர்களின் குடும்ப பிரச்சனைகளை கூட மிகைப் படுத்தி பதிவிடுவதை உங்களால் புரிந்து கொள்ள முடியாமிலிருக்கலம் ,ஆனால் எல்லாரும் அப்படி என்று இல்லைத் தானே..குறிப்பாக ஜேர்மனியில் நடக்கும் திருமணங்கள் மற்றும் குடும்ப பிரச்சனைகளை பாதிக்கப்பட்ட பெண்கள் எடுத்து அவரிடம் சொல்கிறார்களாம் அதனை பதிவிடுகிறாராம்..இப்படி ஒரு பதிவை சோடனை செய்து பதிவிட்டு பணம் சம்பாதிக்க வேணுமா..இப்படி எத்தனையோ வருகிறது..
  19. இதை தொகுத்து எழுதியவர் பாவம்.குறுப்பாக இயங்குபவர்களின் பேச்சுகளிலிருந்து தப்பித்துக் கொள்வார் என்று நம்புகிறேன்.😀
  20. மிகவும் சாதரணமான ஒரு இலச்சினையாக இருந்தால் நன்று.எதையும் அடையாளப்படுத்துவதாக இல்லாதிருந்தால் மிகவும் நல்லது..காரணம்..வேறு குறியீடுகளை சேர்க்கும் போது மக்கள் எல்லா விதமான உதவிகளையும் எதிர்பார்ப்பார்கள், கேட்பார்கள்.எல்லாவற்றையும் செய்யும் சூழ் நிலை இப்போ இல்லை என்று நினைக்கிறேன்.இலச்சினை கூட இன்னும் கொஞ்சக் காலம் போன பின் செய்தால் நன்று என்றே எனக்கு தோணுது..ஆரம்பமே பனர் அது, இது என்று தொடங்கினால் உண்மையான தேகைளுக்கு பணம் போதிமானதாக இருக்காது..எல்லாவற்றையும் அனைவரும் புரிந்து கொள்ளுங்கள்.விளம்பரப்படுதல்கள் கூடுதல் பழுக்களை ஏற்படுத்திக் கொள்ளப் போறீர்கள் போல் தெரிகிறது..எனக்கு மனதில் தோன்றியதை சொல்கிறேன்.இதற்கு மேல் உங்கள் விருப்பம்.நன்றி.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.