யாயினி
-
Posts
9112 -
Joined
-
Days Won
14
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by யாயினி
-
நேற்று, இன்று, நாளை என்று மழையும் காற்றுமான கால நிலை.....இலைத்துளிர் கால நிலை என்று சொல்கிறார்கள்........🌱🌾
-
அமுருதா சுரேன்குமார் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்றுள்ளார்இங்கிலாந்து தேசிய கிரிக்கெட் அணியில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக்கொண்ட அமுர்தா சுரேன்குமார் அமுருதா சுரேன்குமார் இடம்பிடித்துள்ளார்.அமுருதா சுரேன்குமார் இங்கிலாந்து 19 வயதுக்கு உட்பட்ட தேசிய அணியில் இடம்பிடித்துள்ளார். அமுருதா சுரேன்குமார் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்றுள்ளார்அமுருதா சுரேன்குமார் புலம்பெயர் தேசத்தில் சாதனைஇங்கிலாந்து 19 வயதுக்கு உட்பட்ட மகளிர் அணி தற்பொழுது இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இலங்கை 19 வயதுக்கு உட்கட்ட மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் அமுருதா சுரேன்குமார் களமிறங்கியிருந்தார்பந்து வீச்சில் மூன்று ஓவர்களை வீசி 24 ஓட்டங்களை கொடுத்திருந்ததுடன் துடுப்பாட்டத்தில் ஓட்டமெதுவும் பெறாது அமுருதா சுரேன்குமார் ஆட்டமிழந்தார்அமுர்தாவின் தந்தையான சிவா சுரேன்குமார், யாழ்ப்பாணம் புனித ஜோன்ஸ் கல்லூரியின் பழைய மாணவர் ஆவார்.இந்நிலையில் இலங்கையில் இருந்திருந்தால் அமுருதா சுரேன்குமார் கிரிகெட்டில் நுழைய விட்டிருப்பார்களோ தெரியாது. ஆனால் புலம்பெயர்ந்து சென்று இங்கிலாந்து தேசிய கிரிக்கெட் அணியில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக்கொண்ட அமுர்தா சுரேன்குமார் அமுருதா சுரேன்குமார் ஈழதமிழர்களுக்கு பெருமையாகும்.
-
Congratulations SivasangariAs a major surprise in the GillenMarkets London Squash Classic World no 16 Sivasangari Subramaniam of Malaysia beat No 1 Nour ElSherbini of Egypt 2-0: 11-9, 11-9 in a match that lasted for 24 minutes. Its the first time a player outside the top 10 in the PSA World Rankings has beaten Nour El Sherbini since Annie Au in 2015. This is the first time Sivasangari faced Nour in her career. Sivasangari will face No.4 seed Nele Gilis in the Semi-Final match.
-
-
-
-
வித்தியாவைக் கொடூரமாக கொன்றவர்களில் ஒருவர் கண்டி வைத்தியசாலையில் மரணம்!!யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதியில் பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்தியாவைக் கூட்டுப் பலாத்காரம் செய்து படுகொலை செய்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, பல்லேகல தும்பர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.புங்குடுதீவுப் பகுதியைச் சேர்ந்த பூபாலசிங்கம் தவகுமார் செந்தில் (37) என்பவரே உயிரிழந்துள்ளார்.நிமோனியா நோயினால் பாதிக்கப்பட்டிருந்த அவர் சில உடல் நிலை காரணமாக கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை தொடர்பான மேன்முறையீட்டு மனுவை சமர்ப்பித்ததையடுத்து, அது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.செய்தி மூலம் நியூ தமிழ்
-
காலணி இல்லாமல் விளையாடும் போது தான் காலில் உணர்திறன் அதிகமாக இருக்கும் என்று எனது தந்தை சொன்னார் பின்னாளில் நான் புரிந்து கொண்டேன் அவரிடம் காலணி வாங்கித் தருவதற்கு பணம் இல்லை என்று நான் சிறந்த விளையாட்டு வீரன் என்று உலகம் என்னை தெரிவு செய்த போது நான் மகிழ்ச்சியில் அழவில்லை எனது தந்தை உயிரோடு இல்லையே என்ற கவலையில் அழுதேன் என்று பிரேசில் நாட்டு வீரன் RONALDINHO GAUCHO…
-
-
கனடா: 2024 ஆம் ஆண்டிற்கான பற்சிகிச்சை உதவிப்பணம் – அறிந்திருக்க வேண்டியவை
Post Views: 159விண்ணப்ப திகதிகள், பெறும் தகமை
அதிகரித்து வரும் செல்வுகள் காரணமாக வருமானம் குறைந்த கனடியர்கள் தமௌ பற்சிகிச்சைகளைத் தவிர்த்தோ அல்லது தாமதித்தோ வருவதுண்டு. இவர்களது தேவைகளை மனதில் கொண்டு கனடிய மத்திய அரசு பற்சிகிச்சை உதவிப்பணத் திட்டமொன்றைச் சமீபத்தில் அறிவித்திருந்தது. ‘கனடா பற்சிகிச்சை உதவி’ (Canada Dental Benefit (CDB) ) என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்ட இத் திட்டத்தின் மூலம் உதவிகளைப் பெற விரும்புபவர்கள் அறிந்திருக்க வேண்டிய தகவல்கள் இங்கே தரப்படுகின்றன.
விண்ணப்பிக்கும் தகமைகள் /காலக்கெடு
கனேடிய மத்திய அரசு இத் திட்டத்தை மூந்று பிரிவுகளாக நடைமுறைப்படுத்துகிறது.
- 65-69 வயதில் இருப்பவர்கள் 2024 மே மாதம் விண்ணப்பிக்க ஆரம்பிக்கலாம்
- இயலாமை வரிச்சலுகைத் தராதரப் பத்திரங்களை (Disability Tax Credit certificate) வைத்திருப்பவர்களும், 18 வயதுக்குட்பட்ட பிள்ளைகளும் ஜூன் 2024 முதல் விண்ணப்பிக்கலாம்.
- மீதமானவர்களுக்கு 2025 இன் பின்னரே விண்ணப்பிக்க சந்தர்ப்பம் வழங்கப்படும்
- இவ்வுதவிப்பணத்திற்கு ஒருவர் விண்ணப்பிப்பதானால் அவரது, கழிவு தள்ளிய (net income) உச்ச குடும்ப வருமானம் $90,000 டொலர்களுக்குக் கீழே இருக்கவேண்டும்.
- தனியார் காப்புறுதி பெறுபவராக இருக்ககூடாது.
- விண்ணப்பிப்பதற்கு முந்திய வருடம் வருமான வரி பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருக்க வேண்டும்
தனியார் காப்புறுதி வரைவு
தனியார் காப்புறுதி என்பதைக் கனடிய அரசு பின்வருமாறு வரைவு செய்கிறது
- நீங்கள் பணி புரியும் ஸ்தாபனத்திடமிருந்து நீங்களோ அல்லது உங்கள் துணையரோ காப்புறுதி பெறுபவராக இருக்கக்கூடாது
- நீங்களோ உங்களது குடும்பத்தில் ஒருவரோ ஓய்வூதியம் பெறுபவராக இருந்து அதன் கீழ் நீங்களும் பலன் பெறுபவராக இருக்கக்கூடாது
- நீஙளோ அல்லது உங்கள் குடும்ப அங்கத்தவர் ஒருவரோ ஒரு குழுமக் காப்புறுதி ( group insurance) மூலம் பலன்பெறுபவராக இருக்கக்கூடாது
மார்ச் 31, 2024 இல் உங்கள் வயது 70 ஐ அடைந்திருக்குமானால் உங்களுக்கு மத்திய அரசிடமிருந்து உங்கள் தகமை பற்றிய கடிதமொன்று வந்திருக்க வேண்டும். இக் கடிதத்தில் உதவிப் பணத்திற்கு விண்ணப்பிப்பதற்கான செயன்முறை இணைக்கப்பட்டிருக்கும்.
எப்படியான சிகிச்சைகள் இதற்குள் அடங்கும்?
- பற்களைச் சுத்தம் செய்தல், பளபளப்பாக்குதல் (polishing) மற்றும் ஃபுளோறைட் பராமரிப்பு
- எக்ஸ்-றே படப்பிடிப்பு
- துளைகள் நிரப்புதல்
- பொய்ப் பல் (dentures) கட்டுதல்
- பற்களைப் பிடுங்காமல் பாதுகாத்தல் (root canals)
போன்ற சிகிச்சைகள் உடபடப் பலவகையான சிகிச்சைகள் இத்திட்டத்தில் அடங்கும். இச்சிகிச்சைகளுக்கான பணத்தை பல் வைத்தியர்கள் / சிகிச்சையாளர்கள் நேரடியாக மத்திய அரசிடமிருந்து பெறுவார்கள். கனடாவின் மிகப்பெரியதும் பழையதுமான Sun Life காப்புறுதி நிறுவனம் மூலம் சிகிச்சை தருபவர் பணத்தைப் பெற்றுக்கொள்வார்.
எல்லா விண்ணப்பதாரிகளும் தமது சிகிச்சைக்கான செலவின் 100% த்தையும் மீளப்பெறுவார்கள் எனக் கூறமுடியாது. விண்ணப்பதாரிகளின் வருமானத்தைப் பொறுத்து ஒரு குறிப்பிட்ட தொகை அரசாங்கத்தினால் வழங்கப்படும். மீதி செலுத்தவேண்டிய தேவை இருப்பின் அதை விண்ணப்பதாரியே செலுத்த வேண்டும். உதாரணத்திற்கு:
- உங்கள் வருமானம் $70,000 த்திற்கு உள்ளே இருப்பின் முழுச் செலவிற்கும் அரசாங்கமே பொறுப்பு
- வருமானம் $70,000 – $79,999 த்திற்கு இடைப்பட்ட நிலையிலிருந்தால் செலவின் 40% த்தை நீங்கள் செலுத்த வேண்டும்
- வருமானம் $80,000 – $89,999 ஆக இருப்பின் செலவின் 60% த்தை நீங்கள் செலுத்த வேண்டும்
இந்த மேலதிகச் செலவுகளை நீங்கள் சிகிச்சை தருபவருக்கு நேரடியாகச் செலுத்தவேண்டும். மேலதிகத் தகவல்களுக்கு இந்த இணைப்பை https://www.canada.ca/en/health-canada/news/2023/12/the-canadian-dental-care-plan.htmlஅழுத்தவும். (Photo by Hush Naidoo Jade Photography on Unsplash)
-
மீனாள் ராமசாமி°°°°°°°°°°°°°°°°°°°°°°அந்த முதியோர் காப்பகத்திற்கு ஓரு மணியார்டர் வந்ததது.“இத்துடன் ரூபாய் ஆயிரம் அனுப்பியுள்ளேன்.நானும் என்னுடைய மனைவியும் இதிலுள்ள முகவரியில் இருக்கிறோம்.நாங்கள் ஒரு சிறிய இட்லி கடை நடத்தி வருகிறோம் .இருவரும் அறுபது வயதைக் கடந்தவர்கள் .நான் இறந்துவிட்டால் என்னுடைய மனைவியைப் பார்த்துக்கொள்ள ஒருவரும் இல்லை.எனவே எனக்குப் பின் அவளை உங்கள் இல்லத்தில் பராமரிக்க வேண்டும்.அதற்காக என்று இந்தப் பணத்தை அனுப்புகிறேன்."“வாராவாரம் ரூபாய் 1000 அனுப்பி விடுகிறேன்.பாதித் தொகையை உங்கள் காப்பதற்கான செலவுக்காக எடுத்துக்கொள்ளுங்கள்.மீதி பாதியை என் மனைவி பெயரில் வரவு வைத்துக் கொள்ளுங்கள்.என்றாவது ஒருநாள் நான் அனுப்பும் தொகை வராவிட்டால் தயவுசெய்து இதில் உள்ள முகவரிக்கு வந்து என் மனைவியை அழைத்துச் செல்லுங்கள், இப்படிக்கு மீனாள் ராமசாமி “என்று எழுதி இருந்தது.தொடர்ந்து வாராவாரம் இந்த தொகை வந்து கொண்டிருந்தது.அதேபோன்று ஒரே மாதிரியாக நீட்டி நீட்டி அழகாக அதே விஷயம் எழுதப்பட்டிருக்கும்.சென்னையில் உள்ள முதியோர் காப்பகத்தில் மேனேஜராக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்.உரிமையாளர் எப்போதாவது வருவதால் எல்லாவற்றிற்கும் அவர் தான் பொறுப்புகாப்பகத்தில் அறுபது வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் ஐம்பது பேர் இருக்கின்றனர்.அவர்களில் பத்து பேர் பெண்கள் மற்றவர்கள் ஆண்கள்.இந்த மீனாள் ராமசாமி யார் என்று அறிந்துகொள்ள ஒருவித ஆவல் ஒரு நாள் நேரில் சென்று பார்த்து வரவேண்டும் என்று நினைத்தார்.வேலைப் பளு காரணமாகமுடியவில்லை.இன்று ஞாயிற்றுக்கிழமை கண்டிப்பாகப் பார்த்துவிட்டு வரவேண்டும் என்று முடிவு செய்துகொண்டார்.அவருடைய இருசக்கர வாகனத்தில் அங்கு செல்வதற்கு இரண்டு மணி நேரம் ஆனது.சின்ன கட்டிடம் வெளியில் தகரப் பலகையில் கூரை வேயப்பட்டிருந்தது.பெரிய கேஸ் அடுப்பு ,மற்றும் இட்லி பானை எல்லாம் இருந்தது.எழுபது வயது இருக்கும் ஒரு முதியவர் நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு இருந்தார்." நீங்கள் தானே மீனாள் ராமசாமி” என்று கேட்டார்“ஆமாம் தம்பி நீங்கள் யார் “ என்று கேட்டார்.விவரங்களைச் சொன்னார்.“அப்படியா தம்பிரொம்ப சந்தோஷம் உட்காருங்க.ஏதாவது சாப்பிடுகிறீர்களா?” என்று இருக்கையைக் காண்பித்தார்.“ஒன்றும் வேண்டாம்தண்ணீர் மட்டும் கொடுங்கள்”என்று பதிலளித்தார்.மனைவியின் மீதுள்ள அன்பு அவரது சிரிப்பில் தெரிந்தது.“நாங்க இரண்டு பேரும் இந்த இட்லி கடை முப்பது வருடங்களாக நடத்தி வருகிறோம்.இரண்டு இட்லி ஒரு ரூபாய் என்று விற்று வந்தோம் .பிறகு இரண்டு ,மூன்று என்று இப்போது ஐந்து ரூபாய்க்கு விற்று வருகிறோம்.எங்கள் கடையில் நான்கு இட்லி சாப்பிட்டாலே ஒருவருக்கு வயிறு நிறைந்துவிடும்.”“கூலி வேலை பார்ப்பவர்கள் மற்றும் கல்லூரியில் படிக்கும் பிள்ளைகள் என்று நிறைய பேர் வருவார்கள்.நாங்கள் இருவரும் தான் வேலை செய்கிறோம்.எங்களுக்குக் குழந்தைகள் இல்லை எனவே அதிகம் செலவுகள் இல்லை.அதனால் குறைந்த விலையிலேயே விற்பது என்று முடிவு பண்ணி விட்டோம்."வாராவாரம் உங்கள் காப்பகத்திற்கு அனுப்பிய தொகையை விட மேலும் கொஞ்சம் மிஞ்சும்அதை ஏழைக் குழந்தைகள் படிப்பதற்கு நோட்டுப் புத்தகங்கள் என்று என் மனைவி வாங்கிக் கொடுத்து விடுவார்.எல்லோரையும் எங்கள் குழந்தைகளாகப் பாவித்துக் கொள்கிறோம்” என்று விபரமாகச் சொல்லி முடித்தார்.தண்ணீர் கொண்டுவந்து கொடுத்தார் அவரது மனைவி.இதற்குள் மணி மாலை ஐந்து ஆனது.“இப்போது ஆரம்பிச்சா தான் ஆறு மணிக்கு இட்லி ரெடியாகும்” என்று சொல்லிவிட்டுத் தன்னுடைய வேலையைப் பார்க்க ஆரம்பித்தார்.“சரிங்க ஐயா,உங்களைப் பார்க்க வந்தேன்.வேறு விஷயம் இல்லை .கொஞ்ச நேரம் இங்கே இருந்துவிட்டுப் போகிறேன்" என்று சொன்னார்அதற்கு மறுப்பு ஏதும் சொல்லவில்லை.சரியாக ஆறு மணி இருக்கும் ஒரு பெரிய பாத்திரம் நிறைய இட்லி இருந்தது .அடுத்த பாத்திரத்தில் நிறைய சாம்பார் இருந்தது .ஒவ்வொருவரும்“நான்கு கொடுங்கள் ஆறு கொடுங்கள் "என்று ஒரு பாத்திரத்தில் இட்டிலியும் மறு பாத்திரத்தில் சாம்பாரையும் வாங்கிக் கொண்டு சென்றார்கள்.கல்லாப்பெட்டி அருகில் யாரும் இல்லைவருபவர்கள் அதற்கான பணத்தைப் பெட்டியில்போட்டு விட்டு பாக்கிச் சில்லரையும் எடுத்துக்கொண்டார்கள்.பெரியவர்கள் இருவரும் அந்தப் பக்கமே பார்க்கவில்லை.இட்லி சாம்பார் கொடுப்பதிலேயே கவனத்தைச் செலுத்தினார்கள்.“கல்லா பெட்டியில் ஒருவரும் இல்லையே?யாராவது ஏமாற்றினால் என்ன செய்வீர்கள் “என்று கேட்டேன்.“இல்லை தம்பி யாரும் அப்படிச் செய்ய மாட்டார்கள்.அப்படியே இருந்தாலும் போனால் போகிறது.காசு இல்லாமல் கூனிக் குறுகி பிச்சை எடுப்பது கஷ்டமாக உள்ளவர்கள் சாப்பிட்டு விட்டுப் போகட்டும் என்று விட்டு விடுவேன்”“இந்த நாள் வரை எனக்கு எந்தவித நஷ்டமும் இல்லை.அதில் எனக்கு மகிழ்ச்சிதான்” என்று சொன்னார்.அவருக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.இப்படியும் மனிதர்களா என்று வியப்படைய வைத்தது.மேலும் கொஞ்ச நேரம் இருந்துவிட்டு அவரிடம் விடைபெற்றுக்கொண்டு ஊருக்கு வந்துவிட்டார்.மாதங்கள் போனது.கடந்த இரண்டு வாரங்களாக மணியார்டர் வரவில்லை.என்ன விஷயம் என்று அவருக்குப் புரியவில்லை.காப்பகத்தின் உரிமையாளரிடம் சொல்லி இருவரும் காரில் போவதாக முடிவு செய்தார்கள்.மாலை மணி ஆறு ஆனது.எப்போதும் போல் இட்லி வியாபாரம் நடந்து கொண்டிருந்தது.எல்லோரும் வந்து வாங்கிக் கொண்டு போனார்கள்.அதே கல்லாப்பெட்டி .எல்லோரும் பணத்தைப் போட்டு பாக்கியை எடுத்துக் கொண்டு போனார்கள்.மீனாட்சி அம்மாள் இட்லி கொடுத்துக் கொண்டிருந்தார்.சாம்பார் பாத்திரத்திலிருந்து வாங்குபவர்களே சாம்பாரை ஊற்றி கொண்டு போனார்கள்.மீனாள் ராமசாமியைக் காணவில்லை.உள்ளே நுழைந்தபோது அவருடைய பெரிய புகைப்படம் மாலை போட்டு வைத்திருந்தார்கள்.அவருக்குப் புரிந்து விட்டது.விசாரித்ததில் அவர் இறந்து இருபது நாட்கள் ஆனதாம்.அங்குள்ள மக்கள் உதவியால் ஈமச் சடங்குகள் நடந்ததாம்.இரண்டு நாட்களாகத் தான் மறுபடியும் வியாபாரத்தை ஆரம்பித்துள்ளாராம் அவர் மனைவி.“உங்கள் கணவர் எங்கள் காப்பகத்திற்கு வாராவாரம் பணம் அனுப்பும் விவரம் உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டேன்“தெரியும் “என்று சொன்னார்.“நீங்கள் காப்பகத்திற்கு வருவதற்குத் தயாராக இருக்கிறீர்களா?” என்று கேட்டேன்.“இல்லை ஐயா! அவர் இறந்தவுடன் இங்கு உள்ளவர்கள் காட்டிய அன்பு என்னை வியப்படையச் செய்தது.எனவே என்னால் முடியும் வரை இந்த கடையை நடத்துவது என்று முடிவு செய்துள்ளேன்."அடுத்த வாரம் முதல் என்னுடைய கணவர் அனுப்பும் தொகையை தொடர்ந்து அனுப்பி வைக்கிறேன்.அதை நீங்கள் உங்கள் காப்பகத்தின் கணக்கில் வைத்துக் கொள்ளவும்.அங்கு உள்ள வயதானவர்களுக்கு என் கணவருடைய ஆசைப்படி உபயோகப்படட்டும். ”“என்னைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம்.இங்கு உள்ளவர்கள் எல்லோரும் என்னை நன்றாக பார்த்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்றார்.“சரிம்மா, உங்களுக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால் எங்களுக்கு போன் செய்யுங்கள்” என்று சொல்லி காப்பகத்தின் முகவரி அட்டையைக் கொடுத்து விட்டுத் திரும்பினார்.தேடலின் லோகு
-
The Fall என்றொரு ஆங்கிலத் திரைப்படம் பார்த்தேன், நல்ல காட்சி அனுபவம் தரக்கூடியது தான். ஆனால், எந்த லாஜிக்கும் இல்லாத ஒரு அதீதப் புனைவு. 2000 அடி உயர தொலைக்காட்சி கோபுரத்தில் ஏறும் இரண்டு பெண் நண்பர்களின் சாகசம் தான் படம்.ஏணிப்படிகள் எல்லாம் உடைந்து நொறுங்கிய நிலையில் அவர்கள் அந்த கோபுரத்தின் உச்சியில் சிக்கிக் கொள்கிறார்கள். அவர்கள் இறுதியில் என்னவானார்கள் என்பது தான் படம்.திரைப்படத்தில் வரும் Hunter எனும் நாயகியின் தோழி "அச்சத்தை வென்று விட்டால், வாழ்வின் உச்சத்தை அடைய முடியும், வாழ்வு மிகக் குறுகிய காலம்தான், இந்தக் காலத்தில் நாம் வாழ்வதற்கான உணர்வை சாகசங்களால் அடைய முடியும்" என்று சொல்லி நாயகியை உயரத்துக்கு அழைத்துப் போவாள்.Hunter பேசுகிற வசனங்கள் அமெரிக்கர்களின் தத்துவார்த்த உளவியல் சார்ந்தது என்பதை என்னால் உணர முடிந்தது. நாயகி Becky தொடர்ந்து அச்சப்படுகிறாள். என்னால் முடியாது என்று பின்தங்குகிறாள். ஆனால், தத்துவார்த்தமான உணர்வு மயப்படுத்தும் சொற்களைக் கொண்டு வழி நடத்துகிறாள் Hunter.போராடுவதா? சரணடைவதா? என்ற கேள்வி நம்முடைய வாழ்வில் தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கும். 15 வயதில் இருந்து 30 வயது வரை மனிதர்கள் போராடிப் பார்ப்பதற்கான மனமும், உடலும் இணைந்திருக்கும்.இந்தக் காலகட்டத்தில் போராடிப் பார்த்து பயிற்சி பெற்றுக் கொள்ளலாம். ஆனால் அதற்குப் பிறகான வாழ்வில் தத்துவார்த்த வழிகளில் சரணடைதல் அல்லது ஏற்றுக் கொள்ளுதல் என்பது வாழ்வை மிக அழகானதாக மாற்றும்.ஒரு அவசரமான வேலையாக வெளியில் போகிறீர்கள், ஒரு குறிப்பிட்ட மனிதரை குறிப்பிட்ட நேரத்தில் சந்திக்க வேண்டும். பாதி வழியில் சாலை முழுவதும் கடுமையான போக்குவரத்து நெரிசல், மெல்ல நகர்கிறீர்கள்.திடீரென்று மழை வேறு குறிக்கிடுகிறது. என்ன செய்வீர்கள்? அமைதியாக நிகழ்காலத்தை ஏற்றுக் கொண்டு ஒரு ஓரமாக நின்று முடிந்தால் ஒரு தேநீர் சாப்பிடலாம். இதுதான் சூழலில் சரணடைதல்.இயல்பாக நிகழும் இடர்களை அல்லது துன்பங்களை எதிர்த்துப் போராடுவது என்பது துன்பம் அதிகரிக்குமே தவிர குறையாது. இது போக பெருவாழ்வு நாம் திட்டமிடுகிறபடி செயல்படுகிற ஒன்றல்ல.அதன் திட்டங்களின்படி தான் நாம் இயங்கியாக வேண்டும். உலகின் பல்வேறு திட்டங்களை ஒரு பெருந்தொற்றால் இரண்டு வருடங்கள் முடக்கி விட முடிந்தது. உயிர்பிழைத்திருத்தல் மட்டுமே ஆகப்பெரிய தத்துவமாக ஒரே இரவில் மாறிப்போனது.சூழல்களின் அடிமைகளாகத்தான் நாம் வாழ வேண்டியிருக்கிறது. திடீரென்று வருகிற அதிர்ஷ்டம், எதிர்பாராமல் வருகிற துன்பம் என்று இரண்டு வாய்ப்புகளும் நம்மோடு பயணிக்கிறபோது நாம் இரண்டு சூழல்களுக்கும் பொருந்தக் கூடிய ஒரு மனநிலையை வளர்த்துக் கொள்ள வேண்டியது மிக அவசியம்.ஏகாந்தமாக, இதுதான் வாழ்வு என்று இருப்பதை ஏற்றுக்கொள் என்றுதான் பெரும்பாலான மதங்களும், தத்துவங்களும் சொல்கின்றன.கீதை "எதற்காக வருந்துகிறாய், எதைக் கொண்டு வந்தாய்? என்கிறது.கிறிஸ்துவம் "கலங்காதிரு, அவரே உனது வெளிச்சமாக முன்னே செல்கிறார்" என்கிறது.இஸ்லாம் "துன்பங்களின் வழியே நீ இன்பத்தை அடைவாயாக" என்கிறது.போராட்டங்களைத் தாண்டி அமைதியாக வாழ்வை எதிர்கொள்கிற "சரணடைதல்" மேலான விடுதலையை வழங்குவதாக இருக்கிறது. அது புதிய பாதைகளைத் திறந்து இன்னும் சிறந்த பாதைகளின் வழியே பயணிக்க உதவுகிறது.திட்டமிடுதல் அல்லது முயற்சித்தல் என்கிற அறிவியல் விஷயங்களுக்கு எதிராகப் பேசுகிறேன் என்று நினைக்க வேண்டாம்.திட்டமிடுங்கள், கனவு காணுங்கள், அதற்காக உழையுங்கள், போராடுங்கள், வெற்றியடையுங்கள். அதுதான் நவீன மனிதர்களின் ஆகச்சிறந்த தத்துவமாக இருந்திருக்கிறது. மனித நாகரீகத்தை அதுதான் கட்டமைத்து வழிநடத்தி இருக்கிறது.இறுதியில் உங்கள் வெற்றியைக் கொண்டாடும் மனநிலையை இழந்து விடவேண்டாம் என்பதே நான் சொல்ல வருவது.திட்டமிடுங்கள், தோல்வி வருகிறதா? ஏற்றுக் கொள்ளுங்கள், போரிடுங்கள், தோல்வியடைகிறீர்களா?, தோல்வியை ஏற்றுக் கொள்ளுங்கள். வெற்றி பெறுகிறீர்களா? கொண்டாடி மகிழுங்கள்.இறுதியில் வாழ்க்கை என்பது அற்புதமான Biological Probability என்பதை மட்டும் மறந்து விடாதீர்கள், அந்த அனுபவத்தை இழந்து விட்டால் எந்த ஒரு பொருளையும் உங்களால் கண்டடைய முடியாது.இறுதிவரை பொருளைத் தேடி ஓடிக்கொண்டே இருக்கிற மனிதர்களைப் பார்த்திருக்கிறேன், வேகவேகமாக சாப்பிடுவார்கள், வேகவேகமாக கூட்டங்களில் கலந்து கொள்வார்கள்.இதை இப்படி மாற்றுவேன், அதை இப்படி ஆக்குவேன் என்று ஒரு பரபரப்பான மனவுலகிலேயே வாழ்வார்கள். இறுதியில் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் வீழ்ந்து கிடக்கும் போது"ஒரு நாளில் கூட இருக்கிறவற்றை அனுபவித்து நிதானமான அமைதியான ஒரு வாழ்க்கையை வாழத் தவறிவிட்டேனே?" என்று புலம்புவார்கள்.வேகமான பரபரப்பான வாழ்க்கை ஒரு அந்தஸ்து அல்லது தகுதி என்று சிலர் தவறாகப் புரிந்து கொள்கிறார்கள். அதில் எந்த உண்மையும் இல்லை. நிதானமான, எளிமையான வாழ்வே உண்மையான தகுதி.நான் மும்பையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த காலத்தில் ஒரு வெளிநாட்டுத் தூதுவர் வீட்டுக்கு மளிகைப் பொருட்களைக் கொண்டு செல்பவனாக இருந்தேன்.வாழ்க்கையை நிதானமாகவும் கொண்டாட்டமாகவும் வாழ்கிற மனிதர். அவரது வீட்டின் வரவேற்பறையில் ஒரு அலங்காரம் பொருட்கள் வைக்கிற பெரிய கண்ணாடி அலமாரி இருக்கும்.அந்த அலமாரி முழுவதும் உடைந்த பொருட்கள், உடைந்த கண்ணாடிக் குடுவைகள், உடைந்த மரப்பொம்மைகள், உடைந்த கற்கள் என்று ஒழுங்கற்ற பொருட்களால் நிரப்பி இருப்பார். புதிய புதிய உடைந்த பொருட்களையும் அடுக்குவது சேர்ப்பது என்று மிகுந்த ஈடுபாட்டோடு அந்த வேலைகளை செய்வார்.அந்த அலமாரி யின் மேலாக ஒரு சிறிய சொற்றொடரை நான் பார்த்தேன், "To be beautifully broken is to be broken before the Lord" அன்று என்னால் அந்த சொற்றொடரின் பொருளைக் கண்டடைய முடியவில்லை.ஆனால் இப்போது உடைந்து போனவற்றிலும் நம்மால் அழகியலைக் கண்டடைய முடியும் என்பதைத் துல்லியமாக உணர முடிகிறது.இரண்டு நாட்களுக்கு முன்பு சூளகிரி அருகே பெயர் தெரியாத மலைக்கிராமம் ஒன்றில் இருந்தேன். நாங்கள் ஒரு கனவானின் வீட்டில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம்.பதினைந்து நிமிடங்களுக்குப் பிறகு வீட்டுக்கு வெளியே வந்து நின்றபோது மதில் சுவருக்குப் பக்கத்தில் ஒரு சக்கர நாற்காலியில் ஒரு மனிதன் அமர்ந்திருந்தான்.பரபரப்பான அந்த மகிழுந்துகளின் வருகை, மனிதர்களின் உரையாடல் என்று எல்லாம் கடந்து அவன் ஒரு ஏகாந்த மனநிலையில் இருந்தான்.அவனால் பேசவியலாது, அவனால் நடக்கவியலாது, நான் மெல்ல அவனருகில் போய் நின்று "தம்பி உன் பெயரென்ன?" என்றேன்."பாயாச்சி.....பாயாச்சி" என்று உற்சாகமாக பெருங்குரலில் பேசினான். என் கையில் இருந்த ஆப்பிள் துண்டு ஒன்றை எடுத்து அவனுக்கு ஊட்டினேன். அவனது முகத்தில் ஒரு மகிழ்ச்சியும், உற்சாகமும் பரவியது.உடனடியாக அவனது அம்மா அங்கு வந்து "பாலாஜி, எனது மூத்த மகன்" என்றார், பாலாஜியின் சக்கர வண்டியை நகர்த்தி அந்த வீட்டின் பெரிய மாமரத்தின் வழியே நடந்தேன். கூடவே இரண்டு சிறுவர்கள் எங்களோடு சேர்ந்து கொண்டார்கள். ஒரு அரைமணி நேரம் பாலாஜியுடன் நாங்கள் உரையாடினோம்.இறுதியில் விடைபெறும் போது "Bye பாலாஜி" என்று உரத்த குரலில் விடை கொடுத்தேன். வாசல் வரை வந்து பாலாஜியின் தாய் திடீரென்று எனது கைகளைப் பிடித்துக் கொண்டார். அவரது கண்கள் ஈரமாகி இருந்தது."நாங்கள் அவனைப் புறக்கணித்து விட்டோம், நாங்கள் அவனது உணர்வுகளைப் புரிந்து கொள்வதில்லை, மூன்று வேளையும் உணவு கொடுப்பதோடு முடித்துக் கொள்வோம், நீண்ட காலத்துக்குப் பிறகு அவனது பெயரைச் சொல்லி விடை பெறுவது நீங்களாகத்தான் இருக்க வேண்டும்" என்றபடி என் கைகளை விடாமல் பற்றிக் கொண்டார்.நிதானமான வாழ்க்கை என்பது சிலருக்கு வரம், சிலருக்கு சாபம். பாலாஜியின் நிதானமான வாழ்க்கை, அந்தத் தாயின் துயரம். இதன் நடுவே விருந்தினனாகப் போன என்னுடைய இருப்பு என்று யோசித்துப் பார்த்தால் வாழ்வின் முடிச்சுகள் அவிழ்ந்து அதன் போக்கையும், நம்முடைய பரபரப்பான வாழ்வின் பொருளற்ற தன்மையையும் அறிந்து கொள்ள முடியும்.பாலாஜியைப் போல உலகமெங்கும் லட்சக்கணக்கான மனிதர்கள் ரத்தமும் சதையுமாக யாராவது நம்மிடம் வந்து உரையாட மாட்டார்களா என்று தனிமையில் வாடுகிறார்கள். பேசக்கிடைக்கிற வாய்ப்புகளை எல்லாம் மறுதலித்து நாம்தான் எங்கேயோ ஓடிக்கொண்டே இருக்கிறோம்."எங்கே ஓடுகிறோம்?" என்றொரு கேள்வியை எழுப்பினால் அமைதியாக அதன் விடை மிக எளிமையாக நமக்குக் கிடைத்து விடும்.@followers @highlight31st March 2024AI Generated image by Freepik App
-
*************************ஒரு முறை சோழ நாட்டிலே சோழ மன்னன் தம் புலவர்களை எல்லாம் அழைத்து மறுநாள் பொழுது விடிவதற்குள் “#நாலுகோடிப்பாடல்” பாடிவர வேண்டும் என்று கட்டளையிட்டார். ஒரு நாளில் நாலு பாடல் என்பதே பெரிய வேலை. அதுவும் புலமையுடன் எழுத வேண்டும். நாற்பது பாடல் என்றாலும் பரவாயில்லை. ஒரேயடியாக நாலுகோடிப் பாடல்கள் வேண்டுமானால் நாங்கள் எப்படி எழுதுவோம். என்று புலம்பத் துவங்கி விட்டார்கள் புலவர்கள். எப்படிப் பாடுவது என அஞ்சினார்கள்.அவ்வய்யார் அப்போது அவ்வழியே வந்தார். புலவர்களின் தர்ம சங்கடத்தை கேட்ட ஒளவைப் பாட்டி “பூ இவ்வளவு தானா?” என்று #சொல்லி_சிறப்பானபண்புகளைக்’ #குறிக்குமாறு_நான்குபாடல்களை #ஒவ்வொன்றும்_ஒருகோடிக்குச்சமானம்எனப்பொருள்படும்படியாகப்_பாடி அந்த நான்கு பாடல்களையும் புலவர்களிடம் தந்தார்.மறுநாள் புலவர்கள் அந்தப் பாட்டை மன்னரிடம் பாடிக் காட்டினார்கள். மன்னனுக்கோ மிகவும் ஆச்சரியம். இத்தனைச் சிறப்பு வாய்ந்த பாடலை இவ்வளவு சமயோசிதமாகப் பாட ஒளவையாராலேயே முடியும் என்று கூற புலவர்களும் ஒத்துக்கொண்டார்கள்.**************************************************நல்ல பண்புகளை மதித்து நடக்காதவரின் வீட்டின் முன்பகுதியைக் கூட மிதிக்காமல் இருப்பது, செல்லாமல் இருப்பது கோடி பொன்னுக்கு இணையானது ஆகும். (அதாவது மதியாதார் தலைவாசல் மிதியாதே!)******************************"**"****************உண்ணுமாறு விரும்பிக் கேட்டுக் கொள்ளாதவரின் வீட்டில் உண்ணாமல் இருப்பது கோடி பொன்னுக்கு இணையானது ஆகும்.**************************************************கோடி பொன்னைக் கொடுத்தாவது நல்ல குடும்பத்தில் பிறந்தவர்களுடன் சேர்ந்து வாழ்வது கோடி பொன்னுக்கு இணையானது ஆகும்.**************************************************பலகோடி பொன் கிடைப்பதாக இருந்தாலும் சொன்ன சொல்லிலிருந்து தவறாமல் வாழ்வது கோடி பொன்னுக்கு இணையானது ஆகும்.