![](https://yarl.com/forum3/uploads/monthly_2024_01/Screenshot_20240106-171002_Gallery.jpg.d0d3b46a4dece73051de93911d10a7f2.jpg)
யாயினி
-
Posts
9210 -
Joined
-
Days Won
16
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by யாயினி
-
ஒன்றரை மாதப் பயிர்கள்; யானைகளால் நாசம்
விவசாயிகள் கவலை!
(யோகி)
கிளிநொச்சி மகிழங்காடு கமக்காரர் அமைப்புக்குச் சொந்தமான வயல் பகுதிகளில் நேற்று (18) இரவு காட்டு யானைகள் புகுந்து நாசம் செய்துள்ளன.
விதைக்கப்பட்டு ஒன்றரை மாதங்களே ஆன பயிர்களே இவ்வாறு காட்டு யானைகளால் அழிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இது முதல் தடவை இல்லை எனவும் தொடர்ச்சியாக காட்டுயானைகளால் தமது நெல் வயல்கள் அழிவடைவதாகவும் தெரிவித்துள்ள விவசாயிகள், இது தொடர்பில் உடனடி நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் தமக்கான பாதுகாப்பு வேலிகளை அமைத்துத் தர வேண்டும் எனவும் உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். (ஏ)
-
இலங்கையில் ஏற்படவுள்ள மிகப்பெரிய புவிநடுக்கம்!!
(புதியவன்)
நேற்றையதினம் (18) இரவு 11.02 மணியளவில் இலங்கையில் சிறியளவிலான நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளதாக செய்தித்தளங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் தகவல்கள் வெளியாகின.
இலங்கையின் நிலப்பகுதிகளிலும், இலங்கையை அண்மித்த கடல் பகுதிகளிலும் கடந்த 5 ஆண்டுகளில் 29 நில அதிர்வுகள் அதிகாரபூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளன. இவை புவிநடுக்க பதிவுக் கருவியில் (Seismograph) குறைந்தளவான ரிக்டர் அளவுத்திட்டத்தில் அளவிடப்பட்டிருந்தாலும் கூட, இவை அனைத்தும் நாம் ஒரு மிகப்பெரிய புவிநடுக்கத்தை எதிர்கொள்ளப்போகின்றோம் என்பதற்கான எதிர்வுகூறலே ஆகும்.
பூமியானது பெரியதும் சிறியதுமான பல கவசத்தகடுகளால் அமையப்பெற்றது. இதில் இலங்கையானது இந்தோ-அவுஸ்திரேலியா கவசத்தகட்டின் வட மேற்கு பிராந்தியத்தில் அமைந்துள்ளது. இலங்கையில் அண்மைக்காலமாக நிகழும் பல புவிநடுக்க அதிர்வுகள் இலங்கையின் கீழான சிறிய கவசத்தகடுகளில் விலகல், ஒருங்கல், அமிழ்தல் போன்ற சிறியளவிலான மாற்றங்கள் ஏற்படுவதை வெளிப்படுத்தியுள்ளன. இந்த மாற்றங்கள் பெரிதாக அமையும் சந்தர்ப்பங்களில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய புவிநடுக்கங்கள் இலங்கையில் ஏற்படும் வாய்ப்புள்ளது.
உலகில் முன்னெதிர்வு கூற முடியாத மிகப்பெரும் உயிர் ஆபத்துகளை ஏற்படுத்தக்கூடிய இயற்கை இடர்களில் புவிநடுக்கம் முதன்மையானது. ஆயினும் இது தொடர்பில் போதியளவு விழிப்புணர்வுடன் இருந்தால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை ஓரளவு குறைக்கலாம்.இலங்கையில் புவிநடுக்கத்தைப் பதிவு செய்யும் புவிநடுக்கப் பதிவுக் கருவிகள் கண்டி-பள்ளேகலவிலும், அனுராதபுரம்- மிகிந்தலையிலும், மட்டக்களப்பிலும் மற்றும் மாத்தறையிலும் உள்ளன. இவ்வாறாக வவுனியாவில் நேற்று ஏற்பட்ட நில அதிர்வு மிகிந்தலையில் உள்ள புவி நடுக்கப் பதிவுக் கருவியில் பதிவாகியுள்ளது.
வவுனியாவில் இருந்து 23 கிலோமீட்டர் தொலைவில் மதவாச்சி, கெப்பத்திகொல்லாவ ஆகிய பகுதிகளை அண்மித்து இந்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.
நேற்றிரவு 11.02 மணியளவில் 2.3 மெக்னிடியூட் அளவிலான நில அதிர்வு உணரப்பட்டதாக புவிசரிதவியல், நில அளவை மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
இதனால் சேதங்கள் எதுவும் பதிவாகவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் இலங்கையின் அனைத்துப் பகுதியினரும் மிகப்பெரியவொரு புவிநடுக்கத்தை எதிர்கொள்ள ஆயத்தமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. (ஏ)
-
*எழுதியது யார் என்று தெரியவில்லை..*00ஆனால்...உண்மையை புட்டு புட்டு வச்ச மாதிரி இருக்கு!● வெற்றிலை பாக்கு போட்டால் அது கிராமம்.பீடா போட்டால் அது நகரம்.● பச்சை குத்தினால் கிராமம்.டாட்டூ (Tattoo ) போட்டுக் கொண்டால் நகரம்.● மருதாணி வைத்துக் கொண்டால் கிராமம்.மெஹந்தி போட்டா நகரம்.● மஞ்சள் தண்ணி ஊத்தி கொண்டாடினா கிராமம்.இரசாயன (Chemical) பொடி தூவி ஹோலின்னா (Holi) நகரம்.● கையில் மஞ்சப் பை வைத்திருந்தால் கிராமம்.பாலித்தீன் பை வைத்திருந்தால் நகரம்.● கணவன் தன் மனைவியை நண்பர்களுக்கு அறிமுகம் செய்தால் கிராமம்.மனைவி அவள் நண்பா்களை கணவனுக்கு அறிமுகம் செய்தால் நகரம்.● கிழிந்த ஆடையை துவைத்துப் போட்டால் கிராமம்.நல்ல ஆடையை கிழித்து போட்டால் நகரம்.● உதவிக்கு மிதிவண்டி இருந்தால் கிராமம்.உடம்பைக் குறைக்க மிதிவண்டி இருந்தால் நகரம்.● கோடு போட்ட அண்டர்வேர் (பட்டாப்பட்டி) கிராமம்.இடுப்பு ஜட்டி தெரிய பேன்ட் நகரம்..● நாய் வீட்டைக் காவல் காத்தால் அது கிராமம்.நாயை வீட்டில் வைத்து காவல் காத்தால் அது நகரம்.*இப்ப இன்னொன்று .*● சாதத்தில் தண்ணீர் ஊற்றி, பழையது சாப்பிட்டா கிராமம்.அமேசான்ல ஆர்டர் பண்ணி பழையது சாப்பிட்டா நகரம்.*நீங்கள் கிராமமா அல்லது நகரமா ?*All reactio
-
படைப்பு ; கவிதை ரசிகன்குமரேசன்மலரைநுகர்ந்துப் பார்த்திருக்கிறாய்....தேனைசுவைத்துப் பார்த்திருக்கிறாய்....தென்றலைதீண்டிப் பார்த்திருக்கிறாய்.....இயற்கையைரசித்துப் பார்த்திருக்கிறாய்...இசையைக்கேட்டுப் பார்த்திருக்கிறாய்...என்றாவதுபட்டினிகிடந்து பார்த்திருக்கிறாயா ?காற்றில்தூசுகளும் மாசுக்களும்சப்தமும் மணமும் மட்டும்அலைந்துக் கொண்டிருக்கவில்லை..."அம்மா பசிக்கிறதே!" என்றவார்த்தையும்அலைந்து கொண்டுதான் இருக்கிறது......ஔவையார் சொன்னது போல்"மனிதராய் பிறப்பது அரிதல்லகுருடு செவிடாய் பிறக்காமல்இருப்பது அரிதல்ல .....ஔவையார் சொன்னஅரிதுகளிலேயேஅரிதானது'மூன்று வேளை உணவு 'கிடைப்பதுதான் அரிது.....!உடலில் பற்றிய 'செந்தீ'' கூடஒரே ! நாளில் கொன்று விடுகிறதுஇந்த வயிற்றில் பற்றிய'பசித்தீ' தான்ஒவ்வொரு நாளும் கொள்ளும்...!ஒருவனுக்கு அறிவு பசி !ஒருவனுக்கு ஆன்மீகப் பசி !ஒருவனுக்கு அன்பு பசி !ஒருவனுக்குப் பணப்பசி !ஒருவனுக்குப் பதவிப்பசி!எந்தப் பசி வேண்டுமானாலும்இருக்கலாம்ஆனால்ஒருவனுக்கு" வயிற்றுப்பசி "மட்டும்இருக்கவே கூடாது.....!தனித்திருவிழித்திருபசித்திரு என்றுவிவேகானந்தர் சொன்னார்ஆனால்....பலர்"பசித்தே இறக்கின்றனர்...!'காற்றில் வரும் பல ஓசையைக்கேட்டவர் உண்டு....வயிற்றை நனைக்க" பால் " இல்லாமல்கண்கள் நனையகன்னம் நனையஏன்?'உடல் ' நனையவே!கதறியழும்பச்சிளம் குழந்தையின்குரளைக் கேட்டவர் உண்டா ?"பசிக்கிறதுஏதாவது கொடுங்கள் " என்றுகேட்பதற்குக் கூட'சக்தி 'இல்லாமல்சாலை ஓரத்தில் கிடப்பவர்களின்'கண்ணீரின் ஈரம் ''காற்றின் ஈரமாக'வருவதைஉணர்ந்தவர் உண்டா ?'உணவில்லாமல்' இறந்தஒரு 'குழந்தையின் 'அல்லதுஒரு 'முதுமையின் 'சடலத்தின் ' வாசணையை 'சுமக்க முடியாமல்சுமந்து வரும்காற்றின் சுமையைஅறிந்தவர் உண்டா ?"தனி ஒருவனுக்குஉணவில்லை எனில்ஜெகத்தினை அழித்திடுவோம்" என்றார் பாரதியார்....தனி ஒருவனுக்கு என்ன?ஏழு நிமிடத்திற்கு ஒருவர்உணவில்லாமல் இறக்கிறார்கள் ஆனால் ....நாங்களோ!கைக்கட்டிவேடிக்கைப் பார்க்கிறோம்..."நாய் சாப்பிடும்எச்சில் தொட்டியில்மனித வாய் சாப்பிடும் "இந்த தேசத்திற்குஎதற்கடா தேசியக்கொடி ?பசியின் அழுகையும்பட்டினியின் கதறலுமே !இந்நாட்டின்"தேசிய கீதமானப்" பிறகுஇங்கு"ஜன கன மன" எதற்குடா....?பசி படடினி தீரும் வரை...மக்களாட்சிஜனநாயகம்சமதர்மம்சுந்திரம் என்பதெல்லாம்வெறும் வார்த்தைதானடா....!நிலவிற்குச் செயற்கைக்கோள் விட்டோம் என்று'மார்பைத் தட்டிக் 'கொள்கின்றவர்களே !இங்கு பசிக்கு'வயிற்றைத்தட்டிக் : கொண்டிருப்பவர்கள்ஏராளம் ! ஏராளம் !லட்ச லட்சமாய் செலவழித்துசிலை வைப்பதும்கோடி கோடியாய் செலவழித்துகோயில் கட்டுவதும்இவர்களின்பசி பட்டினியை தீர்க்குமா ?கொடிகட்டி ஆண்டவனேஒரு நாள்மாண்டானடா..!நீ கொள்ளையடித்துஆள்கிறயேநீ என்ன மடையனாடா....?உடையில்துண்டுப் போட்டுக் கொள்பவன்அரசியல்வாதி இல்லையடா...!ஏழையின் வயிறு கண்டுஉணவு போடுபவனேஅரசியல்வாதியடா....!உன் பிள்ளைகளின்கழுத்தில் கிலோ கிலோவாகநகை போடமூன்று வேளையும்அறுசுவை உணவு போடஎன்னமோ செய்யடா...!ஆனால் இந்த ஏழையின்வயிறு பசிக்கும் போதுஉணவு போட ஏதாவது செய்யடா..!எரிந்த வீட்டில் தான்எதுவுமில்லாமல் போகும்திருடிய வீட்டில்ஏதாவதுஇல்லாமலா போய்விடும்....என்னைமன்னித்து விடுங்கள்...யாருக்கும்உணவு கொடுக்காதீர்கள்....!முதுமையாக இருந்தால்மட்டும் உணவு கொடுங்கள்இளமையானவர்களாக இருந்தால்வேலை கொடுங்கள்சிறுவர் சிறுமிராக இருந்தால்படிப்பு கொடுங்கள்நீங்கள் இன்றைய உணவைகொடுத்து விடுவீர்கள்நாளை உணவைஅவர்களுக்கு யார் கொடுப்பார்...?உங்களிடம்கையெடுத்து கும்பிட்டுகேட்கிறேன்......பசித்தீயால்இறந்தவர்களின் உடல்களைமீண்டும் சிதைத்தீயால்எரிக்காதீர்கள்......!அப்படியே எரித்தாலும்அவர்கள் உடலில்என்ன இருக்கிறது எரிவதற்கு? அதுதான் எல்லாம்எறிந்து விட்டதே பசித்தீயில்...!பட்டினி கிடக்கும்அனைவருக்குமாகஅழுவதையும்எழுதுவதையும் தவிரவேற என்ன செய்ய முடியும்கவிஞனாய்பிறந்து விட்ட என்னால்......!!!ஏதாவதுஉதவி கேட்டவருக்குமுடிந்ததைச் செய்வோம்'பசிக்கிறது' என்று கேட்டவருக்கு'முடியாததையும் ' செய்வோம்...கவிதை ரசிகன் குமரேசன்All reactions:
-
தீக்கோழி முட்டையின் மனைவி: ஒரு தென்னாப்பிரிக்க கதைதென்னாப்பிரிக்காவின் மலைகளுக்கு நடுவே அமைந்திருந்த ஒரு சிறிய கிராமத்தில் ஒரு காலத்தில் தாபோ என்ற ஏழை வாழ்ந்து வந்தார். அவர் கனிவான இதயம் கொண்டவர், ஆனால் அவர் வறுமையோடு வாழ்க்கையை எதிர்கொள்ளப் போராடினார். அவர் ஒவ்வொரு நாளும் தனது சிறிய தோட்டத்தில் கடுமையாக உழைத்தார், அவர் தனது குடும்பத்தின் பசியைப் போக்கக்கூடிய அளவுக்கு தரமான அறுவடைகளை எதிர்பார்த்தார்.ஒரு நாள், தபோ தனது பயிர்களைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, புதர்களுக்கு இடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு பெரிய தீக்கோழி முட்டையின் மீது கால் இடறித் தடுமாறினார். ஆர்வத்துடனும் நம்பிக்கையுடனும் அவர் அந்த முட்டையை எடுத்து வீட்டிற்கு எடுத்துச் சென்றார். வீட்டுக்கு சென்றதும் அவர் வியக்கும் வண்ணம், முட்டை உடைந்து உள்ளே ஒரு அழகான இளம் பெண் வெளிப்பட்ட்டாள். அவள் காலைப் பனியைப் போல மென்மையான தோலையும், நட்சத்திரங்களைப் போல மின்னும் கண்களையும் கொண்டிருந்தாள்."என்னை விடுவித்ததற்கு நன்றி" என்றாள் அந்தப் பெண். "நான் நந்தி, தீக்கோழி முட்டையின் மனைவி. நீங்கள் என்னிடம் கருணை காட்டியுள்ளீர்கள், நான் உங்களுக்கு நீங்கள் விருப்பப்படுவதைத் தருகிறேன்."தபோவின் உள்ளம் நன்றியினால் பொங்கியது. அவர் தனது குடும்பத்தின் போராட்டங்களைப் பற்றி நினைத்தார் - பசி, வறுமை - மற்றும் அவருக்கு என்ன தேவை என்பதையும் சரியாக அறிந்திருந்தார். "நந்தி", "தயவுசெய்து என்னை எங்கள் ஊரின் தலைவனாக ஆக்குங்கள். என் மக்கள் என்னை மதிக்கட்டும், கௌரவிக்கட்டும்" என்றார்.நந்தி சிரித்தாள். "உன் விருப்பம் என் கட்டளை" என்று பதிலளித்தாள். "ஆனால் நினைவில் கொள்ளுங்கள், இரக்கத்தையும் கருணையையும் கொண்டிருப்பேன் என எனக்கு உறுதிக்கொடுங்கள் என்றால். அவரும் அப்படியே உறுதியளித்தார். நீங்கள் தலைவனாக இருக்க இரக்கமும் கருணையும் அவசியம் " என சொல்லிவிட்டு நந்தி மறைந்தாள்நந்தியின் வார்த்தைகள் உண்மையாக, தபோ தலைமை தபோ ஆனார். அவரது தலைமையின் கீழ் அவரது கிராமம் செழித்தது, அவருடைய நேர்மை மற்றும் இரக்கத்திற்காக மக்கள் அவரைப் போற்றினர். ஆனால் காலப்போக்கில், தபோ திமிர்பிடித்தார். கருணை பற்றி நந்தி கற்பித்த பாடத்தை அவர் மறந்துவிட்டார்.ஒரு நாள், நிலத்தில் வறட்சி ஏற்பட்டது. ஆறுகள் வறண்டு, பயிர்கள் கருகின. விரக்தியடைந்த தபோ மீண்டும் நந்தியின் உதவியை நாடினார். "தீக்கோழி முட்டை மனைவி," அவர் கெஞ்சினார், "எங்கள் வறண்ட வயல்களுக்கு மழை கொடுங்கள்."நந்தி கண்கள் சோகமாக அவன் முன் தோன்றினாள். "தாபோ," அவள் சொன்னாள், "நீங்கள் கருணையின் சாரத்தை மறந்துவிட்டீர்கள். நீங்கள் எனக்கு அளித்த வாக்குறுதியை மீறியுள்ளீர்கள்-மற்றவர்களை இரக்கத்துடன் நடத்துவேன் என்று என்னிடம் உறுதியளித்தீர்கள் ஆனால் அதனை மீறிவிட்டீர்கள் . அதனால் இப்போது, நான் உங்களுக்குக் கொடுத்ததைத் திரும்பப் பெற வேண்டும்."அந்த வார்த்தைகளோடு, தபோவை விட்டுவிட்டு நந்தி மறைந்தார். கூடவே அவனுடைய செல்வம் மறைந்தது, அவனுடைய மக்கள் அவனை விட்டு விலகினர். "உண்மையான செல்வம் என்பது பட்டங்களிலோ உடைமைகளிலோ அல்ல, பிறரிடம் நாம் காட்டும் கருணையில் உள்ளது என்பதை தாபோ உணர்ந்தார்"All reaction
-
ஆற்றல் மிக்க கதை சொல்லி எஸ்.பொ .. அவர்குறித்து ஒரு சுவாரஸ்யமான செய்தியைப் பகிர விரும்புகிறேன்.போர்த்துக்கல் நாட்டைச் சேர்ந்த கவிஞன் பெர்ணான்டோ பெஸோவா. 127 புனைபெயர்களில் எழுதியதாக அறிய முடிகிறது. தமிழில் எனது வாசிப்பிற்கு உட்பட்டவரை, வாசித்தவற்றில் ஞாபகங்களில் உள்ளவரை எஸ்.பொ தான் அதிக புனை பெயர்களில் எழுதியிருக்கிறார். முகநூல் வந்தபிறகு பெர்ணான்டோ பெஸோவாவைக் கூட மிஞ்சுமளவு பலர் பேக் ஐடிகளை வைத்திருக்கிறார்கள் என்பது வேறு விசயம்.தனது பெயரை எஸ்.பொ.என்று சுருக்கி வைத்துக்கொண்ட எஸ்.பொன்ணுத்துரை, ஆரம்பக்காலத்தில் 'நான்' என்ற புனைபெயரைப் பயன்படுத்தினார். நாற்பதுகளில் சுதந்திரனில் ஆறுபுனைபெயர்களில் வாரமொன்றுக்கு இருகதை வீதம் எழுதியுள்ளார். 'சிறீதரன்' என்ற பெயரில் முதலில் கட்டுரைகள் வெளியிட்டார்.கல்கி ஈழத்துச் சிறுகதைப் போட்டியை 'மரகதம்' என்ற இதழில் நடத்தினார். அவ்விதழில் 'எழுவானோர் ஏகாம்பரம்' என்ற பெயரில் எஸ்.பொ. விமர்சனக் கட்டுரைகளைச் செய்துள்ளார். இலங்கை அரசியலை அலச 'அபிமன்யு' என்ற பெயரை 'அக்கினிக்குஞ்சு'ல் பயன்படுத்தினார்.ஈழநாட்டில் 'போதிமரநிழலில்' என்ற தலைப்பில் 'வெள்ளாங்காடு வீ. வியாச தேசிகர்' என்ற பெயரிலும், தேசாபிமானியில் 'போகிற போக்கில்' என்ற தலைப்பில் 'பொக்கன் கணபதி' என்ற பெயரிலும், இளம்பிறையில் 'நாமும் நாங்களும்' என்ற தலைப்பில் 'கொண்டோடிச்சுப்பர்' என்ற பெயரிலும், 'பிருகண்ணளை' என்ற பெயரில் நூல் விமர்சனங்களையும் எழுதியுள்ளார்.நையாண்டிக் கவிதைகள் எழுதுவதற்கு 'மூப்பன் முருகன்', 'துமிலைத் திமிலன்' என்ற பெயர்களையும், பெயர் தெரியாமல் எழுத முயன்றபோது 'பெயர்விழையான்' என்கிற புனைபெயரையும் கையாண்டுள்ளார். எஸ்.பொன்னுத்துரை என்று எழுதுவதற்கு முன், சா.பொன்னுத்துரை என்றும், பொதுஊசி, துரை, பழமைதாசன், புரட்சிப்பித்தன், ராஜ், மித்ர, நச்சாதார்க்கும் இனியன் என்ற புனைபெயர்களையும் பயன்படுத்தியுள்ளார்.