Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாயினி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by யாயினி

  1. காற்றாலைகளை எதிர்க்கும் ஒரு தீவு! நிலாந்தன். written by admin October 5, 2025 மன்னாரில் குறிப்பாக மன்னார்த் தீவுப் பகுதியில் காற்றாலைகள் நிறுவப்படுவதற்கு எதிராக அங்குள்ள திருச்சபையினரும் பொதுமக்களும் கடுமையாக எதிர்ப்பைக் காட்டி வருகிறார்கள். கடந்த திங்கட்கிழமை அங்கே கடை முடக்கமும் ஆர்ப்பாட்டமும் இடம்பெற்றன. சில வாரங்களுக்கு முன்பு கத்தோலிக்க திருச்சபையின் மறை மாவட்ட ஆயர் ஜனாதிபதியைச் சந்தித்திருந்தார். சந்திப்பின்போது அவர் மன்னாரில் நிகழும் கனிமவள அகழ்வு மற்றும் காற்றாலைத் திட்டங்கள் போன்றவற்றைக் குறித்துப் பேசியதாக அறிய முடிகிறது.அதன்பின் ஆயர் ஐரோப்பாவில் சுற்றிப் பயணத்தை மேற்கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில்,ஜனாதிபதி அனுரகுமாரவும் வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்டிருந்த அதே காலகட்டத்தில், மன்னார் தீவுப் பகுதியில் காற்றாலைகளை நிறுவுவது என்ற தனது முடிவை அரசாங்கம் அறிவித்திருந்தது. அவ்வாறு காற்றாலைகளை நிறுவுவதற்குத் தேவையான உபகரணங்கள் தீவப்பகுதிக்குள் கொண்டுவரப்படுவதைத் தடுக்கும் நோக்கத்தோடு கடந்த 26ஆம் திகதி இரவு அப்பகுதி மக்களும் கத்தோலிக்க மதகுருமாரூம் தீவின் வாயிலில் நின்று போராட்டம் நடத்திய பொழுது, அவர்கள் மீது போலீசார் பலப்பிரயோகத்தை மேற்கொண்டார்கள்.இதில் பெண்களும் மத குருமார்களும் தாக்கப்பட்டார்கள்,அவமதிக்கப்பட்டார்கள்.இதன் விளைவாக அங்குள்ள மக்கள் கடந்த திங்கட்கிழமை பொது முடக்கத்துக்கும் ஆர்ப்பாட்டத்துக்கும் அழைப்பு விடுத்திருந்தார்கள். மன்னாரில்,குறிப்பாக கனிமவள அகழ்வுக்கு எதிரான போராட்டத்தில் யாருமே கேள்விகளை எழுப்புவதில்லை. அதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற அபிப்பிராயம் எல்லாத் தரப்புக்களிடமும் உண்டு.ஆனால் காற்றாலை விடயத்தில் அங்கு போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் முன்வைக்கும் கருத்துக்கள் விஞ்ஞானபூர்வமானவை அல்ல என்ற ஒரு விமர்சனம் ஒரு பகுதி தமிழ் மக்கள் மத்தியிலேயே உண்டு. மன்னார் தீவில் காற்றாலைகள் நிறுவப்பட்டதன் பின்னர் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் மழைக் காலங்களில் தங்களுடைய வீடுகளுக்குள் வெள்ளம் தேங்கி நிற்பதாக,கடற்தொழில் பாதிக்கப்படுவதாகவும், காற்றாடிகள் சுற்றும் சத்தம் அதிகமாக இருப்பதாகவும் முறைப்பாடு செய்கின்றார்கள். இது போன்ற முறைப்பாடுகளை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெரிகிறது. அதனால்தான் கடந்த வாரம் அப்பகுதியில் காற்றாலைகளை நிறுவுவது என்ற தனது முடிவை அரசாங்கம் மீள உறுதிப்படுத்தியது. நாட்டின் அனல் மின் நிலையங்கள் சுற்றுச்சூழலுக்கு ஆபத்தானவை என்பதனால் மீளப்புதுப்பிக்கும் எரிசக்தி திட்டங்களை அரசாங்கம் நிறுவி வருகின்றது.இந்த அடிப்படையில் ஏற்கனவே வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் வீடுகளின் கூரைகளில் சூரிய மின்கலங்கள் கடன் அடிப்படையில் பொருத்தப்பட்டு வருகின்றன.இந்த மின்கலங்களைப் பொருத்துவதன் மூலம் குறிப்பிட்ட பயனாளி லாபமடைகிறார். அதனால் வரும் வருமானம் அவருடைய வீட்டுத் தேவைகளுக்கான மின் பாவனைக் கட்டணத்தை முழுமையாக இல்லாமல் செய்கின்றது.தவிர,மாதாமாதம் மேலதிகமாக லாபமும் கிடைக்கும்.அந்த லாப நோக்கமானது அவர்களை அறியாமலேயே பசுமை மின்சக்தித் திட்டத்திற்குப் பங்களிப்புச் செய்கின்றது. உலகம் முழுவதும் பசுமை மின்சக்தி திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டு வருகின்றன.மனித நாகரீகம் என்பதே இயற்கையை சுரண்டுவதில் இருந்துதான் தொடங்குகின்றது.எனவே இயற்கை சுரண்டாமல் அபிவிருத்தி இல்லை. இந்த விடயத்தில் இயற்கையின் சமநிலை கெடாமல் எப்படி அபிவிருத்தி செய்வது என்று சிந்தித்து கண்டுபிடிக்கப்பட்டவைதான் சூழல் நேயத் திட்டங்கள்.வளர்ச்சி அடைந்த நாடுகளில் காற்றாலைகள் வெற்றிகரமாக நிறுவப்பட்டு வருகின்றன.அண்மையில் ஸ்பெயின் நாடானது நாட்டின் ஒருநாள் மொத்த மின் பாவனையை முழுக்கமுழுக்க பசுமை மின்சக்தியின் மூலம் பூர்த்தி செய்து சாதனை செய்ததாகச் செய்திகள் வெளிவந்தன. மேலும்,ஐரோப்பாவில் காற்றாலைகள் தொடர்பாக வந்த விமர்சனங்களை உள்வாங்கி புதிதுபுதிதாக மாற்று ஏற்பாடுகள் கண்டுபிடிக்கப்பட்டு கொண்டிருக்கின்றன.குறிப்பாக காற்றாலை விசிறிகளில் பட்டு வலசைப் பறவைகள் இறப்பது தொடர்பான விமர்சனத்தை உள்வாங்கி செட்டைகள் இல்லாத காற்றாடிகள் எப்பொழுதோ உருவாக்கப்பட்டு விட்டன. ஜெர்மனி இந்த விடயத்தில் முன்னோடியாகக் காணப்படுகிறது. அதுபோலவே அண்மையில் நிகழ்த்தப்பட்ட ஆய்வின்படி காற்றாலைகளின் செட்டைகளில் ஒன்றைக் கறுப்பாக்கினால் அங்கே கொல்லப்படும் பறவைகளின் எண்ணிக்கை 70%தால் குறையும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இவ்வாறு காற்றாலை மின் சக்தியின் சூழல்நேயப் பண்பை மேலும் மேம்படுத்தும் நோக்கத்தோடு ஐரோப்பா முன்னேற்றகரமான புதிய காற்றாடிகளைக் கண்டுபிடித்து வருகிறது. இப்படிப்பட்டதோர் உலக மற்றும் உள்நாட்டுச் சூழலில்,மன்னார் மக்கள் ஏன் காற்றாலைகளை எதிர்க்கிறார்கள் என்று ஒரு பகுதியினர் கேள்வி கேட்கின்றார்கள். இங்கே முக்கியமாக இரண்டு விடயங்களைக் கவனிக்க வேண்டும். மன்னார் மக்கள் மன்னாரின் தீவுப்பகுதியில் காற்றாலைகள் நிறுவப்படுவதைத்தான் எதிர்க்கிறார்கள். யாரும் சூரிய மின்கலங்களை எதிர்ப்பதாகத் தெரியவில்லை. இந்த விடயத்தில் காற்றாலை தொடர்பான மன்னார்த் தீவு மக்களின் கவலைகளை சம்பந்தப்பட்ட துறைசார் நிபுணர்கள்,அதிகாரிகள், மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போன்றவர்கள் கேட்கவேண்டும்.இதில் மாற்று ஏற்பாடு ஏதும் உண்டா என்று சிந்திக்க வேண்டும்.இது தொடர்பாக அரசாங்கம் 19.08.2025 அன்று நியமித்த சிறப்புக் குழு கடந்த மாதம் முதலாந் திகதியன்று (01.09.2025) அங்குள்ள சிவில் சமூகத்தோடு(MCC) உரையாடியதாக அதன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.எனினும் மக்களுடைய பயங்களைப் போக்க முடியவில்லை. காற்றாலைகள் ஏன் வேண்டாம் என்பதற்கு மன்னார் தீவுப்பகுதி மக்கள் கூறும் காரணங்கள் எவையாகவும் இருக்கலாம்.ஆனால் காற்றாலைகள் ஏன் வேண்டும் என்பதற்குக் கூறப்படும் பிரதான காரணத்திலிருந்து சிந்தித்தால் அந்த மக்களின் பயத்தைப் போக்க வேண்டியது அவசியம். சூழல்நேய அபிவிருத்தித் திட்டங்கள் எவையும் அந்தச் சூழலில் வாழும் மக்களின் பங்களிப்போடு உருவாக்கப்பட வேண்டும். அப்பொழுதுதான் அந்தச் சூழலுக்கு அந்த அபிவிருத்தித் திட்டம் முழுமையாக நேசமானதாக அமையும். அந்த மக்களின் விருப்பமின்றி அதை அங்கே பலவந்தமாக நிறுவ முடியாது. அப்படி நிறுவினால் சூழல்நேய அபிவிருத்தி என்ற அடிப்படைச் சிந்தனை கேள்விக்குள்ளாகிவிடும்.எனவே ஒரு பகுதி மக்கள் அதை எதிர்க்கிறார்கள் என்று சொன்னால் அவர்களுடைய பயங்களை,கவலைகளைப் போக்க வேண்டிய, மாற்று ஏற்பாடுகளைக் குறித்துச் சிந்திக்க வேண்டிய பொறுப்பு சம்பந்தப்பட்ட எல்லாருக்கும் உண்டு.அதுதொடர்பில் மக்களுக்கு விழிப்பூட்ட வேண்டிய பொறுப்பு அரசியல் தலைமைக்கு உண்டு. மன்னாரில் காற்றாலைகளை முதலில் நிறுவ முற்பட்டது அதானி குழுமம் ஆகும். ஆனால் அது தொடர்பான லாப நட்டப் பேரங்களில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அதானி குழுமம் அந்த உடன்படிக்கையில் இருந்து வெளியேறி விட்டது.இப்பொழுது உள்நாட்டு நிறுவனம் ஒன்று காற்றாலைகளை நிறுவி வருகிறது. இங்கு அரசியல் முரண் ஒன்றைச் சுட்டிக்காட்ட வேண்டும்.அதானி குழுமம் மன்னாரில் காற்றாலைகளை நிறுவ முற்பட்டபொழுது அதனை ஜேவிபியும் உட்பட அரகலய போராட்டத்தில் ஈடுபட்ட அரசியல் செயற்பாட்டாளர்கள் எதிர்த்தார்கள்.காலி முகத்திடலில் “கோட்டா கோகம” கிராமத்தில் இந்திய விஸ்தரிப்பு வாதத்துக்கு எதிராக ஒரு பதாகை கட்டப்பட்டிருந்தது.அது அதானி குழுமத்தின் முதலீடுகளை எதிர்த்தது. இதுதொடர்பாக ஒரு தமிழ் அரசியல் செயற்பாட்டாளர் அந்தப் போராட்டத்தில் முன்னணியில் நின்ற ஒரு கத்தோலிக்கம் மதகுருவோடு உரையாடினார்.”நீங்கள் இந்திய விஸ்தரிப்பு வாதத்திற்கு எதிராக போராடுகிறீர்கள் என்று சொன்னால்,ஜேவிபியின் முன்னைய நிலைப்பாடுகளில் ஒன்றைத் தொடர்ந்து பின்பற்றுகிறீர்கள் என்று பொருள். ஜேவிபியின் முன்னைய நிலைப்பாட்டின்படி மலையகத் தமிழர்களை அவர்கள் இந்திய விஸ்தரிப்பு வாதத்தின் கருவியாகக் கண்டார்கள். அப்படியென்றால் அரகலயப் போராட்டமும் மலைகத் தமிழர்களை எதிரிகளாகப் பார்க்கின்றதா?” என்று அவர் கேட்டார்.அந்தக் கத்தோலிக்க மதகுரு அதை மறுத்தார்.”இல்லை நாங்கள் எல்லாவிதமான விஸ்தரிப்பு வாதங்களுக்கும் எதிரானவர்கள்”என்று சொன்னார்.அப்படியென்றால் சீனா ஏற்கனவே அம்பாந்தோட்டையிலும் கொழும்புத் துறைமுகத்துக்கு அருகிலும் வந்துவிட்டது.அந்தச் சீன விஸ்தரிப்பு வாதம் தொடர்பாகவும் நீங்கள் பேசுவீர்களா?என்று அந்தத் தமிழ்ச் செயற்பாட்டாளர் கேட்டார். சில ஆண்டுகளுக்கு முன்பு அதானியின் முதலீட்டை இந்திய விஸ்தரிப்பு வாதத்தின் ஒரு பகுதி என்று எதிர்த்த அரகலய போராட்டங்களின் குழந்தைதான் இப்போதுள்ள என்பிபி அரசாங்கம்.ஆனால் அது காற்றாலை வேண்டாம் என்று கேட்டுப் போராடிய மன்னார் மக்களின்மீது பலத்தைப் பிரயோகித்துள்ளது. அதற்கு எதிராக கடந்த திங்கட்கிழமை நடந்த போராட்டத்தில் அரகலய போராட்டத் தலைவர்களும் இணைந்திருக்கிறார்கள். இதன்மூலம் என்பிபி வேறு தாங்கள் வேறு என்று அவர்கள் காட்டக்கூடும். காற்றாலைகளின் விடயத்தில் தமது மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் உட்பட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் போதிய அளவுக்கு எதிர்ப்புக் காட்ட வில்லை என்ற ஒரு குறை மன்னார் மாவட்டச் செயற்பாட்டாளர்கள் மத்தியில் முன்பு இருந்தது.அப்பகுதி அரசியல் தலைமைத்துவம் இது தொடர்பில் மக்களுக்கு வழிகாட்டத் தவறிவிட்டது.அதனால் அங்கு ஏற்கனவே பலமாக உள்ள மதத் தலைமைத்துவதின் வழிகாட்டலே தீர்மானகரமானதாகக் காணப்படுகின்றது. எனினும் கடந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது,பொது வேட்பாளரை முன்னிறுத்திய அணி மன்னாரில் நகரப் பகுதியில் நடத்திய பெரிய ஒருவர் அங்கே மன்னார் மக்களின் கவலைகளைப் பிரதிபலித்தார். காற்றாலை,கடலட்டை இரண்டும் ராஜதந்திரப் பொருட்களாகி விட்டன என்று கூறிய அவர், காற்றாலை,கடலட்டை,கனிமவள அகழ்வு போன்றவை தமிழ் மக்களின் நில உரிமை,கடல் உரிமை போன்ற கூட்டு உரிமைகளோடு சம்பந்தப்பட்டவை என்றும்,எனவே அதில் தமிழ் மக்களின் விருப்பத்துக்கு மாறாக முடிவுகள் எடுக்கப்படக்கூடாது என்றும் தெரிவித்திருந்தார். இப்பொழுது அரசாங்க மக்கள் மீதும் மதகுருக்கள் மீதும் பலப் பிரயோகத்தைச் செய்த பின் விவகாரம் உணர்ச்சிகரமானதாகி விட்டது. தமிழ்த்தேசியக் கட்சிகளும் உட்பட பெரும்பாலான கட்சிகள் மன்னார் மக்களின் பக்கம் நிற்கின்றன.இப்பொழுது போராட்டம் பரந்தளவில் மக்கள் மயப்பட்டுவிட்டது.அரசாங்கத்தின் பலப்பிரயோகம் அதைப் பலப்படுத்தி விட்டது. தன்னெழுச்சிப் போராட்டங்களின் விளைவாக வந்த ஓர் அரசாங்கம் இந்த விடயத்தில் என்ன முடிவை எடுக்கும்? தனது வெளிநாட்டுப் பயணத்தில் ஜனாதிபதி கதைத்த கவர்ச்சியான,அலங்காரமான சொற்களைக் கொண்ட உரைகள் யாவும், கடந்த வெள்ளிக்கிழமை மன்னார் மக்கள் மீது போலீசார் பலத்தைப் பிரயோகித்தபோது பொருள் இழந்து போய்விட்டன. https://globaltamilnews.net/2025/221193/
  2. சில தவறுகளை சுட்டிக் காட்டும் போது பணிப்பாளர்கள் ஏற்றுக் கொள்வதில்லை...கடந்த காலங்களில் முகப் புத்தகத்தில் இவ்வாறன பிரச்சனைகளை எழுதியிருந்தார்கள் .பணிப்பாளர் சத்தியமுர்த்தியவர்கள் அப்படி எல்லாம் நடப்பதில்லை என்று மறுப்பு தெரிவித்திருந்தார்.
  3. இறந்த சிறுவர்களில் ஒருவர் ஓன்றரை, இரண்டு வயது இருக்கும் குழந்தை இறந்து விட்டது.அவரது தாயார் வாய் பேச முடியாதவர் அந்த தாய் போகும் வாகனத்தின் ஜன்னலில் அடித்து அழும் காட்சி பார்க்கவே முடியாமலிருந்தது.
  4. Vijay Really Waste Fellow ..இப்படி எழுதுவதற்கு மன்னிக்க வேணும். ஒரு நடிகனை நம்பி கர்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகள், வயோதிபர்கள், இயலாதவர்கள் என்று பல்வேறு பட்டவர்களளும் இவ்வாறன கூட்ங்களுக்கு செல்வதை தவிர்த்திருக்கலாம்.
  5. இவரது கணவராலயே இந்தப் பெண் நீதிபதியின் வேலையும் போய் விட்டது போன்று தமிழ் ஓவியம் என்னும் ரிக்ரொக் செய்தி தளத்தில் வாசித்தேன்.இருவருமே சட்த்துறையைச் சேர்ந்தவர்கள் என்றும் கணவர் சட்டத்தரணியாக இருந்து கொண்டு மக்களிடம் அதிக பணம் பெற்று வழக்கை கொண்டு செல்வதாகவும் அதற்கு இவர் துணை போனதனால்...வேலையிலிருந்து நீக்கப்பட்டது போல் உள்ளது.எனது புரிதல் இப்படித் தான் இருக்கிறது.
  6. உலகின் சிறந்த சுற்றுலாத் தலமாக இலங்கை written by admin September 25, 2025 பிரித்தானிய பயண இதழான ‘டைம் அவுட்’ வெளியிட்ட சமீபத்திய அறிக்கையின்படி, ஒக்டோபர் மாதத்தில் உலகின் சிறந்த சுற்றுலாத் தலமாக இலங்கை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இலங்கையின் வெப்பமண்டல காலநிலை, பண்பாட்டு பாரம்பரியம் மற்றும் இயற்கை அழகு ஆகியவை இந்தத் தேர்வில் முக்கிய காரணங்களாகக் கருதப்பட்டுள்ளன. நாடு முழுவதும் பரவியுள்ள கவர்ச்சிகரமான கடற்கரைகள், மலைப்பயண வாய்ப்புகள், பண்டைய இடிபாடுகள் மற்றும் வனவிலங்கு சவாாிகள் ஆகியவை இலங்கையை உலகின் முதன்மையான சுற்றுலா தலமாக உயர்த்தியுள்ளன. இந்தத் தரவரிசை, ஒக்டோபர் மாதத்தில் அனுபவிக்கக்கூடிய பருவகால வசீகரம், கலாச்சார நிகழ்வுகள் மற்றும் தனித்துவமான அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டதாக ‘டைம் அவுட்’ இதழ் குறிப்பிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் துருக்கி இரண்டாம் இடத்தையும், அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன. ஏனைய முக்கிய சுற்றுலா தலங்களாக ஸ்பெயினின் வலென்சியா, அமெரிக்காவின் நியூயோர்க், பிலிப்பைன்ஸ், பூட்டான், பொஸ்னியா , ஹர்ஸகொவினா, ருமேனியாவின் டிமிசோரா, அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ மற்றும் நமீபியா ஆகியவை இடம்பெற்றுள்ளன. https://globaltamilnews.net/2025/220794/
  7. சிறுகதை சிறுகதை: வேம்பின் நிழல்போல... - ஶ்ரீரஞ்சனி - - ஶ்ரீரஞ்சனி - சிறுகதை 25 செப்டம்பர் 2025 * ஓவியம் - AI கூட்டங்கூட்டமாகநின்று பேசிக்கொண்டிருக்கிறார்கள். ‘என்னையே இப்பிடி உலுக்கியிருக்கெண்டால் லக்கியாவின்ர குடும்பத்துக்கு எப்பிடியிருக்கும்?’ உள்ளங்கை வியர்த்துக்கொட்டுகிறது. பாடசாலைக்குள் காலடி எடுத்துவைத்தபோது, என் சப்பாத்துக்கள் போட்ட சத்தத்தைவிட என் இதயம் அதிக சத்தத்தில் அலறுகின்றது. யார், யார் என்னவெல்லாம் செய்வார்களோ என்ற பீதி கடந்துசெல்வோரை நிமிர்ந்து பார்க்கவிடாமல் என்னைத் தடுக்கிறது. “Instagram, twitter எண்டு எல்லாத்திலும் படம்போடுற, கருத்திடுற வேலை எல்லாத்தையும் நிப்பாட்டிப்போடு! ஆர் என்ன சொன்னாலும் சொல்லிப்போட்டுப் போகட்டும். பள்ளிக்கூடம் போறனா, வாறனா எண்டிருக்கவேணும். படிப்பைத்தவிர வேறையொண்டும் உன்ரை வேலையில்லை, விளங்கிச்சுத்தானே?” விடிந்ததிலிருந்து குறைந்தது ஐஞ்சு தடவையாவது அம்மா சொல்லியிருப்பா. ‘பீற்றரைப் பாத்தால், கொலைசெய்வான், அதுவும் துடிக்கத்துடிக்கக் கத்தியாலை வெட்டிக்கொலைசெய்வான் எண்டு சொல்லேலுமே?’ மீளமீள எனக்கு அதே நினைப்பாகவிருக்கிறது. இலக்கியாவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காகக் கூடியிருக்கிறோம். அவளின் படம் மேடையின் கரையில் வைக்கப்பட்டிருக்கிறது. ஆரம்பப் பாடசாலை graduation உடுப்பில், தடித்த உதடுகள் மெல்லப் பிரிந்த புன்சிரிப்பும், இரு தோள்களிலும் படர்ந்திருந்த சுருட்டைத் தலைமயிருமாக இலக்கியா மிக அழகாக இருக்கிறாள். “நேற்றுவரை எங்களோடை இருந்த லக்கியா இண்டைக்கு உயிரோடை இல்லை எண்ட செய்தி எங்கள் எல்லாரையும் அதிர்ச்சியடையச் செய்திருக்கு. உங்கடை சக மாணவி ஒருத்தி கொடூரமாய்க் கொலைசெய்யப்பட்டிருக்கிறா. கோரமான இந்தச் செய்தி தரக்கூடிய மன அழுத்தத்தையும் சோகத்தையும் சமாளிக்கிறது லேசான விஷயமில்லை. இதைக் கடந்துசெல்கிறதுக்கு ஏதாவது உதவி தேவைப்படுறவை தயவுசெய்து எங்கட கவுன்சிலர் மிசிஸ். ஜோனோடை கதையுங்கோ. லக்கியான்ரையும் பீற்றரின்ரையும் குடும்பங்களுக்கு எங்கடை ஆழ்ந்த அனுதாபங்களைச் சொல்லுறதைத்தவிர வேறை என்னத்தைச் செய்யலாமெண்டு எங்களுக்கும் தெரியேல்லை. இப்பிடியான கோரச் செயல்களின் விளைவுகள் எங்கட முழுச் சமூகத்தையும் பாதிக்குது… உங்கட வெறுப்பை, கோபத்தை, ஏமாற்றத்தை எல்லாம் எப்பிடி ஆரோக்கியமான முறையில வெளிப்படுத்தலாமெண்டு நீங்க எல்லாரும் அறிஞ்சிருக்கிறது அவசியம்,” தாழ்ந்த குரலில் சொற்களிடையே இடைவெளி விட்டுவிட்டுப் பிரின்சிப்பல் பேசுகின்றார். அவரின் கண்களும் கலங்கியிருக்கின்றன. “லக்கியாவுக்கு நிகழ்ந்த சோகம் தங்களுக்கும் நிகழலாமோ எண்டு அஞ்சுறவை, அப்பிடி நிகழாமலிருக்கிறதுக்கு என்னெல்லாம் செய்யலாமெண்டு சொல்ற சில கையேடுகளை அலுவலகத்தின்ர முன்பக்கத்தில வைச்சிருக்கிறம். அப்படிப் பயப்படுகிறவையும் தயவுசெய்து என்னை வந்து சந்தியுங்கள்.” பிரின்சிப்பலுக்குப் பக்கத்தில் நின்றிருந்த மிசிஸ். ஜோன் தொடர்கிறார். அஞ்சலி முடிந்து வகுப்புக்கு அமைதியாய்போன எங்களைப் பார்த்து, “படிக்கிற மனநிலை இண்டைக்கு ஒருத்தருக்கும் இருக்காது. உங்கட கரிசனைகளைப் பற்றிக் கதைக்கிறதுக்கு ஆராவது விரும்பினா, என்னோடை கதைக்கலாம். அல்லது நாங்க லைபிரரிக்கும் போவம்,” என்கிறார் சயன்ஸ் ரீச்சர் மிஸ்ரர் ரைலர் ஆதரவானதொரு குரலில். இங்கிலிஸ் ரீச்சர் மிசிஸ் நிமாலும் லைபிரரிக்கே வருகிறா. பிறகு ஜிம்மிலை விளையாட்டுப்பாடத்தை முடித்துக்கொண்டு லஞ்சுக்குப் போகிறோம். “AIஇன்ர உதவியோடை எங்கட படங்களையும் உடுப்பில்லாமல் பண்ணித் தங்களுக்கை பகிர்ந்துகொள்ளுவினமோ எண்டு எனக்குப் பயமாய்க்கிடக்கு! இவங்க எவ்வளவு அருவருப்பான விஷயங்களைச் செய்யிறாங்க.” பக்கத்திலிருந்த கிரிஸ்ரினா குசுகுசுக்கிறாள். அவளின் தொண்டை கட்டிப்போயிருக்கிறது. “பீற்றருக்கு லக்கியாவிலை சரியான விருப்பமிருந்தது, அதாலை அவளுக்கு அவனைப் பிடிக்கேல்லை எண்டதை அவனாலை ஏற்றுக்கொள்ள முடியேல்லை. அதுதான் இத்தனை பிரச்சினை,” தலையைக் குனிந்தபடி சொல்கிறான் ஈதன். “அவை விரும்பினா, நாங்க சம்மதிக்கோணும், எங்களுக்கெண்டு விருப்பு வெறுப்பு ஒண்டுமில்லையெண்டு அவை நினைக்கினம்.” பெருமூச்செறிகிறாள் அக்சயா. “ஓம், ஆம்பிளையளுக்கு வாயிருக்கு, பொம்பிளையளுக்குக் காதுமட்டும்தானிருக்கு. என்னைத்தை அவை சொன்னாலும் நாங்க கேட்டுக்கொள்ள வேண்டியதுதான், திருப்பிக் கதைக்கக்கூடாது. கதைச்சால் எல்லாவகையாலும் எங்களைத் துன்புறுத்துவினம், பிறகு கொலையும்செய்வினம்” பல்லை நெருமுகிறாள் ஆர்த்தி. “வகுப்பிலை பீற்றர் இருக்கிறதே தெரியாது. இந்தப் பூனையும் பால்குடிக்குமோ எண்டமாதிரி அத்தனை அமைதியாய் இருந்தான்.” தலையை வலமும் இடமுமாக ஆட்டுகிறாள் திரேசா. “இனி அம்மா பார்க்கிலை விளையாடப்போறதுக்கும் விடமாட்டா.” கவினின் முகம் வாடிப்போயிருக்கிறது. “கேட்டவுடனை லக்கியாவின்ர அம்மா மயங்கிப்போனாவாம். பாவம் லக்கியா. பெரிய சிங்கரா வரவேணுமெண்டு கனவுகண்டவள். எனக்கிப்ப பீற்றரைக் கொல்லோணும் போலையிருக்கு!” மேசையில் முஷ்டியால் அடிக்கிறாள் மரியா. அவளின் கண்களிலிருந்து வடிந்தோடிய கண்ணீர் அவள் கன்னங்களை முழுமையாக நனைக்கிறது. “பீற்றரின்ர தாயும் தகப்பனும் ஆள் மாறிவந்திட்டியள், அவன் அப்பிடியான ஆள் இல்லையெண்டு பொலிஸ் காருக்குப் பின்னாலை ஓடினவையாம், பாவம் அதுகள், அதுகளுக்கு மகனைப் பற்றித் தெரியேல்லை,” அலெக்ஸ் சொல்ல, “ஓமோம், அவன் எங்கே செய்தவன், பிழையாய்த்தான் கைதுசெய்து போட்டினம்!” கோவமாக எள்ளல் செய்கிறாள் லீசா. எனக்கு என்னத்தைச் சொல்வதென்று தெரியவில்லை. பீற்றரின் அம்மாவும் அப்பாவும் தங்கைச்சியும் எனக்கு முன்னால் அழுதுகொண்டு நின்றிருப்பதுபோலவும், இலக்கியாவின் அம்மா தற்கொலை செய்வதற்கு முயற்சிப்பதுபோலவும் எனக்குப் பிரமையாக இருக்கிறது. கண்களைக் கண்ணீர் மறைக்கிறது. சாப்பாடு வயிற்றுக்குள் இறங்கமறுக்கிறது. லஞ்சுக்குப் பின் வகுப்புக்குப் போகிறோம், கவுன்சிலர் மிசிஸ். ஜோன் எங்களுக்காக அங்கு காத்திருக்கின்றா. “என்னோடை கதைக்க விரும்புறவை என்ர அலுவலகத்துக்கு வரலாமெண்டது உங்களுக்குத் தெரியும். இப்ப நான் சிலதைப் பொதுவாய்க் கதைக்கவிரும்புறன்,” குரலைச் செருமிக்கொண்ட அவ ஆரம்பிக்கின்றா. “உங்கட வகுப்பிலை இருந்த ஒரு மாணவி கோரமாகக் கொலை செய்யப்பட்டிருக்கிறாள், ஒரு மாணவன் அதற்காகக் கைதுசெய்யப்பட்டிருக்கிறான், இது ஜீரணிக்கமுடியாத பெரிய சோகம்... உங்களுக்குள்ளை பலவிதமான உணர்ச்சிகள் அலைமோதிக் கொண்டிருக்கும். அவை எதுவுமே தப்பானதில்லை. எங்களைக் கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணுறதுக்காக நாங்க எல்லோருமாய்ச் சேர்ந்து ஒரு மூச்சுப்பயிற்சி செய்துபாப்பமா? பாதங்களை நிலத்தில வைச்சிருந்தபடி, கதிரையில பின்னுக்குச் சாய்ந்து செளகரியமாக இருங்கோ. முதலில 1 2, 3, 4 என மனசுக்குள்ளை எண்ணினபடி ஆழமா மூச்செடுங்கோ. பிறகு 1 2, 3, 4 என மெதுவாக எண்ணிமுடிக்கும்வரைக்கும் மூச்சைப் பிடிச்சிருங்கோ. அதுக்குப் பிறகு 1 2, 3, 4 என மனசுக்குள்ளை சொல்லிக்கொண்டு மூச்சை மெதுவா வெளியேற்றுங்கோ. பிறகு 4 செக்கன் காத்திருந்திட்டுத் திரும்பவும் இப்பிடி மூன்று முறை செய்வம், சரியா?” மிசிஸ். ஜோனுடன் சேர்ந்து அப்படிச் செய்தபோது இதயம் படபடப்பது சற்றுக் குறைந்திருப்பதுபோல எனக்குத் தோன்றியது. “கொஞ்சம் ரிலாக்ஸாவிருக்கா? மன அழுத்தத்தை எப்போதாவது உணரும்போது இப்படிச் செய்துபாருங்கோ. 13 வயசு - கொஞ்சம் கஷ்டமான காலகட்டம்தான். தங்கியிருத்தலிலிருந்து விலகிச் சுயாதீனமா இருக்க முயற்சிக்கிற இந்தக் கட்டத்தில நிறையக் குழப்பங்கள் இருக்கும். அதோடை பருவமடைகிற காலம் இது, உங்கட உடம்பிலை சுரக்கிற ஓமோன்களின்ர தாக்கத்தையும் நீங்க சமாளிக்க வேண்டியிருக்கும். ஆரம்பப் பாடசாலை ஒன்றிலையிலிருந்து இந்த இடைநிலைப் பாடசாலைக்கு வந்திருக்கிறீங்க. உங்களில் சிலருக்கு நெருக்கமான ஒரு நட்பு இன்னும் கிடைக்காமலிருக்கலாம். தனிமையை, வெறுமையை நீங்க உணரக்கூடும். பாடங்கள் சிரமமானதாக இருக்கலாம். வீட்டில உங்களிட்டை எதிர்பாக்கிறதுகளை உங்களால செய்யமுடியாம இருக்கலாம். இந்த அழுத்தங்கள் எல்லாத்தையும் தாங்கிற சக்தி உங்களுக்கு இல்லாமலிருக்கலாம்... தயவுசெய்து உங்கட உணர்ச்சிகளைப் பற்றிப் பெற்றோரோடையோ, ஆசிரியர்களோடையோ அல்லது உங்களுக்கு நம்பிக்கையானவர்களோடையோ மனம்விட்டுக் கதையுங்கோ. என்ர கதவு உங்களுக்காக எப்பவும் திறந்திருக்கும். வார விடுமுறை கழிஞ்சு பாடசாலைக்குத் திரும்பிவரேக்கை எல்லாருக்கும் கொஞ்சமாவது அமைதி கிடைக்குமெண்டு எதிர்பாப்போம்.” மிசிஸ் ஜோன் போனதும், மீளவும் லைபிரரிக்குப் போகிறோம். பள்ளிக்கூடம் முடிந்ததும், பீற்றரின் வீட்டருகில் என்ன நிகழ்கின்றதென அறியும் ஆர்வத்தில் வழமையில் வீட்டுக்குப் போவதுபோல எங்களின் தெருவில் திரும்பாமல், அதற்கு முன்பாகவிருந்த தெருவில் திரும்புகிறேன். பின் அங்கிருந்து எங்களின் தெருவை நோக்கி நடக்கிறேன். எங்களின் தெருவின் தெற்குப் பக்கத்தில்தான் பீற்றரின் வீடிருந்தது. அவனின் வீட்டுக்கு அண்மையில் செல்லச்செல்ல என் உடல் நடுங்குகிறது, நெஞ்சடைக்கிறது. ஆனால், அவனின் வீட்டுக்கு வெளியில் எந்தச் சஞ்சாரமும் இருக்கவில்லை. அவனின் வீட்டைக் கடந்து எங்கள் வீட்டுக்கு எப்படிப் போனேன் என்றே தெரியவில்லை, கால்கள் தடுமாறுகின்றன. எங்களின் வீடு வழமைவிட அதிக நிசப்தமாக இருப்பதுபோலிருந்தது. எதைச் செய்யவும் எனக்குப் பிடிக்கவில்லை. சோபாவில் படுத்துக்கொள்கிறேன். மனம் எங்கெல்லாமோ அலைபாய்ந்துகொண்டிருக்கிறது. நேரம்போகப்போக மேலும் துக்கமாகவும், களைப்பாகவும், பசியாகவும் இருக்கிறது. குளிரூட்டியில் இருந்த பீசாவை மைக்கிரோவில் சூடாக்கியபடி instagramஐப் பார்ப்போமா என நினைத்தாலும், அதைப் பார்க்கப் பயமாகவும் இருக்கிறது. இந்தக் கொலையைப் பற்றி அதிலை என்னவெல்லாம் பேசிக்கொள்வார்களோ என்ற என் நினைவைத் தொலைபேசியின் ஒலி குழப்புகிறது. FB messangerஇல் லீசாதான் அழைக்கிறாள். “ஹாய் லீசா” மறுமுனையில் விசும்பல் ஒலி. “ஏய் லீசா, என்ன நடந்தது?” எனக்குள் ஆயிரம் கேள்விகள். “என்ர போனைப் பறிச்சுப்போட்டினம், சுவேதா. கொம்பியூட்டரும் இனி லிவ்ங் ரூமிலைதான் இருக்குமாம். லக்கியா பீற்றருக்குப் போட்ட கொமன்ற்ஸ் பற்றி எனக்குத் தெரியுமோ? அதைப் பற்றி நானும் ஏதேனும் எழுதினேனா? ஏன் அதுகளைப் பற்றி ரீச்சர்மாரிட்டை சொல்லேல்லை எண்டு ஒரே அறுவை.” “ஓ, சொறி லீசா. பீற்றர் ஒரு incel, அவனாலை கேர்ள்ஸ் ஐக் கவரமுடியாதெண்டு லக்கியா அவனை bully பண்ணேக்கை, நீரும் அதைப்பற்றி ஏதாவது எழுதினீரா?” “இல்லை, நான் ஒண்டும் எழுதேல்லே, ஆனா லக்கியான்ர கொமன்ற்றுக்கும், மற்றவை சொன்னதுகளுக்கும் லைக் போட்டனான். அதுதான் வீட்டிலை பெரிய பிரச்சினை” “இங்கையும் என்ன நடக்கப்போகுதோ தெரியாது. பீற்றரின்ர வீட்டுக்காரரைத் தெரியுமெண்டதாலை, நான் அதுக்கொரு கொமன்றும் எழுதேல்லை. ஆனா வேறை ஆக்களுக்கு என்னெல்லாம் எழுதியிருக்கிறன், எதையெல்லாம் லைக் பண்ணியிருக்கிறன் எண்டு பாக்கோணும். அம்மா வாறதுக்கிடையிலை எல்லாத்தையும் அழிச்சுப்போடோணும். சொறி, லீசா, உமக்கு அதுக்கெல்லாம் நேரமிருக்கேல்லை.” “இது பொலிஸ் கேஸ் எண்டதாலை என்ன பிரச்சினையெல்லாம் வருமோ தெரியாது எண்டு அப்பா பயப்படுத்துறார். என்ர Instagram எக்கவுண்டையும் அழிச்சுப்போட்டார். அத்தையோடை கதைக்கிறதுக்காண்டி FBஐ விட்டிருக்கினம். போன் இல்லாமல் எனக்கு ஒரே விசராயிருந்துது. ஆரோடையாவது கதைக்கோணும் போலையிருந்து... கடைக்குப் போனவை வருகினம்போலை இருக்கு, பிறகு கதைக்கிறன்.” ஒரு மணித்தியாலத்துக்குள் அப்பாவும் அம்மாவும் வந்திடுவார்கள். எனக்குப் பதற்றமாகவிருக்கிறது. ‘கையும் ஓடேல்லை, காலும் ஓடேல்லை’ என்று இந்த நிலையைத்தான் சொல்கிறவைபோலும். “சுவேதா, இதென்ன லஞ்சுக்குக் கொண்டுபோன சாப்பாடு அப்படியேயிருக்கு, Microwaveக்குள்ள பீசா கிடக்குது. நீ ஒண்டுமே சாப்பிடேல்லையே? கீழை வா!” வந்ததும் வராததுமாக அம்மா சத்தமாகக் கூப்பிடுகிறா. அப்பா மேலே வந்து என் அறைக்கு முன்னால் நிற்கிறார். “சுவேதா, என்ன செய்யிறாய்?" “ஒண்டுமில்ல, எனக்குத் தலையிடிக்குது" “சாப்பிடாட்டிலும் தலையிடிக்கும், வா, வந்து முதலிலை சாப்பிடு" போய்ப் பீசாவை எடுத்துக்கடிக்க ஆரம்பித்தபோது, “கொத்துரொட்டி வாங்கிக் கொண்டுவந்தனான். உதை வைச்சிட்டு அதைச் சாப்பிடு,” என்று அம்மா சொல்ல, அப்பா அதை எடுத்துக்கொண்டுவந்து தருகிறார். எனக்குப் பிடித்த சிக்கன் கொத்து. ஆனால் ரசித்துச் சாப்பிட முடியவில்லை. “சாப்பிட்டு முடி, உன்னோடை ஆறுதலாய்க் கதைக்கோணும்,” அம்மா சொல்ல என் மனம் குறுகுறுக்கத் தொடங்குகிறது. “சும்மா பீடிகை போடாம நேரடியாய்க் கேளும்,” என்ற அப்பா, அவரே ஆரம்பிக்கிறார். “வகுப்பிலை எல்லாருக்கும் பெரிய அதிர்ச்சியாயிருந்திருக்கும். பாவம் அந்தப் பிள்ளை லக்கியா! என்ன பாடுபட்டிருக்கும். நினைச்சுப்பாக்கவே முடியேல்லை. மனசுக்குப் பெரும் கஷ்டமாயிருக்கு. சமூக ஊடகமெண்டு ஒண்டு வந்ததும் வந்தது, அந்தக் காலத்திலை எங்களுக்கிருக்காத பிரச்சினைகளெல்லாம் உங்களுக்கு வந்திட்டுது.” சொல்லிமுடித்துவிட்டு என்னையே உற்றுப்பார்க்கிறார், அவர். “13 வயசிலை மூளை முழுசா வளர்றதில்லை. அதாலை சிந்திச்சுச் செயலாற்றுறது கஷ்டம்தான்... உனக்கு என்ன பிரச்சினை வந்தாலும் நாங்க இருக்கிறம் எண்டது உனக்குத் தெரியோணும், எங்களோடை நீ என்னத்தையும் கதைக்கலாம், என்ன?” என்கிறா அம்மா, உறுதிதரும் குரலில். ‘ம்ம், திட்டம்போட்டு நல்லாய்த்தான் கதைக்கினம். இப்பிடிக் கதைச்சால் நான் விட்ட பிழையெல்லாம் சொல்லுவன் எண்டு நினைக்கினம்போல, ஆனா சொன்னா என்ன நடக்குமெண்டு தெரியும்தானே,’ என்ர மூளை என்னை எச்சரிக்க, நான் எதுவுமே பேசாமலிருக்கிறேன். “இண்டைக்குக் கதைக்கிறது உனக்குக் கஷ்டமாயிருகெண்டா நாளைக்கு ஆறுதலாய்க் கதைப்பம்,” என்ற அம்மாவைத் தொடரவிடாமல், “லக்கியாவோடை எனக்குப் பழக்கமில்லை. பீற்றரோடையும் ஒரு நாளும் கதைச்சதில்லை. நடந்ததுகளைப் பற்றிக் கதைக்கோணுமெண்டால் கவுன்சிலரோடை கதைக்கலாமெண்டு பள்ளிக்கூடத்தில சொன்னவை,” இந்தக் கதை மீளவும் தொடராமல் இருப்பதற்காக அவசரப்படுகிறேன் நான். “எங்களோடை கதைக்கேலாதெண்டால். கவுன்சிலரோடையாவது கதை, என்ன? கதைப்பியோ?” என்ற அம்மாவைப் பார்த்து தலையை மேலும் கீழும் ஆட்டுகிறேன். பின்னர் என்னுடைய அறைக்குப் போன நான் படுக்கையில் விழுந்து குப்புறப் படுத்துக்கொள்கிறேன். அடக்கமுடியாமல் அழுகை அழுகையாக வருகிறது. கொஞ்ச நேரத்தில் அப்பாவும் அம்மாவும் பேசிக்கொள்வது கேட்கிறது. “நாங்களும் வேலையாலை பிந்தித்தான் வாறம். வீட்டிலை அவள் கதைக்கிறதுக்கும் ஒருத்தருமில்லை. சின்னப்பிள்ளையிலை நீந்துறதுக்கு, சொக்கர் விளையாடுறதுக்கு அதுக்கு இதுக்கெண்டு கூட்டிக்கொண்டுபோனமாதிரி கூட்டிக்கொண்டு போறதுக்கும் எங்களுக்கு இப்ப நேரமில்லை.” “தனியப் போய்வாற வயசு அவளுக்கு இப்ப வந்திட்டுத்தானே. அவளை பிஸியாக்கோணும், விருப்பமான புரோகிராம்களிலை சேத்துவிடோணும். அல்லது Instagram, twitter எண்டு நேரத்தைச் செலவழித்து வீண்பிரச்சினைகளைத்தான் விலைக்கு வாங்கினதாயிருக்கும்.” “ம்ம், வேலையாலை வந்து நீர் சமைக்காட்டிலும் பரவாயில்லை, அவளோடை மனம்விட்டுப் பேசப்பாரும். ஒன்றாய் நேரத்தைக் கழிக்கப்பாரும். தேவைப்பட்டால் சாப்பாட்டைக் கடையிலை வாங்குவம். சமூக வேலை அது இதெண்டு ஓடித்திரியிறதை நானும் குறைக்கிறன்.” “ஓமப்பா, நாங்க வேலையாலை வந்த களைப்பிலை, ‘வா சாப்பிடு’, ‘சாப்பாடு காணுமோ’, ‘homework செய்துபோட்டியோ’, ‘நேரமாகுது படு', எண்டு சும்மா பேருக்குக் கதைச்சால் என்ணெண்டு பிள்ளையள் மனம்விட்டுக் கதைக்கிறது. ஆறுதலாயிருந்து கதைச்சாத்தானே அதுகளும் கதைக்கலாம்.” “அவள் சின்னப்பிள்ளையாயிருக்கேக்கை நீர் அப்பிடிக் கதைச்சனீர்தானே. அப்ப அவள் உமக்கெல்லாம் சொல்லுறவள்தானே. திரும்பவும் அப்பிடியொரு ஐக்கியத்தை உருவாக்கப் பாருமப்பா. இந்த வயசிலை பிள்ளைகளுக்கு வாற உணர்ச்சிகளையும் ஆசைகளையும் நாங்க விளங்கிக்கொள்ள முயற்சிக்கோணும். மனம்விட்டுக் கதைக்கோணும். அப்பிடியில்லாம நெடுகப் பிழைகண்டுகொண்டிருந்தம் எண்டால் எங்களுக்கு ஒண்டும் தெரியவராது.” “ஓம், இதை நாங்க ஒரு wakeup call மாதிரி நினைக்கோணும், பிள்ளை வழிமாறினா, என்னத்தைச் சம்பாதிச்சும் பயனில்லை. இண்டைக்கு முழுக்க வேலையிலை எனக்கு இதே நினைப்பாய்த்தானிருந்துது? லக்கியாவின்ர பெற்றோரின்ர நிலையிலைருந்து யோசிச்சுப்பாருங்கோ, எப்பிடியிருக்கும்?” “ம்ம், பீற்றரின்ர குடும்பமும் பாவம்தான். அவையும் பிசியாக இருந்திட்டினம். இப்ப அவைக்கும் பெருங்கஷ்டமாயிருக்கும்.” “அவனுக்குச் சுயமதிப்பு இருக்கேல்லை. ஆத்திரத்தைக் கட்டுப்படுத்தத் தெரியேல்லை. போதாதற்கு எப்பிடிப் பழிவாங்குறது எண்டதைத்தானே ரீவி புரோகிறாம்களும் சினிமாவும் பிள்ளையளுக்குச் சொல்லிக்குடுக்குது. நாங்களும் பிஸியாயிருந்தால் யார் அதுகளுக்கு வழிகாட்டுறது?” அம்மா விசும்புவது கேட்கிறது. “பிள்ளையள் பாதுகாப்பாய் இருக்கோணுமெண்டு போனை வாங்கிக்குடுத்தால், இப்ப அதாலை வேறை பிரச்சினையாய்க்கிடக்கு… அந்தப் பிள்ளை எங்கை போய்வாறள் எண்டதையெல்லாம் கண்காணிச்சுத் திட்டமிட்டுக் கொலைசெய்யிறளவுக்கு மனசிலை அவன் வன்மத்தை வளத்திருக்கிறானே…” அப்பாவின் குரல் உடைகிறது. “சூழலின்ர பாதிப்பிலிருந்து எவ்வளவு தூரம் எங்களாலை பாதுகாக்க முடியுமெண்டு எனக்குத் தெரியேல்லை, எண்டாலும் எங்களாலை ஏலுமானதை நாங்க செய்யோணும்!” அம்மா நா தழுதழுக்கச் சொல்கின்றா. அம்மாவின் விசும்பலும் அப்பாவின் கரிசனையும் என்னையும் விம்மச்செய்கின்றது. படுக்கையில் புரண்டுபுரண்டு படுக்கிறேன். நித்திரைவருவது மாதிரித் தெரியவில்லை. இருந்தாலும், வருமென்ற நம்பிக்கையுடன் கண்களை மூடிக்கொள்கிறேன். :sri.vije@gmail.com https://www.geotamil.com/index.php/2021-02-11-18-01-46/9358-2025-09-25-03-40-32?fbclid=IwY2xjawNCrTBleHRuA2FlbQIxMABicmlkETE4bUZFQVBUZjFXZFpMQ2MxAR7ZjRHT7zB7w9ybArj_7I4QgNL7IuNIQlnO6X--cdmYJnMwQGdsYFwE1HgxNw_aem_vZ3_mns0u6NAPvg-Efbvnw
  8. இராணுவம் – கடற்படை அதிகளவான நீரை எடுத்து செல்வதனால் உவராகும் குடிநீர் கிணறுகள் written by admin September 20, 2025 மக்களின் குடிநீர் கிணறுகளில் இருந்து கடற்படையினர் மற்றும் இராணுவத்தினர் பெருமளவான நீரை தினமும் எடுத்து செல்வதால் , அப்பகுதி கிணற்று நீர் உவராகியுள்ளது. அதானல் மக்கள் தாம் குடிப்பதற்கு பணம் கொடுத்து நீரை வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் எனவும் , அதனால் மக்களின் குடிநீர் கிணறுகளில் இருந்து இராணுவத்தினர் நீரினை பெறுவதை தடை செய்ய வேண்டும் என வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர் ஐ.நாகரஞ்சினி தெரிவித்துள்ளார். வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை தவிசாளர் ச.ஜயந்தன் தலைமையில் நடைபெற்றது. அதன் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், வலிகாமம் மேற்கு பிரதேசத்துக்கே தண்ணீர் பற்றாக்குறை பிரச்சினை காணப்படுகின்றது. பிரதேச சபையினால் மக்களுக்கு கொடுப்பதற்கே தண்ணீர் போதாமல் இருக்கிறது. இவ்வாறான சூழ்நிலையில் கடற்படையினர் ஊருக்குள் வந்து தினமும் 10 ஆயிரம் லீற்றர் களுக்கும் அதிகமான தண்ணீரை எடுத்துச் செல்கின்றனர். இவ்வாறு தினமும் அதிகளவான தண்ணீரை எடுத்து செல்வதால் நீர்வளம் பாதிக்கப்படுகிறது. அந்த தண்ணீரை இனிமேல் கடற்படையினர் எடுப்பதற்கு அனுமதிக்க கூடாது. இந்த விடயம் குறித்து உரிய கடற்படை முகாமுக்கு பொறுப்பான அதிகாரிக்கு பிரதேச சபையினால் கடிதம் அனுப்ப வேண்டும். இதேவேளை அராலி ஆலடி பகுதியில் உள்ள வயற்காணியில் அமைந்துள்ள கிணற்றில் இருந்து அராலித்துறை இராணுவ முகாமுக்கு தினமும் மூன்று தடவைகள் 30 ஆயிரம் லீட்டர்களுக்கும் அதிகமான தண்ணீர் எடுக்கப்படுகிறது. முன்னர் அந்த வயற்கிணற்றில் இருந்து எடுக்கும் தண்ணீரையே மக்கள் குடிப்பதற்கு பயன்படுத்தி வந்தனர். இராணுவத்தினர் இவ்வாறு தினமும் தண்ணீர் எடுப்பதால் அந்த கிணற்று நீர் உவர் நீராக மாறியுள்ளது. இப்போது அப்பகுதி மக்கள் கட்டணம் செலுத்தி பிரதேச சபையிடமிருந்தே தண்ணீரை பெறுகின்றனர். இருப்பினும் பிரதேச சபையினாலும் மக்களுக்கான தண்ணீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய முடியாத துர்ப்பாக்கிய நிலை காணப்படுகிறது. இவ்வாறு தினமும் தண்ணீரை எடுப்பதால் அந்த கிணற்றில் மாத்திரமல்லாது அயலில் உள்ள கிணற்று தண்ணீரும் மாற்றமடைந்து வருகிறது. இதனால் விவசாயிகளது விவசாயமும் பாதிப்படையக்கூடிய அபாயம் காணப்படுகிறது.எனவே இராணுவத்தினர் மற்றும் கடற்படையினர் மக்களின் குடிநீர் கிணறுகளில் இருந்து நீரை பெறுவதனை தடை செய்ய வேண்டும் என்றார். https://globaltamilnews.net/2025/220590/
  9. நேற்றைய தினம் கனடாவிலும் இரண்டு பிரிவுகளாக இப்படி ஒரு நிகழ்வு நடந்தாக அறிந்து கொண்டேன்.
  10. தவறுக்கு மன்னிக்க வேணும் ..நேற்றைய தினம் வைத்தியர் நிமலரஞ்சன் தாள் சுகவீனம் காரணமாக இறந்திருக்கிறார்..🙏
  11. வைத்தியகலாநிதி சுதர்சனின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்கள்.🙏
  12. தன்னையோ அல்லது தன்னோடு பணி புரியும் சக பணியாளர்களையோ எந்த விதத்திலும் கேள்வி கேட்க கூடாது என்று சொல்லும் வைத்தியர்கள் இருக்கும் மட்டும் இப்படி குறை , நிறைகள் இருக்கும்.வைத்தியசாலைப் பணிப்பாளர் சத்தியமுர்த்தியவர்கள் கடந்த சில கிழமைகளுக்கு முன் வைத்தியர் அர்ச்சனாவோடு முரண்படும் போது ஒரு இடத்தில் சொல்லியிருந்தார்.மக்கள் தான் பாவங்கள்.
  13. லயம் – கொ. தினேஸ். written by admin September 11, 2025 லயம் என்று சொன்னால் உங்கள் மனக்கண்ணில் வருவது என்ன? எத்தனை பேருக்கு தெரியும் இது மலையக மக்கள் வாழும் வீட்டு தொகுதி என்று. வாருங்கள் பார்ப்போம் மலையக மாந்தர்கள் “மனம் கொண்டதே மாளிகை” என கருதி வாழும் லயத்தை பற்றி. ஒற்றை, இரட்டை வரிசையில் சிறு சிறு அறைகளைக் கொண்டிருக்கும். ஒற்றை வரிசையாக இருந்தால் 12 அறைகளும் இரட்டை வரிசையாக இருந்தால் 24 அறைகளும் கொண்டதாக லயம் இருக்கும், 12 அறைகள் கொண்ட லயன் தொகுதியை மலையக மக்கள் “12 காம்பரா” எனவும் 24 அறைகளைக் கொண்ட லயன் தொகுதியை “24 காம்பரா” என அவர்களின் பேச்சு மொழியில் அழைப்பர். 10 முதல் 12 லயன்களைக் கொண்டது ஒரு டிவிசனாக கொள்ளப்படும் இங்கு “டிவிசன்” (னுiஎளைழைn) என்பது பிரிவு ஆகும். இவ்வாரு 3 தொடக்கம் 5 டிவிசன்களை கொண்டது ஒரு தோட்டமாக (நுளவயவந) கொள்ளப்படும். உதாரணம் – களுத்துறை மாவட்டத்தில் ஹல்வத்துறை தோட்டத்தில் காகல டிவிசன், தெல்மேல்ல டிவிசன், கீழ் பிரிவு, மேல் பிரிவு, மத்திய பிரிவு என ஐந்து டிவிசன்கள் (பிரிவுகள்) காணப்படுகின்றன. லயத்தின் ஒரு அறையின் அளவு 10ழூ20 என நீள, அகலங்களை கொண்டு இருக்கும். அத்தோடு அதற்கு முன் 6ழூ10 அகல நீளங்களை கொண்ட “குசினி”(சமயலறை) அல்லது “இஸ்தோப்பு” பகுதி காணப்படும். ஒரு அறைக்கு ஒரு கதவு மாத்திரமே காணப்படும். ஒற்றை வரிசை லயமாக இருக்கும் போது சில நேரம் இரண்டு கதவுகள் காணப்படும். லயத்தின் அனைத்து கதவுகளும் இரண்டு திறக்கும் பகுதிகளைக் கொண்டதாகக் காணப்படும். இஸ்தோப்பு அல்லது குசினி பகுதியில் கையை தூக்கினால் தொடக்கூடிய உயரத்தில் “அட்டல்” காணப்படும். அட்டல் என்பது பரன் ஆகும். விறகு சேகரித்து வைத்திருக்கும் இடமாகும். லயத்தில் ஒரு குடும்பத்திற்கு ஒரு அறை. ஒரு அறைதான் அவர்களின் ஒரு வீடு. லயத்திலிருந்து 100 அல்லது 200 மீட்டர் தூரத்தில் “லெட்டு” என மலையக மக்கள் கூறும் மலசலக்கூடம் காணப்படும். ஒரு லயத்திற்கு 2 அல்லது 3 மலசலகூடமே காணப்படும். ஒரு டிவிசனில்(பிரிவில்) உள்ள அனைத்து லயன்களுக்கும் இலக்கம் இடப்பட்டிருக்கும். மக்கள் லயன்களை அடையாளப்படுத்த “ஒன்னா நம்பர் லயம்”, “ ரெண்டா நம்பர் லயம்” எனவும் “மேட்டு லயம், கீ லயம்” எனவும் அடையாளப்படுத்திக் கொள்வது வழக்கம். லயம் பொதுவாக தகரத்தில் ஒரே கூரையாக மூடப்பட்டிருக்கும். தனித்தனியான கூரையமைப்பு இங்கு இல்லை. அனைத்து லயன்களும் சுண்ணாம்பு பூச்சு பூசப்பட்டு இருக்கும். லயத்தின் பின்புறத்தினை “கோடி புறம்” என்றும் லயத்தின் கடைசி அறை இருக்கும் பகுதியை “தொங்கல்” என்றும் அழைப்பர். ஒரு டிவிசனில் இரண்டு அல்லது மூன்று கிணறுகள் காணப்படும். அதில் குடிப்பதற்கும், குளிப்பதற்கும் கிணறுகள் வேறு வேறாக காணப்படும். ஒவ்வொரு டிவிசனுக்கும் பொதுவான ஒரு இடத்தில் ஒரு கோயில் இருக்கும். இது தான் மலையக மக்கள் “மனம் கொண்டதே மாளிகையாக” வாழும் லயன் ஆகும். கொ. தினேஸ் நுண்கலை துறை, கலைக்கலாசார பீடம், கிழக்குப் பல்கலைக்கழகம்,இலங்கை. Global Tamil Newsலயம் - கொ. தினேஸ். - Global Tamil Newsலயம் என்று சொன்னால் உங்கள் மனக்கண்ணில் வருவது என்ன? எத்தனை பேருக்கு தெரியும் இது மலையக மக்கள்…
  14. இதே பிரச்சனை எனக்கும் இருக்கிறது.கவலைப் படாதீர்கள்.தேவைப்படும் போது பொதுவான ஒரு இடத்தில் எழுதி விட்டு அங்கு ஒட்டி விடலாம்.
  15. written by admin August 10, 2025 மண்டபம் அடுத்து வேதாளை கடற்கரையில் இருந்து சட்டவிரோதமான முறையில் நாட்டுப்படகில் இலங்கைக்கு கடத்த இருந்த சுமார் ஒரு டன் எடை கொண்ட சுக்கு (காய்ந்த இஞ்சி) சரக்கு வாகனத்துடன் மரைன் காவற்துறையினர் நேற்று சனிக்கிழமை (09.08.25) இரவு பறிமுதல் செய்து மண்டபம் சுங்கத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அடுத்த வேதாளை கடற்கரையில் மண்டபம் மரைன் காவற்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்ட போது இலங்கைக்கு கடத்துவதற்காக வாகனத்தில் கொண்டு வரப்பட்ட 35 மூட்டைகளில் சுமார் ஒரு டன் எடை கொண்ட சுக்கு (காய்ந்த இஞ்சி) பறிமுதல் செய்து மண்டபம் மரைன் காவல் நிலையத்திற்கு எடுத்து சென்றனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட சுக்கின் மதிப்பு பல லட்சம் இருக்கலாம் எனவும் கைப்பற்றப்பட்ட சரக்கு வாகனத்தின் பதிவு எண் கொண்டு தப்பி ஓடிய மர்ம நபர்கள் தீவிரமாக தேடி வருவதாக மரைன் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். மரைன் காவற்துறையினர் பறிமுதல் செய்யப்பட்ட சுக்கு மற்றும் சரக்கு வாகனம் இரண்டையும் மண்டபத்தில் உள்ள சுங்கத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர் https://globaltamilnews.net/2025/219048/
  16. உண்மை.அனேக இடங்களில் அவர்களின் தவறுகளை சுட்டிக் காட்டவும் முடியாத நிலை வந்து கொண்டு இருக்கிறது.
  17. இரா.முருகவேள் என்பவரது படமும் மேலுள்ள இணைப்பில் இருக்கிறது பாருங்கள்.👆 இணைப்பிற்கு நன்றி தம்பி.🖐
  18. Posted inBook Review பி.எச்.டேனியல் (தமிழில்: இரா. முருகவேள்) எழுதிய *எரியும் பனிக்காடு (Red Tea)* – நூல் அறிமுகம் Posted byBookday02/09/20252Posted inBook Review எரியும் பனிக்காடு (Eriyum Panikadu) 1969 இல் ஆங்கிலத்தில் Red Tea என்னும் தலைப்பில் வெளிவந்தது இந்நவீனம்.. தேயிலை மலைகளில் பல்லாயிரம் உழைக்கும் மக்கள் பலியாக காரணமாகயிருந்த அடக்குமுறைக்கும், நோய்களுக்கும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளை உழைக்கும் மக்களின் நண்பர்கள் என்று நம்பிக் கொண்டிருப்பது நம்பகத்தன்மையற்றது என்று மனித நேயம் கொஞ்சமும் இல்லாத ஏகாதிபத்தியத்தின் கோர முகத்தையும் தென்னிந்தியாவில் தேயிலைத் தோட்டத் தொழிலை உருவாக்குவதில் ஆயிரம் ஆயிரம் முகம் தெரியாத தொழிலாளர்களுக்கு நேர்ந்த விபரீதங்களை உலகிற்கு உணர்த்த எழுத்தாளர் கையாண்ட கோலாக இப்புத்தகம் எரியும் பனிக்காடு.. ஆதவன் தீட்சண்யாவின் உணர்வு பூர்வமான வரிகளோடு துவங்குகிறது இந்நவீனம், *ஆனைமலைக் காடுகளில் தழைத்திருக்கும் ஆங்கிலேயர்களின் தேயிலை தோட்டங்களில் அடியுறமாயிடப்பட்டவை எமது உயிர்கள் நீங்கள் கதகதப்பாய் உறிஞ்சி குடிக்கும் ஒவ்வொரு துளி தேநீரிலும் கலந்திருப்பது எமது உதிரம்* என்னும் மனதை கசக்கும் வரிகள், *தோட்டியின் மகன், தூப்புக்காரி* போன்ற சமூக அவலங்களை முன்னிலைப்படுத்திய நாவல்களை என் கண்முன் நிறுத்தியது.. இந் நவீனம் முழுவதும் திருநெல்வேலியில் மயிலோடை என்னும் குக்கிராமத்தில் வசிக்கும் கற்பனைக் கதாபாத்திரங்களான கருப்பன் , வள்ளி என்னும் தம்பதியினரின் வறுமையின் பிடி, அவல நிலை மற்றும் தேயிலைத் தோட்டங்களின் பசுமைக்கு பின்னால் அதை உருவாக்கிய மனிதர்களின் எலும்புகள் புதையுண்டு கிடந்து பிழைக்க வந்த அவர்களை அங்கேயே சாகடித்த நூற்றுக்கணக்கான மக்களின் வலிநிறைந்த குரல்கள் நம் கண்களில் பிரதிபலிக்கும் நீரூற்றாய் இப்புத்தகத்தை வாசிக்கும் பொழுதே… ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தின்போது வால்பாறையில் உள்ள ஒரு தேயிலை எஸ்டேட்டின் தலைமை மருத்துவ அதிகாரியாக நியமிக்கப்பட்டவர் தான் எழுத்தாளர் பி எச் டேனியல் அவர்கள்.. 1920 முதல் 1930 வரை அப்பகுதியில் வேலை பார்த்த மக்களின் கொடூரமான அவல நிலையையும் மிருகங்களை விட கீழ்த்தரமாக நடத்தப்பட்ட பரிதாப சூழ்நிலைகளையும் இந்நவீனத்தில் தோலுரித்து காட்டியுள்ளார் ஆசிரியர்.. பிழைப்பிற்காகவும், ஒருவேளை சாப்பாட்டிற்காகவும் மனிதர்கள் எந்த அளவு மோசமாக நடந்து கொள்வார்கள் என்பதற்கு இந்த நாவலில் வரும் வேறு சில கதாபாத்திரங்களின் அடக்குமுறையும், உயிரியல் ரீதியாக பார்த்தால் *விலங்குகளிலேயே வேட்டையாடுவதில் மிகவும் திறமை வாய்ந்தவன் மனிதன் தான். திட்டமிட்டு தனது சொந்த இனத்தை வேட்டையாடும் ஒரே விலங்கும் மனிதன் தான்* என்ற வில்லியம் ஜேம்ஸின் மேற்கோள் தான் இந்நாவலின் மொத்த சாரமும்.. “கூரையாக வேயப்பட்டிருந்த பனையோலைகள் ஏறக்குறைய இறுதி மூச்சு விடும் நிலையில் இருந்தன” “மூலையில் கிழிந்த நாராக கிடந்த அம்மாவின் உருவம்” போன்ற ஆசிரியரின் மொழி நடை நாவலின் கூக்குரலுக்கு மெருகூட்டுகிறது… மேஸ்திரி சங்கரபாண்டியின் ஆலோசனைக்கிணங்க கண்கள் நிறைய கனவுகளுடன் வால்பாறை தேயிலை எஸ்டேட்டுக்கு கருப்பனும், வள்ளியும் ரயிலில் பயணிக்க அவர்களுடன் வாசகியாக நானும் பயணிக்க ஓரிரு தினங்களுக்குள் மயக்கம் தெளிய, வேலை ஆரம்பிக்க, கருப்பன் விறகு வெட்ட, வள்ளி தேயிலை கிள்ள, தீப்பெட்டி அளவே உள்ள தகர வீட்டில் இன்னொரு குடும்பத்தினருடன் தங்கள் இருப்பிடத்தை பகிர்ந்துகொள்ள, வேலை பார்க்கும் இடத்தில் கண்காணிப்பாளர்களின் பாலியல் தொந்தரவுக்கு இடம் கொடுக்காது வரும் பிரச்சனைகளினால் மனம் துவள, ஆளுக்கொரு போர்வையென மழையில் நனைந்துவிட்டால் அடுப்பில் சூடுசெய்து பயன்படுத்திக்கொள்ள, மாற்று போர்வை கிடைக்காது என்று மேஸ்திரி எச்சரிக்க, பனி, மழை, குளிர், உடல் வலி எதற்கும் விடுமுறை கிடையாது. அதிகாலை எழுந்து, சாப்பிட்டு கிளம்பிவிடவேண்டும். இருட்டிய பிறகே வீடு திரும்பலாம். கழிப்பறை கிடையாது, மருத்துவ வசதி கிடையாது, வலிக்கும் வேலைக்கும் தொடர்பு எதுவுமில்லை. நின்றுகொண்டே கிள்ளமுடியாவிட்டால், இடையிடையே அமர்ந்துகொள். நடுங்கும் குளிர் என்றால் போர்த்திக்கொண்டு விறகு வெட்டு. அட்டைப்பூச்சிகள் கடித்து ரத்தம் வடிந்தால், காட்டு இலைகளைப் பறித்து தேய்த்துவிட்டு, தொடர்ந்து வேலையைச் செய், என வெள்ளை துரைகளுக்கும் மேஸ்திரிகளுக்கும் தங்கள் வாழ்வை அர்ப்பணிக்க எழுத்தாளரின் எழுத்தாணி வால்பாறையின் பனிக்காட்டில் எரியும் மக்களின் குமுறல்களை படமிட்டு காட்ட, நாம் குடிக்கும் ஒவ்வொரு கோப்பைத் தேநீருக்கு பின்னால் முகம் தெரியாத மனிதர்களின் வியர்வையும், கண்ணீரும் கலந்திருக்கிறது என்பதை இந்த நாவல் சுவைக்குப் பின் கசப்பின் நியதியை அழகாகப் பதிவு செய்திருக்கிறது.. மக்கள் மலைக்கு போவதற்கான கட்டாயம் என்ன? அங்கே சென்றாலும் அவர்களுடைய கனவுகள் பலித்ததா? அவர்களது சொல்லொன்னா அடிமைத்தன வாழ்வு எப்படியாய் இருந்தது? என்ன அடக்குமுறைகளுக்கெல்லாம் உள்ளானார்கள்? அடிமைத்தன வாழ்க்கை முறையின் அனுபவங்கள் என்னென்ன? சாதிவெறி யின் தாக்கங்கள் என்னென்ன? கதையின் ஊடாக அவர் காட்டும் இருளும்வெளிச்சமும் மிக முக்கியமானது. குறிப்பாக நாவல் முடியும் போது ஏற்படும் மனவெழுச்சியை நம்மால் கட்டுப்படுத்தவே இயலாது அவ்வளவு துயரமிக்க காட்சிகளை நம் மனக்கண் முன் வெளிச்சமிட்டு காட்டியுள்ளார் ஆசிரியர்.. இந்நூலை வாசிக்க வாசிக்க Shakespeare’s *Merchant of Venice* ல் வரும் *எவ்வளவு அழகான முகமூடி பூண்டி இருக்கிறது இந்த நரகம்* என்னும் வரிகள் நம் எண்ண ஓட்டத்தில் வந்தே தீரும்.. குறிப்பாக ஒவ்வொரு தலைப்பிற்கு முன்னும் ஆசிரியர் கொடுத்திருக்கும் மேற்கோள்களின் ஒப்பீடு மிக அருமை.. வால்பாறை மண்ணையும், மக்களையும் அறிமுகப்படுத்திய இந்நூலில் இடம் பெறும் உரையாடல்கள் முழுக்க முழுக்க நம் திருநெல்வேலியின் மண்வாசம் வீசுவது கூடுதல் சிறப்பு.. புத்தக பிரியர்கள் தினமன்று புத்தகப் புழுவாகிய எனது நண்பரின் அன்பளிப்பாக பெற்றேன் இப்புத்தகத்தை பெற்ற நாள் முதற்கொண்டு வாசிக்க வாசிக்க கண்களில் நீர் கோர்க்காத நாளில்லை அப்பேர்ப்பட்ட மன வலிகள் மிகுந்த நவீனம் தான் *எரியும் பனிக்காடு*.. *சமூக அவலங்களை அறிந்ததோடு நில்லாது அதனை அப்புறப்படுத்தும் நோக்கில் எழுத்தாளருடன் இணைவோமா??* நூலின் விவரங்கள்: நூல் :எரியும் பனிக்காடு (Eriyum Panikadu) ஆசிரியர்: பி.எச்.டேனியல் (P.H.Daniel) | தமிழில்: இரா. முருகவேள் வெளியீடு: ஐம்பொழில் பதிப்பகம் விலை: ரூ. 250 புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/ எழுதியவர் : ✍🏻 சுகிர்தா அ, நெல்லை. https://bookday.in/eriyum-panikadu-book-reviewed-by-sugirtha-gunaseeli/
  19. இந்த டிப்பர் வாகனத்தை நிரந்தரமாக தடை செய்தால் நாட்டில் நடக்கும் விபத்துக்கள் மற்றும் உயிரளப்புக்களிலிருந்து மக்கள் தப்பித்து கொள்வார்கள் என்று நினைக்கிறேன்.
  20. மதகுருமார் வர வேண்டாம் – கெஞ்சிய அதிகாரிகள் written by admin September 1, 2025 மயிலிட்டியில் ஜனாதிபதி கலந்து கொண்ட நிகழ்வில் மதகுருமார்கள் கலந்து கொள்ளவில்லை. மயிலிட்டித்துறைமுகத்தின் மூன்றாம் கட்ட அபிவிருத்திப் பணிகள் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் இன்றைய தினம் திங்கட்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் மதகுருமார்கள் கலந்து கொள்ளவில்லை. இது தொடர்பில் தெரியவருவதாவது, மயிலிட்டி இறங்குதுறை அதிகாரிகளால், நிகழ்வுக்கு வருமாறு அப்பகுதி இந்து மதகுரு மற்றும் கிறிஸ்தவ பாதிரியாருக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டிருந்தன.இந்நிலையில் நேற்றைய தினம் மதகுருமார்களை சந்தித்த அதிகாரிகள், நிகழ்வுக்கு வர வேண்டாம் என கோரியுள்ளனர். மயிலிட்டி நிகழ்வுக்கு பௌத்த மதகுரு சார்பில் தையிட்டி விகாரதிபதியை அழைக்க நேரிட்டால், அது விமர்சனங்களை ஏற்படுத்தும் என்பதால், நிகழ்வில் எந்த மதகுருமாரையும் அழைக்காது விடுவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறியே, நிகழ்வுக்கு மத குருமார்களை வரவேண்டாம் என கூறப்பட்டுள்ளது. https://globaltamilnews.net/2025/219944/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.