Everything posted by யாயினி
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
மன்னித்துக் கொள்ளவும் சசியண்ணா..தவறை தெரியப்படுத்தியமைக்கு மிக்க நன்றி அய்யா.
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
சசியண்ணா நீங்கள் இப்படி சொல்லக் கூடாது.காரணம் கருத்துக்களத்தில் அவர், அவர் தங்கள் மனங்களில் தோன்றுவதை தயக்க மின்றி எழுதுவதுதற்கு சில இடங்களில் எழுதப்படும் வார்த்தைகள் தடையாக இருக்கும்.யார் மனதையும் சங்கடப்படுத்தாமல் எழுதப் பழகினால் நன்று..இது உங்களை குற்றம் சொல்வதற்காக எழுதவில்லை எனக்கு அது தேவையும் இல்லை.அனைவருக்கும் சேர்த்தே எழுதிறன்.நன்றி.
-
வெளிநாட்டு உறவுகளே உங்களுக்குத்தான் #comedy #kilinochchi #funny #tamil #srilanka #tamil #tamilcomey
- அடைக்கலம் தருவதற்கு இந்தியா ‘தர்ம சத்திரம்’ அல்ல- ஈழ அகதி வழக்கில் உச்சநீதிமன்றம்!
தற்போது ஒரு மாணவரது (பல்கலைகழக) உயர் கல்வி செலவு மாதம் 25 ஆயிரத்தை தாண்டி விட்டது.அப்படி இருக்கையில் எப்படி ஒரு குடும்பத்திற்கு நீங்கள் சொல்லும் தொகை போதுமானதாக இருக்கும் என்று சொல்வ வாறீயள்..எல்லா நாடுகலும் உள்ளள ஊர் ஒன்றியங்கள் மன்றும் மன்றங்கள் ஒழுங்காக செயல்படுகின்றனவா...சுருக்கமாக சொல்லப் போனால் தாரள மனம் கொண்டவர்களால் கூட அவர்களுக்கு என்று ஒரு குடும்பம் மற்றும் இதர வாழ்க்கை செலவுகளோடு இவ்வாறன பொறுப்புக்களையும் எடுத்து செய்வது மிக மிக கடினம்.சொல்வது மிக இலகு கோசான்..சாத்தியப்படுத்துவது கடினம்.இது எழுத வேணும் என்பதற்காக எழுதப்படுபவையும் அல்ல.அல்வுது ஊர் நிலமைகளை சும்மா றான்டாமாக எழுதப்படுபவையும் அல்ல..- அடைக்கலம் தருவதற்கு இந்தியா ‘தர்ம சத்திரம்’ அல்ல- ஈழ அகதி வழக்கில் உச்சநீதிமன்றம்!
பி.கு..நீங்கள் குறிப்பிடுவது போல் இனி வரும் காலத்தில் மாதாந்த கொடுப்பனவாக 5000 கொடுப்பது ஒரு கிழமை சீவியத்திற்கே போதுமோ தெரியாது.கண்டிப்பாக போதாது.- அடைக்கலம் தருவதற்கு இந்தியா ‘தர்ம சத்திரம்’ அல்ல- ஈழ அகதி வழக்கில் உச்சநீதிமன்றம்!
இந்தியாவிலேயே இருக்க அனுமதிக்க வேண்டும்! - உச்சநீதிமன்றத்திடம் கோரிக்கை வைத்த இலங்கைத் தமிழர் https://thaaii.com/.../sc-said-india-is-not-a-camp-to.../ இலங்கையில் செயல்பட்ட பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாக இலங்கைத் தமிழர் ஒருவர், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த 2015-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, 2018-ல் விசாரணை நீதிமன்றம், அவரை குற்றவாளி என அறிவித்து 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. 2022-ம் ஆண்டில் சென்னை உயர்நீதிமன்றம் அவரது தண்டனையை 7 ஆண்டுகளாகக் குறைத்தது. 7 ஆண்டுகள் தண்டனை முடிவடைந்ததும் அவர் இந்தியாவில் இருக்கக்கூடாது, இலங்கைக்கு நாடு கடத்தப்பட வேண்டும் எனவும் உத்தரவிட்டது. இதற்கு எதிராக அவர் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அந்த மனுவில், “இலங்கையில் எனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது எனவும் எனது மனைவி மற்றும் குழந்தைகள் இந்தியாவில் குடியேறிவிட்டனர் எனவும் என்னை நாடு கடத்தும் நடவடிக்கைகள் இன்னும் தொடங்கவில்லை என்பதால் நான் இந்தியாவிலேயே இருக்க அனுமதிக்க வேண்டும்” என்றும் கோரியிருந்தார். இந்த மனு, நீதிபதிகள் தீபங்கர் தத்தா, வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில், உலகம் முழுவதிலுமிருந்து வரும் அகதிகளை இந்தியா வரவேற்க வேண்டுமா? இங்கு குடியேற உங்களுக்கு என்ன உரிமை உள்ளது? என கேள்வி எழுப்பியதோடு, அனைத்து இடங்களிலிருந்தும் வரும் வெளிநாட்டினரை வரவேற்று மகிழ்விக்கக்கூடிய சத்திரம் அல்ல என்றும் இலங்கையில் உயிருக்கு ஆபத்து இருந்தால் வேறு நாட்டிற்குச் செல்லுங்கள்” என்றும் கூறி, மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை தமிழர்கள் பலரும் கண்டித்துள்ளனர். #refugees #sc #supremecourt #உச்சநீதிமன்றம் #அகதிகள் #madrashighcourt #SriLanka #SriLankan #Tamils #இலங்கைதமிழர் இந்த தளததில் கருத்துக்களை பகிர்ந்திருப்பவர்களில் ஒருவர் கனடாவுக்கு போக சொல்லுங்கள் என்று கருத்திட்டு இருக்கிறார்... https://thaaii.com/.../sc-said-india-is-not-a-camp-to.../- பொது பாதுகாப்பு அமைச்சராக கேரி ஆனந்தசங்கரி நியமிக்கப்பட்டுள்ளார்
ஹரி ஆனந்தசங்கரிக்கு வாழ்த்து தெரிவித்து சிறீதரன் எம்.பி கடிதம் Published By: Vishnu 15 May, 2025 | 06:23 PM கனடாவின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக பொறுப்பேற்றுள்ள, ஈழத்தமிழரான ஹரி ஆனந்தசங்கரி அவர்களுக்கு, பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் நேற்றையதினம் அமைச்சுப் பொறுப்பேற்ற ஹரி ஆனந்தசங்கரி அவர்களுக்கு அவர் அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: அண்மையில் நடைபெற்று முடிந்த கனேடிய பாராளுமன்றத் தேர்தலில் அமோக வெற்றிபெற்று, கனேடிய பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானதுடன், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராகவும் பதவியேற்றிருக்கும் தங்களுக்கு, ஈழத்தமிழர்கள் சார்பில் எனது இதயபூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதில் நிறைவடைகிறேன். அரசியல், பொருளாதார, சமூகக் காரணிகளால் வலிந்து ஒடுக்கப்பட்ட ஈழத்தமிழ் மக்களின் நேரடிப் பிரதிநிதியான தாங்கள், உங்களின் தனிமனித வாழ்வில் எதிர்கொண்ட ஏராளமான தடைகளையும், சவால்களையும் உந்திக்கடந்ததன் பயன்விளைவாய், ஈழத்தமிழ் வம்சாவழியைச் சேர்ந்த ஒருவராக, சமூகநேயம் மிக்க மக்கள் தொண்டராக இருந்து பின் அரசியல் பணியில் அடியெடுத்துவைத்து, இன்று கனேடிய பாராளுமன்ற உறுப்பினராகவும், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராகவும் பெருமிதத்தோடு பதவியேற்றுள்ளமை காலத்தின் பதிவே ஆகும். சவால்களின் எல்லைகளைக் கடந்து நிமிர்ந்தெழுந்து நிற்கும் ஈழத்தமிழர்களின் பிரதிநிதியான தங்களை, எமது உணர்வுகளோடு நெருக்கமான, எங்களில் ஒருவராகவே எம்மால் பார்க்கமுடிகிறது. அத்தகு மனநிறைவோடு, மக்கள் பணி என்ற மகத்தான கொள்கையோடும், இலட்சியத்தோடும் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதியாக பொறுப்பேற்றிருக்கும் தாங்கள், ஈழத்தமிழர் நலன்சார் விடயங்களிலும், அரசியல் விவகாரங்களிலும் தங்கள் இயலுமைக்கு உட்பட்ட பணிகளில் இதயசுத்தியோடு இணைந்து செயற்படுவீர்கள் என்ற பெருநம்பிக்கையோடு, உங்களின் வெற்றிக்கான வாழ்த்துகளைக் கூறும் அதேவேளை தங்கள் பணி சிறக்க இறை ஆசிகளையும் வேண்டி நிற்கிறேன். – என்றுள்ளது. https://www.virakesari.lk/article/214832- ஐந்து ரூபாய் கட்டணம்
பெற்றோர் எழுதி வைக்காத விடத்து அனைத்திலும் எல்லா பிள்ளைகளுக்கும் பங்கு கொடுக்க வேணும் . அந்த கனடா பிள்ளைக்கு தெரியாது போலும்..அண்ணன் காரன் தெரிந்து வைத்துக் கொண்டு இருப்பார் போலும்.பேராசை அதிகம் தான்.- பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் - கோவை மகளிர் நீதிமன்ற தீர்ப்பு விவரம்
- பொது பாதுகாப்பு அமைச்சராக கேரி ஆனந்தசங்கரி நியமிக்கப்பட்டுள்ளார்
கனடாவின் புதிய அமைச்சரவையில் பொது பாதுகாப்பு அமைச்சர்களாக கேரி ஆனந்தசங்கரி மற்றும் அனிதா ஆனந்த் இருவரும் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.இருவருக்கும் நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.- தமிழினப்படுகொலை நினைவகத் திறப்பு நிகழ்வு Live Brampton
Mohan Ramakrishnan 13h · Tamil Genocide Education Week is at Chinguacousy Park, Brampton. 14h · Mississauga · A historic moment for the Tamil people in Canada and around the world as the Tamil Genocide Monument was inaugurated in Brampton, Canada. The Tamil Genocide Monument is constructed in remembrance of the victims of the Tamil Genocide being committed by the Sri Lankan state. The Tamil Genocide Monument not only honours the innocent lives lost —it speaks to resilience. It is a place for education, reflection, and resistance against denial of the Tamil Genocide.- தமிழினப்படுகொலை நினைவகத் திறப்பு நிகழ்வு Live Brampton
இது பற்றிய முழுமையான காணொளிகளை இங்கே பதிவிட முடியாதிருக்கிறது..- கொட்டாஞ்சேனையில் தன்னுயிரை மாய்த்துக் கொண்ட சிறுமி - மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை
சம்பந்தபட்ட ஆசிரியர் இடமாற்றம் செய்பட்டுள்ளார் என்ற செய்தி ஏ.ஆர்.வி லோசனின் செய்தி தொகுப்பில் பகிரபட்டுள்ளது..- கொட்டாஞ்சேனையில் தன்னுயிரை மாய்த்துக் கொண்ட சிறுமி - மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை
- இறுதி யுத்தத்தில் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் இராணுவத்தினால் போலீசாரிடம் கையளிக்கப்பட்டுள்ளது
சொல்கிறேன் என்று கோவிக்காதீர்கள்..ஒவ்வொரு யுத்த கால கட்டங்களிலும் மக்கள் எங்கு போவது என்று தெரியாமல் தங்கள் உடைமைகளை பொதுவாக வீட்டுப் பத்திரம், நகை என்று தாட்டு வைத்து விட்டு ஓடிய மக்களும் உண்டு அண்ண..ஆகவே புலிகள் மிரட்டி அபகரித்தார்கள் என்று சொல்லுமளவுக்கு அனேக மக்கள் போக மாட்டார்கள்..இப்போ இந்த நகைகளுக்கு உரியவர்கள் இருக்கிறார்களோ, இல்லயோவும் தெரியாது இல்லயா..இதே புலிகள் ஒரு காலத்தில் வறுமை கோட்டுக்கு கீளே இருந்தவர்களுக்கு மற்றும் உடல் நலம் பாதிக்கபட்டவர்களுக்கு என்று உதவி செய்த காலங்களும் உண்டு.உங்களைப் போன்றவர்கள் மறந்தாலும் யுத்தத்தோடையே வாழ்ந்த மக்கள் மறக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.நன்றி.- அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் கால் பதித்த ஈழத்தமிழ் பெண்!
இவர் தெரிவாகியிருக்கும் பகுதியில் அதிகம் நம்மவர்கள் இல்லை என்றும் அறிந்து கொள்ள முடிகிறது.எனவே அஸ்வினி தன்னால் முடிந்தவரை அந்த நாட்டு மக்களுக்கு சிறந்த சேவையாற்றுவார் என்று நம்புவோம்.- அவுஸ்திரேலியாவில் இன்று பொதுத் தேர்தல்
Theivigan Panchalingam 9h · ஆஸ்திரேலியாவின் 48 ஆவது நாடாளுமன்றத்தைக் கைப்பற்றியுள்ள லேபர் கட்சியின் பெருவெற்றியானது பல அதிசயங்களை நிகழ்த்தியிருந்தாலும், ஆளும் கட்சியின் இமாலய வெற்றியின் நட்சத்திர நாயகி அலி பிரான்ஸ் என்பவர்தான். லிபரல் கட்சியின் முதன்மை வேட்பாளர் பீற்றர் டட்டன் என்ற இரும்பு மனிதன் சுமார் 24 வருடங்களாகத் தக்கவைத்திருந்த அவரது சொந்தத் தொகுதியின் வெற்றியைத் தட்டிப்பறித்து, அவரை நாடாளுமன்றத்திலிருந்தே வெளியேற்றியிருக்கிறார் அலி பிரான்ஸ் என்ற 51 வயதுப் பெண்மணி. அதாவது, பிரதமர் பதவிக்கான வேட்பாளரோ - நடப்பு அமைச்சரவையில் அங்கம் வகிப்பவர்களோ - தங்களது சொந்தத் தொகுதியிலேயே தோல்வியடைந்தால், அவர்கள் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற ஆஸ்திரேலியத் தேர்தல் விதியின் பிரகாரம் தூக்கியெறியப்பட்டிருக்கிறார் பீற்றர் டட்டன். பீற்றர் டட்டனைத் தோற்கடித்துப் பெற்றுள்ள வெற்றியும் அரசியல் பயணமும் தனிப்பட்ட வாழ்க்கையும் அலி பிரான்ஸிற்கு இலகுவாக அமைந்துவிடவில்லை. தொடர்ச்சியான தோல்விகளும் தனிப்பட்ட வாழ்வில் பெரிய காயங்களும் சாவுகளும் நிறைந்த வாழ்வு அலி பிரான்ஸினுடையது. 2011 ஆம் ஆண்டு பிறிஸ்பன் அங்காடியொன்றில் பொருட்களை வாங்கிக்கொண்டு தனது மகனைப் பிறாமில் தள்ளிக்கொண்டு வெளியே வந்தபோது, அங்காடிக்கு வெளியே 88 வயது முதியவர் ஓட்டிவந்த கார் கட்டுப்பாட்டை இழந்து, அலி பிரான்ஸ் மீது பாய, தான் அடியுண்டாலும் பரவாயில்லை, தனது மகனைக் காப்பாற்றிவிடவேண்டும் என்று மகனிருந்த பிறாமைத் தூரத் தள்ளிவிட்டார். வேகமாக வந்த கார் அலி பிரான்ஸ் மீது பாய்ந்து, அவரைச் சுவர் ஒன்றோடு சேர்த்து அறைந்தது. அவரது இடது காலின் நாடி அறுந்து ரத்த வெள்ளத்தில் கிடந்தார். தக்க சமயத்தில் அங்கு ஓடிவந்த இருவர், தங்களது சேர்ட்டைக் கழற்றிக் கிழித்துக் காயத்துக்குக் கட்டுப்போட்டதால் உயிர் தப்பினார். மயிரிழையில் உயிர் தப்பிய அவரது மகன் ஸக், தொலைவில் பிராமோடு சென்று கவிழ்ந்து, நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார் ஒன்றிற்கு அடியில் சென்று அகப்பட்டுக்கொண்டார். விபத்தை நேரடியாகக் கண்ட தாயொருவர், தனது கைக்குழந்தையை நிலத்தில் கிடத்திவிட்டு, காருக்கு அடியிலிருந்து ஸக்கை இழுத்தெடுத்து காப்பாற்றினார். ஸக் எந்தக் காயமுமின்றி உயிர் தப்பிக்கொண்டார். இந்த விபத்தில் படுகாயமடைந்த அலி பிரான்ஸின் இடது கால் முற்றாக அகற்றப்பட்டது. அலி பிரான்ஸ் தென்னாபிரிக்காவில் பிறந்து ஆஸ்திரேலியாவுக்கு வந்து, கல்வி கற்று, ஊடகவியலாளராகப் பணியாற்றியவர். அரசியல் என்பது அவரது தகப்பன் வழியாகவும் தொழில் வழியாகவும் அவருக்குள் ஊறிக்கிடந்தது. 2019 ஆம் ஆண்டு, முதல் கணவரிடமிருந்து விவகாரத்தானபோது, அலி பிரான்ஸ் நேரடி அரசியலுக்குள் நுழைய முடிவெடுத்தார். குவீன்ஸ்லாந்து மாநிலத்தில் பீற்றர் டட்டனின் டிக்ஸன் தொகுதியில் லேபர் கட்சி சார்பில் களமிறங்கினார். முதலாவது தேர்தலில் தோல்வியடைந்தார். 2022 ஆம் ஆண்டு தேர்தலிலும் டட்டனுக்கு எதிரான போட்டியில் டிக்ஸன் தொகுதியில் தோல்வியடைந்தார். பத்து வருடங்களுக்கு முன்னர் விபத்தில் காலைக் காவுகொண்டதோடு சற்று ஓய்வெடுத்த அவரது விதி, 2022 இல் மீண்டும் கலையாடத் தொடங்கியது. மூத்த மகன் ஹென்றியை புற்றுநோய் தாக்கியது. சம நேரத்தில் முன்னாள் கணவரும் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டார். 2023 ஆம் ஆண்டு அலி பிரான்ஸின் முன்னாள் கணவர் புற்றுநோயினால் காலமானார். கடந்த வருடம் மகன் ஹென்றியும் புற்றுநோயால் காலமானார். ஆறு மாத இடைவெளியில் முன்னாள் கணவரையும் மகனையும் இழந்த வலியும் விரக்தியும் தன்னைச் சூழ்ந்து கிடந்தாலும், 2025 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றாவது தடவையாக பீற்றர் டட்டனை எதிர்த்துப் போட்டியிடுவதற்கு அலி பிரான்ஸ் உறுதியோடு எழுந்தார். ஒற்றைக் காலோடும் ஓர்மத்தோடும் டிக்ஸன் தொகுதியெங்கும் பிரச்சாரத்திற்காக ஏறி இறங்கினார். கிட்டத்தட்டக் கால் நூற்றாண்டு காலமாக தனது சொந்தத் தொகுதியில் கோலோச்சிக்கொண்டிருந்த லிபரல் கட்சியின் அதி சக்தி வாய்ந்த பீற்றர் டட்டனை வீழ்த்துவது என்பது லேசான காரியமல்ல என்பது லேபர் கட்சியனருக்கும் தெரிந்ததுதான். இம்முறைத் தேர்தல் என்பது லேபருக்கு அநேக இடங்களில் வெற்றியை ஈட்டிக்கொடுக்கும் என்பது முன்னரே ஊகிக்கக்கூடியதாயிருந்தபோதும், பீற்றர் டட்டன் என்ற ஆஸ்திரேலியாவின் இரும்பு மனிதனை தோற்கடிப்பது என்பதெல்லாம் அவ்வளவு எளிதாகியிருக்கவில்லை. ஆனால், அலி பிரான்ஸ் ஆஸ்திரேலிய அரசியலில் தனது வெற்றியினால் மாத்திரமல்லாமல், எதிரிக்கு இழைத்த தோல்வியின் மூலமும் அழிக்கமுடியாத வெற்றித்தடத்தைப் பதித்தார். தேர்தல் முடிவுகள் வெளியாகிக்கொண்டிருந்த ஒரு மணி நேரத்திலேயே டட்டனின் தோல்வி தொலைக்காட்சியில் மின்னத் தொடங்கியது. தேசிய நாயகியாக அலி பிரான்ஸின் பெயர் திரையெங்கும் பளிச்சிடத்தொடங்கியது. அலி பிரான்ஸ், ஆறு வருடப்போராட்டத்தினால் கிடைத்த சாதனை வெற்றியை இரு கைகளில் ஏந்திக்கொண்டு எதிர்வரும் ஒன்பதாம் திகதி கன்பரா நாடாளுமன்றத்திற்குள் நுழையப்போகிறார். ஆஸ்திரேலிய அரசியல் வரலாற்றில் பிரதமர் பதவிக்காகப் போட்டியிட்டவர்கள் தங்களது சொந்தத் தொகுதியிலேயே தோல்வியடைந்தது, இதுவரை மூன்று தடவைகளே இடம்பெற்றிருக்கின்றன. முதன் முதலாக 1929 இல் இடம்பெற்றது. அதன் பின்னர் 2007 இல் முன்னாள் பிரதமர் ஜோன் ஹவாடிற்கு ஏற்பட்ட படுதோல்வியுடன் அவர் அரசியலில் இருந்தே விலகினார். தற்போது பீற்றர் டட்டனுக்கு ஏற்பட்டுள்ளது. சாதனை நாயகிக்கு வாழ்த்துகள்- பொஸ்பரஸ் நோயும், பெண்களால் முன்னெடுக்கப்பட்ட நோர்வே நாட்டின் மேதினமும்..கவிதா லட்சுமி
8 மணிநேர வேலை – போராட்டம் – ஊதிய உடன்படிக்கை kavithalaxmi / மே 1, 2023 தீப்பெட்டித் தொழிற்சாலை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் (1889) ஜனநாயகம் மட்டுமல்ல, நடைமுறையில் வாழ்வதற்கு உலகின் சிறந்த நாடாக நோர்வே இருப்பதற்கான காரணங்களில் வேலைநிறுத்தப் போராட்டம் முதன்மையானதாகும். அதிகநேரம் வேலை செய்யவேண்டிய கட்டாய நிலை, குறைந்த அளவு ஊதியம், பெ¯ண்களின் பங்களிப்பு மறுப்புப் போன்ற சமூகப் பின்னடைவுகளை முன்னொரு காலத்தில் தன்னகத்தே கொண்டிருந்த நாடாகவே நோர்வே இருந்தது. சில தசாப்தங்கள் முன்புவரை நோர்வே நாட்டின் நிலை வேறு, இன்றைய நிலை வேறு. இன்று, வாழ்க்கைத் தரத்தில் உலகின் சிறந்த நாடுகள் பட்டியலில் பல ஆண்டுகளாக நோர்வே முதலிடத்தில் இருந்து வருகிறது. நோர்வே நாட்டின் இன்றைய வளர்ச்சியின் அடைவுகளுக்கான பாதையில், தொழிற்சங்கங்களின் உருவாக்கம், கூட்டுணர்வு, வேலைநிறுத்தப் போராட்ட முன்னெடுப்புகள் என்பனவற்றின் பங்களிப்புகள் முக்கியமானவை என்பது அறிஞர்களின் கருத்து. தொழிலாளர்களுக்கும் முதலாளிகளுக்கும் இடையில் உள்ள அதிகார இடைவெளியை சமநிலையாக்குவதையும், குறைந்த அளவிலான ஏற்றத்தாழ்வுகளைக் நடைமுறைப்படுத்துவதையும் வேலைநிறுத்தப் போராட்டங்களே இங்கு பெற்றுக்கொடுத்திருக்கின்றன. இதனால் வேலைநிறுத்த முன்னெடுப்புகள் தவறாமல் ஒவ்வொரு ஆண்டும் இன்றுவரை நடைமுறைப்படுத்தப்பட்டு வருக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் நடைமுறைப்படுத்தப்படும் இம் முன்னெடுப்புகளின் பின்னால் தொழிச்சங்கங்களின் கூட்டுணர்வும், கூட்டிணைவும், தொடர்ச்சியும் இருக்கின்றன. நோர்வேயின் முதல் வேலைநிறுத்தப் போராட்டம் பெண்களும் தீப்பெட்டித் தொழிற்சாலையும் 1875 ஆம் ஆண்டு 134 தொழிலாளர்களுடன் தீப்பெட்டித் தொழிற்சாலை ஒன்று நோர்வேயில் கிறான்வொல் நகரில் ஆரம்பிக்கப்பட்டது. இத்தீப்பெட்டிச் தொழிற்சாலை பெண்களையும், குழந்தைகளையும் பிரதான தொழிலாளர்களாகக் கொண்டிருந்தது. 500ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இத்தீப்பெட்டித் தொழிற்சாலையைச் சார்ந்திருந்தன. இவர்களில் 38 பேர் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள். 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் குழந்தைத் தொழிலாளர்களை அங்கீகரித்து வந்த நாடாகவம் நோர்வே இருந்தது. 1890ஆம் ஆண்டில் க்ரோன்வொல்லில் தொழிலாளர்களின் எண்ணிக்கை 510 ஆக உயர்ந்தது. இவர்களில் 55 பேர் 12 முதல் 14 வயதுக்கு இடைப்பட்டவர்கள், 16 பேர் 12 வயதுக்குட்பட்டவர்கள். குறைந்த ஊதியமும், மோசமான சுகாதார நிலைமையும் உள்ள தொழிற்சாலையாகவே இது செயற்பட்டது. பணியாளர்களின் வேலைநேரம் ஒரு நாளைக்கு 13 – 16 மணிநேரங்களாக இருந்தது. மற்றும் தீப்பெட்டி செய்யவதற்குப் பயன்படுத்தப்பட்ட மருந்துத் துகள்கள் (பொஸ்பரஸ் – The phosphorus) நச்சுத்தன்மை கொண்டதாகவும், உடலுக்குப் பாரிய தீங்குகளை விளைவிப்பதாகவும் இருந்தன. தொழிற்சாலையில் சவர்க்காரம் மற்றும் தண்ணீர் போன்ற சுகாதார வசதிகள் எதுவும் இருக்கவில்லை. பல தொழிலாளர்கள் – ஆண்கள் மற்றும் பெண்கள், சிறுவர் மற்றும் சிறுமியர் தீங்கு விளைவிக்கும் -பொஸ்பரஸால்- (The phosphorus) நோயினால் தாக்கப்பட்டனர். பாஸ்பரஸ் நோயினால் பாதிக்கப்பட்ட பெண்ணின் தோற்றம் .. ‘பொஸ்பரஸ்’ குச்சிகளைக் கொண்டு வேலை செய்த கைகளினாலேயே தமது மதிய உணவை உட்கொண்டதால் நோயின் தாக்கம் பலமாக ஏற்பட்டது. பொஸ்பரஸ் துகள்கள், கைகள் மற்றும் உணவு வழியாக பற்களின் துளைகளுக்குட் சென்று அங்கிருந்து தாடை எலும்பை அடைந்தன. இதனாற் தாடை எலும்புகள் சிதைந்தன. பற்கள் கழற்ற வேண்டிய நிலைக்கு பல தொழிலாளர்கள் ஆளாகினர். பலருக்குத் தாடை எலும்பின் பாகங்கள் வெட்டப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. பாதிமுகங்கள் வெட்டப்பட்ட நிலை பலருக்கும் ஏற்பட்டது. ஆண்களுக்குப் பெண்களைக் காட்டிலும் அதிக அளவு ஊதியம் வழங்கப்பட்டது. அத்துடன் ஆண்கள் அதிகமாக நீராவி சார்ந்த பிரிவில் வேலைசெய்ததால் அவர்களுக்கு நோய்கள் சார்ந்து பாரிய சேதம் ஏற்படவில்லை. ஏற்கனவே மிகக் குறைந்த ஊதியத்தில் வேலைபுரிந்த பெண்களின் ஊதியம் மேலும் 20 சதவீதம் குறைக்கப்படும் என்று தொழிற்சாலை உரிமையாளர்கள் 1889ல் அறித்தனர். இதன் எதிரொலியாகப் பெண்கள் பணியை நிறுத்திப் போராட்டத்தில் இறங்கினர். 23.ஒக்டோபர் 1889 அன்று 372 பெண் தொழிலாளர்களுடன் நோர்வேயில் முதல் வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கியது. வேலைநிறுத்தப் போராட்டத்தின் ஆரம்பக்கட்ட விளைவுகள் நோர்வே தீப்பெட்டித் தொழிச்சாலைப் பெண்களின் போராட்டத்திற்கு சில காலங்களுக்கு முன் இலண்டனில் வேலைநிறுத்தப் போராட்டங்கள் தொடங்கப்பட்டிருந்தன. இலண்டனில் நடைபெற்ற பொது வேலைநிறுத்தம் பற்றி நோர்வேயின் செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிகைகள் தொடர்ந்து செய்திகளை வெளியிட்டன. கிழக்கு இலண்டனின் பெண்தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களை ஒழுங்கமைக்கத் தொடங்கினர் என்ற செய்திகளும் பரவின. இலண்டனில் எழுந்த வேலைநிறுத்த போராட்டங்கள் பற்றிய செய்திகளால் நோர்வே நாட்டுப் பெண்களும் உத்வேகம் பெற்றனர். 1889ல் – போராட்டத்திற் பங்குகொண்ட பெண்கள் நிறுவன ரீதியாகத் தம்மை ஒருங்கிணைத்துக் கொள்ளவில்லை. பெண்களுக்குப் பின்னால் எந்த அமைப்பும் இருக்கவில்லை. வேலைநிறுத்தக் கொடுப்பனவு நிதியும் இருக்கவில்லை. வருமான நட்டஈட்டுக்கு எந்த உத்தரவாதமும் இல்லாத நிலையிலும், அவர்களுடைய மோசமான வேலைதளங்களிற்கு எதிராக வேலை செய்வதை நிறுத்தி நடவடிக்கை எடுக்கத்தொடங்கினர். நோர்வே நாட்டின் பெண்களும், சிறுமியரும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடத் தொடங்கியதும், தொழிற்சாலை உரிமையாளர்கள் பிற கிராமங்களில் இருந்து புதிய தொழிலாளர்களைக் கொண்டுவந்தனர். பிற தொழிலாளர்களிடம் ஊதிய-பேரம் பேசப்பட்டது. மிகக்குறைந்த ஊதியத்திற்கு வேலை செய்யச் சம்மதித்தவர்கள் வேலையில் அமர்த்தப்பட்டனர். இதன் மூலம் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் நிலை கேள்விக்குள்ளானது. தீப்பெட்டித் தொழிற்சாலைகளில் ஆண்களும் பணிபுரிந்தனர் எனினும் அவர்களுக்கு வழங்கப்பட்ட அதிக ஊதியத்தின் காரணமாக ஆண்கள் யாரும் வேலைநிறுத்தப் போராட்டத்திற் கலந்துகொள்ளவில்லை. மேலும் பெண்களுக்கு ஆண் தொழிலாளர்களிடமிருந்தோ வீட்டில் இருந்த ஆண்களிடமிருந்தோ எவ்வித உதவிகளும் கிட்டவில்லை. அவர்கள் பெண்களைப் போராட்டத்தைக் கைவிட்டு வேலைக்குப் போகுமாறு வலியுறித்தியபடியே இருந்தனர். தொழிற்சங்கமோ வேலைநிறுத்தத் தலைமையோ இல்லாமல், முழு வேலைநிறுத்தமும் விரைவிற் கைவிடப்படும் அபாயத்தில் இருந்தது. பெண்களுக்கு ஒழுங்கமைக்கப்பட்ட தொழிற்சங்கப் பணிகளில் அனுபவம் இருக்கவில்லை. மேலும் அவர்களே மிகவும் ஒடுக்கப்பட்ட நிலையில் இருந்த காலகட்டம் அது. தாமாகவே எழுந்து நின்று பிரச்சாரத்தைத் தங்கள் சொந்த முயற்சியினால் மட்டுமே முன்னெடுத்துச் செல்லவேண்டியிருந்தது. ஒக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட போராட்டம் டிசம்பர் மாதம் வரை நீடித்தது. வேலைநிறுத்தம் செய்த பெண்களுக்கு எவ்வித நியாயங்களும் வழங்கப்படமலேயே போராட்டம் முடிவுக்கு வந்தது. எனினும், மக்களிடம் தொழிலாளரின் கூட்டிணைவின் முக்கியத்துவம் சார்ந்த விழிப்புணர்வு ஏற்பட்டது. தொழிலாளர் இயக்கம் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியது. போராட்டம் காரணமாக தொழிலாளர் பாதுகாப்புக் குறித்த மாற்றங்களும், சிறந்த சுகாரதார நிiமைகளும் தொழிற்சாலைகளிற் கொண்டுவரப்பட்டன. வேலை நிறுத்தத்தை ஒரு போராட்ட வழிமுறையாக மாற்றுவதற்கு இப்பெண்களின் போராட்டம் பெரிதும் வழிவகுத்து. இது போராட்டக்கார்களின் முதற்கட்ட வெற்றியாக அமைந்ததெனினும் எட்டவேண்டிய தூரம் நோக்கிய பயணம் மிக நீண்டதாகவே இருந்தது. கவிஞரும், சமூகப் போராளியுமான பியோன்;ஸ்தியான பியோன்சன் (Bjørstjerne Bjønson) அவர்கள் 1889ஆம் ஆண்டு பத்திரிக்கையில் எழுத வாசகம். «நீண்ட உறக்கத்திலிருந்து விழித்தது போன்ற உணர்வு» என்று 1889ல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் தெரிவித்திருக்கின்றார். பெண்களின் தீப்பெட்டித் தொழிற்சாலைப் பெண்களின் வேலைநிறுத்தம் நோர்வே நாட்டின் மிக முக்கியமான வரலாற்று நிகழ்வாகும். வேலைநிறுத்தப் போராட்ட இயக்கம் “வேலைநிறுத்தம்” Theodor Kittelsen, 1879. தொழிற்சங்க அமைப்புத் தொழிலாளர்கள் தமது முதலாளிகளிடம் தமது வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவிக்கும் காட்சி. தொப்பிகளைக் கழற்றி கையில் வைத்திருப்பது கவனிக்கத்தக்கது. .. சோஷலிஸப் பத்திரிகையான சமூக ஜனநாயக நாளிதழின் (ளுழஉயைட னுநஅழஉசயஉல) ஆசிரியர் கார்ல் ஜெப்சென் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுக்கான இயக்கத்தின் தேவையை உணர்ந்தவராகக் காணப்பட்டார். ஆவர்களுக்கு உதவவும் முன் வந்தார். ஒவ்வொரு தொழிற்சாலையிலிருந்தும் மூன்று பெண்களைக் கொண்ட ஒரு போராட்டக் குழு அமைக்கப்பட்டது. நாளொன்றுக்கு 14 மணி நேரத்திற்கு மேல் பணி செய்யும் வழக்கம், ஊதியக் குறைப்பு மற்றும் அபராத முறை அனைத்தையும் நீக்கம் செய்தல், தீப்பெட்டித் தொழிற்சாலையின் சுகாதார நிலைமைகளை மேம்படுத்துதல் போன்ற கோரிக்கைகளை ஆலை உரிமையாளர்களிடம் போராட்டக்குழு முன்வைத்தது. தீப்பெட்டி தொழிற்சாலைகளில் உள்ள பெண்களுக்கு பெரும்பாலும் 14இல் இருந்து 16 மணிநேரம் பணி கொடுக்கப்பட்டிருந்தது. தொழிற்சாலையில் ஊதியம் குறைவாக இருந்தாலும், குடும்பங்கள் இவ்வேலையை நம்பியே இருந்தன. பெண்கள் நீண்ட நாட்களாக வருமானம் இல்லாமல் இருக்க முடியவில்லை. வேலைநிறுத்தக் கொடுப்பனவு இல்லாமையினாற் பெண்கள் விரைவில் வேலைக்குத் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று கார்ல் ஜெப்சென் அறிந்துகொண்டார். எனவே வேலைநிறுத்தப் பங்களிப்புகளுக்குப் பணம் வசூலிக்க ஜெப்சென் முன்முயற்சி எடுத்தார். வேலைநிறுத்தக் கொடுப்பனவு சார்ந்து பொதுமக்களின் மனசாட்சியுடன் பேசுவது முக்கியமானதாக அவருக்குப் பட்டதால் ஒக்டோபர் 27 அன்று அவரது சொந்தப் பத்திரிகையான சோஷல் டெமோக்ரட்டனில், “தொழிளாலர் சங்கம் இல்லாமல் மக்களாற் தங்கள் நிலையை மேம்படுத்த முடியாது. ஒரு சங்கத்தின் மூலம் மட்டுமே அவர்கள் எதையாவது சாதிக்கும் சக்தியையும் வலிமையையும் பெற்றிட முடியும். வேலைநிறுத்தப் போராட்டத்திற்கும் அமைப்புக்கும் பங்களிப்பு வழங்குங்கள்” என்று பத்திரிக்கைகள் மூலம் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதுவரை பெண்களுக்கான தொழிற்சங்கம் முறையாக உருவாக்கப்படாத நிலையில், கார்ல் ஜெப்சென் தலைமையிலான பெண்கள் குழு தொழிற்சங்கத்தை உருவாக்க கடுமையாகப் போராடியதன் காரணமாக தொழில்முறை இயக்கம் ஒன்று நோர்வேயில் 28 ஒக்டோபர் மாதம் நிறுவப்பட்டது. ஆண்கள் அடுத்த நாளே (29 ஒக்டோபர்) தமக்கான சொந்த தொழிற்சங்கத்தை உருவாக்கினர். ஆண்கள் தொழிற்சங்கத்தை நிறுவியநாளே பின்னர் தொழிற்சங்கத்தின் அடித்தள நாளாகக் கருதப்பட்டதாக ஐம்பதாம் தொழிற்சங்க அறிக்கை தெரிவிக்கிறது. முதல் பல ஆண்டுகளாக தொழிற்சங்கத் தலைவர்களாக பெண்களின் பெயர்களை மட்டுமே கொண்டிருந்த தலைவர்கள் பட்டியல், 1913ல் இரண்டு சங்கங்களும் இணைந்த பிறகு, ஒரு பெண் தலைவர்களின் பெயர் கூட பட்டியலில் இல்லை. «பெரு-வேலைநிறுத்தம்” சுரங்கத் தொழிலாளர்கள் தொழிலாளர் வேலைநிறுத்தம் ஏற்படுத்திய தாக்கங்களின் காரணமாக, பெரும்பாலான நாடுகளில், வேலைநிறுத்தங்கள் விரைவாக சட்டவிரோதமாக்கப்பட்டன. தொழிற்புரட்சிக் காலத்தில் மேலும் வேலைநிறுத்தங்கள் பரவலாக முன்னெடுக்கப்படத் தொடங்கின. இதன் காரணமாக 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அல்லது 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பல மேற்கத்தேய நாடுகள் பகுதி நேர வேலைநிறுத்தங்களைச் சட்டப்பூர்வமாக்கின. அன்றைய காலத்தில் மனித உழைப்பு இன்றியமையாத ஒன்றாக இருந்தது. தொழிற்சாலைகளுக்கும் சுரங்கங்களுக்கும் அதிக அளவு தொழிலாளர்கள் தேவைப்பட்ட காலம் அது. அக்காலத்தில் தொழிற்சாலை உரிமையாளர்கள் அதிக அரசியல் அதிகாரத்தையும் கொண்டிருந்தனர். நோர்வேயின் பெண்களினால் முன்னெடுத்துச் செல்லப்பட்ட வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடர்ந்து, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மற்றொரு வேலைநிறுத்தம் 1921ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இவ்-வேலைநிறுத்தம், 1898இல், ராணா நகரில் 100 சுரங்கத் தொழிலாளர்களால் முன்னெடுக்கப்பட்டது. நோர்வேயில் சுரங்கத் தொழிலுக்கு நீண்ட வரலாறு உண்டு. சுரங்க வேலைகள் 1623இல் தொடங்கப்பட்டன. 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் தொடங்கப்பட்ட புதிய சுரங்க வேலையில் ஈடுபட்டிருந்த சுரங்கத் தொழிலாளர்களே வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். தமது கைகளினாலேயே பாறைகளை உடைக்க வேண்டிய கட்டாயம் ஆரோக்கியமற்ற வேலைசு; சூழல்கள்;, சுரங்கங்களுக்குள் காற்று இல்லாமை, அருவருக்;கத்தக்க பாரபட்ச நடவடிக்கைகள் மற்றும் அகங்காரத்துடன் செயற்பட்ட நிர்வாகம் போன்ற நெருக்கடிகள் நிலவின. இவைகளின் மீதான அதிருப்திகளின் விளைவாக 1898ஆம் ஆண்டின் கோடை காலத்தில் வேலைநிறுத்தப் போராட்டம் வெடித்தது. முதலாம் உலக யுத்தத்தின் பின்னர் தொடங்கிய இவவேலைநிறுத்தம் «பெரு-வேலைநிறுத்தம்” என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. தம் பின்னால் ஒரு தொழிற்சங்கத்தின் பலத்துடன் இயங்கிய நோர்வேயின் முதற் போராட்டமான இது நான்கு மாதங்கள் நீடித்தது. பின்னர் அது கைவிடப்பட்டது. இவ்விரு போராட்டங்களையும் தொடர்ந்து குறிப்பிடத்தக்க பல வேலைநிறுத்தப் போராட்டங்கள், பல துறைகளிலும் நோர்வேயில் எழுச்சிபெற்றன. முக்கியமாக நாடகக்கூழுக்கள், கலைஞர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மே 1 – தொழிலாளர் தினம் மே 1 – கவனயீர்ப்புப் பேரணி தொழிலாளர் இயக்கத்தின் ஆரம்ப நாட்களில், முதன்மையாக வேலை நேரத்திற்கான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டன. 1856 ஆம் ஆண்டில் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் கட்டுமானத் தொழிலாளர்கள் குழு – 8 மணிநேர உழைப்பு, 8 மணிநேர ஓயு;வு, 8 மணிநேர உறக்கம் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். அதனைத் தொடர்ந்து மே 1, 1886 அன்று, 2 இலட்சம் அமெரிக்கத் தொழிலாளர்கள் எட்டு மணி நேர வேலைக்காக போராட்டம் செய்தனர். வேலைநிறுத்தப் போராட்டம் பல நாட்கள் நீடித்தது. இப்போராட்டம், போராட்டக்காரர்களுக்கும் காவற்துறையினருக்கும் இடையில் மோதல்களும் குண்டுத் தாக்குதல்களுடனும் முடிவடைந்தது. 1889 இல் பாரிஸில் நடந்த தொழிற்சங்க மாநாட்டில் மே முதல் தேதியை சர்வதேச வேலைநிறத்தப் போராட்ட நாளாக ஆக்க முடிவு செய்யப்பட்டது. மே 1, 1889 அன்று, பாரிஸ் மாநாட்டினைத் தொடர்ந்து, நோர்வே, ஒஸ்லோவில் ஏறத்தாழ 4,000 தொழிலாளர்கள் கவனயீர்ப்புப் பேரணியில் பங்கேற்றனர். நோர்வேயின் பிற நகரங்களிலும் பெரும் ஆதரவுடன் உரிமைக்கான ஆர்ப்பாட்டப் பேரணிகள் தொடர்ந்தன. நோர்வேயிற் தொழிலாளர் பாதுகாப்புச் சட்டம் 1892 ஆம் ஆண்டு முதன்முறையாக நடைமுறைக்கு வந்தது. முதன்மையாக, இது தொழிற்சாலைகள் மற்றும் பிற தொழில்களில் ஏற்படும் விபத்துகளைத் தடுப்பதையே நோக்கமாகக் கொண்டிருந்தது. காலப்போக்கிற் தொழில் உரிமை, தொழிற் சூழல், பாதுகாப்பு, நேரவிதிகள் என்று தொழிலாளர் இயக்கம் படிப்படியாக தன் கோரிக்கைகளில் வெற்றி பெற்றது. 1956 ஆம் ஆண்டின் தொழிலாளர் பாதுகாப்புச் சட்டம் வேலை நேரத்தை ஒரு தொழிலாளியின் சாதாரண வேலை நேரம் ஒரு நாளைக்கு 9 மணிநேரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் என்றும் வாரத்திற்கு 40 மணிநேரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் என்றும் விதித்தது. 20 ஆம் நூற்றாண்டு முழுவதும், வேலை நேரத்தைக் குறைப்பது தொழிலாளர் இயக்கத்தின் மிக முக்கியமான செயற்பாடுகளில் ஒன்றாக இருந்தது. மேலும் மே 1 கோரிக்கையை முன்னெடுப்பதற்கான அடையாள நாளாகவும் இருந்துவருகிறது. பல நீண்ட போராட்டங்களின் பின் சட்டப்பூர்வ 8 மணிநேர வேலை போன்ற குறைந்தபட்ச உரிமைகள் கிடைக்கப்பெற்ற நாளாக உலகம் முழுவதும் அடையாளப்படுத்தப்படுகின்றது. தமக்கான நியாயமான ஊதியம் மற்றும் எட்டுமணிநேரப் பணி போன்றவற்றைப் பெற்றுத் தந்த தொழிலாளர் வேலைநிறுத்தப் போராட்;டம், சமூகத்தை வகைப்படுத்தும் முறைகளையும், உத்திகளையும் தந்து சென்றுள்ளன. பெரும்பான்மை நோர்வே மக்கள் தமது தொழிற்சாலைகளில் ஏற்;பட்ட முரண்பாடுகளுக்குத் தாமே தீர்வுகண்டுள்ளனர். இன்று முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் அரசாங்கங்களின் கொள்கைகளை மாற்றுவதற்கும், அவற்றை அகற்றுவதற்கும் கூட பயன்படுத்தப்படுகின்றன. சமூகம் இந்த நிலைமையை அடைவதற்குப் பல துணிச்சலான பெண்களும் ஆண்களும் முன்னோடிகளாகப் போராடத்தை நடாத்திச் சென்றனர். ஒழுங்கமைக்கப்பட்ட தொழிற்சங்க இயக்கத்தின் மதிப்பையும் அதன் மூலம் தாம் பெற்ற வாழ்க்கைத் தரத்தினையும் நடைமுறைப்படுத்திக் காட்டியுள்ளனர். உழைக்கும் மக்கள் ஒன்றுகூடி தொழிற்சங்கங்களாகக் கூட்டிணைந்து வேலை செய்தால் உழைப்பும் வாழ்வும் மேம்படும் என்ற கூட்டிணைவில், வருடாவருடம் மே மாதத்தில் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடர்ந்து நடைமுறைப்படுத்துகிறன்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. … கவிதா லட்சுமி Kavitha Laxmi8 மணிநேர வேலை – போராட்டம் – ஊதிய உடன்படிக்கைதீப்பெட்டித் தொழிற்சாலை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் (1889) வேலைநிறுத்தம் செய்வது பெருமிதத்திற்குரியது. ஜனநாயகம் மட்டுமல்ல, நடைமுறையில் வாழ்வதற்கு உலகின் சிறந்த நாடாக நோர்வே இருப்பதற…- கனேடிய தேர்தலில் மார்க் கார்னியின் லிபரல் கட்சி வெற்றி பெற்றதாக கணிப்பு!
Gary Anandasangaree is in Scarborough, Toronto. 1d · Over the past ten years, I’ve been given the opportunity to represent #SGRP — and now you’ve given me a fourth term to represent you in Ottawa. I wouldn’t have made it this far without the unwavering support of so many incredible people. ❤️" class="xz74otr x168nmei x13lgxp2 x5pf9jr xo71vjh" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t6c/1/16/2764.png" style="border: 0px; border-radius: 0px; object-fit: fill;"> To every single person who believed in this campaign, who volunteered their time, who showed up at events, knocked on doors, made calls, donated, shared our Liberal message, and lifted us up—thank you from the bottom of my heart. Your energy, your belief, and your commitment made this campaign what it is. This campaign was never just about one person—it was about a shared Liberal vision. It was powered by people who care deeply about their communities, and what happens when threats are made against our sovereignty. I’ve seen firsthand what we can accomplish when we come together and I couldn’t be more grateful that you’re putting your trust in me again. 🇨🇦" class="xz74otr x168nmei x13lgxp2 x5pf9jr xo71vjh" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/taa/1/16/1f1e8_1f1e6.png" style="border: 0px; border-radius: 0px; object-fit: fill;"> ஒவ்வொரு தேர்தல் காலம் வரும் போதும் தமிழர்கள் என்ற காரணத்தினால் என்னால் முடிந்தவரை சில நிபந்தனைகளோடு அவர்களுக்கு தொண்டர் அடிப்படையில் போய் உதவி செய்வேன்..எனது வீட்டுக்கு கிட்டவாகவும் இருந்த காரணத்தினால்,,,,,,,,,,,, இந்த தேர்தல் காலத்தில் இவரது அலுவலகத்தில் சில பணிகளில் பங்கு பற்றியிருந்தேன்.அலுவலத்திற்கு வருவார். அதிகம் யாரோடும் பேச மாட்டார். மிகவும் அமைதியானவர்.யாரையும் ஒரு வார்த்தையால் கூட நோகடிக்க மாட்டார்.புதியவர்களை கண்டால் கொஞ்ச நேரம் பக்கத்தில் வந்திருந்து எங்கள் படிப்பு, வேலை மற்றும் உதவிகள் ஏதாவது தேவையா என்று கேட்பார் போய் விடுவார்.என்னைப் பொறுத்த மட்டில் இலங்கை அரசியல் வாதிகளையும் இங்குள்ளவர்களையும் போட்டுக் குழப்பிக் கொள்வதில் அர்த்தமில்லை என்று நினைக்கிறேன்.- கனடா பாராளுமன்றத் தேர்தல் 2025
மீண்டும் வெற்றிபெற்றார் ஹரி ஆனந்தசங்கரி தேசியம் இணைய செய்தி.. பிக்கறிங்-புறூக்ளின் தொகுதியில் வெற்றிபெற்ற யுவனிதா நாதன் ! All reactions: 22- உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின
எங்கட வெற்றிக் கதைகளை நாங்கள் தான் சொல்லோணும்... ♥️" class="xz74otr x168nmei x13lgxp2 x5pf9jr xo71vjh" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/tac/1/16/2665.png" style="border: 0px; border-radius: 0px; object-fit: fill;">💪🏽" class="xz74otr x168nmei x13lgxp2 x5pf9jr xo71vjh" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/te9/1/16/1f4aa_1f3fd.png" style="border: 0px; border-radius: 0px; object-fit: fill;"> இது ஐந்தாம் ஆண்டு மூன்றாம் தவணையிலிருந்து, ஐலண்ட் ராங்க் செகண்ட் வந்தவனின் அமைதியான ஓர்மம்! யாழ் / ஹாட்லிக் கல்லூரியின், செல்வன் கந்ததாசன் தசரத் பெளதீக விஞ்ஞானப்பிரிவின் (கணித) - மாவட்ட நிலை - 01 மட்டுமல்ல, - தேசிய நிலை - 02 2024 GCE AL இல் இலங்கையில் இரண்டாவது பெரிய ஸ்கோரான 2.8394 எடுத்தவரான தம்பி தசரத் GCE OL இல் 9Aயும், எடுக்க அவரை படிப்பிச்சது யார்? - ஒரேயொரு தோல்வியும், கொஞ்ச சிறு வயது அவமானங்களும்! ஹாட்லிக் கல்லூரியின் தரம் 06 அனுமதியின் போது வரிசையில் கடைசியிலிருந்து 4வது இடத்தில் நின்றதை இன்னமும் மறக்காமல் இருந்த தசரத் - புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிகளை விட 03 புள்ளிகள் குறைவாக பெற்றிருந்தவர்!! பொதுவான வழக்கில், ஸ்கொலர்ஷிப் பெயிலான பொடியன் ஒருதன் தான் - அடுத்த ஒன்பதாவது வருடம் கணிதப்பிரிவில் தேசிய நிலையில் இரண்டாமிடம் என்ற ‘பெரீய’ செய்தி, வெறுமனே மாணவர்களுக்கானது மட்டுமல்ல பெற்றோருக்குமான இடியேறு. தாயார் - ஆசிரியர், தந்தையார் - பிரதிக் கல்விப் பணிப்பாளர், தமையன் - பொறியியல்பீட மாணவன் என்று வீட்டுக்குள்ளே ஏற்றிவிடும் கரங்கள் கிடைத்திருந்தாலும் - தனியொருவனாக தசரத், “உழைப்பின் உயர்வு” என்ற எங்களுக்கான திகிலூட்டும் திரைக்கதையை எழுதி ரியல் சினிமாவாக நிகழ்த்திக் காட்டியிருக்கிறான். நதி போல ஓடிக்கொண்டிரு, தம்பீ...♥️" class="xz74otr x168nmei x13lgxp2 x5pf9jr xo71vjh" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/tac/1/16/2665.png" style="border: 0px; border-radius: 0px; object-fit: fill;">🔥" class="xz74otr x168nmei x13lgxp2 x5pf9jr xo71vjh" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t50/1/16/1f525.png" style="border: 0px; border-radius: 0px; object-fit: fill;">♥️" class="xz74otr x168nmei x13lgxp2 x5pf9jr xo71vjh" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/tac/1/16/2665.png" style="border: 0px; border-radius: 0px; object-fit: fill;"> நீதி: - படிங்கடா பரமா? பரீட்சைகள் தற்காலிகம்! படிப்பு நிரந்தரம்!! 🤚🏽" class="xz74otr x168nmei x13lgxp2 x5pf9jr xo71vjh" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t9e/1/16/1f91a_1f3fd.png" style="border: 0px; border-radius: 0px; object-fit: fill;"> நம்ம யாழ்ப்பாணம் ·- கனடாவில் கூட்டத்திற்குள் கார் மோதி விபத்து; பலர் உயிரிழப்பு!
CP24Vancouver wakes to tragedy of nine dead in ramming attack...Vancouver is waking to the tragic aftermath of a deadly ramming attack on a Filipino community street festival that killed at least nine people, with survivors describing horrifying scenes of victi...Vancouver wakes to tragedy of nine dead in ramming attack on Filipino street festival..- உயர்தரப் பரீட்சையில் உயிரியல் விஞ்ஞான பிரிவில் யாழ். மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த இரட்டையர்கள்
My twins have got 3A in Bio stream Jamunanantha Sivanathan- 'கனடாவில் வாழ்க்கை அந்தரத்தில் தொங்குகிறது' - கனடா தேர்தல் குறித்து இந்தியர்கள் எதிர்பார்ப்பு என்ன?
இன்றைய நிலவரப்படி இடியப்பத்தின் விலை.அதுவும் கடைக்கு, கடை வேறு படும் என்று நினைக்கிறேன். String Hoppers String Hoppers $4.55 Includes Sothi and Sambal #1 most liked Choice of Quantity Choose 1 Required 25 50 +$4.55 Popular 100 +$13.65 இப்போ 100 +$13.65- கனடா செல்வதற்கு நிதி வசதி இல்லாத காரணத்தால் யாழ்ப்பாணத்தில் இளைஞன் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு!
இறப்பதற்கு இது எல்லாம் ஒரு காரணம் என்று எடுத்துக் கொள்ள முடியாது...கால், கை ஒழுங்காகத் தானே இருக்கிறது..முயற்சி உள்ளவராக இருந்தால் நல்ல படிப்பு மற்றும் வேலை என்று தன்னை முன்னேற்றி இருக்கலாம் தானே.. - அடைக்கலம் தருவதற்கு இந்தியா ‘தர்ம சத்திரம்’ அல்ல- ஈழ அகதி வழக்கில் உச்சநீதிமன்றம்!
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.