Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாயினி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by யாயினி

  1. ஏன் இப்படி ஒரு விபரீத ஆசை.?
  2. நான் சில திரிகளுக்குள் வர விருப்படுவதில்லை..ஆனாலும் சில கருத்துக்களை பார்க்கும் போது அதுவும் பெண் பிள்ளைகளை வைத்திருப்போரோ இப்படி எழுதும் போது என்ன செய்வது.. சில செய்திகளை கண்டும் காணாதது போல் போவதே மேல் இது அனைவருக்கும்.. .காரணம்..யாருடைய பிள்ளையாக இருந்தாலும் வாழ வேண்டிய பெண் பிள்ளை..மற்றையது முழுப் பிழைளயும் பெற்றோரில் தான் இருக்கிறது..ஓரளவுக்கு வந்து போகும் உறவுகளை பற்றி கொஞ்சமாவது புரிந்து இருக்க வேணும்.ஏன் இவர் அடிக்கடி வாறார்....இவரது நோக்கம் என்ன...வீட்டிலிருக்கும் பிள்ளைகளோடு எப்படி பழகுகிறார்கள் என்பதை கவனிக்க வேணும்.இவை அனைத்து வயதினருக்கும் பொருந்தும்.அதை விடுத்து.....
  3. இதை எவ்வளவு பேர் ஆமோதிக்கிறீர்கள் என்று எனக்கு சொல்லத் தெரியாது...ஆனால் இது தான் உண்மை என்பதையாவது புரிந்து கொள்ளுங்கள்...கடந்த பல ஆண்டுகளாக வடக்கு மாகாணம் ஓப்பீட்டு அளவில் ஒரு ஐந்துகுள்ளயாவது வந்தது..இந்த தடவை கடசி நிலைக்கு சென்றிருப்பது புலம் பெயர் மக்களால் என்ற ஒரு குற்றச் சாட்டையும் சில இடங்களில் ஊரிலிருப்வர்கள் எழுதியிருப்பதை காணக் கூடியதாக இருக்கிறது..எல்லாவற்றுக்கும் புலம் பெயர் சமுகம் தான் காரணம் என்றால் ஊரிலிருக்கும் பெற்றோர் என்ன தான் செய்கிறார்கள்...? எமது பெற்றோர் காலம் அதற்கு முந்தைய காலத்தில் உள்ளவர்களின் வீடுகளில் பார்க்கப் போனால் எங்காவது ஒரு வீட்டில் தான் பல்கலைக்கழகம் போனவர்களோ அல்லது அரச உத்தியோகம் பார்த்தவர்களோ இருந்திருக்கிறார்கள்..வளம் குறைந்த காலத்தில் கூட படிக்க வேணும் என்ற ஒரு கோட்பாடோடு இருந்திருக்கிறார்கள் அந்த மக்கள்...அப்படி இல்லாது விட்டாலும் பெற்றோர் அவர்களை கல்வி என்ற ஒன்றுக்கு போக வைக்க வேணும் என்பற்காகவது 'டேய் படிக்காட்டி பிற்காலத்தில் ஆடு மாடு தான் மேய்ப்பாய் என்று பேசியாவது படிக்க வைத்த பெற்றோரும் உண்டு. இப்போ படிக்க முடியாதவர்கள் என்று ஊரில் இருப்பவர்களை சொல்ல இயலாது....காரணம்.அனேகமான வீடுகளில் பல்கலைகழகம் போனவர்களோ அல்லது அரச வேலை செய்வோரோ தாரளாக இருக்கிறார்கள்.அப்படி இருக்கையில் ஏன் கல்வி நிலையில் பின் தங்கிப் போகிறார்கள்...உண்மையாக படிக்க வேணும் எங்கள் தேவைகளை நாங்களே பூர்த்தி செய்ய வேணும் என்ற நிலை அனேகருக்கு இல்லை..வெளியிலிருப்பவர்களை வெருட்டி,உருட்டியாவது பணத்திலிருந்து தேவைப்பட்ட எல்லாவற்றையும் பெற்று கொள்கிறார்கள்..18, 20 வயதுக்குள்ளயே தேவை அற்ற விடையங்களுக்கு அடிமையாகும் இளையவர்கள்..எல்லாவகையான மதுப்பாவனையும் கடந்த கிழமை கூட செய்திகளில் வந்த செய்தி மது அருந்தி விட்டு வாகன விபத்தில் இறந்த முவர்.... இந்த புலம் பெயர்ந்தவர்களும் இல்லாது விட்டால் உங்களுக்கு கேட்டதும் பணம், ஆடம்பர பொருட்கள் என்று வந்து சேராது..சிலருக்கு அலட்டல் எழுத்தாக கூட இருக்கலாம்.வெளி நாடுகளிலிருந்து பகிரப்படும் ஆலயங்களின் நேரடி அஞ்சல் பகுதிகளில் கூட ஊருலிருக்கும் சிலர் வந்து யாராவது எங்களை கூப்பிட்டு விட மாட்டீர்களா...?.ஐ போண் வேணும் வாங்கி அனுப்பி விட மாட்டீர்களா.....?இப்படி கூட தங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய முயற்சிக்கிறார்கள்.. இந்த ஆண்டு வடக்கு மாகாணம் 69-70.அடுத்து வரும் ஆண்டுகளில் எழுதக் கூடடியமாதிரியிருந்தால் ... எழுதுகிறேன்.நன்றி.✍🙏
  4. வவுனியா 1 மணி நேரம் முன் வவுனியாவில் பொலிஸின் கோரம் - குடும்பஸ்தர் பரிதாபமாக உயிரிழப்பு! வவுனியா, கூமாங்குளம் பகுதியில் நேற்று இரவு போக்குவரத்துப் பொலிஸாரின் வெறியாட்டத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்தார். இதனால் கொதிப்படைந்த அந்தப் பகுதி மக்கள் பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டமையால் அங்கு அமைதியின்மை ஏற்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நேற்று இரவு 10 மணியளவில் வவுனியா, கூமாங்குளம் மதுபான விற்பனை நிலையம் அமைந்துள்ள வீதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் பொலிஸார் வந்தனர். இதன்போது அந்த வீதியால் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த நபர் ஒருவரை அவர்கள் துரத்திச் சென்றதுடன் மோட்டார் சைக்கிள் சில்லுக்குள் தடியொன்றை வீசித் தடையை ஏற்படுத்தினர். இதனால் நிலைதடுமாறி கீழே வீழ்ந்த மேற்படி நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை அவதானித்த மக்கள் ஆத்திரமடைந்து பொலிஸாரின் இரண்டு மோட்டார் சைக்கிள்களையும், ஒரு வாகனத்தையும் சேதப்படுத்தினர். பொலிஸாரின் இந்தக் கொலை வெறியாட்டத்துக்கு நீதி கிடைக்க வேண்டும் என மக்கள் தெரிவித்ததுடன் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை நீண்ட நேரமாகச் சிறைப்பிடித்து வைத்தனர். இதனால் அந்தப் பகுதியில் குழப்ப நிலை ஏற்பட்டது. உயிரிழந்தவரின் சடலத்தைப் பொலிஸார் அங்கிருந்து அகற்றுவதற்கு மறுப்புத் தெரிவித்த மக்கள், "நீதிவான் இங்கு வரவேண்டும். அவர் வந்த பின்னரே சடலத்தை அகற்ற அனுமதிப்போம்." என்று தெரிவித்தனர். இதனால் பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றது. மக்களின் கொதிப்பால் தடுமாறிய பொலிஸார் நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறினர். இந்நிலையில் வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சம்பவ இடத்துக்கு வருகை தந்து, இந்த மரணத்தைக் கொலை வழக்காகப் பதிவு செய்து அதனுடன் தொடர்புடையை சந்தேகநபர்களை விசாரிப்பதாகத் தெரிவித்ததுடன், சடலத்தை அகற்றுவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் அங்கு நின்ற மக்களிடம் கேட்டுக்கொண்டார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த மக்கள், "பொலிஸார் மீது எமக்கு நம்பிக்கை இல்லை. நீதிவான் இங்கு வரவேண்டும்' என்று விடாப்பிடியாக நின்றனர் . இதையடுத்துத் திடீர் மரண விசாரணை அதிகாரி சம்பவ இடத்துக்கு வருகை தந்து மரணம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்தார். அதன்பின்னர் மக்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் சடலம் அந்தப் பகுதியில் இருந்து அகற்றப்பட்டு பொலிஸாரின் வாகனத்தில் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டது. இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர் வவுனியா, கூமாங்குளம் பகுதியைச் சேர்ந்த இராமசாமி அந்தோனிப்பிள்ளை (வயது 58) என்ற குடும்பஸ்தர் என்று தெரியவந்துள்ளது. அவரது சடலத்துக்கு அருகில் மக்கள் சிறைப்பிடித்து வைத்திருந்த பொலிஸ் உத்தியோகத்தரின் பெயர் பொறிக்கப்பட்ட இலட்சினை ஒன்றும் காணப்படுகின்றது. இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டதுடன் விசேட அதிரடிப் படையினர், கலகத் தடுப்புப் பொலிஸாரும் களமிறக்கப்பட்டிருந்தனர். https://newuthayan.com/article/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_-_%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81!
  5. இந்த விடையம் வீடியோவாக முகப் புத்தக பக்கம் பார்க்க முடிந்தது..உயிராபத்தான கட்டத்திலும் அனேகமானவர்களின் போண்கள் வீடியோ எடுத்தபடி தான் இருக்கிறது..நாகரீகம் கூடிய மக்கள்.🤨
  6. யாழில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு! written by admin July 12, 2025 பிள்ளைகளுக்கு உணவு வாங்கி சென்றவர் வீதி விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். இலங்கை போக்குவரத்து சபையின் யாழ். சாலை காப்பாளரான , நயினாதீவை சேர்ந்த பாலேஸ்வரன் என்பவரே உயிரிழந்துள்ளார். திருநெல்வேலி, பலாலி வீதியில் அமைந்துள்ள அம்மாச்சி உணவகத்தில் உணவருந்திய பின்னர் பிள்ளைகளுக்கும் உணவு வாங்கிக்கொண்டு பலாலி வீதியில் துவிச்சக்கர வண்டியில் ஏற முற்பட்டவேளை , வீதியில் மிக வேகமாக வந்த ஹயஸ் ரக வாகனம் மோதியுள்ளது. அதில் படுகாயமடைந்தவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பில் கோப்பாய் காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அதேவேளை இவரது இரு பிள்ளைகள் பேராதனை மற்றும் ஶ்ரீஜெயவர்த்தன புர பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுவரும் நிலையில், இளைய மகள் அண்மையில் வெளியான க.பொ.த சாதாரண தர பரீட்சையில் 9A பெறுபேறுகளை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2025/217784/
  7. இந்த மாணவனது தகவலை படத்தோடு பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சிறியண்ண...பலதும் , பத்திலும் பகிரப்பட்டுள்ளது..எனக்கு சிலவேளைகளில் படங்களோடு தகவல்களை பகிர முடியாமல் போகிறது ஏன் என்று தெரியவில்லை.நான் உட்பட முடிந்தவர்கள் தங்களால் முடிந்த உதவியை செய்து இவ்வாறன மாணவர்களை மேற் கொண்டு கற்பதற்கு ஊக்கபடுத்த வேண்டும் என்பதற்காகவே சில விடையங்களை இங்கும் இணைப்பேன்.🖐
  8. இப்ப தான் சரியான இடத்தை பிடித்திருக்கிறார் சீமான்..என்ன வாய் பேசாப் பிராணிகள் பாவங்கள்..,🤭
  9. Posted inStory மாதா எழுதிய “முதுமை” சிறுகதை Posted byBookday07/07/2025No CommentsPosted inStory “முதுமை” சிறுகதை – மாதா அந்த முதியவருக்கு எண்பது வயதாகிறது. அவரது மனைவிக்கு எழுபது. அவர்கள் கிளையில் தொங்கிக்கொண்டிருக்கும் பழுத்த மாம்பழங்கள். ஒரு நாள் திடீரென்று பலத்த காற்று வீசும் போது ஒன்றன் பின் ஒன்றாக பூமியில் விழுந்து விடும். தனது மனைவியை விட தான் வயது மூத்தவர் என்பதால் தார்மீக அடிப்படையில் அவளுக்கு முன்பாகவே தான் காலமாகிவிட வேண்டுமென்று எண்ணினார். ஆனால் கடவுள் அந்த வயது முதிர்ந்தபெண்ணுக்கு அணுக்கமாகவே நடந்து வருகிறார். வயதான காலத்தில் வாழ்க்கையில் பெரிதாக ஒன்றும் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் விரும்பியதை எல்லாம் கடவுள் வழங்கியிருப்பதாகவே நம்பினார்கள். தேவைகள் குறைவாக இருப்பவரே பெரிய செல்வந்தர். நலக்குறைவில்லா வாழ்க்கை. மூதாட்டிக்கு கடவுளிடம் ஒரே ஒரு பிரார்த்தனைதான். நூறு ஆண்டுகள் வரை கணவர் உயிரோடு வாழ வேண்டும். அவருக்கு முன்பு அவள் உயிர் பிரிய வேண்டும். நலமுடன் இருக்கும் போதே கடவுள் அவளை அழைத்துக் கொள்ள வேண்டும். அவரை விட்டால், அவள் யாரிடம் முறையிட முடியும்? தேவைப்படும் நாளில் உதவிக்கரம் கிடைக்காத சூழலில் மனிதன் கடவுளை எண்ணுகிறான், தன்னை மீட்டெடுப்பான் என்று நம்புகிறான். ஆனால் அளவான இறை நம்பிக்கையுள்ள முதியவர் ஆண்டவனிடம் இதுபோன்ற கோரிக்கை வைப்பதில்லை. பக்தர்களை கவனிப்பதை விட கடவுளுக்கு உலகில் ஏராளமான பிரச்சனைகளை தீர்க்க வேண்டிய கடமை இருக்கிறது. அவளுடைய வேண்டுகோளை கடவுள் எவ்வாறு நிறைவேற்ற முடியும்? இருப்பவர்களுக்கெல்லாம் நீண்ட ஆயுளைக் கொடுத்து தங்கி விட்டால், மற்றவர்களுக்கு பூமியில் இடமில்லாமல் போகுமே… சராசரி அயுளுக்கு மேல் நீணட கால வாழ்க்கையை யாரும் விரும்புவதில்லை. வாழ்க்கையின் இறுதிப் பகுதி துயரத்தின் வலி மிகுந்ததாகவே இருக்கும். அவர்கள் வசிக்கும் வீடு அந்த மூத்த தம்பதிகளின் வயதை விட பழமையானது. மூன்று தலைமுறையை தாங்கி நிற்கிறது. பழமையான அந்த வீட்டில் பழமையான இரு மனிதர்கள் வசித்து வருகிறார்கள். நூற்றி ஐம்பது ஆண்டு வயதுடைய அந்த வீட்டை மராமத்து செய்யவோ, நவீனப்படுத்தவோ அவர்கள் வரும்பவில்லை. பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் வந்து தங்காத வீட்டை புதுப்பிக்கவில்லை. பிள்ளைகளின் வாழ்வை கரை சேர்த்துவிட்டு மீண்டும் வாழத்தொடங்கி இருக்கிறார்கள். மூத்த தம்பதிகள் நீண்டகாலம் வாழ்வதால் முதுமைக்கால பிரச்சனைகள் துன்புறுத்தும். அவர்களை பராமரிப்பதற்காக செலவு ஏற்படும். பிள்ளைகள் ஒதுக்கி வைத்ததால் அவர்கள் தங்களிடம் சேர்ந்து கொண்டார்கள் மூத்த தம்பதிகள். முதுமைப் பருவம் என்பது பிறப்பு, இறப்பு எல்லைகளுக்கு இடையிலான விளிம்பு நிலை பருவம். கடந்து சென்ற வாழ்க்கைப் பாதையின் அனைத்து அனுபவங்களையும் அசை போட்டு, அடுத்த தலைமுறைக்கு சுவடுகளை விட்டுச் செல்லுகிற உன்னத பருவம். அவர்கள் ஏற்கனவே நீணட காலம் வாழ்ந்து விட்டார்கள். அந்த ஊரிலேயே அவர்கள்தான் வயதானவர்கள். அவர்கள் வயதையொத்தவர்கள் எல்லாம் ஏற்கனவே இறந்து விட்டார்கள். அதனாலேயே அவர்கள் இந்த உலகத்தை விட்டு பிரிய மனதளவில் தயாராகி விட்டார்கள். மரணம் யாரிடமும் அனுமதி கேட்பது இல்லை. மரணத்தை விட்டு ஓட முடியுமா? ஒருவருக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்து முடிக்க வேண்டும். நிறைவான வாழ்க்கையில் மரணம் இருக்காது. கிழவரும், அவருடைய மனைவியும் மரணத்தைப் பற்றி சிந்திப்பதே இல்லை. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நொடியும் வாழ்க்கையை ரசித்து வாழ்கிறார்கள். அவர்கள் தங்கள் வேலைகளைத் தாங்களே செய்துகொள்கிறார்கள். தங்களின் தேவைக்கு யாருடைய உதவியையும் எதிர்பார்ப்பதில்லை. தினமும் ஒரு நேரம் மட்டுமே ரேஷன் அரிசியை சமைத்து இரண்டு வேளைக்கு சாப்பிடுகிறார்கள். பல நாட்களில் வயதான வயிறு ஒத்துழைக்க மறுக்கிறது. உண்ட உணவை செரிக்க முடியவில்லை. தினமும் குறைந்த அளவே உண்ணுகிறார்கள். உடலில் உயிரையும், ஆன்மாவையும் வைத்திருப்பதற்காக மட்டுமே சாப்பிடுகிறார்கள். சாப்பாட்டிற்காக அவர்கள் ஏங்கியதே இல்லை. அக்கம், பக்கத்து குடித்தனக்காரர்கள் அவர்களை பொறாமையோடு பார்ப்பார்கள். இந்த வயதான காலத்திலும் எப்படி இவர்களால் மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது? வெளியூர்களில் வசிக்கும் அவர்களுடைய பிள்ளைகள் தங்களை வந்து பார்க்கவில்லையே, பராமரிக்கவில்லையே எனற கவலைகள் கிடையாது. நீங்கள் எப்போது விரும்பினாலும் இந்த கிராமத்திற்கு வந்து நமது முன்னோர்கள் கட்டிய இந்த வீட்டில் தங்கிச்செல்லலாம் என்று பிள்ளைகளிடம் கூறியிருக்கிறார்கள். அவர்களுக்கு சிறு சிறு நலக்குறைவு ஏற்பட்டாலும் பிள்ளைகளுக்கு தந்தியோ, தகவலோ கொடுப்பதில்லை. ஆனால் கிழவிக்கு முதுமைக்கால புலம்பல்கள் அவ்வப்போது வரும். பெண்கள் எதற்காக குழந்தைகளைப் பெற்றெடுக்கிறார்கள்? பெற்றோர்களை முதுமைக் காலத்தில் கவனித்து பராமரிப்பதற்குத்தானே…என் பிள்ளைகள் எனக்கு கடிதம் கூட எழுதுவதில்லை. இப்படியான பேச்சு வரும்போதெல்லாம் கிழவர் சட்டென்று சொல்லிவிடுவார்;. எந்த மனிதனும் எவரையும் காப்பாற்ற முடியாது. கடவுள் மட்டுமே நமக்கு நல்லது செய்ய முடியும் என்பார். அவரவர்க்கு ஏராளமான சொந்த பிரச்சனைகள். நமது பிள்ளைகளுக்கும் அப்படித்தான். அவர்கள் நமக்கு கடிதங்கள் எழுதுவதாலேயே நம்முடைய பிரச்சனைகள் மறைந்துவிடுமா? பிள்ளைகளைப் பற்றி தேவையில்லாமல் புலம்பிக்கொண்டிருப்பது தாய்மார்களுக்கு. வாடிக்கையாகிவிட்டது. அவர்களெல்லாம் நம்மைப் பார்க்க வந்து தங்கிவிட்டால், உன்னால் சமாளிக்க முடியாது. பத்துப் பனிரெண்டு தட்டுகளுக்கு உன்னால் சமைத்து பரிமாற முடியுமா? அவர்கள் எப்போது விரும்புகிறர்களோ அப்போது வந்து பார்க்கட்டும். சின்ன விஷயங்களுக்கெல்லாம் உணர்ச்சி வசப்பட்டு பேசக்கூடாது. இதைக் கேட்டதும் பாட்டிக்கு பல்லில்லா வாயில் கனிவான புன்னகை பூக்கும். கண்டிப்பு கலந்த வார்த்தைகளை கணவன் உச்சரித்தாலும் அதில் ஒரு ஈர்ப்புத் தன்மை இருக்கும். சில நேரங்களில் தாய்மை உணர்வை வெளிப்படுத்துவதற்காக அவள் புலம்பினாலும், கணவன் அவளை அதட்டி கட்டுப்படுத்துவது வாடிக்கையாகிவிட்டது. கடந்த ஐம்பது ஆண்டுகளாக இந்த கட்டிடம் பழுதாகி, பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. ஆண்டுகள் உருண்டோடி, தம்பதிகள் முதுமையாகி தளர்ந்து விட்டார்கள். ஆனால் அவர்கள் வாழ்ந்து வரும் இந்த வீடு பழமையானாலும் கம்பீரமாக நிற்கிறது. பொலிவுடன் தொன்மையான மரபின் அடையாளமாகத் திகழ்கிறது. அனைவரின் கவனத்தையும் ஈர்த்து ஒரு பிரமாண்டத்தை அளிக்கிறது. மனிதருக்கு வீடும், உலகமும் எவ்வளவு நெருக்கமாக இருக்கிறது. தனித்துவமாகவும் இருக்கிறது. சிலருக்கு வீட்டிற்கும், உலகிற்கும் பெரிய இடைவெளி உள்ளது. வீடு உங்களை எளிதாக அங்கீகரித்தாலும், உலகம் உங்களை எளிதில் அங்கீகரிக்காது. வீடும் அங்கீகரித்து, உலகமும் அங்கீகரித்து வாழும் வாழ்க்கைதான் சிறந்த வாழ்க்கை. உலகிலேயே வீடுதான் மனிதனுக்கு பாதுகாப்பானது. வீடு என்பது வெறும் சுவர்கள் அல்ல. அது வாழ்வின் அடையாளம். முதுமையை கழிப்பதற்கு பாதுகாப்பான இடம் வீட்டைத் தவிர வேறு எதுவும் இல்லை. அவர்களது உடம்பு முதுமையாகி தளர்ந்து விட்டது. முதுமை அவர்களுக்கு சுமையாகிப் போனது. சிரமமும், வேதனையும் தாங்க முடியவில்லை. அவர்கள் தூசிக்குள்ளும், சிலந்தி வலைக்குள்ளும் அடைந்து கிடக்கிறார்கள். இருந்தும் தங்களைத் தாங்களே மென்மையாகப் பாதுகாத்துக்கொண்டு அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்கிறார்கள். அண்மைக் காலமாக முதியவர் உடம்பு கூன் விழுந்து பலவீனமாகி, முதுமைக்கால தொந்தரவுகள் அதிகமாகி வருகிறது. கட்டிலில் இருந்து இறங்கக் கூட யாரேனும் கைத்தாங்க வேண்டிய காலத்தில் புரிகிறது அவளுக்கு நானும், எனக்கு அவளும்தான் கடவுள் என்பது. முதலில் பிறந்த மனிதன் பழையது ஆகிறான். பின்னால் பிறந்தவன் புதியவனாகிறான். ஆனால் ஒவ்வொருவரும் பழமையாகி, பயனற்றதாகி விடுகிறார்கள். இந்த முறையும் லீவுக்கு வரமுடியாதுன்னு தபால் வந்திருக்கு. ஒரு தடவையாவது அவன் வந்து பார்க்கக் கூடாதா என்று கிழவி கேட்டதற்கு, கிழவர் அமைதியாய் பதிலளித்தார். ஒருவன் பழையவர்களை அழைத்துச் செல்ல வருவான். யார் அவன்? அவன் புதியவற்றை வளரவிட்டு, பழமையாக்குபவன்;. நம்மை அழைத்துச் செல்ல எப்போது வேண்டுமானாலும் வரட்டும். அவள் நெற்றியைத் தடவிக்கொண்டே கூறினார். லௌகீக வாழ்வுக்கு தேவைப்படும் உதவி எங்கிருந்து கிடைக்கிறதோ அந்தப் பருப்பொருள்தான் கடவுள். ************* எழுதியவர் : ✍🏻 மாதா @ மே-பா மா.தங்கராசு சிஐடியு தேனி மாவட்ட கைத்தறி சங்க செயலாளர் 75- கிழக்குத் தெரு, சக்கம்பட்டி ஆண்டிபட்டி- அஞ்சல் 625512 தேனி- மாவட்டம் https://bookday.in/muthumai-tamil-short-story-written-by-matha/
  10. சிறப்புக்கட்டுரைகள் ’யோகா தமிழருடையது- அடித்துச் சொல்லும் சித்த மருத்துவ வல்லுநர்’ இரா. தமிழ்க்கனல் Published on: 21 Jun 2025, 2:30 pm Share நாடு முழுவதும் இன்று யோகா நாள் கடைப்பிடிக்கப்பட்டு, ஏராளமானவர்கள் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர். அண்மை சில ஆண்டுகளாக மத்திய அரசும் யோகாவுக்கு அதிகமாக முக்கியத்துவம் அளித்துவருகிறது. இந்தப் பின்னணியில் யோகா முறையே தமிழர் மரபு நெறி என்கிற குரலும் வலுத்துவருகிறது. ஓகம் எனத் தமிழில் கூறப்பட்டதே யோகம் என வடமொழியில் திரிக்கப்பட்டுவிட்டது என்றும் சித்த மருத்துவம் ஆயுர்வேதம்போல மாற்றப்பட்டுவிட்டது என்கிற வாதமும் முன்னைவிட வலுவாக முன்வைக்கப்படுகிறது. தனித் தமிழ் இயக்கத்தைச் சேர்ந்த பொழிலனின் ’ஓகம் பயில்வோம்’ எனும் புத்தகம், யோகா தமிழ் மரபு முறைதான் என அடித்துச்சொல்கிறது. பெரியார்கூட யோகா கற்றுக்கொண்டார் என்றும் ஒரு தரப்பினர் கூறுகின்றனர். ஆனால், இதைப் பற்றி மருத்துவக் கல்லூரிகள் போன்ற ஆய்வுமட்ட அளவில் துறைசார்ந்த வல்லுநர்கள் என்ன சொல்கிறார்கள்? கர்நாடக மாநிலம், மணிப்பால் பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவத் துறையின் தலைவர் பேராசிரியர் டாக்டர் அருள் அமுதனிடம் பேசினோம். அந்த உரையாடலிலிருந்து... பேராசிரியர் சித்த மருத்துவர் அருள் அமுதன், மணிப்பால் பல்கலைக்கழகம் யோகாவை வடமொழிசார்ந்த- வடக்கத்திய ஒன்றாகவும் இன்னொரு பக்கம் தமிழர் சொத்தாகவும் வேறுவேறாகச் சொல்கிறார்களே? உடலுக்கு வெளியில் இறைவனைத் தேடுபவர்கள், ஒரு வகையினர். மனிதன் முற்பிறவியில் செய்த வினையை முன்னிட்டு பிறக்கிறான்; நோய், துன்பங்கள் வருவது முன்வினைப் பலன் என்பது கர்மா... வேதாந்தம். இப்படிக் கருத்துடைய ஒருவருக்கு, தன்னுடைய பிரச்னையைத் தீர்க்க வேறு வழியே இல்லை; பூசையோ யாகமோ சோதிடப்படி பரிகாரமோ செய்யவேண்டும். இதற்கு அறிவியல் தேவையே இல்லை. வேதாந்திகள் இதைத்தான் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகச் சொல்லிவருகிறார்கள். இன்னொரு பக்கம், மக்களுடைய கஷ்டங்களைப் பார்த்து, அவர்களின் நோய்களைத் தீர்க்க முடியும்; அறிவியல்பூர்வமாக எதையும் செய்யவேண்டும் என்று முயன்றவர்கள் சித்தாந்திகள். வேதாந்தம்- சித்தாந்தம் இரண்டும் நேர் மாறானவை. நம் நாட்டில் கௌதம புத்தர், மகாவீரர், கேரளத்தில் நாராயண குரு, தமிழ்நாட்டில் வள்ளலார்... இவர்கள் எல்லாரும் சித்தாந்திகள். வேதாந்தத்துக்கு எதிரானவர்கள்; மெய்ஞானம், விஞ்ஞானம், ஆன்மிகம் எனப் பேசியவர்கள். வேதாந்திகளுக்கு மதம்தான் எல்லாம். கடவுளை வெளியில் தேடினால் வியாபாரம்; உண்மையில் உனக்குள் கடவுளைத் தேடு என்கிறபடி சித்தர்கள் கண்டுபிடித்த வழிமுறைதான் யோகம். புத்த மதம், ஜைன மதம் யோகா தியானத்தைக் கற்பிக்கிறார்கள், செய்கிறார்கள். வேதாத்ரி மகரிஷியின் ’வாழ்க வளமுடன்’ வழியினரும், வள்ளலார் வழியினர் தியானம் செய்கிறார்கள். ஐயா வைகுந்தர் வழியில் ஒரு கண்ணாடி முன் தியானம் செய்யச் சொல்கிறார்கள். அதாவது கண்ணாடி முன்னால் நின்று பார்த்தால் நீதான் இறைவன். இவர்களை ஒரு குடையில் வைத்தால், கடவுளை உனக்குள்ளே தேடு என மனதுக்குள்ளே பயணம் (Inner Journey) செய்யச் சொல்கிறவர்கள், சித்தாந்திகள். இந்த சித்தாந்திகள் யோகாவில் எட்டு வகைப் படிநிலைகளைப் பயிற்சிசெய்து, கடைசியாக சமாதி நிலையை அடையும்போது அவர்களுக்கு எல்லையில்லா அதிசக்தி கிடைக்கிறது. பெரிய மேஜிக்கல் பவர் கிடைக்கிறது. அவர்களுக்குப் பெயர் அஷ்டமகா சித்திகள்... இவர்கள்தான் சித்தர்கள். வட இந்தியா, தென் இந்தியாவில் யோகிகள் எத்தனையோ பேர் இருந்தாலும் கடைசி நிலைக்குப் போய் சித்தர்கள் ஆவதில்லை. கடவுளை அடைய முயல்பவன் பக்தன்; அடைந்தவன் சித்தன். சமாதி என்றால் இறந்துவிடுவார்களா? இல்லை, உயிரோடுதான் இருப்பார்கள். அந்த நிலையில் அவர்களுக்கு அதிதீவிரமான சக்தி கிடைத்திருக்கும். தெளிவாக பிரச்னைக்குத் தீர்வைக் காண அவர்களால் முடியும். அந்த அளவுக்கு மனத் திட்பம் உருவாகியிருக்கும். சித்தர்கள் என்பவர்கள் ஒருபக்கம் மருந்துகளைச் செய்தாலும், காயகற்பம்- அதாவது காயம் என்றால் உடல், கற்பம் என்றால் உடலை கல்லைப் போல வலுவாக வைத்துக்கொள்வது; அதில் உள்ள ஒரு பயிற்சியான யோகாவை உருவாக்கினார்கள். இது முற்காலத்தில் துறவு வாழ்க்கைக்குப் போகிறவர்களுக்கான பயிற்சி, பொது மக்களுக்கானது அல்ல. அதனால்தான் இது எல்லாருக்கும் சொல்லித்தரப்படவில்லை. மரணமில்லாப் பெருவாழ்வு என வாழ முற்படுவோருக்கு, உடல், மனதை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு சித்தர்கள் கண்டுபிடித்ததுதான் காயகற்பம். அதைப் பயிற்சிசெய்ய எண்ணம், சொல், செயல் தூய்மையாக இருக்கவேண்டும்; உணவுக் கட்டுப்பாடு உள்ளது. உன்னையே நீ அறி- நமக்குள்ளேயே பயணம்... தியானம்..அதுதான் யோகா. சரி. ஏராளமானவர்கள் இப்போது யோகா செய்கிறார்கள். முற்காலத்தில் இதன் பயன்பாடு குறைந்த அளவினரிடம் மட்டுமே இருந்ததாகச் சொல்கிறீர்கள். இப்படி என்றால், சித்த மருத்துவத்தின் அங்கமாக யோகா என்னதான் செய்தது? யோகம் நம்முடைய கலைதான்; உடல், உள்ளத்துக்கான ஒரு முறைதான். திருமூலரின் திருமந்திரத்தில் நிறைய பாடல்கள்... இதைப் பற்றி மட்டும் 300 பாடல்கள் இருக்கின்றன. திருமந்திரத்தில் ஒரு அதிகாரம் முழுவதுமே அட்டாங்க யோகம் பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. போகர் என்ற சித்தரின் நூலில் இருக்கிறது. அகத்தியரின் நூலில் இருக்கிறது. தமிழில் இயற்றப்பட்ட மூலநூல்களில் இருக்கிறது. யோகத்தின் தந்தை எனச் சொல்லப்படக்கூடிய பதஞ்சலி முனிவர், இராமேசுவரத்தில் யோகாவைக் கற்றுக்கொண்டு சமாதி நிலையை அடைந்ததாக நம்முடைய சித்த நூல்கள் சொல்கின்றன. திருமூலர், பதஞ்சலியும் தானும் உட்பட மொத்தம் எட்டு பேர் ஓர் ஆசிரியரிடம் யோகத்தைக் கற்றுக்கொண்டதாக திருமந்திரத்தில் எழுதியுள்ளார். தமிழர் ஆன்மிகத்தில் யோகம் இருக்கிறது. பதஞ்சலி தமிழிலிருந்து கற்றுக்கொண்டு போய் சமஸ்கிருதத்தில் எழுதிவைத்திருக்கிறார். கைகால் நோவு ஏற்படும்போது வர்ம சிகிச்சை அளித்தபிறகு, நோயாளிகளே தங்களின் வர்மப் புள்ளிகளைத் தூண்டிவிடும்வகையிலான வீட்டிலேயே செய்யக்கூடிய பயிற்சிதான் இந்த ஆசனங்கள். சித்த மருத்துவர்கள் தங்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள இதைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். சில நோயாளிகள் நீண்ட காலம் வாழவேண்டும் என விரும்பிக் கேட்கும்போது சிகிச்சையாக கற்றுத்தருவோம். ஆனால், காய்ச்சல், தலைவலி போன்றவற்றுக்குக் கற்றுத்தரப்படுவதில்லை. எல்லாரையும் கூட்டத்தைக் கூட்டி சொல்லித்தரப்படவில்லை. உடலுக்கும் மனதுக்கும் தெம்பு வேண்டும் என்றால், பூசை, பரிகாரம் செய்ய வேண்டும் என வேதாந்திகள் சொல்லிக்கொண்டு இருந்தபோது, அதற்கு மாற்றாக சித்தர்கள் யோகாவைக் கண்டுபிடித்தார்கள். நியமம், இயமம், யோகம், பிராணயாமம் செய்தால் அவ்வளவு பயன்களும் கிடைக்கும் என்றார்கள். கிடைத்தது. தமிழ்நாட்டைச் சேர்ந்த சுவாமி சிவானந்தா என்பவர் அல்லோபதி மருத்துவர். வெளிநாடுகளுக்கெல்லாம் போய்வந்தவர். அவர் யோகத்தை நன்கு அறிந்தவர். நோயாளிகளுக்குக் கற்றுத்தந்து இது நன்றாக இருக்கிறது என ஒரு சிகிச்சையாக மாற்றினார். இன்னொரு பக்கம், இந்த யோகாவை தமிழ்ச் சமூகத்தில் கடவுள் மறுப்பாளர்கள் இதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல; தேவை இல்லை என தள்ளிநிற்கிறார்கள்... கடவுள் மறுப்பாளர்கள், பகுத்தறிவாளர்கள், பெரியாரியர்கள், கம்யூனிஸ்ட்டுகள் எல்லாரும் யோகா செய்யலாம். இவர்களுக்கு இதைப் பற்றி போதிய விழிப்புணர்வு இருப்பதாகத் தெரியவில்லை. எதிர்ப்பக்கம் வேதாந்திகள் இதைத் தவறாகச் சித்திரிக்கிறார்கள். உனக்கு நீதான் கடவுள்- அதை உணர்வதற்குத்தான் யோக மார்க்கம் என்கிறார்கள் சித்தர்கள். ஆனால் வேதாந்திகள் பூசை புனஸ்காரம் செய் என்கிறார்கள். அவர்களே யோகாவையும் வலியுறுத்துவதால் பகுத்தறிவாளர்கள் மதம்சார்ந்த ஒன்றாக ஒதுக்கிவைக்கிறார்கள். புற்றுநோய் வந்த ஒருவரிடம் மருத்துவர், இனி ஒரு மாதம்தான், நீ இறந்துவிடுவாய் எனச் சொல்லிவிட்டார். இனி குழந்தையே பிறக்காது என ஒருவரிடம் சொல்லிவிட்டார்... இவர்களுக்கெல்லாம் ஒரு ஆன்மிகப் பிடிப்பு வேண்டும் அல்லவா? இதற்கு யோகா உதவியாக இருக்கிறது. வேதாந்திகள் சொல்வதை வைத்து இவர்கள் புறக்கணிப்பதால், யோகம் கூடாது எனச் சொல்லிவிட முடியாது. உண்மையில் யோகத்தைக் கற்றுக்கொண்டு பரப்பவேண்டியது, கடவுள் மறுப்பாளர்கள், பகுத்தறிவாளர்களின் பணி. அப்போதுதான் அறிவியல்பூர்வமாக பிரச்னைகளுக்குத் தீர்வுகாண்பது நடக்கும். மருத்துவரீதியாக எல்லாவற்றையும் குணப்படுத்த முடியாதபோது, உளவியலாக பணமில்லாத மருத்துவ முறையாக யோகா பயன்படுகிறது! எத்தனையோ பேர் யோகா ஆசிரியர் என விளம்பரம் செய்துகொள்கிறார்கள். சரியான பயிற்சியாளரைக் கண்டறிவதே சவாலாக இருக்கிறது. சரியான முறையில் எப்படி இதைக் கற்றுக்கொள்வது? தமிழ்நாட்டில் உள்ள சித்த மருத்துவக் கல்லூரிகளில் யோகாவுக்கென தனித் துறைகள் உள்ளன. அங்கு யோகத்தைக் கற்றுக்கொள்ள முடியும். நோய் வரும்முன் காப்போம் என்பதற்காகக் கற்றுக்கொள்ள வேண்டும் என்கிறமுறையில், அந்தக் கல்லூரிகளில் யோகத்தை முறையாகக் கற்றுக்கொடுக்கிறார்கள். சென்னை, நெல்லை பாளையங்கோட்டையில் அரசு சித்த மருத்துவக் கல்லூரிகள், யோகா கல்லூரிகளில் இதற்கான வாய்ப்பு உண்டு. இதைத் தாண்டி நீங்களே யோகத்தை முறையாகக் கற்றுக்கொண்டு பயிற்சியாளர் ஆகவேண்டுமென்றால், விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முறையான படிப்புகள் உள்ளன. அப்படிக் கற்றுக்கொண்டவர்கள் தகுதியான ஆசிரியர்கள்தான். மேலும், வாழ்க வளமுடன், பாபாஜி கிரியா யோகா வழியினர் முதலியவர்கள் முறையான யோகப் பயிற்சியைத் தருகிறார்கள். எச்சரிக்கையாக இருக்கவேண்டியது, பணத்துக்காக இதைச் சொல்லித்தரும் கார்ப்பரேட் சாமியார்களிடம்தான். அவர்கள் வேதாந்தம், சித்தாந்தம் இரண்டையும் சேர்த்து குழப்பியடிக்கிறார்கள்; அது தவறு. இந்த மாதிரியான இடங்களில்தான் யோகாவை வியாபாரம் ஆக்குவதைப் பார்க்கமுடியும். யோகாவை முறையாகக் கற்காமல், வீடியோவைப் பார்த்து சுயவைத்தியம்போல தானாகச் செய்துகொள்கிறார்கள். அதை அப்படியான பயிற்சி தருவோரும் ஊக்குவிக்கிறார்கள். அதனால் சிக்கல்களும் உண்டாகும் என்கிறார்களே... இப்படியான வீடியோக்களை விழிப்புணர்வுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம். அவ்வளவுதான். எப்போதும் யோகம் செய்யும்போது உடலில் உள்ள வர்மப்புள்ளிகள் தூண்டப்படும். தவறாகச் செய்தால் நிச்சயமாக சிக்கல் வரும். மூச்சுப் பயிற்சியைச் சரியாகச் செய்யாவிட்டால் ஆஸ்துமா, வயிற்றுப்புண் போன்றவை வருகின்றன. கூடுதலான நிலையில் உள்ள பயிற்சிகளில் சிக்கலாகிவிட்டால் மூலநோய் வரலாம். தவறாக யோகா செய்து மனநோய் வந்தவர்களைக்கூட பார்த்திருக்கிறேன். ஒன்றைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். மூளையின் பல மையங்களைப் பட்டை தீட்டுவதுதான் யோகத்தின் நோக்கம். இதைத் தவறாகச் செய்தால் மூளையில் பாதிப்புகளை உண்டுபண்ணும். அரிதாக மோசமான பாதிப்புகளும்கூட ஏற்படும். எனவே, நேரடிப் பயிற்சிதான் சரியானதாக இருக்கும். கடைசியாக, நான் சொல்லவருவது, தமிழர்களின் கண்டுபிடிப்பாகிய சித்தர்களின் யோக முறையை இன்னும் ஆராய்ச்சிசெய்து பரப்பவேண்டியது தமிழர்களின் கடமை. Andhimazhai’யோகா தமிழருடையது- அடித்துச் சொல்லும் சித்த மருத்துவ வல்ல...நாடு முழுவதும் இன்று யோகா நாள் கடைப்பிடிக்கப்பட்டு, ஏராளமானவர்கள் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர். அண்மை சில ஆண்டுகளாக மத்திய அரசும் யோகாவுக்கு அதிகமாக முக்கியத்த
  11. ரெக்சாஸ் பக்கம் யாராவது யாழ் உறவுகள் இருக்கிறீர்களா.?.மழைக்கு பத்திரமாக இருங்கள்.✍👋
  12. கண்ணுரறு படுத்தக் கூடாது..லக்கேஜ் நிரம்பத் தான் கொண்டு வந்திருக்கிறீர்கள் சிறியண்ண..🤭
  13. Posted inBook Review கவிஞர் வாலி எழுதிய “நானும் இந்த நூற்றாண்டும் (Nanum Intha Nootraandum)” – நூல் அறிமுகம் Posted byBookday02/07/2025No CommentsPosted inBook Review நானும் இந்த நூற்றாண்டும் (Nanum Intha Nootraandum) – நூல் அறிமுகம் என்றும் இளமை துள்ளும் பாடல்களும் தலைமுறை தாண்டிய கருத்தாழம் மிக்க பாடல்கள் வழியே மூன்று தலைமுறை திரையுலகை வரிகளால் ஆட்சி செய்தவருமான வாலி அவர்கள் எழுதிய தன்வரலாறு நூல் இது. “”நேர்க்கோடுகள் என்றும் ஓவியமாகா. குறுக்கும் நெடுக்குமாக மேலும் கீழுமாக இழுக்கப்படுகின்ற கோடுகளே எழிலார்ந்த சித்திரம் ஆகிறது. வாழ்க்கையும் அப்படித்தான். ஏற்ற இறக்கங்களோடு எழுதப்பட்ட வரைபடமாக இருக்குமாயின் விமர்சனங்களுக்கு உள்ளாகும் அளவு அதற்கு ஒரு விலாசம் கிடைக்கிறது. தேங்கிய குட்டைகளைப் பற்றி தேசங்கள் பேசுவதில்லை. விழுந்தும் எழுந்தும் ஓடிக்கொண்டிருக்கும் நதிகளின் பெயர்களைத்தான் வரலாறு தன் பதிவேட்டில் குறித்து வைக்கிறது. நான் இன்று இருக்கும் இடத்திற்கு ஒரு நதி போல் தான் விழுந்தும் எழுந்தும் ஓடி வந்திருக்கிறேன். இன்னமும் இறையருளால் ஓடிக் கொண்டிருக்கிறேன்”” என்று முன்னுரையில் வாலி தன்னைப் பற்றி ஒப்புவித்திருக்கும் சுய விமர்சனத்தில் பொதிந்திருக்கும் உண்மைகளே நூல் முழுவதும் விரவி நின்று அவரது புலமையையும் வாழ்வையும் தெளிவாக எடுத்துரைக்கிறது. நூலில் ஒவ்வொரு அத்தியாயத்திலும் தன்னை ஒருபோதும் முன்னிலைப்படுத்தி மேன்மைப்படுத்தாமல் தனது உயர்வுக்குக் காரணமானவர்களை முழுமையாக வணங்கி மகிழும் வாலி அவர்களின் உள்ளத்தில் ஏற்றிவிட்ட ஏணிகளை வணங்கும் பண்பும் பழமையை மறவாத தன்மையும் சிறப்புற அமைந்து அவரது புலமைக்கு சிறந்த அடித்தளம் இடுகின்றன. ஸ்ரீரங்கத்தில் வைணவக் குடும்பத்தில் பிறந்தவர் வைணவக் கருத்துக்களை முழுமையாக உள்வாங்கிப் படித்தவர். ஆனாலும் முருகன் மீது ஆழ்ந்த பற்றும் இறை பக்தியும் கொண்டவர். தனது வாழ்வின் எல்லா செயல்களும் இறைவனின் கருணையினால் மட்டுமே நடக்கின்றது என்பதை செல்லும் இடமெஙகும் தவறாது ஒப்புவிப்பவர். தனது முயற்சியை விட தனது முன்னேற்றத்திற்குப் பெரிதும் துணை நிற்பது இறைவனின் அருள் என்பதில் ஆழ்ந்த நம்பிக்கையுடையவர் வாலி. நூல் முழுவதும் அவர் எழுதி இருக்கும் ஒவ்வொரு கட்டுரையிலும் அதையே கோடிட்டுக் காட்டுகிறார் “”ஒரு மனிதன் தலைக்கனம் இல்லாமல் இருப்பதைவிட தலையில்லாமல் இருப்பது மேல். நான் என்னும் நினைப்பும் முனைப்பும் இல்லாமல் எந்த மனிதனாலும் நான்கு விரல் கடை அளவு கூட முன்னேற இயலாது. தன்னை அறிதல் எவனுக்கில்லையோ அவன் தோள்களில் தாழ்வு மனப்பான்மை தொற்றிக் கொள்கிறது. நம்மால் இது இயலுமா என நகத்தைக் கடிப்பவர்களுக்கு முயற்சி மெய்வருத்தக் கூலி தரும் என்கின்ற குரல் கூட தேர்தல் வாக்குறுதி போல் திகட்டிப் போகிறது. அவர்களெல்லாம் கொட்டாவி விட்டாலே குடல் வெளியே வந்து குதித்து விடும் என்று வாயை அகலத் திறக்க அஞ்சுபவர்கள்.. தன்னைப் பற்றிய ஒரு தலைக்கனம் ஒவ்வொரு மனிதனுக்கும் இருந்தால்தான் அவன் தலையெடுக்க இயலும். இங்கே தலைக்கனம் என்று நான் குறிப்பிடுவது அவரவர் முயற்சியும் பயிற்சியும்”” என்று முதல் அத்தியாயத்தை ஆரம்பிக்கும் வாலி அரசியல் ஆன்மீகம் இசை இலக்கியம் என்றெல்லாம் தனது அனுபவம் சார்ந்த விஷயங்களை நூல் முழுக்க எழுதிச் செல்கிறார். “”பத்து வயது முதல் எத்தனையோ தடவை ஆனைக்கா அம்பிகையின் பிரகாரத்தை நான் வலம் வந்திருக்கிறேன். காளமேகத்தின் மீது கடலளவு இறங்கிய அகிலாண்டேஸ்வரியின் கருணை மழை என் மீது கை அளவாவது இறங்கி இருக்கக்கூடும் என்ற நப்பாசையும் நம்பிக்கையும் தான் பாட்டரங்கங்களில் எனக்கு பக்கபலமாக இருந்தன. முறையாக தமிழ் கற்றோர் முன்னே அந்த தைரியம் தான் என்னைத் தலைமை ஏற்க வைத்தது. எதற்காக இதைச் சொல்கிறேன் என்றால் தமிழ் தான் எனக்கு சோறு போட வேண்டும் என்பது இறைவனின் திருவுள்ளமாக இருந்ததால்தான் என் பிள்ளை பிராயத்திலேயே இறைவன் அதற்கேற்ற சூழ்நிலையை அமைத்துக் கொடுத்தான்”” என்று கடவுளின் அருள் பற்றியும் அவன் மீதான தனது நம்பிக்கை பற்றியும் தெளிவாக எடுத்துரைக்கும் வாலி தான் அறிந்த தமிழின் வலிமையையும் பொலிவையும் தனக்கென்று வைத்துக் கொள்ளாமல் குப்பனுக்கும் சுப்பனுக்கும் புரியுமாறு கூடை கூடையாக பாட்டு எழுதி கொட்டி வைத்துப் போன பெருந்தகை பாரதியை தனது வழிகாட்டியாக தேர்ந்து கொண்டவர். “”எவனொருவன் தன்னை ஆளாக்கிய அன்னையையும் தந்தையையும் வாழ்நாள் மட்டும் உள்ளத்தில் வைத்து அழுத்தி நன்றியோடு வணங்கி வருகிறானோ அவனை கடவுளே பார்த்து கை தூக்கி விடுகிறார்.”” தனது பெற்றோர் பற்றிய வாலயின் இந்தக் கருத்திலிருந்து பெற்றோர் மீதான அவரது பாசத்தையும் நேசத்தையும் நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது. சிறு வயது முதலேயே நாடகங்களின் மீதும் தமிழ் மீதும் கொண்ட பற்றின் காரணமாக சொந்தமாக நூற்றுக்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதி ஸ்ரீரங்கத்தில் அரங்கேற்றுகிறார் வாலி. ஒவ்வொரு முறையும் அன்றைய எழுத்தாளர்களில் புலமை வாய்ந்தவர்களையோ முக்கியப் பிரமுகர்களையோ முன்னிலைப்படுத்தி தனது நாடகங்களை அரங்கேற்றுகிறார். அப்படியாக நாடகங்களில் அவர் பயின்ற இசையும் அதற்கேற்ப எழுதுகின்ற பாடல்களும் அவரை பிற்காலத்தில் திரையிசைக்குப் பாடல் எழுதுவதற்கு அருமையான அடித்தளம் அமைத்துக் கொடுக்கின்றன. நாடகங்களின் வழியே தான் அறிந்துகொண்ட இசை நுணுக்கங்களையும் ராகங்களையும் நூலில் அவ்வப்போது கோடிட்டுக் காட்டுவதை எண்ணுகையில் அவரது நினைவுத்திறன் மீதும் இசை மீதான அவரது கவனக்குவிப்பு மீதும் நமக்கு பேராச்சர்யம் ஏற்படுகிறது. பணம் சம்பாதிக்கும் வயது வந்தும் பணம் சம்பாதிக்காமல் பாட்டெழுதியும் நாடகம் எழுதியும் ஊர் சுற்றித் திரியும் குழந்தையை எந்தப் பெற்றோர்தான் விரும்புவார். ஆனாலும் நாடகம் பாட்டு என்பதைத் தாண்டி தனக்குள் ஒளிந்திருக்கும் ஓவியத் திறமையை வெளிக்கொணர்ந்து ஒவ்வொரு பெருந்தலைவர்களையும் ஓவியமாகத் தீட்டி அவர்களிடமே கையெழுத்து வாங்குவது வாலியின் வழக்கம். அப்படி ஒரு முறை முக்கியமான ஓவியரிடம் தனது ஓவியத்தை காண்பிக்கவும் முறையாக ஓவியக் கல்லூரியில் சேர்ந்து படித்தால் சிறந்த ஓவியராக வர முடியும் என்று தூண்டுகோல் கிடைக்க அப்பாவை வற்புறுத்தி ஓவியக் கல்லூரியில் சேர்கிறார் வாலி. கல்லூரியில் முழுமையாக ஒட்ட முடியாமல் முதலாம் ஆண்டு முடிவிலேயே விடை பெற்றுத் திரும்பவும் சொந்த ஊருக்கே பயணப்பட வாழ்க்கையின் நிலையாமையில் நின்று கொண்டு தன்னைத்தானே கேள்வியைக் கேட்டுக் கொண்டு வாலி ஏதோ ஒரு நம்பிக்கையில் சென்னையை நோக்கிப் பயணப்படுகிறார். பல ஆண்டுகள் சென்னையில் நண்பர்களின சிறு அறையில் தங்கி பாட்டெழுத முயற்சி செய்யும் ஒவ்வொரு முறையும் அவருக்குத் தோல்வியே மிஞ்சுகிறது. திரும்பவும் ஊர் வாசம். நாடகங்கள் மீண்டும் அரங்கேறுகின்றன. அப்படியானதொரு சந்தர்ப்பத்தில் பாட்டு எழுதுவதற்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும் வாலி தன்னைப் பற்றிய கர்மமோ ஆணவமோ இல்லாமல் தனக்குப் பாட்டு எழுதும் திறமை இருப்பதாலேயே பாட்டு உலகில் மூன்று தலைமுறைக்கும் மேலாக நிலைத்து நிற்க முடிகிறது என்பதையும் நூலில் கோடிட்டுக் காட்டுகிறார். திரைத்துறையில் பாட்டெழுத கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொண்ட வாலி எம் ஜி ஆர் அவர்களுக்கு எழுதிய பாடல்கள் தனித்துவமானவை. ஆனால் ஒருபோதும் எம்ஜிஆர் அவர்களின் தலையீடோ வரிகளில் மாற்றம் ஏற்படுத்தும் நிகழ்வுகள் செய்யப்பட்டதில்லை என்று கூறும் வாலிக்கு தனது எழுத்தின் மீதான நம்பிக்கையும் கர்வமும் அதிகமாகவே இருக்கின்றது. எந்த ஒரு சூழலிலும் யாரிடமும் தனது பாடல் வரிகளுக்கு மாற்று வரிகளை ஏற்காத வாலிக்கு எம்ஜிஆர் அவர்களின் நட்பும் படங்களும் நல்லதொரு வாய்ப்பை வழங்கி அவரை சிறந்த பாடல் ஆசிரியராக உருமாற்றியது. பாடல் எழுதத் துவங்கிய ஆரம்ப காலகட்டத்தில் தன்னைப் புறக்கணித்த எம் எஸ் விஸ்வநாதன் பிறகு தனது திறமையை புரிந்து கொண்டு தனக்காக பல தயாரிப்பாளர்களிடம் தூது சென்ற அனுபவங்களையும் தனது பாடலுக்காக பல நாட்கள் காத்திருந்து இசையமைத்த விதத்தையும் நூலில் குறிப்பிடும் வாலி தனது வாழ்வே எம் எஸ் விஸ்வநாதன் கொடுத்த பிச்சை என்பதை ஒவ்வொரு தருணத்திலும் மறவாமல் ஒத்துக் கொள்கிறார். மெட்டுக்குப் பாட்டா? பாட்டுக்கு மெட்டா? எது சிறந்தது? என்ற கேள்வி சினிமாத்துறையில் அன்று முதல் இன்று வரை தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கிறது. கருத்தாழம் விரிந்த பாடல்கள் கலைநயம் மிக்க காட்சி அமைப்புகளும் ஒன்றிணைய இசைக்கட்டு தேவைப்படுகிறது. எழுதப்படும் பாட்டுக்குள் வைக்கப்படும் பொருளும் அது சார்ந்த புலமையும் மெட்டமைத்து எழுதும்போது நன்கு அமையும் என்பதில் பலருக்கு ஐயப்பாடு ஏற்படுகிறது. ஆனால் கதைக்கேற்ப சூழலும் கதை நிகழ்கிற காலகட்டமும் பாடல் உருவாக்கத்தை முடிவு செய்கின்றன. அப்படி ஒரு சூழலில் மட்டுமே எழுதப்படும் பாடலுக்குள்ளும் சிறந்த கருத்துக்களை புகுத்த முடியும் என்று தனது பாடல்களை வழியே நிரூபித்திருக்கும் வாலி அதை நூலில் பல இடங்களில் குறிப்பிட்டுக் காட்டுகிறார். ஒரு படத்தின் சூழலுக்கு ஏற்ப கால நிலைக்கு ஏற்ப பாடல் எழுதப்படும் போது சூழலில் வழங்கப்படும் மெட்டுக்குப் பாட்டு வரிகள் இடம்பெறுகின்றன. சில சமயங்களில் பாடல் எழுதப்பட்டு மெட்டமைக்கப்படுகிறது. எனவே பாட்டுக்கு மெட்டு மெட்டுக்குப் பாட்டு என்பது அந்தந்த சூழலைப் பொறுத்து அமைகிறது. இரண்டிலும் ஒரு பாடல் ஆசிரியர் மனது வைத்தால் சிறப்பான கருத்துக்களை புகுத்தி விட முடியும் என்று நிரூபிக்கிறார் வாலி. கலைஞர் மு கருணாநிதியின் வசனத்தை ஆரம்பகாலப் படங்களின் வாயிலாகத் கண்டு கொண்ட வாலி அவரைப் போலவே தானும் வசனம் எழுத வேண்டும் என்ற ஆர்வத்தினாலேயே திரைத்துறைக்கு வந்தவர். பட்டுக்கோட்டையின் பாடல்களைக் கேட்ட போதும் கண்ணதாசனின் வரிகளை கவனித்த போதும் தானும் அத்தகு பாடல்களை எழுத முடியும் என்று தன்னை மடை மாற்றிக் கொண்டவர் வாலி. உண்மையில் வாலி என்ற பெயர் வைக்கப்பட்டதன் காரணம் பாடல் எழுதிய சூழலில் பாடல் ஆசிரியராக தன்னை நிலை நிறுத்திக் கொள்ள வைக்கப்பட்ட பெயர் அல்ல. ஓவியத்தின் மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக அன்றைக்கு சிறந்த ஓவியராக விளங்கி வந்த ஓவியர் மாலி அவர்களைப் பார்த்து தானும் அவரைப் போல் வர வேண்டும் என்ற அடிப்படையில் வாலி என்று தனது பெயரை மாற்றிக் கொண்டவர். பல இடங்களில் தான் சந்திக்கும் நபர்களுக்கு பெயர்க்காரணத்தை விளக்குவதே எனக்கு அதிக நேரத்தை எடுத்துக் கொண்டது என்பதையும் குறிப்பிடும் வாலிக்கு இயல்பாகவே சிறப்பான நினைவுத்திறன் அமைந்திருப்பதை நூலின் கட்டுரைகள் விளம்புகின்றன. சில சமயங்களில் கண்ணதாசன் பாடல்கள் வாலி எழுதியதாகவும் வாலி எழுதிய வரிகள் கண்ணதாசன் எழுதியதாகவும் பொதுவெளியில் உலவப்படும் கருத்துக்கு வாலி பதிலுரைக்கையில் புகழ்பெற்ற கண்ணதாசன் வரிகளுடன் என்னையும் கவனிப்பது எனக்கு பெருமை அளிக்கிறது. ஒரு தலை சிறந்த கவிஞரோடு என்னைத் தொடர்புபடுத்தும் இந்த போக்கு எனக்கு மேலும் மேலும் புகழையே பெற்றுத் தருகிறது என்று நிகழ்வின் கோணத்தை தனக்குச் சாதகமாக மாற்றிக் குறிப்பிடுகிறார். நூலில் நூற்றுக்கும் மேற்பட்ட பாடகர்கள் 50க்கும் மேற்பட்ட இசையமைப்பாளர்கள் தான் எழுதிய காலத்திலும் அதற்கு முன் தோன்றிய தமிழ் பாடல் ஆசிரியர்கள் பற்றியும் தனக்குப் பின் எழுத வந்த கவிஞர்கள் பற்றியும் நிறைய இடங்களில் புகழ்ந்து எழுதும் வாலி அவர்களின் ஒவ்வொருவரின் தனித்திறமைகளையும் வியந்து போற்றுகிறார். எந்தவொரு இடத்திலும் சூழலிலும் அவர்கள் மீதான குறைகளையோ காழ்ப்புணர்ச்சியையோ வாலி தன் நினைவுத்திறனிலிருந்து வெளிப்படுத்தவேயில்லை. தனது வாழ்வின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாய் இருக்கும் திரைத்துறை சார்ந்த ஒவ்வொருவரையும் முழுமையாக இந்த நூலில் குறிப்பிடும் வாலி எந்த ஒரு இடத்திலும் யார் மீதும் ஒரு சிறு குற்றச்சாட்டையும் முன்வைக்கவில்லை. அவர் காணும் ஒவ்வொரு மனிதரிடத்தும் நிறைந்து காணப்படும் நல்ல குணங்களையே நூலில் நமக்கு அறிமுகம் செய்கிறார். அந்த வகையில் ஒவ்வொரு மனிதரிடமிருந்தும் நல்ல நல்ல பண்புகளை அவர் கற்றுக்கொண்டு புராணகால வாலியின் குணத்தை பெற்றுக் கொள்கிறார். வளையும் மூங்கில் தான் வேந்தனைச் சுமக்கும் பல்லாக்காகிறது. வளையும் வில்தான் அம்பின் வேகத்தை அதிகப்படுத்தி இலக்கை இலகுவாக எய்துகிறது. வளையாபதிகளுக்கு இலக்கியத்தில் மதிப்பிருக்கலாம். வளையும் பதிகளையே வையம் மதித்து வணங்குகிறது. தன் கூவலினால் தான் கிழக்கு வெளுக்குகிறது என சேவல் என்னுமாயின் வானம் மட்டுமல்ல வையம் கூட விலா நோவச் சிரிக்கும். உண்மையான ஆன்ம பலம் ஒரு மனிதனின் அடக்கத்தில் இருந்து தான் உதிக்கிறது. அடக்கம் தான் மெய்ஞானத்தை கற்பிக்கும் ஆசான் என்பதில் உறுதியாக இருக்கும் வாலி எந்த ஒரு இடத்திலும் தனது பெருமைகளைபா புகழ்ந்து பேசியதில்லை. அதேசமயம் தனது புலமையை எந்த ஒரு இடத்திலும் அடமானம் வைத்ததும் இல்லை என்பதை நூலில் பல இடங்களில் அறுதியிடுகிறார். “”என் வாழ்வும் வளமும் பிறரது வாழ்த்துக்களால் தான் நான் பெற்றேனே தவிர என் திறமை புலமை என்பதெல்லாம் இரண்டாம் பட்சம் தான். என்னுடைய சினிமாத் துறையில் பிற கவிஞர்களின் வருகை பற்றியோ அல்லது அவர்களின் ஆற்றல் பற்றியோ எந்த நாளும் நான் விமர்சித்ததில்லை. உண்மையைச் சொல்லப்போனால் அன்றைய கண்ணதாசனிலிருந்து இன்றைய காளிதாசன் வரை என்னிடம் அன்பு பாராட்டாத கவிஞரே இல்லை. என்னுடைய வளர்ச்சி என்பது எவருடைய வளர்ச்சியைக் கண்டும் எனக்கு எள்ளளவும் காழ்ப்புணர்ச்சி இல்லை. எல்லோருக்கும் இறைவன் தன் திருவுள்ளப்படி படியளக்கிறான். நான் யார் குறுக்கே புகுந்து கூடாது என்று சொல்ல? அப்படிப்பட்ட கோமாளி அல்ல நான்”” என்பது இந்த நூலில் வாலி அவர்கள் கூறும் கருத்துக்களின் சாரமாக அமைகிறது. நம்பிக்கைக்கும் மூடநம்பிக்கைக்கும் உள்ள வித்தியாசத்தைக் குறிப்பிடும் வாலி தனது வாழ்வில் நடந்த முக்கியமான சம்பவத்தையே அதற்கு எடுத்துக்காட்டாக விளக்குகிறார். இறை பக்தியும் கடவுள் பக்தியும் அதிகம் இருக்கும் வாலிக்கு தனது திருமண நிகழ்வை உடனடியாக நடத்தவேண்டிய சூழலில் திருப்பதி செல்ல நேர்கையில் நடைபெற்ற மூன்று இடையூறுகளைக் குறிப்பிடும்போது அவற்றை சகுனம் என்று பார்த்து புறந்தள்ளி நின்றிருந்தால் தனது வாழ்வு என்றோ முடிந்திருக்கும். ஆனால் அவற்றையெல்லாம் நம்பாமல் தொடர்ந்து பயணித்து தனது திருமண வாழ்வை அமைத்துக் கொண்டு வாலி சகுனத்திற்கும் இறை நம்பிக்கைக்கும் உள்ள வேறுபாட்டை முழுமையாக விளக்குகிறார். திருப்பதிக்கு காரில் செல்லும் போது முதலில் ஒரு ஆடு குறுக்கே வந்து காரில் அடிபடுகிறது. சகுனத் தடை என்று ஊருக்குத் திரும்பலாம் என்று நண்பர் சொல்ல வேண்டாம் நாம் திருப்பதிக்குச் செல்வோம் என்று தொடர்ந்து வாலி கூறிச் செல்ல இன்னொரு இடத்தில் சாலையின் குறுக்கே சிறு குழந்தை காரில் அடிபட்டு கார் பள்ளத்தில் தலைக்குப்புற விழுகிறது. அப்போதும் சகுனம் பார்க்கும் நண்பர் இது உனது திருமணம் குறித்த நிகழ்விற்கு பெரிதும் இடையூறாக இருக்கும் என்று அஞ்சி நாம் திருப்பதிக்கு செல்ல நேருகையில் நடக்கும் செயல்கள் சகுனத் தடையாகத் தெரிகிறது நாம் இன்னொரு நாள் செல்வோம் என்று மீண்டும் ஊருக்குத் திரும்ப நினைக்கிறார். ஆனால் அப்பொழுதும் வாலி நாம் நிச்சயமாக திருப்பதிக்குச் செல்ல வேண்டும் என்று தொடர்ந்து பயணிக்கிறார். குறிப்பிட்ட நாளில் அவரது திருமணம் ஒரு வாரத்திற்குள் திருப்பதியில் நடக்க வேண்டிய கட்டாயச் சூழல் ஏற்படுகிறது. ஆனால் அங்கு மூன்று மாதங்களுக்கு முன்பே அலுவலகங்கள் முன்பதிவு மூலம் நிரம்ப ஆரம்பித்து விடும். அப்படி ஒரு சூழலில் அவருக்கு குறிப்பிட்ட நாளில் இடம் கிடைக்குமா என்று தெரியாத சூழலில் திருப்பதிக்குச் செல்கிறார்கள் ஆனால் அவர் விரும்பிய அதே நாள் அங்கே எந்த திருமண நிகழ்வும் முன்பதிவு செய்யப்படாமல் காலியாக இருக்கிறது. இதுவே இறைவன் திருவுள்ளம் என்று மகிழும் வாலி நமது வாழ்வில் ஏற்படும் இடையூறுகளை எண்ணிக் கலங்கி நின்று விட்டால் எதிர்காலமே திசை மாறிப் போகும் என்பதை விளக்கிச் செல்கிறார். இதன்மூலம் மூடநம்பிக்கையின் மீது சரியான சவுக்கடியும் தரும் வாலி நிகழ்வுகளைக் கூர்ந்து கவனிப்பவர்க்கும் தன் மீது நம்பிக்கை வைப்பவர்களுக்கும் என்றும் இறையருளும் துணை நிற்கும் என்பதையும் எடுத்துரைக்கிறார். திரைப்பாடல்கள், கவியரங்க மேடைகள், பக்தித் தொடர் கதைகள், கவிதைத் தொகுப்புகள், வசனங்கள் எழுதிய நினைவுகள் என தனது வாழ்க்கைப் பாதையை முழுமையாக நமக்கு அறிமுகம் செய்து அவருடனேயே நம்மையும் உடனழைத்துச் சென்று திறந்த புத்தகம் என அவரது வாழ்வை இந்த நூற்றாண்டில் எழுதிச்செல்லும் வாலியின் எழுத்து எப்போதும் அவரது பாடல்களைப் போல இனிமையாகவும் இளமையாகவும் அன்பு கொண்டும் கருணை கொண்டும் நல்லெண்ணங்களையும் நல்லனவற்றையும் நமக்கு அறியத் தருகிறது. தனக்கான பாதையமைத்துக் கொடுத்த ஒவ்வொரு மனிதர்களையும் நினைவில் நிறுத்துவதன் அவசியத்தையும் நமக்குக் கற்றுத் தருகிறார் வாலி. https://bookday.in/kavignar-valis-nanum-intha-nootraandum-book-reviewed-by-ilaiyavan-siva/
  14. ரித்தன்யாவின் தாய், தந்தையரின் வாக்கு முலத்தின் படி பார்க்கப் போனால் இந்த ஆண் மனோ ரீதியாக ஏதோ பாதிப்புடையவர் போல் உள்ளது..காரணம் நாட்கணக்காக குளிக்க மாட்டாராம், அறையைச் சாத்திக் கொண்டு வீட்டுக்குள்ளயே இருந்து பழக்க பட்ட ஒருவராம்..அது மட்டுமல்ல திருமணத்தின் பின் தான் இந்தியாவில் சில இடங்களையே சுற்றி பார்த்திருக்கிறார் அதுவும் பெண் வீட்டாரின் உதவியோடு.ஆக மொத்ததில் இவருக்கு ஏதோ மைல்டான உடல், உள பிரச்சனைகள் இருந்திருக்க வேண்டும்.சொல்லாமல் திருமணம் செய்து கொடுத்திருக்கிறார்கள்.
  15. எதையும் இலகுவாக சொல்லலாம்.போராட்டம் என்று வரும் போது கூட எவ்வளவு தூரம் அந்த குடும்பம் பின்னோக்கி சிந்திக்கிறது என்பதை பொறுத்தது தான் பெண்ணின் அடுத்த கட்ட முன்னேற்றம் இருக்கிறது.அது யாராக இருந்தாலும் அந்தந்த துன்பங்களை அனுபவிப்பர்களால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.
  16. காணாமல் போய்விடுமோ? கச்சி பௌலி கானகம்…! – முனைவர். பா. ராம் மனோகர் Posted byBookday30/04/2025No CommentsPosted inArticle, Environment காணாமல் போய்விடுமோ? கச்சி பௌலி கானகம்…! – ✍️" loading="lazy" fetchpriority="low" style="box-sizing: inherit; -webkit-font-smoothing: antialiased; word-break: break-word; overflow-wrap: break-word; border-style: none; vertical-align: text-bottom; max-width: 100%; height: auto; margin: 0px auto; display: inline-block;"> முனைவர். பா. ராம் மனோகர் அடிப்படை வாழ்க்கை ஆதாரங்களை இழந்து, பொருளாதார உயர்வு பற்றியே நம் மனித வாழ்க்கை சிந்திக்கும் நிலை தொடர்ந்து வருகிறதோ!!? என்ற அச்சம், சூழல் ஆர்வலர்கள் மத்தியில் நிலவுகிறது. ஆம், தொழில் நுட்பம், கணினி மென் பொருள் நிறுவனங்கள் பெருக்கம், போன்ற, நவீன திட்டங்கள், வேலை வாய்ப்புகள் அதிகமாக, உருவாக்கும் நிலை, தவிர்க்க இயலாது. எனினும் இயற்கை சார்ந்த பகுதிகளில், இத்தகைய வளர்ச்சிப் பணிகள், அதிகமாக மேற்கொள்வதை, முழுமையாக அனுமதிக்கக்கூடாது. பொது மக்கள் வாழ்வாதாரம் இதனால் நிச்சயம் அங்கு பெருகும். ஆனால் குறிப்பிட்ட இயற்கை பகுதியில்,அதிக மாசுபாடு, குப்பைகள், போக்குவரத்து நெரிசல், அதிகரித்து அடர் காடுகள் அழிக்க வாய்ப்புகள் வரும். அங்கு வசித்து வந்த உயிரினங்கள், வாழ்விடம் இல்லாமல், தவித்து அருகில் உள்ள நகர்புற மனித வாழ்விடங்கள் நோக்கி செல்ல துவங்கும். ஒட்டு மொத்தமாக அங்கு சுற்றுசூழல் பாதிக்கும் என்பது நிதர்சன உண்மை. மேலே சொல்லப்பட்ட நிகழ்வு கதையல்ல. சமீபத்தில் நம் அண்டை மாநிலத்தில் நடக்க இருந்த ஒரு காடழிவுக்கு, ஒரு தற்காலிக தடை, நீதித்துறை மூலம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2011-12 ஆம் ஆண்டில் நான் தெலுங்கானா, மாநிலத்தின் ஹைதராபாத் சென்றிருந்தபோது அருகில் உள்ள, கச்சி பௌலி என்ற அழகிய காட்டுப் பகுதிக்கு, போகக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. ஆம், இந்த வனப்பகுதி 400 ஏக்கர் பரப்பளவில் ஹைதராபாத் மத்திய பல்கலைக் கழகத்தின் அருகில் உள்ளது. நகரின் சுவாச நுரையீரலாக, விளங்கிடும் இந்த காட்டினில், புள்ளி மான்கள், உடும்பு, நட்சத்திர ஆமை போன்ற முக்கிய விலங்குகள், மற்றும் மயில், பெலிக்கன் என்ற கூழைக்கடா பறவைகள் அதிகம் காணப்படுகின்றன. 220 பறவை சிற்றினங்கள், 15 ஊர்வன சிற்றின விலங்குகள், 10,பாலூட்டி இனங்கள், 734 பூக்கும் தாவர வகை 72, வகை காட்டு பாரம்பரிய தாவரங்கள் உள்ளதாக ஒரு கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. மேலும் 40000 எண்ணிக்கையில் மரங்கள் இருப்பதாகவும், டைனோசர் காலத்திற்கு முந்தைய நாட்களில் உருவான, காளான் பாறைகள் இங்கு காணப்படுகின்றன. மயில் ஏரி, எருமை ஏரி, மற்றும் சின்ன, சின்ன நீர் தேக்கங்களும் இந்த வனப்பகுதியில், காணப்படுகின்றன. தெலுங்கானா, மாநில, ரங்கா ரெட்டி மாவட்டத்தில், சிரிலிங்கம்பள்ளி மண்டலத்தில் உள்ள கச்சி பௌலி காட்டில்,அரிய இனம் “ஹைதராபாத் மரத் தண்டு சிலந்தி “இருப்பது ஒரு சிறப்பு ஆகும். உயிரின வேற்றுமைக்கு முக்கிய பகுதியாக இந்த (BIODIVERSITY HOTSPOT) காடு விளங்குகிறது. நகரப்பகுதியில், நூற்றுக்கணக்கான வகையில் வேறுபட்ட தாவர, விலங்குகள் இருப்பது மிகவும் சிறப்பு என்பதை நாம் அனைவரும், உணரவேண்டும். மேலும் இந்த காடுகள், நிலத்தடி நீரினை தக்க வைத்து மாநகரத்திற்கு உதவுகிறது. அடர் காடுகள் நம் வாகனங்கள், தொழிற் சாலை, மனித செயல்பாடுகள் மூலம் வெளியேறும் கரி அமில வாயு என்ற கார்பன் டை ஆக்ஸ் சைடு வாயுவின் உறிஞ்சு தொட்டியாக விளங்கி வருகிறது. முன்னரே 14% வனப்பகுதி” காண்கிரீட் அமைப்புகளாக “மாறிவிட்டது. எனினும் 2015 ஆம் ஆண்டில்” ஹரிதாஹரம் “ என்ற திட்டத்தின் மூலம் பசுமை பரப்பி னை அதிகரித்துள்ளது. ஏனென்றால் இந்திய வன நிலை அறிக்கை யின் படி 2015 ஆம் ஆண்டு இம்மாநிலத்தில் 1727 ச.கி. மீ பரப்பாக இருந்து வந்த காடுகள், 2021 ஆம் ஆண்டு 2518 ச. கி. மீ. ஆக மாற்றம் பெற்ற நிலை பாராட்டக்கூடியது. இந்த மாநிலத்தில் 10% பட்ஜெட் பசுமை நோக்கம் கொண்டு மேற்கொள்ள ப்படுவது சிறப்பு ஆகும். அதாவது, ஆயிரக்கணக்கான ஏக்கர், நிலங்களை பசுமையாக்க கிராமங்களில், NURSERY செடி,நாற்றங்கால் அமைக்க திட்டங்கள் இடப்பட்டுள்ளது. எனினும் வளர்ச்சி, பொருளாதார முன்னேற்றம், வேலை வாய்ப்புகள் பெருக்கம் ஆகியவற்றின் அடிப்படையில், கச்சி பௌலி காடுகள் அழிக்க முடிவு எடுத்த நிலை கண்டு, ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் மாணவர்கள், சமீபத்தில் போராட்டம் நிகழத்தினர். அவர்கள் அரசு எடுத்த முடிவு இயற்கை பாதிக்கும் என்று உணர்ந்து தொடர்ந்து நீதி மன்றம் சென்று” இடைக்கால தடை “பெற்று வந்துள்ளனர். இதன் மூலம் தற்காலிக தீர்வு கிடைத்து, பசுமை பகுதி காப்பாற்றப்பட்டுள்ள நிலை மகிழ்ச்சி தான், எனினும் எதிர்காலத்தில், கச்சி பௌலி காடுகள் அழிந்து போய்விடுமோ!? என்ற அச்சமும் சுற்றுசூழல் ஆர்வலர்கள் மத்தியில் தொடர்ந்து வருகிறது. இயற்கை பற்றிய புரிந்துணர்வு,கல்வியாளர்கள், கூரிய அறிவு கொண்ட இளம் தலைமுறை அரசு நிர்வாக உயர் அலுவலர்கள், தொழில் நுட்பம் பயின்ற பொறியியல் வல்லுநர்கள், ஆகியோருக்கு இல்லை என்று நாம் நிச்சயம் கூறவோ, வாதாடவோ இயலாது. ஏனெனில் 1990 ஆம் ஆண்டு முதல் தொடக்க கல்வி முதல்,கல்லூரி உயர் கல்வி, பொறியியல் உட்பட அனைத்து பட்ட வகுப்புகளில், “சுற்று சூழல் அறிவியல் “ கட்டாய பாடமாக சேர்க்கப்பட்டுள்ளது. அதுவே உச்ச நீதிமன்ற ஆணைப்படி, தொடர்ந்து அதற்குரிய பாடத்திட்டம், தேர்வு என்று வரையறுக்கப்பட்டு கல்வி நிலையங்கள் பின்பற்றி வருகின்றன. ஆனால், உடன் பொருளாதார லாப நோக்கம் கொண்டு, அரசு, துறைகள் பசுமை பகுதிகளை பகட்டான காண்கிரீட் காடுகளாக மாற்ற ஆர்வம் கொண்டு இருக்கும் நிலை வருந்துதற்குரியது. நாம் சுற்றுசூழல் பாதுகாப்பு முக்கியத்துவம் கற்று அறிந்து, உரிய விழிப்புணர்வு பெற்று, அன்றாடம் தனிப்பட்ட மனிதர்கள் கூட சுற்றுசூழல், நீடித்த நிலையான வளர்ச்சி பற்றிய வாழ்வியல் முறைகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கல்வியாக, அறிவியல் பூர்வ மாக சுற்றுசூழல் பாதுகாப்பு மற்றும் இயற்கை, காடுகள் பற்றி நோக்கினாலும், பேரிடர் காலத்தில், (வறட்சி,வெள்ளம், மழை, புயல்,) மட்டுமே நாம் இயற்கை யின் சீற்றங்கள் பற்றிய சிந்தனை மேலோங்கும் நிலை நகைப்புக்குரியது அல்லவா!!? வாழ்வின் அடிப்படை யான இயற்கை அழிந்து செயற்கை அமைப்புகள் உருவாகும் போது, அந்த அழகிய இயற்கை அமைப்புகள் மாசுப்படுகின்றன, திடக்கழிவுகள் பெருகிவிடுகிறது. மக்கள் தொகை பெருக்கம் ஏற்பட்டு அவர்களின் அடிப்படை தேவைகளுக்கும், உணவுப்பொருள் பற்றாக்குறையுமஏற்படும். இந்த உண்மைகள் அறிந்தும் நாம், மேலும், மேலும் இயற்கை க்கு எதிராக தவறுகள் செய்வதை ஏன்!? தவிர்க்க முடிவதில்லை! சற்று சிந்திக்க நேரம் ஒதுக்குவோமே! பொருளாதார மேம்பாடு மிக அவசியம் என்றாலும், ஹைதராபாத் போன்ற நகரங்களில் மீண்டும் இதனைப்போன்ற பாரம்பரிய காடுகள் அழிக்க திட்டம் இடுவது, நாமே நமக்கு, ஆபத்தினை வரவழைக்க வழி ஏற்படுத்தி கொள்வது போல் ஆகும். பாரம்பரிய காடுகளை அழித்துவிட்டு, புதிதாக மரக்கன்றுகள் நட்டு உடனடியாக புதிய சூழல் அமைப்பு உருவாக்க நினைப்பதும் நிச்சயம் விரும்பத்தக்க, அல்லது நாம் எதிர்பார்க்கும் பலன்கள் தரக்கூடிய தீர்வு அல்ல!. தெலுங்கானா மட்டும் அல்ல, பல்வேறு மாநிலங்களில் தொழில் பெருக்கம் என்ற பெயரில் இயற்கை காடுகள் அடியோடு அழித்தல் முற்றிலும் நிறுத்தப்படவேண்டும். மீண்டும் பொதுமக்களும், அரசு களும் சிந்திக்க முன்வருமா!!!? எழுதியவர் : – ✍️" loading="lazy" fetchpriority="low" style="box-sizing: inherit; -webkit-font-smoothing: antialiased; word-break: break-word; overflow-wrap: break-word; border-style: none; vertical-align: text-bottom; max-width: 100%; height: auto; margin: 0px auto; display: inline-block;"> முனைவர். பா. ராம் மனோகர் https://bookday.in/will-it-disappear-telangana-kancha-gachibowli-forest-based-article-written-by-pa-ram-manohar/
  17. பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு செல்ல மீண்டும் தடை! செவ்வாய்க்கு முதல் விடுவிக்கப்படும்! written by admin June 29, 2025 வலி வடக்கு பலாலி இராஜேஸ்வரி அம்மன் ஆலயம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்குள் மக்கள் சுதந்திரமாக சென்று வழிபட அனுமதிக்கப்படுவார்கள் என யாழ்ப்பாண மாவட்டநாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை (28.06.25) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், பலாலி இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு மக்கள் சுதந்திரமாக சென்று வழிபட அனுமதியளிக்கப்படும். குறித்த ஆலயத்திற்கு சென்று விடுவிப்பதற்கான நடவடிக்கையை எடுத்திருந்தேன். அது நல்லெண்ண சமிக்ஞையாக யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் எடுக்கப்பட்ட முடிவாகும். அதனூடாக அதை கொழும்பு இராணுவ தலைமையகத்துக்கும் அறிவிக்கப்பட்டு தற்காலிகமாக விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இது தொடர்பில் இராணுவத்திடம் கேட்ட போது, உத்தியோகபூர்வமாக கொழும்பில் உள்ள இராணுவத் தலைமையகத்தில் இருந்து எழுத்து மூலம் அனுமதி வரவில்லை என தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்குள் எழுத்து மூலமாக ஆவணம் கிடைத்ததும் உத்தியோகபூர்வமாக விடுவிக்கப்படும் – என மேலும் தெரிவித்தார். பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு செல்ல மீண்டும் தடை! பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு 35 வருடங்களின் பின்னர், கட்டுப்பாடுகள் இன்றி வழிபட நேற்று முன்தினம் (27.06.25) வெள்ளிக்கிழமை இராணுவத்தினர் அனுமதித்திருந்த நிலையில் நேற்றைய தினம் சனிக்கிழமை (28.06.25) மீள ஆலயத்திற்கு செல்ல அனுமதி மறுத்துள்ளனர். உள்நாட்டு யுத்தம் காரணமாக கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் திகதி பலாலியில் இருந்து மக்கள் வெளியேறி இருந்தனர். அதனை தொடர்ந்து அப்பகுதி இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக காணப்பட்டது. கடந்த 35 வருட காலமாக உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள ஆலயத்திற்கு கடந்த 06 மாத காலத்திற்கு முதலே சுதந்திரமாக சென்று வழிபட அனுமதி வழங்கப்படும் என இராணுவத்தினர் அறிவித்து இருந்த போதிலும் , இதுவரை காலமும் கடுமையான கட்டுப்பாடுகளுடன் , விசேட தினங்களில் மாத்திரம் ஆலயத்திற்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஆலயத்திற்கு மாத்திரம் செல்வதற்கு என உயர் பாதுகாப்பு வலயத்தினுள் பிரத்தியோக பாதை அமைக்கப்பட்டு , குறித்த பாதை ஊடாக நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை முதல் மக்கள் ஆலயத்திற்கு மாத்திரம் சென்று வழிபாட்டு திரும்ப இராணுவத்தினர் அனுமதி வழங்கி இருந்தனர். இந்நிலையில் இன்றைய தினம் சனிக்கிழமை ஆலயத்திற்கு செல்லும் பிரத்தியோக பாதையில் இராணுவத்தினர் மூடி முட்கம்பி வேலி அமைத்திருந்ததுடன், இரு இராணுவத்தினர் கடமையிலும் ஈடுபடுத்தபட்டிருந்தனர். ஆலயத்திற்கு இன்றைய தினம் சனிக்கிழமை வழிபட சென்ற மக்கள் இராணுவத்தினர் ஆலயத்திற்கு செல்ல அனுமதிக்காததால் முட்கம்பி முன்பாக தேங்காய் உடைத்து கற்பூரம் கொளுத்தி பூப்போட்டு வழிப்பட்டனர். https://globaltamilnews.net/2025/217456/
  18. நல்ல விடையம் ஒன்றை சொல்லி இருக்கிறீர்கள் அய்யா..அவ்வப்போது இப்படியான நினைவூட்டல்கள் மிகவும் தேவையானது தான்.நன்றி பகிர்வுக்கு.
  19. திலகநாதன் கிந்துஜன் 56m · சற்றுமுன் - செம்மணி அணையா விளக்கு போராட்ட இடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்
  20. இன்று இணையத்தில் படிக்க முடிந்த மற்றுமொரு கவிதையொன்று..🖐👇 Posted inPoetry Series தொடர் : 3 – கனடாவிலிருந்து சில கவிதைகள் – நா.வே.அருள் Posted byBookday23/06/2025No CommentsPosted inPoetry Series தொடர் : 3 – கனடாவிலிருந்து சில கவிதைகள் – நா.வே.அருள் வேடிக்கை மனிதர்கள் ****************************** ஆயுதங்கள் உங்கள் கைகளில் விரல்களாக முளைக்கத் தொடங்கிவிட்டன பொதுஜன முகமூடி எங்கள் மூளையை அழுத்துகிறது உங்கள் தொழில்நுட்ப அதிநவீனத் தோட்டத்தில் நாங்கள் வெறும் செயற்கைப் புற்கள் உங்கள் சொற்களின் செய்நேர்த்தியில் எங்கள் சித்தாந்தங்கள் எல்லாம் அரதப் பழசாகிவிட்டன எங்கள் உடலுறுப்புகள் இனி உபயோகிக்கப் பட முடியாத உலோக பாகங்களாய் உதிர்ந்து கிடக்கின்றன எவ்வளவு நவீனமயப்படுத்தப்பட்டாலும் எங்கள் வயிறுகள் பசியின் பழைய மொழியை மறந்தபாடில்லை எங்கள் சஹாராத் தாகம் தணிக்க வற்ற வற்றக் குளித்த உங்கள் நீச்சல் குளங்களில் ஒரு சொட்டுத் தண்ணீரும் மிச்சமில்லை நாங்கள் தாகம் என்கிறோம் குடிக்கக் குருதி கொடுக்கிறீர்கள் நாங்கள் பசி என்கிறோம் ஒடுக்கு விழுந்த எங்கள் உணவுத் தட்டுகளில் பதுங்குகுழி தகர்க்கிற வெடிப் பொருள்களையும் இலக்கு மாறாத ஏவுகணைகளையும் பரிமாறுகிறீர்கள் போர் என்பது பங்குச் சந்தைகளில் விற்கப்படுகிற இன்னொரு சூதாட்டப் பத்திரம்! பெரு முதலாளிகளின் சதுரங்கத்தில் நிராதரவு அறிவுஜீவிகள் ராணியைவும் ராஜாவையும் காப்பாற்ற வெட்டுப்படப்போகிற வெறும் சிப்பாய்கள்! ஜனநாயகம் சர்வாதிகாரம் கேபிடலிசம் சோசலிசம் கம்யூனிசம் எல்லாச் சொற்களுமே உங்கள் அகராதிகளில் அர்த்தங்கள் மாற்றப்படுகின்றன எல்லாம் தெரிந்தும் எதுவும் செய்யமுடியாது எங்கள் அரிச்சுவடிகள் உங்கள் ஆலைகளில் தயாரிக்கப்படுகின்றன எல்லைத் தகராறு வயல்களில் பூக்களை வளர்க்கப் போகிறீர்கள் என்று இன்னும் நம்பிக் கொண்டிருக்கும் உங்களின் பழைய சாவி கொடுக்கப்பட்ட பொம்மைகள் நாங்கள்! பொதுஜன முகமூடி எங்கள் மூளையை அழுத்துகிறது நவீன கட்டுமானமான செயற்கை நுண்ணறிவு மாளிகையை எங்களுக்கான சிறைச்சாலைகளாக மாற்றி வருகிறீர்கள் கேலிக்குரிய முரண் என்னவெனில் எங்களுக்காக நீங்கள் ஏற்பாடு செய்யும் ‘நவீன அடிமை’ பெயர் சூட்டுவிழாவில் அலைமோதி அலைமோதி இடம்பிடிக்கப் போகும் ஆடியன்ஸ்களும் நாங்கள்! எழுதியவர் : – நா.வே.அருள் https://bookday.in/series-3-some-poems-from-canada-written-by-na-ve-arul/
  21. அந்த அம்மாவின் நல்ல ஆத்மா இறைவன் திருவடியில் இளைப்பாறட்டும்.🙏கேள்விகள் கேட்டு இன்னும் உங்களை மனக்கஸ்ரப்படுத்துவதை விரும்பவில்லை.மனதை திடமாக வைத்திருங்கள்.🙏
  22. Posted inArticle இன்று ஜூன் 19:- தேசிய வாசிப்பு தினம் – வாசிப்பை நேசிப்போம் – முனைவர் அ.முஷிரா பானு Posted byBookday19/06/2025No CommentsPosted inArticle இன்று ஜூன் 19:- தேசிய வாசிப்பு தினம் – வாசிப்பை நேசிப்போம் – – முனைவர் அ.முஷிரா பானு இன்றைய அவசர யுகத்தில், நம் நடைமுறைப் பழக்கவழக்கங்களில் பல மாற்றங்கள் ஏற்படுவது இயற்கையே. வாசிப்பு பழக்கம் என்பது நம் மனதுக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்தும் சிறந்த செயலாகும். இன்றைய செயற்கை நுண்ணறிவு காலத்தில் புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் குறைந்து வருகிறது. 1980, 1990 காலகட்டங்களில் நமக்குப் பிடித்த பத்திரிக்கைகளுக்காக அவற்றுடன் இணைத்துவரும் இலவச இணைப்பு புத்தகங்களுக்காக காத்திருந்ததையும் அதில் வரும் தொடர் கதைகளை முதலில் யார் படிப்பது என்ற போட்டிகளையும் காண முடிந்தது. அத்தகைய இனிமை யான நினைவுகள் இன்றைய தலைமுறையி வருக்கு உள்ளனவா? சிறு வயதிலேயே பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வது நல்லது. தற்போதைய சூழ்நிலையில் தேரமின்மை காரணமாக வாசிப்பின் முக்கியத்துவம் குறைந்து வருவது நல்லது அல்ல. சிறந்த புத்தகங்கள் நல்ல நண்பர்கள் என்பதை உணர ஆரம்பித்தாள். நம் வருங்கால இளைய தலைமுறை முகநூலில் நேரத்தை விரயமாக்காமல் நட்பைத்தேடாமல் நூலகங்களில் அந்த இனிய நட்பைக்கண்டறியலாம். வாசிப்பு என்பது மதிப்பெண்களுக்காக பள்ளிகளில் தரும் பாடப்புத்தகங்களைப் படிப்பது அல்ல: பொது அறிவு தகவல் தொடர்புத்திறன், சூழ்நிலைக்கு ஏற்ப சரியான முடிவெடுக்கும் திறன் போன்றவற்றை ஒவ்வொருவரிடத்திலும் வளர்த்தெடுக்க உதவும். ஒரு புத்தகம் எக்காலத்திலும் தன்னுடைய சிந்தனையிலும், கருத்திலும் மாறுவதில்லை. நம்மை அறிவுள்ள, பண்புள்ள மனிதனாக சிறந்த புத்தகங்கள் மாற்றுகின்றன. நமக்குத் தேவையான பல தகவல்களைப் பெற நாம் புத்தகங்களை வாசிக்க வேண்டும். புத்தக வாசிப்பின் மூலம் கிடைத்த அறிவை வாழ்நாளில் தேவையானபோது பயன்படுத்திக்கொள்ளமுடியும். நாம் உலகில் பார்த்த பார்க்கும் தலைவர்கள், அறிஞர்கள், விஞ்ஞானிகள், பேச்சாளர்கள் அனைவரும் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தைக் கொண்டவர்கள். ஒவ்வொரு எழுத்தாளரும் தங்கள் கருத்துகள் மூலம் இந்த சமுதாயத்தைச் செதுக்கும் சிற்பிகளே. செறிந்த கருத்துகள் சிறந்த சமுதாயத்தைக் கட்டமைக்கும் உளிகளாகும். எத்தனையோ சிறந்த எழுத்தாளர்களின் புத்தகங்கள் வாழ்க்கைக்குத் தேவையான உணர்வுகளையும், செய்திகளையும், அவர்களுடைய கற்பனைகளையும், வரலாறுகளையும் நல்கி அறிவுத்திறனை மேம்படுத்த உதவுகின்றன. ஒவ்வோர் ஆண்டும் ஜூன் மாதம் 19-ஆம்தேதி தேசிய வாசிப்பு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. கேரளத்தில் பி.என். பணிக்கர் என்பவர் நூலக இயக்கத்தை தொடங்கி அதன்மூலம் வாசிப்புப் பழக்கத்தைளை ஊக்குவித்தார். கேரளத்தின் வாசிப்பு தினமான ஜூன் 19-ஐ இந்தியாவின் தேசிய வாசிப்பு தினமாக 2017-ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். மத்திய அரசும் உயர் கல்வி நிறுவனங்களுக்கான நூலகங்கள் மற்றும் தகவல் வளங்களை மேம்படுத்துவதற்காக (இன்ஃபி ளிப்நெட்) தகவல் மற்றும் நூலக வலை வமைப்பு மையத்தை (இன்ஃபர்மேஷன் அண்ட் லைப்ரரி நெட்வொர்க் சென்ட்டர்) குஜராத் மாநிலம் காந்தி நகரில் நிறுவியுள்ளது. இந்த வலையமைப்பில் இந்தி அறிவையும்யாவில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வறிக்கைகள், ஆய்வுக் கட்டுரைகள் களஞ்சியமாகப் பராமரிக்கப்படுகின்றன. இணைய தளங்களில் இ-புத்தக தளங்களில் பிடித்த எழுத்தாளர்களின் நூல்களை பதிவிறக்கம் செய்து வாசித்து மகிழலாம். என்டிஎல்ஐ சங்கம் (என்டிஎல்ஐ கிளப்) என்பது இந்திய தேசிய எண்ம நூலகத்தின் (நேஷனல் டிஜிட்டல் லைஃப்ரரி ஆஃப் இந்தியா) ஒரு பகுதியாகும். இந்தச் சங்கம். நாட்டில் உள்ள அனைவருக்கும் எண்ம முறையில் கல்விசார் வளங்களை எளிதில் அணுகக்கூடிய ஓர் இயக்கமாகும். இது பள்ளி, கல்லூரி பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்டோருக்கு பல்வேறு துறைகளில் எண்ம கற்றல் அனுபவத்தை வழங்குகிறது. தினமும் குறைந்தது 30 நிமிஷங்களாவது வாசிக்க ஒதுக்க வேண்டும். வாசிப்புப் பழக்கத்தை சிறு வயதில் இருந்தே பெற்றோர் ஊக்குவித்தால் அதன் முக்கியத்துவத்தை வருங்கால இளைய தலைமுறையினரும் பின்பற்றுவர். தங்கள் குழந்தைகளுக்கு சிறந்த புத்தகங்களைப் பரிசளித்து, நூலகங்களுக்கும், புத்தகக் கண்காட்சிகளுக்கும் அழைத்துச் சென்று அவர்களுக்கு வாசிப்புப் பழக்கத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தலாம். ஒருவர் தொடக்க நிலையாளராக இருந்தால், அவர்கள் தங்களுக்கு ஆர்வ முன்னபகுதியின் அடிப்படையில் புத்தகங்களைப் படிக்கத் தொடங்கலாம். அவ்வாறு செய்வதன் மூலம். படிப்படியாக வாசிப்புப்பழக்கத்தை மேற்கொண்டு அதை ரசிக்கத் தொடங்குவார்கள். கைப்பேசியில் தேவையில்லாத வவைதளங்களில் நேரத்தை விரயமாக்காமல், இத்தகைய உபயோகமான வலைதளங்களைப் பயன்படுத்தி அறிவுச்சிந்தனையை வளர்க்கலாம். குறிப்பாக இளைய தலைமுறையினர் இணையதளங்களில் மூழ்சி இணைய விளையாட்டுகளிலும், பயனில்லாத குறும் பதிவுகள் அல்லது சிறு காணொலிகள் என்று தங்களது முழு நேரத்தையும் செலவழிக்கின்றனர். எனவே, சமுதாயத்தைச் சீர்படுத்த வாசிப்புப் பழக்கத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். வாசிப்புப் பழக்கமும் தியானத்துக்கு இணையானது. மனமகிழ்ச்சிக்கும் தேவை யற்ற சிந்தனைகளில் இருந்து விடுபடவும் வாசிப்புப் பழக்கம் வழிவகுத்து பல நன் மைகளைத் தருகிறது. பள்ளிகள், கல்லூரிகள், தமிழ்ச் சங்கங்கள், பல்கலைக்கழகங்களில் வாசகர் வட்டத்தை உருவாக்கி புத்தகங்களை அறிமுகப்படுத்துவதையும் அவை குறித்த விவாதங்களையும் ஊக்குவிக்க வேண்டும். புத்தகங்களோடு உரையாடுவோம்! புத்தகங்களோடு உறவாடுவோம்! கட்டுரையாளர்: – முனைவர் அ.முஷிரா பானு நன்றி: தினமணி https://bookday.in/june-19-national-reading-day-special-article-lets-love-reading-by-dr-a-mushira-banu/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.