Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிழம்பு

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by பிழம்பு

  1. யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு இன்று புதன்கிழமை(28) புதிதாக இரண்டு தாதிய பரிபாலர்களும் 268 தாதிய உத்தியோகத்தர்களும் நியமனம் வழங்கப்பட்டுள்ளன. தாதிய பதிபாலர்களுக்கான வெற்றிடங்கள் ஐந்து இருக்கின்ற போதும் இரண்டு நியமனங்களே வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஏற்கனவே சேவையில் உள்ள தாதிய உத்தியோகத்தர்களில் 168 பேர் வருடாந்த இடமாற்றம் பெற்று செல்லவுள்ள நிலையில், புதிதாக வருகை தந்தவர்களில் 60 பேர் தமிழ்மொழி சார்ந்தவர்களாகவும் ஏனைய அனைவரும் சகோதர மொழி பேசுபவர்களாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது. யாழ் போதனா மருத்துவனைக்கு நியமனம் பெற்று வந்த 268 புதிய தாதிய உத்தியோகத்தர்களை வரவேற்கும் நிகழ்வு தாதியர் பயிற்சிக் கல்லூரியில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. 268 புதிய தாதியர்கள் யாழ். போதனாவிற்கு நியமனம்!
  2. 28 May, 2025 | 04:18 PM சர்வதேச தொழிலாளர் தாபனம் அவுஸ்திரேலிய அரசாங்கத்தினதும் நோர்வே அரசாங்கத்தினதும் பங்காண்மையுடன் GROW வடக்கில் புதிய கருத்திட்டத்தினை ஆரம்பிக்கின்றது. பணிபுரிவதற்காக மீள் எழுச்சி தன்மைமிக்க வாய்ப்புக்களை உருவாக்கல் (Generating Resilient Opportunities for Work) - இது, இலங்கையின் வட மாகாணத்தில் வாழும் விளிம்புநிலைச் சமுதாயங்களின் வாழ்வாதாரங்களையும் காலநிலை மீள் எழுச்சி தன்மையினையும் சமூக வலுவூட்டலையும் வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு நிலைமாற்றமிக்க 2.8 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியில் முன்னெடுக்கப்படுகின்றது. 75,000 இற்கும் மேற்பட்ட பெண் தலைமைக் குடும்பங்களையும் 21,000 இற்கு மேற்பட்ட அங்கவீனமானவர்களையும் கொண்டுள்ள வட மாகாணம் பல வருட மோதலைத் தொடர்ந்தும் பொருளாதார நெருக்கடிகளைத் தொடர்ந்தும் தீவிரமடைந்து வரும் காலநிலை ஆபத்துக்களைத் தொடர்ந்தும் கணிசமான சவால்களுக்குத் தொடர்ந்து முகங்கொடுத்து வருகின்றது. பொருளாதார வலுவூட்டல், சமூக உள்ளடக்கம் மற்றும் காலநிலை மீண்டெழுந்தன்மை ஆகியவற்றினைக் கொண்ட ஒரு மும்முனை உபாயமார்க்கத்தின் மூலம், ஒன்றை ஒன்று ஊடறுக்கும் இச்சவால்களை இக்கருத்திட்டம் நேரடியாக நிவர்த்தி செய்ய முனைகின்றது. மாகாணத்திற்கு இக்கருத்திட்டம் கொண்டுள்ள பொருத்தப்பாடு மற்றும் முக்கியத்துவம் பற்றிப் பேசிய வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம் தெரிவிக்கையில், “அவுஸ்திரேலியா மற்றும் நோர்வே அரசாங்கங்களின் உதவியுடன் எமது பொருளாதாரத்தினை மீளக்கட்டியெழுப்புவதற்கான மற்றும் வாழ்வாதாரங்களை மீட்டுருவாக்குவதற்கான ஒத்துழைப்பும் புத்தாக்கமுமிக்க முயற்சிகளின் சாதகமான தாக்கங்களை நாம் பார்த்து வருகின்றோம். இக்கருத்திட்டமானது எமது சமுதாயங்களுக்காக உள்ளடக்கும்தன்மைமிக்க, காலநிலை மீண்டெழுந்தன்மைமிக்க அபிவிருத்தியினை மேம்படுத்துவதற்கான எமது தொடர்ச்சியான கூட்டுக் கடப்பாட்டினை எடுத்துவிளக்குகின்றது” எனக் குறிப்பிட்டார். சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தினால் நடத்தப்பட்ட, LEED, LEED+, EGLR, PAVE கருத்திட்டங்கள் உள்ளிட்ட, சமாதானம் மற்றும் மீண்டெழுந்தன்மைக்காகத் தொழில்கள் நிகழ்ச்சித்திட்டத்தின் (JPR) கீழ் ஒரு தசாப்தத்திற்கும் மேல் மேற்கொள்ளப்பட்ட வெற்றிகரமான இடையீடுகளில் இருந்து GROW கட்டமைத்துச் செல்கின்றது. 2025 முதல் 2028 வரை அமுல்படுத்தப்படும் இக்கருத்திட்டம், காலநிலை மீண்டெழுந்தன்மைமிக்க விவசாயம் மற்றும் நீரியல்வளம், சமூக வலுவூட்டல் மற்றும் சந்தை முறைமை அபிவிருத்தி மூலமாக நிலையான மற்றும் உள்ளடக்கும் தன்மை மிக்க தொழில்வாய்ப்பினை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸ் தெரிவிக்கையில், “உறுதியான, வெற்றிமிக்க இலங்கையின் வளர்ச்சிக்கு உதவுவதற்கான கூட்டு அபிவிருத்தித் தீர்வுகளில் அவுஸ்திரேலியாவினதும் இலங்கையினதும் அபிவிருத்திப் பங்காண்மை உருவாக்கப்பட்டுள்ளது. நோர்வே அரசாங்கத்துடன் சேர்ந்து, சர்வதேச தொழிலாளர் அமைப்புடன் GROW நிகழ்ச்சித்திட்டத்திற்காகப் பங்காண்மை அமைப்பதையிட்டு அவுஸ்திரேலியா ஆர்வம் கொண்டுள்ளது. வடக்கிலே ஒப்புரவுமிக்க வளர்ச்சியினையும் காலநிலை மீண்டெழுந்தன்மைமிக்க அபிவிருத்தியினையும் பிராந்தியத்திற்கான மீண்டெழுந்தன்மையினையும் உறுதிப்படுத்துவதற்காக நாம் மேற்கொண்ட முன்னைய ஈடுபாடுகளில் இருந்து இது கட்டமைத்துச் செல்லும்” என குறிப்பிட்டார். அவுஸ்திரேலியா அரசாங்கத்தின் 1.9 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியடனும் நோர்வே அரசாங்கத்தின் 900,000 அமெரிக்க டொலர் நிதியுதவியுடனும் இரண்டு நாடுகளினதும் அபிவிருத்தி உபாயமார்க்கங்களுடன் இயைபுறுகின்ற GROW பெண்களின் வலுவூட்டலையும் அங்கவீன உள்ளடக்கத்தினையும் உணவுப் பாதுகாப்பினையும் காலநிலைத் தகவமைப்பினையும் வலியுறுத்துகின்றது. இந்தியா, இலங்கை மற்றும் பூட்டானுக்கான நோர்வே தூதரக மிஷனின் பிரதித் தலைவரான மார்டின் ஆம்டல் பொத்தெய்ம் கூறுகையில், “GROW கருத்திட்டத்திற்கு உதவுவதில் அளப்பரிய மகிழ்ச்சியடையும் நோர்வே, வட மாகாணத்தில் வாழும் பல மக்களின் வாழ்வில் ஒரு மாற்றத்தினை ஏற்படுத்தலாம் என நம்புகின்றது. நல்லிணக்கம் என்பது ஒரு பயணத்தின் முடிவிடம் அல்ல, அது ஒரு செயன்முறை, இந்தச் செயன்முறைக்கு புசுழுறு இனால் சாதகமாகப் பங்களிப்பு வழங்க முடியும்.” என குறிப்பிட்டார். இலங்கை மற்றும் மாலைதீவுக்கான சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் பணிப்பாளரான ஜொனி சிம்ப்சன் தெரிவிக்கையில், “ ஒத்துழைப்பும் உள்ளடக்கும் தன்மையும் கொண்ட சான்றடிப்படையிலான ஒரு மாதிரியில் விவசாயிகளையும் கூட்டுறவுகளையும் கம்பனிகளையும் அரசாங்கத்தினையும் சிவில் சமூகத்தினையும் GROW ஒன்றுசேர்க்கின்றது. இக்கருத்திட்டம் உறுதியான வாழ்வாதாரங்களைக் கட்டியெழுப்பும் என்றும் மிகவும் ஒத்திசைவுமிக்க சமுதாயங்களை உருவாக்கும் என்றும் சகலருக்கும் நியாயமான எதிர்காலத்தினை உருவாக்கும் என்றும் நாம் எமது பங்காளர்களுடன் சேர்ந்து நம்புகின்றோம்.” என்று தெரிவித்தார். வடக்கில் வளர்ச்சியடைந்து கொண்டிருக்கும் மீள் எழுச்சி தன்மை : அவுஸ்திரேலியா, நோர்வே நாடுகளின் உதவியுடன் புதிய கருத்திட்டம் ஆரம்பம் ! | Virakesari.lk
  3. 28 May, 2025 | 06:15 PM மன்னார் மாவட்டத்தில் புதிதாக முன்னெடுக்கப்பட்டுவரும் காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்துக்கு தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தும் வகையில் இன்று (28) நடைபெற்ற மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்தனர். இக்கூட்டமானது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரனின் நெறிப்படுத்தலின் கீழ், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் பிரதி அமைச்சருமான உப்பாலி சமரசிங்க தலைமையில் இன்று காலை 10 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலக மண்டபத்தில் நடைபெற்றது. இதில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான றிசாட் பதியுதீன், காதர் மஸ்தான், ரவிகரன், முத்து முஹம்மட், ஜெகதீஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர். இதன்போது மாவட்ட அபிவிருத்தி சார்ந்த பல்வேறு விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டன. குறிப்பாக, மன்னார் மாவட்டத்தில் புதிதாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற காற்றாலை மின் உற்பத்தி திட்டத்துக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், மன்னாரில் கனிய மணல் அகழ்வில் ஈடுபடுவதற்காக எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் கனிய மணல் அகழ்வுக்கான நடவடிக்கைகளை எதிர்த்து குரல் கொடுத்ததோடு, மணல் அகழ்வினால் மன்னார் தீவில் ஏற்படப்போகும் அபாய நிலை தொடர்பாகவும் விளக்கமளித்தார். இதேவேளை இன்றைய தினம் நடைபெற்ற மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கனிய மணல் அகழ்வு குறித்து முடிவு எடுக்கப்படும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டபோதும் இந்த கூட்டத்தில் கனிய மணல் அகழ்வு குறித்து எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை. மேலும் இம்மாவட்டத்தில் உள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் இந்த கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. இதில் பிரதேச செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், முப்படை பிரதானிகள், அரச பதவி நிலை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர். மன்னாரில் காற்றாலை மின் உற்பத்தி, கணிய மணல் அகழ்வுக்கு மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் எதிர்ப்பு | Virakesari.lk
  4. (எம்.மனோசித்ரா) நாட்டில் அனைவரும் அமைதிக்காகவே யுத்தத்தில் ஈடுபட்டதாக தேசிய போர் வீரர் தினத்தன்று ஜனாதிபதி அநுரகுமார தெரிவித்த கருத்துடன் என்னால் உடன்பட முடியாது. பிரபாகரன் அமைதிக்காகவா போராடினார்? வடக்கு, கிழக்கில் முகாம்கள் அகற்றப்படுகின்றன என்றால் அதன் ஊடாக எதிர்மறையான பிரதிபலன்களே கிடைக்கும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், யுத்தம் நிறைவடைந்தமை தொடர்பில் எமக்கு பெரு மகிழ்ச்சியிருக்கிறது. அவ்வாறில்லை எனில் இன்று இந்த நாடு இந்தளவிற்கும் எஞ்சியிருக்காது. நிச்சயம் பிளவு ஏற்பட்டிருக்கும். எவ்வாறிருப்பினும் யுத்தம் நிறைவடைந்த பின்னரும் நாட்டின் முன்னேற்றப்பயணம் மகிழ்ச்சியளிக்கக் கூடியதாக இல்லை. யுத்தம் நிறைவடைந்த பின்னர் நாட்டை ஆட்சி செய்த அனைத்து ஆட்சியாளர்களும் அதற்கு பொறுப்பு கூற வேண்டு;ம். வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்துள்ள சில இலங்கை தமிழர்கள் தமது வீசாவைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, தமது வர்த்தகங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக இலங்கையில் மீண்டும் யுத்தம் ஏற்படும் சாத்தியக் கூறுகள் இருப்பதாகக் கூறிக் கொண்டிருக்கின்றனர். இந்த காரணியை அடிப்படையாகக் கொண்டு தம்மால் மீண்டும் இலங்கைக்கு செல்ல முடியாது என்பதை அவர்கள் அந்த நாடுகளிடம் கூறுகின்றனர். இவ்வாறான செயற்பாடுகளால் நாட்டுக்கு ஓரளவு அச்சுறுத்தல் காணப்படுகிறது. அந்த அச்சுறுத்திலிருந்து முற்றாக மீள்வதற்கும், ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் யாரோ ஒருவருக்கு முன்னாள் மண்டியிடுவதை விடுத்து பலம் மிக்க நாடாக மாற்றமடைய வேண்டும். தேசிய பாதுகாப்பு தொடர்பில் கரிசணை கொள்ளாமல் உறங்கிக் கொண்டிருந்தால் மீண்டுமொரு பயங்கரவாத அச்சுறுத்தல் ஏற்படலாம். இலங்கையின் தேசிய பாதுகாப்பு என்பது சர்வதே நாணய நிதியத்தின் பொறுப்பல்ல. எனவே பாதுகாப்பு படைகளின் ஆளணியைக் குறைப்பதாகக் கூறுவதை என்னால் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. பாதுகாப்பு படைகளை கலைத்து அதன் மூலம் மீதப்படுத்தப்படும் 80 பில்லியனைக் கொண்டு நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. தேசிய பாதுகாப்பு என்பதை நான் பார்க்கும் கோணத்தில் இந்த நாட்டில் காணவில்லை. பொது மக்கள் பாதுகாப்பும் கூட அச்சுறுத்தல் மிக்கதாகவே காணப்படுகிறது. பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தும் நிறுவனங்களின் ஏதேனுமொரு பலவீனத்தின் காரணமாகவே நாட்டில் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளன. எனவே தான் அனுபவமும் அறிவும் மிக்கவர் அந்த பொறுப்பினை ஏற்க வேண்டும் என்று நாம் ஆரம்பத்திலிருந்து வலியுறுத்திக் கொண்டிருக்கின்றோம். வடக்கு மற்றும் கிழக்கில் முகாம்கள் அகற்றப்படுகின்றன என்றால் அதன் ஊடாக எதிர்மறையான பிரதிபலன்களே கிடைக்கும். வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்படும் நினைவேந்தல்களை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. தொடர்ச்சியாக அதற்கு இடமளித்தால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடிய கிருமிகள் உருவாகுவதற்கான வழியை ஏற்படுத்திக் கொடுப்பதைப் போன்றாகிவிடும். தேசிய போர் வீரர் தினத்தில் உரையாற்றிய போது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அமைதிக்காகவே அனைவரும் போராடியதாக கூறியதை ஏற்றுக் கொள்ள முடியாது. அமைதிக்காக தலதா மாளிகையின் மீதோ, ஸ்ரீ மகா போதியின் மீதோ தாக்குதல்களை மேற்கொள்ள முடியாது. பிரபாகரன் அமைதிக்காக போராடியதாகக் கூறினால் அதனை யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஜனாதிபதி அவரது நிலைப்பாட்டைக் கூறியதால் நான் கேட்டுக் கொண்டிருந்தேன். அந்த இடத்தில் ஓடிச் சென்று நீ கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என கூச்சலிடுவதற்கு நான் முட்டாள் இல்லையல்லவா? என்றார். பிரபாகரன் அமைதிக்காகவா போராடினார்? ; ஜனாதிபதியின் கூற்றுடன் என்னால் உடன்படி முடியாது - சரத் பொன்சேக்கா | Virakesari.lk
  5. Vedan: அடையாளத் தேடலிலிருந்து அடையாளமாக மாறிய மலையாள ராப் பாடகர்; யார் இந்த வேடன்? வேடன்... இப்போதைக்கு மலையாள ஊடகங்களின் பேசுபொருள். சாதாரணமாக ராப் பாடல்களை எழுதி, பாடி யூடியூபில் பதிவிட்டுக்கொண்டிருந்த அந்த இளைஞருக்கு இன்று கேரளத்தில் பெரிய ரசிகர் பட்டாளமே உருவாகியிருக்கிறது. யார் இவர்? திடீரென மலையாள ஊடகங்களில் பேசப்படக் காரணம் என்ன? தொடர்ந்து பார்க்கலாம். வேடன்: யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இலங்கைத் தமிழரான தாய்க்கும் கேரளாவைச் சேர்ந்த முரளி என்பவருக்கும் திருச்சூரில் பிறந்தவர்தான் ஹிரந்தாஸ் முரளி. திருச்சூர் ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள ஸ்வப்னபூமி (கனவுகளின் நிலம்) என்ற பகுதியில்தான் வளர்ந்தார். சிறுவயது முதலே பாடல், இசை மீது ஆர்வம் இருந்தது. அதனால், தொடர்ந்து கவிதை எழுதுவது, தமிழ்ப் பாடல்களை மலையாளத்தில் எழுதிப் பாடுவது எனத் தன் கலைப் பயணத்தைத் தொடங்கினார். VEDAN VEDAN instagram சிறுவயதில் ஆற்றில் மீன்பிடிக்கச் செல்லும்போது மீன் அம்புகளைச் சரியாகக் குறிபார்த்து எறிவாராம். அப்போது அவருக்கு விளையாட்டாக வைக்கப்பட்டப் பெயர்தான் வேடன். இந்தப் பெயருக்குப் பின்னணியில் சாதிய அடையாளமும் இருக்கிறது என்பது புரிந்து, அந்தப் பெயராலேயே மக்களிடம் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். அது அப்படியே மக்களாலும் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. கட்டுமான தொழில்: பள்ளிப் படிப்பை மட்டும் முடித்த வேடன், ஒருகட்டத்தில் பொருளாதாரத் தேவைக்காக வேலைக்குச் செல்ல தீர்மானித்தார். அதன்படி அங்கிருக்கும் சிலருடன் சேர்ந்து கட்டுமான தொழிலுக்குச் சென்றிருக்கிறார். வேலை செய்துகொண்டிருக்கும்போதுகூட பாடல் பாடிக்கொண்டிருப்பார் என்கின்றனர். அவரின் கலை ஆர்வம் அவரை எடிட்டர் பி.அஜித்துக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறது. பி.அஜித்தின் அலுவலகத்தில் ஆபிஸ் பாயாக வேலைக்கு அமர்த்தப்பட்டார். ராப் கலைஞர்கள் அறிமுகம்: காலப்போக்கில் அவருக்கு டூபக் ஷகுர், எமினெம், அறிவு போன்ற ராப் பாடகர்களின் பாடல் அறிமுகமாகியிருக்கிறது. அவர்களின் பாடலில் இருக்கும் வலியும், உணர்ச்சியும் அவரை அவர் சார்ந்த வரலாறு நோக்கியும், போர் பாதிப்பு உள்ளிட்ட அடக்குமுறைகள் குறித்து அறிந்துகொள்ள வழிசெய்திருக்கிறது. அப்போதுதான் ராப் பாடல்களை எழுதத் தொடங்கியிருக்கிறார். VEDAN VEDAN முதல் ஆல்பம்: "நான் பாணன் அல்ல; பறையன் அல்ல; புலையன் அல்ல..." என்பது போன்ற சாதி, வர்க்க, மத அடக்குமுறைகளுக்கு எதிராக `வாய்ஸ் ஆஃப் தி வாய்ஸ்லெஸ்' என்ற தலைப்பில் ஜூன் 2020-ல் முதல் தனியிசைப்பாடலை வெளியிட்டார். அவரின் இசையும், குரலும், உணர்ச்சி கொந்தளிக்கும் வார்த்தைகளும் 'யார்டா இந்தப் பையன்' என மலையாள உலகைத் திரும்பிப் பார்க்க வைத்தது. அப்போதுமுதல் வேடனுக்கு ஏறுமுகம்தான். தொடர்ந்து குரல்: வேடனின் ராப் பாடல்களில், புரட்சிகரக் கருத்துகள் நிறைந்திருந்தன. அதேபோல எங்கெல்லாம் அடக்குமுறைகள் நடக்கிறதோ அது தொடர்பாக வேடன் பாடத் தொடங்கினார். பாலஸ்தீனம் முதல் அமெரிக்காவில் தாக்கப்பட்ட கறுப்பின பெண் வரை சமூக அடக்குமுறைக்கு எதிராக உறுதியாகத் தெளிவாகக் குரல் கொடுக்கத் தொடங்கினார்.திரைப்பயணம்: 2021-ம் ஆண்டில், வெளியான நயட்டு என்ற மலையாளப் படத்தின் நரபலி என்ற பாடலைப் பாடி திரைத்துறையில் முதல் அடியை எடுத்து வைத்தார். 2023-ம் ஆண்டில், சர்வதேச விருது வென்ற 'ஆல் வி இமேஜின் அஸ் லைட்' படத்தில் 'கிஸ்ஸஸ் இன் தி கிளவுட்ஸ்' பாடலையும் எழுதிப் பாடியிருந்தார். மலையாள பிளாக்பஸ்டர் மஞ்சும்மல் பாய்ஸில் இசையமைப்பாளர் சுஷின் ஷ்யாமுடன் இணைந்து 'குத்தந்திரம்' பாடலுக்கான வரிகளை எழுதிப் பாடினார். அதைத் தொடர்ந்து பல படங்களில் பணியாற்றி வருகிறார். ஆனால், வேடனுக்குப் படத்தில் பாடல் எழுதுவதைவிட தனியிசைப்பாடலுக்காக எழுதுவதுதான் மிகவும் பிடிக்கும் எனப் பேட்டியளித்திருக்கிறார். VEDAN VEDAN பிரச்னைகளும் - வழக்குகளும்! Mee Too 2021-ம் ஆண்டு ராப்பர் வேடன் மீது பாலியல் தொடர்பான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. அப்போதே ராப்பர் வேடன், ``நான் நடந்துகொண்ட விதம் உங்களுக்குச் சங்கடத்தை ஏற்படுத்தியதை நினைத்து அவமானப்படுகிறேன். அதற்காக உங்களின் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்" என பேஸ்புக் பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டார்.போதை: ஏப்ரல் மாதம் கொச்சியில் ராப் நிகழ்ச்சிக்காகச் சென்ற வேடன், அங்கு நண்பர்களுடன் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் தங்கியிருக்கிறார். அங்கு ஆறு கிராம் கஞ்சா வைத்திருந்தது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு, காவல்துறை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``நான் ஒரு சிறந்த மனிதனாக மாற முயல்வேன். நான் என்னைத் திருத்திக் கொள்ள முயல்கிறேன். எனது ரசிகர்கள் அனைவரும் புகைப்பிடித்தல், மது அருந்துதல் நல்ல பழக்கங்கள் அல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார். VEDAN VEDAN புலிப் பல்: ஏப்ரல் 28-ம் தேதி போதைப்பொருட்களுக்கு எதிரான நடவடிக்கையின் போது, வேடன் புலிப் பல் கொண்ட ஒரு செயினை அணிந்திருந்ததாக காவல்துறையினர் வன அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். இதன் விளைவாகக் கஞ்சா வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட சில மணி நேரத்தில், வன அதிகாரிகள் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம், 1972-ன் கீழ் வேடனைக் கைது செய்தனர். கடந்த ஆண்டு இலங்கையைச் சேர்ந்த ஒருவர் தனக்கு அந்தப் பல்லைப் பரிசாக அளித்ததாகவும், அதன் சட்டரீதியான தாக்கங்கள் குறித்து தனக்குத் தெரியாது என்றும் வாக்குமூலம் அளித்தார். அதைத் தொடர்ந்து, எர்ணாகுளத்தில் உள்ள பெரும்பாவூரில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றம் வேடனுக்கு ஜாமீன் வழங்கியது.பா.ஜ.க புகார்: "வாய்ஸ் ஆஃப் தி வாய்ஸ்லெஸ் சானலின் மூலம் பிரதமர் மோடியை அவதூறு செய்கிறார். இந்தப் பாடல் மூலம் சாதி அடிப்படையிலான வெறுப்பை ஊக்குவிக்கிறார். அந்த சானல் இந்து சமூகத்தைப் பிளவுபடுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. எனவே, வேடன் தொடர்பாக NIA விசாரிக்க வேண்டும்" என மத்திய உள்துறை அமைச்சருக்கும், என்.ஐ.ஏ-க்கும் பாலக்காட்டைச் சேர்ந்த பா.ஜ.க கவுன்சிலர் மினி கிருஷ்ணகுமார் புகார் பதிவு செய்திருக்கிறார். சர்ச்சை: 'அடுத்தடுத்து கைது நடவடிக்கைகள், உன்னிப்பாகக் கவனிக்கப்படும் வேடனின் செயல்பாடுகள் என அனைத்தையும் வைத்துப் பார்க்கும்போது இது அரசியல் அடக்குமுறை' எனச் சமூக ஊடகங்களில் அவரின் ரசிகர்கள் வேடனுக்கு ஆதரவாகவும், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகளுக்கு எதிராகவும் கொந்தளித்து வருகின்றனர். ராப்பர் வேடனுக்கு எதிராகவும் - ஆதரவாகவும் சமூக ஊடகங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது. VEDAN VEDAN ஆதரவு! வேடன் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டதற்குப் பிறகு வனத் துறை அமைச்சர் ஏ.கே. சசீந்திரன், ``வேடன் என்று அன்பாக அழைக்கப்படும் ஹிரந்தாஸ் முரளி போன்ற பிரபல பாடகரின் வழக்கைக் கையாளும்போது இன்னும் கொஞ்சம் எச்சரிக்கை தேவை. வனத்துறை அதிகாரிகள் பொதுமக்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும். இந்த வழக்கில் ஏதேனும் சட்டவிரோத நடவடிக்கைகள், தார்மீகக் குறைபாடுகள் இருந்ததா என்பதை ஆராய்வோம்" என்றார். ஆளும் அரசு தரப்பிலிருந்தும், இளைஞர்கள் தரப்பிலிருந்தும் நாளுக்கு நாள் வேடனுக்கு ஆதரவு பெருகிக்கொண்டே போகிறது என்பதுதான் நிதர்சனமான உண்மை. Vedan: கேரள மலையாள ராப் பாடகர் வேடன் என்கிற ஹிரந்தாஸ் முரளி; யார் இவர்?
  6. அங்குமிங்கும் ஆர்ப்பரித்துப் பறக்கும் பறவைகள், வேலையும் இல்லை; நிற்க நேரமுமில்லை என்பதுபோல் பரபரப்பாகத் திரியும் நாய்கள், அசைபோட்டுக் கொண்டே அமர்ந்திருக்கும் கால்நடைகள், பொழுதுக்கும் தூங்கும் பூனைகள் இவையெல்லாம் இரை தேடுதலைத் தாண்டி தம் மனதில் என்ன யோசிக்கும் என்று எப்போதாவது நாம் நினைத்துப் பார்த்து சிரித்துச் சென்றிருப்போம். சில நேரங்களில் விளையாட்டாக அதற்கு ‘வாய்ஸ் ஓவர்’ கொடுத்து கிண்டலும்கூட செய்து மகிழ்ந்திருப்போம். இப்போதைய ஏஐ உலகில், பூனை, நாய்கள் பேசுவது போல் ரீல்ஸ் கூட நாம் டூம்ஸ்க்ரால் செய்யும்போது பார்த்து அடடே நல்லாயிருக்கே என்று லைக்ஸ் போட்டுக் கடந்திருப்போம். ஆனால், உண்மையிலேயே பறவைகள் என்ன நினைக்கின்றன என்பதை, அவற்றின் உணர்வு நிலை எத்தகையது என்பதை முழுவீச்சில் ஆராய்ச்சியாக செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கின்றனர் விஞ்ஞானிகள். அதுமட்டுமல்லாது, 1980-களில் தொடங்கி 2003-ம் ஆண்டில் தனது இறப்பு வரை டொனால்டு க்ரிஃபின் என்ற விஞ்ஞானி, விலங்குகளின் உணர்வு நிலை (Animal Consciousness ) பற்றி ஆய்வு செய்துள்ளார். இந்தத் துறையில் டொனால்டு க்ரிஃபினை ஒரு முன்னோடி என்றே துறையினர் விதந்தோதுகின்றனர். அவர் தனது இறுதி மூச்சு வரை வலியுறுத்தியது, பறவைகள், விலங்குகளின் உணர்வு நிலை பற்றி அறிவியல்பூர்வ ஆராய்ச்சிகள் பெரியளவில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே. அதை சுட்டிக்காட்டி இந்தக் கட்டுரையில், சில வாதங்களை, சுவாரஸ்யமான ஆய்வு விவரங்களைப் பகிர்ந்துள்ளனர் இரண்டு பேராசிரியர்கள். ஹீதர் பிரவுனிங், பேராசிரியர், சதாம்ப்டன் பல்கலைக்கழகம் மற்றும் வால்டர் வெய்ட், பேராசிரியர் ரீடிங் பல்கலைக்கழகம் ஆகிய இருவரும் ‘தி கான்வர்சேஷன்’ தளத்தில் எழுதியுள்ள கட்டுரையின் சாரம்சம் வருமாறு:இந்த உலகை ஒரு தத்துவ ஞானி பார்க்கும் பார்வை இருக்கும், அது சமூக நலன் சார்ந்ததாக இருக்கும். அதுவே இந்த உலகை பறவைகளும், விலங்குகளும் எப்படிக் காண்கின்றன, அணுகுகின்றன என்ற பார்வையும் இருக்கும் அல்லவா? அது சூழழியல் சார்ந்ததாக இருக்கும். அந்தப் பார்வையை அறிந்து கொள்வது சூழலைப் பேணுவதில் அவசியமானது என்கின்றனர் இத்தகைய ஆராய்ச்சிகளில் ஈடுபடுவோர். ஆற்றலில் தனித்து நிற்கும் காக்கை இனம்: காகம், மனிதர்கள் மத்தியில் வாழும் மிகப் பொதுவான ஒரு பறவை இனம். காக்கை இனத்துக்குள் அடங்கும் ரேவன்ஸ், க்ரோஸ், ஜேஸ், மேக்பைஸ் போன்ற பறவையினங்கள் மத்தியில் மேற்கூறிய ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளது. பொதுவாக புத்திசாலித்தனம் குறைவாக இருப்பவர்கள் பறவை மூளைக்காரன் என்று வசைபாட அடைமொழியாக்குவதுண்டு. நம்மூரில் வாத்துமூளைக் காரன், மடையன் என்றெல்லாம் வசவு மொழிகள் உண்டு. ஆனால் காக்கை வகையறாக்களை ஆய்வு செய்த விஞ்ஞானிகள், அவற்றை ‘ஃபெதர்ட் ஏப்ஸ்’ (feathered apes), அதாவது நமக்கான முன்னோடி என்று அழைக்கின்றனர். காக்கை இனத்தைச் சேர்ந்த பறவைகளுக்கு கூர்மையான பார்வைத் திறன் உண்டு. வேகமாகப் பறக்கும்போது கூட அதன் இரையை கூர்மையாக கவனித்துவிடும் திறன் கொண்டவை. அவற்றின் செவித்திறன் அபாரமானது. ஓசைகளில் இருந்தே எச்சரிக்கையாக இருந்து கொள்ளக் கூடியவை. அதேபோல் அவற்றிற்கு நினைவாற்றலும் அதிகம். இந்த வகைப் பறவைகள் தாங்கள் சேகரிக்கும் உணவை பதுக்கிவைக்கும் திறன் கொண்டவை. இதை ஆங்கிலத்தில் கேச்சிங் (caching) என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். எந்த உணவை எங்கு பதுக்கி வைத்தோம் என்பது மட்டுமல்லாது, அதை எப்போது பதுக்கிவைத்தோம் என்பது வரை அவை நினைவில் கொள்கின்றன. அதன்மூலம் புழு, பூச்சிகள் போன்ற சீக்கிரம் அழுகிப்போகும் உணவை எங்கு, எப்போது வைத்தோம், நீண்டகாலம் இருக்கக் கூடிய தானியங்களை எங்கே வைத்தோம் என்று நினைவில் கொண்டு பயன்படுத்திக் கொள்கின்றன. அதுமட்டுமல்லாது ஒருவேளை அந்த உணவுப் பொருளை வேறொரு பறவையிடமிருந்து திருடியிருந்தால் ஒளித்து வைத்த இடத்தையும் அவ்வப்போது மாற்றிக் கொள்கின்றன. அதேபோல் பறவைகளுக்கு ஆழமான நுகர்ச்சியுணர்வும் இருக்கிறது. அதைப் பயன்படுத்தியும் மறைத்துவைத்த உணவை கண்டு கொள்கின்றன.இது மட்டுமல்லாது இந்த வகைப் பறவைகள் மனிதர்களைப் போல் உணர்ச்சிகளையும் கொண்டுள்ளன. உதாரணத்துக்கு எதிர்மறை எண்ணங்கள் இவற்றிற்கு எழுகின்றன. சக பறவை வாட்டமாக இருந்தால் அதையே தானும் பிரதிபலிக்கக் கூடியவையாக இருக்கின்றன. மனிதர்களைப் போலவே புதிய பொருட்களிடம் எச்சரிக்கையாக இருக்கின்றன. அறிமுகமில்லாத மனிதர்கள் ஏதேனும் உட்கொள்ள கொடுத்தால் அதைப் பெறுவதில் தயக்கம் காட்டுவதும் இந்த நியோஃபோபியாவால் தான் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். பொதுவாக பாலூட்டி விலங்குகளிடம் இதுபோன்ற உணர்வுகள் இருப்பதை பல ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ள நிலையில் காக்கை வகை பறவைகளில் காணப்படும் இந்த வகையிலான உணர்ச்சிகள் பறவைகளின் உணர்வுகள், மனம் பற்றி மேலும் ஆராய்ச்சிகளைத் துண்டுவதாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஜே (jay bird) என்ற காக்கை வகையறா பறவைகளில் ஆண் பறவை தன் இணையைத் தேர்வு செய்ய பெண் பறவையின் உணவுப் பழக்கவழக்கத்தை கூர்ந்து கண்காணித்து, அதற்குப் பிடித்தமான உணவை சேகரித்துச் சென்று கொடுத்து அத்துடன் இணையும் வழக்கத்தைக் கொண்டுள்ளது. இதுபோன்ற சமூக திறன்கள் பாலூட்டி விலங்குகளிடமே பெரும்பாலும் தென்படும் நிலையில் ஜே பறவைகள் ஆச்சர்யப்பட வைக்கின்றன. இதுபோன்ற ஆராய்ச்சிகள் கோர்விட் (Corvidae) இன பறவைகளின் நலனைப் பேண உதவும் என்கின்றனர் விஞ்ஞானிகள். அவற்றுக்கு எது உகந்தது, எது ஒப்பாதது என்பதை அறிந்து கொள்வது அவற்றிற்கு மட்டுமல்ல, சுற்றுச்சூழலுக்கும் நலன் சேர்க்கும் என்கின்றனர் கட்டுரையாளர்கள். இயற்கையின் சமநிலைக்காகவே...! - இந்தக் கட்டுரை குறித்த பார்வையை ‘இறகுகள் அம்ரிதா இயற்கை’ அறக்கட்டளை நிறுவனரான ரவீந்திரன் நடராஜன் சில தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். பறவைகள் ஆய்வாளரான அவர் கூறுகையில், “பறவைகளின் அறிவுத்திறன் என்பது அதன் உயிர்வாழ்தலை உறுதி செய்து கொள்வதற்கானதும், அதன் அடுத்த தலைமுறைக்காக தான் வாழும் சூழலை சரியாக தகவமைத்துக் கொள்வதற்குமாகவே இருக்கிறது. காகங்களின் வாழ்க்கை அதை நமக்கு தெளிவாக உணர்த்தும். காகங்கள் நம் மத்தியில் சர்வ சாதாரணமாக, மிக அதிகமான அளவில் இருக்கக் கூடியவை. அவற்றின் உயிர்வாழ்தலும் பாதிக்கப்படக் கூடாது, அதே வேளையில் அவற்றின் இனப்பெருக்கமும் அதிகமாகிவிடக் கூடாது. ஏனெனில் காகங்கள் மிக வேகமாக இனப்பெருக்கும் செய்து கொண்டே இருக்கக் கூடிய பறவைகள். அப்படியிருக்க, இயற்கையில் ஒரு சமநிலையை ஏற்படுத்த இயற்கையே அதற்கு ஒரு வழியும் செய்து வைத்திருக்கிறது. அதுதான் குயில்கள். குயிலினங்கள் கூடு கட்டாது, காக்கைக் கூட்டில் முட்டையிட்டு, குஞ்சு பொரிக்கச் செய்யும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், அதன் பின்னணியில் இந்த இயற்கை சமநிலையைப் பேணும் தன்மை தான் மறைந்திருக்கிறது என்பதே பலரும் அறியாதது. காகங்கள் கூடு கட்ட குச்சிகள் சேர்க்கும் போதே, குயில்கள் இணை சேர திட்டமிட்டு சேர்ந்துவிடும். காகம் கூடு கட்டி முட்டையிட்டதும், ஆண் குயில் அந்தக் கூட்டிலிருந்து முட்டையை தள்ளிவிட்டு உடைத்துவிடும். பொதுவாகவே கூட்டில் முட்டையிட்டுவிட்டால் ஆண், பெண் காகங்கள் மாற்றி மாற்றி அதற்கு காவலாக இருக்கும். ஆனால் அதையும் தாண்டி அந்தக் கூட்டில் பெண் குயில் முட்டையிட ஆண் குயில் மிகப் பெரிய வேலைகளைச் செய்யும். விளையாட்டாகச் சொல்வதென்றால் கில்லாடி வேலைகளைச் செய்யும். ஆண் குயில் காகங்களிடம் வேண்டுமென்றே சண்டையிழுத்து அவற்றை அங்குமிங்கும் அலைக்கழித்து அவற்றின் கவனத்தை திசை திருப்பிவிடும். அந்த நேரத்தில் பெண் குயில் வந்து முட்டையிட்டுச் சென்றுவிடும். இப்படி அந்த முட்டையை வளர்க்கும் காகம் ஒரு கட்டத்தில் அது தன்னுடையது அல்ல என்பதைத் தெரிந்தவுடன் கூட்டிலிருந்து விரட்டிவிடும். பறவைகள் ஆய்வாளர்/ ஆர்வலர் ரவீந்திரன் நடராஜன் இப்படித்தான் பல்கிப் பெருகக்கூடிய ஒரு பறவையினத்தை, கூடுகட்டும் திறனில்லாத இன்னொரு பறவையினம் சர்வைவலுக்காக கட்டுப்படுத்துகிறது. இதைத்தான் இயற்கை சமநிலைக்கு இயற்கையே அளித்த திறமைகள் என்று கூறுகின்றேன். காகங்கள் அனைத்துண்ணிகளாக இருந்து நகரத் தூய்மையைப் பண்ணுவதாக இருந்தாலும் கூட அவற்றின் எண்ணிக்கை அதிகமானால் மனிதர்களுக்கு தொல்லையாகிவிடும். சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் காகங்களை தீங்கினமாகவே காண்கின்றனர். அங்கே காகங்களை எப்படிக் கட்டுப்படுத்த வேண்டும் என்பது குறித்து ஆய்வுகளை செய்துள்ளனர். அதன்படி சில வழிமுறைகளையும் பின்பற்றி காகங்களின் எண்ணிக்கையை கட்டுக்குள்ளும் வைத்திருக்கின்றனர். காகங்கள், குயில்களின் நெஸ்டிங் முறையை கூர்ந்து கவனித்து ஆய்வு செய்ததுபோல், வாத்துகளையும் நான் உற்று நோக்கி ஆய்வு செய்துள்ளேன். வாத்துகளை அறிவற்ற பறவைகள் என்று நாம் சொல்வதுண்டு. மடை எனப்படும் குறுகிய நீரோட்டங்களில் வாழும் சின்ன அளவிலான வாத்துகளை மடை வாத்து என்றழைப்போம். அதுவே மருவி மடவாத்து என்ற வார்த்தையாகிவிட்டது. அவை எப்போதும் கூட்டமாக வாழக்கூடியவை. சம்பை புல்களுக்கு இடையே வாழும் ஸ்பாட் பில்ட் டக்ஸ் என்ற வாத்துகளை ஒருமுறை நெருங்கி ஆய்வு செய்ய முடிந்தது. அப்போது அருகிலிருந்து வயலில் பறவைகள் வந்து பயிர்களை நாசம் செய்யக்கூடாது என்று வெடி வெடித்துக் கொண்டிருந்தனர். அதற்கு பயந்துபோன சம்பை வாத்து ஒன்று தனது குஞ்சுகளுடன் வெளியே வந்தது. வெளியே வந்ததும் அந்த வாத்து குஞ்சுகளை சுற்றிச்சுற்றி வந்தது. அது எத்தனை வாத்துகள் இருக்கின்றன என்று எண்ணுவதுபோலவே இருந்தது. பின்னர் மீண்டும் அந்த புல் பகுதிக்குச் சென்று சத்தமிட்டுக் கொண்டே இருந்தது. நீண்ட நேரத்துக்குப் பின் வெடிச்சத்ததால் பயந்து பதுங்கியிருந்த இன்னொரு வாத்துக் குஞ்சு வெளியே வந்தது. உடனே மற்ற வாத்துகளுடன் அதையும் சேர்த்துக் கொண்டு வேறிடத்துக்குச் சென்றது அந்த வாத்து. இப்படி, வெளிநாடுகளிலும் கூட வாத்துகளின் எண்ணும் திறனை ஆய்வு செய்து கட்டுரைகள் வெளியிட்டுள்ளனர். கடல் ஆலா பறவைகள் பல மைல்கள் கடந்து ஆர்க்டிக், அண்டார்டிக் பகுதிகளில் இருந்து எப்படி இடம்பெயர்ந்து வருகிறது என்ற சூட்சமம் இன்றுவரை முழுமையாக ஆராய்ச்சிகளால் கண்டு கொள்ள முடியாததாகவே இருக்கிறது. குறிப்பிட்ட கழுகு வகைகள் அதன் வாழ்நாள் முழுவதும் ஒரே ஒரு இணையோடு மட்டுமே வாழும், இன்னொரு பறவையினம் தனது இணை இறந்துவிட்டால், பட்டினியிருந்து அதுவும் உயிர் துறந்துவிடும். இப்படி இயற்கை நிறைய சுவாரஸ்யங்களை உள்ளடக்கியுள்ளது. இவையெல்லாம் இயற்கையின் சமநிலையைப் பேணவே நடைபெறுகிறது. பறவைகள் தம் உயிர் வாழ்தலை உறுதி செய்து கொள்ள சமநிலையைப் பேண ஒவ்வொரு விதமான உணர்வு நிலைகளுடன் இயங்குகின்றன. பறவைகளின் உணர்வு நிலைகளை, உள்ளுணர்வுகளை ஆய்வு செய்தல் சுவாரஸ்யமானதே.” என்றார். ஒவ்வொரு பறவைக்கும் ஒவ்வொரு ஃபீலிங்... பறவைகளின் உள்ளுணர்வும், சில சுவாரஸ்யங்களும்! | What’s going on inside the mind of an animal or a bird explained - hindutamil.in
  7. திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செயலகம் முன்பாக அரச நியமனம் கோரி பட்டதாரி ஒருவர் மாம்பழ வியாபாரி போன்று, கோர்ட் சூட் அணிந்து தனது பட்டத்தை கையில் எடுத்து திங்கட்கிழமை (26) அன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். கிண்ணியாவை சேர்ந்த குறித்த பட்டதாரி “அரச துறையில் நியமனம் வழங்குங்கள், கலைப் பட்டத்தை இல்லாமல் ஆக்குங்கள்..."உள்ளிட்ட விடயங்களை இதன்போது தெரிவித்தார். ஏ.எச் ஹஸ்பர் Tamilmirror Online || ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கோர்ட் சூட் மாம்பழ வியாபாரி
  8. வயம்ப தேசிய கல்வியியல் கல்லூரியில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை (23) மாலை தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் தொடர்பில் கல்வி அமைச்சினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வயம்ப தேசிய கல்வியியல் கல்லூரியின் விஞ்ஞான பீடத்தில் கல்வி கற்று வந்த களுத்துறை - வெலிகெட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த மாணவி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்த மாணவி தனது கல்லூரி விடுதியினுள் தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக பிங்கிரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். மன உளைச்சலுக்குள்ளாகி மாணவி உயிரை மாய்த்துக்கொண்டிருக்கலாம் என மாணவியின் பெற்றோர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர். மாணவி உயிரை மாய்த்துக்கொண்டமைக்கான காரணத்தை கண்டறிய கல்வி அமைச்சினால் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தேசிய கல்வியியல் கல்லூரியில் மாணவி உயிர்மாய்ப்பு ; கல்வி அமைச்சினால் தீவிர விசாரணை! | Virakesari.lk
  9. " பிகினி" க்கு தடை : சமூக ஊடகங்களில் போலிச் செய்தி பரப்புவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கத் தயாராகும் அரசாங்கம் Published By: Digital Desk 3 26 May, 2025 | 02:03 PM நாட்டின் சுற்றுலாத்துறையை இலக்கு வைத்து பல்வேறு போலிச் செய்திகள் ஊடாக அரசாங்கத்துக்கு எதிரான நாசகார வேலைகள் மேற்கொள்ளப்படுவதாக சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், வெலிகம மற்றும் அறுகம் குடா (Arugam Bay) பகுதிகள் தொடர்பாக சமூக ஊடகங்களில் பரப்பப்படும் இரண்டு சம்பவங்கள் மூலம் இது தெளிவாகிறது. முதல் சம்பவம் வெலிகமவில் பிலிப்பைன்ஸ் நாட்டவர் ஒருவர் தாக்கப்படும் காணொளியாகும். இந்த சம்பவம் 2024 ஆம் ஆண்டு இடம்பெற்றது என கண்டறியப்பட்டுள்ளது. இரண்டாவது சம்பவம் அறுகம் குடா பகுதியில் பொது இடங்களில் சுற்றுலாப் பயணிகள் ”பிகினி” அணிவதைத் தவிர்க்குமாறு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவித்தல் அப்பகுதியில் இன பதற்றத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சி என கண்டறியப்பட்டுள்ளது. கொழும்பு மாநகர சபை உட்பட முக்கிய உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைக்க முஸ்லிம் சமூகத்துடன் அரசாங்கம் இணைந்து செயல்பட்டு வரும் நேரத்தில், அறுகம் குடா தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. "இது தொடர்பாக நாங்கள் அறுகம் குடாவிலுள்ள முஸ்லிம் சமூகத்தினரிடம் விசாரணை செய்தோம். பொது இடத்தில் நிர்வாணமாக ஒருவர் நடந்து சென்றதாகவும், அதற்கு அவர்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியதாகவும் தெரிவித்தனர். அரசாங்கம் தனது அதிகாரத்தை வலுப்படுத்த செயற்பட்டு வரும் வேளையில், அப்பகுதியில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக சில நபர்கள் அல்லது குழுவினரால் மறைமுக நோக்கத்துடன் செயற்படுத்தப்பட்ட விடயமாக இருக்கலாம் என நாங்கள் சந்தேகிக்கிறோம். இனங்களுக்கிடையில் பதற்றங்களை ஏற்படுத்தவும், தேசத்தை அபிவிருத்தி செய்வதற்கான அதன் முயற்சிகளை சீர்குலைக்கவும் சிலர் மேற்கொண்ட முயற்சிகளாகவே அரசாங்கம் இந்தச் சம்பவங்களைக் கருதுகிறது. சுற்றுலாத் துறையை இலக்கு வைத்து நாட்டின் பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்த முயற்சிக்கும் எந்தவொரு நபருக்கோ அல்லது குழுவிற்கோ எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற போலி செய்திகளுக்கு பலியாக வேண்டாம் என பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கிறோம் எனத் தெரிவித்துள்ளார். " பிகினி" க்கு தடை : சமூக ஊடகங்களில் போலிச் செய்தி பரப்புவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கத் தயாராகும் அரசாங்கம் | Virakesari.lk
  10. இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுப்பதற்கும், மீன்பிடி என்ற போர்வையில் இடம்பெறும் போதைப்பொருள் கடத்தல்களை முறியடிப்பதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கடற்படையினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சுக்கும், பாதுகாப்பு அமைச்சுக்கும் இடையிலான கலந்துரையாடலொன்று நாடாளுமன்ற வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே, இரு அமைச்சுகளினதும் செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் கடற்படை தளபதி உள்ளிட்டோரும் பங்கேற்றிருந்தனர். காணிப்பிரச்சினை, மீன்பிடி துறைமுகங்களில் நிலவும் பிரச்சினைகள், தடைசெய்யப்பட்ட உபகரணங்களைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் விவகாரம், போதைப்பொருள் கடத்தல் மற்றும் இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறுவது உள்ளிட்ட விடயங்கள் சம்பந்தமாக இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளன. மேற்படி பிரச்சினைகளுக்குரிய தீர்வுகள் பற்றியும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளன. இந்திய மீனவர்களின் அத்துமீறல்களுக்கு மத்தியிலேயே போதைப்பொருள் கடத்தலும் இடம்பெறுகின்றது. எனவே, இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுப்பதற்கும், இலங்கை கடல் வளத்தை பாதுகாப்பதற்கும் தேவையான அனைத்து வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறு இக்கூட்டத்தின் கடற்படையினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இந்திய மீனவர் அத்துமீறல், போதைப்பொருள் கடத்தலை தடுக்க கடற்படைக்கு ஆலோசனை | Virakesari.lk
  11. 26 May, 2025 | 06:53 PM யாழ். வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் பெண் ஒருவரிடம் 27 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாவை கனடா வேலைவாய்ப்பு வழங்குவதாக கூறி மோசடி செய்த மற்றொரு பெண் நேற்று கைது செய்யப்பட்டார். 2023ஆம் ஆண்டு, கட்டைக்காடு பகுதியில் வசிக்கும் பெண் ஒருவரிடம், அவரது கணவரை கனடாவிற்கு அனுப்புவதாக கூறி சந்தேகநபர் பணத்தை பெற்றுக்கொண்டார். பின்னர் தொடர்பை துண்டித்ததையடுத்து தாம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக உணர்ந்த பாதிக்கப்பட்ட பெண், பண பரிமாற்றம் செய்யப்பட்டமைக்கான அனைத்து ஆதாரங்களுடன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர், 2024ஆம் ஆண்டு சந்தேக நபருக்கு கிளிநொச்சி நீதிமன்றத்தால் பயணத்தடை விதிக்கப்பட்டதுடன் பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மருதங்கேணி பொலிஸாரின் உதவியுடன் குறித்த பெண் சந்தேக நபர் ஞாயிற்றுக்கிழமை (25)செம்பியன்பற்று பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், குறித்த சந்தேக நபர் அதே பகுதியில் பலர் இடமும் இதே போன்று மோசடி செய்துள்ளதானதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டவரிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். கனடா அனுப்புவதாக கூறி 27 இலட்சம் ரூபாவை பண மோசடி செய்த பெண் கைது | Virakesari.lk
  12. தங்களிடம் மூன்றிலிரண்டு பெரும்பான்மை உள்ளதாகவும் தன்னிடம் நிறைவேற்று அதிகாரம் உள்ளதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மிரட்டுகிறார் என தமிழ் அரசுக் கட்சியின் ஊடகப்பேச்சாளரும், பதில்பொதுச்செயலாளருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். மக்கள் விடுதலை முன்னணியின் 60ஆவது ஆண்டு நிறைவையொட்டி நேற்று விஹாரமகாதேவி பூங்காவில் இடம்பெற்ற நிகழ்வில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உரையாற்றியிருந்தார். இந்த உரை குறித்து தமிழ் அரசுக் கட்சியின் ஊடகப்பேச்சாளரும், பதில்பொதுச்செயலாளருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். தனது உத்தியோகபூர்வ எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள சுமந்திரன்; “தங்களிடம் முன்றிலிரண்டு பெரும்பான்மை இருப்பதாகவும் தன்னிடம் நிறைவேற்று அதிகாரம் உள்ளதாகவும் ஜனாதிபதி மிரட்டுகிறார்.” அதிகாரம் கெடுவிக்கும்; முழுமையான அதிகாரம் முற்றிலும் கெடுவிக்கும். “யாழ்ப்பாண மாநகர சபையில் 10/41 பெரும்பான்மை என்று சொல்லும்போது அவரது கணிதத் தகைமை வெளிப்படுகிறது.” என்று குறிப்பிட்டுள்ளார். நிறைவேற்று அதிகாரம் உள்ளதாக மிரட்டும் அநுர- சுமந்திரன் கருத்து!
  13. 15 May, 2025 | 01:18 PM யாழில் உள்ள பிரபல பாடசாலையில் தரம் 8 இல் கல்வி கற்கும் மாணவர்கள் மீது அதே பாடசாலையைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் தாக்கியதில் 5க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, குறித்த பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆண் ஆசிரியர், வகுப்பு ஒன்றுக்குச் சென்று சத்தம் எழுப்பிய மாணவர்கள் யார் என கேள்வி கேட்டபோது மாணவர்கள் பதில் வழங்காத நிலையில் மாணவர்கள் மீது கதிரையால் கடுமையாக தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் பாடசாலை அதிபரை தொடர்பு கொண்டு கேட்டபோது, ஆசிரியர் மாணவர்கள் மீது தாக்கியது உண்மை எனவும் ஆனால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை தொடர்பில் தமக்கு அறிவிக்கப்படவில்லை என தெரிவித்தார். சம்பவம் தொடர்பில் பாடசாலை என்ற வகையில் நிர்வாக ரீதியாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை தாம் எடுக்க உள்ளதாக தெரிவித்தார். யாழில் ஆசிரியர் கடுமையாக தாக்கியதில் மாணவர்கள் காயம் | Virakesari.lk
  14. 15 May, 2025 | 04:38 PM நாட்டில் நீண்ட தூரம் பயணிக்கும் பேருந்துகளில் செயற்கை நுண்ணறிவு மூலம் இயக்கப்படும் GPS மற்றும் CCTV கருவிகள் விரைவில் பொருத்தப்படும் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இந்த தொழில்நுட்ப இணைப்புகள் இ.போ.ச மற்றும் தனியார் பேருந்துகளில் இணைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பேருந்து ஓட்டுநர்களை கண்காணிக்கவும் அதனூடாக வீதி விபத்துக்களை குறைக்கவும் இந்த இணைப்புகள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். ஓட்டுநர்கள் சோர்வாக இருக்கிறார்களா, தூக்கத்தில் பேருந்தை செலுத்துகிறார்களா, பணியில் ஈடுபடும்போது கைப்பேசி பயன்படுத்துகிறார்களா போன்ற விடயங்களை கண்டறிய இந்த தொழில்நுட்ப அமைப்புகள் உதவும். தற்போது ஓட்டுநர்கள் சீரற்ற வீதி நிலைமைகள், பேருந்துகளில் இயந்திரக் கோளாறுகள் மற்றும் போதிய வெளிச்சம் இன்மை போன்ற இடையூறுகளையும் எதிர்கொள்கின்றனர். அவற்றை கண்காணிக்கவும் இந்த செயற்கை நுண்ணறிவு கருவிகள் பயன்படும் என அமைச்சர் ஊடகங்களுக்கு மேலும் தெரிவித்துள்ளார். நீண்ட தூரம் பயணிக்கும் பேருந்துகளில் AI கண்காணிப்புக் கருவிகள் விரைவில் பொருத்தப்படும் - பிமல் ரத்நாயக்க | Virakesari.lk
  15. 15 May, 2025 | 04:55 PM தமிழினப் படுகொலையைச் சித்திரிக்கும் விதமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்துக்கு முன்பாக நேற்று (14) காலை ஆரம்பமான ஊர்தி பவனி இன்று வியாழக்கிழமை (15) கிளிநொச்சியை சென்றடைந்தது. இதன்போது பரந்தன், கிளிநொச்சி நகர் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் அஞ்சலி செலுத்தினர். முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரம் தற்போது அனுஷ்டிக்கப்பட்டுவரும் நிலையில் இந்த ஊர்தி பவனி ஆரம்பமாகியுள்ளது. இந்த பவனி வடக்கின் ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் பயணித்து, இறுதியாக முள்ளிவாய்க்காலை சென்றடையும். "தமிழினப் படுகொலைக்கு சர்வதேச குற்றவியல் விசாரணை வேண்டும்”, “தேசம், இறைமை, சுயநிர்ணயம் அங்கீகரிக்கப்பட்ட சமஸ்டி வேண்டும்" போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகள் மற்றும் இறுதிப் போரின் சாட்சியங்கள் என்பன வாகனத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. கிளிநொச்சியை சென்றடைந்தது தமிழினப் படுகொலையைச் சித்திரிக்கும் ஊர்தி பவனி | Virakesari.lk
  16. 15 May, 2025 | 05:36 PM வவுனியாவில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் கூடிய ஆசனங்களை பெற்றுக்கொண்ட கட்சிக்கு மற்றைய தரப்பு ஆதரவளிக்கும் வகையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார். வவுனியா உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கும் இலங்கை தமிழ் அரசு கட்சிக்கும் இடையிலான கலந்துரையாடல் வவுனியாவில் இன்று (15) நடைபெற்றது. அதன் பின்னர் கலந்துரையாடல் தொடர்பாக ஊடகங்களுக்கு தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், வவுனியா மாநகர சபையில் சங்கு கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு இலங்கை தமிழ் அரசு கட்சி முழுமையான ஆதரவினை வழங்கும். அதேபோல வவுனியா தெற்கு, வடக்கு, செட்டிகுளம் பிரதேச சபைகளில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி கூடிய ஆசனங்களை பெற்றுள்ளமையினால் நாங்கள் ஆட்சியமைப்பதற்கு ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி தங்களது பூரண ஆதரவினை வழங்குவதாக இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. ஆட்சி அமைப்பதற்கான இணக்கப்பாடே தற்போது ஏற்பட்டுள்ளது. சபைகளின் தவிசாளர், பிரதி தவிசாளர்களை நியமிப்பது எங்களுக்கு சிறிய பிரச்சினை. சபை அமைக்கும் சந்தர்ப்பத்தில் அதனை எங்களுக்குள் பேசி தீர்மானித்துக்கொள்வோம். அத்துடன் சில கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களில் போட்டியிட்டு வென்றவர்களுடன் நாம் கலந்துரையாடியுள்ளோம். சபைகள் தொங்கு நிலையில் உள்ள ஆட்சியாக இல்லாமல் பூரண பலம் கொண்ட முடிவுகளை எடுக்கக்கூடிய மன்றங்களாக வவுனியாவில் உள்ள நான்கு மன்றங்களும் இருக்கவேண்டும். எனவே, வவுனியாவில் உள்ள நான்கு சபைகளிலும் நாங்கள் ஆட்சியமைக்கக்கூடிய சூழல் இருக்கிறது. அத்துடன், இந்த இணக்கப்பாடு உள்ளூராட்சி மன்றத்துடன் மாத்திரம் முடிவடையாமல் தொடர வேண்டும் என்ற கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. இந்த இணக்கப்பாட்டை வடகிழக்கு முழுவதும் தொடர்வதற்கு இரண்டு கட்சிகளின் தலைமைகளும் பேசி ஒரு முடிவுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கிறோம் என்றார். கூடிய ஆசனங்களை பெற்றவர்களுக்கு ஆதரவு! - வவுனியாவில் இரு கட்சிகள் உடன்பாடு | Virakesari.lk
  17. 15 May, 2025 | 06:09 PM கொழும்பு கொட்டாஞ்சேனையில் மாணவி உயிர்மாய்த்த சம்பவம் தொடர்பான சாட்சி விசாரணைகள் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று வியாழக்கிழமை (15) நடத்தப்பட்டன. கொழும்பு பதில் நீதவான் சம்பத் ஜெயவர்தன முன்னிலையில், கொட்டாஞ்சேனை பொலிஸாரினால் சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டு, அவர்களது வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன. முதலாவதாக, மாணவி உயிர்மாய்த்துக்கொண்ட அடுக்குமாடி குடியிருப்பினது தலைவரின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. அடுத்ததாக, மாணவியின் தாயாரிடம் வாக்குமூலம் பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டது, மாணவியின் மரணம் தொடர்பில் மேலதிகமாக சாட்சியங்களை பதிவு செய்யும் நடவடிக்கையை எதிர்வரும் 22ஆம் திகதி வரை நீதவான் ஒத்திவைத்துள்ளார். அன்றைய தினம் மாணவியின் தாயாரிடமிருந்து மேலதிக சாட்சியங்களை பெற்று பதிவு செய்யுமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார். கொட்டாஞ்சேனை மாணவி உயிர்மாய்ப்பு - நீதிமன்றத்தில் சாட்சியங்கள் பதிவு | Virakesari.lk
  18. பொள்ளாச்சி பாலியல் வழக்கு: 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள்; பாதிக்கப்பட்ட பெண்களுக்கு... - முழு விவரம் கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற பாலியல் வழக்கு நாட்டையே அதிரவைத்தது. இளம் பெண்கள், திருமணமான பெண்கள் என்று பலரை ஆசை வார்த்தை சொல்லி பழகி, பிறகு வீடியோ எடுத்து மிரட்டி, அடித்து கூட்டுப் பாலியலில் ஈடுபட்டது ஒரு வக்கிர கும்பல். “அண்ணா பெல்ட்டால அடிக்காதீங்க.” என்று கதறிய ஒரு பெண்ணின் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 2/2 பொள்ளாச்சி பாலியல் வழக்கு 1/2 பொள்ளாச்சி பாலியல் வழக்கு 2/2 இந்த வக்கிர கும்பலின் செல்போன்களில் இதுபோல ஏராளமான வீடியோக்கள் கண்டறியப்பட்டன. இதுதொடர்பாக திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தராஜன், மணிவண்ணன், அருளானந்தம், ஹேரோன் பால், பாபு, அருண்குமார் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் அருளானந்தம், ஹேரோன் பால், பாபு ஆகியோர் அதிமுக பிரமுகர்கள். அப்போது அதிமுக ஆட்சி என்பதால் காவல்துறை குற்றவாளிகளுக்கு சாதகமாக செயல்படுவதாக புகார் எழுந்தது. பொள்ளாச்சி சின்னப்பம்பட்டியில் பாலியலுக்காக பயன்படுத்தப்பட்ட திருநாவுக்கரசின் பண்ணை வீடு விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டது. 3/3 பொள்ளாச்சி பாலியல் வழக்கு 1/3 பொள்ளாச்சி பாலியல் வழக்கு 2/3 பொள்ளாச்சி பாலியல் வழக்கு இதற்கிடையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை காவல்துறை வெளியிட்டது சர்ச்சையானது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயம் கேட்டும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க சொல்லியும் மாநிலம் முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. பொள்ளாச்சி பாலியல் வழக்கு முதலில் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு பிறகு சிபிஐக்கு மாற்றப்பட்டது. 3 குற்ற பத்திரிகைகள்: சிபிஐ தரப்பில் சுமார் 3 குற்ற பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டன. இதுதொடர்பான விசாரணை கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசு சார்பில் 50க்கும் மேற்பட்ட சாட்சியங்கள், 200க்கும் மேற்பட்ட ஆவணங்கள், பாதிக்கப்பட்ட 8 பெண்களின் நேரடி வாக்குமூலம் ஆகியவற்றின் அடிப்படையில் விசாரணை நடைபெற்றது. கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. 2/2 பொள்ளாச்சி பாலியல் வழக்கு 1/2 கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பு அளித்தார். இதற்காக காலை 5.30 மணியளவில் குற்றவாளிகள் அனைவரும் சேலம் மத்திய சிறையில் இருந்து புறப்பட்டு, கோவை நீதிமன்றத்துக்கு 8.30 மணியளவில் அழைத்து வரப்பட்டனர். 4/4 பொள்ளாச்சி பாலியல் வழக்கு 1/4 பொள்ளாச்சி பாலியல் வழக்கு 2/4 பொள்ளாச்சி பாலியல் வழக்கு 3/4 பொள்ளாச்சி பாலியல் வழக்கு இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி பூட்டிய அறையில் வாசித்தார். அதில் பொள்ளாச்சி பாலியல் வழக்கில், கைது செய்யப்பட்ட 9 பேரும் குற்றவாளி என அறிவிக்கப்பட்டது. பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என கோவை மகளிர் நீதிமன்றம் அறிவித்ததை, வரவேற்கும் விதமாக, நீதிமன்ற வளாகத்தில் அனைந்திந்திய மாதர் சங்கம் கோஷமிட்டு வரவேற்றனர். `சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்க வேண்டும்’ - கோரிக்கை சிபிஐ தரப்பு வழக்கறிஞர் சுரேந்திர மோகன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "கைது செய்யப்பட்ட சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார், அருளானந்தம், மணிவண்ணன், ஹேரோன் பால், பாபு, அருண்குமார் ஆகிய 9 பேரும் குற்றவாளிகள் என நீதிபதி அறிவித்துள்ளார். அவர்களுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் என்று அரசுத்தரப்பில் வாதம் வைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களின் பாதுகாப்பு பாதுகாக்கப்பட்டதால், 8 பேரில் ஒருவர் கூட பிறழ் சாட்டசியாக மாறவில்லை. குறைந்தபட்ச தண்டனை என்றாலே 20 ஆண்டுகள் ஆயுள் சிறை தண்டனை வழங்கப்படும். இதில் பெண்கள் தொடர்ச்சியாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதால், உட்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று கோரியுள்ளோம். வயது, ஆரோக்கியம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என எதிர்த்தரப்பு சார்பில் வாதம் வைக்கப்பட்டுள்ளது. 12 மணிக்கு தண்டனை விபரம் வழங்கப்படவுள்ளது." என்றார். 9 குற்றவாளிகளுக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கி கோவை மகளிர் நீதிமன்றம் உத்தரவு பிறப்புத்துள்ளது. பாதிக்கப்பட்ட 8 பெண்களுக்கு ரூ.85 லட்சம் நஷ்ட ஈடு வழங்கவும் உத்தரவு. 1) திருநாவுக்கரசு - 5 ஆயுள் தண்டனை 2) சபரி ராஜன் - 4 ஆயுள் தண்டனை 3) சதிஷ் - 3 ஆயுள் தண்டனை 4) வசந்தகுமார் - 2 ஆயுள் தண்டனை 5) மணிவண்ணன் - 5 ஆயுள் தண்டனை 6) பாபு - 1 ஆயுள் தண்டனை 7) ஹெரோன் பால் - 3 ஆயுள் தண்டனை 8) அருளானந்தம் - 1 ஆயுள் தண்டனை 9) அருண்குமார் - 1 ஆயுள் தண்டனை பொள்ளாச்சி பாலியல் வழக்கு: முழு தண்டனை விவரம்! - Vikatan
  19. தற்போதைய அரசாங்கமும் தமிழ் தேசிய இனத்தை உதாசீனப்படுத்துகின்றது - மட்டக்களப்பில் தமிழ் இன அழிப்பு வாரத்தை ஆரம்பித்து வைத்து சிறிநாத் தெரிவிப்பு 12 May, 2025 | 01:27 PM தற்போதைய அரசாங்கமும் தமிழ் தேசிய இனத்தினை உதாசீனப்படுத்துகின்ற, அலட்சியப்படுத்துகின்ற, அவர்களின் நியாயமான கோரிக்கையினை செவிமடுக்காத போக்கும் தமிழ் மக்கள் இந்த நாட்டிலே நியாயமான உரிமைகளும் உறுதிப்படுத்தப்படாத நிலையிலேயே இந்த பௌத்த சிங்கள பேரினவாத அரசாங்கம் நடந்துகொள்கின்றதென இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத் தெரிவித்தார். தமிழ் மக்களுக்கான அரசியல் உரிமைகள், வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்கள், அரசியல் கைதிகளுக்கான நீதியான நடவடிக்கைகள், தாயக நிலங்கள் விடுவிக்கப்படும் வரையில் இந்த நாடு முன்னேற்றகரமான நிலைக்கு செல்லமுடியாது என்ற விடயத்தினை சிங்கள அரசும் சிங்கள தேசிய இனமும் உணர்ந்துகொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார். தமிழ் இன அழிப்பு வாரம் திங்கட்கிழமை (12) மட்டக்களப்பு மாவட்டத்தில் உணர்வுபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. மட்டக்களப்பில் பெருமளவான மக்கள் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சத்துருக்கொண்டான் நினைவுத்தூபி அருகில் தமிழ் இன அழிப்பு வாரம் ஆரம்பித்துவைக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர் செல்வகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத் கலந்துகொண்டார். இதன்போது சத்துருக்கொண்டான் படுகொலை நினைவுத்தூபியில் முள்ளிவாய்க்கால் மற்றும் சத்துருக்கொண்டான் படுகொலையில் உயிர்நீர்த்தவர்களின் ஆத்மசாந்திக்காக விளக்கேற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் அகவணக்கமும் செலுத்தப்பட்டதை தொடர்ந்து உப்பில்லா கஞ்சி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத், எங்கெங்கு தமிழர்கள் கொத்துக்கொத்தாக அழிக்கப்பட்டார்களோ அங்கு எல்லாம் இன அழிப்பு வார நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்த சத்துருக்கொண்டான் பகுதியிலே பாரிய படுகொலைகள் நடாத்தப்பட்ட வரலாறுகள் இருக்கின்றன. ஒரு இன அழிப்பு நோக்குடன் வடகிழக்கில் பல படுகொலைகள் நடாத்தப்பட்டதுடன் எமது விடுதலைப் போராட்டத்தினை நசுக்குவதற்காக பல இடங்களில் படுகொலைகள் நடாத்தப்பட்டிருந்தன. சத்துருக்கொண்டானில் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் கொண்டுசெல்லப்பட்டு படுகொலைசெய்யப்பட்டார்கள் இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டாலும் அந்த விசாரணைகள் பின்னர் முடக்கப்பட்டது. இன்று இந்த அரசாங்கம் பட்டலந்த வதைமுகாம் விடயங்களை கையிலெடுத்து அது தொடர்பான விசாரணைகளை மீள முன்னெடுத்திருக்கும் அதேநேரம் வடகிழக்கில் பல இடங்களில் படுகொலைகள் நடைபெற்ற வரலாற்றின் சாட்சியங்களாகவும் ஆவணங்களாகவும் இருக்கின்ற போதிலும் அது தொடர்பான எந்த முன்னெடுப்புகளும் மேற்கொள்ளப்படாமல் தமிழ் மக்களை உதாசீனப்படுத்துகின்ற, அவர்களின் நியாயமான கோரிக்கையினை செவிமடுக்காத போக்கு தமிழ் மக்கள் இந்த நாட்டில் வாழ்வதற்கான உறுதிப்பாடற்ற நிலையிலே அவர்களுக்கான நியாயமான உரிமைகள், அவர்களின் சுதந்திரமான வாழ்க்கைக்கான உறுதிப்பாடுகள் இல்லாத நிலையிலேயே சிங்கள பௌத்த தேசிய அரசுகள் நடந்துகொள்கின்றன. 2009ஆம் ஆண்டு யுத்தத்தின் இறுதிக்கட்டத்திலே பொதுமக்கள் கொத்துக்கொத்தாக இலட்சக்கணக்கில் கொல்லப்பட்ட சம்பவமானது தமிழினத்தினை இந்த நாட்டில் இல்லாமல்செய்வதற்கும், வடகிழக்கு தாயப்பகுதியில் தமிழ் மக்களின் இனப்பரம்பலை குறைத்து கையேந்தும் நிலையிலேயே நிர்க்கதியற்ற நிலையில் தமிழ் மக்கள் வாழ வேண்டும், தமிழ் மக்கள் தமது உரிமைகளை இனி ஒருபோதும் போராடி கேட்ககூடாது என்ற அடிப்படையிலே பல்வேறு திட்டமிட்ட படுகொலைகள் நடந்தேறியது. இந்த படுகொலைகளுக்கான நீதிநியாயம் கூட எந்தவகையான வழிகளிலும் நடைபெறவில்லை.யுத்தம் மௌனிக்கப்பட்டு 16வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் நீதிநியாயத்திற்காக தமிழ் தேசிய சக்திகள் தமிழ் இனத்தில் பற்றுக்கொண்ட அமைப்புகள் முன்னெடுக்கின்றபோதிலும் அதற்கான எந்த அங்கீகாரத்தினையும் இந்த நாடுவழங்கவில்லை. இவ்வாறான செயற்பாடுகள் இந்த நாட்டில் நியாயமாக,நிம்மதியாக வாழமுடியும் என்ற நம்பிக்கையினை இல்லாமல் செய்துள்ளது. இன்று இந்த பொருளாதார நெருக்கடிக்கு கூட தமிழ் மக்கள் இரண்டாம் தரப்பாக அடக்கி ஒடுக்கப்படுதலே காரணமாக அமைந்திருக்கின்றது. இவற்றினை சிங்கள தேசிய இனம் புரிந்துகொள்ளாத நிலையில் இந்த நாடு சுபீட்சமான நாடாக மாறுவதற்கு எந்தவிதமான வாய்ப்புகளும் இல்லை. தமிழ் மக்களுக்கான அரசியல் உரிமைகள், வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டவர்கள், அரசியல்கைதிகளுக்கான நீதியான நடவடிக்கைகள்,தாயக நிலங்கள் விடுவிக்கப்படும் வரையில் இந்த நாடு முன்னேற்றகரமான நிலைக்கு செல்லமுடியாது என்ற விடயத்தினை சிங்க அரசும் சிங்கள தேசிய இனமும் உணர்ந்துகொள்ளவேண்டும். ஒரு இனத்தின் விடுதலையானது,ஒரு இனத்தின்இருப்பானது மிக காத்திரமான முறையில் ஒரு அரசாங்கத்தினால் பாதுகாக்கப்படாவிட்டால் நாட்டில் மக்கள் நம்பிக்கையற்ற சூழ்நிலையில் வாழும் நிலையேற்படும். அந்தவகையில் 2009ஆம் ஆண்டு ஏற்பட்ட இன அழிப்புக்கு நீதிநியாயம் கிடைக்கவேண்டும்.இந்த சம்பவங்கள் எமது அடுத்த சந்ததிக்கு கொண்டுசெல்லப்படவேண்டும். இவ்வாறான படுகொலைகளும் அடக்குமுறைகளும் கடந்தகாலத்தில் நடைபெற்றது என்பதை எதிர்கால சந்திக்கு கொண்டுசென்று எமது தமிழ் தேசியத்திற்கான தொடர்ச்சியான போராட்டத்தினையும் தமிழ் தேசிய விடுதலைக்கான போராட்டத்தினையும் எமது இளம் சந்ததிகள் தெரிந்துகொள்ளவேண்டும் அதன் முன்கொண்டுசெல்லவேண்டும். இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபைக்கு தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களான தயாளகௌரி,டினேஸ்,தனுபிரதீப் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றிய தலைவர் எஸ்.சிவயோகநாதன் உட்பட பலர் கலந்துகொண்டனர். தற்போதைய அரசாங்கமும் தமிழ் தேசிய இனத்தை உதாசீனப்படுத்துகின்றது - மட்டக்களப்பில் தமிழ் இன அழிப்பு வாரத்தை ஆரம்பித்து வைத்து சிறிநாத் தெரிவிப்பு | Virakesari.lk
  20. தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிரான போராட்டத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல் 12 May, 2025 | 04:46 PM யாழ்ப்பாணம் - தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது. தையிட்டி பகுதியில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்ற கோரி திங்கட்கிழமை (12) போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. போராட்ட களத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சப்பட்டு , போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு வழங்கப்பட்டது. குறித்த போராட்டத்தில் , நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் , நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்த நிலையில் , அவர்களுக்கும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது. தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிரான போராட்டத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல் | Virakesari.lk
  21. 12 May, 2025 | 05:01 PM வெசாக் தினத்தினை முன்னிட்டு யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் விசேட நிகழ்வுகள் திங்கட்கிழமை (12) நடைபெற்றன. விமான நிலைய பணியாளர்களின் ஏற்பாட்டில் வெளிச்சக் கூடுகளினால் விமான நிலையம் அலங்கரிக்கப்பட்டிருந்ததுடன், விமான பயணிகளுக்கு சிற்றுண்டிகளும் வழங்கப்பட்டன. வெசாக் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாண விமான நிலையத்தில் விசேட நிகழ்வுகள் | Virakesari.lk
  22. கொட்டாஞ்சேனை மாணவி உயிர்மாய்ப்பு : கடந்தகால விசாரணைகள் குறித்து பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள விளக்கம் கொழும்பிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்ற 16 வயதுடைய மாணவி ஒருவர் கடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி கொட்டாஞ்சேனை, கல்பொத்த வீதியில் உள்ள தொடர்மாடி குடியிருப்பின் மேல் மாடியிலிருந்து கீழே குதித்து உயிரை மாய்த்துக்கொண்டார். இந்த சம்பவம் தொடர்பில் பல்வேறு பிரதேசங்களில் பொதுமக்களால் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதையடுத்து குற்றம்சாட்டப்பட்ட கொழும்பு பம்பலப்பிட்டி பிரதேசத்தில் உள்ள பிரபல பாடசாலையின் ஆசிரியர் உடனடியாக பணி இடமாற்றம் செய்யப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்திருந்தது. இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தெரியவருவதாவது, உயிரிழந்த மாணவி கடந்த ஆண்டு கொழும்பு பம்பலப்பிட்டி பிரதேசத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் போது அதே பாடசாலையில் கடமையாற்றும் ஆசிரியர் ஒருவரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 08 ஆம் திகதி பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று கிடைத்தது. இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபரான ஆசிரியர் கடந்த ஜனவரி மாதம் 08 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட ஆசிரியர் கொழும்பு புதுக்கடை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து ஜனவரி மாதம் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இதன்போது சந்தேக நபரான ஆசிரியருக்கு வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் மே 19 ஆம் திகதி மீண்டும் நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த மாணவி மன விரக்தியில் உயிரை மாய்த்துக்கொண்டுள்ள நிலையில், தனியார் வகுப்பு ஆசிரியர் ஒருவர் இந்த மாணவியை சக மாணவர்கள் முன்னிலையில் அவமானப்படுத்தியுள்ளதாக பொலிஸ் பெண்கள் மற்றும் சிறுவர் பாதுகாப்பு பணியகத்திற்கு கடந்த 06 ஆம் திகதி முறைப்பாடு ஒன்று கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். கொட்டாஞ்சேனை மாணவி உயிர்மாய்ப்பு : கடந்தகால விசாரணைகள் குறித்து பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள விளக்கம் | Virakesari.lk
  23. தமிழ் சிறுமி அம்ஷிகாவுக்கு நீதி கேட்கும் போராட்டத்தில் தமிழ் மக்களுடன் சிங்கள மக்களும் இணைந்து போராடுவதை அவதானிக்க முடிகின்றது.
  24. உள்ளூராட்சி சபைத் தேர்தல் - 2025 : அநுர தலைமையிலான தேசிய மக்கள் சக்தி சாதனை! 07 May, 2025 | 04:33 PM உள்ளூராட்சி சபைத் தேர்தல் - 2025 இல் நாடு முழுவதும் பெறப்பட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி அதிகப்படியான வாக்குகளை பெற்று சாதனை படைத்துள்ளது. அதன்படி, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் களமிறங்கிய தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியானது 4,503,930 வாக்குகளையும் 3,927 உறுப்பினர்களையும் பெற்று வெற்றி பெற்றுள்ளது. இரண்டாவது நிலையாக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி 2,258,480 வாக்குகளையும் 1,767 உறுப்பினர்களையும் பெற்றுக்கொண்டது. 2018ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 4.94 மில்லியன் வாக்குகளைப் பெற்று நாட்டின் அரசியல் களத்தில் ஆதிக்கம் செலுத்திய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி 2025இல் நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 954,517 வாக்குகள், 742 உறுப்பினர்களை பெற்று பின்னடைவை சந்தித்திருக்கிறது. 2018இல் களத்தில் இறங்கி 693,875 வாக்குகளைப் பெற்றும், பலமற்ற கட்சியாக இருந்த மக்கள் விடுதலை முன்னணி, தற்போது நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் 43.26 வீத வாக்கு எண்ணிக்கையான 4,503,930 வாக்குகளையும் 3927 உறுப்பினர்களையும் பெற்று சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. உள்ளூராட்சி சபைத் தேர்தல் - 2025 : அநுர தலைமையிலான தேசிய மக்கள் சக்தி சாதனை! | Virakesari.lk
  25. 07 May, 2025 | 03:43 PM முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று புதன்கிழமை (07) கைது செய்யப்பட்டுள்ளார். கெஹெலிய ரம்புக்வெல்ல வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் இன்றைய தினம் முன்னிலையாகிய போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், கெஹெலிய ரம்புக்வெல்லவை கொழும்பு பிரதான நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கெஹெலிய ரம்புக்வெல்ல கைது | Virakesari.lk

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.