Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிழம்பு

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by பிழம்பு

  1. யாழ்ப்பாணம் 2 மணி நேரம் முன் போதைக்கு எதிராக சங்கானையில் மாபெரும் கவனவீர்ப்பு போராட்டம்! சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு இன்றையதினம் சங்கானை பேருந்து நிலையத்திற்கு முன்பாக மாபெரும் கவனவீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. போதைப்பொருள் பாவனையானது அதிகரித்து காணப்படுகின்ற நிலையில் அதன் தாக்கம் மாணவர்கள், இளைஞர்கள், யுவதிகள், குடும்பத்தவர்கள் என சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவரிடத்திலும் மிகவும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றது. இதனால் குடும்பங்களிடையே பல்வேறு விதமான பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. இவ்வாறான பிரச்சினைகளில் இருந்து விடுபடுவதற்கு போதைப்பொருள் பாவனையில் இருந்து அனைவரையும் மீட்கும் நோக்கில் இந்த விழிப்புணர்வு போராட்டமானது முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் "போதை அற்ற வாழ்வே ஆரோக்கியத்திற்கான வழி, எம் சமூகத்தை அழிக்கும் மது எமக்கு தேவைதானா?, அரசே புதிய மதுபான சாலைகளுக்கு அனுமதி வழங்காதே, மது ஒழிப்பில் ஈடுபடும் ஜனாதிபதிக்கு கை கொடுப்போம், போதையெனும் சாக்கடையில் விழாதீர்கள்" எனும் வாசகங்கள் எழுதிய பதாகைகளை ஏந்தி, கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். வட பிரதேச நல்லொழுக்க சம்மேளனல்தினர் ஏற்பாடு செய்த இந்தப் போராட்டத்திற்கு சங்கானை பிரதேச செயலகத்தினர், வலிகாமம் மேற்கு பிரதேச சபையினர், சங்கானை பல நோக்கு கூட்டுறவு சங்கத்தினர், மானிப்பாய் பொலிஸார், வட்டுக்கோட்டை பொலிஸார், முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத்தினர், அந்திரான் தோற்பொருள் உற்பத்தி கூட்டுறவு சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர். போதைக்கு எதிராக சங்கானையில் மாபெரும் கவனவீர்ப்பு போராட்டம்!
  2. வடமராட்சியில் நடைபெற்ற மாபெரும் வர்த்தக சந்தை! யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, போக்கறுப்பில் இன்று (26) மாபெரும் வர்த்தக சந்தை காலை 9 மணியளவில் ஆரம்பமானது. இச் சந்தையானது வடக்கு மாகாண தொழிற்துறை திணைக்களம் மற்றும் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தின் நிதிப் பங்களிப்பில் இடம்பெற்றது. நிகழ்வானது விருந்தினர்கள் வரவேற்கப்பட்டு, மங்கள விளக்கேற்றி, வரவேற்பு நடனத்துடன் தமிழர் பாரம்பரிய முறைப்படி இடம்பெற்றது. இச்சந்தை நிகழ்வில் வடமராட்சி கிழக்கு உள்ளுர் வர்த்தகர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் தமது கைவினை பொருட்கள் மற்றும் உலர் உணவுகள், மரக்கறி வகைகள், ஆடைகள் என்பவற்றை காட்சிப்படுத்தி தமது வர்த்தக நடவெடிக்கைகளை மேற்கொண்டனர். இந்நிகழ்வில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் குமாரசாமி பிரபாகரமூர்த்தி, சமூர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் கணைச்செல்வன், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
  3. “அணையா விளக்கில்” அமைச்சரை தடுத்தது தவறு - வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத் தலைவி தெரிவிப்பு! செம்மணி மனிதப் புதைகுழிக்கான போராட்டத்தில் கலந்துகொள்ள வருகை தந்த அமைச்சர் சந்திரசேகரனை சிலர் தடுத்தமை கண்டிக்கத்தக்க விடயம் என வடக்கு-கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி கனகரஞ்சினி தெரிவித்துள்ளார். நேற்று யாழ்ப்பாணம் வருகை தந்த ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்டர் ரட்க்கை சந்தித்தபின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்:- செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் உரிய முறையில் விசாரணை செய்யப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். அதனை வலியுறுத்தி இடம்பெற்ற போராட்டத்தில் அமைச்சர் சந்திரசேகரன் கலந்து கொண்டிருந்த வேளையில் சிலர் அவரை தடுத்தனர் அது தவறு அதற்கு நாம் மனம் வருந்துகிறோம். செம்மணி மனிதப்புதைகுழிக்கு நீதி வேண்டி போராடும் தாய்மார்கள் என்ற வகையில் எமது நீதிக்கான பயணத்தில் ஒன்றிணைவபவர்களை புறக்கணிப்பது எமது நோக்கம் அல்ல. அமைச்சர் எமது போராட்டத்திற்கு வருகை தந்தது நீதியை எதிர்பார்த்து காத்திருக்கின்ற எமக்கு சாதகமான விடயம் அவரும் இந்த போராட்டத்திற்கு கலந்து கொண்டவராய் பொறுப்பு கூறுவதாக இருக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார். “அணையா விளக்கில்” அமைச்சரை தடுத்தது தவறு - வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத் தலைவி தெரிவிப்பு!
  4. 26 Jun, 2025 | 03:01 PM முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி , மூன்று மகள்கள் மற்றும் மருமகனுக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கொழும்பு மேல்நீதிமன்றில் இன்று வியாழக்கிழமை (26) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த குற்றப்பத்திரிகையில் 43 குற்றச்சாட்டுக்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கெஹெலியவின் குடும்பத்துக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் | Virakesari.lk கெஹெலிய உள்ளிட்ட 12 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் 26 Jun, 2025 | 05:15 PM முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 12 பேருக்கு எதிராக சட்டமா அதிபர் இன்று வியாழக்கிழமை (26) கொழும்பு மேல் நீதிமன்ற விசேட விசாரணைக் குழுவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார். தரமற்ற இம்யூனோ குளோபுலின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்தமை தொடர்பில் இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த குற்றப்பத்திரிகையில் 13 குற்றச்சாட்டுக்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. 2022 ஆம் ஆண்டு சுகாதார அமைச்சினால் இலங்கையில் தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளின் விசாரணைகளில் அடிப்படையில், தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்த சம்பவத்தின் பிரதான குற்றவாளிகளாக முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 12 பேரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டன. பிரதான குற்றவாளிகளில் 10 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். இந்நிலையில், தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்தமை தொடர்பில் சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்ற விசேட விசாரணைக் குழுவில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார். இந்த குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் குறித்த வழக்கு விசாரணைக்காக 350க்கும் மேற்பட்ட சாட்சியாளர்கள் கொழும்பு மேல் நீதிமன்ற விசேட விசாரணைக் குழுவில் முன்னிலையாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தரமற்ற ஹியூமன் இம்யூனோ குளோபியுலின் தடுப்பூசியை கொள்வனவு செய்ததன் மூலம் அரசாங்கத்திற்கு பல கோடி ரூபா நட்டம் ஏற்படுத்தியமை மற்றும் நோயாளர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவித்ததாக அயுசுலேட் பயோ டெக் பார்மா நிறுவனத்தின் உரிமையாளர் சுகத் ஜனக பெர்ணான்டோ, சுகாதார அமைச்சின் மருத்துவ வினியோக பிரிவின் பணிப்பாளராக இருந்த வைத்தியர் கபில விக்ரமநாயக்க, மருத்துவ வினியோக பிரிவின் பிரதிப் பணிப்பாளர் சாந்த்தனி சொலமன், கணக்காளர் ( விநியோகம்) நெரான் தனஞ்சய,கை இருப்பு கட்டுப்பாட்டாளர் சுஜித் குமார, சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக சிறி சந்ர குப்த, வைத்திய விநியோக பிரிவின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் ஹேரத் முதியன்சலாகே தர்மசிறி ரத்னகுமார ஹேரத், முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, அவசர கொள்முதல் நடவடிக்கைகள் குறித்த கொள்முதல் குழுவின் உறுப்பினர் வைத்தியர் ஜயநாத் புத்பிட்டிய, சுகாதார அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க, மருத்துவ வினியோகபிரிவின் பணிப்பாளர்களில் ஒருவரான வைத்தியர் அரம்பேகெதர துஷித்த சுதர்ஷன ஆகியோர் சந்தேக நபர்களாக சி.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்டு மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட நிலையில், அது குறித்த விசாரணைகள் தொடர்ந்தன. சி.ஐ.டி.யினர் விசாரணைகள் நிறைவு செய்யப்பட்டதாக குற்றவியல் சட்டக் கோவையின் 120/3 ஆம் அத்தியாயம் பிரகாரம் அறிக்கைச் சமர்ப்பித்தனர். இந்த நிலையில் இவ்வழக்கில் முதல் சந்தேக நபரான பயோ டெக் பார்மா நிறுவனத்தின் உரிமையாளர் சுகத் ஜனக பெர்ணான்டோ தொடர்ந்த்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் ஏனையோர் பிணையில் உள்ளனர். மேலும் கடந்த வாரம் இவ்வழக்கு மாளிகாந்த நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு வந்த போது சி.ஐ.டி. அதிகாரிகளுடன் மன்றில் ஆஜரான பிரதி சொலசீட்டர் ஜெனரால் லக்மினி கிரிஹாகம ஆய்வுக்காக‌ வழங்கப்பட்ட மருந்த்து மாதிரிகளின் உள்ளடக்கம் குறித்து நீதிமன்றத்திற்கு பகுப்பாய்வு அறிக்கையை சமர்ப்பித்து உப்பு நீர் மற்றும் பாக்டீரியாவால் மாசுபட்ட கரைசலை வழங்க அரசாங்கம் 14.44 மில்லியன் ரூபா செலவிட்டுள்ளதாக தெரிவித்தார். அத்துடன் இந்த தரமற்ற‌ மருந்து கொடுக்கல் - வாங்கல் தொடர்பாக‌ முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிரான சி.ஐ.டி. விசாரணைகள் நிறைவு பெற்றுள்ளதாகவும் அறிவித்தார்.இது தொடர்பில் மாளிகாகந்த நீதிவான் லோச்சனி அபேவிக்ரமவுக்கு சி.ஐ.டி. குற்றவியல் நடைமுறை சட்டக் கோவையின் விதிவிதாங்களின் படி இறுதி அறிக்கையை கையளித்தது. அதன்படி கெஹலிய உள்ளிட்ட சந்தேக நபர்கள் தொடர்புபட்டு தருவிக்கப்பட்ட தரமற்ற சுவாச நோயாளர்களுக்கு வழங்கபப்டும் ஹியூமன் இம்யூனோ குளோபியுலின் மருந்தில் மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் விஷம் அடங்கிய பாக்டீரியா உள்ளடங்கியுள்ளதாக உலக சுகாதார அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட ஜெர்மனி நாட்டின் ஆய்வகத்திலிருந்து அறிக்கை கிடைக்கப் பெற்றுள்ளதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரால் லக்மினி கிரிஹாகம மன்றில் தெரிவித்தார். இதனைவிட குறித்த விசாரணையுடன் தொடர்புபட்ட புற்று நோயாளர்களுக்கு வழங்கப்படும் ' ரிடொக்ஸி மெப்' எனும் மருந்தின் உள்ள‌டக்கத்தில் புற்று நோயுடன் போராடக் கூடிய எந்த புரோட்டினும் உள்ளடங்கியிருக்கவில்லை எனவும் வெறும் சோடியம் குளோரைட் மட்டுமே அதில் அடங்கியிருந்ததாகவும் அந்த ஆய்வு கூட அறிக்கைகள் உறுதி செய்துள்ளதாகவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் லக்மினி கிரிஹாகம குறிப்பிட்டார். இந்த பின்னிணயிலேயே இந்த விடயத்துடன் தொடர்புடைய முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட பிரதிவாதிகள் 12 பேருக்கு எதிராக சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார். மேலும் இந்த வழக்கை விசாரிக்க‌ மூவரடங்கிய நீதிபதிகள் குழாமும் நியமிக்கப்பட்டுள்ளது. சட்ட மாஅதிபர் பாரிந்த ரணசிங்க‌ பிரதம நீதியரசர் முர்து பெர்ணான்டோ விடம் விடுத்த எழுத்து மூல வேண்டுகோளை பரிசீலித்து இந்த நீதிபதிகள் குழாம் நியமிக்கப்பட்டுள்ளது.பிரதிவாதிகளுக்கு எதிரான வழக்கை நிரந்தர மேல் நீதிமன்றில் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் விசாரிக்க வேண்டும் என்று சட்டமா அதிபர் பிரதம நீதியரசரிடம் கோரிக்கை விடுத்திருந்தார். அதன்படி இந்த மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் மஹேன் வீரமன் அமாலி ரணவீர பிரதீப் அபேரத்ன ஆகியோர் அடங்கிய நீதிபதிகளை கொண்டதாக பிரதம நீதியரசரால் பெயரிடப்பட்டுள்ளது. அரசுக்கு ஏற்பட்ட இழப்பு மற்றும் பொதுமக்களுக்கு ஏற்பட்ட தீங்கைக் கருத்தில் கொண்டு இந்த வழக்கை 1978 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க நீதிச் சேவை சட்டத்துக்குஇ 2018 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க திருத்தச் சட்டத்தின் பிரகாரம் ஒரு சிறப்பு வழக்காகக் கருதி நிரந்தர மூன்று பேர் கொண்ட மேல் நீதிமன்ற அமர்வு முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிட வேண்டும் என்று சட்டமா அதிபர் கோரியிருந்தார். இதற்கமைய பிரதம நீதியரசர் நீதிபதிகளை நியமித்த நிலையில் சட்டமா அதிபர் பிரதிவாதிகளுக்கு எதிராக இந்த குற்றப்பத்திரிகை தாக்கல்ச் செய்துள்ளார். தரமற்ற ஹியூமன் இம்யூனோ குளோபியுலின் தடுப்பூசியை கொள்வனவு செய்ததன் மூலம் அரசாங்கத்திற்கு பல கோடி ரூபா நட்டம் ஏற்படுத்தியமை மற்றும் நோயாளர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவித்ததாக அயுசுலேட் பயோ டெக் பார்மா நிறுவனத்தின் உரிமையாளர் சுகத் ஜனக பெர்ணான்டோ, சுகாதார அமைச்சின் மருத்துவ வினியோக பிரிவின் பணிப்பாளராக இருந்த வைத்தியர் கபில விக்ரமநாயக்கஇ மருத்துவ வினியோக பிரிவின் பிரதிப் பணிப்பாளர் சாந்த்தனி சொலமன் கணக்காளர் ( விநியோகம்) நெரான் தனஞ்சயஇகை இருப்பு கட்டுப்பாட்டாளர் சுஜித் குமாரஇ சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக சிறி சந்ர குப்த வைத்திய விநியோக பிரிவின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் ஹேரத் முதியன்சலாகே தர்மசிறி ரத்னகுமார ஹேரத்இ முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அவசர கொள்முதல் நடவடிக்கைகள் குறித்த கொள்முதல் குழுவின் உறுப்பினர் வைத்தியர் ஜயநாத் புத்பிட்டியஇ சுகாதார அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க மருத்துவ வினியோகபிரிவின் பணிப்பாளர்களில் ஒருவரான வைத்தியர் அரம்பேகெதர துஷித்த சுதர்ஷன ஆகியோருக்கு எதிராகவே வழக்கு தொடர சட்ட மா அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளார். கெஹெலிய உள்ளிட்ட 12 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் | Virakesari.lk
  5. வார இறுதி நாள்களில் சேவையை மேற்கொண்ட கடுகதி புகையிரத சேவை யூலை 7 முதல் தினசரி சேவையாக முன்னெடுக்கப்படும் - யாழ்ப்பாணம் பிரதான புகையிரத நிலைய அத்தியட்சகர் ரீ.பிரதீபன்! 6 Jun, 2025 | 03:46 PM இதுவரை காலமும் வார இறுதி நாள்களில் சேவையை முன்னெடுத்து வரும் குளிரூட்டப்பட்ட நகர் சேர் கடுகதி புகையிரத சேவையை எதிர்வரும் 7 ஆம் திகதிமுதல் தினசரி சேவையாக கல்கிசையிலிருந்து காங்கேசன்துறை வரை முன்னெடுக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாணம் பிரதான புகையிரத நிலைய அத்தியட்சகர் ரீ.பிரதீபன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ஊடகங்களுக்கு இன்று வியாழக்கிழமை (26) கருத்து கூறுகையில், பொதுமக்களால் புகையிரத திணைக்களம் மற்றும் துறைசார் தரப்பினரிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக குறித்த சேவை முன்னெடுக்கப்படவுள்ளது. இதுவரைகாலமும் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் குறித்த புகையிரதம் தனது சேவையை முன்னெடுத்துவந்தது. இந்நிலையில் எதிர்வரும் 7 ஆம் திகதிமுதல் கல்கிசை புகையிரத நிலையத்தில் இருந்து காலை 5.15 மணிக்கு தகது சேவையை முன்னெடுப்பதுடன் கொழும்பு கோட்டையிலிருந்து 5.45 யாழ்ப்பாணத்தை நோக்கி பயணிப்பதுடன் யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தை மதியம் 11.49 வந்தடையவுள்ளது. அதன்பின்னர் காங்கேசன்துறையை 12.13 சென்றடையும். மீண்டும் மாலை 1.50 க்கு காங்கேசன்துறையிலிருந்து தனது பயணத்தை ஆரம்பிக்கும் குறித்த புகையிரதம் யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திலிருந்து 2.12 புறப்பட்டு கொழு்ம்பு கோட்டையை முன்னிரவு இரவு 8.33 சென்றடையும். அதேவேளை கல்கிசையை முன்னிரவு இரவு 8.55 சென்றடையும் ஒழுங்கில் சேவையை முன்னெடுக்கவுள்ளது. இதேநேரம் குறித்த கடுகதி புகையிரத சேவைக்கான ஆசன முற்பதிவுகள் அடுத்த ஒருசில தினங்களில் மேற்கொள்ள முடியும் என்று தெரிவித்திருந்த யாழ்ப்பாணம் புகையிரத நிலைய அத்தியட்சகர் அதனை புகையிரத திணைக்களத்தின் அதிகாரபூர்வ இணையத்தில் முன்னெடுக்க முடியும் என்றும் குறிப்பிட்டார். இதேவேளை இதுவரைகாலமும் 5.45 க்கு கொழு்ம்பிலிருந்து யாழ்ப்பாணத்தை நோக்கி புறப்பட்ட யாழ் தேவி புகையிரதமானது எதிர்வரும் 7 ஆம் திகதிமுதல் காலை 6.35 மணிக்கு தனது சேவையை ஆரம்பிக்கும் என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. வார இறுதி நாள்களில் சேவையை மேற்கொண்ட கடுகதி புகையிரத சேவை யூலை 7 முதல் தினசரி சேவையாக முன்னெடுக்கப்படும் - யாழ்ப்பாணம் பிரதான புகையிரத நிலைய அத்தியட்சகர் ரீ.பிரதீபன்! | Virakesari.lk
  6. 26 Jun, 2025 | 04:47 PM கிளிநொச்சி குடமுருட்டி பாலத்திற்கு அருகில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து எரிபொருள் தாங்கி வாகனம் இன்று வியாழக்கிழமை (26) அதிகாலை தடம் புரண்டுள்ளது. முத்துராஜவெலவிலிருந்து காங்கேசன்துறை நோக்கி பூநகரி வீதியால் பயணித்த குறித்த எரிபொருள் தாங்கி இன்று அதிகாலை 1.மணிக்கு தடம்புரண்டது. குறித்த விபத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை பெருமளவான டீசல் வெளியேறிதனால் பொது மக்கள் அவற்றை எடுத்துச் சென்றுள்ளனர்.
  7. 26 Jun, 2025 | 04:55 PM வலி வடக்கில் விவசாயத் தேவைக்காக விடுவிக்கப்பட்ட மக்களின் காணிகளுக்கு அண்மையாக அமைந்துள்ள இராணுவ வேலியை பின்நகர்த்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஆளுநர் , யாழ் . மாவட்ட கட்டளை தளபதியிடம் கோரியுள்ளார். வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதியாகப் பொறுப்பேற்றுள்ள மேஜர் ஜெனரல் ராசிக குமார இன்றைய தினம் வியாழக்கிழமை (26) ஆளுநர் செயலகத்தில் சந்தித்தார். சந்திப்பின்போது, வடக்கு மாகாண ஆளுநரால் கடந்த ஆண்டு விவசாயத் தேவைக்காக விடுவிக்கப்பட்ட மக்களின் காணிகளுக்கு அண்மையாக அமைந்துள்ள இராணுவ வேலியை பின்நகர்த்துவதற்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதற்குரிய நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெறாத போதிலும் தற்காலிக பின்னரங்க வேலியை அமைக்கப்பட்டு வருவதாகவும் ஆளுநருக்கு தெரியப்படுத்தப்பட்டது. மேலும், மக்களிடம் காணிகளை மீளக்கையளிக்கும்போது அங்கு களவுகள் இடம்பெறுவதாக மக்களிடமிருந்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுகின்றன என்பதைச் சுட்டிக்காட்டிய ஆளுநர் அதற்கு அமைவான பாதுகாப்பு முன்னேற்பாடுகளுடன் அவற்றைக் கையளிப்பதற்குரிய நடவடிக்கை எடுக்குமாறும் கோரினார். வடக்கில் நிலவும் உயிர்கொல்லி போதைப்பொருள் பாவனை தொடர்பிலும் இராணுவத் தளபதி ஆளுநரிடம் கேட்டறிந்து கொண்டார். உயிர்கொல்லி போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கான புனர்வாழ்வு நிலையத்தை யாழ்ப்பாணத்தில் ஆரம்பிப்பதற்குரிய நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது எனவும் ஆளுநர் சுட்டிக்காட்டினார். இந்தச் சந்திப்பின் இறுதியில் நினைவுச் சின்னங்களை ஆளுநரும், இராணுவத் தளபதியும் பரிமாறிக்கொண்டனர். வலி. வடக்கில் விடுக்கப்பட்டுள்ள காணிகளுக்கு அருகில் உள்ள இராணுவத்தின் முன்னரங்க வேலிகளை நகர்த்த கோரிக்கை | Virakesari.lk
  8. 26 Jun, 2025 | 05:46 PM பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, பொதுநலவாயக் கல்வி அமைப்பின் (COL) நிர்வாகக் குழுக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக 2025 ஜூன் 24 ஆம் திகதி கனடாவின் வான்கூவர் நகரை சென்றடைந்தார். அங்கு அவர் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண அரசாங்கம், பொதுநலவாயக் கல்வி அமைப்பு மற்றும் கனடாவின் உலகளாவிய விவகாரங்கள் (Global Affairs Canada) ஆகியவற்றின் ஒருங்கிணைப்புடன், ஒட்டாவாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் சிரேஷ்ட அதிகாரிகளால் அன்புடன் வரவேற்கப்பட்டார். அத்தோடு, பிரிட்டிஷ் கொலம்பியாவின் சர்ரே நகரில் ஏற்பாடுச் செய்யப்பட்டிருந்த "கலாநிதி ஹரினி அமரசூரியவுடன் ஒரு மாலைப்பொழுது" எனும் தலைப்பிலான சிறப்பு சமூக கலந்துரையாடலில் கலந்துகொண்டார். இந்நிகழ்வு, கனடாவில் வசிக்கும் சமயத் தலைவர்களுக்கும் இலங்கை சமூகத்தினருக்கும் பிரதமருடன் கலந்துரையாடுவதற்கான ஒரு அரிய வாய்ப்பாக அமைந்தது. "கலாநிதி ஹரினி அமரசூரியவுடன் ஒரு மாலைப்பொழுது" - கனடாவில் பிரதமர் | Virakesari.lk
  9. செம்மணி சிந்துபாத்தி மையானத்தில் குழந்தை உட்பட மூன்று மனித சிதிலங்கள் மீட்கப்பட்டுள்ளது 26 Jun, 2025 | 07:28 PM செம்மணியின் இரண்டாம் கட்ட அகழ்வுப்பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் குழந்தை உட்பட மூன்று மனித சிதிலங்கள் வியாழக்கிழமை (26) மீட்கப்பட்டுள்ளது. செம்மணி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுகளுக்கான நிதி விடுவிக்கப்பட்டுள்ளது என்ற உத்தரவாதத்திற்கு அமைய வியாழக்கிழமை (26) இரண்டாம் கட்ட அகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டது நிலையில் குழந்தையின் மண்டையோட்டுத் தொகுதி உட்பட மூன்று மனித சிதிலங்கள் மீட்கப்பட்டுள்ளது. செம்மணி, சிந்துப்பாத்தி இந்து மயானத்தில் கடந்த பெப்ரவரி மாதம் அடையாளம் காணப்பட்ட மனிதப்புதைகுழியில் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அகழ்வுகள் இடம் பெற்றன. மூன்று குழந்தைகளின் மனிதச் சிதிலங்கள் உட்பட 19 மனிதச் சிதிலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், அந்தப் புதை குழி மனிதப் புதைகுழியாக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டது. அத்துடன் 45 நாட்களுக்கு இரண்டாம் கட்ட அகழ்வுகளை மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கி இருந்தது. இதன்படி அகழ்வுகளுக்கான செலவீன பாதீடு சமர்ப்பிக்கப் பட்ட நிலையில், அதற்கான நிதி ஒதுக்கீடுகள் கிடைக்கப்பெற்றும் என்ற உத்தரவிற்கு அமைய வியாழக்கிழமை (26) இரண்டாம் கட்ட அகழ்வுகளை முன்னெடுக்கப்பட்டது. இன்றைய தினத்துடன் இதுவரை 22 மனித சிதிலங்கள் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து 45 நாட்களுக்கு பாதீட்டு அளவு உள்ளதால் முதல் 15 நாட்களுக்கு அகழ்வு பணிகள் சிறிய இடைவெளி விட்டு மீண்டும் தொடர்ந்து நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. செம்மணி சிந்துபாத்தி மையானத்தில் குழந்தை உட்பட மூன்று மனித சிதிலங்கள் மீட்கப்பட்டுள்ளது | Virakesari.lk
  10. 26 Jun, 2025 | 07:34 PM (இராஜதுரை ஹஷான்) நெருக்கடியான சூழநிலையில் ஹோர்முஸ் நீரிணையை மூடுவதற்கு ஈரான் பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த தீர்மானத்தை செயற்படுத்தினால் உலக பொருளாதாரம் மற்றும் உலக நாடுகளுக்கான எரிபொருள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படும் என்பதால் நெருக்கடியான சந்தர்ப்பத்திலும் இந்த தீர்மானத்தை நாங்கள் அமுல்படுத்தவில்லை என இலங்கைக்கான ஈரானிய தூதுவர் கலாநிதி அலிரேசா டெல்கோஷ் தெரிவித்தார். மனிதப் படுகொலை மற்றும் ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிராக ஒட்டுமொத்த இஸ்லாமிய நாடுகளும் குரல் கொடுக்க வேண்டும். உலக அமைதியை ஈரான் என்றும் வலியுறுத்துகிறது. இருப்பினும் எமது தேசியம் மற்றும் இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் அதற்கு எதிராக போராடும் பொறுப்பு எமக்கு உண்டு எனவும் ஈரானிய தூதுவர் குறிப்பிட்டார். கொழும்பில் உள்ள ஈரானிய தூதரகத்தில் வியாழக்கிழமை (26) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, சர்வதேச யுத்த சட்டங்களுக்கு எதிராகவே இஸ்ரேல் செயற்படுகிறது. காஸாவின் உண்மை நிலையை சகல உலக நாடுகள் நன்கறியும்.அங்கு நாளாந்தம் சிறுவர்கள், பெண்கள், வயோதிபர்கள் உட்பட சிவில் பிரஜைகள் கொல்லப்படுகிறார்கள். மனிதப் படுகொலை மற்றும் ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிராக ஒட்டுமொத்த இஸ்லாமிய நாடுகளும் குரல் கொடுக்க வேண்டும்.அனைவருக்கும் பொதுவான கடப்பாடுகள் உள்ளன. உலக நாடுகளின் அமைதியை ஈரான் என்றும் வலியுறுத்துகிறது. அனைத்து பிரச்சினைகளுக்கும் இராஜதந்திர மட்டத்தில் தீர்வு காண முடியும் என்ற நிலைப்பாட்டில் என்றும் உறுதியாகவுள்ளோம்.இருப்பினும் ஒருசில நாடுகள் இராஜதந்திர கொள்கையை பின்பற்றவில்லை. எமது தேசிய மற்றும் இறையாண்மையை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எமக்கு உண்டு. ஈரான் நாட்டு மக்களின் அபிலாசைகளுக்கு அமைவாகவே செயற்படுகிறது. மக்களின் அபிலாசைகளும்,அரச தீர்மானங்களும் தற்போதைய நிலையில் ஒருமித்ததாக உள்ளது. நெருக்கடியான சூழநிலையில் ஹோர்முஸ் நீரிணையை மூடுவதற்கு ஈரான் பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த தீர்மானத்தை செயற்படுத்தினால் உலக பொருளாதாரம் மற்றும் உலக நாடுகளுக்கான எரிபொருள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படும் என்பதால் நெருக்கடியான சந்தர்ப்பத்திலும் இந்த தீர்மானத்தை நாங்கள் அமுல்படுத்தவில்லை. தற்போதைய நெருக்கடியான சூழலில் இலங்கை ஈரானுடன் இணக்கமாக பொதுவான வெளிவிவகார கொள்கையில் செயற்பட்டுள்ளது.இலங்கை எமது வரலாற்று ரீதியிலான நண்பன் என்றே குறிப்பிட வேண்டும்.இலங்கையின் ஏற்றுமதிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என்றார். மனிதப் படுகொலை, ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிராக ஒட்டுமொத்த இஸ்லாமிய நாடுகளும் குரல் கொடுக்க வேண்டும் - இலங்கைக்கான ஈரானிய தூதுவர் | Virakesari.lk
  11. தேசிய விருது வென்ற இயக்குநர் நாகேஷ் குக்குனூர், ராஜீவ் காந்தி கொலை வழக்கு பற்றிய வெப் தொடரை இயக்கியுள்ளார். புலனாய்வு பத்திரிகையாளரான அனிருத்யா மித்ராவின் புத்தத்தைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது. Published:20 Jun 2025 9 PMUpdated:20 Jun 2025 9 PM ராஜீவ் காந்தி கொலை வழக்கு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலையை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள The Hunt - The Rajiv Gandhi Assassination Case (வேட்டை - ராஜீவ்காந்தி கொலை வழக்கு) சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகவிருக்கிறது. இந்தத் தொடரை குக்குனூர் மூவீஸுடன் இணைந்து அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. Ninety Days : The True Story of the Hunt for Rajiv Gandhi's Assassins ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பலகோணங்களில் கதைகள் இருக்கும் சூழலில், புலனாய்வு பத்திரிகையாளரான அனிருத்யா மித்ராவின் Ninety Days : The True Story of the Hunt for Rajiv Gandhi's Assassins (தொண்ணூறு நாள்கள்: ராஜிவ் காந்தியின் கொலையாளிகளைத் தேடிய உண்மைக் கதை) என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தொடரை உருவாக்கியுள்ளனர். இந்தத் தொடரில், அமித் சியால், சாஹில் வைத், பகவதி பெருமாள், டேனிஷ் இக்பால், கிரிஷ் சர்மா, வித்யுத் கார்கி, ஷபீக் முஸ்தபா, அஞ்சனா பாலாஜி, பி. சாய் தினேஷ், ஸ்ருதி ஜயன், கௌரி மேனன் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தை ஏற்றுள்ள அமித் சியால், "இது வெறும் க்ரைம் விசாரணை ட்ராமா இல்லை, எப்படிக் கண்ணுக்குப் புலப்படாத கைகள் வரலாற்றை வடிவமைக்கின்றன என்பதைப் பற்றியது. இந்தக் கதாபாத்திரம் அதிகாரத்தையும் துக்கத்தையும் நீதியின் இருண்ட மூலைமுடுக்குகளையும் ஆராய்வது எனக்குச் சவாலானதாக இருந்தது. உண்மை மற்றும் எதிர்த்து நிற்கும் தன்மையில் வேரூன்றியிருக்கும் ஒரு பாத்திரத்தில் நடித்ததற்குப் பெருமைகொள்கிறேன்" எனப் பேசியுள்ளார். தேசிய விருது வென்ற இயக்குநர் நாகேஷ் குக்குனூர் இந்த வெப் தொடரை இயக்கியுள்ளார். இவருடன் ரோஹித் பனவாலிகர் மற்றும் ஸ்ரீராம் ராஜன் ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். வருகின்ற ஜூலை 4ம் தேதி இந்தத் தொடர் வெளியாகவிருக்கிறது. Also Read ராஜீவ் காந்தி கொலை வழக்கு: "வரலாற்றை வடிவமைக்கும் கைகள்..." - வெப் சீரிஸ் எப்போது வெளியீடு? - Vikatan
  12. Editorial / 2025 ஜூன் 19 , பி.ப. 02:58 - 0 - 35 முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மேலும் இரண்டு மகள்களான சமித்ரி ஜெயனிகா ரம்புக்வெல்ல மற்றும் அமலி நயனிகா ரம்புக்வெல்ல ஆகியோரும் அமலியின் கணவரும் பணமோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பான இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு வின் கூற்றுப்படி, ரூ. 134 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள அறிவிக்கப்படாத சொத்துக்கள் தொடர்பான விசாரணை முன்னெடுக்கப்படுகின்றது.இதில் ரூ. 40 மில்லியன் மதிப்புள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், ரூ. 20.5 மில்லியன் மதிப்புள்ள பென்ஸ் கார் மற்றும் ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கிட்டத்தட்ட 40 நிலையான வைப்பு கணக்குகள் மற்றும் ஆயுள் காப்பீட்டு முதலீட்டுத் திட்டங்கள் ஆகியவை அடங்கும். மூன்று சந்தேக நபர்களும் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு முன்னாள் அமைச்சர் ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மற்றொரு மகளையும் செவ்வாய்க்கிழமை (17) கைது செய்தது. அவர்கள் புதன்கிழமை (18) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்யத் தவறியதால், விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். Tamilmirror Online || கெஹெலியவின் மேலும் இரண்டு மகள்கள், மருமகன் கைது
  13. முன்னாள் ஜனாதிபதிகள் மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் அமைச்சர்கள் பசில் ராஜபக்ஷ, ஹரிசன், விஜித் விஜிதமுனி டி சொய்சா, லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மற்றும் லக்ஷ்மன் வசந்த பெரேரா ஆகியோர் 110 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள கால்நடை இறக்குமதி ஊழலில் ஈடுபட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நிஹால் கலப்பதி இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இந்த முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அமைச்சர்கள் யாரும் தப்பிக்க மாட்டார்கள் என்று அவர் கூறினார். "அவர்களில் யாருக்கும் எந்த கருணையும் காட்டப்படாது" என்று அவர் கூறினார். பால் கறப்பதற்காக பசுக்களை இறக்குமதி செய்வது என்ற போர்வையில் வயதான பசுக்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். Tamilmirror Online || மஹிந்த, மைத்திரி, ரணில், பசில்: கால்நடை ஊழலில் சிக்குவர்
  14. தெல்லிப்பழைப் பிரதேசத்தில் காணப்படுகின்ற பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகளைப் பாதுகாப்பான புகையிரதக் கடவைகளாக சீரமைத்துத்தருமாறு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதன்போது கருத்துத் தெரிவித்த அதிகாரிகள், தெல்லிப்பழைப் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஜே/213 கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள செல்லத்துரை வீதியில் சமிக்ஞை விளக்கு மாத்திரம் காணப்படுகின்றது. சுமார் 500 முதல் 550 பயணிகள் வரை இந்த வீதியைப் பயன்படுத்துகிறார்கள். ஜே/227 கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள கோயில்குளம் வீதியில் 1000 முதல் 1500 பயணிகள் வரை வீதியைப் பயன்படுத்துகின்றார்கள். ஆனால் புகையிரதக்கடவைக்கு சமிக்ஞையும் பாதுகாப்புக் கடவையும் இல்லை. ஜே /234 கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள சந்தை வீதியில் காங்கேசன்துறை ரயில் நிலையத்துக்குரிய பாதுகாப்புக்கடவை சமிக்ஞை இல்லை. ஜே / 235 கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள குரு வீதியில் காங்கேசன்துறை ரயில் நிலையத்துக்குரித்தான ரயில் கடவையை 200 முதல் 225 வரையான பயணிகள் பயன்படுத்துகின்றனர். இதில் சமிக்ஞை விளக்குள்ள பொழுதிலும் பாதுகாப்புக்கடவை இல்லை. ஜே/236 கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள மாவிட்டபுரம் மயிலிட்டி வீதியில் அமைந்துள்ள மாவிட்டபுரம் புகையிரத நிலையத்துக்குரிய ரயில் கடவையை 500 முதல் 600 வரையான பயணிகள் பயன்படுத்தும் நிலையில் சமிக்ஞை விளக்கு மாத்திரமே உள்ளது. ஆனால் பாதுகாப்புக்கடவை காணப்படவில்லை. ஜே/237 கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள பொன்னு சீமா வீதியிலுள்ள ரயில் கடவை 100 முதல் 125 பயணிகள் வரை பயன்படுத்துகின்றனர். சமிக்ஞை விளக்குள்ள பொழுதிலும் பாதுகாப்புக் கடவை இல்லை. இதுவரை இந்தக் கடவைகளில் 4 விபத்துகள் பதிவு செய்யப்பட் டுள்ளதுடன் ஓர் உயிரிழப்பும் பதிவாகியுள்ளது. இவை குறித்து விரைந்து நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்றும் சுட்டிக்காட்டினர். தெல்லிப்பழைப்பிரதேசத்தில் பாதுகாப்பற்ற ரயில் கடவைகள்; சீரமைத்துத் தருமாறு பொதுமக்கள் கோரிக்கை!
  15. வலி. மேற்கு பிரதேசசபையில் உறுப்பினர் ஒருவர் வாக்கினை தவறாக அளித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு கூட்டம் இன்றையதினம் நடைபெற்றது. இதன்போது இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினர் ச.ஜெயந்தனும், தமிழ் தேசிய பேரவையின் உறுப்பினர் சுப்பிரமணியம் தர்மலிங்கம் நந்தகுமாரும் போட்டியிட்ட நிலையில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் உறுப்பினர் ஒருவர் சுப்பிரமணியம் தர்மலிங்கம் நந்தகுமாருக்கு அளிக்கவேண்டிய வாக்கினை ச.ஜெயந்தனுக்கு அளித்துள்ளார். பின்னர் அந்த வாக்கினை மாற்றுமாறு அந்த உறுப்பினர் கோரிக்கை விடுத்த நிலையில் வாக்கு பதிவு செய்யப்பட்டதால் அதனை மாற்றம் செய்ய முடியாது என வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் திருமதி தேவநந்தினி பாபு தெரிவித்துள்ளார். தவறாக வாக்கினை அளித்த உறுப்பினர்!
  16. வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு இன்றையதினம் நடைபெற்றது. அந்த வகையில் சண்முகநாதன் ஜெயந்தன் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார். அதன் பின்னர் இலங்கை தமிழரசு கட்சியின் பதில் பொது செயலாளர் மற்றும் புதிய தவிசாளர் ச.ஜெயந்தன் ஆகியோர் இணைந்து, வலி. மேற்கு பிரதேச சபையின் வளாகத்தில் உள்ள முன்னாள் எதிர்கட்சி தலைவர் அமிர்தலிங்கத்தின் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்தனர். அமிர்தலிங்கத்தின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை!
  17. 18 Jun, 2025 | 04:32 PM முள்ளிவாய்க்கால் பேரவலத்தை அரங்கேற்றிய தரப்புகளுடன் இணைந்து, அந்த அழிவை ஆதரித்த டக்ளஸ் தேவானந்தா போன்றவர்களுடன் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைக்கும் நரித்தனமான அரசியல் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படுகிறது என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் குற்றஞ்சாட்டினார். பாராளுமன்றத்தில் நேற்று (17) உரையாற்றிய அவர் இது தொடர்பாக மேலும் கூறியதாவது: உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் நாங்கள் யாருடனும் கூட்டு சேரவில்லை. எங்களுக்கான ஆதரவு வழங்கப்பட்டு வருகிறது. முள்ளிவாய்க்கால் பேரவலத்தை அரங்கேற்றிய தரப்புகளுடன் சேர்ந்துகொண்டு - அந்த அழிவை ஆதரித்த டக்ளஸ் தேவானந்தா போன்றவர்களுடன் இணைந்து ஆட்சி அமைக்கும் நரித்தனமான அரசியலை நடத்தும் நபர்களாக சிலர் மாறியுள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சஜித் அணி தொடர்பில் கடந்த காலங்களில் பாரிய விமர்சனங்களை முன்வைத்தவர்கள், அவர்களுடன் சேர்ந்து தமது அரசியலை முன்னெடுக்கும் கேவலமான நிலை உள்ளது. இப்படியானவர்களே எமக்கு எதிராக போலியான பிரச்சாரத்தை தமிழ் மக்கள் மத்தியில் கொண்டு செல்கின்றனர் என்றார். நரித்தனமான அரசியல் யாழ்ப்பாணத்தில் நடத்தப்படுகிறது - இராமலிங்கம் சந்திரசேகர் | Virakesari.lk
  18. 18 Jun, 2025 | 05:13 PM உள்ளூராட்சி மன்ற தேர்தலில் இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்கு கூடுதலான ஆசனங்கள் உள்ள சபைகளில் ஆட்சி அமைப்பதற்கு யாராக இருந்தாலும் ஆதரவு வழங்க வேண்டியது அவர்களின் தார்மீக கடமை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். மன்னாரில் இன்று புதன்கிழமை (18) பகல் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்கு எந்த சபைகளில் அதிகூடிய ஆசனங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டதோ, அந்த சபைகளில் நாங்கள் ஆட்சி அமைப்பதற்கு ஏனைய கட்சிகள் எங்களுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என நாங்கள் கூறி இருந்தோம். இதனை ஒரு கோட்பாடாக நாங்கள் கூறி இருந்தோம். இத்தேர்தலில் மட்டுமல்ல, இதற்கு முன் நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலிலும் கூறியிருந்தோம். பல கட்சிகள் இந்த கோட்பாட்டை ஏற்றுக்கொண்டனர். எந்த கட்சிக்கு அதிக ஆசனங்கள் உள்ளதோ அந்த கட்சி ஆட்சி அமைக்க ஏனைய கட்சிகள் ஆதரவு வழங்க வேண்டும் என்ற கோட்பாட்டை அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். அவ்வாறு பார்க்கின்றபோது வடக்கு, கிழக்கில் இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்கு 35 சபைகளில் அதிகூடிய ஆசனங்கள் இருக்கின்றன. அந்த சபைகளில் நாங்கள் ஆட்சி அமைக்க வேண்டும். இந்த கோட்பாட்டிற்கு இணங்கிய ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அந்த இணக்கப்பாட்டின் அடிப்படையிலே செயற்பட்டிருக்க வேண்டும். மக்கள் ஆணை வழங்கிவிட்டார்கள். எந்த கட்சிக்கு அதிக ஆசனங்கள் கிடைத்துள்ளதோ அந்த கட்சி ஆட்சி அமைக்க வேண்டும் என்றார். இலங்கை தமிழ் அரசுக் கட்சி அதிகூடிய ஆசனங்களைப் பெற்ற சபைகளில் ஆட்சி அமைக்க ஏனைய கட்சிகள் ஆதரவளிக்க வேண்டும் - சுமந்திரன் | Virakesari.lk
  19. 18 Jun, 2025 | 05:35 PM திருகோணமலை - மூதூர் 3ம் கட்டை மலையில் புத்தர் சிலை விவகாரத்தால் கைதான இளைஞனுக்கு இன்று புதன்கிழமை (18) பிணை வழங்கப்பட்டது. மூதூர் 3ம் கட்டை மலையில் விகாராதிபதியினால் அ.ரமேஷ் என்பவருகெதிராக மூதூர் பொலிஸில் செய்த முறைப்பாடு தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டு இன்றைய தினம் மூதூர் நீதான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார். குறித்த ரமேஷ் சார்பாக சிரேஸ்ட சட்டத்தரணி துஷ்யந்தன் மற்றும் சட்டத்தரணி முகுந்தன் ஆகியோர் ஆஜராகி வாதாடினர். இதன்போது சட்டத்தரணி துஷ்யந்தன் குறித்த காணிக்கு அரசினால் வழங்கப்பட்ட ஒப்பம் இருக்கிறது. பலாத்காரமாக 2015 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஆயுதப் படையினர் முகாம் அமைத்து அதில் சிறிய புத்தர் சிலை வைத்து வழிபட்டனர். பின் அவர்கள் அங்கிருந்து 2020 இல் வெளியேறும் போது பிறகு வந்து அச்சிலையை எடுத்து செல்வதாக கூறி சென்றனர். ஆனால் இன்று வரை அது எடுக்கப்படாததால் அந்த இடத்தில் ரமேஷ் புத்தர் சிலையுடன் பிள்ளையார் சிலை வைத்து கடந்த 4 வருடம் வழிபாடு செய்தார். கடந்த பொசன் தினத்தன்று விகாராதிபதி வந்து பிள்ளையார் சிலையை அகற்ற முயன்றார். ரமேஷ் எதிர்த்ததால் அவரை கைது செய்யுமாறு பொலிஸில் முறைப்பாடு செய்தார். இது மத சுதந்திரத்தை மீறும் செயல். இன முறுகலை ஏற்படுத்தும் செயல். எனவே அவரை விடுவிக்குமாறு மன்றை கோரினார். நீதவான் ரமேஷூக்கு பிணை வழங்கி இன முறுகலை ஏற்படுத்தும் செயற்பாடுகளை ஊக்குவிக்க வேண்டாம் என்று பொலிஸாருக்கு அறிவுறுத்தினார். புத்தர் சிலை விவகாரத்தால் கைதான இளைஞனுக்கு இன்று பிணை வழங்கபட்டது..! | Virakesari.lk
  20. 18 Jun, 2025 | 05:42 PM மட்டக்களப்பு வாவியில் நீர்த்தாவரங்கள் அதிகமாக வளர்ந்து காணப்படுவதால் முதலைகள் பெருகிவிட்டதாகவும், இவற்றால் மீனவர்களின் உயிருக்கு ஆபத்து எனவும் இந்த சூழ்நிலையில் முதலையால் இழுத்துச் செல்லப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் மீனவர்கள் அச்சத்தோடு தெரிவித்துள்ளனர். இலங்கையின் இரண்டாவது மிகப் பெரிய வாவியான மட்டக்களப்பு வாவியில் பெருகிவரும் ஆற்றுவாழை எனப்படும் நீர்த்தாவரங்களால் முதலைகளின் பெருக்கமடைந்துள்ளன. அத்துடன் வாவி அழிவடைந்து வருவதாலும் மீனவர்கள் பெரும் கஷ்டங்களை எதிர்கொள்கின்றனர். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இந்த வாவியில் மீன்கள் பாடல் இசைத்ததால், “பாடும் மீன்கள் வாழும் வாவி” என மட்டக்களப்பு வாவி அழைக்கப்படுகிறது. இந்த வாவியில் சுமார் 15 ஆயிரம் மீனவ குடும்பங்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. இந்த வாவியில் ஆற்றுவாழைத் தாவரம் அதிகமாக வளர்ந்துள்ளதால் மீனவர்கள் தோணிகளை செலுத்த முடியாமல் அவதியுறுவதாகத் தெரிவிக்கின்றனர். மேலும், இந்த வாவியில் முதலை, பாம்பு போன்ற மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் உயிரினங்கள் வாழ்வதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர். அண்மையில் இந்த ஆற்றுவாழைகளுக்குள் ஒளிந்திருந்த முதலையொன்று மீனவர் ஒருவரை இழுத்துச் சென்று கொன்றுள்ளதுடன், பல கால்நடைகள் காணாமல் போயுள்ளதாகவும் மீனவர்கள் குறிப்பிடுகின்றனர். இந்த வாவியின் தூய்மையை அழிக்கக்கூடிய ஆற்றுவாழைகளை அகற்றுமாறு மீனவர்கள் உரிய தரப்பினரை கோருகின்றனர். மட்டு. வாவியில் அதிகமாக வளர்ந்துள்ள நீர்த்தாவரங்கள் ; முதலைகள் பெருக்கம் ; மரண பயத்தில் மீனவர்கள்! | Virakesari.lk
  21. வடக்கு ஆளுநர் தலைமையில் முக்கிய அமைச்சுக்களின் திட்ட முன்னேற்றங்களை மதிப்பீடு செய்யும் மாதாந்த கூட்டம் 18 Jun, 2025 | 06:09 PM நிதியும் திட்டமிடலும், சட்டமும் ஒழுங்கும், காணி, மின்சக்தி, வீடமைப்பும் நிர்மாணமும், சுற்றுலா, உள்ளூராட்சி, மாகாண நிர்வாகம், கிராம அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி, மோட்டார் போக்குவரத்து மற்றும் போக்குவரத்து அமைச்சின் கீழ் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் மாதாந்த கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் புதன்கிழமை (18) நடைபெற்றது. இந்த கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், இந்த ஆண்டுக்கு ஒதுக்கப்பட்ட நிதிகளை நேரகாலத்துடன் செலவு செய்து மேலதிக நிதிகளைக் கோரவேண்டும். அதேநேரம் முன்னெடுக்கப்படும் திட்டங்களை திணைக்களத் தலைவர்கள் நேரில் சென்று பார்வையிடவேண்டும். அதேபோன்று எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்களைத் தயாரிக்கும்போதும் களத்துக்குச் சென்று பார்வையிட்டு மக்களுடன் கலந்துரையாடி அதனை முன்னெடுக்குமாறும் ஆளுநர் திணைக்களத் தலைவர்களிடம் கேட்டுக்கொண்டார். மேலும் புதிய கட்டுமானங்களை அலுவலகத் தேவைகளின் நிமிர்த்தம் அமைப்பதை விரும்பவில்லை. அவ்வாறான திட்டங்களை தவிர்த்துக் கொள்ள வேண்டும். தென்பகுதியிலிருந்து வடக்கு நோக்கி வரும் சுற்றுலாவிகள், வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் வரையிலான பிரதேசங்களில் தமது இயற்கை உபாதைகளைப் போக்குவதற்குரிய மலசலகூடங்கள் இல்லாமையைச் சுட்டிக்காட்டிய ஆளுநர் எதிர்காலத்தில் இது தொடர்பில் ஒவ்வொரு உள்ளூராட்சி உதவி ஆணையாளர்களும் கவனம் செலுத்தவேண்டும். இதன் பின்னர் உள்ளூராட்சி அமைச்சு, உள்ளூராட்சித் திணைக்களம், ஒவ்வொரு மாவட்டத்தினதும் உள்ளூராட்சி உதவி ஆணையாளர்கள் அலுவலகம், மாகாண காணித் திணைக்களம், மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களம், மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம், வீதி அபிவிருத்தித் திணைக்களம், சுற்றுலா அதிகார சபை, வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை என ஒவ்வொரு திணைக்களங்களினதும் ஒவ்வொரு திட்டங்களினதும் முன்னேற்றங்கள் பற்றி விரிவாக ஆராயப்பட்டன. இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் தனுஜா முருகேசன், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் மு.நந்தகோபாலன், உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் அ.சோதிநாதன், பிரதிப் பிரதம செயலாளர் - நிதி, திட்டமிடல், பொறியியல், கட்டடங்கள் திணைக்களப் பணிப்பாளர் மற்றும் மாகாண பணிப்பாளர்கள் பங்கேற்றனர். வடக்கு ஆளுநர் தலைமையில் முக்கிய அமைச்சுக்களின் திட்ட முன்னேற்றங்களை மதிப்பீடு செய்யும் மாதாந்த கூட்டம் | Virakesari.lk
  22. விமான விபத்தில் உயிரிழந்த முன்னாள் குஜராத் முதல்வரின் தனிப்பட்ட வாகனங்கள் அனைத்திலும் 1206 என்ற எண்ணே இருந்தது. அதை அவர் தனது அதிர்ஷ்ட எண்ணாக நம்பினார். ஆனால் விதியும் அதே எண்ணைத் தேர்ந்தெடுத்தது. அகமதாபாத் விமான விபத்தில் குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி காலமானார். லண்டனில் உள்ள தனது மகனை காண அகமதாபாத்தில் இருந்து விமானத்தில் சென்ற குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி உயிரிழந்ததாக மத்திய அமைச்சர் சி.ஆர். பாட்டீல் தெரிவித்துள்ளார். இதனிடையே, விஜய் ரூபானி விமான நிலையத்திற்கு செல்லும் கடைசி நிமிடக் காட்சிகள் வெளியாகியுள்ளன. இதற்கிடையே, விஜய் ரூபானி மரணத்தில் எதிர்பாரா மற்றுமொரு சோகம் நிகழ்ந்திருக்கிறது. அது அவரின் இறப்புத் தேதி. விஜய் ரூபானி 1206 என்ற எண் தனது அதிர்ஷ்ட எண்ணாகப் பல காலமாக நம்பினார். இதனால் அவரின் அனைத்து வாகனங்களின் பதிவெண்களும் 1206 என்றே இருந்தன. ஸ்கூட்டர், கார் எனத் தனது தனிப்பட்ட வாகனம் எதுவாக இருந்தாலும் அவரின் பதிவெண் 1206 தான். அவர் வாங்கிய முதல் ஸ்கூட்டரில் இந்த நம்பர் தான் உள்ளது. அதேபோல் காரிலும் இதே நம்பர் தான். ஆனால் விதி விஜய் ரூபானியின் இந்த நம்பிக்கையில் விளையாடியிருக்கிறது. பல தசாப்தங்களாக அவர் நம்பிக் கொண்டிருந்த 1206 எண்ணைக் கொண்ட திகதியிலேயே விஜய் ரூபானியின் உயிர் பிரிந்தது. ஜூன் 12 அதாவது 12.06ம் திகதியில் அகமதாபாத் விமான விபத்தில் சிக்கி விஜய் ரூபானி மரணமடைந்தார். பல வருடங்களாக விஜய் ரூபானி நம்பிய அதே அதிர்ஷ்ட எண்ணை விதியும் தேர்ந்தெடுக்க 12.06 அவருடைய வாழ்க்கைப் பயணத்தின் கடைசித் திகதியாக அமைந்தது. Tamilmirror Online || 1206 அதிர்ஷ்ட எண்: இறப்பு எண்ணானது
  23. கீழடி வரலாற்றை அழிக்க பாஜக முயற்சி: முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு கோப்புப் படம் சென்னை: “எங்கள் வரலாற்றை வெளிக்கொணர பல நூறாண்டுகள் போராடினோம். அதனை எப்படியாவது மறைத்து அழிக்க ஒவ்வொரு நாளும் அவர்கள் (பாஜக) முயல்கிறார்கள்” என்று கீழடி விவகாரம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “கீழடி அகழாய்வில் இருந்து உலக அளவிலான ஆய்வகங்களுக்கு அனுப்பி, கரிமப் பகுப்பாய்வில் காலக்கணக்கீடு செய்யப்பட்ட மாதிரிகள், ஏஎம்எஸ் (AMS) அறிக்கைகளை அளித்த பின்னரும் மேலும் சான்றுகள் தேவை என்கிறார்கள் அவர்கள். இதற்கு நேர்மாறாக, மதிப்புமிக்க வரலாற்றாய்வாளர்கள், தொல்லியல் அறிஞர்கள் கடுமையாக எதிர்க்கும் நிலையிலும் கற்பனையான சரஸ்வதி நதி நாகரிகத்தை பாஜக ஆதரிக்கிறது. எந்த நம்பத்தகுந்த சான்றும் இல்லாமல் இதனை அவர்கள் முன்னெடுக்கிறார்கள்.ஆனால், நாம் கடுமையான பரிசோதனைகள் மூலம் நிறுவியுள்ள தமிழ்ப் பண்பாட்டின் தொன்மையைப் புறந்தள்ளுகிறார்கள். கீழடி மற்றும் தமிழ் மரபுசார் உண்மையைப் பொறுத்தவரை பாஜக - ஆர்எஸ்எஸ் கும்பல் கதறுவது சான்றுகள் இல்லை என்பதால் அல்ல, கீழடி காட்டும் உண்மை அவர்கள் முன்னெடுக்கும் 'ஸ்க்ரிப்ட்'-க்கு எதிரானதாக இருப்பதால்தான். எங்கள் வரலாற்றை வெளிக்கொணர பல நூறாண்டுகள் போராடினோம். அதனை எப்படியாவது மறைத்து அழிக்க ஒவ்வொரு நாளும் அவர்கள் முயல்கிறார்கள். எல்லாவற்றையும் உலகம் உற்று நோக்கிக் கொண்டுதான் இருக்கிறது. காலமும் கூட” என்று அவர் பதிவிட்டுள்ளார்.திமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு: இதனிடையே, அறிவியல்பூர்வமாக கீழடி அகழாய்வுகள் நிரூபிக்கப்பட்ட பிறகும் அதை ஏற்று ஆய்வை வெளியிட மறுக்கும் பாஜகவை கண்டித்து மதுரையில் வருகிற 18-ம் தேதி திமுக மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறவிருப்பதாக மாணவர் அணிச் செயலாளர் இரா.ராஜீவ்காந்தி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்படி, கீழடி என்கிற பெயரே பாஜக அரசுக்கு வேப்பங்காயாகக் கசக்கிறது. கீழடி ஆய்வை மேற்கொள்ளவே நீதிமன்றத்தை நாடவேண்டியிருந்தது. அகழாய்வை மேற்கொண்ட அதிகாரிகள் பாஜகவின் குரலாக ஒலிக்கவில்லை என்பதற்காக அவர்கள் தூக்கி எறியப்பட்டார்கள். கடந்த கால அடிமை எடப்பாடி அரசும் பாஜக-வினரின் பேச்சைக் கேட்டுக்கொண்டு கீழடி அகழாய்வைக் கிடப்பில் போட்டது. தமிழ்நாட்டில் கழகத் தலைவர் தலைமையிலான அரசு அமைந்ததும் கீழடி அகழாய்வுக்குப் புத்துயிர் கொடுத்ததோடு துரிதமாக பலகட்ட ஆய்வுகள் நடத்தி அருங்காட்சியகத்தையும் கட்டியெழுப்பினார். அறிவியல்பூர்வமாக கீழடி அகழாய்வுகள் நிரூபிக்கப்பட்ட பிறகும் அதை ஏற்று ஆய்வை வெளியிட மறுக்கும் தமிழர் விரோத பாஜக அரசைக் கண்டித்து வருகிற ஜூன் 18ஆம் தேதி காலை 10 மணிக்கு திமுக மாணவர் அணி சார்பில், “மதுரை, வீரகனூர் சுற்றுச்சாலை”யில் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெறும். இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில், கழக மாணவர் அணியின் மாநில நிர்வாகிகள் - மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட நிர்வாகிகள் மற்றும் கல்லூரி மாணவர் அமைப்பின் நிர்வாகிகள் அவர்களது தோழர்களுடன் பெருந்திரளாக பங்கேற்று, போராட்டத்தை வெற்றியடையச் செய்ய அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” என்று அதில் கூறப்பட்டுள்ளது. கீழடி வரலாற்றை அழிக்க பாஜக முயற்சி: முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு | Chief Minister Stalin says that BJP is trying to erase Keezhadi history - hindutamil.in
  24. முள்ளியவளையில் பௌத்த தோரண வடிவில் பதாதைகள் : அமைத்ததற்கான காரணத்தை விளக்கிய பெண்! 13 Jun, 2025 | 02:12 PM முள்ளியவளையில் இரு தினங்களுக்கு முன்னர் தனியார் காணி ஒன்றில் பௌத்த தோரண வடிவில் பதாதைகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த தோரணம் புதன்கிழமை (11) இரவு இனந்தெரியாத நபர்களால் கிழித்தெறியப்பட்டிருந்தது. அதன் பின்னர் தாம் அந்த தோரணத்தை அமைத்தமைக்கான காரணத்தை குறித்த நபர் ஊடகங்களுக்கு வெள்ளிக்கிழமை (13) தெரிவித்திருந்தார். அவர் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில், வித்தியானந்தா கல்லூரிக்கு அருகாமையில் சிங்கள மொழி கற்பிக்கும் நிலையம் ஒன்றினை நான் நடாத்தி வருகிறேன். பொசன் போயா நிகழ்வினை எவ்வாறு கொண்டாடுவது என மாணவர்களுக்கு விளக்கமளிக்கவே பொசன் போயா நிகழ்வை வரைந்து காட்சிப்படுத்தியிருந்தேன். பௌத்த மதம் எவ்வாறு இலங்கைக்கு பரப்பப்பட்டது என்பதையே காட்சிப்படுத்தியிருந்தேன். அதனை சிலர் வந்து உடைத்துவிட்டு சென்றிருக்கிறார்கள். நான் இது சம்பந்தமாக முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்திருந்தேன். நான் மதத்தை பரப்புவதற்கோ அல்லது பௌத்த மத கலாசாரம் இங்கே வரவேண்டும் என்பதற்காகவோ இதைச் செய்யவில்லை. இங்கே கற்கும் பிள்ளைகளுக்கு செயல்முறை வடிவிலே செய்து காண்பித்து, விளக்கமளிக்கவே இதைச் செய்தேன். கற்பிக்கும் விடயத்தை பார்க்கக்கூடியவாறு காட்சிப்படுத்தினால்தான் மாணவர்களால் இலகுவாக விளங்கிக்கொள்ள முடியும். மகிந்த தேரரின் வருகையும் இலங்கையில் பௌத்த மதம் ஸ்தாபித்தலும் என்றால் என்ன என்பதும் தேவநம்பிய தீசன் காலத்தில் மகிந்த தேரர், பிக்குணி சங்கமித்தை வருகைதந்து எவ்வாறு பௌத்த மதத்தை ஸ்தாபித்தனர் என்பது தொடர்பான படங்களுமே பதாதையில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன என விளக்கமளித்தார். கடந்த இரு தினங்களுக்கு முன்னர் முள்ளியவளையில் தனியார் காணி ஒன்றில் பௌத்த விகாரை வடிவில் பதாதைகள் அமைக்கப்பட்டிருந்ததைத் தொடர்ந்து புதன்கிழமை இரவு இந்த பதாதைகள் இனந்தெரியாதவர்களால் கிழித்தெறியப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. முள்ளியவளையில் பௌத்த தோரண வடிவில் பதாதைகள் : அமைத்ததற்கான காரணத்தை விளக்கிய பெண்! | Virakesari.lk
  25. 13 Jun, 2025 | 04:28 PM இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதி தருணங்களில் சரணடைந்த இசைப்பிரியா பாலச்சந்திரன் பிரபாகரன் உட்பட பலர் கொல்லப்பட்டமை குறித்த போர் குற்றச்சாட்டு விசாரணைகளை கோரி தனுக ரணஞ்சக கஹந்தகமகே எனும் சட்டத்தரணி பொலிஸ் மா அதிபருக்கு மனுவொன்றை சமர்ப்பித்துள்ளார். அந்த கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது. சரணடைந்தவர்களை கொன்றது தொடர்பான புகார் சர்வதேச மனிதாபிமான சட்டமீறல்( இசைப்பிரியா,மற்றும் பாலசந்திரன் பிரபாகரன் உட்பட ) தனுக ரணஞ்சக கஹந்தகமகே ஆகிய நான் இந்த மனுவை மதிப்பிற்குரிய உங்கள் அலுவலகத்திற்கு சமர்ப்பிக்கின்றேன். இது கடுமையான சர்வதேச மனிதாபிமான சட்டமீறலை குறிக்கின்றது. இந்த சம்பவங்கள் சர்வதேச சட்டத்தின் கீழ் போர்க்குற்றங்களின் கீழ் அடங்கும் என்பதுடன் பக்கச்சார்பற்ற விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும். இசைப்பிரியா மற்றும் பாலசந்திரன் தொடர்பான சம்பவங்கள் போர்நேரத்தில் சரணடைந்தவர்களிற்கான மீறல்களை குறிக்கும் முக்கிய எடுத்துக்காட்டுக்கள். இவர்களின் இறப்புகள் குறித்து விசாரணை செய்யப்படாமல் விடக்கூடாது. இலங்கை காவல்துறை உண்மை, பொறுப்பு நியாயத்திற்கு வழிவகுக்கும் வகையில் உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என தெரிவித்துள்ளார். இசைப்பிரியா பாலசந்திரன் கொலை குறித்து விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் -சட்டத்தரணி தனுக ரணஞ்சக கஹந்தகமகே பொலிஸ் மாஅதிபருக்கு மனு | Virakesari.lk

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.