Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிழம்பு

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by பிழம்பு

  1. உண்மை. சிங்களம் தப்பிக்க தமிழர் தரப்பின் மேல் பழியை போடும் முயற்சிகளில் இதுவும் ஒன்று. வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தவர்களை சரணடைய வந்த இடத்திலேயே சுட்டுக் கொன்றுள்ளனர். கோத்தா தான் இதற்கு உத்தரவு இட்டது. அத்துடன் பாலச்சந்திரன் இவர்களுடன் சேர்ந்து சரணடைய வரவில்லை. தலைவரின் நெருங்கிய உறவு ஒருவரால் இராணுவம் அனைத்தையும் முழுமையாக கைப்பற்றிய பின் அழைத்துவரப்படும் போது இராணுவத்தால் கைது செய்யப்பட்டவர் என்று தான் அறிந்தேன்.
  2. விவசாயப் பயிர்களுக்கு சேதம் விளைவிக்கும் குரங்குகளின் தொல்லைகளை கட்டுப்படுத்த மத்திய மாகாண சபை 100 இலட்சம் ரூபாவை ஒதுக்கியுள்ளது. கண்டி மாவட்ட செயலகத்தில் கண்டி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டமானது விவசாய நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லால்காந்த தலைமையில் இடம்பெற்றது. இதன்போதே அவர் இதனைத் தெரிவித்தார். கண்டி மாவட்டத்திலுள்ள குரங்குகளை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்படும் திட்டத்தின்படி, ரந்தெனிகல நீர்த்தேக்கப் பிரதேசத்தை அண்மித்த தீவுப் பகுதியில் மேற்படி குரங்குகள் கொண்டு போய் விடப்படவுள்ளன. இதற்காக குரங்குகளைப் பிரித்தல், அவற்றை கூடுகளில் அடைத்து எடுத்துச் செல்லல் மற்றும் அவை விடப்படும் இடங்களில் தேவையான மின்சார வேலிகள் போன்றவற்றை அமைத்தல் முதலான பல்வேறு பணிகளுக்காக இந் நிதி பயன்படுத்தப்படவுள்ளதாக அங்கு தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. குரங்குகளை ரந்தெனிகல நீர்த்தேக்க தீவில் விட 100 இலட்சம் ரூபா ஒதுக்கீடு - கே.டி.லால்காந்த | Virakesari.lk
  3. 27 Mar, 2025 | 03:47 PM தமிழர் தனித்துவம் பேணி பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமே கிடையாது என கடற்றொழில் மற்றும் நீரியல் மற்றும் சமுத்திர வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். நேற்று (26) தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவாவின் இணைந்து அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு குறிப்பாக, ஒலுவில், கல்முனை, சாய்ந்தமருது ஆகிய பகுதிகளுக்கு சென்று மீன்பிடி, கடற்றொழில் மற்றும் கடற்றொழில் அபிவிருத்தியின் தற்போதைய நிலைமைகளை அவதானித்தபோது அமைச்சர் இதனை தெரிவித்தார். அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவாவின் பங்குபற்றலுடன் நேற்று மாலை காரைதீவு விபுலானந்தா கலாசார மண்டபத்தில் கலந்துரையாடல் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் காரைதீவு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் அபிவிருத்தி மேற்கொள்வது தொடர்பாக பேசப்பட்டது. அதனை தொடர்ந்து, அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவா இருவரும் ஒலுவில், கல்முனை மற்றும் சாய்ந்தமருது முதலான பகுதிகளுக்கு கள விஜயம் செய்தனர். அவ்விடங்களில் மீன்பிடி, கடற்றொழில் மற்றும் கடற்றொழில் அபிவிருத்தி பணிகளின் தற்போதைய நிலைமைகளை பார்வையிட்டனர். இதன்போது, தமிழர் தனித்துவம் பேணி பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்று கருத்துக்கும் இடமே கிடையாது என்றார் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர். மேலும், நடைபெற்ற கலந்துரையாடலின்போது அமைச்சர் கூறுகையில், காரைதீவு மண் மகத்துவம் வாய்ந்தது. சுவாமி விபுலானந்தர் பிறந்த பெருமை உடையது. காரைதீவு என்பது ஒரு வரலாறு. ஒரு வாழ்வியல். இந்த மண்ணில் கால் பதிக்க வேண்டும் என்கிற எனது மிக நீண்ட நாள் அபிலாஷை இன்றுதான் நிறைவேறியுள்ளது. காரைதீவு பிரதேச மக்களின் பிரச்சினைகளை நாம் மிக நன்றாக அறிந்து வைத்திருக்கிறோம். காரைதீவு மண்ணின் தனித்துவம் தொடர்ந்து பேணப்பட வேண்டும். பாதுகாக்கப்பட வேண்டும். நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள்தான். ஆனால், தமிழர்கள் தமிழர்களாக வேண்டும். முஸ்லிம்கள் முஸ்லிம்களாக வாழ வேண்டும். சிங்களவர்கள் சிங்களவர்களாக வாழ வேண்டும். இதுதான் அழகு. தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தால் நாடும் மக்களும் வீழ்ச்சி காண வேண்டியிருக்கும் என்று பீதியை காட்டினார்கள். ஆனால், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மக்கள் நலன் சார்ந்த வேலைகளை அர்ப்பணிப்போடு மேற்கொண்டு வருவது கண்கூடு. இந்நாட்டு மக்களின் மனங்களை மாத்திரம் அல்ல. வெளிநாடுகளின் நம்பிக்கையையும் நாம் வென்றிருக்கிறோம். கமிஷன் அரசியல் செய்தவர்கள் நாட்டை குட்டிச் சுவராக்கிவிட்டுச் சென்றுள்ளனர். நாங்கள்தான் நாட்டை நிமிர்த்திக் கொண்டிருக்கின்றோம். கமிஷன் அரசியல் எங்களிடம் இல்லை. வீண் விரயங்கள் மற்றும் செலவுகள் இல்லை. எமது ஆட்சியில் இலங்கை ரூபாவின் பெறுமதி ரொம்ப ரொம்ப குறைந்து அமெரிக்க டொலரின் பெறுமதி உச்சபட்சமாக அதிகரித்துவிடும் என்று பொய் பரப்பினார்கள். அவற்றை பொய்ப்பித்திருக்கிறோம். மிகக் குறுகிய காலத்துக்குள் நாட்டை சீராக நடத்திக்கொண்டிருக்கிறோம். ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் சிந்தனையில் மாணவர்கள், தாய்மார், இளையோர், முதியவர்கள் என்று எல்லோருக்குமான நலன்புரி செயற்றிட்டங்களையும் எமது அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. சீனா உட்பட உலக நாடுகள் எமது மக்கள் நலன் சார்ந்த செயற்றிட்டங்களுக்கு பங்களிக்க முன்வந்துள்ளன. மக்கள் நலனே எமக்கு முக்கியம். கடற்றொழில் துறை மேம்படுத்தப்பட வேண்டும். மீனவர்களின் வாழ்வாதாரம் முன்னேற்றம் பெற வேண்டும். எதிர்கால சந்ததியினருக்கு நாம் மிகச் சிறந்த கடல் வளத்தை கையளிக்க வேண்டும். கடல் வளம் நாசமாக்கப்படுவதையும் சூறையாடப்படுவதையும் அனுமதிக்க முடியாது. சட்ட விரோத மீன்பிடி நாட்டின் எல்லா இடங்களிலும் இடம்பெற்றுக்கொண்டுதான் உள்ளது. சட்டவிரோத மீன்பிடியை முற்றாக இல்லாமல் செய்ய வேண்டும் என்பதில் எமது அரசாங்கம் பற்றுறுதியுடன் உள்ளது. இதன் மிக முக்கிய அம்சமாக சட்டவிரோத மீன்பிடியை இல்லாமல் செய்வதற்காக புதிய சட்டம் ஒன்றை விரைவில் கொண்டு வருகிறோம். இப்புதிய சட்டத்தின் ஏற்பாடுகளின்படி, சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுபவர்களுக்கு 5 வருட கடூழிய சிறை தண்டனை வழங்கப்பட முடியும். இப்பிராந்தியத்தில் உள்ள மீனவர்களின் பிரச்சினைகளை நாம் அறிவோம். அவற்றை தீர்த்துத் தர என்னாலான நடவடிக்கைகளை மேற்கொள்வேன். தேசிய மக்கள் சக்திக்கான ஆதரவை பொதுமக்கள் தொடர்ந்தும் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம். நான் சொன்னபடி, நடந்துகொள்ளாவிட்டால் என்னை நீங்கள் காறி உமிழ்ந்து சிறுமைப்படுத்தலாம் என்றார். மேலும், மீனவர்கள் உட்பட பொதுமக்களின் பிரச்சினைகளை செவிமடுப்பதற்கான சந்திப்பினை தொடர்ந்து, தேசிய மக்கள் சக்தியின் காரைதீவு பிரதேச சபைக்கான வேட்பாளர்கள் அடங்கலாக கட்சி செயற்பாட்டாளர்கள் மற்றும் ஆதரவாளர்களையும் அமைச்சர் சந்தித்துப் பேசியமை குறிப்பிடத்தக்கது. தமிழர் தனித்துவம் பேணி பாதுகாக்கப்பட வேண்டும் - அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் | Virakesari.lk
  4. 27 Mar, 2025 | 06:10 PM கிழக்கு தமிழ் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதையடுத்து எனக்கு பிரித்தானிய அரசாங்கம் தடை விதித்தமை ஒரு அரசியல் நாடகம். ஆகவே, கிழக்கு மாகாண சபையை தவறவிடுவோமாக இருந்தால் முஸ்லிம் தலைவர்களுடைய ஆதிக்கம் வளர்ச்சியடைந்து தமிழர்களுடைய நிலப் பிரதேசங்கள் அபகரிக்கப்பட்டு இருப்பே கேள்விக்குறியாகும் என்று முன்னாள் பிரதி அமைச்சரான கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்தார். கிழக்கு தமிழர் கூட்டணியின் கல்குடா தொகுதிக்கான வேட்பாளர் அறிமுக விழா கிரான் றெஜி மண்டபத்தில் இன்று (27) நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கூறுகையில், நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை ஒரு முக்கியமான தேர்தலாக பார்க்கின்றோம். முக்கியமாக முதல் முறையாக ஓர் அணியாக திரண்டு ஒரு கூட்டாக களமிறங்கியுள்ளோம். ஆகவே, ஒவ்வொரு வேட்பாளரும் வெல்ல வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயற்பட வேண்டும் என்பது எனது வேண்டுகோளாகும். தற்போது கிழக்கு தமிழ் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட பிறகு இதனை பொறுத்துக்கொள்ள முடியாத பலர் கலக்கமடைந்துள்ளதுடன் இவ்வளவு காலமும் இல்லாத எதிர்ப்பு உருவாகி கொதித்துக்கொள்கின்றனர். புலம்பெயர்ந்து வாழ்கின்ற படித்தவர்கள், புத்திஜீவிகள், வர்த்தகர்கள் சிந்திப்பதில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பை முதலில் தோற்கடிக்க வேண்டும். அவர்கள் போலி தேசியத்தை பேசிக்கொண்டு மக்களை ஏமாற்றி இலஞ்சம் ஊழல் எல்லாவற்றையும் செய்கின்றனர். உண்மையில் போராளிகளாக இருந்தவர்கள், மாவீரர் குடும்பங்களாக இருந்து வந்தவர்கள் தான் எங்கள் மக்களை ஆளவேண்டும். அவர்களுக்குத் தான் இந்த உரிமையும் மக்களை நடத்தும் திறமையும் இருக்கின்றது. நாங்கள் கூட்டமைப்பை உருவாக்கியது உலகம் முழுக்க பேசும் பொருளாக பார்க்கப்படுகிறது. அண்மையில் பிரித்தானியா அரசாங்கம் கருணா அம்மானாகிய எனக்கு தடை விதித்தது. நாங்கள் என்ன பிச்சை எடுக்கப்போறோமா? இவ்வளவு நாளும் இல்லாத தடை எதற்காக இப்போது விதிக்கின்றனர்? இது ஒரு அரசியலுக்கான நாடகம் தான். பிரித்தானிய அரசாங்கத்தால் நான் 2006இல் கைது செய்யப்பட்டு அங்கு சிறைச்சாலையில் 8 மாதங்கள் இருந்தேன். அப்போது கண்டுபிடிக்காத குற்றச்சாட்டை இப்போது தான் பிரித்தானிய அரசாங்கம் அந்த நேரம் கண்டுபிடித்து கையில் விலங்கை போட்டு கொண்டுச் சென்றிருக்கலாம். ஆனால், அரச மரியாதையுடன் கட்டுநாயக்க விமான நிலையம் வரை என்னை பாதுகாப்புடன் கொண்டு வந்தார்கள். அப்படிப்பட்ட பிரித்தானிய அரசாங்கத்துக்கு, இப்பத்தான் கருணா அம்மான் பிழை விட்டுள்ளார் என்று தெரிகிறது. ஆகவே, இதுவெல்லாம் கிழக்கு தமிழர்களுடைய இருப்பை சூறையாடுவதற்கான நடவடிக்கையாகும். காய்கின்ற மரத்துக்கு கல்லெறி விழும் என்ற பழமொழிக்கமைய வெற்றிக் குறி தென்படுகின்ற எம் மீது தான் இலக்கு வைக்கப்படுகிறது. கிழக்கு மாகாண சபையை நாங்கள் கைப்பற்றுவோம். கிழக்கு மாகாண சபையை தவறவிடுவோமாக இருந்தால் முஸ்லிம் தலைவர்களுடைய ஆதிக்கம் வளர்ச்சியடைந்து தமிழர்களுடைய நிலப் பிரதேசங்கள் குட்டிச்சுவராகி இருப்பே கேள்விக்குறியாகும் என்றார். பிரித்தானிய தடை ஒரு அரசியல் நாடகம்! - கருணா அம்மான் | Virakesari.lk
  5. தேசியக்கொடியை இறக்கிய யாழ். பல்கலை மாணவர்கள் மீது பாயத்தயாராகிறது ஆணைக்குழு! நிர்வாகத்துக்கும் குடைசல் சுதந்திரதினத்தன்று தேசியக்கொடியை கீழிறக்கி, கறுப்புக்கொடியை ஏற்றிய யாழ்.பல்கலைகழக மாணவர்கள் 9 பேர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க பல்கலைக்கழக மானியங்கள் தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன் முதற்கட்டமாக யாழ். பல்கலைக்கழக நிர்வாகம் இது தொடர்பில் எடுத்த நடவடிக்கை தொடர்பில் கேள்வி கேட்டு விளக்கக்கடிதம் ஒன்றும் ஆணைக்குழுவால் அவசரமாக அனுப்பப்பட்டுள்ளதாகவும் நம்பகரமாகத் தெரியவந்துள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி இலங்கையின் 77ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பிரதான வளாக முன்றலில் தேசியக்கொடி ஏற்றப்பட்டிருந்தது. ஆயினும் அதனை பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் கீழிறக்கிவிட்டு, அதற்குப் பதிலாகக் கறுப்புக்கொடியை ஏற்றியிருந்தனர். இது தொடர்பான காணொலி சமூக ஊடகங்களிலும் வெளியாகி இருந்தது. இந்தநிலையில் அத்தகையதொரு சம்பவம் யாழ். பல்கலைக்கழகத்தில் இடம் பெற்றதா என்பது தொடர்பிலும், இடம்பெற்றிருந்தால் அதுதொடர்பில் பல்கலைக்கழக மட்டத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறும் யாழ். பல்கலைக்கழக நிர்வாகத்தைப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு எழுத்துமூலம் கோரியுள்ளது. இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ஒன்பது மாணவர்களின் விவரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வைத்துள்ள பல்கலைக்கழக ஆணைக்குழுத் தலைவர், சம்பவம் தொடர்பில் முழுமையான அறிக்கை ஒன்றையும் கோரியிருக்கின்றார் எனவும் தெரிவிக்கப்படுகிறது. பாதுகாப்புத்தர்ப்பினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மூலமே குறித்த 9 மாணவர்களின் விவரங்களும் ஒளிப்படங்களுடம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு கிடைத்துள்ளதாகவும், அதனை அடிப்படையாக வைத்தே யாழ். பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு குடைச்சல் கொடுத்து, அந்த மாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க மானியங்கள் ஆணைக்குழு முயல்வதாகவும் இதன்போது தெரிவிக்கப்படுகின்றது. தேசியக்கொடியை இறக்கிய யாழ். பல்கலை மாணவர்கள் மீது பாயத்தயாராகிறது ஆணைக்குழு!
  6. 26 Mar, 2025 | 04:00 AM யாழ்ப்பாணத்தில் எல்லா சபைகளிலும் வெல்லக்கூடிய வெற்றி வாய்ப்புகள் இம்முறை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கு உள்ள நிலையில் சில சபைகளின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு எதிராக உச்ச நீதிமன்றில் வழக்கு தொடரவுள்ளதாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இணைத்தலைவர் சித்தார்த்தன் தெரிவித்தார். சுன்னாகம் பகுதியில் அமைந்துள்ள அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (25) ஊடகங்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், பிரதேசபை தேர்தல் என்பது கிராம மட்டத்திலேயே உள்ள விடயங்களை கையாள்வதற்கு உரிய தேர்தலாகும் எனவே மக்கள் கிராமத்திலே செல்வாக்குரியவர்களுக்கு வாக்களிப்பார்கள் இது நிச்சயமாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கு மக்கள் வாக்களித்து அமோக வெற்றி அடைய செய்வார்கள் என எதிர்பார்க்கிறோம். இந்நிலையில் எமது வேட்பு மனுக்கள் 09 சபைகளில் நிராகரிக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு எதிராக உச்ச நீதிமன்றில் வழக்கு தொடர்வோம் என தெரிவித்தார். யாழில் அனைத்து சபையிலும் வென்று இருப்போம் ; 09 சபைகளை நிராகரித்து விட்டார்கள் - சித்தார்த்தன் | Virakesari.lk இதனை நகைச்சுவை பகுதியில் பதியவா என சில நிமிடங்கள் யோசித்தேன்...
  7. வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்ட மீனவர்களை பார்வையிட்ட இந்திய மீனவ சங்க பிரதிநிதிகள் வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்ட மீனவர்களை பார்வையிட்ட இந்திய மீனவ சங்க பிரதிநிதிகள் 26 Mar, 2025 | 04:10 PM வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை இந்திய மீனவ சங்க பிரதிநிதிகள் பார்வையிட்டு கலந்துரையாடினர். வவுனியாவுக்கு வருகை தந்த இந்தியாவின் இராமேஸ்வரம் மாவட்டத்தின் இந்திய விசைப்படகு மீனவ சங்கத்தின் தலைவர் பி.ஜேசுராஜா, இராமேஸ்வரம் பாரம்பரிய விசைப் படகு மீனவ சங்கத்தை சேர்ந்த ஆல்வின் பெர்னாண்டோ, மண்டபம் விசைப்படகு மீனவர் சங்கத்தை சேர்ந்த இருதயராஜு ஜஸ்ரின், தங்கச்சிமடம் விசைப்படகு மீனவர் சங்கத்தை சேர்ந்த ஜெருசிமான்ஸ், பாம்பன் விசைப்படகு மீனவர் சங்கத்தை சேர்ந்த ராஜப்பன் சகாயம் ஆகியோர் புதன்கிழமை (26) வவுனியா சிறைச்சாலைக்கு சென்று பார்வையிட்டனர். எல்லை தாண்டியும், சட்டவிரோத முறைகளைப் பயன்படுத்தியும் மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கமைய வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 40 வரையான இந்திய மீனவர்களை அவர்கள் பார்வையிட்டதுடன், அவர்களது தற்போதைய நிலமை தொடர்பாகவும் கேட்டறிந்து கொண்டனர். வவுனியா சிறைச்சாலை அதிகாரிகள் குறித்த மீனவர்களை பார்வையிட இந்திய மீனவ சங்க பிரதிநிதிகளுக்கு விசேட ஏற்பாடுகளையும் செய்து கொடுத்திருந்தனர். வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்ட மீனவர்களை பார்வையிட்ட இந்திய மீனவ சங்க பிரதிநிதிகள் | Virakesari.lk
  8. 6 Mar, 2025 | 03:16 PM பிரிட்டன் முன்வைத்துள்ள மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக நிராகரிப்பதாக தெரிவித்துள்ள இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இலங்கையின் தேசிய பாதுகாப்பை பாதுகாப்பதற்காக வெளிநாட்டு அரசாங்கங்களால் அமைப்புகளால் துன்புறுத்தப்படு;ம் முன்னாள் ஆயுதப்படையினரை தற்போதை அரசாங்கம் உறுதியாக பாதுகாக்கும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார் இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது விடுதலைப்புலிகளிற்கு எதிரான யுத்தத்தின் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றன என்ற நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இலங்கை அரசாங்கம் முன்னாள் முப்படைகளின் பிரதானி சவேந்திர சில்வா முன்னாள் இராணுவதளபதி ஜகத் ஜெயசூரிய முன்னாள் கடற்படை தளபதி வசந்தகரணாகொட ஆகியோருக்கு எதிராக போக்குவரத்து தடைகள் சொத்துமுடக்கம் உட்பட தடைகளை அறிவித்துள்ளது. 2002 யுத்த நிறுத்த உடன்படிக்கை காணப்பட்டபோதிலும்,2002 பெப்ரவரி முதல் செப்டம்பர் 2005 வரையான காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகள் 363 கொலைகளில் ஈடுபட்டனர். 2005 நவம்பரில் நான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட முதல் வாரங்களில் விடுதலைப்புலிகளின் தாக்குதல்கள் தீவிரமடைந்தன. இவற்றில் மிகவும் பாரதூரமான சம்பவங்களாக டிசம்பர் நான்காம், ஆறாம் திகதி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கிளைமோர் தாக்குதல்களை குறிப்பிடலாம்,2006ம் ஆண்டுஜனவரி 5ம் திகதிகடற்படை கலத்தின் மீது இடம்பெற்ற தாக்குதலையும்,2006ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் இராணுவதலைமையகத்திற்குள் இராணுவதளபதியை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலையும் குறிப்பிடலாம். இவற்றிற்கு அப்பாலும் எனது அரசாங்கம் 2006 ஜனவரியிலும் ,ஜூன் மாதத்திலும் ஜெனீவாவிலும் ஒஸ்லோவிலும், விடுதலைப்புலிகளுடன் இரண்டு சுற்று பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டது,எனினும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு அந்த பேச்சுவார்த்தைகளில் இருந்து ஒருதலைப்பட்சமாக வெளியேறியது. ஜூன் 2006ம் ஆண்டு விடுதலைப்புலிகள் கெப்பிட்டிகொல்லாவையில் பயணிகள் பேருந்தின் மீது மேற்கொண்ட தாக்குதலே எனக்கும் எனது அரசாங்கத்திற்கும் மிகவும் முக்கியமான தருணம், இந்த தாக்குதலில் 64 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் 86 பேர் காயமடைந்தனர்.இவர்களில் பலர் சிறுவர்கள். ஜூலை 2006 இல் மாவிலாறு அணைக்கட்டை விடுதலைப்புலிகள் மூடி திருகோணமலை மாவட்டவிவசாயிகளிற்கான நீர் விநியோகத்தை தடுத்ததை தொடர்ந்து யுத்தம் மீண்டும் ஆரம்பமானது.2009 மே மாதம் விடுதலைப்புலிகள் முற்றாக தோற்கடிக்கப்படும்வரை யுத்தத்தை நிறுத்தவில்லை. இராணுவநடவடிக்கைகளின் போது பரந்துபட்ட அளவில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாக பிரிட்டன் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளை நான் நிராகரிக்கின்றேன். வெளிநாட்டு அரசாங்கங்களால் துன்புறுத்தப்படும் முன்னாள் ஆயுதப்படையினரை தற்போதை அரசாங்கம் உறுதியாக பாதுகாக்க வேண்டும் : மனித உரிமை குற்றச்சாட்டுகளையும் நிராகரித்தார் மகிந்த | Virakesari.lk
  9. 26 Mar, 2025 | 04:36 PM இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினையை தீர்ப்பதற்கு அரச மட்ட பேச்சுவார்த்தையினை முன்னெடுத்து பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு எட்டவேண்டும் என்று வட மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடக பேச்சாளர் அன்னராசா தெரிவித்தார். இலங்கை - இந்திய மீனவர் சங்க தலைவர்களுக்கிடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை வவுனியா கொறவப்பொத்தானை வீதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று (26) நடைபெற்றது. அதன் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அன்னராசா இதனை தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், 2016ஆம் ஆண்டு டில்லியில் நடைபெற்ற இலங்கை இந்திய வெளிவிவகார அமைச்சு மட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் இன்று வரை நடைமுறைப்படுத்தப்படாமையினால் தமிழ்நாட்டிலும் வட மாகணத்திலும் மீனவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே, கடந்த 9 வருடங்களாக நடவடிக்கை மேற்கொள்ளாததையிட்டு இரு நாட்டு மீனவர்களும் 9 வருடங்களுக்கு பின்பு இன்று கலந்துரையாடியுள்ளோம். இந்த கலந்துரையாடல் மூலம் நாம் மிக்க மகிழ்ச்சியடைந்துள்ளோம். இரு நாட்டிலும் பாதிக்கப்படுவது மீனவர்களே. எனவே, இதனை தீர்க்கவேண்டிய அவசியத்தினையும் அதற்கான பொறிமுறைகள் தொடர்பாகவும் இன்று கலந்துரையாடியுள்ளோம். இதன் அடுத்தகட்டமாக இலங்கையின் கடற்றொழில் அமைச்சரும் அதிகாரிகளும் அதேபோன்று இந்திய பிரதமர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் ஆகியோர் இந்த பிரச்சினையை அரசமட்ட பேச்சுவார்த்தையாக கொண்டுசென்று அதனூடாக மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு எட்டப்படவேண்டும் என்பதை இரு அரசாங்கங்களுக்கும் வலியுறுத்தி முன்வைக்கிறோம். அதேபோல தொடர்ச்சியாக இருநாட்டு மீனவர்களும் கலந்துரையாடுவதுடன், இருநாட்டு கடல்வளமும் பாதுகாக்கப்படவேண்டும் என்ற விடயத்தில் இருதரப்பும் இணங்கியிருக்கிறது. அத்துடன் தமிழ்நாட்டின் ஏனைய மாவட்டங்களை சேர்ந்த மீனவர்களுடனும் கலந்துரையாடி இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கான ஆரம்ப முயற்சியாக இந்த பேச்சுவார்த்தை அமைந்துள்ளது. எனவே, இருநாட்டு மீனவர் பிரச்சினைக்கான தீர்வு அரசின் அனுசரணையோடு மிக விரைவில் எட்டப்படும், எட்டுவோம் என்ற நம்பிக்கை எமக்கு ஏற்பட்டுள்ளது. இது மனிதாபிமானத்தோடு கையாளவேண்டிய விடயம். இந்த கலந்துரையாடல் தொடரும் என்றார். அரச மட்டப் பேச்சுவார்த்தைக்கு வலியுறுத்துகிறோம்; இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு வேண்டும்! - அன்னராசா | Virakesari.lk
  10. 26 Mar, 2025 | 04:56 PM கல்கிஸ்ஸை, வெள்ளவத்தை மற்றும் பாணந்துறை ஆகிய கடற்கரை பகுதிகளில் முதலை அச்சுறுத்தல்கள் மீண்டும் அதிகரித்து வருவதாக இலங்கை உயிர் பாதுகாப்புக் குழுமம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மீன்பிடி படகுகளில் முதலை மோதிய வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. கடந்த சில நாட்களாக கடற்கரை பகுதிகளில் முதலைகள் உலாவி வருகின்றன. இதனால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பிரச்சினைக்கு உடனடியாக தீர்வை வழங்குமாறு அதிகாரிகளை இலங்கை உயிர் பாதுகாப்புக் குழுமத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி அசங்க நாணயக்கார கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன், கல்கிஸ்ஸை, வெள்ளவத்தை மற்றும் பாணந்துறை ஆகிய கடற்கரை பகுதிகளில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார். கல்கிஸ்ஸை, வெள்ளவத்தை, பாணந்துறை கடற்கரை பகுதிகளில் முதலை ; மக்களே எச்சரிக்கை | Virakesari.lk
  11. பிரிட்டனின் தடைகள் ஒருதலைப்பட்சமானவை - வெளிவிவகார அமைச்சு 26 Mar, 2025 | 05:06 PM இலங்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுப்டவர்களிற்கு எதிராக பிரிட்டன் அறிவித்துள்ள தடைகள் ஒரு தலைப்பட்சமானவை என தெரிவித்துள்ள இலங்கையின் வெளிவிவகார அமைச்சு இதனால் நல்லிணக்க முயற்சிகள் பாதிக்கப்படலாம் என தெரிவித்துள்ளது வெளிவிவகார அமைச்சு தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது பிரிட்டனின் வெளிவிவகார பொதுநலவாய அபிவிருத்தி அமைச்சு இலங்கையின் உள்நாட்டு போரின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் துஸ்பிரயோகங்களிற்கான பிரிட்டனின் தடைகள் என வெளியிட்ட செய்திக்குறிப்பினை வெளிவிவகார அமைச்சு கருத்தில்கொண்டுள்ளது. பிரிட்டிஸ் அரசாங்கம் நால்வருக்கு எதிராக தடைகளை விதித்துள்ளது இவர்களில் மூவர் இலங்கையின் முன்னாள் இராணுவதளபதிகள் கடற்படை தளபதி. காரணமானவர்கள் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படமாட்டார்கள் என்ற அர்ப்பணிப்பு என வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பையும் நாங்கள் கவனத்தில் எடுத்துள்ளோம். இந்த அடிப்படையில் இது குறிப்பிட்ட தனிநபர்களின் சொத்துக்களை முடக்குதல்,போக்குவரத்து தடை ஆகியவற்றை உள்ளடக்கிய பிரிட்டனின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கை என நாங்கள் வலியுறுத்தவிரும்புகின்றோம். இவ்வாறன ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகள் பிரச்சினைகளிற்கு தீர்வை காண்பதற்கு உதவாது மாறாக .இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை குழப்பமானதாக்கும். பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான பொறிமுறைகளை வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது,கடந்த காலத்தின் எந்த மனித உரிமை மீறல்களும் உள்நாட்டு பொறுப்புக்கூறும் பொறிமுறை ஊடாகவே கையாளப்படவேண்டும். இலங்கையின் இந்த நிலைப்பாட்டை வெளிவிவகார அமைச்சர் விஜிதஹேரத் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ரூ பட்ரி;க்கிடம் எடுத்துரைத்துள்ளார். பிரிட்டனின் தடைகள் ஒருதலைப்பட்சமானவை - வெளிவிவகார அமைச்சு | Virakesari.lk
  12. 26 Mar, 2025 | 05:29 PM இழுவலைகளை பயன்படுத்தும் மீன்பிடி முறைமையை படிப்படியாக நிறுத்த முடியும் என்று இராமேஸ்வரம் மாவட்டத்தின் விசைப்படகு மீனவ சங்கத்தின் தலைவர் பி.ஜேசுராஜா தெரிவித்தார். அத்துடன், தொப்புள்கொடி உறவான இந்திய - இலங்கை மீனவர்கள் மீன்பிடித்தொழிலை சுமூகமாக மேற்கொள்வதற்கு இரு நாட்டு அரசாங்கமும் பேச்சுவார்த்தைகளை நடத்தி தீர்வு காண வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். வவுனியாவில் புதன்கிழமை (26) இடம்பெற்ற இந்திய - இலங்கை மீனவ சங்கங்களின் பிரதிநிதிகளது பேச்சுவார்த்தையின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நீண்ட காலமாக இருந்து வரும் இந்திய - இலங்கை மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டி இந்தியாவின் இராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து வந்து 5 பேர் கொண்ட குழுவாக நான்கு மாவட்ட இலங்கை மீனவ சங்கங்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுக்களை நடத்தினோம். எங்கள் தொப்புள் கொடி உறவுகளுடன் எமது நிறைகுறைகளை பேசியதில் எமக்கு மிக்க மகிழ்ச்சியே. அவர்களுடைய கஷ்ட நிலைகளை எங்களிடம் கூறினார்கள். எங்களுடைய நெருக்கடியான நிலமைகளையும் நாங்கள் கூறினோம். இந்தப் பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்ற அடிப்படையில் இந்தப் பேச்சுவார்த்தை இருந்தது. சுமுகமாக நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்த இலங்கை மீனவ சமாசத்திற்கு நெஞ்சார்ந்த நன்றிகள். கடந்த 9 வருடங்களுக்கு முன்பாக இரண்டு அரசாங்கங்களும் பேச்சுக்களை நடத்தியதன் பின்னர் மீனவர் பிரச்சினை குறித்து பேசப்படவில்லை. 9வருடங்களில் இரண்டு நாட்டு மீனவர்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்தப் பாதிப்பை எவ்வாறு நிறுத்துவது என்று பேசப்பட்டது. அவர்களது கோரிக்கை இந்திய இழுமடி வலைகளை முற்றாக நிறுத்த வேண்டும். அதனை நிறுத்தினால் கடல்வளம் பாதுகாக்கப்படும் என்பதாகும். நாங்கள் இந்த இழுவலையை படிப்படியாக குறைப்பதற்கு இந்திய மற்றும் தமிழக அரசாங்கம் ஊடாக சம்மதிக்கின்றோம் எனக்கூறினோம். அடுத்த கட்டமாக ஏனைய மாவட்ட மீனவ அமைப்புக்களையும் ஒன்றுதிரட்டி இந்திய அரசு, தமிழக அரசு, இலங்கை அரசாங்கம் ஆகியவற்றின் உதவியுடன் இப்பிரச்சினைக்கு பேச்சுக்களை முன்னெடுத்து நல்லதொரு தீர்வை அடுத்த கட்டமாக எட்ட முடியும். வயிற்றுப் பிழைப்புக்காக மீன் பிடிக்கும் மீனவர்களை இலங்கை அரசாங்கம் தமது சட்டத்தின்படி 6 மாதம், ஒரு வருடம், 2 வருடம் என்று சிறை வைத்துள்ளார்கள். அந்த மீனவர்களை மனிதபிமான முறையில் விடுவிக்கப்பட வேண்டும். இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரமாகவும் தீர்வு காண வேண்டும் என்று கோரியுள்ளோம். அடுத்த கட்டப் பேச்சுவார்த்தையின் போது அதனை செய்யலாம் என்று இலங்கை மீனவர்கள் கூறியுள்ளார்கள். நிச்சயமாக இலங்கை, இந்திய அரசாங்கங்கள் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து இதற்கொரு தீர்வை எட்ட வேண்டும். இந்திய - இலங்கை கடற்பரப்பு மிகக் குறைவாக உள்ளது. அதிலும் கச்சதீவை இலங்கைக்கு வழங்கியதால் கடற்பரப்பு குறைவாக உள்ளது. அதனால் தான் எல்லை தாண்டும் பிரச்சினை ஏற்படுகிறது. இதில் இந்திய - இலங்கை மீனவர்கள் பாதிக்கப்படுகின்றோம். நிலமையை கருத்தில் கொண்டு இரண்டு அரசாங்கங்களும் இணைந்து இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். அரசியல் தலைவர்கள் தமது அரசியல் இலாபத்திற்காக சில கோரிக்கைகளை முன்வைக்கிறார்கள். அது பற்றி எமக்குத் தெரியாது. எங்களுடைய எண்ணம் கச்ச தீவை மீட்பதல்ல. இரு நாட்டு மீனவர்களும் தொப்புள்கொடி உறவாக அப்பகுதியில் மீன் பிடிக்க வேண்டும். இரு பகுதி மீனவர்களும் பாதிக்காத வகையில் இரு நாட்டு அரசாங்கமும் நல்ல முடிவை எடுக்க வேண்டியது கட்டாயம். அவர்கள் எடுப்பார்களென நாங்கள் நம்புகின்றோம் எனத் தெரிவித்தார். இழுவை மீன்பிடியை படிப்படியாக நிறுத்தலாம் ; விசைப்படகு மீனவ சங்கத்தின் தலைவர் பி.ஜேசுராஜா | Virakesari.lk
  13. எந்த சந்தர்ப்பத்திலும் எமது இராணுவ வீரர்களுக்காக நாம் முன்னிற்போம் - ஐக்கிய மக்கள் சக்தி 25 Mar, 2025 | 09:30 PM (எம்.மனோசித்ரா) இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக பிரித்தானியா விதித்துள்ள பயணத்தடை தொடர்பில் எதிர்க்கட்சி என்ற ரீதியில் அவதானம் செலுத்தியிருக்கின்றோம். இதனை அரசாங்கம் இராஜதந்திர ரீதியில் அணுக வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார். கொழும்பில் செவ்வாய்க்கிழமை (25) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், முன்னாள் இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக பிரித்தானியா விதித்துள்ள பயணத்தடை தொடர்பில் எதிர்க்கட்சி என்ற ரீதியில் அவதானம் செலுத்தியிருக்கின்றோம். அதேவேளை அரசாங்கம் இவ்விடயத்தை இராஜதந்திர ரீதியில் அணுக வேண்டும். எந்த சந்தர்ப்பத்திலும் எமது இராணுவ வீரர்களுக்காக நாம் முன்னிற்போம். தேர்தலுக்கான பணிகளை நாம் முன்னெடுத்து வருகின்றோம். புத்தாண்டு நெருங்குவதால் பிரசார நடவடிக்கைகள் மந்தமாகவே இடம்பெறுகின்றன. புத்தாண்டின் பின்னர் தீவிரமாக பிரசார நடவடிக்கைகளை முன்னெடுப்போம். சுமார் 400க்கும் மேற்பட்ட வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. தேர்தல் ஆணைக்குழுவும் நீதிமன்றமும் இவ்விவகாரத்தில் நியாயம் வழங்க வேண்டும். தேர்தல் ஆணைக்குழு சிறு சிறு காரணிகளுக்காக வேட்புமனுக்களை நிராகரிப்பதை விட, தமக்கு தேவையற்றவர்களை நிராகரிக்கும் பொறுப்பினை மக்களுக்கு வழங்க வேண்டும். தேசபந்து தென்னகோனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் கட்சி ரீதியில் கலந்தாலோசித்து தீர்மானம் எடுக்கப்படும் என்றார். எந்த சந்தர்ப்பத்திலும் எமது இராணுவ வீரர்களுக்காக நாம் முன்னிற்போம் - ஐக்கிய மக்கள் சக்தி | Virakesari.lk
  14. கட்சியின் முக்கியத் தலைவர்களோடு எடப்பாடி பழனிசாமி மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்திருக்கிறார். எடப்பாடி அமித் ஷாவுக்கு பூங்கொத்து கொடுத்த வேகத்திலேயே அமித் ஷாவிடமிருந்து ட்வீட்டும் வந்திருக்கிறது. அதிமுகவின் பொதுச்செயலாளரான எடப்பாடி உட்பட அக்கட்சியின் முக்கியத் தலைவர்கள் சிலர் மத்திய அமைச்சர் அமித் ஷாவை டெல்லியில் சந்தித்திருக்கின்றனர். இந்த சந்திப்புக்குப் பிறகு, '2026 இல் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்.' என அமித் ஷா ட்வீட் செய்திருக்கிறார். அமித் ஷா - எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இன்று காலையில் அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திடீரென டெல்லிக்குப் பயணம் செய்திருந்தார். எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி, தம்பிதுரை போன்ற அதிமுகவின் மூத்தத் தலைவர்களும் எடப்பாடியுடன் இருந்தனர். 'நான் எந்த முக்கிய நபரையும் சந்திக்க வரவில்லை. டெல்லி அதிமுக அலுவலகத்தைப் பார்வையிட வந்தேன்.' என காலையில் டெல்லியில் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசியிருந்தார். அதேநேரத்தில் சில மணி நேரங்களுக்கு முன்பு தன்னுடைய கட்சியின் முக்கியத் தலைவர்களோடு எடப்பாடி பழனிசாமி மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்திருக்கிறார். எடப்பாடி அமித் ஷாவுக்கு பூங்கொத்து கொடுத்த வேகத்திலேயே அமித் ஷாவிடமிருந்து, '2026ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்த பின்பு, மது வெள்ளமும், ஊழல் புயலும் முடிவுக்கு வந்துவிடும்.' என ட்வீட் வந்திருக்கிறது. டெல்லியில் நடந்திருக்கும் இந்த முக்கிய நகர்வின் மூலம் 2026 க்காக அதிமுக - பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டிருக்கிறதா என சமூக வலைதளங்களில் விவாதங்கள் கிளம்பியிருக்கின்றன. Amit Shah: 2026 இல் தமிழகத்தில் NDA ஆட்சியமைக்கும் - எடப்பாடியின் சந்திப்பும் அமித்ஷாவின் பதிவும் - Vikatan
  15. எத்தடை வரினும் யாழ்.மாவட்டத்துக்குரிய அபிவிருத்தி திட்டங்கள் தொடரும் -அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மோசமான செயற்பாடுகள் மூலம் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தை நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா குழப்பியுள்ளார். இனிவரும் காலங்களில் தலைவருக்குரிய அதிகாரத்தை முழுமையாக பயன்படுத்துவேன் என்று அமைச்சரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்ட தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று காலை 9 மணியளவில் யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் கடற்றொழில் மற்றும் நீரியல் கடல்வளங்கள் அமைச்சரும், ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகரன் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது, வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம், மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன், நாடாளுமன்ற உறுப்பினர்களான கருணநாதன் இளங்குமரன்,ரஜீவன், ஸ்ரீ பவானந்தராஜா, சிவஞானம் ஸ்ரீதரன், இராமநாதன் அர்ச்சுனா, வட மாகாண சபை அவைத்தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் உள்ளிட்டவர்களுடன் திணைக்களங்களின் பதவிநிலை அதிகாரிகள் பிரதேச செயலாளர்கள், பிரதேச சபைகளின் செயலாளர்கள், பாதுகாப்பு தரப்பின் அதிகாரிகள் மற்றும் பிரதேச அதிகாரிகள் என பலரும் கலந்துக்கொண்டனர். கூட்டம் நிறைவடைந்ததன்பின் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்; வரவு- செலவுத் திட்ட கூட்டத்தொடர் முடிவடைந்துள்ள நிலையில், யாழ்.மாவட்டத்துக்கு பாதீட்டில் ஒதுக்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடு தொடர்பில் ஆராய்ந்து முடிவுகளை எடுப்பதற்காகவே இன்றைய ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாவட்ட அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடப்படவிருந்த இக்கூட்டத்தில் சிவன் பூஜையில் கரடி புகுந்ததுபோல சம்பவங்களும் இடம்பெற்றன. தொல்லை தாங்க முடியாமல் எம்.பியொருவர் வெளியேறி சென்றுள்ளார். மேலும் சில அதிகாரிகள் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர். எவருடைய பேச்சுக்கும் கட்டுப்படாத நபரொருவரால் தான் இப்படி நடந்தது. நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மோசமாக நடந்துகொண்டார். தனக்குள்ள தனிப்பட்ட பிரச்சினை காரணமாக சம்பந்தமில்லாத விடயங்களைக்கூட அவர் குறிப்பிட்டுள்ளார். எத்தடை வரினும் யாழ்.மாவட்டத்துக்குரிய அபிவிருத்தி திட்டங்கள் தொடரும். அவை உரிய வகையில் முன்னெடுக்கப்படும். ஒருங்கிணைப்புக்குழு தலைவருக்குள்ள அதிகாரம் இனி முழுமையாக பயன்படுத்தப்படும். சம்பவம் தொடர்பில் ஊடகங்களில் செய்திகள் வரும். நாம் இது பற்றி மக்களிடமே முறையிடுகின்றோம். அவர்கள் பார்த்தக்கொள்வார்கள்- என்றார். எத்தடை வரினும் யாழ்.மாவட்டத்துக்குரிய அபிவிருத்தி திட்டங்கள் தொடரும்;
  16. யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இடைநிறுத்தம் | Virakesari.lk யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்திலிருந்து வெளியேறினார் சிறீதரன். தனிப்பட்ட அரசியல் விவகாரங்கள் மற்றும் தனிநபர் அவதூறுகளை கட்டுப்படுத்தும் ஆற்றலை ஒருங்கிணைப்பு குழு தலைவருக்கு சுட்டிக்காட்டி கூட்டத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் வெளியேறினார். யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை (25) நடைபெற்றது. அதன்போது, வலி.வடக்கில் முன்னெடுக்கப்படும் மின் இணைப்பு விடயம் தொடர்பில் விவாதம் முன்வைக்கப்பட்டபோது ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினரான இளங்குமரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இடையே ஏற்பட்ட வாக்குவாதம் அவர்களது தனிப்பட்ட விடயங்களை முன்னிறுத்தியதாக மாறியது. குறிப்பாக, இரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் மற்றவரது காதல் விடயங்கள், மோசடி மற்றும் நிதி மோசடிகள் முதலான பல விடயங்களை முன்னிறுத்தி அதிகாரிகள் முன்னிலையில் தர்க்கித்துக்கொண்டனர். இந்நிலையில் இந்த வாக்குவாதத்தை இடைநிறுத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் ஒருங்கிணைப்பு குழு தலைவரிடம் வலியுறுத்தினார். எனினும், ஒருங்கிணைப்பு குழு தலைவரால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரையும் கட்டுப்படுத்த முடியாத நிலையே காணப்பட்டது. இதனால் அங்கு நிலவிய குழப்பமான சூழ்நிலை காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கூட்டத்தை விட்டு வெளியேறி சென்றார். யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்திலிருந்து வெளியேறினார் சிறீதரன் | Virakesari.lk
  17. சரணடையும் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர்களை கொலை செய்யுமாறு உத்தரவிட்டவர் சவேந்திர டி சில்வா ; தடைகளிற்கான காரணங்கள் குறித்த ஆவணத்தில் பிரிட்டன் தெரிவிப்பு 25 Mar, 2025 | 03:49 PM சரணடையும் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர்களை கொலை செய்யவேண்டும் என உத்தரவிட்டவர் இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதி கட்டங்களில் 58 வது படையணியின் தளபதியாக விளங்கிய சவேந்திர சில்வா என பிரிட்டன் தெரிவித்துள்ளது. இலங்கையின் முன்னாள் இராணுவ தளபதிகள் கடற்படை தளபதி மற்றும் விநாயகமூர்த்தி முரளீதரன் மீதான தடைகளிற்கான காரணங்களை தெளிவுபடுத்தும் ஆவணமே இவ்வாறு தெரிவித்துள்ளது. பெயர் சவேந்திர சில்வா சவேந்திர சில்வா தனிநபரின் வாழ்வதற்கான உரிமை , சித்திரவதைக்கு உட்படுத்தப்படாமலிருப்பதற்கான உரிமை, ஈவிரக்கமற்ற,அல்லது மனிதாபிமானற்ற விதத்தில் நடத்தப்படாமலிருப்பதற்கான,இழிவான விதத்தில் நடத்தப்படாமலிருப்பதற்கான,அல்லது தண்டிக்கப்படாமலிருப்பதற்கான உரிமையை பாரதூரமாக மீறும் நடவடிக்கைகளிற்கு காரணமாக இருந்துள்ளார் , இருக்கின்றார் என்ற அடிப்படையில். உலகளாவிய மனித உரிமைகள் தடைகள் 2020 இன் அர்த்தங்களுடன் சவேந்திர சில்வா சம்பந்தப்பட்ட நபராகும். சவேந்திர சில்வா இலங்கை இராணுவத்தின் 58வது பிரிவின் தளபதியாக செயற்பட்டார், இக்காலப்பகுதியி;ல் 58வது படைப்பிரிவினர் சட்டவிரோத படுகொலைகள், மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதுடன்,சித்திரவதை,ஈவிரக்கமற்ற நடவடிக்கைகள், கீழ்த்தரமான நடவடிக்கைகள் தண்டனைகளை வழங்குதல் போன்றவற்றில் ஈடுபட்டனர். சரணடையும் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர்களை கொலை செய்யவேண்டும் என உத்தரவிட்ட சவேந்திர சில்வா சரணடைந்த விடுதலைப்புலிகளை தனது படையினர் சுட்டுக்கொன்றவேளை போர் முன்னரங்கிலேயே காணப்பட்டார். பெயர் ஜகத் ஜெயசூரிய ( தடைக்கான காரணங்கள்) ஜெயசூரிய தனிநபரின் வாழ்வதற்கான உரிமை , சித்திரவதைக்கு உட்படுத்தப்படாமலிருப்பதற்கான உரிமை, ஈவிரக்கமற்ற,அல்லது மனிதாபிமானற்ற விதத்தில் நடத்தப்படாமலிருப்பதற்கான,இழிவான விதத்தில் நடத்தப்படாமலிருப்பதற்கான,அல்லது தண்டிக்கப்படாமலிருப்பதற்கான உரிமையை பாரதூரமாக மீறும் நடவடிக்கைகளிற்கு காரணமாக இருந்துள்ளார் , இருக்கின்றார் என்ற அடிப்படையில். உலகளாவிய மனித உரிமைகள் தடைகள் 2020 இன் அர்த்தங்களுடன் ஜெயசூரிய சம்பந்தப்பட்ட நபராகும். விசேடமாக ஜகத் ஜெயசூரிய 2007 முதல் 2009 வரை வன்னியில் நடவடிக்கைகளில் ஈடுபட்ட பாதுகாப்பு படையினரின் தளபதியாக விளங்கினார். இக்காலப்பகுதியில் அவரின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த இலங்கை இராணுவத்தினர்,சட்டவிரோத படுகொலைகள்,சித்திரவதை ஈவிரக்கமற்ற நடவடிக்கைகள் கீழ்த்தரமான நடவடிக்கைகள் தண்டனைகளை வழங்குதல் போன்றவற்றில் ஈடுபட்டனர். 2 வசந்த கரணாகொட தனிநபரின் வாழ்வதற்கான உரிமை , சித்திரவதைக்கு உட்படுத்தப்படாமலிருப்பதற்கான உரிமை, ஈவிரக்கமற்ற,அல்லது மனிதாபிமானற்ற விதத்தில் நடத்தப்படாமலிருப்பதற்கான,இழிவான விதத்தில் நடத்தப்படாமலிருப்பதற்கான,அல்லது தண்டிக்கப்படாமலிருப்பதற்கான உரிமையை பாரதூரமாக மீறும் நடவடிக்கைகளிற்கு காரணமாக இருந்துள்ளார் , இருக்கின்றார் என்ற அடிப்படையில். உலகளாவிய மனித உரிமைகள் தடைகள் 2020 இன் அர்த்தங்களுடன் கரணாகொட சம்பந்தப்பட்ட நபராகும். 2005 முதல் 2009 வரை இலங்கை கடற்படையின் தளபதியாக வசந்த கரணாகொட பதவி வகித்தார். இக்காலப்பகுதியில் இலங்கை கடற்படையினர் வசந்த கரணாகொடவின் கட்டளைப்பொறுப்பின் கீழ் சட்டவிரோத படுகொலைகள் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதுடன்,சித்திரவதை,ஈவிரக்கமற்ற நடவடிக்கைகள், கீழ்த்தரமான நடவடிக்கைகள் தண்டனைகளை வழங்குதல் போன்றவற்றில் ஈடுபட்டனர். சரணடையும் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர்களை கொலை செய்யுமாறு உத்தரவிட்டவர் சவேந்திர டி சில்வா ; தடைகளிற்கான காரணங்கள் குறித்த ஆவணத்தில் பிரிட்டன் தெரிவிப்பு | Virakesari.lk
  18. முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனுக்கு விளக்கமறியல் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனை ஏப்ரல் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு புதுக்கடை நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். இன்று (25) இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட வியாழேந்திரன் கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோதே, அவரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார். முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனுக்கு விளக்கமறியல் | Virakesari.lk
  19. 25 Mar, 2025 | 12:36 PM போலி கனேடிய விசாக்களைப் பயன்படுத்தி கனடாவுக்குத் தப்பிச் செல்ல முயன்ற 11 பேரும் அவர்களுக்கு உதவிய தரகர் ஒருவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று திங்கட்கிழமை (24) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளனர். கனடாவுக்கு தப்பிச் செல்ல முயன்றவேளை கைதான 11 பேரும் கொழும்பு, களுத்துறை, பதுளை மற்றும் அநுராதபுரம் ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் 35 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர். இந்த சந்தேக நபர்களில் அரச உத்தியோகத்தர்கள், வர்த்தகர்கள் மற்றும் அண்மையில் வெளிநாடு சென்றுவிட்டு மீண்டும் நாடு திரும்பியவர்களும் காணப்படுவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர்கள் ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் விமான சேவையின் யு.எல் - 225 விமானத்தில் துபாய்க்குச் சென்று, பின்னர் அங்கிருந்து கனடாவுக்குத் தப்பிச் செல்வதற்காக நேற்றைய தினம் கட்டுநாயக்க விமான நிலையத்துக்குச் சென்றுள்ளனர். இதன்போது, சந்தேக நபர்கள் சோதனை நடவடிக்கைகளுக்காக தங்களது ஆவணங்களை விமான நிலைய அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளனர். அந்த ஆவணங்கள் குறித்து சந்தேகமடைந்த விமான நிலைய அதிகாரிகள், அவற்றை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். பின்னர், திணைக்கள அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், சந்தேக நபர்களின் கனடா விசாக்கள் போலியாக தயாரிக்கப்பட்டவை என்பது தெரியவந்துள்ளது. கைதான 11 சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், அவர்களுடன் விமான நிலையத்துக்குச் சென்றிருந்த தரகர் ஒருவரும் விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் வைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட தரகரை விசாரணைக்கு உட்படுத்தியபோது மற்றுமொரு தரகரின் உதவியுடன் தலா 45 இலட்சம் ரூபா அடிப்படையில் இந்த போலி கனேடிய விசாக்கள் தயாரிக்கப்பட்டமை தெரியவந்துள்ளது. இதனையடுத்து, தரகர் உட்பட கைது செய்யப்பட்ட 12 பேரும் மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலைய பொலிஸ் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். போலி விசாக்களைப் பயன்படுத்தி கனடாவுக்குத் தப்பிச் செல்ல முயன்ற 11 பேர் கைது | Virakesari.lk
  20. 25 Mar, 2025 | 01:46 PM யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தர்க்கத்தையடுத்து இடைநிறுத்தப்பட்டுள்ளது. யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான அர்ச்சுனா மற்றும் இளங்குமரன் ஆகியோருக்கு இடையில் ஏற்பட்ட குழப்ப நிலை காரணமாக இந்த கூட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றி, கடும் குழப்ப நிலை ஏற்பட்டதையடுத்து, கூட்டத்தின் தலைவர் அமைச்சர் சந்திரசேகரனால் நிலைமையை கட்டுப்படுத்த முடியாமற்போனதனால் கூட்டம் இடைநிறுத்தப்பட்டது.
  21. 25 Mar, 2025 | 04:57 PM பத்தொன்பது வயதில் கைதுசெய்யப்பட்ட சிவகுமார் பார்த்தீபன் என்ற இருவர் ,முப்பது வருடங்கள் கடந்தும் இன்று 50 வருடங்கள் ஆகியும் விடுதலையடைய முடியாமல் சிறையில் உள்ளனர் என தெரிவித்துள்ள மக்கள் போராட்ட முன்னணியின் ராஜ்குமார் ரஜீவ்காந் ஆனால் அரசியல் கைதிகள் விடுதலை குறித்து வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் என்பிபி தோழர்கள் பொய்யான வாக்குறுதிகளுடன்மீண்டும் தேர்தலிற்காக களத்தில் குதித்துள்ளனர் என தெரிவித்துள்ளார் மகசின் சிறைச்சாலைக்கு சென்று தமிழ்அரசியல்கைதிகள் சிலரை பார்த்த பின்னர் கருத்து தெரிவிக்கையில்இதனை குறிப்பிட்டுள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது என்பிபி அரசாங்கம் ஆட்சிக்கும் அதிகாரத்திற்கும் வந்துஆறுமாதங்களிற்கு மேல் ஆகிவிட்டது,இந்த ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் அவர்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தின் ஊடாக மக்களிற்கு சில உறுதிமொழிகளை வழங்கியிருந்தார்கள். அதில் நாங்கள் தொடர்ச்சியாக வேலை செய்துகொண்டிருக்கும் அரசியல் கைதிகளின் விடுதலை மிகவும் முக்கியமானது ஒன்று. இந்த அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக ,தொடர்ச்சியாக நாங்கள் போராடிக்கொண்டிருக்கின்றோம். இந்த நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக அரசியல் கைதிகள் பல்வேறு ஆண்டுகளாக சிறையில் வாடிக்கொண்டிருக்கின்றனர்,இன்று 30 ஆண்டுகளிற்கு மேல் இந்த சிறைச்சாலைக்குள் பல அரசியல் கைதிகள் உள்ளனர், நான் அவர்களில் ஒரு சிலரை பார்ப்பதற்காக இங்கு வந்தேன். கிட்டத்தட்ட 19 வயதில் கைதுசெய்யப்பட்ட, பத்தொன்பது வயதில் கைதுசெய்யப்பட்ட சிவகுமார் பார்த்தீபன் என்ற இருவர் ,முப்பது வருடங்கள் கடந்தும் இன்று 50 வருடங்கள் ஆகியும் விடுதலையடைய முடியாமல் சிறையில் உள்ளனர். இவர்களின் விடுதலை தொடர்பாக விஜித ஹேரத் அவர்களிடம் ஒக்டோபர் மாதம் நான்,வலியுறுத்தியிருந்தேன் அதற்கு பதிலளித்த அவர் விடுதலை இடம்பெறுகின்றது அதற்கான வேலைகள் இடம்பெறும் என தெரிவித்திருந்தார். அதற்கு பின்னர் பிரதியமைச்சர் ஒருவரின் ஊடாக ஹர்சநாணயக்கார அவர்களிற்கு எடுத்துக்கூறியிருந்தேன்.அதற்குரிய பதில் எனக்கு கிடைக்கவில்லை. அதன் பின்னர் பிரதமர் ஹரிணி அமரசூரியவிற்கு பல்வேறு தகவல்களை அனுப்பியிருந்தேன்,செய்திகளை அனுப்பியிருந்தேன், எத்தனையோ ஊடக சந்திப்புகள் ஊடாக அரசியல் கைதிகள் தொடர்பாக,அவர்களின் கஷ்டங்கள், ஏற்கனவே வழங்கப்பட்ட வாக்குறுதி,மக்கள் ஆணை கிடைத்திருக்கின்றது அவர்களின் விடுதலை என்பது காலத்தின் கட்டாயம் என்பதை தொடர்ச்சியாக எடுத்துக்கூறிக்கொண்டிருக்கின்றோம். ஆனால் இன்றுவரை இன்றுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மீண்டும் என்பிபி தோழர்கள் பொய்யான வாக்குறுதிகளுடன் தேர்தலிற்காக களத்தில் குதித்துள்ளனர். இவர்களிற்கு முதுகெலும்பு இருந்தால் அரசியல்கைதிகளின் விடுதலையின் பின்னர் இவர்கள் இந்த தேர்தலை எதிர்கொள்ளவேண்டும். தொடர்ந்து தமிழ் மக்களை ஏமாற்றிக்கொண்டு பொய்யான வாக்குறுதிகளை வழங்கிக்கொண்டிராமல் இந்த சித்திரவதையை இத்துடன் நிறுத்தி அவர்கள் வாழ்வதற்கு அனுமதிக்கவேண்டும். இதற்கு முன்னர் விடுதலையான எந்தவொரு அரசியல் கைதியும் இந்த சமூகத்திலே எந்தவொரு பிழையான நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. பொய்யான வாக்குறுதிகளை வழங்கிக்கொண்டு அரசியல் இலாபம் தேடும் நோக்கிலே இந்த அரசாங்கம் நகரக்கூடாது. அவர்களின் விடுதலைக்கு எந்த காரணமும் தடையாகயிருக்க வாய்ப்பில்லை, ஏனென்றால் இரண்டு வருடங்களிற்கு முன்னர் நாற்பத்தெட்டு பேர் இருந்தனர்,38 பேரின் விடுதலை இடம்பெற்றுள்ளது அதேபோல மிகுதி பத்துபேரின், விடுதலை நிச்சயமாக இடம்பெறக்கூடிய ஒன்றுதான், ஏனென்றால் அனைத்து அதிகாரங்களும் கொண்ட ஜனாதிபதியினால் அவர்களிற்கான பொதுமன்னிப்பை வழங்க முடியும்,சட்டமா அதிபர்அவர்களிற்கு எதிரான வழக்குகளை தள்ளுபடிசெய்து அவர்களை விடுதலை செய்யலாம்.ஏனென்றால் போதுமான வாக்குமூலங்கள் கிடையாது , சிங்களத்தில் பதியப்பட்ட வாக்குமூலங்களை அடிப்படையாக கொண்டுதண்டனை வழங்கப்பட்டுள்ளது, தண்டனையாகயிருந்தால் கூட அவர்கள் இரண்டு ஆயுள்தண்டனையை அவர்கள் எதிர்நோக்கி முடித்திருக்கின்றார்கள். 19 வயதில் கைதுசெய்யப்பட்ட இருவர் 30 வருடங்கள் கடந்து இன்னமும் சிறையில் ; அரசியல் கைதிகள் விடுதலை குறித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தோழர்கள் மீண்டும் பொய்யான வாக்குறுதிகளுடன் தேர்தல் களத்தில் - ரஜீவ்காந் | Virakesari.lk
  22. 25 Mar, 2025 | 05:09 PM மட்டக்களப்பு செங்கலடி பொது சுகாதாரப் பிரிவிலுள்ள உணவகம் ஒன்றில் மலசல கூடத்தில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற முறையில் உணவு தயாரித்து விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு ஒரு மாதகால சிறைத் தண்டனையும் 60 ஆயிரம் ரூபாவை அபராதமாக செலுத்துமாறும் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான் திங்கட்கிழமை (24) உத்தரவிட்டார். குறித்த பிரதேசத்திலுள்ள உணவகங்களை சம்பவ தினமான திங்கட்கிழமை (24) பொது சுகாதார பரிசோதகர்கள், சுகாதார வைத்திய அதிகாரிகள் முற்றுகையிட்டு சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்தனர். இதன்போது ஒரு உணவகத்தில் மலசல கூடத்தில் உணவு தயாரித்து விற்பனை செய்து வந்ததை கண்டுபிடித்து அந்த உணவக உரிமையாளரை கைது செய்தனர். இதனையடுத்து குறித்த உணவக உரிமையாளர் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்பட்டதையடுத்து அவரை ஒரு மாதகாலம் சிறையில் அடைக்குமாறும் 60 ஆயிரம் ரூபாவை அபராதமாக செலுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டார். அதேவேளை கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு அருகில் வீதி ஓரத்தில் கொல்கலனில் அமைக்கப்பட்டுள்ள இரு உணவகத்தில் மனித பாவனைக்கு பொருத்தமற்ற உணவுகளை விற்பனை செய்த இரு கடைகளுக்கு தலா 10 ஆயிரம் ரூபா வீதம் 20 ஆயிரம் ரூபாவை அபதாரமாக செலுத்துமாறு நீதவான் உத்தரவிட்டார். செங்கலடியில் மலசல கூடத்தில் உணவு தயாரித்து விற்பனை : உரிமையாளருக்கு சிறைத் தண்டனை | Virakesari.lk
  23. நால்வர் மீதான தடை குறித்த பிரித்தானிய அரசின் அறிவிப்பு நீதிக்கான தேடலின் நம்பிக்கைக் கீற்றே - சிறீதரன் 25 Mar, 2025 | 05:40 PM இலங்கையில் தமிழர்கள் மீதான இன அழிப்பு யுத்தத்தில் ஈடுபட்ட இலங்கை ஆயுதப்படையின் முன்னாள் தலைவர் சவேந்திர சில்வா, கடற்படை முன்னாள் தளபதி வசந்த கரன்னகொட, இலங்கை இராணுவத்தின் முன்னாள் தளபதி ஜகத் ஜயசூரிய மற்றும் இலங்கை இராணுவத்தின் சார்பாக செயற்பட்ட துணை இராணுவக் குழுவான கருணா குழுவின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோர் மீது பிரித்தானியா விதித்துள்ள தடை ஈழத் தமிழர்களின் நீதிக்கான தேடலின் நம்பிக்கைக் கீற்று எனவும், அந்த அறிவிப்பை தாம் வரவேற்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகரகத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ள சிறீதரன் எம்.பி, இந்த விடயம் குறித்து அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, எதிர்வரும் செப்டெம்பரில் நடைபெறவுள்ள ஜெனீவா அமர்வுகளுக்கு முன்னதாக, இனப்படுகொலையின் பங்குதாரர்களான நால்வர் மீது பிரித்தானிய அரசு விதித்துள்ள பயணத்தடை, காலம் தாழ்த்தியாவது தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை மீள அரும்பச் செய்திருக்கிறது. இலங்கையில், குறிப்பாக வடக்கு, கிழக்கு தமிழர்கள் மீது பேரினவாத அரசு வலிந்து நடத்திய போரின்போது மோசமான மனித உரிமை மீறல்கள், நீதிக்குப் புறம்பான கொலைகள், சித்திரவதைகள், பாலியல் வன்முறைகளில் ஈடுபட்ட இந்த நான்கு பேர் மீதும் பிரித்தானிய அரசு விதித்திருக்கும் தடையையும், சொத்து முடக்க அறிவிப்பையும், சர்வதேச நீதி கோரும் பயணத்தில் தமக்கு கிடைத்திருக்கும் ஒரு சிறிய நம்பிக்கை ஒளிக்கீற்றாகவே ஈழத் தமிழர்கள் பார்க்கிறார்கள். எண்பது வருடங்களுக்கு மேலாக கேட்பாரற்று படுகொலை செய்யப்பட்ட தமிழ்த் தேசிய இனத்தின் எண்ணங்களுக்கும் இறந்துபோன ஆத்மாக்களுக்கும் இந்தத் தடை அறிவிப்பு தமக்கான நீதியின் கதவு திறக்கும் என்ற நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது. காலனித்துவ ஆட்சி முடிவில், சுதேசிகளான தமிழர்களின் இறைமையை பிறிதோர் இனத்தவரிடம் ஒப்படைத்துச் சென்றமை வரலாற்றுத் தவறு என்பதை உலகம் இப்போதாவது உணரத் தலைப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது என்றுள்ளது. நால்வர் மீதான தடை குறித்த பிரித்தானிய அரசின் அறிவிப்பு நீதிக்கான தேடலின் நம்பிக்கைக் கீற்றே - சிறீதரன் | Virakesari.lk
  24. முன்னாள் இராஜாங்க அமைச்சர் ச.வியாழேந்திரன் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று செவ்வாய்க்கிழமை (25) கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட வியாழேந்திரனை கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் கைது! | Virakesari.lk
  25. இலங்கையில் பாலியல் வன்கொடுமை குற்றங்கள் மற்றும் வீட்டு வன்முறைகள் ஆபத்தான முறையில் அடிக்கடி பதிவாகி வருவதாக குழந்தைகள் மற்றும் பெண்கள் பணியகத்தின் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் (டிஐஜி) ரேணுகா ஜெயசுந்தரா கூறியுள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு அளித்துள்ள செவ்வியின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும், கடந்த 2024ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் வழக்குகள் 2,252 பதிவாகியுள்ளதாகவும், அதில் அதிக எண்ணிக்கையிலான சம்பவங்கள் வீட்டில் (1,420 வழக்குகள்) நடப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். பொது போக்குவரத்து (261 வழக்குகள்), ஒன்லைன் தளங்கள் (192 வழக்குகள்), சாலைகள் (117 வழக்குகள்), பணியிடங்கள் (41 வழக்குகள்), பாடசாலைகள் மற்றும் தனியார் கல்வி வகுப்புகள் (20 வழக்குகள்), மத இடங்கள் (9 வழக்குகள்) மற்றும் பல்வேறு இடங்கள் (192 வழக்குகள்) ஆகியவை பிற இடங்களில் அடங்கும். பரவலான குறைவான அறிக்கையிடல் காரணமாக அந்த புள்ளிவிபரங்கள் பிரச்சினையின் உண்மையான அளவைக் குறைவாகக் குறிக்கின்றன என்றும் அவர் கூறியுள்ளார். பாலியல் துன்புறுத்தலுக்கு அப்பால், வீட்டு வன்முறை மிகவும் கவலைக்குரியதாக உள்ளது. இது தொடர்பில் ஆண்டுதோறும் சுமார் 130,000 புகார்கள் பதிவு செய்யப்படுகின்றன. அத்துடன், பாலியல் துன்புறுத்தல் மற்றும் வீட்டு வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையான விசாரணைகளை நடத்துவதற்கும் தேவையான ஆதரவை வழங்குவதற்கும் சட்ட அமுலாக்க அதிகாரிகள் உறுதி பூண்டுள்ளனர் என்று பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளார். Tamilmirror Online || “பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு ”

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.