Everything posted by பிழம்பு
-
யாழில் அதிகரிக்கும் இணைய நிதி மோசடி !
24 Mar, 2025 | 09:50 AM யாழ்ப்பாணத்தில் அண்மைக் காலமாக பல்வேறு பகுதிகளிலும் இணையம் மூலமாக நிதி மோசடி இடம்பெற்று வருகின்றது. இதன்மூலம் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டனர். இவ்வாறான நிதி மோசடிகள் ஊர்காவற்துறை பகுதியில் மாத்திரம் நன்கு இடம்பெற்றுள்ள நிலையில் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்குகளும் நடைபெற்று வருகின்றன. இந்த இணைய மோசடிகள் பல்வேறு வகையில் இடம்பெற்று வருகின்றன. நிகழ்நிலை செயலி (online App) ஒன்றினை மக்களிடையே பகிர்ந்து அதில் முதலீடு செய்யுமாறு ஊக்குவிக்கப்படுகிறது. அந்த செயலியில் ஆரம்பத்தில் சிறிய தொகையை முதலிடுவதன் மூலம் சிறிய அளவிலான கொடுப்பனவு வழங்கப்படுகிறது. மக்கள் முதல் வருமானத்தை நம்பி அடுத்த தடவை பெரிய ஒரு தொகையை முதலீடு செய்யும் பட்சத்தில் அந்த நிதியானது மோசடியாளர்களால் அபகரிக்கப்படுகிறது. மேலும், வங்கி கணக்கில் பணத்தினை வைப்புச் செய்துள்ளவர்களது கணக்கு இலக்கங்கள் மற்றும் அடையாள அட்டை இலக்கங்கள் என்பன ஆசை வார்த்தை கூறி மக்களிடமிருந்து மோசடியாளர்களால் பெறப்படுகிறது. பின்னர் அவர்களது கைபேசிக்கு இரகசிய இலக்கம் அனுப்பப்பட்டு அவர்களிடமிருந்து அந்த இரகசிய இலக்கமானது பெறப்பட்டு அவர்களது வங்கிக் கணக்கில் உள்ள பணம் மோசடி செய்யப்படுகிறது. இவ்வாறான சம்பவங்கள் சமகாலத்தில் யாழ்ப்பாணத்தில் அதிகரித்து காணப்படுகின்றன. ஊர்காவற்துறை நீதிமன்றத்திலும் இவ்வாறான வழக்குகள் காணப்படுகின்றபடியால் மக்களுக்கு இது குறித்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்துமாறு ஊர்காவற்துறை நீதிமன்ற நீதிவான் ஊர்காவற்துறை பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். யாழில் அதிகரிக்கும் இணைய நிதி மோசடி ! | Virakesari.lk
-
இலங்கையில் முதல் முறையாக விந்தணு வங்கி
24 Mar, 2025 | 12:32 PM கொழும்பு காசல் வீதி மகளிர் வைத்தியசாலையில் விந்தணு வங்கி நிறுவப்பட்டுள்ளது. கருத்தரிப்பின்மை பிரச்சினைக்கு தீர்வுகாணும் முகமாக இந்த விந்தணு வங்கி நிறுவப்பட்டுள்ளது. செயற்கை முறை கருத்தரிப்புக்கு பயன்படுத்துவதற்காக வழங்கப்படும் விந்தணுக்களைச் சேகரித்து இந்த விந்தணு வங்கி நிறுவப்பட்டுள்ளது. இந்த விந்தணு வங்கியானது குழந்தையின்மையால் அவதிப்படும் தனிநபர்கள் மற்றும் தம்பதிகளுக்கு புதிய நம்பிக்கையை அளிக்கிறது. செயற்கை முறை கருத்தரிப்பு, கருத்தரிப்பின்மை பிரச்சினைக்குத் தீர்வுகாணல் , கருத்தரிக்க விரும்பும் பெண்கள் மற்றும் தம்பதிகளுக்காக உலகம் முழுவதும் விந்தணு வங்கிகள் பல காணப்படுகின்றன. இந்த வசதி தற்போது இலங்கையிலும் கொண்டுவரப்பட்டுள்ளது. கொழும்பு காசல் வீதி மகளிர் வைத்தியசாலையின் வைத்தியர் அஜித் குமார தண்டநாராயண இது தொடர்பில் தெரிவிக்கையில், இந்த சேவைக்காக விந்தணுக்களை வழங்கும் நபர்களின் தனிப்பட்ட தகவல்கள் பாதுகாக்கப்படும். விந்தணுக்களை வழங்க விரும்பும் நபர்கள் தொடர்ச்சியாக வைத்திய பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும். இலங்கையின் சுகாதார துறையில் புதிய மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் கொண்டும் வரும் நோக்கத்தில் இந்த விந்தணு வங்கி நிறுவப்பட்டுள்ளது. எனவே, ஒவ்வொரும் தங்களது விந்தணுக்களை வழங்கி இந்த முயற்சியை ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என தெரிவித்துள்ளார். இலங்கையில் முதல் முறையாக விந்தணு வங்கி | Virakesari.lk
-
பங்குகளை விற்பனை செய்து 21 மில்லியன் ரூபா மோசடி : உதய கம்மன்பில விடுதலை !
24 Mar, 2025 | 02:52 PM போலி ஆவணம் தயாரித்து அவுஸ்திரேலிய பிரஜை ஒருவருக்குச் சொந்தமான பங்குகளை விற்பனை செய்து 21 மில்லியன் ரூபா மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில மற்றும் வர்த்தகர் ஜயசிங்க ஆகியோரை குறித்த குற்றச்சாட்டிலிருந்து விடுவித்து விடுதலை செய்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை (24) உத்தரவிட்டுள்ளது. நீண்ட காலமாக தொடரப்பட்ட இந்த வழக்கு மேல் நீதிமன்ற நீதவான் நாமல் பண்டார பலல்லே முன்னிலையில் இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 1996 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 26 முதல் 1997 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 25 ஆகிய திகதிகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் போலி ஆவணம் தயாரித்து அவுஸ்திரேலிய பிரஜை ஒருவருக்குச் சொந்தமான பங்குகளை விற்பனை செய்து 21 மில்லியன் ரூபா மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில மற்றும் வர்த்தகர் ஜயசிங்க ஆகியோருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில மற்றும் வர்த்தகர் ஜயசிங்க ஆகியோருக்கு எதிராக போதுமான சாட்சிகள் இல்லாத காரணத்தினால் அவர்களை வழக்கிலிருந்து விடுவித்து விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. பங்குகளை விற்பனை செய்து 21 மில்லியன் ரூபா மோசடி : உதய கம்மன்பில விடுதலை ! | Virakesari.lk
-
யாழ். மாநகர வேட்புமனு நிராகரிப்புக்கு எதிராக உயர் நீதிமன்றம் செல்லும் சுயேட்சைக் குழு
மத்திய அரசின் சூழ்ச்சியே யாழ். மாநகரில் எமது வேட்பு மனு நிராகரிப்புக்கு காரணம் என சுட்டிக்கட்டியுள்ள தொழிலதிபர் ஞானபிரகாசம் சுலக்ஷன் தலைமையிலான சுயேட்சைக் குழு எதிர்வரும் வெள்ளிக்கிழமை (28) இந்த தீர்மானத்துக்கு எதிராக உயர் நீதிமன்றத்தை நாடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் (24)வேட்புமனு நிரகரிப்பு தொடர்பாக ஊடக சந்திப்பை நடத்தி இதனை தெரிவித்த இந்த சுயேச்சைக் குழுவின் தலைவர் சுலக்சன் மற்றும் வேட்பாளர் விஜயகாந்த் மேலும் கூறுகையில், எமது சுயேச்சைக் குழு உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தொழிலதிபர் ஞானபிரகாசம் சுலக்ஷன் தலைமையில் யாழ்ப்பாணம், கோப்பாய், வேலணை ஆகிய உள்ளூராட்சி மன்றங்களில் சுயேச்சைக் குழுவாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்தது. இதில் யாழ். மாநகரின் வேட்புமனு பெண் வேட்பாளரது உறுதியுரை குறித்த விடயம் தொடர்பான சர்ச்சையால் நிராகரிக்கப்பட்டுள்ளது. ஆனால், நாம் சட்டத்தின் பிரகாரமே வேட்புமனுவை சமர்ப்பித்திருந்தோம். அதன்படி, யாழ். மாநகரில் எமது வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த விடயம் குறித்து நாம் சட்ட ஆலோசகர்களுடன் கலந்துரையாடியுள்ளோம். அதன்படி தேர்தல் திணைக்களத்தின் இந்த அறிவிப்புக்கு எதிராக நாம் நீதி கோரி எதிர்வரும் வெள்ளிக்கிழமை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யவுள்ளோம் என்றனர். யாழ். மாநகர வேட்புமனு நிராகரிப்புக்கு எதிராக உயர் நீதிமன்றம் செல்லும் சுயேட்சைக் குழு | Virakesari.lk
-
இலங்கையில் எலான் மஸ்கின் “ஸ்டார்லிங்க்” இணைய சேவையை இடைநிறுத்த நடவடிக்கை
இலங்கையில் எலான் மஸ்கின் “ஸ்டார்லிங்க்” (Starlink) என்ற செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைய சேவையை இடைநிறுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்பு மற்றும் அரச நிறுவனங்களின் தனிப்பட்ட தரவுகள் ஆகியவற்றின் பாதுகாப்புக்கான உத்தரவாதம் உறுதிசெய்ய இந்த இணைய சேவையை இடைநிறுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. “ஸ்டார்லிங்க்” இணையதள சேவையை சிலர் சட்டவிரோத நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துவதற்கு வாய்ப்பு உள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு கடந்த 2024 ஆம் ஆண்டு எலான் மஸ்கின் “ஸ்டார்லிங்க்” (Starlink) என்ற செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைய சேவையை இலங்கைக்கு வழங்குவதற்கான உரிமத்தை வழங்கியது. “ஸ்டார்லிங்க்” இணைய சேவையின் பாதுகாப்புக்கான உத்தரவாதம் உறுதிசெய்யப்படும் வரை, இணைய சேவையை நாட்டில் நடைமுறைப்படுத்த புதிய அரசாங்கம் அனுமதி வழக்காது என டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் பொறியியலாளர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார். இலங்கையில் எலான் மஸ்கின் “ஸ்டார்லிங்க்” இணைய சேவையை இடைநிறுத்த நடவடிக்கை | Virakesari.lk
-
யாழில் நண்பர்களுடன் கடலில் குளிக்க சென்ற இளைஞன் சடலமாக மீட்பு!
22 Mar, 2025 | 05:04 AM யாழ். சேந்தாங்குளம் கடலில் வெள்ளிக்கிழமை (21) நண்பர்களுடன் குளிக்கச் சென்ற இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கோவில் வாசல், காங்கேசன்துறை வீதி, இணுவில் என்ற முகவரியைச் சேர்ந்த பி.சாருஜன் (வயது 20) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த இளைஞன் அவரது நண்பர்கள் 14 பேருடன் குளிப்பதற்காக இன்று மதியம் இளவாலை - சேந்தாங்குளம் கடலுக்கு சென்றனர். கடலில் குளித்துக்கெண்டு இருந்தவேளை திடீரென கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டார். இந்நிலையில் குறித்த இளைஞனை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. பின்னர் இளைஞனின் சடலம் கரை ஒதுங்கியது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது. குறித்த கடல் பகுதியானது பாரிய அலை எழும் பகுதியாக காணப்படுகிறது. இருப்பினும் எந்தவிதமான எச்சரிக்கை அறிவிப்புகளும் காட்சிப்படுத்தப்படவில்லை. இதற்கு முன்னரும் இவ்வாறு மரணம் இதே பகுதியில் சம்பவித்துள்ளன. எனவே உரிய எச்சரிக்கை சமிக்ஞைகளை காட்சிப்படுத்துமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். யாழில் நண்பர்களுடன் கடலில் குளிக்க சென்ற இளைஞன் சடலமாக மீட்பு! | Virakesari.lk
-
யாழில் பெருந்தொகையிலான கஞ்சா கைப்பற்றல்
22 Mar, 2025 | 12:10 PM யாழ்ப்பாணம் பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தும்பளை மூர்க்கன் கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 154 பொதிகளில் அடங்கிய 300 கிலோவிற்கும் அதிகமான கஞ்சா இன்று சனிக்கிழமை (22) கைப்பற்றப்பட்டுள்ளது. இராணுவப் புலனாய்வாளர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இராணுவம் மற்றும் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே இந்த கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. இதன்போது, மீன்பிடிப் படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் இது தொடர்பில் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை. கைப்பற்றப்பட்ட பொருட்களை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் சனிக்கிழமை (22) ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யாழில் நீண்ட நாட்களுக்குப் பின்னர் பெருந்தொகையிலான கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். யாழில் பெருந்தொகையிலான கஞ்சா கைப்பற்றல் | Virakesari.lk
-
மன்னார் பள்ளமடு - பெரிய மடு பிரதான வீதியில் விபத்து - ஒருவர் பலி ; மூவர் படுகாயம்
22 Mar, 2025 | 02:04 PM மன்னார் - பள்ளமடு பெரியமடு பிரதான வீதியில் இன்று சனிக்கிழமை (22) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக அடம்பன் பொலிஸார் தெரிவித்தனர். பெரிய மடு பிரதான வீதியூடாக பயணித்த லொறி வேககட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்திற்கு உள்ளாகிய நிலையில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த லொறியில் 4 நபர்கள் பயணித்துள்ளனர். இதன் போது, ஈச்சளவக்கை கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததோடு, சாரதி உள்ளடங்களாக மூவர் காயமடைந்தனர். காயமடைந்த மூவரும் மன்னார் மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர்களில் இருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். உயிரிழந்தவரின் சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை அடம்பன் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். மன்னார் பள்ளமடு - பெரிய மடு பிரதான வீதியில் விபத்து - ஒருவர் பலி ; மூவர் படுகாயம் | Virakesari.lk
-
காசாவில் நிலைமை மோசம் - இலங்கை ஆழ்ந்த கவலை ; வெளிவிவகார அமைச்சு அறிவிப்பு
22 Mar, 2025 | 04:31 PM ஆர்.ராம் காசாவில் மோசமடைந்து வரும் நிலைமை குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு அறிவித்துள்ளது. இவ்விடயம் குறித்து அவ்வமைச்சு விடுத்துள்ள அறிவிப்பில், காசாவில் நிலவும் நிலைமை குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது. மேலும் நிலைமையை மோசமாக்கும் எந்தவொரு நடவடிக்கைகளையும் தவிர்க்குமாறு அனைத்து தரப்பினரையும் கேட்டுக்கொள்கிறது. விரைவில் இப்பகுதியில் நிலையான அமைதி நிலைநாட்டப்படும் என்று நாங்கள் நம்புகிறோம் என்றுள்ள முன்னதாக, மு.கா.தலைவர் ரவூப் ஹக்கீம் பாராளுமன்றத்தில் காசா விடயம் சம்பந்தமாக அரசாங்கம் தனது நிலைப்பாட்டை உடன் வெளிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. காசாவில் நிலைமை மோசம் - இலங்கை ஆழ்ந்த கவலை ; வெளிவிவகார அமைச்சு அறிவிப்பு | Virakesari.lk
-
லண்டன் பெண்ணுக்கு யாழில் நேர்ந்த துயரம் - நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு!
செய்தியின் மூலம் ஏற்கனவே திரியில் கொடுக்கப்பட்டு இருக்கு ஆனால் வீரகேசரி நடத்துனரா சாரதியா என்பதில் தானும் குழம்பி எம்மையும் குழப்புது
-
நீதவானாக நியமனம் பெறும் மலையக பெண் ஆளுமை
Published By: Vishnu 21 Mar, 2025 | 10:20 PM பண்டாரவளை மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த பத்து வருடங்களாக சட்டத்தரணியாக சேவையாற்றிய சட்டத்தரணி ஆனந்தவதனி புஷ்பராஜ் 2024 ஆம் ஆண்டு இலங்கை நீதித்துறைக்கு நீதவனாக ஆசேர்க்கும் போட்டி பரீட்சையிலே சிறப்பு சித்தி பெற்றதன் அடிப்படையில், அண்மையில் இடம்பெற்ற நேர்முகத்தேர்விலும் தேர்ச்சிப்பெற்று நீதவனாக நியமனம் செய்யப்படவுள்ளார். இவர் பண்டாரவளை நீதிமன்ற பிரபல சட்டத்தரணி சிரில் ராஜ் அவர்களின் மனைவியும் பசறை ஜெயந்தி பேக்கரி உரிமையாளரான ராசு புஷ்பராஜ் ஜெயந்தி ராணி தம்பதியினரின் மகளும் ஆவார். இவர் பதுளை மாவட்டத்திலே மலையக தமிழ் மக்கள் சார்ந்து தெரிவு செய்யப்படும் முதலாவது நீதிபதியும், பெண் நீதிபதியும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தன்னுடைய ஆரம்பக் கல்வியை பசறை தமிழ் தமிழ் மகா வித்தியாலயத்திலும் பின்னர் உயர்தர கல்வியை மட்டக்களப்பு வின்சன் மகளிர் தேசிய பாடசாலையிலும் நிறைவு செய்து, கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்டப் பீடத்தில் சட்டமாணி பட்டத்தைப் பெற்றுக் கொண்டதன் பின்னர் சட்டக் கல்லூரியிலே தனது தொழில்நிலை படிப்பை முடித்தது பின்னர் கடந்த 2015 ஆம் ஆண்டிலிருந்து பத்து வருடங்களாக பண்டாரவளை மாவட்ட நீதிமன்றத்திலும் தொழில் நியாய சபை நீதிமன்றத்திலும் சேவையாற்றி, மலையக மக்கள் சார்ந்து பல்வேறு வழக்குகளில் சட்டத்தரணியாக கடமை புரிந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. நீதவானாக நியமனம் பெறும் மலையக பெண் ஆளுமை | Virakesari.lk
-
தூத்துக்குடியில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய விலாங்கு மீனுக்கு 'தமிழிகம்' என பெயர் சூட்டியது ஏன்?
மீன்கள் என்றவுடன் உங்கள் மனதில் தோன்றும் வழக்கமான வரையறை எதற்குள்ளும் பொருந்தி வராதவை விலாங்கு மீன்கள். மெல்லிய, வழுவழுப்பான மற்றும் நீண்ட பாம்பு போன்ற உடலமைப்பைக் கொண்டவை. அத்தகைய விலாங்கு மீன்களில், ஒரு புதிய இனம் தமிழ்நாட்டின் தூத்துக்குடி கடல் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த விலாங்கு மீன் அதிகம் பேசுபொருள் ஆவதற்குக் காரணம் அதன் பெயர். அதற்கு அரியோசோமா தமிழிகம் (Ariosoma tamilicum) என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழியை அடையாளப்படுத்தும் விதமாக விலாங்கு மீனுக்கு பெயர் சூட்டியது ஏன்? சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டதா? இந்தப் புதிய வகை விலாங்கு மீன் குறித்து ஆய்வாளர்கள் கூறுவது என்ன? இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் (ICAR) கீழ் செயல்படும் தேசிய மீன் மரபணு வளப் பணியகத்தின் (NBFGR) ஆய்வாளர்கள், இதுவரை அறியப்படாத காங்கிரிடே (Congridae)) என்ற அறிவியல் குடும்பத்தைச் சேர்ந்த புதிய வகை விலாங்கு மீனை அடையாளம் கண்டுள்ளனர். இந்தப் புதிய விலாங்கு மீன் கண்டுபிடிக்கப்பட்ட காரணத்திற்காக மட்டுமின்றி, அதற்கு தமிழ் கலாசாரத்தை அடையாளப்படுத்தும் வகையில் பெயர் சூட்டியிருப்பதால் பொது மக்கள் மத்தியில் சிறப்புக் கவனம் பெற்றுள்ளது. அரியோசோமா தமிழிகம் என்ற அறிவியல் பெயரைக் கொண்ட இந்த விலாங்கு மீன், உலகின் பழமையான மொழிகளில் ஒன்றாகக் கருதப்படும் தமிழ் மற்றும் அதன் தொன்மைக்கு மரியாதை செலுத்தும் விதமாகச் சூட்டப்பட்டுள்ளது என்று தேசிய மீன் மரபணு வளப் பணியகத்தின் செயல் இயக்குநர் முனைவர் டி.டி.அஜித் குமார் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். தமிழிகம் விலாங்கு மீனை முதலில் கண்டுபிடித்த மீனவர்கள் படக்குறிப்பு,புதிதாதக் கண்டுபிடிக்கப்பட்ட விலாங்கு மீனுக்கு தமிழ்நாட்டின் பெயரைச் சூட்டுமாறு மீனவர்கள் கோரியதாகத் தெரிவித்தார் முனைவர் டி.டி. அஜித் குமார். இந்தப் புதிய கடல்வாழ் உயிரினத்தைக் கண்டுபிடிப்பதில் ஆய்வாளர்களைப் போலவே, தூத்துக்குடி மீனவர்களுக்கும் முக்கியப் பங்கு இருப்பதாகத் தெரிவித்தார் தமிழிகம் விலாங்கு மீன் குறித்த ஆய்வுக் கட்டுரையின் முன்னணி ஆசிரியரான முனைவர். கோடீஸ்வரன். "தமிழக கடலோரப் பகுதிகளில் தொடர்ச்சியாக ஆய்வுகளை மேற்கொண்டு வருவதால் மீனவர்களுடன் தொடர்பிலேயே இருப்போம். அவர்களும் புதிதாக, தாங்கள் இதுவரை கண்டிராத தோற்றங்களைக் கொண்ட கடல் உயிரினங்களைக் கண்டால் உடனே எங்களுக்குப் புகைப்படம் எடுத்து அனுப்புவார்கள். அதே போலத்தான் தமிழிகம் விலாங்கு மீனும் எங்கள் பார்வைக்குக் கொண்டு வரப்பட்டது. மீனவர்களின் வலையில் சிக்கிய இந்த விலாங்கு மீனின் தோற்றம் இதுவரை காணாத வகையில் வித்தியாசமாக இருந்ததால், மீனவர்கள் அதை எங்களிடம் பகிர்ந்தனர்," என்று விவரித்தார் கோடீஸ்வரன். "தமிழிகம் விலாங்கு மீன் இனத்தைக் கண்டுபிடிப்பதில் எங்களுக்கு உதவிய மீனவர்கள் அதற்குத் தமிழ்நாட்டின் பெயரை வைக்குமாறு கோரினர். பின்னர் உலகின் பழமையான மொழியான தமிழின் பெயரை அதற்கு வைக்குமாறும் சில மீனவர்கள் கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில், தமிழ் மொழி மற்றும் அதன் கலாசாரத்தை அடையாளப்படுத்தும் விதமாக இந்தப் பெயர் சூட்டப்பட்டது. பின்னர் இது சர்வதேச ஆய்வறிக்கை விமர்சகர்களாலும் அங்கீகரிக்கப்பட்டது," என்று முனைவர் அஜித் குமார் கூறினார். தேசிய மீன் மரபணு வளப் பணியகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் குழு, லட்சத்தீவு உள்பட இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் புதிய கடல்வாழ் உயிரினங்களைக் கண்டுபிடிக்கும் நோக்குடன் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வின்போது அரியோசோமா இனத்தைச் சேர்ந்த காங்கிரிடே விலாங்கு மீன் இனம் கண்டுபிடிக்கப்பட்டது. "இந்த விலாங்கு மீனின் தோற்றத்தில் இருந்த தனித்தன்மையைப் வெறும் கண்களால் பார்க்கும்போதே கண்டறிய முடிந்தது. அதை மேலும் ஆய்வு செய்ததில், அதுவொரு புதிய இனம் என்பது உறுதி செய்யப்பட்டது," என்று இந்த ஆய்வுக் குழுவின் முன்னணி ஆய்வாளரான முனைவர். கோடீஸ்வரன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். இதேபோல், முன்னமே தூத்துக்குடியில் இருந்து, இதே காங்கிரிடே அறிவியல் குடும்பத்தைச் சேர்ந்த மற்றுமொரு விலாங்கு மீன் கடந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. "அதற்கு தங்கள் ஊரின் பெயரை வைக்குமாறு மீனவர்கள் கேட்டனர். ஆகையால் அந்த விலாங்கு மீனுக்கு அரியோசோமா தூத்துக்குடியன்ஸ் (Ariosoma Thoothukudiense) எனப் பெயர் வைக்கப்பட்டது" என்று கூறினார் கோடீஸ்வரன். புதிய கடல்வாழ் உயிரினங்களுக்கான தேடல் படக்குறிப்பு,தூத்துக்குடியன்ஸ் விலாங்கு மீனுக்கும் இந்த தமிழிகம் விலாங்கு மீனுக்கும் இடையே பல வேறுபாடுகள் இருப்பதாகக் கூறுகிறார் முனைவர் கோடீஸ்வரன் அரியோசோமா தமிழிகத்தின் தோற்றதிலேயே தனித்துவம் தெரிந்தாலும், அது ஒரு தனி இனமா என்பதை உறுதி செய்யப் பல்வேறு பகுப்பாய்வுகளை மேற்கொள்ள வேண்டியிருந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர். உருவவியல் பகுப்பாய்வு, மரபணு மூலக்கூறு பகுப்பாய்வு, அதன் உடலமைப்பு மற்றும் எலும்புக்கூடு ஆகியவற்றை ரேடியோகிராஃபி மூலம் ஆய்வு செய்வது எனப் பல்வேறு செயல்முறைகளின் மூலம் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அதன் விளைவாகவே இந்த விலாங்கு மீன் இதுவரை கண்டிராத ஒரு தனி இனம் என்பதை உறுதி செய்ததாகவும் விவரித்தார் கடல் உயிரின ஆய்வாளர் கோடீஸ்வரன். இதன் ஆய்வு முடிவு, சர்வதேச ஆய்விதழான ஸூடாக்ஸாவில் (Zootaxa) ஆய்வுக் கட்டுரையாக வெளியிடப்பட்டன. அதன்படி, இந்த விலாங்கு மீன் பல தனித்துவமான அம்சங்களைக் கொண்டுள்ளது. இதில் முன்புற கண் விளிம்பில் ஒரு வெண்மை நிறப் பட்டை மற்றும் கீழ் தாடைக்கு அருகே வயிற்றுப் பகுதியில் கருமை நிறத் திட்டுகள் உள்ளன. கூடுதலாக அதன் மேல் தாடையின் பாதி வரை இருக்கக்கூடிய நீண்ட பற்களைக் கொண்டுள்ளன. தூத்துக்குடியன்ஸ் விலாங்கு மீனும் தமிழிகம் விலாங்கு மீனும் ஒரே அறிவியல் குடும்பத்தைச் சேர்ந்தவையாக இருந்தாலும், இவற்றுக்கு இடையே பல வேறுபாடுகள் உள்ளதாக கோடீஸ்வரன் குறிப்பிட்டார். குறிப்பாக, "தமிழிகம் விலாங்கு மீனுக்கு 118 முதல் 123 முதுகெலும்புகள் வரை இருக்கும். ஆனால் தூத்துக்குடியன்ஸுக்கு 160 முதல் 164 முதுகெலும்புகள் வரை இருக்கும்," என்கிறார் அவர். முனைவர் அஜித் குமாரின் கூற்றுப்படி, தேசிய மீன் மரபணு வளப் பணியகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் குழு, இதுவரை இந்திய கடல் பகுதிகளில் 14 வகையான விலாங்கு மீன்களைக் கண்டுபிடித்துள்ளனர். அதிகம் அறியப்படாத கடல்வாழ் உயிரினங்கள் மீது கவனம் செலுத்தி வரும் இந்த ஆய்வுக் குழு, இந்திய கடல் பகுதிகளில் வாழும் உயிரினங்களிலேயே அதிகமாக ஆய்வு செய்யப்படாத விலாங்கு மீன்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார். விலாங்கு மீன்கள் எண்ணிக்கையில் மிகுதிய இருந்தபோதிலும், "இந்திய மக்கள் அதை ஓர் விருப்ப உணவாகக் கருதாத காரணத்தால், அதன் மீது அதிக கவனம் செலுத்தப்படவில்லை. அதனால், ஆய்வுகளும் அவை குறித்துப் பெரியளவில் நடைபெறவில்லை. நீளமான, பாம்பு போன்ற உடலமைப்பு, வழுவழுப்பான தோல், அவற்றின் நடத்தைகள், உயிரியல், சூழலியல் முக்கியத்துவம் பற்றி விரிவாக ஆராய வேண்டிய தேவை அதிகமுள்ளது," என்று கூறுகிறார் முனைவர். அஜித் குமார். பதுங்கியிருந்து இரையை வேட்டையாடும் விலாங்கு மீன் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,மாலத்தீவு கடல் பகுதியில் படம் பிடிக்கப்பட்ட அஞ்சாலை என்றழைக்கப்படும் விலாங்கு மீன் வகை (கோப்புப் படம்) மீன்கள் என்றவுடன் உங்கள் மனதில் தோன்றும் வழக்கமான வரையறை எதற்குள்ளும் பொருந்தி வராத, மெல்லிய, நீண்ட பாம்பு போன்ற உடலமைப்பைக் கொண்டவை விலாங்கு மீன்கள். இந்த உடலமைப்பு, மிகவும் குறுகலான இடங்களுக்குள் நுழையவும், வழுக்கிக் கொண்டு எளிதில் நழுவிச் செல்லவும் ஏதுவாக இருக்கிறது. விலாங்கு மீன்கள் கடல் வாழ் உயிரினங்களில் மிகவும் ரகசியமானவையாகக் கருதப்படுகின்றன. இவை பெரும்பாலும் கடலின் ஆழத்தில், பாறை இடுக்குகளில், குகைகளில் வாழும் பழக்கம் கொண்டவை. மீன்களில் பெரும்பாலானவை குழுக்களாகக் கூடி வாழ்பவையாக இருக்கின்றன. ஆனால், விலாங்கு மீன்கள் ஒரே இடத்தில் பல இருந்தாலும், தனித்தனியாக வாழக் கூடியவை என்றும் இனப்பெருக்கத்திற்காக மட்டுமே இவை ஒன்று சேரும் எனவும் குறிப்பிட்டார் கோடீஸ்வரன். வேட்டையாடி உயிரினமான விலாங்கு மீன், சிறிய மீன்கள், ஓட்டுமீன்கள், மெல்லுடலிகள் எனப் பல வகையான இரைகளைச் சாப்பிடுகின்றன. அவை பதுங்கியிருந்து தாக்கும் வேட்டை பாணியைக் கொண்டவை. பெரும்பாலும், பாறை இடுக்கு போன்ற தனது மறைவிடத்தில் காத்திருந்து, தனக்கு அருகில் வரும் இரைகளைத் தாக்கி உண்கின்றன. இருப்பினும், இவற்றின் இனப்பெருக்க நடத்தைகள் ஆய்வாளர்களுக்கு இன்னும் மர்மமாக இருப்பதாகவும், அதுகுறித்து விரிவான ஆய்வுகள் தேவைப்படுவதாகவும் குறிப்பிட்டார் முனைவர். கோடீஸ்வரன். விலாங்கு மீன்கள் கடலின் ஆழத்தில் வாழ்வதால், அவற்றை ஆய்வு செய்வதில் பல சவால்கள் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், இந்தியாவில் மட்டுமின்றி உலகளவிலேயே அவை குறித்த ஆய்வுகள் குறைவாக இருப்பதாகத் தெரிவித்தார். பட மூலாதாரம்,Dr. Kodeeswaran P படக்குறிப்பு,அரியோசோனா தமிழிகம் என்று பெயரிடப்பட்ட புதிய வகை விலாங்கு மீன் குறிப்பாக அவற்றின் இனப்பெருக்க செயல்முறை இன்னமும் பல ஆய்வாளர்களுக்கு மர்மமாகவே இருந்து வருகிறது. கடல் பரப்பின் மேற்புறத்தில் முட்டையிடும் மற்ற மீன்களைப் போலன்றி, இவை ஆழ்கடலில் முட்டையிடுகின்றன. "விலாங்கு மீன்கள் ஆழமான கடல் நீரில் இனப்பெருக்கம் செய்வதாகவும் அவற்றின் லார்வாக்கள் கடலின் நடுப்பகுதிக்குச் சென்று, அங்கு வளர்வதாகவும் நம்பப்படுகிறது. ஆனால், அதுகுறித்த தெளிவான ஆதாரங்கள் இதுவரை கிடைக்கவில்லை," என்று கூறினார் கோடீஸ்வரன். இந்த நிலையில், அரியோசோமா தமிழிகத்தின் கண்டுபிடிப்பு, இந்திய கடல் பரப்பிலுள்ள பரந்த, பன்முகத் தன்மை கொண்ட விலாங்கு மீன்களின் வாழ்வியலைப் புரிந்துகொள்வதற்கான ஒரு தொடக்கப் புள்ளியாக அமையக்கூடும் என்று வல்லுநர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். ஒப்பீட்டளவில் குறைவாகவே ஆய்வு செய்யப்பட்ட உயிரினமாக இருந்தாலும், கடலின் சூழலியல் அமைப்புகளில் வேட்டையாடியாகச் செயல்படும் விலாங்குகள் கடல் சுற்றுச்சூழலின் சமநிலையைப் பேணுவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்தக் கண்டுபிடிப்பு அதிகம் அறியப்படாத மீன் இனங்கள் வழங்கக்கூடிய பொருளாதார நன்மைகள் குறித்தும் கவனத்தை ஈர்த்துள்ளது. மற்ற உயிரினங்களுடன் ஒப்பிடும்போது விலாங்குகள் மீன்பிடித் தொழிலில் ஒப்பீட்டளவில் குறைவாகப் பயன்படுத்தப்படுவதால், அவற்றைச் சுற்றி நிலையான வணிக மீன்பிடி நடைமுறைகளை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. இது உள்ளூர்ப் பொருளாதாரங்கள் மற்றும் பல்லுயிர்ப் பாதுகாப்பு முயற்சிகள் இரண்டுக்கும் பயனளிக்கக்கூடும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு தூத்துக்குடியில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய விலாங்கு மீனுக்கு 'தமிழிகம்' என பெயர் சூட்டியது ஏன்? - BBC News தமிழ்
-
லண்டன் பெண்ணுக்கு யாழில் நேர்ந்த துயரம் - நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு!
யாழில் வெளிநாட்டு பெண்ணுடன் தகாத முறையில் ஈடுபட்ட அரச பேருந்து சாரதி ஒருவர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்; லண்டனில் இருந்து யாழ். வந்த 27 வயதுடைய சுற்றுலாப் பயணி ஒருவர் நேற்றையதினம் நயினாதீவு செல்வதற்காக அரச பேருந்து ஒன்றில் குறிகட்டுவான் நோக்கி பயணித்துள்ளார். இதன்போது பேருந்து நடத்துனர் குறித்த பெண்ணுடன் அங்க சேஷ்டையில் ஈடுபட்டார். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். ஊர்காவற்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விதான பத்திரன தலைமையிலான பொலிஸ் குழுவினர் விரைந்து செயற்பட்டு குறித்த சந்தேகநபரை கைது செய்தனர். இந்நிலையில் அவரை ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியவேளை நீதிமன்ற குற்றப்பணமாக 1500 ரூபா அறவிடப்பட்டதுடன், குறித்த பெண்ணுக்கு 10 ஆயிரம் ரூபா வழங்க வேண்டும் என்பதுடன் ஒத்திவைக்கப்பட்ட 6 மாதங்கள் சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டது. லண்டன் பெண்ணுக்கு யாழில் நேர்ந்த துயரம் - நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு!
-
தமிழில் பட்டப்படிப்பின் டிப்ளோமா கற்றுத் தேர்ந்த பௌத்த துறவி!
யாழ்ப்பாணம் 9 மணி நேரம் முன் தமிழில் பட்டப்படிப்பின் டிப்ளோமா கற்றுத் தேர்ந்த பௌத்த துறவி! யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழில் பட்டப்படிப்பின் டிப்ளோமாவைப் பயின்று பௌத்த துறவி ஒருவர் பட்டம் பெற்றுள்ளார். யாழ். பல்கலைக்கழகத்தில் 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவின் மூன்றாம் நாள், முதலாவது அமர்வின் போது சன்னாஸ்கம இந்திரானந்த தேரர் என்ற பெயருடைய பௌத்த துறவியே, உயர்பட்டப்படிப்புகள் பீடத்தினால் நடாத்தப்பட்ட தமிழில் பட்டப்பின் தகைமைக் கற்கை நெறியைப் பூர்த்தி செய்து, பட்டம் பெற்றுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜாவினால் சம்பிரதாய பூர்வமாக இவரது பட்டம் கையளிக்கப்பட்டது. தமிழில் பட்டப்படிப்பின் டிப்ளோமா கற்றுத் தேர்ந்த பௌத்த துறவி!
-
இலங்கை உள்ளூராட்சித் தேர்தல் 2025; செய்திகள்
யாழில் 22 கட்சிகளும் 13 சுயேட்சைகளும் நிராகரிப்பு 21 Mar, 2025 | 09:37 AM யாழ்ப்பாணத்தில், 22 கட்சிகளுடையதும் , 13 சுயேட்சை குழுக்களினதும் நியமன பத்திரங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் ம.பிரதீபன் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட செயலகத்தில் வியாழக்கிழமை (20) ஊடகவியலாளர்களிடம் ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்பு மனுக்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக 148 கட்சிகளும் 27 சுயேட்சை குழுக்களும் கட்டுப்பணத்தை செலுத்தி இருந்தனர். அவற்றில் 136 கட்சிகளும், 23 சுயேட்சை குழுக்களும் நியமன பத்திரத்தை தாக்கல் செய்தனர். அதில் 114 கட்சிகளினதும், 10 சுயேட்சை குழுக்களினதும், நியமன பத்திரங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 22 கட்சிகளுடையதும், 13 சுயேட்சை குழுக்களினதும் நியமன பத்திரங்கள் நிராகரிக்கப்பட்டன. யாழ் . மாநகர சபையில் தமிழ் மக்கள் கூட்டணி , ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஈரோஸ் ஆகிய கட்சிகளினதும், ஞானப்பிரகாசம் சுலக்சன் , கௌசல்யா நரேந்திரன் ஆகியோரின் நியமன பத்திரங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. வல்வெட்டித்துறை நகர சபையில், இராமச்சந்திரன் சுரேன் மற்றும் யோகேஸ்வரி அருளானந்தம் ஆகியோரது சுயேட்சை குழுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. சாவகச்சேரி நகர சபையில், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி கட்சியினுடையதும், மகாலிங்கம் சதீஸ் மற்றும் சிவகுருநாதன் ஆகியோரின் சுயேட்சையும் நிராகரிக்கப்பட்டுள்ளது. காரைநகர் பிரதேச சபை, நெடுந்தீவு பிரதேச சபை மற்றும் ஊர்காவற்துறை பிரதேச சபை ஆகியவற்றில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் நியமன பத்திரம் நிராகரிக்கப்பட்டுள்ளது. வலிகாமம் மேற்கு பிரதேச சபையில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி கட்சியும் துரைராசா சுஜிந்தனின் சுயேட்சையும் நிராகரிக்கப்பட்டுள்ளது. வலிகாமம் வடக்கில் சபரிமுத்து ஸ்டாலின் என்பவரது சுயேச்சை குழு நிராகரிக்கப்பட்டுள்ளது. வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையில், ஸ்ரீலங்கா கம்பினியுஸ் கட்சியின் நியமன பத்திரம் நிராகரிக்கப்பட்டுள்ளது. வலிகாமம் தெற்கு பிரதேச சபையில் தமிழ் மக்கள் கூட்டணி ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளின் நியமன பத்திரம் நிராகரிக்கப்பட்டுள்ளது. வலிக்காமம் கிழக்கு பிரதேச சபையில், மக்கள் போராட்ட முன்னணி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளின் நியமன பத்திரம் நிராகரிக்கப்பட்டுள்ளது. வடமராட்சி தென்மேற்கில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி பொதுஜன ஐக்கிய முன்னணி ஆகிய கட்சிகளினுடையதும் , தவம் தவநிலைதாசன் என்பவரின் சுயேட்சை குழுவின் நியமன பத்திரம் நிராகரிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை பிரதேச சபையில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் பொதுஜன ஐக்கிய முன்னணி ஆகிய கட்சிகளினுடையதும் ரெஜி ராஜேஸ்வரன் என்பவரின் சுயேட்சை குழுவின் நியமன பத்திரங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி பிரதேச சபையில் வைத்திலிங்கம் ஜெகதாஸ் மற்றும் குணரட்ணம் குகானந்தன் ஆகியோரின் சுயேட்சை குழுவின் நியமன பத்திரங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. நல்லூர் பிரதேச சபையில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகிய கட்சிகளினதும் , திலீப் ஜீவரஞ்சன் என்பவரின் சுயேட்சை குழுவின் நியமன பத்திரங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை நகர சபை மற்றும் வேலணை பிரதேச சபைகளில் அனைத்து நியமன பத்திரங்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன என யாழ். மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் தெரிவித்தார். யாழில் 22 கட்சிகளும் 13 சுயேட்சைகளும் நிராகரிப்பு | Virakesari.lk
-
வேட்பு மனு நிராகரிப்பு தொடர்பிலான வழக்குகளை தொடர மாட்டேன் - எம்.ஏ சுமந்திரன்
21 Mar, 2025 | 09:37 AM இலங்கை தமிழரசு கட்சிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என தமிழரசு கட்சியின் பொது செயலாளர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ் . மாவட்ட செயலகத்தில் வியாழக்கிழமை (20) ஊடகவியலாளர்களிடம் கருத்து கூறும் போதே அவ்வாறு தெரிவித்தார். அதேவேளை யாழ்ப்பாணத்தில் பல கட்சிகளின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக அக் கட்சியினர் நீதிமன்றில் வழக்கு தொடர தங்களை அணுகினால் அது தொடர்பில் வழக்கு தொடர தாங்கள் தயாரா? என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போது, நான் ஒரு கட்சியின் செயலாளராக உள்ளமையால் , வேறு கட்சிகளுக்காக இந்த வழக்குகளில் முன்னிலையாக மாட்டேன் என கூறினார். வேட்பு மனு நிராகரிப்பு தொடர்பிலான வழக்குகளை தொடர மாட்டேன் - எம்.ஏ சுமந்திரன் | Virakesari.lk
-
அர்ச்சுனா பேசிய விடயங்களில் தவறுகள் இருந்தால் மன்னிப்புக்கோருகின்றோம் ; சிறிதரன் எம்.பி
21 Mar, 2025 | 10:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) தமிழ் பாராளுமன்ற உறுப்பினராக அர்ச்சுனாவுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை பாராளுமன்றத்தில் முதன் முதலில் வந்துள்ளமை ஆரோக்கியமான விடயமா? பாராளுமன்ற உறுப்பினர் மீதான குற்றம் இன்னும் எத்தனையோ பேருக்கு பாயலாம். இது தேசிய நல்லிணக்கத்திற்கு பாதிப்பாகலாம். அர்ச்சுனா பேசிய சில விடயங்களில் தவறுகள் இருந்தால் ஒட்டுமொத்த தமிழ் மக்கள் சார்பாக அதற்கு மன்னிப்பு கேட்கின்றோம். முஸ்லிம் மக்கள் அதனை பெரிய விடயமாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்பது எமது வினயமான வேண்டுகோளாகும். வரலாறு எம்மை தவறாக குறிப்பிட கூடாது என்பதற்காகவே இதனை சுட்டிக்காட்டுகிறேன் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (20) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, பாராளுமன்றத்தில் சபாநாயகரால் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் மீதான தடைகள் அறிவிக்கப்பட்டன. குறிப்பாக 8 நாட்களுக்கு அவருடைய பேச்சுகளை ஒளிபரப்பு செய்யப்படாமலும், ஹன்சாட்டில் பதியப்படாமல் இருப்பதற்கான செய்திகளை சபாநாயகர் அறிவித்திருந்தார். அவர் பாராளுமன்றத்திற்கு பொருத்தமில்லாத சொற்களை பயன்படுத்தியிருந்தார் என்று கூறப்பட்டது. இந்த சீருயர் சபையின் பொறுப்பாளர் என்ற வகையில் அவர் எடுக்கும் முடிவுகளுக்கு கட்டுப்பட்டு நாங்கள் நடக்கின்றோம். பாராளுமன்ற சிறப்புரிமையில் இருந்துக்கொண்டு பெண்கள் மீதான அல்லது பெண்களுக்கு எதிரான வன்மங்களை கொண்டு வருவதையோ அல்லது ஒரு சமயம் சார்ந்து, மார்க்கம் சார்ந்து இருக்கின்ற முஸ்லிம் சகோதரர்களுக்கு எதிராக வன்மங்களை கொட்டுவதையோ நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. எங்களுக்கும் முஸ்லிம் சகோததர்களுக்கும் இடையே நீண்ட கால அந்நியோன்ய உறவு உண்டு, கடந்த யுத்த காலத்தில் ஏற்பட்ட மனக் கசப்புகளை மீண்டும் மீண்டும் ஆய்வு செய்வது அல்லது அதை தோண்டிப் பார்ப்பதல்ல இப்போதைய நோக்கம். நாங்கள் தமிழ் பேசும் மக்களாக அவர்களுடைய மார்க்கம், சம்பிரதாயம், கலாச்சாரங்களை மதித்து நடப்பவர்களே. அதற்கு எதிரானவர்களும் அல்ல. பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா பேசிய சில விடயங்களில் தவறுகள் இருக்கலாம். அவ்வாறு தவறுகள் இருந்தால் ஒட்டுமொத்த தமிழ் மக்கள் சார்பாக நாங்கள் அதற்காக மன்னிப்பு கேட்கின்றோம். முஸ்லிம் மக்கள் அதனை பெரிய விடயமாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்பது எமது வினயமான வேண்டுகோளாகும். தமிழ் பாராளுமன்ற உறுப்பினராக அர்ச்சுனாவுக்கான தடை இந்த பாராளுமன்றத்தில் முதன் முதலில் வந்துள்ளமை ஆரோக்கியமான விடயமா என்று யோசிக்கின்றேன். நான் நீண்ட நேர ஆய்வுகளின் பின்னர் இந்த பதிவை நான் செய்கின்றேன். பாராளுமன்ற உறுப்பினர் மீதான குற்றம் இன்னும் எத்தனையோ பேருக்கு பாயலாம், இது தேசிய நல்லிணக்கத்திற்கு பாதிப்பாகலாம் என்ற வார்த்தைகள் சில தேடல்களை நோக்கி நகர்த்தியது. தமிழ் பாராளுமன்ற உறுப்பினருக்கு தடைகள் விதிக்கப்படும் போது அது தொடர்பில் சக தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுக்கவில்லை என்று வரலாறு எம்மை பழிக்க கூடாது என்பதற்காகவே இந்த விடயங்களை குறிப்பிடுகிறேன் என்றார். அர்ச்சுனா பேசிய விடயங்களில் தவறுகள் இருந்தால் மன்னிப்புக்கோருகின்றோம் ; சிறிதரன் எம்.பி | Virakesari.lk
-
இலங்கை உள்ளூராட்சித் தேர்தல் 2025; செய்திகள்
முக்கிய உள்ளூராட்சிமன்றங்களில் பல வேட்புமனுக்கள் நிராகரிப்பு 21 Mar, 2025 | 10:49 AM (எம்.மனோசித்ரா) உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வியாழக்கிழமை (20) நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்தது. இதன் போது கொழும்பு மாநகரசபை, ஸ்ரீஜயவர்தனபுர கோட்டை, சீதாவாக்கை, தெஹிவளை - கல்கிசை மற்றும் மொரட்டுவை உள்ளிட்ட உள்ளூராட்சிமன்றங்களுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்கள் பல நிராகரிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய கொழும்பு மாநகரசபைக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்களில் 5 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதுடன், பொதுஜன ஐக்கிய முன்னணி, ஜனநாயக தேசிய கூட்டணியாக இரு அரசியல் கட்சிகளால் சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனு மற்றும் 3 சுயாதீன குழுக்களால் சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன. மேலும், சீதாவாக்கை பிரதேச சபைக்கான ஐக்கிய தேசிய தேசிய கட்சியால் சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீஜயவர்தனபுர கோட்டை நகரசபைக்காக இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியால் சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனு, ஹோமாகம பிரதேசசபைக்காக சுயாதீன குழு சமர்ப்பித்த வேட்புமனு, தெஹிவளை - கல்கிசை மாநாகரசபைக்காக அகி இலங்கை மக்கள் காங்ரஸ் மற்றும் சுயாதீன குழுவொன்றால் சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இதனைத்தொடர்ந்து, மொரட்டுவை மாநாகரசபைக்காக சுயாதீன குழுவொன்றால் சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனு, கடுவலை நகரசபைக்காக சுயாதீன குழு மற்றும் இரண்டாம் பரப்பரை கட்சியால் சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்கள், மஹரகம நகரசபைக்காக பொதுஜன ஐக்கிய முன்னணி சமர்ப்பித்த வேட்புமனு, கெஸ்பேவ நகரசபைக்காக லங்கா மக்கள் கட்சி சமர்ப்பித்த வேட்புமனு, கொட்டிகாவத்த - முல்லேரியா பிரதேசசபைக்காக இரண்டாம் தலைமுறை சமர்ப்பித்த வேட்புமனு என்பன நிராகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. முக்கிய உள்ளூராட்சிமன்றங்களில் பல வேட்புமனுக்கள் நிராகரிப்பு | Virakesari.lk
-
இலங்கை விமானப்படை விமானம் ஒன்று விபத்து.
வாரியப்பொலவில் விமானப்படை விமானம் விபத்து : சிறப்பு விசாரணைக் குழு நியமனம் Published By: Digital Desk 3 21 Mar, 2025 | 11:31 AM விபத்துக்குள்ளான விமானப்படையின் விமானம் குறித்து விசாரிக்க விமானப்படைத் தளபதியினால் சிறப்பு விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் உள்ள இலங்கை விமானப்படையின் இல 05 தாக்குதல் படைப்பிரிவிற்கு சொந்தமான பயிற்சிக்காகப் பயன்படுத்தப்படும் K-8 விமானம், இன்று வெள்ளிக்கிழமை (21) குருநாகல் வாரியபொல பகுதியில் பயிற்சியின் போது விபத்துக்குள்ளானது. விமானத்தின் இரண்டு விமானிகளும் விமானத்திலிருந்து பாதுகாப்பாக வெளியேறி, குருநாகல் மினுவங்கேட் கல்லூரி வளாகத்தில் பாராசூட்களின் உதவியுடன் தரையிறங்கினர். இந்த விமானத்தில் தலைமை பயிற்சி பயிற்றுவிப்பாளர் விமானியும், பயிற்சி விமானி அதிகாரியும் இருந்தனர், மேலும் இந்த அதிகாரிகள் தற்போது குருநாகல் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விமானம் கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் இருந்து காலை 07.27 மணியளவில் புறப்பட்டு, காலை 07.55 மணியளவில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தைத் தொடர்ந்து, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க விபத்து குறித்து விசாரிக்க ஏழு பேர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவை நியமித்தார். வாரியப்பொலவில் விமானப்படை விமானம் விபத்து : சிறப்பு விசாரணைக் குழு நியமனம் | Virakesari.lk
-
யாழில் வேட்பு மனுத் தாக்கலின் போது முறைகேடு இடம்பெறவில்லை - இராமலிங்கம் சந்திரசேகர்
21 Mar, 2025 | 01:02 PM யாழிலுள்ள வேட்புமனுத் தாக்கலின்போது குழறுபடிகள் அல்லது சதி நடவடிக்கைகள் எதுவும் நடைபெறவில்லை என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் 22 கட்சிகள் மற்றும் 13 சுயேட்சை குழுக்களினதும் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வேட்பு மனு நிராகரிப்பில் அரசியல் காரணங்கள் இருப்பதாக சில தரப்பினர் குற்றம் சாட்டியமை தொடர்பில் கேட்டபோதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், சிலரது குற்றச்சாட்டை பார்க்கிறபோது அவர்களின் வேட்பு மனு தயாரிப்பில் அவர்களின் அலுவலகங்களிற்கு நாங்கள் சென்று ஏதோ திருகு தாள வேலைகளை செய்ததுபோல அவர்களது குற்றச்சாட்டுக்களில் தெரிகிறது. இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் என்பது வெற்றுக் கதைகள் மட்டும் தான். ஆகவே வெறும் கதைகளை யாரும் கதைக்க தேவையில்லை. எங்கள் மீது தேவையற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைக்க வேண்டாம். தாங்கள் தவறுகளை இழைத்துவிட்டு எங்கள் மீது குற்றஞ்சாட்டுகிற இந்த மாதிரியான கூற்றுக்களுக்கு நாங்கள் அலட்டிக் கொள்ளப் போவதில்லை. இங்குள்ள ஒரு சபை கூட நிராகரிக்கப்படாமல் 17 சபைகளிலும் சரியாக செய்து தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றிருப்பதென்பதை இவர்களால் பொறுத்துக் கொள்ளவோ சகித்துக் கொள்ளவோ முடியவில்லை. அதனாலேயே தேவையில்லாத விமர்சனங்களை செய்கின்றனர். எது எப்படியாயினும் எங்களுடைய வெற்றி உறுதியானது என தெரிவித்தார். யாழில் வேட்பு மனுத் தாக்கலின் போது முறைகேடு இடம்பெறவில்லை - இராமலிங்கம் சந்திரசேகர் | Virakesari.lk
-
ஹிம்புல்கொட காணி மோசடியுடன் சிரந்தி ராஜபக்ஷவுக்கு தொடர்பு ; விசாரணைகளுக்கு கோரிக்கை
21 Mar, 2025 | 03:41 PM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) ஹிம்புல்கொட பகுதியில் இடம்பெறும் காணி அபகரிப்பு மற்றும் காணி மோசடி தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பதில் பொலிஸ்மா அதிபரிடம் வலியுறுத்துகிறேன். இந்த காணி கொள்வனவு விவகாரத்தில் தங்காலை கால்டன் ஹவுஸ் முகவரியை வதிவிடமாக கொண்டுள்ள சிரந்தி ராஜபக்ஷவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதென தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (21) நடைபெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், ஹிம்புல்கொட பகுதியில் உள்ள விகாரைக்குள் பலவந்தமான முறையில் நுழைவதற்கு நான் முயற்சித்ததாக கடந்த மாதம் செய்திகள் வெளியாகின. இந்த காணிக்கான உறுதிப்பத்திரத்தை முழுமையாக பெற்றுக்கொண்டுள்ளேன். இந்த காணி விகாரைக்கு சொந்தமானது என்று உறுதிப்பத்திரத்தில் எவ்விடத்திலும் குறிப்பிடப்படவில்லை. ஹிம்புல்கொட இஹல்யாகொட கே.டி.பராக்ரம என்பவருக்கு சொந்தமான காணி கைப்பற்றப்பட்டு ஹோமாகம தியகம மஹிந்த ராஜபக்ஷ மற்றும் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த காணி 10 இலட்சம் ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் 2012.03.02 ஆம் திகதி கே.டி தமித் பிரேமலால், என். கே. சுவர்ணலதா ஆகியோருக்கு சொந்தமான காணிகள் தங்காலை வீதி கால்டன் ஹவுஸ் இல.19 என்ற முகவரியில் வசிக்கும் சிராந்தி விக்கிரமசிங்க ராஜபக்ஷ என்பவரின் பெயருக்கு எழுதப்பட்டுள்ளது. இந்த பத்திரத்தில் 535253314 வி என்ற தேசிய அடையாள அட்டை இலக்கம் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த காணிகள் 5 இலட்சம் ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. இந்த காணிகள் 2023.10.10 ஆம் திகதியன்று அமில கொடிகார என்பவருக்கு 120 இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த பகுதியில் இடம்பெறும் காணி அபகரிப்பு தொடர்பில் இப்பிரதேச மக்கள் முறைப்பாடளித்தார்கள் .அதனால் தான் அங்கு சென்றேன். இந்த காணி உரித்து பத்திரத்தில் இந்த காணிகள் விகாரைக்கோ அல்லது விகாராதிபதிக்கோ சொந்தமானது என்று எவ்விடத்திலும் குறிப்பிடப்படவில்லை. விகாரைக்குள் சட்டவிரோதமான முறையில் நுழைய வேண்டிய அவசியம் எனக்கில்லை. ஆகவே இந்த பகுதியில் இடம்பெறும் காணி அபகரிப்பு மற்றும் காணி மோசடி தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பதில் பொலிஸ்மா அதிபரிடம் வலியுறுத்துகிறேன் என்றார். ஹிம்புல்கொட காணி மோசடியுடன் சிரந்தி ராஜபக்ஷவுக்கு தொடர்பு ; விசாரணைகளுக்கு கோரிக்கை | Virakesari.lk
-
இலங்கையை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதை எதிர்க்கின்றேன் ; தமிழர்களிற்கு நீதியை நிலைநாட்டுங்கள் - பேட்டியில் ரணில்
21 Mar, 2025 | 02:03 PM இலங்கையை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதை எப்போதும் எதிர்த்து வந்துள்ளதாக தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க ஐக்கிய நாடுகளின் முன்னாள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளையுடன் இணைந்து செயற்படுவது சுலபமானதாக காணப்பட்டது அவர் அனைத்தையும் புரிந்துகொண்டார் என தெரிவித்துள்ளார் பேட்டியொன்றில் இதனை குறிப்பிட்டுள்ள அவர் ஐக்கிய நாடுகளிற்கு அளித்த வாக்குறுதியை வழங்குங்கள். தமிழர்களிற்கு நீதியை நிலைநாட்டுங்கள். மாகாணசபைகளிற்கு அதிகாரங்களை வழங்குங்கள். யார் குற்றவாளி என்றாலும் தண்டியுங்கள் என தெரிவித்துள்ளார். பேட்டியொன்றில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, இலங்கையை இந்த விவகாரங்களிற்காக சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதை நான் எப்போதும் எதிர்த்து வந்துள்ளேன். நான் எப்போதும் அதனை எதிர்த்து வந்துள்ளேன். நான் என்ன தெரிவித்து வருகின்றேன் என்றால் சொன்னதை செய்யுங்கள். அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள். தமிழர்களிற்கு நீதியை நிலைநாட்டுங்கள் - இதனை செய்யக்கூடாது. செய்யவேண்டாம் என நான் ஒருபோதும் தெரிவித்ததில்லை. இதன் காரணமாகவே நான் தேர்தல்களில் தோற்றேன். நான் விடுதலைப்புலிகளை ஆதரிப்பதாக குற்றம்சாட்டினார்கள்.அது முடிவடைந்ததும் ராஜபக்சாக்களிற்கு ஆதரவளித்ததாக குற்றம்சாட்டினார்கள். அதனை விடுவோம் ஆனால் நான் மேற்குலகில் நான் சமீபத்தில் பார்த்தது என்னவென்றால் இரண்டு விதமான நிலைப்பாடுகள். உக்ரைன்தொடர்பில் இரட்டை நிலைப்பாட்டை பின்பற்றுகின்றனர். எனது தலைவர்கள் நண்பர்களின் எண்ணிக்கையை பார்க்கும்போது சுதந்திரமான நீதியான தேர்தல்களை நடத்துவதற்கான முயற்சியின் போது அவர்கள் கொல்லப்பட்டனர். ஆனால் உக்ரைனிற்கு வழங்குகின்ற சாதக தன்மையை மேற்குலகம் எங்களிற்கு வழங்காது. ஆனால் உக்ரைன் ஜனாதிபதிக்கு அனைத்தையும் மாற்றுவதற்கான அனுமதியை அவர்கள் வழங்குகின்றார்கள். இதன் காரணமாகவே ஜனாதிபதி டிரம்ப் ஜெலென்ஸ்கியை பார்த்து நீங்கள் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படவில்லை என்றார். அவர்களால் ஜனாதிபதி டிரம்பின் மீது பாயமுடியுமென்றால் எங்களின்நிலைமை என்ன? ஆகவே எங்களால் என்ன செய்ய முடியுமென்றால் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதே. அவர்களுடன் பேசுங்கள் மாகாணசபைகளிற்கு மேலதிக பொறுப்புளை வழங்குங்கள். குற்றவாளிகள் யார் என்றாலும் தண்டியுங்கள்நான் பல நடவடிக்கைகளை ஆரம்பித்தேன். ஆனால் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை இரட்டை நிலைப்பாட்டை பின்பற்ற விரும்பினால் .இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விதத்தில் அது அமைந்திருக்க கூடாது. நான் எவருக்கும் எதிரானவன் அல்லமனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் ஆசிய கிளையின் செயற்பாடுகள் குறித்து விசாரணை இடம்பெற்றால் நாங்கள் தொடர்ந்தும் நீடிக்கலாம். நவிபிள்ளையுடன் செயற்படுவது சுலபமாகயிருந்தது அவர் அனைத்தையும் புரிந்துகொண்டார். அவர் எங்களது நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ளவில்லை ஆனால் அவர் அனைத்தையும் புரிந்துகொண்டார்.அவருடன் பேசமுடியும். ஆனால் தற்போதுள்ளவர்கள் எங்களை நோக்கி சத்தமிடுகின்றனர்.எங்களால் தான் அவர்கள் அங்கிருக்கின்றார்கள் என்பதை அவர்கள் உணரவேண்டும். நாங்களே இரண்டாம் உலக யுத்தத்தில் போரிட்டோம் நாங்களே ஐரோப்பாவை விடுதலை செய்தோம். எத்தனை ஐரோப்பியர்கள் ஹிட்லருக்கு எதிராக போரிட்டார்கள். இரண்டரை மில்லியன் இந்தியர்கள் போரிட்டார்கள்.இலங்கையர்கள் போரிட்டார்கள்ஆபிரிக்கர்கள் போரிட்டனர். நாங்கள் போரிட்டு ஹிட்லரை தோற்கடித்திருக்காவிட்டால் உங்களால் மனித உரிமை சாசனம் ஒன்றை உருவாக்க முடியாமல் போயிருக்கும். இலங்கையை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதை எதிர்க்கின்றேன் ; தமிழர்களிற்கு நீதியை நிலைநாட்டுங்கள் ; யார் குற்றவாளி என்றாலும் தண்டியுங்கள் ; பேட்டியில் ரணில் தெரிவிப்பு ; நவநீதம் பிள்ளைக்கு பாராட்டு | Virakesari.lk
-
உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்திய ஜெர்மன் பெண்!
ஜேர்மனிய பெண்ணின் வேட்பு மனு நிராகரிப்பு 21 Mar, 2025 | 03:05 PM மாத்தளை மாவட்டத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட ஜேர்மனிய பெண்ணின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. ஜேர்மன் பெண் வேட்பாளர் சமர்பித்த பிறப்புச் சான்றிதழ் பத்திரத்தில் முரண்பாடுகள் இருப்பதை அதிகாரிகள் கண்டறிந்ததை அடுத்து, வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக மாத்தளை மாவட்ட தேர்தல் அதிகாரி ஆசிரி எரங்க தெரிவித்துள்ளார். இலங்கை குடியுரிமை பெற்ற இந்த பெண் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் நுழைந்த முதல் வெளிநாட்டவர் என்ற பெருமையைப் பெற்றார். ஒரு சுயேட்சைக் குழுவின் வேட்பாளராக கலேவெல பிரதேச சபையில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை ஜேர்மனிய பெண் இன்று புதன்கிழமை (18) செலுத்தினார். தனது அரசியல் ஈடுபாட்டின் மூலம் இலங்கையில் நல்ல மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என நம்புவதாக அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. ஜேர்மனிய பெண்ணின் வேட்பு மனு நிராகரிப்பு | Virakesari.lk
-
161 ஆவது பொலிஸ் மாவீரர் நினைவேந்தல்
21 Mar, 2025 | 04:45 PM 161ஆவது பொலிஸ் மாவீரர் நினைவேந்தல் தின நிகழ்வு பம்பலப்பிட்டி பொலிஸ் சிரேஷ்ட படையணி தலைமையகத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுச் சின்னத்திற்கு முன்பாக, பதில் பொலிஸ் மா அதிபர், சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தலைமையில் நடைபெற்றது. நாட்டின் சுதந்திரத்திற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றி, இரத்தம் சிந்தி நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களினதும் உச்சபட்ச தியாகத்தை நினைவு கூரும் வகையில் பொலிஸ் மாவீரர் நினைவு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் வெள்ளிக்கிழமை (21) பொலிஸ் மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டது. பொலிஸ் மாவீரர் நினைவுச்சின்னத்திற்கு மரியாதை செலுத்தும் அணிவகுப்பைத் தொடர்ந்து, பதில் பொலிஸ்மா அதிபர் மாவீரர் நினைவுச்சின்னத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினார். போர் மற்றும் சட்டம் ஒழுங்கு கடமைகளில் ஈடுபட்டிருந்த போது நாட்டிற்காக உயிர்தியாகம் செய்த 30 பொலிஸ் அதிகாரிகளின் குடும்பத்தினர் மற்றும் அங்கவீனமுற்ற 20 பொலிஸ் அதிகாரிகளின் குடும்பத்தினருக்கும், பதில் பொலிஸ்மா அதிபர் பரிசுகளை வழங்கி கௌரவித்தார். மேலும் இந்நிகழ்வின்போது ஓய்வு பெற்ற பொலிஸ் மா அதிபர்கள், அங்கவீனமுற்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் என பலரும் கலந்துக்கொண்டிருந்தனர். 161 ஆவது பொலிஸ் மாவீரர் நினைவேந்தல் | Virakesari.lk
-
சர்வாதிகார நாடுகளுக்கு இடையே இராணுவ ஒத்துழைப்பு அதிகரித்து வருகிறது - அமெரிக்க இந்தோ - பசிபிக் கட்டளைத் தளபதி அட்மிரல் சாமுவேல் ஜே. பபாரோ
21 Mar, 2025 | 05:05 PM சர்வாதிகார நாடுகளுக்கு இடையே இராணுவ ஒத்துழைப்பு அதிகரித்து வருவதை நாம் காண்கிறோம். இது உடனடி கவனத்தைக் கோரும் மூலோபாய சவால்களை உருவாக்குகிறது. அதனால் தான் ஜனநாயக கூட்டாண்மைகளை வலுப்படுத்துவது அவசியமாகும் என அமெரிக்க இந்தோ-பசிபிக் கட்டளைத் தளபதி (INDOPACOM) அட்மிரல் சாமுவேல் ஜே. பபாரோ தெரிவித்தார். அமெரிக்க இந்தோ-பசிபிக் கட்டளைத் தளபதி (INDOPACOM) அட்மிரல் சாமுவேல் ஜே. பபாரோ வியாழக்கிழமை (20) தேசிய பாதுகாப்பு கல்லூரிக்கு விஜயம் செய்தார். அட்மிரல் பபாரோ தனது விஜயத்தின் போது, இலங்கையின் மூத்த அரச அதிகாரிகள் மற்றும் இராணுவத் தளபதிகளுடன் இணைந்து, நீடித்த அமெரிக்க - இலங்கை பாதுகாப்பு கூட்டாண்மையை மீண்டும் உறுதிப்படுத்தினார். மேலும் இந்தோ-பசிபிக் பகுதியில் பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பிற்கான அமெரிக்காவின் தொலைநோக்குப் பார்வை குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார். இலங்கையுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும், இந்தோ-பசிபிக் பகுதியில் பகிரப்பட்ட சவால்களை எதிர்கொள்வதற்கும் அமெரிக்காவின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை, தளபதி பபாரோவின் வருகை அடிக்கோட்டிட்டு காட்டியது. இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அட்மிரல் சாமுவேல் ஜே. பபாரோ, “நமது சவால்களைப் பற்றி நேரடியாகப் பேசுவோம். நாடுகளின் உறுதியான நடத்தை பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் சர்வதேச விதிமுறைகளை அச்சுறுத்துகிறது, வர்த்தகத்திற்கு அவசியமான வழிசெலுத்தல் சுதந்திரத்தை நேரடியாகப் பாதிக்கிறது. சர்வாதிகார நாடுகளுக்கு இடையே இராணுவ ஒத்துழைப்பு அதிகரித்து வருவதை நாம் காண்கிறோம். இது உடனடி கவனத்தை கோரும் மூலோபாய சவால்களை உருவாக்குகிறது. அதனால் தான் ஜனநாயக கூட்டாண்மைகளை வலுப்படுத்துவது அவசியமாகும். பயங்கரவாதம், ஆயுதப் பெருக்கம், கடத்தல், கடற்கொள்ளை போன்ற நாடுகடந்த அச்சுறுத்தல்கள் தினமும் பாதுகாப்பையும் செழிப்பையும் பாதிக்கின்றன. இவை பெரும்பாலும் தலைப்புச் செய்திகளில் இடம்பெறுவதில்லை. இன்னும், தொழில்நுட்ப புரட்சி கடல்சார் பாதுகாப்பை மாற்றியமைத்து வருகிறது. செயற்கை நுண்ணறிவு, விரைவில் குவாண்டம் கம்ப்யூட்டிங் மற்றும் ஹைப்பர்சோனிக் ஆகியவை கடலில் செயல்பாடுகளை அடிப்படையில் மாற்றியமைக்கின்றதாக அமையும். இந்த தொழில்நுட்பங்களில் தேர்ச்சி பெற்றவர்கள் எதிர்காலத்தை வடிவமைப்பார்கள்” என தெரிவித்தார். “உண்மையில், இந்தியப் பெருங்கடலின் குருக்கே இலங்கையானது மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகிறது. இந்த கடற்கரைகள் பசுபிக் பெருங்கடலை இந்தியப் பெருங்கடலுடன் இணைக்கும் முக்கிய கடல் பாதைகளை எல்லையாகக் கொண்டுள்ளன. மேலும் இலங்கை முழு பசுபிக் பெருங்கடலுக்கும் முக்கியமான கடல்சார் நடவடிக்கைகளில் செல்வாக்கு செலுத்த அனுமதிக்கிறது. மேலும், சர்வதேச பாதுகாப்புக்கு இலங்கை அளித்த சிறந்த பங்களிப்புகளை நான் அங்கீகரிக்கிறேன். அமைதி காக்கும் பணிகள், தொழில்முறையை வெளிப்படுத்துதல், ஒருங்கிணைந்த பணிக்குழு, தலைமைத்துவம், இது எனக்கு மிகவும் பெருமைக்குரிய விடயமாகும். இந்தத் தலைமைத்துவம் இலங்கையை ஒரு அத்தியாவசிய பங்காளியாக மாற்றும் மதிப்புகள் மற்றும் திறன்களைக் காட்டுகிறது. உங்கள் தலைமைத்துவம் முக்கியமானது, உங்கள் குரல் முக்கியமானது, உங்கள் தொழில்முறைத் திறனும் முக்கியமானது, மேலும் எங்கள் கூட்டாண்மை முழு பிராந்தியத்தின் எதிர்காலத்திற்கும் முக்கியமானதாகும்” என்றார். சர்வாதிகார நாடுகளுக்கு இடையே இராணுவ ஒத்துழைப்பு அதிகரித்து வருகிறது - அமெரிக்க இந்தோ - பசிபிக் கட்டளைத் தளபதி அட்மிரல் சாமுவேல் ஜே. பபாரோ | Virakesari.lk