Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிழம்பு

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by பிழம்பு

  1. கொழும்பில் நங்கூரமிட்டுள்ள விக்ராந்த் மற்றும் உதயகிரி ஆகிய கப்பல்களிலிருந்து இலங்கைக்கு நிவாரணங்களை வழங்க ஆரம்பித்தது இந்தியா! 28 Nov, 2025 | 05:01 PM இலங்கையில் தற்போதைய கடும் மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் காரணமாக உருவான கடுமையான பாதிப்பு நிலைமையை முன்னிட்டு, இந்திய அரசு அவசர நிவாரண உதவிகளை வழங்கும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இந்திய கடற்படை கப்பல்களான ஐ.என்.எஸ் விக்ராந்த் (INS Vikrant) மற்றும் ஐ.என்.எஸ் உதயகிரி (INS Udaygiri) ஆகியன இலங்கை கடற்படையின் 75 ஆவது நிறைவு ஆண்டை கொண்டாட கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளன. இந்நிலையில், பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கான நிவாரணப் பொருட்களை இலங்கை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்ஷங்கர் தெரிவித்துள்ளார். அமைச்சர் ஜெய்ஷங்கர் தனது பதிவில், “இலங்கையில் நிலவும் அனர்த்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு இந்தியா உடனடியாக மனிதாபிமான உதவிகளை வழங்க ஆரம்பித்துள்ளது. இரண்டு இந்திய கடற்படை கப்பல்கள் நிவாரணப் பொருட்களுடன் கொழும்பில் தரையிறங்கியுள்ளன,” என குறிப்பிட்டுள்ளார். நிவாரணப் பொருட்களில் உணவுப் பொருட்கள், மருத்துவ உபகரணங்கள், அவசர மீட்பு உபகரணங்கள், குடிநீர் மற்றும் அத்தியாவசிய தேவைகள் அடங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடுமையான வானிலை காரணமாக நாடு முழுவதும் ஏற்பட்ட பாதிப்புகளை சமாளிக்க இலங்கைக்கு தேவையான ஆதரவை வழங்க இந்தியா தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கிடையிலான பாரம்பரிய நட்புறவை மீண்டும் வலுப்படுத்தும் விதமாக இந்தியாவின் இந்த அவசர உதவி முக்கியத்துவம் பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலையினால் தமது அன்புக்குரியவர்களை இழந்திருக்கும் குடும்பங்களுக்கு அனுதாபத்தை வெளிப்படுத்தியிருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, 'சாகர் பந்து' திட்டத்தின்கீழ் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப்பொருட்கள் மற்றும் அவசியமான மனிதாபிமான உதவிகள், அனர்த்த நிவாரணங்களை உடனடியாக அனுப்பிவைத்திருப்பதாக அறிவித்துள்ளார். நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையின் விளைவாக பலர் உயிரிழந்திருப்பதுடன், பெருமளவான சொத்துக்கள் சேதமடைந்துள்ளன. நாடளாவிய ரீதியில் தொடர்ந்து மீட்புப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசியமான உதவிகளை வழங்குவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறானதொரு பின்னணியில் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டோருக்கான அனுதாபத்தையும், இக்கடினமான சூழ்நிலையில் இந்தியாவின் உடன்நிற்பையும் வெளிப்படுத்தி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவரது உத்தியோகபூர்வ 'எக்ஸ்' தளப்பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கிறார். 'டித்வா சூறாவளி காரணமாக தமது அன்புக்குரியவர்களை இழந்து தவிக்கும் இலங்கை மக்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரித்துக்கொள்கிறேன். அத்தோடு பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பாதுகாப்பு, நலன் மற்றும் துரித மீட்சிக்காகப் பிரார்த்திக்கிறேன்' என அவர் அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை 'எமது மிகநெருங்கிய அயல்நாட்டுடனான உடன்நிற்பை வெளிப்படுத்தும் வகையில் 'சாகர் பந்து' திட்டத்தின்கீழ் நிவாரணப்பொருட்கள் மற்றும் அவசியமான மனிதாபிமான உதவிகள், அனர்த்த நிவாரணங்களை இந்தியா உடனடியாக அனுப்பிவைத்துள்ளது. இந்நிலைவரம் தீவிரமடையும் பட்சத்தில் அவசியமான மேலதிக உதவிகளையும், ஒத்துழைப்பையும் வழங்குவதற்குத் தயாராக இருக்கிறோம்' எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் 'அயலகத்துக்கு முதலிடம் மற்றும் 'விஷன் மகாசாகர்' ஆகிய கொள்கைகளின் பிரகாரம் மிக அவசியமான இத்தருணத்தில் இலங்கையுடன் இந்தியா உடன்நிற்கும் எனவும் பிரதமர் மோடி அப்பதிவில் உறுதியளித்துள்ளார். கொழும்பில் நங்கூரமிட்டுள்ள விக்ராந்த் மற்றும் உதயகிரி ஆகிய கப்பல்களிலிருந்து இலங்கைக்கு நிவாரணங்களை வழங்க ஆரம்பித்தது இந்தியா! | Virakesari.lk
  2. 28 Nov, 2025 | 05:05 PM ( செ.சுபதர்ஷனி) “தித்வா“ சூறாவளியின் தாக்கத்தால் நாடு முழுவதும் பலத்த காற்றும் கனத்த மழையுடனான வானிலை தொடர்வதோடு, நேற்று கொழும்பில் உள்ள பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் வீதியில் மரங்கள் வீழ்ந்தமையால் போக்குவரத்து தற்காலிகமாக இடைநிறுத்த பட்டிருந்தமுதுடன், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. அதேவேளை 2016 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பரிய வெள்ள அனர்த்தம் ஏற்பட்டிருந்ததுடன், தொடரும் வானிலையால் கொழும்பு வரலாறு காணாத மோசமான வெள்ளத்தை சந்திக்க நேரிடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் எதிர்வுக் கூறியுள்ளது. வங்காள விரிகுடாவில் இலங்கையின் தென் கிழக்குப் பகுதியை அண்மித்த கடற்கரையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை சூறாவளியாக வலுபெற்று தற்போது நிலப்பகுதியை ஊடறுத்து வடமேற்கு நோக்கி நகர்கின்றது. இந்நிலையில் வியாழக்கிழமை (27) கொழும்பில் பொழிந்த கன மழை மற்றும் கடுங்காற்று காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. காற்றில் பிரதான வீதிகளில் மரங்கள் முறிந்து விழுந்திருந்ததுடன், வீடுகள், கடைகள், நிறுவனங்கள் என பலவற்றுக்கு கடுமையான சேதம் ஏற்பட்டிருந்தது. வெள்ளிக்கிழமை (28) காலை கொழும்பில் பல பகுதிகளில் மழை நீர் வழிந்தோடமால் தேங்கி வெள்ளம் ஏற்பட்டிருந்ததை காணக் கூடியதாக இருந்தது. காற்றின் வேகத்தில் அள்ளுண்டு செல்லப்பட்ட தகரங்கள், வர்த்தக நிலையங்களின் பெயர் பலகைகள், பதாதைகள் என பல பொருட்கள் வீதிகளில் காணக்கிடைத்தன. போக்குவரத்துக்கு தடையாக இருந்த பொருட்களை பொலிஸார், இராணுவத்தினர் உடனடியாக செயற்பட்டு அப்புறப்படுத்தியிருந்தனர். அதிகமழை காரணமாக களனி கங்கை பெருக்கெடுத்துள்ளமையால் கடவத்தை முதல் கடுவெல வரையிலான அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கால் கடவத்தை அதிவேக நெடுஞ்சாலையின் வாயில் நீரில் மூழ்கியுள்ளமையால் போக்குவரத்து மீள் அறிவிப்பு வரும் வரை நிறுத்தப்பட்டுள்ளது. அத்தோடு தேசிய வைத்தியசாலையின் 4 ஆம் இலக்க நுழைவாயில் வீதி, எல்விட்டிகள மாவத்த வீதி, ரெஜின வீதி சந்தி, கொட்டாஞ்சேனை மற்றும் பிரேமசிரி கோமதாச மாவத்தை ஆகிய வீதிகளில் போக்குவரத்து தடைபட்டது. வீதிகளில் முறிந்து கிடந்த மரக்கிளைகள் மற்றும் விழுந்துக் கிடந்த மரங்கள் ஆகியவற்றை இராணுவத்தினர் மற்றும் இடர் முகாமைத்துவ பணியாளர்களால் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. களனி கங்கையின் நீர்மட்டம் உயர்வடைந்த நிலையில் களணி கங்கையை அன்டிய தாழ் நிலப்பகுதிகள் நீரில் மூழ்கியிருந்தன. வத்தளை, களணி, வெல்லம்பிட்டி, கொலன்னாவ , சேதுவத்தை, தெமட்டகொடை, நவகம்புர மற்றும் அவிசாவல்லை ஆகிய பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. அவிசாவளையில் உள்ள நீர் மானிப்படி 2016 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பாரிய வெள்ள அனர்த்தம் ஏற்பட்டிருந்ததுடன், தொடரும் வானிலையால் கொழும்பு வரலாறு காணாத மோசமான வெள்ளத்தை சந்திக்க நேரிடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் எதிர்வுக் கூறியுள்ளது. அதனையடுத்து களணி கங்கையை அண்டிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டதுடன், நேற்றைய தினம் களணி கங்கையை அன்மித்த அவதானமிக்க பகுதியிலிருந்த மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்த பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. சீரற்ற வானிலையால் கொழும்பு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு! | Virakesari.lk
  3. 28 Nov, 2025 | 05:42 PM (இராஜதுரை ஹஷான்) நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களினால் போக்குவரத்து சேவைகள் முழுமையாக ஸ்தம்பிமடைந்துள்ளன. மலையகத்துக்கான புகையிரத சேவை முழுமையாக இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து சேவையில் ஈடுபடும் தூர பிரதேச புகையிரத சேவைகள் அனைத்தும் மறு அறிவித்தல் விடுக்கும் வரையில் இடைநிறுத்தப்பட்டுள்ளன. அத்தியாவசிய தேவைகளை கருத்திற் கொண்டு நேற்று மாலையில் இருந்து களனிவெளி புகையிரத வீதி,பிரதான புகையிரத வீதி (மீரிகம),கரையோர பகுதி(அளுத்கம,காலி,)புகையிரத சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பேருந்து சேவைகள் இவ்வாறான நிலையில் கொழும்பில் இருந்து வடக்கு,கிழக்கு உட்பட தூர பிரதேசங்களுக்குமான பேருந்து சேவைகள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. வெள்ளநீர் அபாயம் மற்றும் மண்சரிவு அபாயம் இல்லாத பகுதிகளில் மாத்திம் குறுந்தூர போக்குவரத்து சேவையில் ஈடுபடுவோம் என தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார். புகையிரத சேவைகள் பாதிப்பு நேற்று காலையில் இருந்து சகல புகையிரத வீதிகளின் புகையிரத சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது. புகையிரத பாதைகளில் மண்மேடு சரிந்து விழல், மரங்கள் முறிந்து விழுதல் தீவிரமடைந்துள்ளதால் பொது பயணிகளின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக புகையிரத திணைக்களத்தின் மேலதிக பொதுமுகாமையாளர் சந்திரசேன பண்டார தெரிவித்துள்ளார். மண்சரிவு அபாயத்தினால் மலையகத்துக்கான புகையிரத சேவை முற்றாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.மண்சரிவினால் மலையக புகையிரத பாதைகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாதைகளை சீர் செய்து மீள சேவையை ஆரம்பிக்கும் தினத்தை நிச்சயமாக குறிப்பிட முடியாது. காலநிலை இயல்பு நிலைக்கு திரும்பியதன் பின்னரே புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள முடியும் என்று புகையிரத திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதேபோல் மறுஅறிவித்தல் விடுக்கும் வரையில் கிழக்கு புகையிரத வீதியில் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய தூர பிரதேசங்களுக்கான புகையிரத சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளன. அத்துடன் மறுஅறிவித்தல் விடுக்கும் வரையில் புகையிரத பொதுகள் விநியோக சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கிச் சென்ற புகையிரதம் அவசர அனர்த்த நிலை காரணமாக குருநாகல் புகையிரத நிலையத்தில் இடைநிறுத்தப்பட்டுள்ளது.அதேபோல் காங்கேசன்துறை புகையிரத நிலையத்தில் இருந்து கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் நோக்கிச் சென்ற புகையிரதம் அநுராதபுரம் புகையிரத நிலையத்தில் இடைநிறுத்தப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு காரணமாக வடக்குக்கான புகையிரத சேவை முழுமையாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. அநுதாரபுரம் புகையிரத நிலையத்தில் சுமார் 400 பயணிகள் நேற்று முன்தினம் இரவு இருந்துள்ளதுடன், அநுராதபுரம் நகர சபையின் ஊடாக அவர்களுக்கான வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.அதேபோல் குருநாகல் புகையிரத நிலையத்தில் இருந்து அரச போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தில் உரிய இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். குறுந்தூர புகையிரத சேவைகள் வரையறுக்கப்பட்ட வகையில் ஆரம்பம் அத்தியாவசிய தேவைகளை கருத்திற் கொண்டு நேற்று மாலையில் இருந்து களனிவெளி புகையிரத வீதி,பிரதான புகையிரத வீதி (மீரிகம),கரையோர பகுதி(அளுத்கம,காலி,)புகையிரத சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. புத்தளம் புகையிரத வீதி,மற்றும் வடக்கு புகையிரத வீதிக்கான சகல புகையிரத சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. பொதுபயணிகள் பெரும் சௌகரியம் நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியில் பயணம் செய்வதை இயலுமான வகையில் தவிர்த்துக் கொள்ளுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. பொதுபோக்குவரத்து சேவைகள் இடைநிறுத்தப்பட்டதால் பொதுபயணிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளார்கள். நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் போக்குவரத்து சேவைகள் முழுமையாக ஸ்தம்பிதம் | Virakesari.lk
  4. குருதி கொடை முகாம்களுக்கு புலனாய்வுப் பிரிவினர் கெடுபிடி! வல்வெட்டித்துறையில் தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரனின் பிறந்தநாளை முன்னிட்டு, குருதிக்கொடைமுகாமை முன்னெடுத்தமை தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர். இரத்ததானச் சங்கத்தின் ஊடாக இதுதொடர்பில் வல்வெட்டித்துறை இரத்ததானச் சங்கதலைவர் பா.வீரசுரேந்திரன் தெரிவித்ததாவது, வல்வெட்டித்துறை மண்ணின் மைந்தர்களது ஏற்பாட்டில் வல்வெட்டித்துறை ஊடாக முன்னெடுக்கப்பட்ட 83ஆவது இரத்ததான முகாம் நேற்று 26ஆம் திகதி புதன்கிழமை வல்வெட்டித்துறையில் இடம்பெற்றுள்ளது. மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் இரத்த தான முகாம்களை ஒருங்கிணைத்து முன்னெடுத்து வருகின்றோம். யாழ்ப்பாணத்தில் தற்போது பெரும் குருதித்தட்டுப்பாடு நிலவி வருகிறது. அதனை ஈடுசெய்வதற்கு பெரும் பிரயத்தனங்களுக்கு மத்தியில் இந்தச் செயற்பாட்டை முன்னெடுத்தோம். ஆனால் இந்தப் பணிகளுக்கு புலனாய்வுத் துறையால் பெரும் நெருக்குவாரங்கள் வழங்கப்படுகின்றன. குறித்த இரத்ததான முகாம் ஆரம்பமானது முதல் வல்வெட்டித்துறை பொலிஸ் தரப்பு தொடங்கி புலனாய்வுப் பிரிவினர் வரை மாறிமாறி விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். எமக்கு மன உளைச்சலைத் தரும் வகையில் இந்தச்செயற்பாடுகள் முன்னெடுக்கப் படுகின்றன. கெடுபிடிகள் தொடர்ந்து வழக்கு தொடுக்கப்படுமாக இருந்தால் அந்த நாளுடன் இரத்ததான சேவையில் இருந்து முற்றாக விலகிவிடுவேன் என்றார். குருதி கொடை முகாம்களுக்கு புலனாய்வுப் பிரிவினர் கெடுபிடி!
  5. வவுனியாவில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்ற மாவீரர் தின நிகழ்வு! Published By: Vishnu 27 Nov, 2025 | 07:40 PM தமிழரசு கட்சியின் வவுனியா மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் மாவீரர் தின நிகழ்வு வியாழக்கிழமை (நவ.27) இடம்பெற்றிருந்தது. வவுனியா தமிழரசுக் கட்சியின் தாயகம் அலுவலகத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது ஈகைச்சுடர் ஏற்றப்பட்டதுடன், பிரதான திருவுருவ படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டிருந்ததுடன், மலர் அஞ்சலியும் இடம்பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து கட்சி முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்களால் பிரதான திருவுருவ படங்களுக்கு தீபமேற்றியும் மலர்தூவியும் அஞ்சலி செலுத்தினார்கள். வவுனியாவில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்ற மாவீரர் தின நிகழ்வு! | Virakesari.lk
  6. இலங்கையும் அதனை சுற்றியுள்ள கடலும் கடும் ஆபத்தில்! ‘சிவப்பு’ எச்சரிக்கை ! 27 Nov, 2025 | 05:38 PM இலங்கையின் தென் கிழக்கில் உருவாகி வலுப்பெற்றுள்ள ஆழ்ந்த தாழமுக்கம் காரணமாக, இலங்கையும் அதனைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளுக்கும் ‘சிவப்பு’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, தென்கிழக்கு கடற்பகுதியில் நிலவும் தாழமுக்கம், வலுப்பெற்று, மட்டக்களப்புக்கு தென்கிழக்கில் சுமார் 120 கிலோற்றர் தூரத்தில் மையங்கொண்டுள்ளது. இது அடுத்த 12 மணிநேரங்களுக்குள் சூறாவளியாக (Cyclonic Storm) உருவெடுத்து, வட- வடமேற்கு திசையில் நகர அதிக வாய்ப்புள்ளதாக அறிவுறுத்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வானிலை அமைப்பின் தாக்கத்தினால், நாடெங்கும் நிலவும் கனமழை மற்றும் பலத்த காற்று அடுத்த சில நாட்களும் நீடிக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் 200 மில்லிமீற்றருகு்கு மேற்பட்ட மிக கனமழை பெய்யக்கூடும். சப்ரகமுவ, மேற்கு மாகாணங்கள் மற்றும் மட்டக்களப்பு, பதுளை மாவட்டங்களில் 150 மில்லிமீற்றருக்கும் மேல் மழை எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின், ஏனைய பகுதிகளிலும் 100 மில்லிமீற்றருக்கும் மேல் மழை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அதேவேளை, நாடளாவிய ரீதியில் 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்திலும், சில பகுதிகளில் 80 கிலோமீற்றர் வரை காற்றடிக்கும் அபாயம் உள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் நாட்டைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளில், பலத்த காற்றினால் கடல் மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும். நாட்டைச் சுற்றியுள்ள கடற்பரப்பில் 60–70 கிலோமீற்றர் மற்றும் இடையிடையே 80 கிலோமீற்றர் வரை காற்றடிக்கும். கடற்பரப்பில் 3.0 – 4.0 மீற்றர் உயரமுள்ள பெரும் அலைகள் எழும்பக்கூடும். புத்தளம் முதல் காங்கேசன்துறை வரை — கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு, திருகோணமலை வழியாக காற்று அதிகரிக்கக்கூடும். இதனால், கடலுக்கு செல்ல வேண்டாம் என்று கடற்படை மற்றும் மீனவர்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விழிப்புடன் இருக்குமாறு பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வரவிருக்கும் கடுமையான வானிலை குறித்து நவம்பர் 30, 2025 வரை பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது. அவசரநிலைகளில் அருகிலுள்ள பாதுகாப்பு நிலையங்களை தொடர்புகொண்டு உதவி பெறுமாரும் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது. இலங்கையும் அதனை சுற்றியுள்ள கடலும் கடும் ஆபத்தில்! ‘சிவப்பு’ எச்சரிக்கை ! | Virakesari.lk
  7. இலங்கைக்கு வரும் விமானங்களை இந்தியாவுக்கு திருப்பியனுப்ப நடவடிக்கை ! 27 Nov, 2025 | 05:45 PM இலங்கைக்கு வரும் விமானங்கள் அவசர வானிலை காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்க முடியாவிட்டால் அவை இந்தியாவின் திருவனந்தபுரம் (Trivandrum) அல்லது கொச்சி (Cochin) விமான நிலையங்களுக்கு திருப்பி அனுப்பப்படுமென துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் அநுரா கருணாதிலக தெரிவித்தார். இலங்கைக்கு வரும் விமானங்களை இந்தியாவுக்கு திருப்பியனுப்ப நடவடிக்கை ! | Virakesari.lk
  8. வவுனியாவின் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள நீர்! 27 Nov, 2025 | 07:05 PM வவுனியாவின் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள நீர் தேங்கி நிற்பதன் காரணமாக பலர் இடம்பெயரும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளனர். பெரும்பாலான குளங்களில் நீர்மட்டம் அதிகரித்ததன் காரணமாக நீர் வான்பாய்ந்து வருவதோடு திருநாவற்குளம், தாண்டிக்குளம் உட்பட்ட பல்வேறு தாழ்நில பிரதேசங்களில் வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளது. இதன் காரணமாக மக்கள் இடம்பெயரவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். இதேவேளை ஏ9 வீதி மற்றும் மன்னார் வீதி என்பன வெள்ள நீர் ஊடறுத்துப் பாய்வதன் காரணமாக போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்பட்டுள்ளது. பாவற்குளம் மற்றும் பேராறு நீர்த்தேக்கம் ஆகியவற்றின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதோடு, அதனை அண்டிய பகுதிகளில் உள்ள மக்களை அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மக்கள் இடம்பெயரும் பட்சத்தில் அவர்களை தங்கவைப்பதற்கான ஏற்பாடுகள் பிரதேச செயலக மட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் உபாலி சமரசிங்க கொழும்பிலிருந்து உடனடியாக வவுனியாவுக்கு வருகைதந்துள்ளதோடு நாளைய தினம் வவுனியா மாவட்ட செயலகத்தில் உயர்மட்ட கூட்டமொன்றையும் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதேவேளை இடம்பெயரும் மக்களுக்கு சமைத்த உணவுகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரால் அரசாங்க அதிபருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பல்வேறு இடங்களிலும் வெள்ள நீர் தேங்கி நிற்பதன் காரணமாக போக்குவரத்து நடைமுறைகள் தடைப்பட்டுள்ளதோடு மக்களின் அன்றாட வாழ்க்கை மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கல்குண்ணாமடு மற்றும் நொச்சுமோட்டை ஆகிய பகுதிகளில் ஏ9 வீதியின் ஊடாக வெள்ள நீர் பாய்ந்து ஓடுவதால் சிறிய ரக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதோடு வாகன நெரிசலும் ஏற்பட்டுள்ளது. இதேவேளை சமணங்குளம் குளத்தில் உடைப்பெடுக்கும் அபாயம் ஏற்பட்ட நிலையில் இராணுவத்தினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து அதனை மண்மூடைகளை நிரப்பி பாதுகாப்பு செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தனர். வவுனியாவின் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள நீர்! | Virakesari.lk
  9. 27 Nov, 2025 | 07:10 PM மாவீரர் நாள் நினைவேந்தல் இன்றைய தினம் (27) நல்லூரியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. சரியாக 6.05 மணிக்கு மணி ஒலிக்க, 6.06 மணிக்கு மௌன வணக்கம் செலுத்தப்பட்டு, கெப்டன் பண்டிதரின் தாயார் பொதுச் சுடர் ஏற்றி வைக்க, அதேவேளை துயிலும் இல்ல கீதம் இசைக்க, ஏனைய சுடர்கள் ஏற்றி வைக்கப்பட்டது. உள்நாட்டுப் போரில் உயிர்நீத்தவர்களுக்காக உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது. நல்லூர் வளாகத்தில் அமைக்கப்பட்ட மாவீரர்களின் கல்வெட்டுக்களையும் இதன்போது மக்கள் பார்வையிட்டனர். உயிர்நீத்த மாவீரர்களுக்கு நல்லூரில் நினைவேந்தல் | Virakesari.lk
  10. யாழ்ப்பாணம் 8 மணி நேரம் முன் மாசி சம்பலுக்குள் போதை மாத்திரை; மூவர் கைது! யாழ்ப்பாணம் நகரப்பகுதியில், போதைமாத்திரைகளுடன் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்புப்பிரிவு பொலிஸாருக்குக்கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமையவே மேற்படி போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன. கொழும்பிலிருந்து மாசிச்சம்பல் போத்தல்களுக்குள் மறைத்துக் கடத்தப்பட்ட நிலையிலேயே மேற்படி போதைமாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன. மேலதிக விசாரணைகளின் பின்னர் அவர்களை நீதிமன்றில் முற்ப டுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக் கப்பட்டுள்ளன மாசி சம்பலுக்குள் போதை மாத்திரை; மூவர் கைது!
  11. மாவீரர் நினைவேந்தல் நாள் : மட்டக்களப்பில் சிவப்பு - மஞ்சள் கொடிகள் அலங்காரம். 26 Nov, 2025 | 04:03 PM மாவீரர் நினைவேந்தல் நாள் நாளை வியாழக்கிழமை (27) அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில் மட்டக்களப்பு நகரில் சிவப்பு - மஞ்சள் கொடிகளினால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இன்று புதன்கிழமை (26) காலை மட்டக்களப்பு இளைஞர் குழுக்களினால் இந்த கொடிகள் கட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மணிக்கூண்டு கோபுரம், மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு முன்பாகவுள்ள சுற்றுவட்டம் ஆகியவற்றில் சிறப்பு மஞ்சள் கொடிகள் கட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. நாளைய தினம் மட்டக்களப்பில் உள்ள நான்கு மாவீரர் துயிலும் இல்லங்களில் மாவீரர் தினம் அனுஸ்டிப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கொக்கட்டிச்சோலை மாவடிமுன்மாரி துயிலும் இல்லம், வவுணதீவு தாண்டியடி துயிலும் இல்லம், தரவை மாவீரர் துயிலும் இல்லம், வாகரை கண்டலடி துயிலும் இல்லம் ஆகியவற்றில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. ஆனைத்து துயிலும் இல்லங்களிலும் தமிழ் மக்களை கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தவருமாறு ஏற்பாட்டுக்குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர். மாவீரர் நினைவேந்தல் நாள் : மட்டக்களப்பில் சிவப்பு - மஞ்சள் கொடிகள் அலங்காரம் | Virakesari.lk
  12. வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வெவ்வேறு இடங்களில் போதைப்பொருள் குற்றம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 07 பேர் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 10 நாட்களுக்குள், போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான 08 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் ஏழுபேர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானமை உறுதியானது. இந்நிலையில் அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை 07 பேர் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். வட்டுக்கோட்டையில் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான பலருக்கு புனர்வாழ்வு! | Virakesari.lk
  13. 26 Nov, 2025 | 06:34 PM யாழ். நெடுந்தீவிலிருந்து உயர்தரப் பரீட்சை விடைத்தாள்கள் மீண்டும் வட மாகாண கல்வி அமைச்சுக்கு விமானப்படை ஹெலிகொப்டர் மூலம் கொண்டுசெல்லப்பட்டது. சீரற்ற காலநிலை காரணமாக வட மாகாணத்தின் நெடுந்தீவில் அமைந்துள்ள தேர்வு மையத்திலிருந்து க.பொ.த. உயர்தரப் பரீட்சை விடைத்தாள்கள் இலங்கை விமானப்படையினரால் இன்று (26) விமானப்படைக்குச் சொந்தமான பெல் 212 ஹெலிகொப்டர் மூலம் வட மாகாண கல்வி அமைச்சு அலுவலகத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டது. நெடுந்தீவிலிருந்து வடக்கு கல்வி அமைச்சுக்கு ஹெலிகொப்டரில் கொண்டுசெல்லப்பட்ட உயர்தரப் பரீட்சை விடைத்தாள்கள் | Virakesari.lk
  14. தொல்பொருள் பெயர் பலகைகள் அகற்றல் : மூவருக்கு பிணை மட்டக்களப்பில் உள்ள தொல்பொருள் இடங்களில் தொல்பொருள் துறையால் நிறுவப்பட்ட தொல்பொருள் இடங்களைக் குறிக்கும் பெயர்ப்பலகைகளை அகற்றியதாகக் கூறப்படும் வழக்கில், வாழைச்சேனை பிரதேச சபைத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் உட்பட மூன்று பேரை தலா 500,000 ரூபாய் தனிப்பட்ட பிணையில் விடுவிக்க வாழைச்சேனை நீதவான் எம்.ஐ. அகமது ரதீஃப் உத்தரவிட்டார். வழக்கறிஞர் எம்.ஏ. சுமந்திரன் மூலம் நீதிமன்றத்தில் ஆஜரான வாழைச்சேனை பிரதேச சபைத் தலைவர் சுந்தர லிங்கம் சுதாகரன், துணைத் தலைவர் குழந்தைவேல் பத்மநிதன், பிரதேச சபை உறுப்பினர் ஆனந்தன் சிவராசா சிதம்பரன் பிள்ளை சண்முகநாதன் ஆகிய நான்கு பேரும் இவ்வாறு விடுவிக்கப்பட்டனர். மட்டக்களப்பு வாழைச்சேனையில் உள்ள கிரண் தொல்பொருள் அலுவலகத்தால் பராமரிக்கப்படும் தொல்பொருள் இடங்களைக் குறிக்கும் திசைப் பலகைகளை அகற்றுவது தொடர்பாக தொல்பொருள் துறையால் தாக்கல் செய்யப்பட்ட புகாரைத் தொடர்ந்து, வாழைச்சேனை பிரதேச சபைத் தலைவர் எஸ். சுதாகரன் மற்றும் பிற சந்தேக நபர்களைக் கைது செய்ய 04 போலீஸ் குழுக்கள் நிறுத்தப்பட்டன. வாழைச்சேனை பொலிஸார் நேற்று மாலை 24 ஆம் திகதி ஒருவரை கைது செய்தனர், இன்று வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவர் கைது செய்யப்பட்டார். R Tamilmirror Online || தொல்பொருள் பெயர் பலகைகள் அகற்றல் : மூவருக்கு பிணை
  15. (எம்.மனோசித்ரா) அலைமருவி சமிக்ஞை தொலைக்காட்சி ஒளிபரப்பு முறைமையை (Analog Terrestrial System) இயக்குவதற்கான அனுமதிப்பத்திரம் வழங்கும் செயன்முறையை இடைநிறுத்துவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நாட்டில் தற்போது இயங்கிவரும் அலைமருவி சமிக்ஞை ஒளிபரப்பு முறைமை மூலம் தொலைக்காட்சி அலைவரிசைகளை ஒளிபரப்புவதற்காக தற்போது 16 நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதிப்பத்திரங்களைப் பயன்படுத்தி 5 அரச தொலைக்காட்சி அலைவரிசைகள் உள்ளிட்ட 24 அலைவரிசைகள் நாட்டில் தற்போது காணப்படுகின்றன. தற்போது தொலைக்காட்சி ஒளிபரப்புக்கள் வர்ண ஒளிர்மை அதிர்வெண் இயலளவை உயர்ந்தபட்சம் பயன்படுத்தி இயக்கப்படுவதுடன், 46 வருடங்கள் பழமையான அலைமருவி சமிக்ஞை ஒளிபரப்பு முறைமைக்குப் பதிலாக நவீன தொழிநுட்பத்தின் கீழ் தொலைக்காட்சி நேயர்களுக்கு உயர்தரத்துடனான டிஜிட்டல் ஒளிபரப்பை மேற்கொள்ளும் நோக்கில், தனியொரு டிஜிட்டல் ஒளிபரப்பு முறைமையை இயக்குவதற்கு இயலுமை கிட்டும் வகையில் வெகுசன ஊடக விடயதான அமைச்சால் டிஜிட்டல் ஒத்திசைந்த தொலைக்காட்சி ஒளிபரப்பு முறைமை வேலைத்திட்டம் கடந்த ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதற்காக, இலங்கை அரசும் ஜப்பான் அரசும் ஒப்பந்தமொன்றை மேற்கொண்டுள்ளதுடன், குறித்த வேலைத்திட்டத்தை 2029ஆம் ஆண்டில் பூர்த்தி செய்வதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது. வேலைத்திட்டம் பூர்த்தியடைந்து 2 ஆண்டுகளுக்குப் பின்னர், பழைய அலைமருவி சமிக்ஞை தொலைக்காட்சி ஒளிபரப்பு முறைமை முழுமையாக நீக்கப்படவுள்ளமையால், அதற்காக மேலும் அனுமதிப்பத்திரங்களை வழங்குவது பயனற்றது எனக் கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தொலைக்காட்சி அலைவரிசைகளை ஒத்திசைந்த ஒளிபரப்பை மேற்கொள்வதற்கான வர்ண ஒளிர்மை ஒளிபரப்பில் அதிர்வெண்களை ஒதுக்கி வழங்கும் செயன்முறை மற்றும் சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சால் தொலைக்காட்சி அலைவரிசைகளில் அலைமருவி சமிக்ஞை ஒளிபரப்பு முறைமை மூலம் மேற்கொள்வதற்கான அனுமதிப்பத்திரம் வழங்கும் செயன்முறையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்துவதற்கு டிஜிட்டல் பொருளாதார அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அலைமருவி சமிக்ஞை தொலைக்காட்சி ஒளிபரப்பு முறைமைக்கான அனுமதிப்பத்திரம் வழங்கும் செயன்முறையை இடைநிறுத்த தீர்மானம் | Virakesari.lk
  16. யாழ்ப்பாணம் 1 நாள் முன் குருநகர் கடலில் சிறுவன் சடலமாக மீட்பு! யாழ்ப்பாணம் - குருநகர் கடற்பரப்பில் இன்று 22ஆம் திகதி காலை சிறுவன் ஒருவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் குருநகர் பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய ஜோர்ஜ் ஸ்ரிபன் மதிவாணன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த சிறுவன் நேற்று இரவு, அப்பகுதியில் உள்ள கடலட்டைப் பண்ணையைப் பார்வையிடுவதற்காக கடலுக்குச் சென்றிருந்த நிலையில் காணாமல் போயிருந்தார். இதனைத் தொடர்ந்து, அப்பகுதி மக்களால் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இன்று காலை சிறுவனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிறுவன் படகிலிருந்து தவறி கடலில் விழுந்து உயிரிழந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணைகளில் சந்தேகிக்கப்படுகிறது. குறித்த தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். குருநகர் கடலில் சிறுவன் சடலமாக மீட்பு!
  17. பருத்தித்துறை மருத்துவமனையில் அம்புலன்ஸ் சாரதி, பொலிஸார் மீது தாக்குதல்! பருத்தித்துறை ஆதார மருத்துவமனைக்குள் கத்தியுடன் அத்துமீறி நுழைந்த நபர் ஒருவர், அம்புலன்ஸ் சாரதி மீதும், மருத்துவமனை பாதுகாப்புக் கடமையில் இருந்த பொலிஸார் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளார். இதனால், அங்கு பெரும் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, உயிர்மாய்ப்பதற்கு முயற்சித்த 21 வயதுடைய இளைஞர் ஒருவர் பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இரவு மருத்துவமனைக்குள் வந்த நபர் ஒருவர், மேற்படி இளைஞரின் விவரத்தைக் கூறி அந்த இளைஞரைப் பார்ப்பதற்கு வழிகாட்டுமாறு அம்புலன்ஸ் சாரதி ஒருவரைக் கேட்டுள்ளார். அவரின் நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த அம்புலன்ஸ் சாரதி, வழிகாட்ட மறுத்துள்ளார். இதையடுத்தே, அம்புலன்ஸ் சாரதியை அந்த நபர் தாக்கியுள்ளார். விடயத்தை அறிந்து அவரைக் கைது செய்வதற்காகப் பொலிஸார் சென்ற போது, பொலிஸார் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளார். இதையடுத்து, அந்த நபர் பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டார். பருத்தித்துறைப் பொலிஸாரிடம் அவர் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், மேற்படி சந்தேகநபர் கத்தியொன்றை உடமையில் மறைத்து எடுத்து வந்தமை தெரியவந்துள்ளது. இதனால், அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறும் இளைஞர் மீது தாக்குதல் நடத்துவதற்காக அவர் வந்திருக்கலாம்எனவும் பொலிஸார் சந்தேகித்துள்ளனர். தற்போது மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன. பருத்தித்துறை ஆதார மருத்துவமனைக்குள் அத்துமீறிப் பிரவேசிக்கும் நபர்களால் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பவர்கள் மீது தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றனமையும் குறிப்பிடத்தக்கது. பருத்தித்துறை மருத்துவமனையில் அம்புலன்ஸ் சாரதி, பொலிஸார் மீது தாக்குதல்!
  18. யாழ்ப்பாணம் 3 மணி நேரம் முன் "கார்த்திகை மலரே" இசைப்பாடல் வெளியீடு! நல்லூர் கிட்டு பூங்காவில் வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டுத் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் ஏற்பாடு செய்துள்ள 'கார்த்திகை வாசம்' மலர்க் கண்காட்சியில் நேற்றய தினம் 'கார்த்திகை மலரே!' என்ற இசைப்பாடல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் இசைப்பாடலை வெளியீடு செய்ய சிரேஷ்ட இசையமைப்பாளர் க.சத்தியன் பெற்றுக்கொண்டார். தமிழகத்தின் பாடலாசிரியர் யுகபாரதி எழுதிய "கார்த்திகை மலரே! மலர்வாயா? எங்கள் காத்திருப்பை நீ அறிவாயா?, கல்லறை சேர்ந்த ஈகியர்கள் கண்ட கனவினைக் கண்ணில் தருவாயா?" என்று தொடங்கும் பாடலை ஈழத்தின் பாடகி ஜெயபாரதி பாடியுள்ளார். பூவன் மதீசன் இசையில் உருவான இப்பாடலின் ஒலிப்பதிவை மதி மனு மேற்கொண்டுள்ளார். தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தயாரிப்பான கார்த்திகை மலரே! என்ற இசைப்பாடலை இசை பாட பாடல் வரிகளில் எவ்வித எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளாமல் எவரும் பயன்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "கார்த்திகை மலரே" இசைப்பாடல் வெளியீடு!
  19. 24 Nov, 2025 | 02:53 AM மாவீரர் தினத்தினை முன்னிட்டு மாவீரர் பெற்றோர்கள் உரித்துடையோர்களை மதிப்பளிக்கும் நிகழ்வு பிரதேசங்கள் ரீதியாக நடைபெற்று வருகின்றது. அந்தவகையில் ஞாயிற்றுக்கிழமை (23.11.2025) முல்லைத்தீவு மாவட்டத்தில் விசுவமடு புத்தடி விநாயகர் ஆலயத்திற்கு அருகாமை பிரத்தியேகமாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் விசுவமடு மேற்கு, கிழக்கு பகுதிகளை சேர்ந்த மாவீரர் பெற்றோர்கள் உரித்துடையவர்கள் மதிப்பளிக்கப்பட்டுள்ளார்கள். விசுவமடு பிரதேசத்தினை சேர்ந்த மாவீரர் பெற்றோர்கள் மாலை அணிவிக்கப்பட்டு மங்கள வாத்திய இசையுடன் பிரத்தியேகமாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்திற்கு அழைத்து வரப்பட்டு பொதுச்சுடரினை மூன்று மாவீரர்களின் சகோதரி புஷ்பராணி ஏற்றி வைத்ததனை தொடர்ந்து மாவீரர்களின் பொது படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டு மாவீரர் பெற்றோர்கள் மதிப்பளிக்கும் நிகழ்வு நடைபெற்றது இதன்போது கலை நிகழ்வுகளும் மாவீரர்களின் வீரம் தியாகம் அர்ப்பணிப்பு தொடர்பிலான நினைவுரைகள் இடம்பெற்றதுடன் பெற்றோர்கள் மதிப்பளிக்கப்பட்டு அவர்களுக்கான நினைவுச்சின்னம் வழங்கப்பட்டன. விசுவமடு மேற்கு, கிழக்கு மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு ஏற்பாட்டு குழுவின் தலைவரும், புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தபிசாளருமான வேலாயுதம் கரிகாலன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உறுப்பினர் கு.அகிலன், முன்னாள் போராளிகள், மாவீரர்களின் பெற்றோர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். விசுவமடுவில் மாவீரர் பெற்றோர்கள் உரித்துடையோர்களை மதிப்பளிக்கும் நிகழ்வு | Virakesari.lk
  20. 24 Nov, 2025 | 03:40 AM நீண்ட காலம் பராமரிப்பின்றி கைவிடப்பட்ட யாழ் மத்திய கல்லூரி நீச்சல் தடாக புனரமைப்பு பணிகளை எவ்வாறு முன்னெடுப்பது என்ற குழப்பம் காரணமாக ஆரம்ப கட்ட நிகழ்வில் வைக்கப்பட்ட நினைவுக்கல்லை திரை நீக்கம் செய்ய மறுத்து விளையாட்டு துறை அமைச்சர் வெளியேறினார். யாழ் மத்திய கல்லூரி நீச்சல் தடாக புனரமைப்பு பணிகளின் ஆரம்ப கட்ட வேலைகளை முன்னெடுக்க விளையாட்டு துறை அமைச்சர் சுனில் குமார கமகே ஞாயிற்றுக்கிழமை (23) கல்லூரிக்கு விஜயம் செய்த நிலையிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் 2012ம் ஆண்டு ஆழம் கூடிய டைவிங் நீச்சல் தடாகம் யாழ் மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. சில வருடங்களிலேயே குறித்த நீச்சல் தடாகம் பராமரிப்பின்றி கைவிடப்பட்டது. தற்போதைய அரசாங்கம் மீளவும் குறித்த நீச்சல் தடாகத்தை புனரமைக்க நடவடிக்கைகளை எடுத்திருந்தது. இந்த நிலையில் சனிக்கிழமை (23) குறித்த கல்லூரிக்கு விஜயம் செய்த விளையாட்டு துறை அமைச்சர் நீச்சல் தடாகத்தை பார்வையிட்டதுடன் டைவிங் நீச்சல் தடாகம் எனும் போது ஒரு குறிப்பிட்டளவானவர்களே பயன்படுத்துவார்கள் என்றும் அதே நேரம் சாதாரணமான ஆழம் குறைந்த நீச்சல் தடாகமாக இதை மாற்றினால் பெரும்பாலானவர்கள் பயன்படுத்துவார்கள். பொது நிதியில் செய்யும் போது அதிகளவிலானோருக்கு அது நன்மை அளிக்கும் என்று முடிவு எடுத்து அவ்வாறு செய்யலாம் என யோசனையை முன் வைத்தார். குறித்த முயற்சிக்கு யாழ் மத்திய கல்லூரி மட்டத்தில் ஆதரவு மற்றும் எதிர்ப்பு என இரு வேறுபட்ட நிலைப்பாடு காணப்பட்டது. இந்நிலையில் இன்று மத்திய கல்லூரிக்கு சென்ற அமைச்சர் தனது நிலைப்பாட்டை அங்கு தெரிவித்தபோது உள்ளவாறே புனரமைத்து தருமாறு ஒரு தரப்பும் சாதாரண நீச்சல் தடாகமாக மாற்றி புனரமைத்தாலும் பிரச்சினை இல்லை என கூறி அமைச்சரின் கருத்தையும் ஏற்று மற்றொரு தரப்பும் கருத்து தெரிவித்ததால் குழப்பம் ஏற்பட்டது. குறித்த புனரமைப்புக்கான நினைவுக் கல் திரை நீக்கம் செய்ய வைக்கப்பட்டிருந்த நிலையில் நீச்சல் தடாகம் அருகில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் உரையாற்றி விட்டு, திரை நீக்கம் செய்யமாலே விளையாட்டு துறை அமைச்சர் வெளியேறினார். பாடசாலை அதிபர் உள்ளிட்ட சிலர் அமைச்சரை திரை நீக்கம் செய்யுமாறு வலியுறுத்தி கேட்ட போதும் அமைச்சர் அதனை மறுத்தார். பாடசாலை மட்டத்தில் ஒருமித்த நிலைப்பாட்டை எட்டிய பின்னர் அதற்கேற்றவாறு புனரமைப்பு பணிகளை முன்னெடுக்க முடியும் என தெரிவித்து அமைச்சர் வெளியேறினார். இதன்போது அமைச்சருடன் நாடாளுமன்ற உறுப்பினர் கருணை நாதன் இளங்குமரன், யாழ் மாவட்ட செயலாளர் மருதலிஙக்ம் பிரதீபன், யாழ் மாநகர சபை உறுப்பினர் கபிலன் சுந்தரமூர்த்தி என பலரும் கலந்து கொண்டனர். யாழ் மத்திய கல்லூரி நீச்சல் தடாக புனரமைப்பு குழப்பம்; நினைவுக்கல் திறப்பு நிகழ்வை தவிர்த்து அமைச்சர் வெளியேறு | Virakesari.lk
  21. 24 Nov, 2025 | 12:37 PM வடக்கில் நீண்ட காலம் அபிவிருத்தி நடக்கவில்லை. இங்கிருந்தவர்கள் வாக்குகளை பெற்று தங்கள் வேலைகளை செய்தார்கள் என என விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் சுனில் குமார கமகே குற்றஞ்சாட்டினார். யாழ்ப்பாணம் பழைய பூங்கா வளாகத்தில் புதிய உள்ளக விளையாட்டு அரங்கிற்கான அடிக்கல் நாட்டிய பின்னர் கருத்து தெரிவித்த போதே அமைச்சர் இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் இருந்து வந்த கோரிக்கையால் இதனை நாம் செய்யவில்லை. நாமாக உணர்ந்து இதனை இன்று செய்துள்ளோம். அமைச்சராக நான் முதன்முதலாக பயணத்தை மேற்கொண்டது யாழ்ப்பாணத்துக்கு தான். அந்த நேரத்தில் யாழ்ப்பாணத்திற்கு என்ன தேவை என தீர்மானித்தோம். என்னுடைய சொந்த மாவட்டம் காலி. அமைச்சராக இன்னமும் அந்த மாவட்டத்திற்கு போகவில்லை. தேசிய ஒற்றுமையை ஏற்படுத்த நாம் முயற்சிக்கிறோம். எமக்கு அதிகாரம் தொலைவில் இருந்தபோதும் நாம் தேசிய ஒற்றுமையை ஏற்படுத்த முயற்சித்தோம். சிங்கள தமிழ் முஸ்லிம் என்பதல்லக மனிதராக ஒன்றாக இருக்க வேண்டும். பிமல் ரத்நாயக்க ஆயிரம் தடவை யாழ்ப்பாணத்துக்கு வந்திருப்பார். 2013 முதல் அவர் இங்கு வந்து செயற்படுகிறார். எனவே வாக்குகளுக்கவோ அரசியல் தந்திரத்துக்காகவோ இதனை நாம் செய்யவில்லை. யாழ்ப்பாண மாவட்டத்தில் தனி செயற்றிட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட அதிக நிதியாக உள்ளக விளையாட்டு அரங்கிற்கு நிதி ஒதுக்கப்பட்டதாக யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் தெரிவித்தார். 2025 ம் ஆண்டுக்கான நிதியில் 170 மில்லியன் ரூபாயும் 2026ம் ஆண்டுக்கான நிதியில் 200 மில்லியனும் இந்த உள்ளக விளையாட்டு அரங்குக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. வலைப்பந்து, கைப்பந்து, பூப்பந்து, கபடி, மேசைப்பந்து , கரம், மார்ஷல் ஆர்ட் என பல விளையாட்டுகளை இங்கு விளையாட முடியும். விளையாட்டில் சிங்களம், தமிழ், முஸ்லிம்,யாழ்ப்பாணம்,காலி என நாம் பார்ப்பதில்லை. திறமையான பிள்ளைகளை பார்க்கிறோம். இங்கு பல திறமையானவர்கள் உள்ளனர். யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் பல வருடங்களாக பயன்பாடில்லாமல் நீச்சல் தடாகம் உள்ளது. அதற்காக 30 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எல்லோரும் பாவிக்கும் வகையில் அது அமைந்தால் அது பயனாக இருக்கும். மாணவர்களுக்கு உடற்பயிற்சி பெரியோருக்கு நடை பயிற்சி செய்ய சிறுவர் பூங்கா தேவை. யாழ் மாவட்ட செயலாளர் இடத்தை வழங்கினால் நல்ல பூங்காவை அமைக்க முடியும். சர்வதேச கிரிக்கெட் மைதான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மூன்று மாதங்களுக்குப் பின்னர் இதன் முன்னேற்றத்தை பார்க்க வருவோம். அந்த நேரத்தில் என்னென்ன தேவை என்பதை ஆராய்வோம். யாழ்ப்பாண மாவட்டத்தில் கால்பந்து உள்ளிட்ட விளையாட்டு துறை சார்ந்து பல வேலைத்திட்டங்களை நாம் செய்வோம் - என்றார். விளையாட்டில் சிங்களம், தமிழ், முஸ்லிம்,யாழ்ப்பாணம்,காலி என நாம் பார்ப்பதில்லை ; திறமையான பிள்ளைகளை பார்க்கிறோம் - அமைச்சர் சுனில் குமார கமகே | Virakesari.lk
  22. கொழும்பு துறைமுக வளாகத்தில் மனித புதைகுழிகள் : சில கேள்விகளை உள்ளடக்கி மக்கள் போராட்ட முன்னணி நீதி அமைச்சுக்கு கடிதம் ( இணையத்தள செய்திப் பிரிவு ) கொழும்பு துறைமுக வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழிகள் தொடர்பில் மேலும் விபரமறிய பல்வேறு கேள்விகளை உள்ளடக்கி நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சின் செயலாளருக்கு மக்கள் போராட்ட முன்னணி கடிதமொன்றை இன்று திங்கட்கிழமை (24) அனுப்பியுள்ளது. மக்கள் போராட்ட முன்னணி அனுப்பியுள்ள கடிதத்தில், இதுவரை எத்தனை மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன ? புதைகுழிகள் தொடர்பாக தடயவியல் பரிசோதனைகள் நடத்தப்பட்டதா? அப்படியானால் அந்த அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் என்னென்ன? போன்ற பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டுள்ள அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: பல தசாப்தங்களாக உயர் பாதுகாப்பு வலயமாக இருந்து வரும் கொழும்பு துறைமுக வளாகத்தில் கண்டுப்பிடிக்கப்பட்ட கூட்டு மனித புதைக்குழி தொடர்பான பின்வரும் கேள்விகளுக்கு மக்கள் போராட்ட முன்னணி பதில்களை எதிர்பார்க்கிறது. 1. இதுவரை எத்தனை மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன? 2. இதுவரை தோண்டி முடிக்கப்பட்ட மொத்த நிலப்பரப்பில், எந்தளவு பாரிய புதைகுழிகளுக்குச் சொந்தமானது என அடையாளம் காணப்பட்டுள்ளது? 3. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள இடைக்கால அறிக்கைகள் மற்றும் ஊடக வெளியீடுகள் எவை? 4. இது தொடர்பாக எதிர்காலத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன? மேலும் இது தொடர்புடைய காலக்கெடு மற்றும் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ள நிறுவனங்கள் எவை? தனிநபர்கள் யாவர்? 5. இதற்கான காலக்கணிப்புக்காக (கார்பன் 14 சோதனைகள் போன்றவை) மாதிரிகள் சிறப்பு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளனவா? அப்படியானால், அந்த நிறுவனங்கள் எவை? மேலும், அந்த அறிக்கைகள் கிடைக்கப்பெறும் திகதிகளைக் குறிப்பிட முடியும? இது தொடர்பாக தடயவியல் மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டதா? அப்படியானால் அந்த அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் யாவை? 7. இது தொடர்பாக ஒரு இடைக்கால நீதி செயலமுறை திட்டமிடப்பட்டிருந்தால், அது எவ்வாறு மேற்கொள்ளப்படும் என்பதை விளக்க முடியுமா? 8. மனித எலும்புக்கூடுகள் தவிர வேறு ஏதேனும் சான்றுகள் (கலைப்பொருட்கள், அணிகலனகள் ஆடைகள் போன்றவை) இந்த இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனவா? அப்படியானால் அவை எவை? 9. காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு அந்த ஆதாரங்களை அடையாளம் காண வாய்ப்பு வழங்கப்படுமா? குற்றவியல் அரசுகளின் அழிக்க முடியாத கரும்புள்ளிகளாகக் கருதப்படும் பல பாரிய மனிதப புதைகுழிகள் இலங்கையில் கடந்த காலங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும் அவற்றில் எதிலும் குறைந்தபட்ச நீதி அல்லது உரிய செயல்முறை மேற்கொள்ளப்படவில்லை. குறிப்பாக முந்தைய அரசாங்கங்கள் அந்த செயல்முறைகளை வேண்டுமென்றே புறக்கணித்து தாமதப்படுத்தியுள்ளன என்பது கவனிக்கத்தக்கது. அந்த விசாரணைகள் அனைத்தும் மீண்டும் புத்துயிர் பெற்று பாரபட்சமின்றி முழு வெளிப்படைத்தன்மையுடன் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு / குறைந்தபட்சம் அவர்களின் உறவினர்களுக்கு நீதி கிடைக்கும் வகையில் இந்த செயல்முறை முடிவடைய வேண்டும் என்றும் நாங்கள் வலியுறுத்துகிறோம். பல்வேறு காரணங்களால் ஏற்கனவே தாமதமாகி வரும் விசாரணை மற்றும் நீதித்துறை நடவடிக்கைகளை தாமதமின்றி முடிக்கவும் குற்றவாளிகளை அடையாளம் காண முடிந்தால் அவர்கள் மீது விரைவில் வழக்குத் தொடரவும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. கொழும்பு துறைமுக வளாகத்தில் மனித புதைகுழிகள் : சில கேள்விகளை உள்ளடக்கி மக்கள் போராட்ட முன்னணி நீதி அமைச்சுக்கு கடிதம் | Virakesari.lk
  23. 24 Nov, 2025 | 03:29 PM மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மீனவர்கள் தங்களின் கடல் எல்லைகளை தனியார் நிறுவனங்களுக்கு விற்றதைக் கண்டித்தும் அவற்றை மீட்டுத் தருமாறு கோரியும் இன்று (24) காலை 10.30 மணிக்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மூதூர் பிரதேசத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மீனவர்கள் ஒன்றுகூடி இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பல தலைமுறைகளாக தாங்கள் தொழில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்ததாகவும் பாரம்பரிய கடல் எல்லைகளை தனியார் (குளோபல் சீ பூட்) நிறுவனங்களுக்கு விற்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டி, கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டனர். மூதூர் தக்வா நகர் கடற்கரை பள்ளிவாசலிலிருந்து தொடங்கிய இந்தப் ஆர்ப்பாட்டப் பேரணி, பிரதான வீதி ஊடாக சென்று மூதூர் பிரதேச சபையில் முடிவடைந்தது. மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் மூதூர் பிரதேச செயலகத்தின் உதவி செயலாளர் ரோஸானாவிடமும் மகஜரைக் கையளித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள், இளைஞர்கள், சமூக நல அமைப்புகள், மீனவர்கள் உட்பட சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். “மீனவர்கள் பயன்படுத்தி வரும் பாரம்பரிய கடல் எல்லைகளை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கும் நடவடிக்கையை உடனடியாக ரத்து செய்!” “கடல் வளங்களைப் பாதுகாக்க அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” “மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கு சட்ட ரீதியான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்” போன்ற கோரிக்கைகளை முன்வைத்து மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கலந்துகொண்டோர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், நாங்கள், தினமும் கடலுக்குச் சென்று எங்கள் குடும்பங்களை நடத்துபவர்கள். எங்கள் கடல் எல்லைகளை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கும் நடைமுறை எங்களுக்குச் சட்டவிரோதமாகவும் அநியாயமாகவும் இருக்கிறது. இதனால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து வாடுகின்றனர் எனக் கூறினர். தனியார் நிறுவனங்களுக்கு விற்கப்பட்ட கடல் எல்லைகள் - மூதூர் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் | Virakesari.lk
  24. (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) பாடசாலை வேன்களுக்கு சி.சி.டி.வி கெமரா அமைப்புகளை கட்டாயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் பாடசாலை போக்குவரத்து சேவைகள் மற்றும் அலுவலக போக்குவரத்து சேவைகளுக்கான வழிகாட்டல் நெறிமுறைகளை ஜனவரி மாதம் முதல் அறிமுகப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (24) நடைபெற்ற 2026 வரவு செலவுத் திட்டத்தின் போக்குவரத்து,நெடுஞ்சாலைகள்,துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு, நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, போக்குவரத்தின் போது பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு ஏற்படும் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாகவும், எதிர்காலத்தில் அதனை குறைத்துக்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். அத்துடன், பாடசாலை போக்குவரத்து சேவைகள் மற்றும் அலுவலக போக்குவரத்து சேவைகளுக்கான வழிகாட்டல் நெறிமுறைகளை ஜனவரி மாதம் முதல் அறிமுகப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்குள்ள ஒரே தீர்வு பயணிகளைப் பலப்படுத்துவதாகும். ஒரு பெண்ணுக்கோ அல்லது ஒரு பிள்ளைக்கோ யாராவது பாலியல் தொல்லை கொடுக்க முயற்சித்தால், அதைக் கண்டும் காணாதது போல் இருக்காமல் அதற்கு எதிராகச் செயல்படும் மனிதர்கள் தேவை. ஆணோ பெண்ணோ யாராக இருந்தாலும் சரி. ஆனால் என்ன நடந்திருக்கிறது என்றால், எமது பேருந்துத் துறையில் உள்ள சில மோசமான நிலைமைகள் காரணமாக மக்கள் பயப்படுகிறார்கள் இன்னொருவருக்காக முன்வருவதற்கு. , அதனால் பேருந்துத் துறையைத் தொழில்முறை நிலைக்குக் கொண்டு வருவது, முச்சக்கரவண்டி துறையைத் தொழில்முறை நிலைக்குக் கொண்டு வருவது, செம்மஞ்சல் நிறம் சிவப்பு பக்கத்திற்குச் செல்லாமல் பச்சை பக்கத்திற்குக் கொண்டு வர உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றார். பாடசாலை வேன்களுக்கு சி.சி.டி.வி கெமரா அமைப்புகளை கட்டாயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் - பிமல் ரத்நாயக்க | Virakesari.lk
  25. புத்தளம் மாவட்ட ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் முகமட் பைசல் என்னை கொல்லுவதாக அச்சுறுத்தியுள்ளார் என்றும், இதனால் அவரை கைது செய்ய வேண்டும் என்றும் யாழ். மாவட்ட சுயேச்சைக்குழு பாராளுமன்ற உறுப்பினரான அர்ச்சுனா இராமநாதன் சபையில் முறையிட்டார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (21) நிலையியல் கட்டளை கீழ் புத்தளம் வைத்தியசாலை தொடர்பில் சுகாதார அமைச்சரிடம் கேள்வி எழுப்பியது தொடர்பில் பாராளுமன்ற உணவக பகுதியில் வைத்து பைசல் எம்.பி தனக்கு அவ்வாறு அச்சுறுத்தல் விடுத்ததாக அர்ச்சுனா எம்.பி தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை வரவு- செலவுத்திட்ட குழுநிலை விவாதம் ஆரம்பிக்கப்பட முன்னர் புத்தளம் வைத்தியசாலை தொடர்பில் அர்ச்சுனா எம்.பி சுகாதார அமைச்சரிடம் கேள்வி எழுப்பியதுடன், அதற்கு அமைச்சர் பதிலளித்திருந்தார். அதன் பின்னர் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அந்த சம்பவத்தின் பின்னர் உடனடியாக சபைக்குள் வந்த அர்ச்சுனா எம்.பி ஒழுங்கு பிரச்சனையை முன்வைத்து அது தொடர்பில் சபாநாயகரிடம் முறையிட்டார். இதன்போது அர்ச்சுனா எம்.பி கூறுகையில், நான் புத்தளம் மாவட்டம் தொடர்பான கேள்வியை எழுப்பிவிட்டு சிற்றுண்டிச்சாலைக்கு போகும் போது, அங்கு வாசலில் உள்ள கேமராவுக்கு முன்னால் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பைஸால் என்னை கொலை செய்வதாக தெரிவித்தார். தயவு செய்து அந்த வீடியோ பதிவை எடுத்து விசாரணையை முன்னெடுங்கள். எனக்கு சாவதற்கு பயமில்லை. ஆனால் ஒரு கேள்வியை கேட்டதற்காக இவ்வாறு கூறுகிறார் என்றார். இவ்வேளையில் பதிலளித்த சபாநாயகர் இது தொடர்பான விடயத்தை சிறப்புரிமையை பிரச்சினையாக முன்வையுங்கள் என்றார். Tamilmirror Online || அர்ச்சுனா எம்.பிக்கு மரண அச்சுறுத்தல்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.