குமாரசாமி
கருத்துக்கள உறுப்பினர்கள்
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Topic: ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
Everything posted by குமாரசாமி
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
தமிழ்நாட்டின் பிரச்சனைகள் எப்படியெல்லாமோ இருக்க......😎 இது புதிய பிரச்சனையாக இருக்கும் போல் உள்ளது....😂 தமிழ் நாட்டின் பிரச்சனைகள் பெரும் பிரச்சனைகள்.🤣
-
சக ஆசிரியைகள் பாலியல் புகார் - 9 ஆண்டுக்கு பிறகு நிரபராதி என நிரூபித்த ஆசிரியர்
ஒரு மனிதனுக்கு கறை ஏற்படுத்துவது வெகு சுலபம். ஆனால் கறையை ஏற்படுத்தி விட்டால் அது அவனது அஸ்தி கரைந்த பின்னரும் அந்த கறை இருக்கும். சொந்த அனுபவங்களில் ஒன்று.
-
கச்சதீவு புனித அந்தோனியார் திருவிழா
நேற்றைய தினம் கச்சதீவு வருடாந்த உற்சவம் பற்றிய காணோளி பார்த்தேன். என்றுமில்லாதவாறு இந்த வருடம் பெரிய களைகட்டுகின்றது போல் தெரிகின்றது. சிறிய தீவில் பெரும் சன நெரிசல்.
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்!
அமெரிக்கா வெனிசுலாவை புடிச்சாப்பிறகு பெற்றோல் விலை குறையும் எண்டு பாத்தான். ஒரு கோதாரியும் இல்லை. பெற்றோல் டீசல் விலை கூடினது தான் மிச்சம். 😁
-
தெற்கு ஈரானில் ஆரம்பப் பாடசாலை மீது இஸ்ரேல் தாக்குதல்: 40 மாணவிகள் பலி – பலர் காயம்
அந்த இரு அமைப்புகளும் நுளம்புக்கு மருந்து அடிக்கக்கூட தகுதியில்லாத அமைப்புகள்.😂
-
கடும் பனிப்புயல்: நியூயோர்க் நகரம் முழுமையாக முடக்கப்பட்டது
நான் உலக வெப்பமாகுதல் செய்தி பொய்யென சொல்லவில்லை. அது பெரிய பிரச்சனை இல்லை என மட்டுமே சொல்ல வந்தேன். இன்றைய வெப்பமாதல் பிரச்சனைக்கு வளர்ந்த விஞ்ஞானமும் முக்கிய காரணமாக அமைகின்றது.
-
எங்களை அடக்கியாள சிங்கள அரசுகள் பயன்படுத்திய சட்டம் நீக்கப்பட வேண்டும் - வேலன் சுவாமிகள்
இந்த வேலன் சுவாமி போன்ற காவிகள் சிங்கள இனவாத காவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
-
ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
ஈரான் மீதான தாக்குதல் வெற்றியளித்தால் நாடு பல பிரிவுகளாக பிரியலாம் என சொல்கிறார்கள். இதன் மூலமாவது குர்திஷ் மக்களுக்கென தனி மண் கிடைக்கட்டும்.
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
நான் அன்று தொடக்கம் திரிஷா தீவிர ரசிகன் என்பது ஊர் உலகம் அறிந்த விடயம். 😎 செல்லம் திரிஷா முதல்வராகி மக்கள் சேவை செய்ய என் வாழ்த்துக்கள். 😂
-
கடும் பனிப்புயல்: நியூயோர்க் நகரம் முழுமையாக முடக்கப்பட்டது
ஓம் உண்மமைதான். ஆராய்ச்சியாளர்களின் தகவல்கள் பொய்யென வரும் போது நின்ற இடத்திலேயே நின்று கீறல் விழுந்த இசைத்தட்டு போல் கதற வேண்டும் என்பது நியதி அல்ல. கொள்கைகளிலும் மாற்றங்கள் வரலாம். அரச சட்டங்கள் போல். தேர்தலில் ஒரு நம்பிக்கையுடன் ஒருவரை தெரிவு செய்வோம். அவர் போக்கு நாம் நினைத்தது போல் இல்லையென்றால் அவரை விமர்ச்சிப்பது தான் நியாயமான மனிதனுக்கு அழகு. முன்னர் ஆதரவு கொடுத்தே என்பதற்காக தொடர்ந்து முட்டு கொடுக்கம் பழக்கம் என்னிடம் இல்லை. இன்றைய ஊடகங்கள் என்பது விபச்சார ஊடகங்கள். தங்கள் வியாபாரத்திற்காக எதையும் செய்வார்கள். உலக வெப்பமாகுதல் ஒரு பிரச்சனையே இல்லை. படைத்த இயற்கை தன்னை சரி செய்து கொள்ளும். ஆனால் மனிதன் உருவாக்கிய பிரச்சனைகளை மனிதனே தீர்த்து வைக்க முயற்சிக்கட்டும். அல்லது கற்றுக்கொள்ளட்டும். இன்றைய ஊடகங்கள் என்பது விபச்சார ஊடகங்கள். தங்கள் வியாபாரத்திற்காக எதையும் செய்வார்கள். என்னதான் குத்தி முறிந்தாலும் இறுதியில் வெற்றியடைவது யதார்த்தம் மட்டுமே. யதார்த்தம் என்பது இயற்கையை போன்றது. எனது கொள்கை யதார்த்தம் மட்டுமே. வணக்கம் நிர்வாகம். நான் பதிந்த கருத்துக்களை ஒரு சில நிமிடங்களிலேயே திருத்த முடியவில்லை. ஏன் என தெரியவில்லை.
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
இந்திய அரசியலில் பெரிய வீடு, சின்ன வீடு, பக்கத்து வீடு ,மேல் வீடு,கீழ் வீடு எல்லாம் சர்வசாதாரண நிகழ்வுகள் அல்லவா? 😂 இங்கே ஏன் கோசான் பதட்டப்படுகின்றார் என தெரியவில்லை? 🤣 அதிலும் படித்து பட்டங்கள் பெற்ற மனித நாகரீக மேற்குலகின் பாலியல் கதைகள் எல்லாம் இன்றைய பெரிய செய்திகளாக இருக்கும் போது விஜி அண்ணிக்காக போராடும் கோசானை பாராட்டியே ஆக வேண்டும். 👍
-
கடும் பனிப்புயல்: நியூயோர்க் நகரம் முழுமையாக முடக்கப்பட்டது
இங்கே ஜேர்மனியில் 20,30 வருடங்களுக்கு முந்திய செய்திகளை திகதிகளுக்கேற்ப தினசரி மறு ஒளிபரப்பு செய்வார்கள்.அப்போது அன்றைய வானிலை அறிவுப்பும் இருக்கும். அதை பார்த்த அளவில் பாரிய மாற்றம் ஏதுமில்லை. இயற்கை அழிவுகள் என்றும் எங்கும் உண்டு. உதாரணத்திற்கு 70களில் கிழக்கு மாகாணத்தில் வந்த சூறாவளி அனர்த்தங்கள் வந்த போது யாரும் உலக வெப்பமாவதலை பற்றி பேசவில்லை. ஒரு காலத்தில் பங்களாதேசில் அடிக்கடி சூறாவளிகள் வந்து அழித்தொழிக்கும். இன்று அது அங்கில்லை? ஏன்?
-
இளையராஜாவுக்கு இடைக்கால தடை - டெல்லி உயர் நீதிமன்றம்
பணம் வாங்காமல் உதவி செய்தாலே ஏளனங்கள் தான் வரும். சீதனம் வாங்காமல் கலியாணம் கட்டும் மாப்பிளை போல்....🤣 இளையராஜா எந்தவொரு தயாரிப்பாளரையோ நடிகர்களையோ நடுத்தெருவில் விட்டது கிடையாது.😎 அதிக திரைப்படங்களுக்கு உயிரூட்டியதே இளையராஜா இசை மட்டுமே. கமல்,ரஜனி படங்கள் உட்பட......
-
கடும் பனிப்புயல்: நியூயோர்க் நகரம் முழுமையாக முடக்கப்பட்டது
இவையெல்லாம் இயற்கை அனர்த்தங்கள் அல்ல. சாதாரண இயற்கை நிகழ்வுகள் மட்டுமே. இன்றைய குடிசை கைத்தொழில் செய்திகளின் பிரமாண்டங்களுக்காக செய்திகளை வெளியிடுவார்கள். சென்ற 50 ஆண்டுகால காலநிலைகளை அவதானித்தால் இன்றைய சில கால நிலைகள் சர்வதாசாரணமாகவே தெரிகின்றது. எதற்கெடுத்தாலும் ஒரு சிறிய விடயத்தையும் பெரிதாக்குவது இன்றைய நடைமுறையாகி விட்டது என்பது கவலைக்குரிய விடயம்.
- அன்பு ௐ
-
இளையராஜாவுக்கு இடைக்கால தடை - டெல்லி உயர் நீதிமன்றம்
சரியாக சொன்னீர்கள். ஒவ்வொரு மனிதர்களுக்கும் ஒவ்வொரு சிந்தனைகள்,கருத்துக்கள் இருக்கும். என்னைப்போல் எல்லோரும் இருக்கவேண்டும் என நினைத்தால் அதுவும் ஒரு வித மனநோய் தான். உழைப்பவனுக்கு தான் தெரியும் உழைப்பின் வேதனை. இங்கே எப்படி பிஜேபி வந்தது? எப்படி விஜய் வந்தார் என தெரியவில்லை?
-
இளையராஜாவுக்கு இடைக்கால தடை - டெல்லி உயர் நீதிமன்றம்
இளையராஜா வெள்ளந்தியாக எல்லோருக்கும் நல்லவராக இருந்திருக்கின்றார். இது கறுப்பு ஆடுகள் நிறைந்த உலகம் என்பதை இப்போது உணந்திருப்பார் என நினைக்கின்றேன்.
-
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு மறைவு
கண்ணீர் அஞ்சலிகள்.🙏
-
தி.மு.க உடன் தே.மு.தி.க கூட்டணி
நானும் அப்படித்தான் நினைக்கிறேன்.
-
இரான் அருகே போர்க்கப்பல்கள் மற்றும் போர் விமானங்களை குவிக்கும் அமெரிக்கா - பிபிசி புலனாய்வு
நீங்கள் எதை கூறினாலும் ஈரானின் பின் பலத்தில் சீனா நிற்கின்றது. இங்கே அமெரிக்கா தோற்றால் ஒட்டுமொத்த மேற்குலகிற்கும் பெரிய பின்னடைவு வரலாம். முல்லாக்கள் அகற்றப்பட வேண்டும் என்பது என் நிலைப்பாடு. அதற்காக மன்னர் ஷாவின் குடும்பம் மீண்டும் ஈரானை மன்னர் ஆட்சி செய்ய வரவேண்டும் என்பது என் கருத்து அல்ல. ஆனால் முல்லாக்கள் அகற்றப்பட்டால் ஈரான் பல பிரிவுகளாக பிரிக்கப்படலாம். அதற்குள் பல தனி நாடுகள் உருவாகலாம்.
-
வாச்சாத்தி - உண்டால் அம்ம இவ்வுலகம்
வாச்சாத்தி வன்மம் நிறைந்த வரலாறு. மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசியல்....... அதே மக்கள் தெரிவு செய்த அரசியல் அதே மக்களை அழிக்கும் ஈனச்செயல்களை செய்யும் அரசியல். வாச்சாத்தி, வெண்மணி போன்ற படுகொலை சம்பவங்களை வரலாறு காலா காலத்திற்கும் எடுத்துச்செல்லட்டும்.
-
தி.மு.க உடன் தே.மு.தி.க கூட்டணி
அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை நிரந்தர எதிரியும் இல்லை என்பதற்கு நல்லதொரு உதாரண நிகழ்வு இது. விஜயகாந்த் அவர்கள் யாரை எதிர்த்து கட்சி ஆரம்பித்தாரோ அந்த இடத்தில் மண்டி இட்டது அவர் வளர்த்த கட்சி.
-
பாராளுமன்ற ஓய்வூதிய (நீக்குதல்) சட்டமூலம் நிறைவேற்றம்
நாட்டிற்கு நலன் தரும் சட்டம். பேச வார்த்தைகள் இல்லாமல் வெறுமனே இனவாத பேச்சுக்களை பேசும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒதுங்கட்டும்.
-
ஓ.பன்னீர் செல்வம் ஸ்டாலினை சந்தித்த பின் திமுகவில் இணைவது பற்றி கூறியது என்ன?
தமிழ்நாட்டு அரசியல் என்பது ஒரு வகை வியாபாரம். பணச்சலவைகள் மிகுந்த இடம். பாலைவனம் போன்ற பூமியில் பூங்காவனம் அமைத்து காட்டுவது போல் ஒரு பிரமையை உருவாக்கி காட்டுவார்கள்.
-
மன்னார் - புத்தளம் வீதியை திறவுங்கள்; அல்லது மாற்றுப் பாதையை கடல் ஓரமாக அமையுங்கள்; - ரிஷாத் பதியுதீன்
ஜேவிபி பல இடங்களில் தூசு தட்டுவதாக தெரிகின்றது. தமிழர் பகுதிகளை விட சிங்கள பகுதிகள் அதிகம் என காதுவழி செய்திகள். உண்மை பொய் தெரியவில்லை.