Everything posted by குமாரசாமி
-
ஆர்பனை ஓரங்கட்டவும், ரஷ்ய சொத்துக்களை என்றென்றும் முடக்கவும் சட்டப்பூர்வ தீர்வை ஐரோப்பிய ஒன்றியம் அங்கீகரிக்கிறது.
மற்றவன் சொத்தை அபகரிப்பதும் மேற்குலகின் இரத்தத்தில் ஊறிய விடயம் தான். இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.
-
மலையகத்துக்குள்ளேயே அவர்களின் வாழ்வியலை உறுதிபடுத்த வடக்கு, கிழக்கு, மலையகமாக ஒன்றுபடுவோம் - அருட்தந்தை சத்திவேல்
அருட்தந்தையின் சிந்தனை தூர நோக்கு சிந்தனை.
-
முழு புசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் செயற்பாட்டினை அரசாங்கம் முன்னெடுக்ககூடாது - எம்.ஏ.சுமந்திரன்
விடுதலைப்புலிகள் காலங்களை தவிர்த்து.....நீண்ட இடை வெளிகள் 1948 தொடக்கம் இன்று வரைக்கும் இருந்துள்ளது. இன்றும் இருக்கின்றது. உங்கள் கொள்கையாளர்கள் அந்த இடைவெளிகளில் சாதித்ததை தேடினேன். எதுவுமே கிடைக்கவில்லை.
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
"பிரதேசவாதம்" இது உலகில் உள்ள அனைத்து சமூகத்தினரிடமும் உண்டு. ஆகையால் எம்மை நாமே தாழ்த்திக்கொள்வதில் எனக்கு உடன்பாடில்லை.
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
சிங்களவர்களும் வடக்கு கிழக்கில் குடியேற்றங்களை அமைக்க ஆசைப்படுகின்றார்கள். சுமந்திரனும் அதே போல் ஆசைப்படுகின்றார். சிங்கள மாகாணங்களில் இப்படியான தமிழர் குடியேற்ற நிலங்களை அமைக்க முடியாதா?
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
மலையக மக்களுக்கு நான் எதிரியல்ல. சிங்கள பகுதிகளிலும் தமிழ் சார் பகுதிகளிலும் சரி சமமாக குடியேற்றப்பட வேண்டும் என்பது என் கருத்து. அதிலும் வாழ்வாதார நிலங்கள் என பார்த்தால் சிங்கள பகுதிகளே அதிகமாக தெரிகின்றது. தமிழர் பிரதேசங்களில் ஏற்கனெவே வாழ்வாதார பிரச்சனைகள் உண்டு. இதனால் மேலதிக குடியேற்றங்கள் இன்னும் பல பிரச்சனைகளை உருவாக்கும். ஒட்டு மொத்த மலையக தமிழர்களையும் கீழ் இறக்கி விட்டால் சிங்கள பொருளாதாரம் சிக்கு முக்காடும் என்பது இன்னொரு பார்வை.
-
ஜேர்மனியில் யாழ் இளைஞர் விபரீத முடிவு.!
எனது முதலாவது கருத்து என்னவென்றால் கப்பல் நினைப்பில் இருப்பவர்கள் வெளிநாடு வரக்கூடாது. இரண்டாவது கருத்து என்னவென்றால் அந்த கப்பல் நினைப்பு உள்ளவர்களுக்கான காணொளிகளை தூக்கிக்கொண்டு திரியக்கூடாது. அவர் கஷ்டப்பட்டு வேலை செய்ய மாட்டாராம். அவர் செல்வந்தராம். நிறம் கூடினவராம்.வடிவானவராம்.நடிகர் மாதிரி இருக்கிறாராம்.இதுதான் ஒரு மனிதனுக்கு மூலதனமென்றால் அந்த மனிதரை கடந்து செல்வதே மேல். மற்றும்படி.....காணொளியில் வரும் ஜேர்மனியின் கடின வாழ்க்கை சித்தரிப்பு நம்பக்கூடிய மாதிரி இல்லை.
-
“பிரித்தானியா ஒரு கிறிஸ்தவ நாடு” என இஸ்லாமிய மாணவரிடத்தில் கூறிய ஆசிரியர் பணிநீக்கம்!
மதம் புகுத்தப்பட்டது வேறு சமாச்சாரம். ஒரு நாடு தன்னை இன்ன/ இந்த மத சார்பு நாடாக அடையாளப்படுத்துவது முக்கிய விடயம் என நான் நினைக்கின்றேன். இது சம்பந்தமாக உங்கள் கருத்தை எதிர்பார்க்கின்றேன். கந்தையர்! உங்களுக்கு ஐ போனிலை எழுதுறது சரிப்பட்டு வராது போல கிடக்கு. சொல்லுக்கு சொல் முற்றுப்புள்ளி வைக்கிறது வடிவில்லாமல் கிடக்கு.😁 சரி அது கிடக்கட்டும்....😊 அந்த ஆசிரியர் ஏன் எதற்காக பிரித்தானியா கிறிஸ்தவ நாடு என்பதை கூறினார் என்பதற்கு விளக்கங்கள் இல்லை.அவர் சும்மா வீதியால் சென்ற ஒருவரை கூப்பிட்டு இது கிறிஸ்தவநாடு என சொல்லவில்லை.அல்லது சந்தியில் நின்று இது கிறிஸ்தவ நாடு என மதவாதம் பேசவில்லை. எனது அனுமானம் என்னவெனில்..... அந்த முஸ்லீம் மாணவர் ஒட்டு மொத்த கழிவறையையும் நாறடித்திருப்பார்.இதை ஆசிரியர் கண்டித்திருப்பார். அதற்கு அந்த மாணவர் எங்கள் மார்க்கம்,அல்லா அது இது என பொங்கியிருப்பார். ஆசிரியரும் தன் பங்கிற்கு கொட்டியிருப்பார்.அவ்வளவுதான்😎 இன்னுமொன்று..... அந்த ஆசிரியருக்கு தண்டனை பகிரங்கமாக கொடுக்காமல் விட்டால்....சம்பந்தப்பட்ட அவர்கள் சம்பந்தமான குஞ்சுகுருமன்கள் எங்கும் எப்போதும் காலம் காத்து சின்ன வெங்காயம் ,பச்சைமிளைகாய் நறுக்கிற கத்தியால அப்பாவி பொதுமக்களை குதறிக்கொண்டே இருப்பார்கள். இது இன்றைய உலக அனுபவங்கள்😭
-
முழு புசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் செயற்பாட்டினை அரசாங்கம் முன்னெடுக்ககூடாது - எம்.ஏ.சுமந்திரன்
இதெல்லாம் காலா காலமாக நான் யாழ்களத்தில் எழுதிய கருத்துக்கள் அது யாருக்காக எங்கு எந்த திரியில் எழுதப்பட்டது என்பதுதான் பேசு பொருள்.அமீர்,சேனாதிபதி கொம்பனிகளுக்கு அப்படியான கருத்துக்கள் தகும். அன்றைய பின்கதவு அரசியலை சுமந்திரன் இன்றும் கைப்பிடியாக/விடாப்பிடியாக கடைப்பிடிக்கின்றார். வீரம் பேசி விவேகமாக தமிழீழ அரசு அமைத்து காட்டியவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள். இது சாத்தியம் என உலகிற்கு உலகிற்கு காட்டியவர்கள். அவர்களை அழித்தவர்கள்,காட்டிக்கொடுத்தவர்கள் இன்றும் நலமுடனேயே உலாவுகின்றனர். அந்த அவர்கள் 2009க்கு பின்னர் இன்றுவரை தமிழர்களுக்காக சாதித்தது என்ன?
-
ரஷ்யாவிற்கு நிலத்தை விட்டுக்கொடுக்க முடியாது: யுக்ரைன் ஜனாதிபதி திட்டவட்டம்
ஐரோப்பிய ஒன்றியம் உக்ரேனுக்கும் கொடுக்கும் நிதியினால் முக்கிய அரச பதவியில் உள்ளவர்கள் கோடீஸ்வரர்களாகி நாட்டை விட்டு வெளியேறி துபாய் போன்ற நாடுகளில் குடியேறிக்கொண்டிருக்கின்றார்கள். அண்மையில் ஒரு முக்கிய உக்ரேன் அமைச்சர் ஒருவர் பதவி விலக்கப்பட்டதும் ஊர் உலகம் அறிந்ததே. அந்த அமைச்சர் தற்போது துபாயில் இருப்பதாக செய்தி. உண்மை பொய் தெரியவில்லை. ஆனால் ஊழலால் அந்த அமைச்சர் பதவி நீக்கப்பட்டது உண்மை.இதில் செலென்ஸ்கி எவ்வளவு சுருட்டிக்கொண்டிருக்கின்றார் என்பது அவர் பதவியை விட்டு விலகிய பின்னர் தான் தெரியும். 👉ஊழல் என்பது உக்ரேனியனியர்களுக்கு கைவந்த கலை மட்டுமல்ல. அதுதான் அவர்கள் வாழ்க்கை.👈 நேட்டோ அமைப்பு என்பது காசை கரியாக்கும் அமைப்பு. அந்த அமைப்பு ஏனைய நாடுகள் மீது செய்யும் நாசகார வேலைகளையும் அழிப்புகளையும் பங்கு போட்டுக்கொள்ளும் அமைப்பே தவிர வேறொன்றுமில்லை. இன்றைய உலக அரசியல் சூழ்நிலையில் டொனால்ட் ரம்ப் அவர்களை பாராட்டியே ஆக வேண்டும்.
-
முழு புசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் செயற்பாட்டினை அரசாங்கம் முன்னெடுக்ககூடாது - எம்.ஏ.சுமந்திரன்
பொய்யை சொன்னாலும் பொருந்த சொல்ல வேண்டும். தாமே செய்தியை உருவாக்கிய காலம் கைத்தொலைபேசி பொதுமக்களிடம் சரளமாக பாவனைக்கு வந்த காலத்திலிருந்தே தொடங்கியது. அதற்கு முன் பொய் செய்திகள் பரப்பட்டதில்லை. 75 ஆண்டுகளும் பொய் செய்தி பரப்பப்பட்ட காலங்கள் அல்ல.
-
“பிரித்தானியா ஒரு கிறிஸ்தவ நாடு” என இஸ்லாமிய மாணவரிடத்தில் கூறிய ஆசிரியர் பணிநீக்கம்!
எனது வேலை இடத்திலும் மொரோக்கோ,துனேசியன் நாட்டவர்கள் அவ்வப்போது வேலைக்கு வருவார்கள். அவர்கள் மலசலகூடங்களை பாவித்தால் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு கேவலமாக விட்டுச்செல்வார்கள்.ஏதாவது கண்டிப்புடன் துப்பரவாக வைத்திருங்கள் என கூறினால் மதத்தை இழுத்து பதில் சொல்வார்கள். நாங்கள் பன்றி போல் அசுத்தமாக இருப்பதில்லை என்பார்கள்.
-
“பிரித்தானியா ஒரு கிறிஸ்தவ நாடு” என இஸ்லாமிய மாணவரிடத்தில் கூறிய ஆசிரியர் பணிநீக்கம்!
இவர் கூறியதில் என்ன தவறு இருக்கின்றது? தாம் இஸ்லாம் என கிறிஸ்தவ நாடுகளில் வரிந்துகட்டிக்கொண்டு நிற்பவர்களின் அஜாரகங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.... அவர்கள் கை கழுவும் தொட்டிகளில் காலை தூக்கி கழுவியிருக்கிறார்கள். அந்த இடம் எப்படி இருக்கும் என்பதை நீங்களே சிந்தித்து பாருங்கள்.
-
35 தொன் மனிதாபிமான உதவிப் பொருட்களை இலங்கைக்கு அனுப்பியுள்ள ரஷ்யா!
மனிதாபிமானத்தின் இன்னொரு முகம்..😎
-
ரஷ்யாவிற்கு நிலத்தை விட்டுக்கொடுக்க முடியாது: யுக்ரைன் ஜனாதிபதி திட்டவட்டம்
உக்ரேனுக்கு இன்றைய அவசர தேவை ஜனாதிபதி தேர்தல். சர்வாதிகாரி செலென்ஸ்கி ஆட்சியிலிருந்து துரத்தப்பட வேண்டும்.
-
உலகின் மிக அழகான பெண்களின் பட்டியல்
பெண்கள் அழகிற்கு கைகால் நீளம்,விரல் நீளம் ,மூக்கு நீளம் எல்லாம் உன்னிப்பாக கவனிக்கப்படும். நீங்கள் சுட்டிக்காட்டிய மூவருக்கும் அது அறவே இல்லை. 😎
-
நிவாரண பொருட்களுடன் யாழ். பலாலி விமான நிலையத்தில் வந்திறங்கியது அமெரிக்க விமானம்
புட்டினின் உதவி,நிவாரணங்கள் பற்றி ஆபிரிக்க/தென்னமெரிக்க மக்களை கேட்டால் தெரியும். தனியே மேற்குலக செய்திகளை மட்டும் கேட்டு இன்புறுபவர்களுக்கு அந்த கடவுளிடமே மருந்து இல்லை. 😂
-
முழு புசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் செயற்பாட்டினை அரசாங்கம் முன்னெடுக்ககூடாது - எம்.ஏ.சுமந்திரன்
தந்தை செல்வா தொடக்கம் இன்றைய அர்ச்சுனா வரைக்கும் எல்லா தமிழ் அரசியல் தலைவர்களும் தமிழ் மக்களுக்காகத்தான் போராடியிருக்கின்றார்கள்.போராடுகின்றார்கள். இதில் அமரர் அமிர்தலிங்கம்,அமரர் சம்பந்தன்,காசி ஆனந்தன், அமரர் ஆனந்த சங்கரி,டக்ளஸ் தேவானந்தா,ஸ்ரீதரன் என பலர் இருக்கின்றார்கள்.இன்னும் பலர் இருக்கின்றார்கள். இப்ப ...... என்னெண்டால் இந்த ஜாம்பவான்களது தமிழ் அரசியல் போராட்டம் தமிழ் மக்களை இன்று எங்கே கொண்டுவந்து நிறுத்தியிருக்கின்றது என்பதுதான் கேள்வி? சுமந்திரன் நல்லவர் வல்லவர் கெட்டிக்காரர் எண்டால் தமிழ்மக்கள் ஏன் இவரை தேர்வு செய்யவில்லை? இன்றைய தமிழ் அரசியல்வாதிகள் ஒழுங்கானவர்களாக இருந்திருந்தால் அனுர எப்படி தமிழர்பகுதிகளில் வெற்றி ஈட்டுவார்?
-
நிவாரண பொருட்களுடன் யாழ். பலாலி விமான நிலையத்தில் வந்திறங்கியது அமெரிக்க விமானம்
ஒரு நியாயமான விடுதலை போராட்டத்தை அடக்கி அழித்த இலங்கை இராணுவத்தை இயற்கை அனர்தங்களின் போது காணக்கிடைக்கவில்லை என்ற கவலை யாருக்கும் இல்லை.
-
மீண்டும் அணைந்தது அணையா விளக்கு: யாழ். நினைவுத் தூபி மீண்டும் உடைத்து எறியப்பட்டது!
இவர் செம்மணி நிலவரத்தை பார்வையிட சென்ற போது திருப்பி அனுப்பியிருக்கக்கூடாது என்பது என் கருத்து. எதிலும் மயிர் அளவு நுணுக்கம் பார்க்க வெளிக்கிட்டால் ஒரு கவளம் சோறு கூட சாப்பிட முடியாது.
-
அரச அறிவிப்புகள் அனைத்தும் மும்மொழிகளிலும் கட்டாயம் - அதிரடி அறிவிப்பு
சும்மா ஒரு கதைக்கு..... அனுர ஆட்சிக்கு வந்தவுடன்.... தமிழர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்,எல்லோருக்கும் சம உரிமை என அறிக்கை விட்டிருந்தால் என்ன நடந்திருக்கும்?
-
போர் நிறுத்த திட்டம் ; ரஷ்யா ஏற்றுக்கொண்டுள்ளது ; உக்ரேன் புரிந்துகொள்ளவில்லை - அமெரிக்க ஜனாதிபதி
உக்ரேன் தலைமைப்பீடத்திற்கும் உக்ரேன் யுத்தத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லையென கூறி சபையில் அமர்கின்றேன். 😂
-
முன்னாள் அமைச்சர் ‘சொல்லின் செல்வர்’ செல்லையா இராஜதுரை காலமானார்
அமிர்தலிங்கமும் மங்கையற்கரசியும் இல்லை என்றால் இராசதுரை துரோகம் போய் இருக்க மாட்டார். அதிலும் இராசதுரைக்கு போட்டியாக வந்த காசி ஆனந்தன் எனும் இன்னொரு துரோகியை உங்களுக்கு தெரியவில்லையா? இந்த நேரம் நான் மட்டக்களப்பில் இருந்தேன். இராசதுரையின் அரசியல் பேச்சுக்களையும் பார்த்துளேன். காசி ஆனந்தனின் நக்கல் பேச்சுக்களையும் பார்த்துளேன்.எனினும் இந்த நேரம் தமிழர்விடுதலைக்கூட்டணியின் அரசியல் வஞ்சகம் பற்றியே மக்களிடத்தில் அதிகம் பேசப்பட்டது. அன்று தமிழ் மக்களிடத்தில் கதாநாயகனாக காட்டப்பட்ட அமிர்தலிங்கம் பின் கதவால் போய் எதை செய்தாரோ..... அதை சட்டபூர்வமாக அமைச்சராகிய இராசதுரை செய்யவில்லை. இராசதுரை இனம் மாறியது துரோகம் தான்.ஆனால் கூட இருந்து குழி பறிக்கவில்லை.
-
அமெரிக்காவின் அமைதி திட்டத்தை மறுத்தால், உக்ரைனின் மேலும் பல பகுதிகள் கைப்பற்றப்படும் – புடின் எச்சரிக்கை!
சோவியத் ஒன்றியத்தின் சிதைவிற்கு பின் தனி ரஷ்யா உருவாகியது. அது மேற்குலகிற்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லாமல் தானும் தன் பாடும் என இயங்கிய நாடு.ஆயுதங்களை கூட தணிக்கை செய்தது. சகல வியாபார,அரசியல்களையும் மேற்குலகுடன் இணைந்தே செயல்பட்டு வந்தது. ஆனாலும் பிரித்து ஆளும் சுவை கொண்ட நரிப்புத்திகளுக்கு பத்தியப்படவில்லை. அதற்கு பதில் தான் உக்ரேனிய யுத்தம். சீனாவை விட ரஷ்யா பரவாயில்லை என அமெரிக்கா இப்போதுதான் புரிந்து கொண்டுள்ளது.இதை நான் யாழ்களத்தில் பலதடவை எழுதியுள்ளேன்.
-
நிவாரண பொருட்களுடன் யாழ். பலாலி விமான நிலையத்தில் வந்திறங்கியது அமெரிக்க விமானம்
இலங்கை விடயத்தில் நானே ராஜா நானே ரோஜா என்ற கனவில் மிதக்கும் கிந்தி இதை எதிர்பார்த்திருக்கவே மாட்டுது. செம செருப்படி. இலங்கை தமிழ் பிரதேசங்களில் சீனா அல்லது அமெரிக்க இராச்சியம் நிலை நிற்க வேண்டும் என்பது என் கனவு.வடகிழக்கு பகுதியில் கிந்தியனின் கால் பதிப்பு தமிழர்களின் முதலுக்கே நாசம். இது தமிழ்நாட்டு அரசியல் சித்திரங்களின் அனுபவம்.தடக்கி வீழ்ந்தாலும் டெல்லியை நோக்கி ஓடுகின்றார்கள்.😂 இதையே இன்னும் எத்தனை காலங்களுக்கு சொல்லிக்கொண்டிருக்கப்போகின்றோம்? எம்மினத்திற்கு வரலாற்று துரோகங்கள் நிறையவே உண்டு.அது வரலாறுகளாகவே இருக்கும். அதையாராலும் அழிக்க முடியாது.மறக்கவும் முடியாது.என்றும் நினைவில் வைத்திருப்போம். அது அப்படியே நிற்க.... இன்றைய உலக பூகோள அரசியல் ரீதியில் அடுத்து ஆகவேண்டியதை கவனித்தால் தான் அடுத்த தமிழ் சந்ததி நிம்மதியுடன் வாழ்க்கையை கடத்த முடியும். இன்று நேற்றல்ல....அன்று தொடக்கம் சீனாவால் உள்வாங்கப்பட்ட நாடுதான் இலங்கை. இலங்கை நாட்டில் தமிழினம் இல்லா விட்டால் சீனா என்றோ முழு நாட்டையும் தனது கட்டுப்பாட்டுக்குள் அபிவிருத்தி செய்து வைத்திருக்கும். இதை இன்று சிங்கள பகுதிகளில் தாராளமாக காணலாம்.வேக வீதிகள்,துறைமுக அபிவிருத்திகள் என சீனாவின் கை ஓங்கியே நிற்கின்றது. கிந்தியர்களுக்கு சிங்கள மக்களிடத்தில் பெரு மதிப்பில்லை. கிந்தி பாட்டுக்கள் கேட்பதுடன் சரி.😂 இலங்கை தமிழர்களை வைத்து பிராந்திய அரசியல் லாபம் தேடுவது கிந்திய நரிக்குணம் மட்டுமே வேறொன்றுமில்லை. கிந்தியாவின் அருகில் இருப்பது ஈழத்தமிழனின் துர்ப்பாக்கியம்.கிந்தியா இருக்கும் வரை அமெரிக்காவையோ,ஐரோப்பாவையோ,ரஷ்யாவையோ நொந்து கொள்வதில் எவ்வித பலனும் இல்லை.