Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குமாரசாமி

கருத்துக்கள உறுப்பினர்கள்
  • Joined

  • Last visited

Everything posted by குமாரசாமி

  1. ஈராக் மீதான முதலாம் கட்ட,இரண்டாம் கட்ட போர்களுக்கு பின்னர் பல நாடுகளிகளில் பல அரசியல் கொலைகள்,பல அரசியல்வாதிகள் விபத்துகளில் காலமானார்கள். மேலதிக தகவல்கள் ஏதும் தரப்பட மாட்டாது.🤣
  2. என்னாது? போயும் போயும் பாக்கிஸ்தான் மத்தியஸ்தம் வகிக்க போகின்றதா? 😂 ஐயகோ.... இது நம்ம அயல் நாட்டான் கிந்திக்கு எரிச்சல் ஊட்டும் விசயமாச்சே? 😎
  3. ஏற்கனவே சீனாக்காரன் வேற அமெரிக்காவுக்கு மேலால பலூன் விட்டு நீளம் அகலம் பாத்திட்டான்....
  4. கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கொண்டு மற்றவனுக்கு கல்லெறிந்தால் இது தான் நடக்கும். பிரச்சனைகளை தீர்க்காத வரைக்கும் எங்கும் எதிலும் தனகிக்கொண்டே இருப்பார்கள். தலைவனை அழித்த பின் முடங்கிப்போக அவர்கள் ஒன்றும் தமிழர் பரம்பரை அல்ல.
  5. இதென்ன புதுக்கேள்வி?? இதற்கான திட்டங்களும் அமைப்புகளும் எப்பவோ ஆரம்பித்து விட்டனவே? சீனா,ரஷ்யா,இந்தியா, பிரேசில் என மாபெரும் கூட்டமைப்பை வைத்துள்ளார்களே? இதில் அரபு நாடுகளும் இணைந்துளார்கள். ஐரோப்பிய ஒன்றியம் கூட தனி வழிக்கு எடுத்த முதற்படி தானே?🤣
  6. அமெரிக்காவிற்கு தோல்விகள் ஒன்றும் புதிதல்ல.😎 வியட்நாம் போர் தொடக்கம் இன்று வரைக்கும் வெளிநாட்டின் மீதான அத்துமீறல் போர்களில் அமெரிக்கா தோல்விகளையே தழுவியுள்ளது.அயல் நடான கியூபாவையே தன் காலடியில் கொண்டுவர முடியாமல் திணறும் நாடு அமெரிக்கா.அற்ப சொற்ப அரசியலுக்காக ஒரு நாட்டின் மேல் பொருளாதார தடை போடுவது ஒருவித கொடுங்கோல் ஆட்சிக்கு சமனாகும்.அதையே அமெரிக்காவும் அதன் கூட்டாளி நாடுகளும் இன்றும் செய்து வருகின்றன. இதனால் பாதிக்கப்படுவது யார் என்பது மதில் மேல் இருக்கும் பூனைகளுக்கு தெரியாது. இன்றைய போர்கள் பொருளாதார தடைகளால் மட்டுமே வருகின்றது என்பது என் கருத்து. இந்த நிலையில் ஈரான் போர் அமெரிக்காவிற்கு தோல்வியாகும் என நான் முன்னரே எழுதியுள்ளேன். இந்த நிலையில் வேண்டப்படாதவர்களுக்கும் அமெரிக்க அரசியல் வரலாறு தெரியாதோர்க்கும் டொனால்ட் ரம்ப் மட்டும் அமெரிக்க வரலாற்றில் தவறு இழைத்தவராக தெரிகின்றார். அமெரிக்க இரத்தத்தில் ஓடுவது போர் மூர்க்க குணம். இதை வரலாறு சொல்லும்.அதையே ஆண்டாண்டு தோறும் செய்து வருகின்றார்கள். நாட்டின் மீது படையெடுக்காமல் விட்டாலும் ஒவ்வொரு ஜனாதிபதி ஆட்சியிலும் பிற நாடுகள் மீது ஏவுகணை வீசாமல் இருந்ததில்லை. மத்திய கிழக்கில் பலஸ்தீனியர்களை சுதந்திரத்துடன் வாழ விட்டிருந்தால் இவ்வளவிற்கு பிரச்சனைகள் வந்திருக்காது. அரேபியர்கள் ஒட்டகத்துடனேயே தாமும் தம் வாழ்வும் என இருந்திருப்பர்.குளவி கூட்டை கலைத்ததின் பலன் இந்த உலகமே நின்மதியில் இல்லை.
  7. ரஷ்யாவும் சீனாவும் நட்பு நாடுகள். ரஷ்யாவும் சீனாவும் ஈரானுக்கு நட்பு நாடுகள். இந்த நட்பு நாடுகளுக்கு பல அதிக மூன்றாம் உலக நாடுகள் நட்பு நாடுகள். மேற்குலகில்.....ஐயோ பாவங்கள்.🤣 ஐரோப்பிய ஒன்றியம் எனும் பெயருக்குள் உள்ள நாடுகளுக்குள் ஒற்றுமை இல்லை.பெரிய பிரித்தானியாவுக்கும் ஒன்றியத்தில் ஈடுபாடில்லாமல் பிரிந்து போய் விட்டது. அந்த பிரித்தானியாவும் இப்போது பெற்றெடுத்து வளர்த்த அமெரிக்காவுடன் நல்ல மாதிரி இல்லை. கனடா நடுத்தெருவில்....அவுஸ்ரேலியா முழி பிதுங்கிய நிலை. அமெரிக்க அண்ணன் வாக்கு வேத வாக்கு என வாழ்நாள் முழுக்க நம்பியவர்களுக்கு டொனால்ட் ரம்ப் வைச்சு செய்கிறார். உலக அரசியல்/ பொருளாதார அரங்கில் இன்னொரு அணி உருவாக காரணமாக இருந்த அமெரிக்காவிற்கும் அண்ணன் மாண்புமிகு பெரு மதிப்பிற்குரிய டொனால்ட் ரம்ப் அவர்களுக்கும் கோடி நன்றிகள்.
  8. உடையார்! எந்த நாட்டு மக்களும் போர் அழிவுகளை இழப்புகளை விரும்புவதில்லை. எல்லாம் அரசியல்வாதிகளின் சுய நலன்களுக்காகவே போர் முன்னெடுக்கப்படுகின்றது. ஈரான் போருக்கு பின்னர் அரேபிய நாடுகளுக்கு மேற்குலகின் மீது சினமும் வெறுப்பும் வரக்கூடும்.
  9. இந்த போர்களினால் அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் எவ்வித சேதாரமும் இல்லை. இந்த மூன்று நாடுகளிற்கு கிட்ட யாரும் நெருங்க முடியாது.🤣
  10. ஈரான் - அமெரிக்க,இஸ்ரேலிய போர் மூலம்....பல ஆப்புகள் புதிதாக முளைக்கவிருக்கின்றன போல் தெரிகின்றது. உக்ரேன் பல இழப்புகளை சந்திக்கப்போகின்றது. இதன் மூலம் ஐரோப்பிய ஒன்றியம் உக்ரேன் விடயத்தில் பலத்த தோல்வியை சந்திக்கும். உக்ரேனுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி முடக்கம் குத்துவிளக்கு வைத்து ஆரம்பிப்பது போல் இருக்கின்றது.
  11. அன்று தொடக்கம் தேன் கூடுகளில் கை வைக்காத்தால் என்ன நடக்கும் என கூறி வந்தோம்.😎 அதன் ஒட்டுமொத்த பலனும் இன்று கண்ணெதிரிலேயே தெரிகின்றது.🌟 முதல் படியாக அந்த தேன் கூடுகளை கலைத்ததின் விளைவாக ஐரோப்பா அகதிகளால் நிரம்பி வழிகிறது. இரண்டாம் படியாக தேவையில்லாமல் எரிசக்தி விண்ணைத்தொடும் அளவிற்கு எகிறிவிட்டது. இயற்கை அழிவுகளை விட மனித அழிப்புகள் மிக கொடுமையாக இருக்கின்றது. அதிலும் மேற்கத்தையவர்களின் போர் மூர்க்க குணம் நியாயமற்றது. செய்தியின் பிரகாரம் ஐரோப்பிய நாடுகளும் அச்சத்தில் உள்ளன. ரஷ்ய அதிபர் திருவாளர் புட்டின் அவர்கள் கொடுப்புக்குள் சிரிக்கிறார். 😋 ரஷ்யாவை உடைத்த பின்னர் அதனுடன் நட்புடன் இருந்திருந்தால்.....இந்த உலகும் ஐரோப்பிய ஒன்றியமும் அவல நிலைக்கு வந்திருக்காது.
  12. நான் பல திரிகளில் அவதானித்ததை இங்கே பகிர விரும்புகின்றேன். இது இந்த திரிக்கு சம்பந்தம் இல்லாது விட்டாலும்.... தனிமனித தாக்குதல் இல்லாமல் எழுத முயற்சிக்கின்றேன். நான் பல திரிகளில் ரஷ்யா போன்ற நாடுகளுக்காக ஆதரவாக என்பதை விட அவர்கள் பக்கம் இருக்கும் நியாத்தை பிரதிபலித்து எழுதுபவன்.அதே போல் மற்றவர்களுக்கும் நீதி,நேர்மை நியாயங்கள் இருக்கும். ஒருவர் தனது கருத்தை எழுதும் போது அதற்கு பதில் கருத்து எழுதிவது நியாயம். அதை விட்டு மாற்று கருத்து எழுதுபவரை விமர்ச்சித்து மட்டுமே இங்கே பலர் கருத்து எழுதுகின்றார்கள்.விமர்சிப்பவர்களுக்கு அவர்கள் பாணியில் பதில் எழுதினால் தடைகளும் தண்டனைகளுமே மிச்சமாக வருகின்றது. சரி பிரச்சனைகளுக்கு வருவோம். நான் ரஷ்யாவிற்கு சார்பாக எழுதினால் ரஷ்யாவிற்கு போ எனும் பாணியில் எழுதுகின்றார்கள். இதே திரியிலும் அதே தொனி கருத்துக்கள் உள்ளது. மாற்றுக்கருத்தை எதிர் கொள்ள முடியவில்லையா? அல்லது இங்கே மாற்றுக்கருத்துக்கள் எழுதக்கூடாதா எனவும் தெரியவில்லை. ரஷ்ய பொருளாதாரத்தை தடை செய்ததின் விளைவுகளை ஐரோப்பிய நாடுகள் நன்றாக அனுபவிக்கின்றன. இதை நாங்கள் கண்கூடாகவே பார்க்கின்றோம். இதை ஐரோப்பிய மக்கள் நன்கு உணருகின்றனர். உலகம் அரசியலில் தங்கியிருப்பதில்லை. பொருளாதாரத்தில் மட்டுமே தங்கியுள்ளது. இதை உணராதவர்களே ரஷ்யாவிற்கு போ என்கிறார்கள். கம்யூனிசத்தை வெறுப்பவர்களே நீங்கள் வசிக்கும் முதலாளித்துவ நாடுகளுக்கு எத்தனை ஆயிரம் கொள்கலன்கள் கம்யூனிச நாடுகளில் இருந்து வந்து இறங்குகின்றன என கணக்கு பார்த்தீர்களா? ஜேர்மனிய வாகன உற்பத்தி நிறுவனங்கள் ருமேனியாவிலும் பல்கேரியாவிலும் முக்கிய பொருட்களை தயாரிக்கின்றன. அதை விட ஜேர்மனிய ஓய்வூதியர்கள் ஏராளமானோர் பிரேசில்,கியூபா,பல்கேரியா,ருமேனியா போன்ற நாடுகளிலேயே வாழ்கின்றனர். அவுஸ்ரேலியா,கனடா,அமெரிக்கா,ஜேர்மனி,இங்கிலாந்து,பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு கம்யூனிச நாடுகளுடன் இருக்கும் பொருளாதார உறவுகள் பற்றி தெரியாமல் உளறுவோர்களே. நான் எனது ரஷ்யா சார்பான சொந்த கருத்துக்களை சொல்ல ரஷ்யா செல்ல வேண்டுமென்றால் நீங்களும் உங்கள் நாடான ஸ்ரீலங்கா பற்றிய கருத்துக்களுக்கு சொந்த மண்ணிலேயே நிற்க வேண்டும். நான் விடும் பிழைகளை விமர்சிக்க யாருக்கும் உரிமையுண்டு. ஏனென்றால் இது கருத்துக்களம்.
  13. சக் நோரிஸ் இறக்கவில்லை என ஒரு ஜேர்மனிய ஊடகம் தெரிவிக்கின்றது. உண்மை பொய் தெரியவில்லை. இருந்தாலும் சக் நோரிஸ்- புரூஷ்லி சண்டைக்காட்சி பிரசித்தி பெற்றவை. இலங்கையில் இந்த சண்டைக்காகவே பலர் வீடியோ காட்சிகள் பார்த்ததுண்டு. https://youtu.be/NtoVjRq0YIs?si=WX9xs-yLaM20A9TZ
  14. அப்பிடி ஒரு மாற்றத்தை கொண்டுவந்தாலும் சண்டை சச்சரவுகள் இருந்து கொண்டே இருக்கும் ஐயா....அது என்றும் மாறது. இது கற்காலத்திலிருந்து இன்று வரைக்கும் ஏதோ ஒரு காரணத்தை வைத்து போர் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். சூரிய சக்தியிலும் சண்டை பிடிப்பார்கள்.😂 உவங்கள் எப்பிடி ,என்ன கோதாரிக்கு சண்டை பிடிச்சாலும் .... என்ர சோசல் காசிலை கை வைக்காத வரைக்கும் சந்தோசம்.😎😁
  15. நீங்கள் தனியே குண்டுச்சட்டிக்குள் நீந்திக்கொண்டிருக்கின்றீர்கள். விடுதலைப்புலிகள் விட்ட ஒரே தவறு அமெரிக்காவை அரவணைக்க மறுத்ததுதான். திருகோணமலையில்Voice of America தளம் அமையவிருக்கும் போது அதை எதிர்க்காமல் இருந்திருந்தாலே இன்றும் உயிர்ப்புடன் இருந்திருப்பார்கள். அன்றைய பிழை இன்று சரியாக தெரியும்... இன்றைய சரி நாளை பிழையாக தெரியும்...
  16. குள்ளன் எப்ப அணுகுண்டு பரிசோதனை செய்யுறான்...எப்ப ரொக்கற் பரிசோதனை செய்யிறான் எண்டு தெரியாத மேற்குலகத்தினருக்கு..... அங்கை நடக்கிற சம்பவங்கள் எப்பிடி தெரிய வந்திருக்கும்????? எல்லாம் அவன்ர ஊடகம் சொன்னாப்பிறகுதான் இவையள் கொக்கரிக்க ஆரம்பிப்பினம்.😂 இவ்வளவு கதைக்கிறவையள் ஏன் சீனாவில் நடக்கும் அவலங்களை பற்றி கதைக்கிறேல்லை?😎 வடகொரியா கொடுமை என்றால் தென்கொரியாவில் ஊழலும் கொள்ளையும் வருடாந்த திருவிழா போல்..... ஒவ்வொரு வருடமும் அரச அதிகாரிகளையும் பிரதம மந்திரிகளையும் சிறையில் அடைப்பது வழக்கமாகிக்கொண்டு வருகின்றது. உலகில் எல்லா மனித இனங்களும் ஒரே குணத்தை உள்ளவர்கள் அல்ல. ஒரு சில இனங்களுக்கு சொன்னால் புரிந்து செய்வார்கள்.பல இனங்களிற்கு பிரம்பும் கையுமாக இருக்க வேண்டும். இதுதான் இன்றைய உலகிற்கு அவசியமாகிறது. ஜனநாயகம்,சுதந்திரம் எனும் பெயரில் இன்றைய உலகில் நடக்கும் யுத்தங்களை பார்க்கும் போது.... கட்டுப்பாட்டுடன் வாழும் உலகம் சிறந்ததாகவே தெரிகின்றது.
  17. விட்டுத்தள்ளங்கள் விசுகர்! கட்சி நிதி என்பது எல்லா நாடுகளிலும் உள்ள விடயம். அநேகமான நாடுகளில் கட்சி அங்கத்தவர் சந்தா கட்டணம் கட்டாயம் எனும் ஒரு விடயம் உள்ளதை தெரியாமல் பரிதவிக்கின்றார்கள். தமிழ் நாட்டில் ஏனைய கட்சிகளின் நிதி சேகரிப்புகளை அறியாமல் பேசுகின்றார்கள்.
  18. 20030ற்கு பின்னர் எரிபொருளை வைத்து இயங்கும் வானூர்திகளின் உற்பத்திக்கு தடை என நினைக்கின்றேன்.(ஐரோப்பா) அதன் பின்னர் எரிசக்திக்கான போர்கள் குறையலாம்.
  19. இலக்கியத்திற்காக அந்தப்பாடல் இங்கே இணைக்கப்படவில்லை என்பதை அறியத்தருகின்றேன்.
  20. இந்த உலகம் கணக்கிட்டதை விட ஈரான் மிக வலிமையுடன் இருப்பது போல் தான் யுத்த செய்திகளை வாசிக்கும் போது தெரிகின்றது. நெத்தன்யாகு பங்கருக்குள்..... அமெரிக்காவின் தவறான வெளிநாட்டு போர்களுக்கு முதல் சாவு மணி அடித்தது ஜேர்மனிதான். இரண்டாவது தடவையாக அமெரிக்கா அதாவது ஜோர்ஜ் புஷ் யூனியர் ஈராக் மீது போர் தொடுக்க ஆரம்பித்த போது ஜேர்மனி முற்றாக எதிர்த்து அந்த நடவடிக்கையிலிருந்து விலகிக்கொண்டது. பிரான்ஸ்சும் அதையே பின் தொடர்ந்தது என நினைக்கின்றேன். ஆனால் இங்கிலாந்து அவுஸ்ரேலியா கனடா போன்ற நாடுகள் அந்த நேரம் தேவையில்லாத போருக்கு அமெரிக்காவிற்காக முட்டு கொடுத்தன. டொனல்ட் ரம்ப் அவர்கள் ஐரோப்பிய கூட்டாளிகளுக்கு மேலதிக அறா வரிவிதித்ததுதான் பெருங்கோபம்.அதை விட ரஷ்ய அதிபர் புட்டின் அவர்களுடன் நல்லராஜ தந்திர உறவில் உள்ளார் எனும் தன்மான கோபம். அரசியல் கொள்கைவாதங்களை விட பொருளாதார அரசியல் என்பது இங்கே முக்கிய பங்கு வகிக்கின்றது.எடுத்ததிற்கெல்லாம் பொருளாதார தடைகளை கொண்டு வந்ததின் விளைவுகளை சம்பந்தப்பட்ட நாடுகள் மட்டுமல்லாமல் உலகமே அனுபவிக்கின்றது என்பதை அண்மைக்கால சம்பவங்கள் உணர்த்தி நிற்கின்றது. பொருளாதார தடைகள் எத்தனை எதிரிகளை உருவாக்கியுள்ளது என்பதை இந்த ஈரான் போரும் சொல்லியிருக்கின்றது.
  21. தமிழ் நாட்டிலோ அல்லது இந்தியாவிலோ ஊழலையும் சாதிகளையும் அறவே அழிக்க முடியாது. இருந்தாலும் சீமான் தமிழ்நாட்டின் ஆட்சிக்கு வந்தால் சாதியையும் ஊழலையும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியும் என நினைக்கின்றேன்.
  22. நான் வாதாடியது உண்மைதான். ஆனால் டொனால்ட் ரம்ப் அவர்களின் முன்னைய நான்கு ஆட்சிக்காலங்களில் போர் போர்க்காட்சிகளை எங்கேயாவது கண்டீர்களா? அவர் ஆட்சிக்காலங்களில் உலகம் அமைதியாகத்தானே இருந்தது. பைடன் வந்து தானே மீண்டும் போர் தீயை மூட்டினார்? போர் நிலைகளும் மனித மன நிலைகளும் நேற்றுப்போல் இன்று இருப்பதில்லை.சந்தர்ப்ப சூழ்நிலைகள் எல்லாவற்றையும் மாற்றி விடும் என்பதே உண்மை. வரலாற்றில் இருந்து பாடம் படிக்க வேண்டும் என்பதினால் தான் இன்று தமிழர்களுக்கு ஒரு பிடி நிலமும் உரிமைகளும் இல்லாமல் உலகம் முழுவதும் அலைகின்றார்கள். சோழர் வரலாறு மிக முக்கியம் அமைச்சரே! சோழர்கள் தென் கிழக்கு ஆசியா வரை படைஎடுக்க காரணம் என்ன?
  23. கேக்காயினம்....கேக்காயினம்....பாக்கவும் மாட்டீனம். எட்டியும் பாக்க மாட்டீனம். கண்டாலும் விலத்தி போய் விடுவினம்.
  24. அதெல்லாம் அந்தக்காலம் ஐயா.இப்பவெல்லாம் அந்த சோலியள் இல்லை கண்டியளோ....
  25. எரிச்சல் மட்டுமில்ல....நக்கலும் அதிகம் ஐயா உங்களுக்கு 😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.