Everything posted by குமாரசாமி
-
இலங்கையில் சீன மின்சார பேருந்து திட்டம்
இலங்கையில அடிக்கிற வெய்யிலுக்கு நாடு முழுக்க மின்சார வாகனங்களை ஓட வைக்கலாம். ஐரோப்பாவும் அமெரிக்காவும் சீனாவை தம் நலனுக்காக பயன்படுத்தும் நிலைமையில் இருக்கும் போது சீன சார்பு நாடான இலங்கை சீனாவை நன்கு பயன்படுத்த வேண்டும்.
-
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட மாற்றம்! வெளிநாட்டு பயணிகள் மகிழ்ச்சி தெரிவிப்பு
சென்ற வருடம் பிஸ்னஸ் கிளாஸ் பயணிகளுக்கு இந்த முறையை பரிசோதித்து பார்த்துள்ளதாக கேள்விப்பட்டுள்ளேன்.எவ்வித தடங்களும் ஏற்படவில்லையாம்.
-
மீனவர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் நவம்பர் 21 ஆம் திகதி அறிமுகப்படுத்தப்படும் - அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்
நாடு முன்னேற வேண்டுமாயின் மீனவர்களுக்கும்,விவசாயிகளுக்கும் ஓய்வூதிய திட்டங்கள் கட்டாயமாக்கப்பட வேண்டும். அரச தொழிலாளர்களுக்கான பிரத்தியேக வசதிகள் ஒழிக்கப்பட வேண்டும்.
-
திருமண பந்தத்தில் இணைந்து கொண்டார் ஜீவன் தொண்டமான்!
மணமக்களுக்கு என் வாழ்த்துகள்.🎉 ஜீவன் தொண்டமான் சினிமா சம்பந்தப்பட்டவர்களைத்தான் திருமணம் செய்வார் என நினைத்திருந்தேன்.😎
-
திருகோணமலை - அகற்றப்பட்ட புத்தர் சிலை அதே இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டது..!
நீங்கள் number one பேய்க்காய் எண்டு எனக்கு தெரியும். 🤣
-
அமெரிக்காவின் அமைதி திட்டத்தை மறுத்தால், உக்ரைனின் மேலும் பல பகுதிகள் கைப்பற்றப்படும் – புடின் எச்சரிக்கை!
அமெரிக்கா முன்மொழியும் திட்டங்களை ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்து நிராகரித்துக்கொண்டிருந்தால்..... அமெரிக்கா உக்ரேன் பிரச்சனையிலிருந்து வெளியேறலாம். அதன் பின் புட்டின் சொன்னதே நடக்கும். ரஷ்யாவை எதிர்க்கும் சக்தி ஐரோப்பாவிடம் அறவே இல்லை. இப்போதும் ரஷ்ய எரிசக்தியை மறைமுகமாக வாங்கிக்கொண்டுதான் இருக்கின்றார்கள். நிலைமை இவ்வாறு இருக்க.... உக்ரேன் விடயத்தில் ஐரோப்பிய ஒன்றியம் தாங்களே தங்கள் தலையில் மண்ணை அள்ளிப்போட்டுக்கொண்டு இருக்கின்றார்கள்.😂
-
இளையராஜாவின் புகைப்படத்தை பயன்படுத்த இடைக்கால தடை - சென்னை ஐகோர்ட்
நல்ல விடயம்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இனிமேல் தான் தலையிடிகள் இருக்கின்றது. அமெரிக்காவின் பரம எதிரியான ஐரோப்பிய ஒன்றியத்தின் உச்சம் தலையில் பல தேசிக்காய்கள் உக்ரேன் பிரச்சனை மூலம் அரைக்கப்படும் என நினைக்கின்றேன்.😂
-
துபை விமானக் கண்காட்சியில் கீழே விழுந்து நொறுங்கிய தேஜஸ் போர் விமானம் - என்ன நடந்தது?
கிந்தியர்கள் தம் திறமை,சித்திரங்கள்,வீர தீரங்களை காட்ட ஏற்ற நாடுகள். இலங்கை மாலைதீவு பங்களாதேஷ் கச்சதீவு நேபாளம் மட்டுமே. துபாய் சம்பவத்தை கூட கூட அந்த நாடு வீர தீர செயலாகத்தான் பார்க்கும்..🤣
-
இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் இந்திய மீனவர்களுக்கு என்ன நடக்கிறது?
அண்மைக்காலங்களில் சிங்களம் தமிழர்களை கடற்தொழில் அமைச்சர்களாக நியமிக்கும் போதே பல சூட்சுமங்கள் விளங்கிக்கொள்ளலாம். ஒரு காலத்தில் நீதி அமைச்சராக ஒரு தமிழர் நியமிக்கப்பட்டார்.அப்போதுதான் தமிழருக்கெதிரான பல அநியாயங்கள் நடந்தன. தமிழர் பதவிகளை முன்னணியாக வைத்து ஈழத்தமிழர்களை அழிப்பதில் சிங்களம் வலு கில்லாடிகள்..சேர் பொன் இராமநாதன் தொடக்கம் கதிர்காமர் ஊடாக இன்றைய கருணா,சம்பந்தன்,சுமந்திரன் வரை அந்த யுக்தியை பயன்படுத்தி வெற்றி கண்டுள்ளனர்.
-
திருகோணமலை - அகற்றப்பட்ட புத்தர் சிலை அதே இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டது..!
70 வருடத்திற்கு மேலாக அந்த இரு பெரும்பான்மை சிங்கள கட்சிகளே மாறி மாறி ஆட்சி செய்தன.அதற்கு வாக்களித்த தமிழர்களும் இருக்கின்றார்கள். தமிழ்கட்சிகளும் எதிர்க்கட்சி கதிரையில் அமர்ந்திருந்தார்கள்.தமிழர்களின் பெரும் ஆதரவுடன் முக்கிய எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்து சுக போகங்களை அனுபவித்தார்களே ஒழிய..... எதற்காக தம்மை பாராளுமன்றம் மக்கள் அனுப்பினார்கள் என்பதை வெற்றி பெற்ற அடுத்த கணமே மறந்து விட்டார்கள். எதிர்க்கட்சி வரிசையில் இருந்த போது அவர்களுக்கு பல அதிகாரங்கள் இருந்தது. அதையெல்லாம் பிரயோகிக்கவே இல்லை. வீர வசனங்கள் பேசியதை தவிர..... இதைத்தான் உங்கள் சுமனும் செய்தார்.செய்கின்றார். செய்யப்போகின்றார். இன்று வேறு ஒரு முகத்துடன் சிங்களம் ஆட்சியில் அமர்ந்துள்ளது.பலவற்றை செய்ய துணிந்துள்ளர்கள் போல் தெரிகின்றது.செய்கிறார்களோ இல்லையோ தமிழர் தரப்பு இந்த சந்தர்ப்பத்தை பேசு பொருளாக்கி அரசியல் செய்ய வேண்டும். இன்றைய நிலையில் பொன்னம்பலம் பொருத்தமானவர் என நான் நினைக்கின்றேன்.சுமந்திரன் அல்ல. செம்மணி புதைகுழி அகழ்வு இடத்திற்கு தேடி வந்த அமைச்சர் சந்திரசேகரை திருப்பி அனுப்பியதை பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?
-
திருகோணமலை - அகற்றப்பட்ட புத்தர் சிலை அதே இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டது..!
இனவாத சிங்களம் தமிழர்களுக்கு எதுவுமே தராது என்பது 70வருட வரலாறு சொல்லி நிற்கும் பாடம். இருந்தாலும் சிங்களத்திற்கு தமிழர்களுக்கு வேண்டியதை கொடுக்குமாறு சர்வதேசம் பரிந்துரை செய்யுமே தவிர வற்புறுத்தாது. இது 2009க்கு பின்னர் கண்டு களித்த அனுபவங்கள். எனவே.... இன்றைய ஆட்சியாளர்களுடன் சமரச பேச்சுக்கள் பேசி ஏதாவது பெற்றுக்கொள்ள வேண்டுமே தவிர சண்டித்தனங்கள் எக்காலத்திலும் எடுபடாது. ****
-
ஜனாதிபதியை சந்தித்தது இலங்கை தமிழரசுக்கட்சி
தமிழர் தரப்பு அரசியல்வாத்திகள் 50,60 வருட காலமாக தமிழர் யாப்பு போல் எழுதி வைத்திருக்கும் வசனங்கள் இவை. சந்தர்ப்பங்களை தவற விட்டது மட்டுமல்லாமல்....பேரம் பேசும் அரசியல் ஒரு துளி கூட இல்லாதவர்கள். போகத்திற்கு போகம் வரும் சிங்கள இனவாத அரசியல் தலைவர்களை ஆதரிப்பதே இவர்கள் பிழைப்பு.
-
திருகோணமலை - அகற்றப்பட்ட புத்தர் சிலை அதே இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டது..!
கந்தையர்! ஐ போனில் கலக்கிறார்🤣. ஆனால் அடிக்கடி முற்றுப்புள்ளி போடாமல் விட்டால் அழகு.
-
திருகோணமலை - அகற்றப்பட்ட புத்தர் சிலை அதே இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டது..!
யாழ்கள அனுர காவடிகளுக்கான பதிலா அது?👆 அரைச்ச மாவை திருப்பியும் அரைக்காமல்..... வேறு வழிகள் இருந்தால் சொல்லுங்கள். ஈழத்தமிழர்கள் அன்று தொடக்கம் தம் நலனுக்காக காவடி எடுத்துக்கொண்டே இருக்கின்றார்கள். தமது நேர்த்தி நிறைவேறும் வரை.... நான் கருத்து வெற்றிக்காக கருத்து எழுதுபவனல்ல. இன்றைய யதார்த்தம் எதுவோ அதுவே தகும்.
-
இந்திய துணைத் தூதுவர் - மஹிந்த ராஜபக்ஷ இடையில் சந்திப்பு
இலங்கையின் வளர்ச்சிக்கும் அமைதிக்கும் பங்கமானவர்கள் என்றால் இந்த கிந்தியர்கள் தான். இது எனது வன்மம் அல்ல. வரலாற்று சம்பவங்களை பார்த்த அளவில்....
-
ஹிட்லரின் ரத்தக்கறை படிந்த துணியை மரபணு ஆய்வு செய்ததில் கிடைத்த முடிவு என்ன?
இது பொய்யான செய்தியாக இருக்கும். யூதர்கள் அந்தளவிற்கு மோசமானவர்கள் இல்லை.
-
நீ இயந்திரம் நான் பிரேக்
இது ஒரு தற்கொலை நிகழ்வு. இதனை ஊடகங்கள் வெளியே சொல்லாது என நினைக்கின்றேன். இப்படியான தற்கொலைகள் குற்றச்செயலாகவும் பார்க்கப்பட மாட்டாது என எங்கேயோ வாசித்த ஞாபகம்.
-
கழிவிலிருந்து மின்சார உற்பத்தி திட்டத்தை முன்வைத்த வடக்கு ஆளுநர்!
குப்பைகளின் முக்கியத்துவம் சீனாக்காரனுக்கு நன்றாகவே தெரியும். அதே போல் ஜப்பானியர்களுக்கும் தெரியும். அதுமட்டுமல்ல ஜேர்மன்காரனுக்கும் குப்பையின் முக்கியத்துவம் நன்றாக தெரியும். வீதிகளிலும் பொது இடங்களிலும் குப்பைகளை வீசாத வரைக்கும் குப்பையும் உபயோகரமான பொருள் தான்.
-
திருகோணமலை - அகற்றப்பட்ட புத்தர் சிலை அதே இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டது..!
இலங்கை தமிழர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என பரிந்துரை செய்கின்றீர்கள்? அல்லது எப்படியான அரசியல் கொள்கைகளை தமிழ் மக்கள் ஆதரிக்க வேண்டும் என நினைக்கின்றீர்கள்?
-
யாழ் களமூடாக அறிமுகமான வில்லுப்பாட்டு இராஜன் காலமானார்.
அண்ணனுக்கு என் கண்ணீர் அஞ்சலிகள். திடீர் மரணம் போல் தெரிகின்றது. எந்த தகவல்களும் நிரூபிக்கப்படவில்லை. இவரை நண்பர்களின் கொண்டாட்ட நிகழ்வுகளில் அடிக்கடி சந்திருக்கின்றேன்.நேரடியாக உரையாடியும் உள்ளேன்.மறைந்த யாழ்கள உறவு சோழியனின் உற்ற நண்பர். யாழ்களத்திலும் மணிதாசன் எனும் புனைப்பெயரில் கருத்தாடியுள்ளார் என நான் நினைக்கின்றேன்.
-
முன்னாள் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை!
இந்தியாவுக்கு பக்கத்திலை இருக்கிற நாடுகளுக்கு உந்த அரசியல் சோகம் நெடுக இருக்கும் போல....அயல் நாடுகள் கலகலப்பாக இல்லாமல் இருக்க கண்ணுக்குள் எண்ணை விட்டு பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள். இலங்கை,பங்களாதேஷ்,பர்மா,மாலைதீவு,பூட்டான்,பாக்கிஸ்தான்,தீபெத்,நேபாளம்.....
-
பருத்தித் துறைமுகத்தை அமைப்பது தொடர்பில் இந்தியாவுடன் பல்வேறு பேச்சுவார்த்தை
சிங்கள பகுதிகளை புனரமைக்க சீனா...? வடகிழக்கு பகுதிகளை புனரமைக்க இந்தியா...? ஐநாவுக்கு சொல்லாமல் இப்பவே பிரிச்சிட்டாங்கள் போல கிடக்கு...😎
-
சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் எழுதிய “சட்டத்தின் ஆட்சி” என்ற நூல் சொல்லும் செய்தி!
இன்று சீனாவின் ஆதிக்கம் உலகம் முழுவது பரவி விட்டது. இதை கண்கூடாகவே எல்லா நாடுகளிலும் பார்த்து இன்புறுகின்றோம். இதன் பின்னரும் சீனாவின் அரசியல் கொள்கையை ஏளனம் செய்வதால் எமக்கு நாமே தலையில் மண்ணை அள்ளிப்போடுவதற்கு சமம். இன்றைய ஜேர்மனியின் பொருளாதார நிலை சீனா இல்லையென்றால் எல்லா கார் கொம்பனிகளும் டவுண். எல்லாம் ரஷ்யாவை எதிர்த்ததின் விளைவு. ஓரமாக வைத்திருந்தாலும் கைகோர்த்து வைத்திருக்க வேண்டும்.
-
திருக்கோவில் வெளிநாட்டு பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முற்பட்ட சம்பவம் ; கைதான நபருக்கு விளக்கமறியல்
நானும் அந்த வீடியோவை பார்த்தனான். அந்த தம்பி பாலியல் தொந்தரவு செய்யவே இல்லை.கையை பிடிச்சு இழுக்கக்கூட இல்லை. 🤣