Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குமாரசாமி

கருத்துக்கள உறுப்பினர்கள்
  • Joined

  • Last visited

Everything posted by குமாரசாமி

  1. மதத்திற்காக வாழையை வெட்டும் பார்ப்பனியம் மனிதரை வெட்டுவதில் ஆச்சரியம் இல்லை.
  2. மேற்கு சார்பு கட்டுரைகளும், செய்திகளும் சத்திய வாக்கியங்களா கோசான்?
  3. கடவுள் என்பதை விட இயற்கை என்பதே சரியாக இருக்கும்.இயற்கையை வழிபடும் மக்கள் உலகில் ஏராளமான இனங்கள், தனி நபர்கள் என பல பிரிவுகள் உள்ளன.இயற்கை என் கடவுள். அதை மீறி யாரும் எதுவும் செய்ய முடியாது. நான் தமிழன். நான் சைவன். இங்கு நான் இந்து என்ற அசட்டு எடுபிடிகளை ஏற்பதில்லை.பார்ப்பனியன் கொண்டு வந்த நடைமுறைகளை நீங்களும் அரசுகளும் ஏற்றுக்கொண்டால் அது மூட நம்பிக்கை இல்லை என்பதாகி விடாது. நம்பிக்கை இல்லாதவன் ஏன் நம்பிக்கை இல்லாத விடயங்களை செய்ய வேண்டும்? பயமா செல்லம்😎 இதென்ன புதினமான பித்தலாட்டமாய் கிடக்கு!. சடங்கு........ நம்பிக்கை????? ஏதாவது ஒரு முடிவுக்கு வாங்கப்பா. 😂🤣😋 சடங்கு எங்கிருந்து உருவாகியது?🙃
  4. யாரை நினைத்து வெறும் உரலை இடிக்கின்றீர்கள் என தெரியவில்லை.
  5. 1. வத்திக்கான் எந்த நாட்டு மக்களை மத அடிப்படைவாதத்தினை வைத்து கொடுங்கோலாட்சி புரிகிறது? ஆசிய ஆபிரிக்க அமெரிக்க நாடுகளில் அத்து மீறி பிரவேசித்து அந்த மண் மக்கள் மீது கொடுங்கோல் ஆட்சி செய்து மதமாற்றத்தை கடுமையாக்கிய வரலாறுகள் தெரியவில்லையா? இலங்கையில் கூட மதம் மாறியவர்களுக்கு அரச வேலை என ஆசை காட்டிய வரலாறுகள் தெரியுமா? 2. ஆது எந்த நாட்டில் அணுவாயுத உற்பத்தியை உருஇவாக்க முயற்சிக்கிறது? அணு ஆயுதம் வைத்திருக்கும் கிறிஸ்தவ நாடுகள் எத்தனை? முஸ்லீம் நாடுகள் எத்தனை? 3. அது எந்த நாட்டினை உலக வரைபடத்திலிருந்து முற்றாக இல்லாதொழிப்போம் என்பதை தனது கொள்கையாகக் கொண்டு இயங்குகிறது? பலஸ்தீனமண் கறையான் அரித்துக்கொண்டு போவது போல் அரிக்கப்படுகின்றது. இது உங்களுக்கு உறுத்தவில்லையா? 4. அது எந்த மத அடிப்படைவாத அ,மைப்புக்களுக்கு ஆயுதங்களும் பணமும் வழங்கி இன்னொரு நாட்டிற்குத் தொடர்ச்சியாகத் தொல்லை கொடுங்கள், அந்நாட்டு மக்களைக் கொல்லுங்கள் என்று உசுப்பெற்றி வருகிறது? வத்திக்கானில் இருந்து மாதா மாதம் சம்பளமாக உலகம் முழுவதும் இருக்கும் கிறிஸ்தவ அமைப்புகளுக்கு போய்க்கொண்டிருக்கின்றது. அதை விட இதர கிறிஸ்தவ அமைப்புகளும் பணம் அனுப்பிய வண்ணமே இருக்கின்றன. 5. அது எந்த நாட்டினை அழிப்பதற்காக நீண்டதூர ஏவுகணைகளையும், ட்ரோன்களையும் தயாரித்து வருகிறது? நேற்றைய செய்தியில் அதிக ஆயுத உற்பத்தியிலும் விற்பனையிலும் முக்கிய நாடுகள் பட்டியலில்..... 1)அமெரிக்கா 2)பிரான்ஸ் 2)ஜேர்மனி என முன்னணி நாடுகள் என அறிவிக்கப்பட்டது.எதற்காக இவ்வளவு ஆயுத உற்பத்தியும் விற்பனையும்? மக்கள் மீது பூ தூவவா? 6. எந்த நாட்டினை பெரிய சாத்தான் என்று சிறிய சாத்தான் என்று அடையாளப்படுத்தி அந்நாடுகளுக்கு மரணத்தினை வழங்குவோம் என்று சூளுரைத்து வருகிறது? சாத்தான்கள் பற்றி கிறிஸ்தவமும் அதிகமாக பேசுகின்றதல்லவா? அது எந்த நாட்டில் பெண்களை இரண்டாம் தர குடிமக்களாகக் கருதி அடக்கி வருகிறது? தவறுதான். இருந்தாலும் முஸ்லீம் நாடுகளில் இருக்கும் பெரிய பிரச்சனை. தனியே ஈரான் மீது பழியை போட முடியாது. அது எந்த நாட்டில் தனது குடிமக்களையே கொடுங்கோலாட்சிக்கெதிராக கோஷமிட்டதற்காக பல்லாயிரக்கணக்கில் கொன்றுகுவித்து வருகிறது? பிழைகள் உண்டு. இதற்கு முன்னுதாரணமாக அமைந்தவர்கள் சுரண்டல் மன்னர்களாகிய மேற்குலகினர் மட்டுமே. தொடர்ந்து பேசுவோமாக......
  6. சிறித்தம்பி! யாழ்ப்பாணீஸ் உந்த பதுக்கல்,அமுக்கல் விசயத்திலை விண்ணாதி விண்ணர்கள்.🤣 கோயில் படையல் புக்கை மோதகம் தொடக்கம் பாதி வாழைப்பழம் எல்லாத்தையும் கதவுக்கு பின்னாலை ஒளிச்சு வைக்கிறதில வலு கெட்டிக்காரங்கள்.40,50 வருசத்துக்கு முதலே மண்ணெண்ணை தகரத்தை கிடங்கு வெட்டி மண்ணுக்கை பதுக்கி வைச்ச பரம்பரை நம்ம பரம்பரை.😂 பதுக்கல் எண்டது யாழ்ப்பாணத்து மண்வாசனையோட சேர்ந்தே இருக்கும்.😎
  7. நான் இஞ்சை தான் நிக்கிறன்.😂 ஒரு அரசு ஐயர் அவர் தம் ஜோதிடம்,சாத்திரம்,ஒன்பது கிரக கணிப்புகள்,யோனிப்பொருத்தம்,அந்தப்பொருத்தம் இந்தப்பொருத்தம் எல்லாவற்றையும் வைத்து நடைபெற்ற திருமணத்தை அங்கீகரிக்கின்றது என்றால்.....அந்த அரசும்,சட்டங்களும் ஏற்றுக்கொள்கின்றது என்றால்......? 😁 மூட நம்பிக்கைக்கு வரவிலக்கணம் என்ன?
  8. சரியான இணைப்பை இணைத்திருக்கின்றீர்கள் புரட்சியர். அரசியலில் உண்மையும் உண்மையான விவாதங்களும் நடைபெற்று நீண்ட காலமாகிவிட்டது. இன்றைய அரசியலில் உண்மைகளை பேச அரசியல்வாதிகள் உட்பட யாரும் தயாரில்லை.
  9. வத்திக்கானுடன் முரண்பட்டு பாருங்கள் சுயரூபம் தெரியும்.😎 கீழே இருக்கும் தரவுகளை பார்க்கலாம். எதற்காக அழிப்பதை தொழிலாக கொண்டுள்ளார்கள் என்பது புரியும்.அங்கே ஆன்மீகமும் இல்லை அண்டங்காககளும் இல்லை. மாறாக தமது பாதையில் குறுக்கே வருபவர்களை அழிப்பதுதான் அவர்கள் நோக்கம். அது அவர்களுக்கு சரியாக தெரிகின்றது.வல்லமையுள்ளவர்கள் எது செய்தாலும் வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டியது வல்லமை இல்லாதவர்களின் உலக நிலை. இங்கே ஆன்மீகத்தை கொஞ்சம் அடக்கி வாசிக்கின்றார்கள்.அவ்வளவுதான். மற்றும் படி அவர்களுக்கும் இவர்களுக்கும் இடையில் பெரிய வித்தியாசம் இல்லை.ஜேர்மனியில் கூட ஆன்மீகத்தை அரசியலிருந்து அகற்ற முடியாது. வல்லரசு என்பது அழிப்பதில் முன்னிலை வகிப்பதல்ல. மாறாக மனிதாபிமானங்களும் வல்லரசுகளுக்கு சொந்தமானது. மற்றும் படி...... ரஷ்யாவின் மகிமை ஐரோப்பிய தொழிற்சாலைகளுக்கும் அது சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டுமே தெரியும். ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யாவுடன் நட்பு பேணியிருந்தால் இன்றும் அதாவது ஈரான் யுத்தத்தின் போதும் அதன் பொருளாதாரம் வலிமையுடன் இருந்திருக்கும்.
  10. வல்வெட்டித்துறையில் மட்டுமல்ல.....உலகில் எல்லா இடங்களிலும் உணவுக்கலப்படம் என்பது சர்வ சாதாரணமாகி விட்டது. மேலைத்தேய நாடுகளில் மோசமான கலப்படங்கள் உள்ளது.எது, எப்படி என தெரிந்தால் ஒரு முறடு தண்ணீர் கூட குடிக்க முடியாது.
  11. உக்ரேன் போர் ஆரம்பத்ததிலிருந்தே நாம் இதைத்தானே சொல்லிக்கொண்டு வருகின்றோம். ஐரோப்பாவிலேயே ஊழலுக்கும் உதவாத தொழில்களுக்கும் பெயர் போன நாடு. இது எனக்கு 20 வருடங்களுக்கு முன்னரே தெரியும். இவர்களை நம்பி ஐரோப்பிய ஒன்றியம் உக்ரேன் எனும் ஆற்றில் இறங்கியது சொந்த செலவில் சூனியம் செய்தற்கு சமன். இன்றைய ஜேர்மன் நாளிதழில் வந்த செய்தி இது.👇 Bild
  12. இப்ப நடக்கிற சண்டையில ஒரு குருவியையும் நம்பேலாது கண்டியளோ..... ஈரானும் எல்லாத்திலையும் குண்டை போட்டுட்டு சாட்டுக்கு மன்னிப்பு கேக்கும். அமெரிக்காவும் இஸ்ரேலும் அரேபிகளை தூண்டி விடுறதுக்காக ஆங்காங்கே குண்டுகளை தூவுகின்றார்களோ எண்ட சந்தேகமும் இருக்கு. எண்டாலும் நோன்புக்காலம் களைகட்டுது.😂
  13. குர்திஷ் இனம் எங்கும் எப்போதும் நடுத்தெருவில் விடப்பட்டதகாவே வரலாறு சொல்கின்றது. நேட்டோவில் இருக்கும் துருக்கி குர்திஷ் இனத்திற்கு விடுதலை கொடுக்க இடையூறு செய்து கொண்டே இருக்கும்.ஏனெனில் துருக்கி வன்மம் கொண்ட நாடு. வன்மம் பொல்லாதது.
  14. தாம் நாகரீகமானவர்கள் என கூறும் மேற்கத்தையவர்கள் தான் நாடு விட்டு பிற நாடுகளுக்கு சென்று போர் செய்கின்றார்கள். கொரோனா பரவலுடன் எல்லா நாடுகளும் மக்களும் வலுவிழந்து விட்டார்கள். போதாக்குறைக்கு உக்ரேன் போரும் வர அனைத்து மனித வாழ்க்கையும் அதள பாதாளத்திற்கு சென்று விட்டது. கொடுமைக்கு மேல் கொடுமையாக தற்போது ஈரான் மீதான போர். அதை விட கொடுமை என்னவென்றால் ஈரான் போர் நடக்க ஆரம்பிக்க ஜேர்மனியில் கையிருப்பில் இருக்கும் எரிபொருட்களின் விலையையே கூட்டி விட்டார்கள்.😋 இனிவரும் காலங்களில் என்னென்ன கொடுமைகளை சந்திக்கப்போகின்றமோ கடவுளுக்குத்தான் வெளிச்சம். போர்களும் அதற்க்குரிய காரணங்களும் மூட நம்பிக்கைகைகளை விட கொடியது.
  15. நீதி நியாயத்தை விட பலம் வலிமையானது என்பதை நீங்களே ஒத்துக்கொள்கின்றீர்கள். நன்றி.
  16. ரஷ்யாவும் இனிமேல் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு தன் எரிசக்திகளை விற்க தடை என ஆணித்தரமாக கூறிவிட்டது. மயான காண்ட கூத்து ஆரம்பமாகுகின்றது என நினைக்கின்றேன்.
  17. நீங்கள் சொல்லும் மூட நம்பிக்கை திருமணங்களை நீதிமன்றம் என வரும்போது சட்ட பூர்வமாக ஏற்பதில்லை. 😎 இந்த கோசான் ஏன் தான் இன்னும் ஆலமரத்துக்கு கீழ இருக்கிற பஞ்சாயத்து கல்லில குந்தியிருக்கிறார் எண்டு எனக்கு விளங்கேல்லை. 🤣
  18. எல்லாம் எம்பெருமான் இஸ்ரேல் சித்தம். அது நடக்கோணும் எண்டு அவரவர் தலையிலை எழுதியிருந்தால்......அதுவும் நடக்கும். 😂 அரோகரா....வழி விடுங்கோ எண்டு சொல்லுறதுதான் இப்ப இருக்கிற ஒரே நல்ல வழி. மீறினால் விசா இல்லாமல் அமெரிக்காவில ராணுவமரியாதையோட கூட்டிக்கொண்டு போவினம் 😎
  19. துருக்கியிலையும் ஈரான்காரன் குண்டு போடுறானம்.நேட்டோ மறிச்சடிக்கிற சிஷ்டம் வேலை செய்ததாலை குண்டு நிலத்திலை விழேல்லையாம். 🤣 போற போக்க பாத்தால் வழமை போல நேட்டோவும் களத்திலை இறங்கும் போல கிடக்கு....☹ என்ன கோதாரியெண்டாலும் சட்டு புட்டெண்டு சோலியை முடியுங்கோப்பா....காருக்கு பெற்றோல் அடிக்க காசு குடுத்து கட்டேலாமல் கிடக்கு....😁
  20. இரண்டாம் உலகப்போரில இலங்கையிலும் குண்டு விழுந்ததாமெல்லே....😄
  21. கிந்திய சனமும் பல மமதை அரசியல்வாதிகளும் கிந்தியா தான் ஆசிய வல்லரசு நினைத்துகொண்டு திரியுதுகள். அப்படி திரிபவர்களுக்கு இந்த தாக்குதல் நல்லதொரு செருப்படி. அமெரிக்கன் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் கடலுக்குள்ளும் இருப்பான் 🤣
  22. ஆக்கிரமிப்பு இல்லையென்றால் இன்றைய அமெரிக்காவும் இல்லை,கனடாவும் இல்லை,அவுஸ்ரேலியாவும் இல்லை. ஆக்கிரமிப்புடன் தான் இந்த உலகு இயங்கிக்கொண்டிருக்கின்றது. அதனுடன் சேர்ந்து பயணித்தால் மட்டுமே உங்களுக்கோ எனக்கோ வெற்றி கிடைக்கும். நடு வீதியில் நின்று அவர்களை எதிர்த்தால் சாம்பல் கூட மிஞ்சாது. இதுதான் இன்றைய உலகின் யதார்த்தம். நீங்கள் எல்லோரின் கருத்துக்களுக்கும் மதிப்பளிப்பவர் என்பதால் இன்னொரு விடயத்தையும் சொல்கிறேன்.உலகில் இருக்கும் மூட நம்பிக்கைகளை விட அப்பாவி மக்களை தினசரி கொன்றொழிக்கும் நாகரீக மனிதனின் போர் உயர்ந்ததா? இல்லையேல் மூட நம்பிக்கையுடன் தாமும் தம் வாழ்வும் என வாழும் பாமர மக்களின் வாழ்வு சிறந்ததா? 🙂
  23. பொண்டாட்டி என்பது சட்ட பூர்வமாக திருமணம் செய்த பின் வரும் உறவுமுறை. கவனிக்க👉 சீமான் சட்டபூர்வமாக திருமணம் செய்த பின்னர் வேறு எந்த மாதர்களுடனும் கூடி திரியவில்லை. அப்படியான செய்திகளும் இல்லை.மனித வாழ்வில் இள வயதில் எல்லோரும் நடப்பதை போல் தான் சீமானும் நடந்துள்ளார். எனவே திரிக்கு திரி இதையே காவிக்கொண்டு திரிவது ஒரு வித வன்மம் மட்டுமே. பெரியாரை மூலதனமாக கொண்டு இயங்கும் கட்சிகளில் அந்த இரண்டு மாபெரும் கட்சிகள் மிக மிக பலம் வாய்ந்தவை. ஆட்பலம்,கட்சிபலம்,கட்சி மேலிடத்தின் மீது உள்ள தீவிர விசுவாச பலம்,பணபலம்,கட்சி என்ன சொல்கின்றதோ அதுவே தாரகமந்திரம் என நினைக்கும் மக்களின் பலம் என இப்படியே பற்பல பலங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.கட்சி முக்கியஸ்தர்கள் விரல் அசைத்தாலே.....எள் என்றால் எண்ணையாக நிற்கக்கூடிய பலம் வாய்ந்த கட்சிகள் உள்ள நாடு அது. ஆட்சி அதிகாரத்தில்,கட்சி அதிகாரத்தில் உள்ளவர்களை மீறி எவரும் வாய் திறக்க மாட்டார்கள். அப்படி எதிர்க்குரல் கொடுத்தால்......எதிர்க்குரல் கொடுப்பவர்களை கட்சியின் தொண்டர்களே கவனித்து கொள்வார்கள். இது நடந்த விடயங்கள்/நடந்து கொண்டிருக்கும் விடயங்கள் உலகில் அதிகாரத்தில் இருப்பவர்களையும்,பண பலத்தில் இருப்பவர்களையும்,கட்சி,மக்கள் பலத்துடன் இருப்பவர்களையும் எதிர்ப்பது தற்கொலைக்கு சமம். இது உலகில் இன்றும் நடந்து கொண்டிருக்கின்றது. நீங்கள் மேற்கூறிய சிறு பிள்ளைத்தனமான கருத்தை இன்னும் எத்தனை திரிகளுக்குள் சுமந்து சென்று உருட்டப் போகின்றீர்களோ யாமறியோம் பராபரமே.😂
  24. வாய்ப்பில்லை தான். ஏனெண்டால் பாம்பின் கால் பாம்பறியுமெல்லோ...😂 மாற்றுக் கருத்தில்லாத உலகம் வேண்டும் என்கிறீர்கள். அதுவும் நல்லதிற்குத்தான்.👍.....😎

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.