Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குமாரசாமி

கருத்துக்கள உறுப்பினர்கள்
  • Joined

  • Last visited

Everything posted by குமாரசாமி

  1. இஸ்லாமிய ஆட்சிகளை எதிர்ப்பவர்கள் மேற்கத்திய நாடுகளுக்கு புலம்பெயர்ந்து அங்கும் இஸ்லாமிய கொள்கைகளை கையில் எடுப்பதுதான் கொஞ்சம் அல்ல பெரிய நெருடலாக இருக்கின்றது. நேரடியாக கண்காணும் நிகழ்வுகளின் அனுபவங்கள்.
  2. பிராந்திய அரசியலை கையில் எடுக்க நினைக்கும் சீனா கொஞ்சம் வட கிழக்கு பகுதியிலும் கால் வைத்திருந்தால்... பலருக்கும் பல வெற்றிகள் கிடைத்திருக்கும். ஒரு தரித்திரம் வாலை சுருட்டியிருக்கும்.
  3. நீங்கள் கூறுவது எல்லாம் சரிதான். ஆனால் இந்த உலகில் ஈழத்தமிழினம் மட்டும் நேர்மையாக,நீதியாக,ஒழுக்கமாக இருக்க வேண்டும் என சிந்திப்பது ஏன்? இலங்கையில் தற்போது தமிழர் பிரதேசங்களில் நடக்கும் அரசியல் பிரச்சனைகளுக்கு வாய் திறக்காமல்......பழைய பிரச்சனைக்களுக்கு மட்டும் தீர்வு காண நினைக்கும் நீங்கள் யார் என்பது ரகசியம் அல்ல.
  4. இவ்வளவு காலமும் இனவாத சிங்களத்திற்கு சார்பாக இயங்கிய மனிதனின் இன்னொரு முகமூடி உடைக்கப்பட்ட தருணம்.
  5. ஈழத்தமிழர்களை பொறுத்தவரை சோனியா உயிருடன் இருந்தும் பிரயோசனமில்லை.இறந்தும் பிரயோசனமில்லை. சோனியாவை திட்டியும் பிரயோசனமில்லை...திட்டாமல் விட்டாலும் பிரயோசனமில்லை. ஈழத்தில் சிங்களவர்களால் ஏற்படுத்தப்பட்ட எத்தனையோ இனக்கலவரங்கள்,இன அழிப்புகளை கடந்து வந்தவர்கள் ஈழத்தமிழர்கள். அந்த அடிப்படையில்..... பாதிக்கப்பட்டவன் திட்டுவதும் பாதிக்கப்படாதவன் நியாயம் பேசுவதும் உலக வழக்கம்.
  6. ஒரு பிரச்சனையுமில்லை. ஏராளன், இந்த திட்டம் சம்பந்தமாக முதல் ஒரு மலசல கூடம் கட்டும் நிர்மாண செய்தியை தந்திருந்தார். அதில் குறிப்பிட்ட தொகையையும் தெரிவித்திருந்தார். அதை நான் பொறுப்பெடுத்திருந்தேன். அதை மீறி எதையும் புதிதாக எதையும் தனிப்பட செய்ய மாட்டேன். ஏனைய பங்களிப்புகளும் திட்டங்களும் முன்னோடியின் சட்ட திட்டங்களின் கீழ் செயற்படுவேன் என உறுதியளிக்கின்றேன்.
  7. எனக்கு நேரப்பற்றாக்குறையும்,வேலையிடத்து பண வரவுகள் இருப்பதாலும் நீங்கள் அல்லது வாத்தியார் அந்த பொறுப்பை எடுத்தால் எனக்கு பெரிய உதவியாக இருக்கும் என நினைக்கின்றேன்.சம்மதமாயின் இன்றே ஏராளன் குறிப்பிட்ட தொகையை அனுப்பி விடுகின்றேன்.
  8. ஒரு குறிப்பிட்ட தொகை மலசல கூடம் கட்ட தேவை என ஏராளன் அறியத்தந்துள்ளார்.அதை நான் அனுப்புகின்றேன். ஆடம்பர மலசல கூடம் கட்டுவதற்கு அந்த பணம் பயன்படாது என நான் நினைக்கின்றேன்.
  9. எனது வாட்ஸ் அப் இலக்கத்திற்கும் அனுப்பிவிடுங்கள்.🙏 நீங்கள் முதல் தெரிவித்த தொகையை அனுப்பி விடுகின்றேன்.
  10. இப்ப மட்டும் ஏதோ பெரிசாய் இருக்கிற மாதிரி??????😄 சீனா உலகம் முழு நாடுகளையும் ஏப்பம் விட்டுக்கொண்டு வருவது கண்கூடாகவே தெரிகின்றது. சீனாவிலிருந்து ஒரு இறக்குமதி தடைப்பட்டால் அல்லது காலதாமதிகமானால் கூட பொருளாதார உலகில் இருண்ட உலகமாகி விடுகின்றது. அதற்கு பல சம்பவங்கள் எடுத்துக்காட்டாக உள்ளது.
  11. கிரீன்லாந்து டென்மார்க்குக்கு சொந்தமான தீவாம். இப்ப அமெரிக்கா அதை புடிக்கப்போகுதாம். எல்லாம் ஓகே.... தொட்டால் பட்டால் நாங்கள் நேட்டோ....நேட்டோ எண்டு கத்துறவையள்.....எங்கட கண்ணிலை தூசு விழுந்தாலும் நேட்டோ படை கொதிக்கும்.....கொதி நிலையிலை இருக்கும்.அடிச்சு துரத்தும்....வெட்டுவம்...கொத்துவம் எண்டுறவையளுக்கு டொனால்ட் ரம்ப் வைச்சார் பாரு ஆப்பு. சொல்லி வேலையில்லை. இப்ப என்ர குவைச்சன் என்னெண்டால்.......உக்ரேனுக்காக கொதி நிலையிலை இருக்கிற எவரெடி நேட்டோ........கிரீன்லந்திலை அமெரிக்கா கை வைச்சால் கொதிக்குமா கொதிக்காதா? ஆல்ரெடி நேட்டோவில இருக்கிற அமெரிக்க படை ஆர்ர பக்கம் நிக்கும்🤣
  12. நீங்கள் யாரும் வெனிசுவெலா சம்பவத்தை ஆதரிக்கவில்லைத்தான். ஆனால் உங்கள் கதாநாயகன் செலென்ஸ்கி அவர்கள் சர்வதிகார ஆட்சி அழிக்கப்பட வேண்டும் எனும் தொனியில் வெனிசுவெலா சம்பவத்தை ஆதரித்துள்ளார். அது மட்டுமல்ல ரஷ்யாவிலும் சர்வாதிகார ஆட்சி ஒடுக்கப்பட வேண்டும் என டரம்ப் அவர்களுக்கு புகழார செய்தியில் வேண்டுகோள் விடுத்துள்ளார். தேர்தல் இல்லாமல் தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் ஜனநாயகன் இல்லை.....இல்லை ஜனநாயக சர்வாதிகாரி செலென்ஸ்கி விடுதலை விரும்பிகளின் சொர்க்கத்தங்கம்.😁 நான் இந்தியா இலங்கை தமிழர் அழிவுகள் சம்பந்தமாக நடந்து கொண்ட விதம் சரியென எங்கும் எழுதவில்லை. அப்படி நினைத்து எழுதியதுமில்லை.எரியல்,பொரியல்,பிரட்டல்,சுருட்டல்,கடத்தல் ,வெருட்டல் கருத்துக்களுக்கு பேர் போனவர் நீங்கள்🤣🤣 உலகில் பிராந்திய அரசியலின் முக்கியத்துவம் பற்றி உக்ரேன் போர் சம்பந்தமாக எழுதும் போது....ஈழத்தமிழர் அரசியலில் இந்தியாவின் பிராந்திய ஆதிக்கம் எதையெல்லாம் செய்தது எனும் தொனியில் எழுதினேன்.அதை இப்படியெல்லாம் உங்கள் கருத்து வெற்றிக்காக இப்படியெல்லாம் பிரட்டுவீர்கள் என நான் கனவிலும் நினைக்கவில்லை. ஈழத்தமிழர் போராட்ட வரலாறு இரண்டு வகையாக பிரிக்கலாம். 1)விடுதலைப்புலிகளுக்கு முந்திய காலம். 2)விடுதலைப்புலிகளுக்கு பிந்திய காலம். இந்த இரு காலங்களிலும் குமாரசாமி போன்றவர்களின் தலையில் மடம் கட்டி உங்கள் குற்றச்சுமைகளை இறக்கி அடுத்து யாரை வரிந்து கட்டலாம் என்ற முனைப்போடு திரிகின்றீர்களே தவிர........ அன்று தொடக்கம் இன்று வரைக்கும் ஈழத்தமிழர் விடயத்தில் இருக்கும் இந்திய ஆதிக்கத்தை ஒரு அணு கூட உங்களைப்போன்றவர்கள் அசைக்கமுடியாமல் இருக்கின்றீர்கள் என்பது உங்களுக்கே தெரியாத அவலம் மற்றவர்களுக்கு நன்றாகவே தெரியும்.
  13. பார் என்பது கெட்ட செயலா?அல்லது கெட்ட தொழிலா? மூலைக்கு மூலை பார்கள், பார்டிகள் உள்ள நாடுகளில் தானே நாமும் வசிக்கின்றோம். எம் பிள்ளைகளும் வாழ்கின்றார்கள்.அந்த பார்களால் யார் எப்படி கெட்டுப்போனார்கள் என சொல்ல முடியுமா? மதுபான கடைகள் யாரையும் வலிந்து அழைப்பதில்லை.எல்லாம் அவரவர் தனிப்பட்ட விடயம்.
  14. ஆகா....அமெரிக்கா பலாலியிலை வந்து இறக்கிக்கிக்காட்டீட்டுது. இனி இந்திய கூட்டாளி ரஷ்யாவும் யாழ்ப்பாண பக்கம் ... தகிட ததிமி தகிட ததிமி தம்தானா... இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா... தகிட ததிமி தகிட ததிமி தம்தானா... இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா... இருதயம் அடிக்கடி இறந்தது என்பேனா... என் கதை எழுதிட மறுக்குது என் பேனா... இருதயம் அடிக்கடி இறந்தது என்பேனா..🤣
  15. யாழ்களத்தில் கருத்து எழுதும் எனக்கு.......அநேகமான செய்திகளில் கருத்து எழுவது என் சுய கருத்துக்கள். அது சரியா பிழையா என்பது இரண்டாம் பட்சம். மற்றவர்கள் ஆதரிக்கும் ஒரு விடயத்தை நான் ஆதரிக்க வேண்டும் என்ற கட்டாயம் எனக்கு இல்லை என நினைக்கின்றேன். எனக்கு ரஷ்யாவின் ஒரு சில செயற்பாடுகள் சரியாக தெரிகின்றது. அது சார்பாக நான் கருத்து எழுதுகின்றேன். நீங்களோ மற்றவர்களோ விரும்பும் ஆதரிக்கும் விடயத்திற்கு சார்பாக நான் கருத்து எழுத வேண்டும் என்றால்..... உங்களுக்கும் ரஷ்ய-அமெரிக்க கொள்கைவாதிகளுக்கும் இடையில் என்ன வித்தியாசம்? உங்கள் பாதை எப்படி உங்களுக்கு சரியோ அதே போல் தான் அமெரிக்க ரஷ்ய கொள்கைவாதிகளும் சரியான பாதையில் போகின்றனர். தற்போதைய ஐரோப்பிய ஒன்றியம் போல் நடுத்தெருவில் நிற்பது போல் நீங்களும் நிற்க மாட்டீர்கள் என நம்புகின்றேன்.🤣 இது தனிமனித தாக்குதல் அல்ல.🎉
  16. பாதுகாப்பிற்கான ஆக்கிரமிப்பு காரணத்தையும் திருடுவதற்கான ஆக்கிரமிப்பு காரணத்தையும் சேர்த்து சாம்பார் ஆக்கியுள்ளீர்கள். மற்றும் படி.... கற்காலம் தொடக்கம் இன்றைய கணணிக்காலம் வரைக்கும் பலம் வாய்ந்தவன் ஆக்கிரமிப்புகளை செய்து கொண்டு தான் இருக்கின்றான். என்ன ஒன்று.....ஆக்கிரமிப்பிற்கான காரணங்கள் இடத்திற்கு இடம் வேறுபட்டுக் கொண்டிருக்கின்றது.அவ்வளவுதான்.
  17. பூரணப்படுத்த எவ்வளவு பணம் வேண்டும் என்பதை வட்ஸ் அப்பில் எழுதி விடவும். உங்கள் கருத்து சரியானதே. இருந்தாலும் சில இடங்களில் தனி நபர்களுக்கு நேரடியாக உதவி செய்யப்போய் ஏமாற்றப்பட்டதுதான் மிச்சம். அடிப்படை உதவிகள் செய்ய வெளிக்கிட்டு கடைசியில் தேவையில்லாத தேவைகளுக்கும் பணம் கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.அதில் எனது தனிப்பட்ட தொலைபேசி இலக்கத்தை வைத்து செய்யக்கூடாத வேலைகள் எல்லாம் செய்ய ஆரம்பித்தார்கள். இதற்காகவே நம்பிக்கையான ஏராளனையும் அவரது புலர் நிறுவனத்தையும் தேர்வு செய்தேன். இப்போதும் சொல்கிறேன் தனி நபர்கள் வங்கி இலக்கத்திற்கு நான் நேரடியாக பணம் அனுப்புவதாயின்.....அதற்கு என் உடன்பாடு இல்லை.
  18. எழுத்துப்பிழை நடந்து விட்டது. ஈழப்பிரியன் கூறியது போல ஊதியம் என மாற்றி வாசிக்கவும்.😄
  19. உலக அரசியலில் ரஷ்யாவும் அமெரிக்காவும் நிறுத்தி நிதானித்து அமைதியாக செயற்படுகின்றார்கள். இடையில் இருப்பவர்கள் தான் பொங்கி எழுகின்றார்கள். எதிரியாக இருந்தாலும் சீன வளர்ச்சி விடயத்தில் ஒருவரை ஒருவர் கட்டியணைக்க வேண்டிய கட்டாயம் இவர்களுக்கு..... அமெரிக்க ஆகாயத்தில் பலூன் பறக்க விட்டு அழகு பார்த்தவன் சீனன். அவனுக்கு அமெரிக்க நடவடிக்கைகளை கண்காணிக்க தனி செய்மதி தேவையில்லை.😂
  20. இன்னொருவன் நிலத்தை எப்படி ஆக்கிரமிக்க முடியும் அவன் சொத்துக்களை எப்படி சுரண்ட முடியும் என்பதை உலகிற்கு செய்து காட்டியவன் பிரித்தானியன். அவன் வம்சாவளிகளே இன்றும் அதனை தொடர்கின்றார்கள்.😜 ஆனால்...👆 👇 ரஷ்யன் இன்று வரைக்கும் உலகிலும் சரி....அயல் நாடுகளிலும் சரி பொருளாதார சுரண்டலுக்காக படை எடுத்ததுமில்லை. அந்த அரசியலை செய்ததுமில்லை.😎
  21. ஏராளன் சம்மதித்தால் புலர் அமைப்பு ஊடாகவே சுகாதார வசதி திட்டத்தை முன்னெடுக்கலாம் என்பது என் கருத்து. இதனால் தனியார் வங்கி விபரங்கள் மற்றவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை என நினைக்கின்றேன். பே பால் தொடர்புகளும் இணைக்கப்பட்டால் பலருக்கு இன்னும் வசதியாக இருக்கும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.