Everything posted by குமாரசாமி
-
நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி
சிங்களம் எந்த தீர்வையும் தர தயாரில்லை என அன்றே தலைமைப்பீடத்திலிருந்து சொல்லப்பட்ட வாக்கியம். அதை விடுதலைப்புலிகள் இயக்கத்திலிருந்து முன்னேற்றம் முன்னேற்றம்,மாற்றுவழி என விலகியவர்களாலும் எதனையுமே இன்றுவரை சாதிக்க முடியவில்லை.நீங்களோ அதே இடத்தில் நின்று சுழன்று கொண்டிருக்கின்றீர்கள். முள்ளிவாய்க்கால் அழிவுக்கு முன் சிங்களம் சர்வதேசத்திற்கு புலிகள் இல்லையென்றால் நாங்கள் தமிழர்களின் பிரச்சனைகளை தீர்ப்போம் என ஒரு வாக்குறுதி கொடுத்ததாக தகவல் உண்டு.
-
சீமானுக்கும் தமிழ் தேசிய பேரவையினருக்கும் இடையே சந்திப்பு!
பாகுபாடற்ற அரசியல் சந்திப்புக்களுக்கு நல்ல உதாரணம். சுமந்திரன் கொம்பனியை மட்டும் சந்திக்கும் வெளிநாட்டு ராஜதந்திரிகளுக்கு நல்ல செருப்படி.
-
தமிழ் அரசியல் பிரமுகர்கள் இன்று சென்னைக்கு பயணம்
இந்த நிலைக்கு கொண்டு வந்தது யார்?
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
அன்றும் இன்றும் பலஸ்தீனத்தை பெரிதாக ஆதரிப்பது இந்தியா இது முஸ்லீம் உலகை கவரும் வியாபார நோக்கம் என நான் கருதுகின்றேன்.....இருந்தாலும் இந்தியா தனிநாட்டு கோரிக்கையில் ஈழத்தமிழர்களுக்கு எதிரானவர்கள் எனவே இந்தியாவை மீறி யாரும் ஈழத்தமிழர்களை ஆதரிக்க மாட்டார்கள் என்பது இன்றைய நிலவரம். பலஸ்தீன தலைவர் யசீர் அரபாத் கூட துரோகங்களினால் கொல்லப்பட்டார் என்ற கதையுண்டு. இருந்தாலும் பலஸ்தீன போராட்டத்தை இன்ன்றும் சிங்கள அரசு ஆதரிக்கின்றது என நான் நினைக்கின்றேன்.
-
பெல்ஜியம் ரஷ்யாவின் மிகவும் மதிப்புமிக்க சொத்தாக மாறியது எப்படி
நம்பிக்கை துரோகம் செய்ய முனையும் ஐரோப்பிய ஒன்றியம்.
-
பிட்புல், ராட்வீலர் நாய் வளர்த்தால் ரூ.1 லட்சம் அபராதம்
கொடூர கடியன் நாய்கள் வளர்ப்பற்கு தடை விதிப்பது நல்ல விடயம். நம்ம அன்னை திரிஷா வளர்ப்பது போல் செல்லப் பிராணிகளாக நாய்களை வளர்ப்பது வீட்டுக்கும் நல்லது. வீதிகளில் ஊலாவும் சிறுவர்களுக்கும் பாதுகாப்பானது 😎
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
நல்லதொரு யதார்த்த கருத்து.👍 தமிழர்பகுதிகளில் சிங்கள இனவாத அரசுகளால் அடாத்தாக நடத்தப்படும் குடியேற்றங்களுக்கும்,விகாரை கட்டல்களுக்கும் கோமா நிலையில் அமைதி காத்தவர்கள் திடீரென மலையக மக்களுக்காக நீலிக்கண்ணீர் வடிப்பது ஏனென்று தெரியவில்லை?
-
நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி
பாம்பின் கால் பாம்பறியும் என்பது போல்..... போர் என வந்து விட்டால் ரஷ்யா என்ன செய்யும் என்பதை ரம்ப் அவர்களும் அறிவார்.அதே போல் பென்ரகோனும் அறிந்து வைத்திருக்கும். இதனை தனித்தனி ஐரோப்பிய நாடுகளும் அறிவர்.இந்த ஐரோப்பிய ஒன்றியம் எனும் பெயரில் இவர்கள் செய்யும் கூத்துக்கள் இன்னும் அழிவுகளையே தரும். பாவம் உக்ரேன் பொதுமக்கள்.☹️ ஜேர்மனியில் தினசரி சிறு சிறு நிறுவனங்கள் மூடப்படுகின்றன. பெரிய நிறுவனங்கள் என பார்க்கும் போது ஒரு மாதாந்தம் பல ஊழியர்கள் வேலையிருந்து நீக்கப்படுகின்றார்கள். அதை விட பெரிய உருக்கு தொழிற்சாலைகள் தமக்கு எரிசக்தி செலவை சமாளிக்க முடியவில்லை என கையை விரிக்கின்றார்கள். இப்படி பல பொருளாதார அடிகளை வாங்கிக்கொண்டு இருக்கின்றது ஜேர்மனி. இந்த நிலையில் அமெரிக்கா நேட்டோவை விட்டு விலகுமேயானால்....சாத்தியம் உள்ளது.அப்புறம் ஐயோ பாவம் ஐரோப்பா😁
-
நாங்கள் மலையகத்தைவிட்டு யாழ்ப்பாணத்துக்கோ, மட்டக்களப்புக்கோ செல்வதற்கு தயார் இல்லை - வே. இராதாகிருஷ்ணன்
இன்று நேற்றல்ல...அன்று தொடக்கம் மலையக மக்களின் அன்றாட பிரச்சனையின் முக்கிய பிரச்சனை மண் சரிவுகளும் அழிவுகளும். அன்று வராத அக்கறைகளும் அவசரங்களும் இன்று ஏன் வந்தது? சுமந்திர கோமாவின் விழிப்பா?
-
தமிழர் பகுதியில் சுவிசின் இரகசிய நகர்வு.
கிந்தியன் என்றும் தன் இனம் சார்ந்து சிந்திப்பான். அதில் தமிழர்களுக்கு விடிவில்லை. தமிழ் நாட்டிலேயே தமிழை அழிக்க முனைபவன்.இந்த வகையில் கிந்தியன் ஈழத்தமிழர்களுக்கு தேவையில்லாத ஆணி. இது ஒரு ஈழத்தமிழனின் 60 வருட அனுபவம். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆதாயம் இல்லாமல் செட்டி ஆற்றோடு போவாரா என்பதற்கமைய.....கிந்தியா கூட தன் அரசியல் ஆதாயம் இல்லாமலா அன்று தொடக்கம் இன்று வரைக்கும் தமிழர்களை பகடைக்காய்களாக நகர்த்திக்கொண்டிருக்கின்றது? அதனால் ஈழத்தமிழர்கள் நிர்க்கதியானார்களே தவிர வேறொன்றுமில்லை. இன்றுவரைக்கும் அது தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. நிலைமை இப்படி இருக்க...... ஈழத்தமிழினம் தொடர்ந்தும் கிந்தியனின் உதவிக்கரத்தை எதிர்பார்த்து அழியக்கூடாது. பெருமாளும் என் கருத்தையே பிரதிபலிக்கின்றார்.நன்றி பெருமாள். சிங்கள இனம் யார்பக்கமோ எந்த அரசியலோ எனக்கு அக்கறையில்லை. ஈழ இனத்தை பொறுத்தவரை அடுத்த தெரிவு அமெரிக்காகாவாக இருக்க வேண்டும்.சிங்களம் விகாரைகள் கட்ட நினைக்கும் இடத்திலும், சிங்கள இராணுவம் இருக்கும் இடத்திலும் அமெரிக்க இராணுவம் இருக்கட்டும்.
-
நாங்கள் மலையகத்தைவிட்டு யாழ்ப்பாணத்துக்கோ, மட்டக்களப்புக்கோ செல்வதற்கு தயார் இல்லை - வே. இராதாகிருஷ்ணன்
தமிழனை விட சிங்களவன் எவ்வளவோ பரவாயில்லை.😎
-
நாங்கள் மலையகத்தைவிட்டு யாழ்ப்பாணத்துக்கோ, மட்டக்களப்புக்கோ செல்வதற்கு தயார் இல்லை - வே. இராதாகிருஷ்ணன்
சுமந்திரன் போன்றோரின் போலி அரசியல் வார்த்தைகளால் உங்கள் வாழ்க்கையை கெடுத்து விடாதீர்கள். எம் உதவிக்கரம் என்றும் உங்கள் பக்கம்.
-
தமிழர் பகுதியில் சுவிசின் இரகசிய நகர்வு.
இவ்வளவு காலமும் இந்தியாவிற்கு மதிப்பளித்து அல்லது இந்தியாவின் மீது கரிசனை காட்டியதெல்லாம் போதும். அமெரிக்காவே வருக வருக.
-
நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி
உலக இனங்களின் வரலாறுகளை திரும்ப திரும்ப நாம் எடுத்து பேசக்கூடாது. அப்படி பேச வெளிக்கிட்டால் குடியேறிய அமெரிக்கனும் கனேடியனும் அவுஸ்ரேலியனும் எங்கே போய் மீள குடியேறுவதாம்? அமெரிக்கா செவ்விந்தியர்களுக்கு சொந்தமானது. கனடா செவ்விந்தியர்களுக்கு சொந்தமானது அவுஸ்ரேலியா பூர்வீக தொல்குடிகளுக்கு சொந்தமானது. முதலில் நாகரீகமடைந்த உலகினர் தங்கள் பிரச்சனைகளை தீர்க்கட்டும்.அவர்களுக்குள்ளேயே சீழ் பிடித்த பிரச்சனைகள்.இதில் மூன்றாம் உலக நாடுகளில் உள்ள பிரிவினைகளுக்கு தீர்வு காண்பார்களாம்.
-
நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி
பெல்ஜியத்தில் முடக்கப்பட்ட ரஷ்ய பணத்தை வெளியே எடுத்து உக்ரேனுக்காக அதாவது சண்டை மற்றும் அபிவிருத்திக்காக பயன்படுத்த ஜேர்மனி உத்தரவாதம் வழங்க இருக்கின்றதாம்.
-
நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி
உந்த நரிப்புத்தி தெரிந்துதான் ரஷ்யா உக்ரேனின் கரைப்பகுதிகளை கைப்பற்றி வைத்திருக்கின்றது. மற்றவர்கள் சொத்துக்களை ஆட்டைய போடுவதில் மேற்குலகினருக்கு நிகர் யாருமில்லை.
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
இன்றைய எமது/மலையக சமூக சூழலில் எத்தனை பேர் விவசாயம் செய்ய காத்திருக்கின்றர்கள்?
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
கிழக்கு மக்களுக்கு சுமந்திரன் யார்,எப்படிப்பட்டவர் என தெரியும்.அவர் சும்மா அலட்டுவதையெல்லாம் கணக்கில் எடுக்க மாட்டார்கள். சுமந்திரம் இப்போது எம்பியும் இல்லை,தும்பியும் இல்லை. அவரை தூக்கி பிடிப்பது உங்களைப்போன்றவர்கள் மட்டுமே. அங்கே கருணாவை கூட ஒதுக்கித்தான் வைத்துள்ளார்கள்.
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
எல்லாம் சரிதான். அவர்கள் சொல்வதும் சரிதான். அதே போல் நீங்கள் சொல்வதும் சரிதான். இதை யார் தலைமையில் முன்னெடுப்பது? எப்படியான சட்ட திட்டங்களில் இதை செய்ய முடியும் என்றாவது நீங்கள் சொல்ல வேண்டும். ஒரு நிதர்சனமான வழியை காட்டினால் மாற்றுக்கருத்துக்கள் வராது என நான் நினைக்கின்றேன். மலையக தமிழர்களின் வாழ்வை வைத்து பட்டிமன்றம் நிகழ்த்த தேவையில்லை என்பது என் கருத்து. மலையக தமிழர்களின் வாழ்வு செழிக்க வேண்டும் என்பது அனைவரின் நோக்கம் என்பது புரிகின்றது.அது அவர்களை வடக்கில் குடியேற்றுவதன் மூலம் நிவர்த்தி பெறுமா என்பது முக்கிய விடயம்.மற்றும் படி தமிழர் பெரும்பான்மை சரி. இப்போது கேள்வி என்னவென்றால் அனைவரும் தமிழர் பெரும்பான்மைக்கு சார்பாக இருப்பார்களா? இன்றைய அரசியல் நிலவரத்தின் படி பார்த்தாலும் இந்த யாழ்களத்தில் கூட அரசியல் ஒற்றுமை இல்லை.அப்படியிருக்க நாளைய ஈழ அரசியலை பற்றி நீங்கள் எப்படி எதிர்வு கூறமுடியும்?
-
சிந்தனைக்கு சில படங்கள்...
வார்த்தைகளுக்கே பஞ்சம் சொல்லும் படம்.
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
நூற்றுக்கு நூறு வீதம் உண்மை. இது நான் கண்ட அனுபவம். அது போல் கேம்பிரிச்,ஒக்ஸ்போர்ட்,இம்பிரியால் போன்ற யூனிகளில் படித்தவர்கள் சொல்வதெல்லாம் உண்மையுமல்ல.நியாயங்களும் அல்ல.
-
மரப்பாவம்
மரங்கள் என்றாலே என்ன மரங்கள் என தெரியாதவர்களை கலாய்த்திருக்கின்றீர்கள் என நினைக்கின்றேன். மர கொப்புகள் அடுத்தவர் காணிக்குள் நின்றால் அதை தங்கள் சொத்தாக நினைக்கும் ஈழ மண்ணிலிருந்துதான் நாங்களும் வந்திருக்கின்றோம். எனவே வீட்டுக்கு வீடு வாசற்படி மருவி நாட்டுக்கு நாடு வாசற்படி என வந்து நிற்கின்றோம். இருந்தாலும் உள ரீதியாக தர்ம அடி வாங்கிய உங்களுக்கு என் அனுதாபங்கள்.😂
-
மண்டைதீவில் நள்ளிரவு வீடு புகுந்து வன்முறை கும்பல் அட்டகாசம் - உதவிக்கு சென்ற முதியவர்கள் மீது சித்திரவதை
மண்டை தீவு டக்ளஸ் அண்ணனின் கட்டுப்பாட்டு பிரதேசம் அல்லவா? அங்கு எப்படி இப்படியான அக்கிரமங்கள்?
-
இந்தியாவின் வரலாற்றுப் பிழையால் தமிழர் பகுதியில் அமெரிக்க இராணுவ திடீர் ஆதிக்கம்
இந்திய அரசியல் கொள்கையினால் அதிகம் பாதிக்கப்பட்டு பாரிய அழிவுகளை சந்தித்தவர்கள் என்றால் அது ஈழத்தமிழர் மட்டுமே. இன்று கூட தமிழ்நாட்டில் வாழும் ஈழத்தமிழ் அகதிகள் எந்தவொரு முன்னேற்றமும் இல்லாமல் அகதி முகாம் வாழ்க்கையே வாழ்கின்றார்கள். வெளியே வாழ்பவர்களுக்கு கூட சாதாரண மனித உரிமைகள் கூட இல்லை.காலம் காலமாக இந்திய உதவிக்கரத்தை நீட்டியவர்கள் ஈழத்தமிழர்கள். அதை அன்று தொடக்கம் இன்று வரைக்கும் உதாசீனம் செய்தது இந்தியா மட்டுமல்ல. தமிழ்நாட்டு சில பல அரசியல்வாதிகளும் தான்..... அவர்களின் அந்த வர்ம/ வன்மம் இன்றும் தொடர்வதால் அமெரிக்க தரையிறக்கத்தை ஆதரிப்பதில் எந்த தவறும் இல்லை என்பது என் கருத்து. நெடுந்தீவிலும் புங்குடுதீவிலும் பருத்தித்துறையிலும் மன்னார் மற்றும் மட்டக்களப்பிலும் அமெரிக்க இராணுவ முகாம்களை அமைத்து மார்ஷல் திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என வேண்டிக்கொள்கின்றேன்.🙏
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
இதையெல்லாம் யார் எந்த கட்டமைப்புடன் தலையேற்று நடத்துவது? அதற்கான திட்டங்கள் உங்களிடம் ஏதாவது இருக்கின்றதா? யூத இனத்திற்கென்று ஒரு தனி பூமி இருக்குன்றது.அவர்கள் ஆட்சி செய்யும் பூமி அது. அவர்கள் ஏது செய்தாலும் தடை போட யாரும் இல்லை. உலகில் உள்ள அனைத்து யூதர்களையும் உள்ளே வாங்க முடியும். ஆனால் வடகிழக்கு தமிழர் பகுதி என நாங்கள் சொல்லத்தான் முடியும்.ஏனைய ஏனைய விடயங்களில் சிங்கள அனுமதியில்லாமல் ஒரு துரும்பை கூட அசைக்க முடியாது என்பதை சில நலன்புரி இயக்கங்கள் மீதான அழுத்தங்கள் உதாரணமாக அமைகின்றது. உங்களுக்குள் ஈழத்தமிழர்கள் நலன்புரி சம்பந்தமான நீண்ட வரைபடம் உள்ளது போல் தெரிகின்றது. வெளியே இழுத்து விடுங்கள். போற வழிக்கு புண்ணியமாகும். இதைத்தான் பிரதேசவாதம் என்கிறேன்.👆 தமிழீழம் சாத்தியம் என நிழல் அரசு அமைத்து காட்டியவர்கள் ஈழத்தமிழர்கள்.அங்கே பிரதேசவாதம் வரவில்லை. ஆனாலும் அதற்குள்ளும் பிரதேசவாதத்தை உட் புகுத்தியவர்கள் யார்...யார் என்பதை இந்த ஊர் உலகம் அறியும்.