Everything posted by குமாரசாமி
-
புட்டினும் புதுமாத்தளனும்
நீங்கள் சொல்வது சரிதான்.இருந்தாலும் நூறு வீதமான மக்கள் அப்படியில்லை. சில நேரங்களில் அவர்களுக்கு ஒரு மனத்தாக்கம் வரும் போது சிரித்துக்கொண்டே சாதிப்பார்கள். இது பெரிய நகரங்களில் எடுபடாது. ஜெர்மனியர்களின் சரியான நாசி குணங்களை அறிய கிழக்கு ஜேர்மனியின் குக்கிராம பக்கங்கள் போனால் பார்க்கலாம்.
-
மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
ரஷ்யா தன் பிராந்திய அரசியலுக்காக/பாதுகாப்பிற்காக இந்த யுத்தத்தை செய்கின்றது.இது எனக்கு ஏற்புடையதல்ல. ஆனால் ரஷ்யா பலமுறை உக்ரேனுக்கு எச்சரித்தும் உக்ரேன் அமெரிக்காவுடனும் ஐரோப்பிய யூனியனுடனும் சேர்ந்து ரஷ்யாவை எள்ளி நகையாடிய வண்ணமே இருந்தது.அதியுச்சமாக இன்றைய உக்ரேன் சனாதிபதியின் வாய் வீரங்கள் தான் ரஷ்யாவை மேலும் சினப்பட வைத்தது. பிராந்திய அரசியல் எவ்வளவு முக்கியமானது. எமது தேசியத்தலைவர் அவர்கள் ஒரு மாவீரர் உரையின் போது பிராந்திய அரசியலில் இந்திய முக்கியத்துவம் பற்றி கூறினார். இந்தியாவின் பாதுகாப்பிற்கு எதிராக நாம் எதையும் செய்யமாட்டோம் என கூறியதாகவும் ஞாபகம்.இந்தியா எமது அயல் நாடு அதன் முக்கியத்துவம் பற்றியும் கூறியிருந்தார். முள்ளிவாய்க்கால் அழிவின் போது எம் இனத்திற்கு யாருமே உதவவில்லை. ஆயதங்களை மௌனித்து விட்டோம் என கூறிய பின்னரும் நிர்கதியாக நின்ற இனத்தை அடியோடு சரித்து அழித்தார்கள்.அதற்கு இன்றுவரை கூட நீதி கிடக்கவில்லை. எமக்கு இந்தியா எவ்வளவு முக்கியம் என கூறப்பட்டாலும் அதே இந்தியா முள்ளிவாய்க்கால் அழிவை முன்னின்று செய்தது துரோகத்திலும் துரோகம். சரி அதன் பின் ஏதாவது செய்வார்கள் என்று பார்த்தால் எதுவுமே இதுவரை இல்லை.அங்கிருக்கும் ஈழத்து அகதிகளைக்கூட அவர்களால் சரிவர கவனிக்க முடியவில்லை. உக்ரேனில் அப்படியா நடக்கின்றது? மேற்குலகு ஏட்டிக்கு போட்டியாக தடுப்பு ஆயுதங்களை கொடுக்கின்றார்கள். மேற்குலக மக்கள் பணம் பொருள் உக்ரேன் மக்களுக்காக சேகரிக்கின்றார்கள்.அண்டை நாடுகளுக்கு புலம் பெயரும் மக்களுக்கு உக்ரேன் என்ற பெயர் சொன்னாலே போதுமானது. தங்கள் பாதி வீட்டை எவ்வித கேள்விகளுமின்றி தங்க கொடுக்கின்றார்கள். உக்ரேன் சனாதிபதியுடன் நாள்தோறும் மேற்குலக தலைவர்கள் தொடர்புகொண்டு ஆறுதல் சொல்லி உற்சாகப்படுத்துகின்றார்கள்.அதை விட உக்ரேனில் பாதிக்கப்பட்ட இடங்களை கட்டியெழுப்புவது பற்றி இப்போதே மேற்குலகு சிந்திக்க ஆரம்பித்து விட்டது. இது இப்படியிருக்க...... மரியோபுல் இரண்டாம் முள்ளிவாய்க்கால் என எழுதுவதற்கு எவ்வளவு நெஞ்சழுத்தம் வேண்டும்? சிரியாவின் அலெப்போ(Aleppo) அழிவுக்கு வராத கண்கலங்கல்களும் வியாக்கியானங்களும் மரியோபுல் அழிவிற்கு மட்டும் வருகின்றதென்றால் மேற்குலகின் இரட்டை வேடத்திற்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம்? எதோடு எதை கொண்டு வந்து ஒப்பிடுவது என்பதற்கும் ஒரு நீதி நியாயம் வேண்டும்.
-
அறையெங்கும் மூட்டைப் பூச்சிகள்
இவருக்கு கிட்டடியிலை நடு ரோட்டிலை வைச்சு மொங்கு மொங்கு எண்டு மொங்கப்படும்..↓↓↓😁
-
புட்டினும் புதுமாத்தளனும்
இங்கு ஜேர்மனியில் உள்ள உள்ளூர்களில் இப்போது உக்ரேனில் இருந்து வரும் அகதிகள் விருந்தினர்கள் சிறந்தவர்களா அல்லது சிரியா மற்றும் நாடுகளில் இருந்து வரும் அகதிகள் சிறந்தவர்களா என்றொரு விவாதம் புகைய ஆரம்பிக்கின்றது. உண்மை முகங்கள் மெல்ல மெல்ல வெளியே வரும் காலம் அதிகமில்லை.
-
மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
யாழுக்கான ஆக்கம் சரிதான். அதற்காக எல்லா ஆக்கங்களுக்கும் தொடருங்கள் அல்லது வாழ்த்துக்கள் என்று சும்மா போய் விட முடியாது. ஜேர்மனியில் இருப்பவர்களுக்கு தான் தெரியும் உக்ரேனின் உண்மை முகமும் அவர்களின் கள்ளத்தன அரசியலும் இந்தியாவை விட ஊழல்களும் நிறைந்த நாடு அது. சகல உரிமைகளுடனும் வாழும் மக்கள் உள்ள நாடு அது. ஆனால் ரஷ்ய மொழி பேசுபவர்களை ஒதுக்கி வைக்கவும் அவர்கள் பின்னிற்பதில்லை. எந்தவொரு உரிமையுமில்லாத ஈழத்தமிழினத்தின் முள்ளிவாய்க்கால் அழிவையும் சகல உரிமைகளுடன் வாழும் உக்ரேனின் அழிவையும் ஒப்பிடுவது முழுமையான விசமத்தனம்.
-
அறையெங்கும் மூட்டைப் பூச்சிகள்
அதெல்லாம் தெரியாது.கொத்தார்ரை நிலைப்பாடு என்ன?😎
-
புட்டினும் புதுமாத்தளனும்
உக்ரேன்காரருக்கும் வெள்ளைத்தோல் தான் பிடிக்கும். ரயில்ல இருந்து இந்தியர்களை இறக்கி விட்டது தெரியும் தானே? அதோட உக்ரேன் நாசி நாடெண்டு ஜேர்மன்காரரே சொல்ல வெளிக்கிட்டினம்
-
மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
அமைதி....அமைதி.... யாருக்கும் தெரியாமல் உங்கள் மேற்குலகின் ஆசீர்வாதத்துடன் உண்மையான சர்வாதிகாரி இருக்கின்றான்.அவன் உங்கள் அடிப்படலைக்குள் வருவான். அப்போது உங்கள் ஆய்வுக்கட்டுரைகளையும் கவிதைகளையும் எழுத தயாராகுங்கள். இவன் செய்யும் அட்டூழியங்கள் மனிதாபிமான சிங்கங்களுக்கு தெரிவதில்லை. ஒரே நேரத்தில் 80 பேருக்கு சதக்...சதக்...
-
நேற்று என் கனவில் கடல் வந்தது - நிழலி
ஐயாவின்ரை கனவிலை வந்து போறது கேஆர் விஜயாவா?
-
புட்டினும் புதுமாத்தளனும்
அதுவொரு பதில் கடிதம். நீங்கள் ஒருவருக்கு பதில்கடிதம் எழுதுவதென்றால் எப்படி எழுதுவீர்கள்? மனதில் வன்மத்தை வளர விட்டால் ஆசிரியரிடம் கற்றது கூட ஆட்டைய போட்டது மாதிரித்தான் தெரியும்.
- 'செம்மொழியான தமிழ் மொழி' - புர்ஜ் கலீஃபாவில்..
-
மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனும் எந்தவொரு வகையிலும் உக்ரேனுக்கு பொருளாதாதார தடைகளை விதிக்கவில்லை. மாறாக பல வியாபர பரிமாற்றங்கள் மேற்குலகுடன் உண்டு. ரஷ்யாவும் இவர்களுக்கு தடை விதிக்கவில்லை. எல்லாம் கொழுப்பு தலைக்கேறியதின் விளைவு.
-
மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
ஒரு நினைவூட்டலுக்காக......
-
மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
That time Trump called out the corruption in Ukraine with Zelensky sitting next to him... The look on his face is priceless. I can't wait for this to unravel... கண்ட கண்ட களிசறை யுத்தங்களோடு எமது இனவிடுதலை போரை ஒப்பிடலாகாது.
-
மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
இது யுத்தமல்ல சிறித்தம்பி. ரஷ்யா தனது பிராந்திய நலனுக்காக / தன்னை பாதுகாக்க ஒரு இராணுவ நடவடிக்கையை செய்கின்றது. உக்ரேன் தனது ஐரோப்பிய யூனியன் பிரவேசத்தையும் நேட்டோ அங்கத்துவ விருப்பத்தையும் நீண்ட காலமாகவே தெரிவித்து வருகின்றது. ஆனாலும் இதன் பக்க விளைவுகளை அங்கெலா மேர்க்கல் நன்கு அறிந்து வைத்திருந்தார். இதை பிரான்ஸ்சும் நன்கு அறிந்து வைத்திருந்தது.இதனாலேயே உக்ரேனை சேர்ப்பதை தட்டிக்கழித்து வந்துள்ளனர்.. இதை பொறுக்காத அமெரிக்கா உக்ரேனை உசுப்பேற்றி இப்போது இந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளது. ஐரோப்பிய யூனியனுக்கு விழுங்கவும் துப்பவும் முடியாத இக்கட்டான நிலை. காரணம் உலக பொலிஸ் அண்ணன் அமெரிக்காவின் பேச்சை தட்ட முடியாதல்லவா? அமெரிக்காவின் விருப்பம் ஐரோப்பா பலம் பெறக்கூடாது. ஐரோப்பிய யூனியன் ரஷ்யாவுடன் பொருளாதார நடவடிக்கைகளில் கூட்டு வைத்தால் தன்னலத்துக்கு கேடு என்பது அமெரிக்காவுக்கு தெரியும். இதனாலேயே குட்டையை குழப்பி சுகம் காண்கின்றது.இது விரல் சூப்பும் குழந்தைக்கும் தெரியும். பிராந்திய நலன் பற்றி அமெரிக்கா சிந்திக்கலாம். பிராந்திய நலன் பற்றி சீனா சிந்திக்கலாம். பிராந்திய நலன் பற்றி ஜப்பான் சிந்திக்கலாம். பிராந்திய நலன் பற்றி இந்தியா சிந்திக்கலாம். ஆனால் தன் பிராந்திய நலன் பற்றி ரஷ்யா சிந்தித்தால் எங்களுக்கு கண் எல்லாம் கரைய வெளிக்கிடும்.
-
புட்டினும் புதுமாத்தளனும்
உக்ரேனிலிருந்து ஆண்கள் வெளியேற அனுமதியில்லை. எழுந்தமானத்திலை எல்லாத்தையும் எடுத்து விடப்படாது. 🤣
- 'செம்மொழியான தமிழ் மொழி' - புர்ஜ் கலீஃபாவில்..
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இஞ்சையும் கொஞ்சம் கொஞ்சமாய் காய வெளிக்கிடும் போல கிடக்கு....
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ராசனுக்கு என் பிந்திய பிறந்தநாள் வாழ்த்துகள். உக்ரேன் சண்டையிலை மறந்து போனான் 😁
-
மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
ஏனுங்கோ என்ன காரணம்? 🤣
- 'செம்மொழியான தமிழ் மொழி' - புர்ஜ் கலீஃபாவில்..
- 'செம்மொழியான தமிழ் மொழி' - புர்ஜ் கலீஃபாவில்..
-
சென்னை விமான நிலையத்தில் 5 திரையரங்குகளுடன் கூடிய 6 அடுக்கு மால்..
இந்தியர்கள் தியேட்டர், திரைப்படங்கள் இல்லாவிட்டால் தற்கொலை செய்வதற்கு சமன்....சாப்பாடு இல்லாவிட்டாலும் பரவாயில்லை சினிமா இல்லாவிட்டால் ஐயோ கடவுளே நினைத்து பார்க்கவே முடியவில்லை....🤣
-
நடனங்கள்.
மண் ஆதி பூதமொடு விண் ஆதி அண்டம் நீ மறை நான்கின் அடிமுடியும் நீ ..!! மதியும் நீ ரவியும் நீ ! புனலும் நீ அனலும் நீ மண்டலம் இரண்டு எழும் நீ ..! பெண்ணும் நீ ஆணும் நீ பல் உயிர்க்கு உயிரும் நீ பிறவும் நீ ஒருவ நீயே .! பேதாதி பேதம் நீ .பாதாதி கேசம் நீ பெற்ற தாய் தந்தை நீயே . பொன்னும் நீ பொருளும் நீ இருளும் நீ ஒளியும் நீ போதிக்க வந்த குரு நீ ..! புகழொணாக் கிரகங்கள் ஒன்பதும் நீ இந்த புவங்கள் பெற்றவனும் நீ ..! என் அறிய ஜீவ கோடிகள் ஈன்ற அப்பனே என் குறைகள் யார்க்கு உரைப்பேன் ..! ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற தில்லை வாழ் நடராஜனே.... 🙏 .
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஒரு சிலதை திருப்பியும் அசை போடவேண்டிக் கிடக்கு.....😁