Jump to content

அக்னியஷ்த்ரா

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    1778
  • Joined

  • Last visited

  • Days Won

    10

Everything posted by அக்னியஷ்த்ரா

  1. பையன் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டார் காரணம் கடத்தலில்லை உண்மைக்காரணம் இன்னும் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. உறுதிப்படுத்தப்பட்டதும் இணைக்கிறேன்
  2. என்னது வெளிநடப்பா ....அவ்வளவுதான் அமெரிக்கனின் பசிபிக் fleet உடனடியாக தரையிறக்கம் மேற்கொள்ள ரெடியாவதாக கேள்விப்பட்டேன் இனியென்ன தையிட்டி விகாரை சுக்குநூறு தான் . கூத்தாடீஸ் உலகமே தனி உலகமப்பா அவர்களது வால்களுக்கோ அதைப்பார்த்து ஒரே சோக்குதான்பா
  3. முந்திய இணைப்பில் அவர் பற்றிய விக்கி தகவல்களை இணைத்திருந்தேன். இவரைப்பற்றி தனிப்பட்ட தகவல்கள் தெரியாது ஆனால் சிங்கை நீதித்துறை தகவல்களை https://stomp.straitstimes.com இந்த தளத்தில் வசிப்பது வாடிக்கை. விக்கியில் போதுமான தகவல்கள் உண்டு https://en.wikipedia.org/wiki/Tangaraju_Suppiah
  4. நான் சிங்கப்பூர் சட்டநுணுக்கங்கள் தெரிந்த ஒரு சட்டத்தரணியில்லை. எனக்கு தெரிந்த வரையில் சிங்கையில் உள்ள குற்றப்பத்திரிகை தயார்செய்யும் போது அதனை தயாரிக்கும் போலீஸ் அதிகாரிகள் எவற்றையெல்லாம் சமர்ப்பிப்பார்கள், நீதிமன்றத்தில் உள்ள சில நடைமுறைகளை பற்றியும் அதன் இந்த வழக்கு தொடர்பான தாக்கத்தையும் விபரிக்கிறேன். 1. குற்றத்தின் தன்மைக்கேற்ப அதனை விசாரிக்கும் பொறுப்பு சிங்கை போலீஸ் படையின் குறிப்பிட்ட பிரிவுக்கு வழங்கப்படும். குற்றத்தின் கடுமைக்கேற்ப அதனை IO (Investigation Officer) அல்லது SIO (Senior Investigation officer ) இடம் ஒப்படைப்பார்கள். இனி குற்றவாளி பிடிபடும் வரை இந்த அதிகாரியின் தலைமையின் கீழ் ஒரு குழு அமைக்கப்பட்டு புலனாய்வில் ஈடுபடுவார்கள். 2. இப்போது சந்தேகநபர் பிடிபட்டால் அவரது வசமிருக்கும் அனைத்து ஆதாரங்களையும் போலீஸ் பறிமுதல் செய்வதுடன் குற்றத்தின் முகாந்திரம்,பின்னணி, வேறு சந்தேகநபர்களுக்கு தொடர்பு உண்டா என்பதை அறிய விசாரணை நடத்துவார்கள். இந்த தருணத்தில் இனி தப்பிப்பிழைக்க முடியாது என்று சந்தேகநபர் விசாரணைக்கு ஒத்துழைத்தால் அவர்களது ஒத்துழைப்பு பற்றிய அதிகாரியின் அறிக்கையும் வழக்கு தாக்கல் செய்யும் போது சேர்த்து ஒப்படைக்கப்படும். 3. இனி வழக்கு நடைபெறும்போது அரச தரப்பில் குற்றத்தை ஒப்புக்கொண்டால் குறைந்தபட்ச தண்டனையுடன் வழக்கை முடிவுறுத்துவதாக சந்தேகநபரிட்கு அரசதரப்பிலிருந்து பேரம்பேசல் நடக்கும் சந்தேகநபர் குற்றத்தை ஒப்புக்கொண்டால் வழங்கக்கூடிய மிகக்குறைந்த தண்டனையுடன் வழக்கை சிங்கை நீதித்துறை முடித்துவைக்கும். சந்தேகநபர் நீதித்துறையை சவாலுக்குட்படுத்தி வழக்கை தொடர்ந்தால் வழக்கு முடிவில் குற்றவாளியாக இனங்காணும் பட்சத்தில் அதியுச்ச தண்டனை பரிசாக கிடைக்கும் இனி இந்த வழக்கில் தங்கராஜு சுப்பையா A.K.A "இந்தியா", செல்வா என்ற நபர் மூலம் மலேசியாவிலிருந்து மோகன் என்பவரிடம் அனுப்பிவைக்கப்பட்ட கஞ்சாவினை எப்படி தனது கைக்கு கொண்டுவர பிரயத்தனம் பண்ணினார் என்பதை இணைத்திருக்கும் இணைப்பில் படிக்கலாம். ஆனால் மோகன் எல்லை சோதனைச்சாவடியிலேயே மாட்டி குற்றத்தை ஒப்புக்கொண்டு "இந்தியா" வை பிடிக்க உதவியதால் 23 வருட சிறை 15 சூடுகளுடன் தப்பிவிட . போதிய ஆதாரங்கள் இல்லாததால் நீதித்துறையை சவாலுக்குற்படுத்தலாம் என்று கிடைத்த ஆலோசனைக்கேற்ப நீதித்துறை வழங்கிய 20 வருட சிறையை மறுத்ததோடு அல்லாமல் நீதித்துறை படிப்படியாக குறைத்த 15 மற்றும் 12 வருடங்களையும் குற்றத்தை ஒப்புக்கொள்ளாமல் நிராகரித்தார். உண்மையில் மலேசியாவிலிருந்து கடத்தியவரை விட குறைந்த தண்டனையை பெற்றிருக்கவேண்டியவர் அசட்டுத்தைரியத்தால் இன்று தூக்குக்கயிற்றில் உயிர் துறந்திருக்கிறார். நீதித்துறையை challenge செய்வதென்றால் நம்பக்கம் செம ஸ்ட்ராங்காக இருக்கவேண்டும்.
  5. https://en.wikipedia.org/wiki/Tangaraju_Suppiah தங்கராஜு சுப்பையாவின் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுவிட்டது. அன்னாரின் ஆத்மா சாந்தியடைவதாக. Plea Bargain ( பேரம் பேசலை ஏற்றுக்கொண்டிருந்தால் 12 வருடங்களில் சில மார்க்குகளுடன் வெளியே வந்திருக்கலாம் ) சிங்கப்பூர் மலேசிய தமிழர்கள் மீண்டும் அசட்டுத்தைரியத்தில் சூப்பர் மேன்களாக மாறி போதைப்பொருள் கடத்தி உங்களை நீங்களே மாய்த்துக்கொல்லாமல் அடக்கமாக இருக்குமாறு வினயமாக கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்
  6. https://singaporelegaladvice.com/law-articles/free-legal-clinics/ சிங்கப்பூரில் இலவசமாகவே சட்டஆலோசனை பெற வசதிகள் உண்டு ஆனால் நமது பக்கம் பெரிய பெரிய ஓட்டைகளை வைத்துக்கொண்டு நிரபராதி என்று தீர்ப்பு எதிர்பார்க்க முடியாது. தீர்ப்பளித்திருப்பது சிங்கப்பூர் உயர்நீதிமன்றம். இவர்கள் சிங்கப்பூர் குடிமக்கள் அல்லது நிரந்தர வதிவிடவாளர்களாக இருப்பின் அவர்களுக்கு நாம் நீதித்துறையை பற்றி சொல்லிக்கொடுக்க வேண்டிய அவசியமில்லை. எனது நண்பன் சிங்கப்பூர் சீன குடிமகனுக்கெதிராகவே வீட்டு வாடகை பிரச்சினை தொடர்பாக வழக்கு தொடர்ந்து வென்று சிங்கை குடிமகனுக்கு தண்டப்பணத்துடன் தனக்கு நஷ்ட்டஈடும் பெற்றவன். அன்று எனது கண்ணிற்கு முன்னே வந்தது இலங்கையில் சிங்களவனுக்கெதிராக சிங்கள ஊரில் நான் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்ற கற்பனை காட்சியே. சும்மா உங்களது தமிழ் கோஷங்களால் எந்த பிரயோசமுமில்லை, நெற்றிக்கண் திறப்பினும் தமிழன் குற்றம் செய்தால் குற்றவாளியே. ஆட்டிற்குள் கொண்டுவந்து மாட்டை விடவேண்டாம் (சிங்கப்பூரிற்குள் கொண்டுவந்து மலேசியாவை சொருகவேண்டாம் அது முற்றான முஸ்லீம் நாடு அதனை பற்றி பேசவேண்டிய அவசியமே இல்லை )
  7. இதற்கு பெயர் தான் எழுதவேண்டுமென்பதற்காக எழுதுவது தாய்லாந்து போன்ற போதைப்பொருட்களை சட்டபூர்வமாக்கிய நாட்டில் ஒரு சிங்கப்பூர் குடிமகன் போதைப்பொருள் பாவித்தால் அது அந்த நாட்டில் குற்றமாக பதியப்படுமா கடவுச்சீட்டுமூலம் கண்காணிக்க ...? சிறுபான்மை இன மக்கள் விகிதாசாரத்தில் பெரும்பாண்மை இனமக்களை விட அதிகக்குற்றத்தில் ஈடுபட்டால் அப்படித்தான் நிலைமை இருக்கும். இங்கு வந்துபாருங்கள் போனவருடம் சிங்கப்பூரை கலக்கிய வாள்வெட்டு சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரும் இந்திய வம்சாவளிகளும் தமிழர்களும். சிங்கையில் இருக்கும் Secret societyகளில் சீனர்களை விட இன விகிதாசாரத்தில் குறைந்த இந்திய வம்சாவளி உறுப்பினர்கள் அதிகம். சிங்கையில் ஒரு ஹிந்திய தெலுங்கு தொழிலாளியினால், நமது மட்டக்களப்பை சேர்ந்த பாலியல் தொழிலாளி கர்ப்பிணிப்பெண் ஒருவர் வயிற்றிலிருந்த கருவுடன் சேர்த்து கொலை செய்யப்பட்டது தெரியுமா. தெற்காசியாவிலிருந்து வயிற்றை கழுவ என்று வந்து விட்டு இவ்வாறான வேலைகளை பார்த்தால் குற்றச்சமூகமாகத்தான் அடையாளப்படுத்தப்படுவோம் https://soc.culture.singapore.narkive.com/6fdsz0mx/only-life-sentence-for-indian-ft-murderer செய்வது பூரா கேப்மாரி வேலைகள் ஆனால் தமிழர்கள் என்று மரியாதை ஹைகோர்ட் வேற வேண்டும்
  8. யார் சொன்னது கீழே இருக்கும் இணைப்பை வாசியுங்கள். நல்லவேளை சிங்கப்பூர் அரசாங்கம் ஒவ்வொரு வெளிநாடு செல்லும் குடிமக்கள் பின்னேயும் ஒரு காவற்துறை அதிகாரியை அனுப்பவேண்டும் என்று சொல்லாதமட்டிலும் சந்தோசம் https://www.channelnewsasia.com/singapore/saliva-test-drugs-roadblocks-land-checkpoints-changi-airport-3303071 சிங்கையில் சீனர்கள் தான் அதிகம் அதற்குப்பிறகுதான் மலே. தவறுசெய்தால் தண்டனை உறுதி அதுதான் சிங்கப்பூர், அவர்களது புலனாய்வு, துப்பறியும் முறை எல்லாம் சர்வதேசத்திற்கு இணையானது. தொலைபேசி இலக்கத்தை வைத்திருந்ததை ஆதாரமாக மட்டும்வைத்து பிடித்துக்கொண்டுபோய் அடைக்கும் வேலையை இலங்கை வேண்டுமானால் செய்யலாம். சிங்கப்பூரில் மட்டும் இந்த வேலை நடந்தால் நீதிபதி முதல் போலீஸ் உத்தியோகத்தர் வரை வருடக்கணக்கில் களி தின்னுவர்.
  9. நாதம்ஸ் நீங்கள் கூறியது எல்லாமே சரி ஆனால் 50 பிரம்படி என்பது பிழை, 24 அடிகளுக்கு மேல் ஒரு வழக்கிற்கு வழங்கமாட்டார்கள். இந்த பிரம்படிகள் எல்லாம் சும்மா ஆசிரியர் மாணவருக்கு அடிக்கும் அடிகள் அல்ல. ஒரு முழு வளர்ச்சியடைந்த மனிதன் 6 இற்கு மேல் ஒரேதடவையில் வாங்கினாலே அவர் சூப்பர் மேன் வகையறா தான். மூன்றிற்கே மயங்கிவிழுத்துவிடுவினம். அப்படி மயங்கி விழுந்தால் ஆளை எழுப்பி பின்னால் சூடு விழுந்த இடத்தில் களிம்பு தடவி ஆறவைத்து இன்னுமோர் நன்னாளில் மீண்டும் சூடு விழும். பெரிய அப்பாடக்கர் என்றால் பந்தாவாக எழுதிக்கொடுத்துவிட்டு ஒரே தடவையில் 10 சூடு வரை வாங்கலாம். அந்த அமெரிக்க வாலிபருக்கு 6 சூடு தான் தண்டனை, அமெரிக்கா தனது இராசதந்திர பலம் முழுவதையும் பாவித்தும் சிங்கப்பூர் இரண்டு சூடுகளை மட்டும் குறைத்துக்கொண்டது. அதன்படி 5 May 1994 இல் அவருக்கு சூடு விழுந்தது. உபரித்தகவல்: ஒருவர் இரண்டுக்கு மேல் சூடு வாங்கினால் ஆயுளுக்கும் அந்த வீரத்தழும்பு பின்புறத்தில் இருக்கும். அன்றுமுதல் அவர் மார்க் மாயாண்டி என்று அன்புடன் அழைக்கப்படுவார்
  10. ஆமாம் பெரிய சிங்கப்பூர் என்ற நினைப்பு டாலர்களில் வாரி வழங்கி போயிங், ஏர் பஸ்ஸிலிருந்து பொறியாளர்களை இறக்கப்போயினம் . நானெல்லாம் ஸ்ரீ லங்கன் ஏர் லயின்ஸில் பறப்பதை விட்டே 5 வருடங்கள், பாவம் சிங்கப்பூருக்கு கொடுக்கும் பணத்தை இலங்கைக்கு கொடுப்போமே என்று பார்த்தாலும், விமானப்பராமரிப்பு, சேவைத்தரம் என்பன காறித்துப்பும் அளவுக்கு. ஒருகாலத்தில் ஆசியாவிலேயே சிறந்ததும், உலகத்தரம் வாய்ந்ததும் என்று பெயரெடுத்த நிறுவனம் இப்போது ஆளே இல்லா கடையில் டீ ஆத்துது.
  11. என்ன செய்வது இலங்கைக்கு கிடைத்தது போல் ஒரு டயானா "கஞ்சா" கமகே சிங்கைக்கும் கிடைத்திருந்தால் தங்கராஜு வாழ்விலும் வசந்தம் வீசியிருக்கும்,
  12. இந்த அல்லோலகல்லோயாக்கள் எனப்படும் பிரிவினை சபைகளை கொஞ்சமும் எனக்கும் பிடிப்பதில்லை இத்தனைக்கும் நானும் ஒரு கிறீஸ்தவன். ஆனால் இவர்கள் பற்கள் பிடுங்கப்பட்டவர்கள் என்பதால் மறவன் புலவு போன்ற டம்மி பீஸ்களால் தூக்கி தூக்கி புரட்டப்படுகிறார்கள். வீதியோரம் நின்று அறிவிப்பு காகிதம் விநியோகித்து மட்டுமே மதம் மாற்ற இவர்கள் முயல்வதால் சச்சுவிற்கும் இவர்களை பார்க்கும் போது இளக்காரம். ஆனால் கிழக்குமாகாண எல்லைக்கிராமங்களில் நடக்கும் லவ் ஜிஹாத் முதல் பெயர் மாற்றி வர்த்தமானியில் அறிவிப்பு வந்தால் 5 லட்சம் ரொக்கத்துடன் சுயதொழில் ஒன்றை ஏற்படுத்திக்கொடுப்பது என்று பெரியளவில் நடைபெறும் மதமாற்றங்கள் பற்றி மூச் . சமீபத்தில் நான் பொறுப்பெடுத்து கல்வி கற்பிக்கும் அந்த பெண்பிள்ளையின் குடும்பத்திலும் இப்படியான ஊடுருவல் எமது முழு முயற்சியுடன் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. அந்தப்பிள்ளையின் இரண்டாவது அக்காவை பதிவுத்திருமணம் செய்ய முயற்சித்த ஏற்கனவே திருமணமான ஒரு முஸ்லீம் இனத்தை சேர்ந்தவரிடமிருந்து அந்த பெண்ணை பெரும்பாடு பட்டு காப்பாற்றியிருக்கிறோம். எல்லைக்கிராமங்களில் எமது இனம் சந்திக்கும் ஆபத்து இந்த மறவன்புலவு போன்ற கழி.....லால் திட்டமிட்டு மறைக்கப்பட்டு பிள்ளைப்பூச்சிகள் எல்லாம் பெரிய கொடுக்கு முளைத்த தேள்கள் போல் உருவப்படுத்தப்படுகிறார்களோ என்று தோன்றுகிறது
  13. கட்டுரையாளர் மாகாணசபை கிடைக்கும்வரை பௌத்த புத்தர்சிலை சந்துக்குச்சந்து வைக்கப்படுவதை விரும்பச்சொல்கிறார். நல்லதுதானே ஈழத்தமிழர்கள் அவர்களது குடிப்பரம்பல்கள் சிதைந்து எல்லா மாவட்டங்களிலும் சிறுபான்மையானால் அதற்க்கு பிறகு மிக இலகுவாக மாகாணசபை கிடைத்துவிடுமே. சிங்களவனே தங்கத்தட்டில் வைத்து தந்து விடுவான் அதற்கு சிம்பிளாக இந்தியா தனது இனிஷியலையும் போட்டுக்கொள்ளலாம். கடும் தந்திரோபாயம்
  14. கிருபண்ணை பகிடிக்கு சொல்லவில்லை நீங்கள் இறங்குவதென்றால் நானும் இறங்கத் தயார். சிங்கை டாலர்களில் தட்டிவிடலாம்
  15. உவங்கள் LKY இன் தமிழ் வெர்சன், இதற்கு ஒரு படி மேலே போய் விமல் வீரவன்ச சிங்கள/ அகில இலங்கை வெர்சன்களை போன தேர்தலில் அறிமுகப்படுத்தியவர் LKY (கோட்டபாய) மட்டும் போதாதென்று மஹதீரும்(மஹிந்த) சேர்த்து அறிமுகப்படுத்தப்பட்டவர். அந்தோ பரிதாபம் இரண்டும் கப்புட்டாசுடன் சேர்ந்து கும்மியடித்து மூச்சிழுத்துக்கொண்டிருந்த இலங்கை பொருளாதாரத்தின் வென்டிலேட்டரை புடுங்கி ஒரேயடியாக கோமாவுக்கு கொண்டுவந்துவிட்டு தலைதெறிக்க ஓடியது சரித்திரம்
  16. இந்த அரைப்பை***** மெதுவாக சாதிய ஒடுக்குக்குமுறை என்று கூவிக்கொண்டு புதிய இந்திய இறக்குமதி சாதிகளை திணிப்பதை இவரது காணொளிகளில் காணலாம். பொதுவாக இலங்கை தமிழர்களுக்கு முற்றிலும் சம்பந்தமற்ற பெரியார் ,அம்பேத்கர் போன்ற பாரத் மாத்தாக்கியின் கும்பலை இங்கே ஈழத்தமிழர்கள் தலையில் கட்டமுனைவதுடன் தலித், திராவிடம் முதலிய முற்றாக அந்நியோநியமான சொற்களை இவரது கருத்துக்களில் காணலாம். ஈழத்தில் தமிழ்நாட்டைவிட ஒப்பீட்டளவில் காணாமலேயே போய்க்கொண்டிருக்கும் சாதிய ஏற்றத்தாழ்வுகளை கொம்புசீவி விட்டு புதிய சாதிய வகுப்புவாதங்களை கையிலெடுக்க ஏவிவிடப்பட்டுள்ள RAW இன் கைப்பிள்ளை தான் இவர். சமீபத்தில் மறவன் புலவு ஒரு காணொளியில் ஒடுக்கப்பட்ட மக்கள் கோவிலுக்குள் போகமுடியாது ஆனால் கோவில் அர்ச்சகர் ஒரு ஒடுக்கப்பட்ட இனத்தை சார்ந்தவர் என்று உளறியிருந்தார். அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று அரசாணை பிறப்பித்து சாதியம் அகற்றும் நிலையிலிருக்கும் கூட்டத்தின் கைப்பிள்ளைகள் அவர்களது எஜமானர்களை விட நாகரீகமடைந்திருக்கும் மக்கள் கூட்டத்திடம் சாதியஅடக்குமுறைகளை களைந்தெறிய இறக்கிவிடப்பட்டிருப்பதுதான் காலக்கொடுமை. இப்பத்தி மூலம் தமிழர்களிடம் சாதியக்கட்டமைப்பு இல்லை என்பதை நான் நிறுவ முற்படவில்லை ஆனால் எமக்கு பாடமெடுப்பவருக்கு அதற்குரிய தகுதி தராதரம் இருக்கவேண்டுமல்லவா
  17. எந்த விசாவில் வருகினம்...? ஏற்கனவே அங்கே ஸ்டூடன்ட் விசாவில் வந்தவர்கள் உழைத்துக்கொண்டே படிக்கமுடியாமல் மனிசி/மனிசனாரையும் டிபெண்டண்ட் ஆக கூட்டி வந்து முழுநேரம் அவர்களை உழைக்கவிட்டும் அதுவும் கூட காணுதில்லை என்று தலை தலையாக அடிச்சு வீடியோ போட்டுக்கொண்டிருக்கினம். ஒருவேளை ரிஷி சுனக் வந்து ஒட்டுமொத்தமாக படலையை திறந்துவிட்டாரோ ....?
  18. அதெல்லாம் சரி அண்ணை ஊரில ஜீ எஸ், இன்சூரண்ஸ் கம்பெனியில் வேலை செய்தவன் இப்படி கண்டது கடியதெல்லாம் புஸ்ஸு புஸ்ஸு என்று குடும்பத்தோட கிளம்பி வந்து ஹீத்ரோவில் நிண்டு பேஸ்புக்கில் படம்போடுதுகள். இலங்கைக்கு மட்டும் ஸ்பெஷல் ரூட் ஏதும் யு.கே வில் திறந்து விட்டிருக்கினமா. சொன்னால் நாங்களும் உங்கட புண்ணியத்தில் யு கேவிற்கு விசிட் அடிப்போமில்ல
  19. ஏய் ....உங்களுக்கு உழைத்து சாப்பிடும் எண்ணமே இல்லையா ... எப்ப பாரு யாரிடம் கையேந்தலாம் என்று ஒரு தட்டை காவிக்கொண்டு, அதில பிச்சை விழும்போது செலிபிரேஷன். G7 இல் இப்பதான் நாட்டை இணைத்துப்போட்டு வாறன் என்ற கணக்கா கௌரவ ஹைகோர்ட் வேற. இந்த எம்.பி, மந்திரி மண்ணாங்கட்டிகளின் செல்வாக்கு, பரிந்துரை மூலம் அரச உத்தியோகம் பெற்றவர்களுக்கெல்லாம் தேடி தேடி சூடு விழுகுதாமே. ஊரிலிருந்து பட்சி சொல்லுது
  20. சிவனாலய இடிப்புக்கும் அருட்தந்தை தான் எதிர்ப்பு தெரிவிக்கவேண்டியிருக்கிறது மறவன் சச்சி எங்கே மாடு மேய்க்கிறாரோ தெரியாது.
  21. நாங்கள் முள்ளிவாய்க்காலை பரிசாக தந்த பீல்ட் மார்ஷலுக்கே வாக்கு குத்தோ குத்து என்று குத்தி பூரிச்சு நிண்டனாங்கள். முள்ளிவாய்க்காலின் கூட்டுக்களவாணிகளில் ஒருத்தனின் வாலை பிடித்துக்கொண்டு அரசியல் செய்யும் கூத்தாடிகளையே அரசியல் தலைவர்களாக வைத்துக்கொண்டு கூத்தடிப்பவர்கள். எங்களுக்கு முள்ளிவாய்க்காலாவது ஹைகோர்ட்டாவது ...சும்மா டயலாக்குக்கு எடுப்பா இருக்கும் என்று எடுத்துவிட்டு பிலிம் காட்டுவோம் அம்புட்டுத்தே
  22. அழுக்காக இருப்பவர்கள் உணவினை தயாரிக்கும்போது தானாகவே இயற்கை சுவையூட்டிகள் (அக்குள், நெற்றி கைகளில் இருந்து வரும் வியர்வை மற்றும் அழுக்கான கைகளில் இருக்கும் அழுக்கு படைகள்) உணவில் தானாக கலப்பதால் உப்பு தூக்கலாக உணவை மிகவும் சுவையானதாக மாற்றுகிறது இதன் மூலம் செயற்கை சுவையூட்டிகளிற்கான செலவு உணவகங்களில் குறைக்கப்படுவதுடன் இச்செயற்க்கை சுவையூட்டியின் அரசு மீதான இறக்குமதி செலவீனங்களையும் குறைக்கிறது. இதனையும் சுகாதார அமைச்சு கவனத்தில் எடுப்பது நல்லது. எந்த தைரியத்தில் சொல்கிறோமென்றால் முட்டியை ஆற்றில் போட்டு கொரானாவை குணப்படுத்திய சுகாதாரத்துறை என்பதனால்
  23. இந்தியாவின் வால்களது உசுப்பேத்தல்களை நம்பி மீண்டும் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு ரண களம் கண்டார்களேயானால் இந்த இனம் அழியவேண்டிய இனம் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் எனக்கில்லை
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.