Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜெனீவா தீர்மானத்திற்கு எதிராக யாழ் மாநகர சபையில் தீர்மானம்

Featured Replies

ஜெனீவா தீர்மானத்திற்கு எதிராக யாழ் மாநகர சபையில் தீர்மானம்

ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானத்திற்கு எதிராக யாழ்.மாநகர சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

யாழ் மாநகர சபையின் மாதாந்த பொதுக்கூட்டம் மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா தலைமையில் இன்று செவ்வாய்கிழமை மாலை மாநகர முதல்வரின் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

யாழ்.மாநகர சபை கூடியதும் ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்க கொண்டு வந்த தீர்மானத்தை எதிர்க்கும் பிரேரணை ஆளும் ஈபிடிபி மாநகர சபை உறுப்பினர் கிளாவேடாவேசியரால் கொண்டுவரப்பட்டது

யாழ்.மாநகர சபையின் எதிர்தரப்பினரின் கடும் எதிர்ப்பை அடுத்து வாக்கெடுப்புக்கு விடப்பட்ட நிலையில் 12 இற்கு 8 என்ற வீதத்தில் வாக்கொடுப்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

அப்பிரேரணையில்,

"அமெரிக்க அழுத்தங்கள் இன்றி, நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதை வரவேற்போம்!

தமிழ் பேசும் மக்களின் அரசியலுரிமை பிரச்சினைக்கான தீர்வு குறித்து நாம் கொண்டிருக்கும் நடைமுறைச்சாத்தியமான வழிமுறையினையும் உள்ளக்கியதே நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளாகும்.

ஆகவே, எமது மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்கும் நோக்கில் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு நாம் வெளிப்படையாகவே கூறிவந்திருக்கின்றோம். அமெரிக்கத்தீர்மானம் நிறைவேறுவதற்கு முன்பாகவே நாம் இந்த நிலைப்பாட்டை எடுத்திருந்தோம்.

அமெரிக்கத் தீர்மானம் நிறைவேற்றப்படாமல் போயிருந்தாலும் எமது மக்களுக்கான அரசியல் தீர்வை அடைவதற்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற எமது நிலைப்பாட்டில் மாற்றம் இருந்திருக்காது.

இனமுரண்பாட்டுச்சூழலை வளர்த்துக்கொண்டு எமது மக்களின் அரசியலுரிமைப் பிரச்சினைக்கு தீர்வு கண்டுவிட முடியாது.

இதுவே காலம் எமக்கு கற்றுத்தந்த அனுபவங்கள். நடைமுறை யாதார்த்தங்களும் இதுவே. இந்த யதார்த்தங்களை உணர மறுத்த காரணத்தினாலுமே கடந்த காலங்களில் அரசியல் தீர்வுக்காக எடுத்து வந்த அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்திருந்தன.

ஆகவேதான் அனுபவங்களை படிப்பினைகளாக ஏற்றுக்கொண்டு இன சமூக ஐக்கிய சூழலை பாதுகாத்துக்கோண்டே தமிழ் பேசும் மக்களின் அரசியலுரிமை பிரச்சினைக்கு நாம் தீர்வு காணவேண்டியுள்ளது.

ஆனாலும் இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானம் இனங்களை கூறு போடுகின்றது. இன ஐக்கிய சூழலை திட்டமிட்டு சிதைக்கிறது. இனங்களுக்கிடையிலான பகமையுணர்வை வளர்க்கின்றது.

ஆளும் கட்சி அரசியலுரிமை பிரச்சினைக்கு தீர்வு காண முற்படும்போது எதிர்க்கட்சிகள் அதற்கெதிராக கிளர்ந்தெழும் கடந்தகால அரசியல் குழப்பங்களையே அமெரிக்கத் தீர்மானத்தின் அழுத்தங்கள் இங்கு திட்டமிட்டு உருவாக்குகின்றன.

ஆகவே, சர்வதேச சமூகத்தின் அனுசரணைகளை மட்டும் வரவேற்கும் நாம் எமது மக்களின் நலன் கருதி அமெரிக்க தீர்மானத்தின் அழுத்தங்களை நிராகரிப்போம். இதேவேளை நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் நாம் கோருகின்றோம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது

இதேவேளை, மாநகர சபை உறுப்பினர் சு.நிசாந்தன் பதவி நீக்கப்பட்டதை அடுத்து அவரது இடத்திற்கு யாழ்ப்பாணம் தெரிவத்தாட்சி அலுவலரால் நியமிக்கப்பட்ட செல்வராசா இரமணன் புதிய மாநகர சபை உறுப்பினராக இன்றைய கூட்டத்தில் கலந்துகொண்டார்.

jaffna2(20).jpg

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/38400-2012-03-27-18-16-31.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜெனீவாவில இருக்கிற பப்ளிக் கக்கூஸ் இந்த "மாநகர சபை" இலும் பார்க்க விலை கூடியது. 

சிறி லங்கா பிச்சைஸ் பயங்கர யோக்கர்ஸ். 

அடக்குமுறைக்குள் சிக்கியுள்ள மக்கள், அதிகாரத்தை ஆராதித்து கையை மாத்திரம்தான் தூக்கலாம்.

அவர்களைச் சொல்லிப் பிழையில்லை.

  • தொடங்கியவர்

ஆகவே, சர்வதேச சமூகத்தின் அனுசரணைகளை மட்டும் வரவேற்கும் நாம் எமது மக்களின் நலன் கருதி அமெரிக்க தீர்மானத்தின் அழுத்தங்களை நிராகரிப்போம். இதேவேளை நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் நாம் கோருகின்றோம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இது திருமதி பற்குணராசா அவர்களால் தமது விசுவாசத்தை காட்ட அவர்களின் கட்டளைப்படி நடாத்தப்படும் நாடகம். மாநகரசபையின் தீர்மானம் ஒருவகையில் செல்லாக்காசு.

இது திருமதி பற்குணராசா அவர்களால் தமது விசுவாசத்தை காட்ட அவர்களின் கட்டளைப்படி நடாத்தப்படும் நாடகம். மாநகரசபையின் தீர்மானம் ஒருவகையில் செல்லாக்காசு.

இவற்றையும் சர்வதேச மட்டத்தில் கொண்டு செல்ல வேண்டியது புலம்பெயர்ந்தவர்களின் பொறுப்பு.

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தின் பாரிய இடம்பெயர்வு நடந்தவேளை அப்போதைய ஐ நா செயலாளராகவிருந்த கோபி அனன் அவர்கள் சிங்களத்தின் அத்துமீறல் பற்றிக் கருத்து வெளியிட்டிருந்தார். அவ்வேளையில் சிங்களத்தின் எடுபிடியாக வெளிநாட்டலுவ்ல்கள் அமைச்சராக இருந்த லச்சுமணன் கதிர்காமு கூறிய கருத்து எதுவெனில் ஐ நா தமது விடையங்களான மலேரியா நுளம்புக்கு மருந்து தெளிப்பதுடன் நின்றுவிடவேண்டும் மேலதிகமாக இதுபற்றிப்பேசக்கூடாது என. அதுபோல் யாழ் மாநகரசபை மலசலகூடங்களை அமைத்தல் குப்பை கூட்டுதல் இவற்றோடு நின்றுவிடல்வேண்டும் மேலதிகமா ஏதாவது செய்யிறம் எண்டு கண்ட இடங்களை நாறடிக்கக்கூடாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடக்குமுறைக்குள் சிக்கியுள்ள மக்கள், அதிகாரத்தை ஆராதித்து கையை மாத்திரம்தான் தூக்கலாம்.

அவர்களைச் சொல்லிப் பிழையில்லை.

உண்மை தப்பிலி.  சுத்தவர துப்பாக்கியுடன் நிற்கும் போது இது அந்த காடைகளை அமைதிபடுத்தும் செயல் தான். 

ஸ்டில் ஒரு செல்லாகாசு தீர்மானம். 

அடித்தால் நோவை தாங்காமல் சீவராசிகள் எல்லாமே வேதனையில் அலறும். தமிழன் அடிவாங்கினால் இனிமையாக இருக்கிறது என்று கூறி சிரிக்கிற அளவுக்கு அவர்களை முட்டாள்களாக மாற்றி அமைத்துவிட்டான் சிங்களவன்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா மிருகங்களும், வாலை ஆட்டும்போது, தலை கொஞ்சம் எண்டாலும் ஆடும்!

ஆனால் இந்த மிருகங்கள்,விசேட பயிற்சி எடுத்தவை போலும்!

தமிழ் மண்ணில் ஆக்கிரமிப்புச் சக்திகள், ஒட்டுண்ணிகள், iகைக்கூலிகள் இருக்கும் வரை இந்த நிலை நீடிக்கும். இதை காட்டுமிராண்டி ஜனநாயகம் என்பதே பொருத்தம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.