Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களும், எருமைகளும், ஐ.நா. அவையும்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலி வெறுப்பு என்பது இரண்டு வகையாக தமிழனை ஆட்கொள்கின்றது.

1, புலியால் ஆன தனிப்பட்ட பாதிப்பு.

2, சிங்கள விசுவாசத்தால் வரும் இலாபத்தின் பாதிப்பு.

முதலாவது வகைக்கு பெரும்பான்மையுடன் முரண்டுபிடிக்க போதிய சக்தி இல்லாமையால் அது எப்பவாவது வந்துட்டு போவது. ஆனால் இந்த இலாபம் தரும் 'பாதிப்பு-' ஒரு சொறிநாயைப் போன்றது, தன் சக்திக்கு அடிமட்டுமே வாங்ககூடிய தளத்திற்கும் துணிந்து செல்லும். சொன்னதையே ஆயிரம் முறை திருப்பித் திருப்பியும் சொல்லும்.

இந்த வகைக்கு பொய் ஒன்றே ஆதாரமாகும்.

டக்ளஸ் வகையின் புலிஎதிர்ப்பு அடிப்படையாய்க் கொள்வதென்ன? மக்களின் பெரும்பான்மை சிங்கள ஆட்சியின் கரங்களையே பற்ற காத்திருப்பவர்கள் என்பது. இந்த வசனத்தில் உண்மையை அவர் சொல்லவந்தால் 'பெரும்பான்மை மக்கள் கருத்திற்கு எதிராகுபவன் ஜனனாயக விரோதி' என்ற மகுடத்தை தானாகவே அணிய வேண்டிவரும்.

அதேவகைதானே இங்கு அர்யுனின் வாதமும். 80 களில் நாட்டைப் பிரிந்தவர் அவர். நாமோ அதன் பிறகும் 20 ஆண்டூகளுக்கு மேல் அந்த மண்ணில் வாழ்ந்தவர்கள்; நாம் அந்த மக்களின் மனநிலை இதுவென்று சொல்வதை முற்றாக மறுக்கின்ற இவர், இவரது கருத்தும் எத்துணை சிறுபான்மையானது இந்தக் களத்தில் கூட. இருந்தும் இந்த நியாயத்தை சிறிதும் சீர்தூக்காமல் பூனை தன் கண்ணை மூடி பூமியை இருட்டு என்று சொல்வது போல் கதை அளப்பது எத்துணை சிறுமை!

"புலிகள் ஆட்சியில் வாழ்ந்த மக்கள் சிங்கள ஆட்சியை யாழ்பாணத்தில் கடவுளைப்போல் நேசித்தார்கள்" என்று சொல்லி இருந்தது அறிவுநுட்பவியலா? இல்லை வயித்தெரிச்சல் நிலையா? இல்லை டக்ளஸ் பாதையில் போகும் பிழைப்புநுட்பவியலா?

பிறர் வாதங்களை வாதமுறை கொண்டு வாதாடா முடியாமல் கருத்தாளனின் அறிவை வசைபாடுவது ஒரு அறிவுடமைக்கு இது செயலாகுமோ? இந்த நிலை அடுத்தவனின் காலை பிடித்து வாழ்கின்ற ஒருவனிடம் அவன் கல்வியானது அவன் தலைகீழான குணத்தை மாற்ற முடியாது என்ற நிலமையை அல்லவா விளக்குகின்றது!

மிகுதியான மனிதப் பண்பு கொண்டு விளங்குபவன், கடவுளினது சிந்தனைத்திறனையே தான் கொண்டு இருக்கின்றேன் என்பதை தானே உணர்ந்திருந்தால் கூட மக்கள் பெரும்பான்மையின் கருத்தை விரோதிக்கும் ஒரு கருத்தை அவன் தூக்கிப் பிடிக்க மாட்டான். அதுவே மக்களாய் வாழவேண்டியவன் அடிப்படைக் குணம்!

இப்படிப்பட்ட குணத்தை இழந்திருக்கும் ஒருவனது புத்தி கருத்தாய் தங்கத்தையே கொட்டினாலும் அதை குப்பைக்குள் கொட்ட வேண்டியது மக்கள்-கடன் என்றே சொல்ல வேண்டும்!

தன்னை பிறன் என்னவாய் வைக்கின்றான் என்ற அறிவு இல்லாதவன் போதனை தனிய தானே கதைக்கின்ற வேதனை போன்றது!

Edited by தேவன்

  • Replies 54
  • Views 3.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

முளைக்க முதல் தமிழிழ பிரதமர் என்று தனது பத்திரிகையில் தனது படத்தை போடுகின்றார் என்றால் உதை விட சீலைய கழட்டி போட்டு நடுரோட்டில பிச்சை எடுக்கலாம்.

நாட்டில இருக்கின்ற மக்கள் தான் எதையும் தீர்மானிக்க வேண்டும் ,அங்கிருப்பவர்களுக்கு இப்படி ஒரு ஆள் இருப்பதே தெரியாது ,அதற்குள் தான் பிரதமராம் நீங்களும் அவர் விடிவு எடுத்து தருவார் என்று பின்னால போங்கோ ,

காருக்கு பின்னால ஓடும் நாயின் கதைதான் .

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமை அமைச்சர் ருத்ரகுமாரனை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சிறீலங்காவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலான ஒரு அமைப்பாக உருவெடுத்துவருகிறது என்றும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் அதை அங்கீகரிப்பதற்கு தயாராகிவருவதை அரசாங்கம் சாதாரணமான விடயமாக எடுத்தக்கொள்ளக் கூடாது

என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்களையும் தனிநபர்களையும் வைத்து நாடுகடந்த அரசாங்கத்தை இல்லாதொழிப்பதற்கு மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோற்றுப் போய்விட்டதை அரசாங்கம் ஒப்புக்கொண்டு அந்த அமைப்பின் தலைமை அமைச்சர் என்று சொல்லிக் கொள்ளும் ருத்திரகுமாரனை கைது செய்வதற்கான நடவடிக்கையில் அரசாங்கம் உடனடியாக இறங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=100510&st=0&gopid=747139&

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

லா சப்பலில துக்ளக்கை தூக்கி நடுவீதியில் எரிப்பது ,

வார இறுதியில் முகம் முழுக்க மேக்கப் அப்பி "வீழமாட்டோம் நாம் வீழமாட்டோம்" என நடனமாடுவது,

இறுதி சண்டையென ஒவ்வொரு வருடமும் கடை வைத்திருப்பவர்களிடம் போய் ஐந்து வை பாத்து வை அடாவடித்தனம் பண்ணி காசு பறித்து அவர்கள் கடைகளுக்கு முன் சுப்பர் மார்கெட் திறப்பது ,

வீட்டிற்கு ஒன்று, பின்னர் இரண்டாகி, பின் வயது வேறுபாடில்லாமல் ஓட்டுமொத்ததையும் தூக்கி மூன்று மாத பயிற்சியுடன் முன்னரங்கில் விட்டு அவர்கள் சாக, அவர்களை மாவீரராக்கி அவர்கள் பெயரில் உதைபந்தாட்ட போட்டிகள் வைத்து புலம் பெயர்ந்த தமது பிள்ளைகளுக்கு விருது வழங்குவது,

ஆடிக்கொருக்கா ஆவணிக்கொருக்கா ஊர்வலம்,பேரணி ,ஒன்றுகூடல் என்று சப்பட்டை ஒன்றை பொக்கேட்டிற்குள் வைத்துக்கொண்டுபோய் புலிக்கொடியை தூக்கிவிட்டு விட்டு வருதல்,

இதிலோன்றை செய்யலாம்.

அண்ணரை யாழ் கள சார்பில் அது, இது, எது போட்டிக்கு அனுப்பலாம். 

சளைக்காமல் வருட கணக்கில் பதில் சொல்லமாட்டாரம்.  

பாவம், அண்ணர், கள்ள தீனியையும், ஆசியன் டிரிக் யூனையும்  படிச்சு மண்டை கலங்கி போய் இருக்கிறார் போல. 

அண்ணா, உங்களுக்கு உலக போர் ஒன்றில் இறந்த முதல் உங்கட கனடா  இராணுவத்தினன் ஒரு குழந்தை போராளி என்று தெரியுமா? 

அது சரி, உங்கட ஸ்ரீ லங்கா குப்பதானுகளை நூறு டாலர் சம்பளம், செத்தா மனுசிக்கு நூறு டாலர், ஆத்தாக்கு ஐம்பது டாலர் என்று ஏமாற்றி அறுபதாயிரம் சிறாரை பலிகொடுக்கவில்லையோ?  பின் சிங்கள குழந்தை போராளிகளை கள்ள அட்டை போட்டு வயதானவர்களா காட்டவில்லையா? 

  • தொடங்கியவர்

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமை அமைச்சர் ருத்ரகுமாரனை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சிறீலங்காவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலான ஒரு அமைப்பாக உருவெடுத்துவருகிறது என்றும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் அதை அங்கீகரிப்பதற்கு தயாராகிவருவதை அரசாங்கம் சாதாரணமான விடயமாக எடுத்தக்கொள்ளக் கூடாது

என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்களையும் தனிநபர்களையும் வைத்து நாடுகடந்த அரசாங்கத்தை இல்லாதொழிப்பதற்கு மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோற்றுப் போய்விட்டதை அரசாங்கம் ஒப்புக்கொண்டு அந்த அமைப்பின் தலைமை அமைச்சர் என்று சொல்லிக் கொள்ளும் ருத்திரகுமாரனை கைது செய்வதற்கான நடவடிக்கையில் அரசாங்கம் உடனடியாக இறங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

http://www.yarl.com/...=0&gopid=747139&

இப்ப உங்கட ஆட்களை நம்பாமல் சம்பிக்க ரணவக்க வை நம்ப தொடங்கி விட்டீர்கள் போல கிடக்கு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்ப உங்கட ஆட்களை நம்பாமல் சம்பிக்க ரணவக்க வை நம்ப தொடங்கி விட்டீர்கள் போல கிடக்கு.

என்ன செய்வது? உங்களை எல்லாம் நம்பவைக்க அங்கே இருந்தான இறக்குமதிதானே பெறுமதியானதாய் கிடக்கின்றது!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.