Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

427 மில்லியன் டொலர் கடன் வழங்க சர்வதேச நாணய நிதியம் அங்கீகாரம்

Featured Replies

இலங்கைக்கு 427 மில்லியன் டொலர் கடன் வழங்க சர்வதேச நாணய நிதியம் அங்கீகாரம்

IMF-FUND60X60.jpgபாரிய வர்த்தக பற்றாக்குறை காரணமாக வெறிச்சோடிவரும் அரசாங்க கஜானாவுக்கு முண்டுகொடுக்கும் நோக்கத்தில் சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு 427 மில்லியன் டொலர் கடனை அங்கீகரித்துள்ளது.

இலங்கையின் பொருளாதார மீட்சி 2011 இலும் தொடர்ந்ததாயினும் இலகுவாக கிடைத்த கடன்களும் நிலையான நாணய மாற்றுவீதமும் வர்த்தக மீதி பற்றாக்குறை தொடர்ந்து காணப்பட வழிவகுத்தது என வொஷிங்டனை தளமாகக் கொண்ட சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது.

கடந்த வருடத்திற்கான வர்த்தக மீதி 10 பில்லியன் அமெரிக்க டொலரை எட்டியது. இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஜந்திலொரு பங்காகும். இது குறைந்துவந்து நாட்டின் வெளிநாட்டு ஒதுக்கங்கள் மீது பாதகமான விளைவை உருவாக்கியது.

2009ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு 2.13 பில்லியன் அமெரிக்க டொலரை கடனாக வழங்கியுள்ளது.

நாட்டின் வெளிநாட்டு ஒதுக்கம் பெரிதும் அற்றுப்போயுள்ளது. இதனால் அரசாங்கத்திடம் பணம் இல்லாத நிலைமை தோன்றவுள்ளது.

அரசாங்க ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி அடைவதை அனுமதித்துள்ளது. அத்துடன் இறக்குமதிகளை தூண்டக்கூடிய கடன்களுக்கு உச்ச வரம்பொன்றையும் நிர்ணயித்துள்ளது.

வர்த்தக மீதியை நிதிப்படுத்தவும் கடன்களை திருப்பிச்செலுத்தவும் அரசாங்கம் பெரியளவில் கடன் வாங்க வேண்டிய நிலையில் உள்ளது. இதனால் நாடு கடன் நச்சுவட்டத்தினுள் அகப்படும் ஆபத்தும் உள்ளது. கடன்களை திருப்பிச் செலுத்தாத வங்குரோத்து நிலையை எதிர்கொள்ளவில்லை என அரசாங்கம் கூறியுள்ளது.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/38786--427-.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்க எங்கட சிறி லங்கா வாய்வாளர்கள்?

எங்களுக்கு புலி கிலி மூட்டுரத விட்டு புரபசர் சிறி லங்காவில் இல்லாத பொருளாதாரத்தை பற்றி எழுதலாம். 

சிறி லங்கா பிச்சைஸ் எங்களுக்கு முரண் நகை சொல்லிதரிணமாம்.  

  • தொடங்கியவர்

இலங்கை அரசு வாகன இறக்குமதி மீதான வரிகளை அதிகரித்தமை போதுமானது இல்லையென அனைத்துலக நாணய நிதியம் தெரிவித்தது

இலங்கை எதிர்கொள்ளும் வணிகப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு வாகனங்களின் மீதான வரி அதிகரிப்பு மட்டும் போதுமானது அல்லவென, அனைத்துலக நாணய நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி கோஷி மாதை தெரிவித்தார்.

வட்டிவீதத்தை இலங்கை அதிகரிக்கவேண்டுமென அவர் கருத்து வெளியிட்டார்.

இலங்கையில் ஏற்றுமதிகளின் அளவை விட இறக்குமதிகளின் அளவு மிக வேகமாக அதிகரித்துள்ள நிலையில், இறக்குமதிகளின் அளவைக் குறைக்கும் நோக்குடன் கடந்த வாரம் இலங்கை அரசு வாகனங்கள் மீதான இறக்குமதி வரியை அதிகரித்தது.

அந்த வரி குறித்து இலங்கை அரசுடன் தாம் பேச்சு நடத்தவில்லையெனவும், வரி அதிகரிக்கப்பட்டமை தமக்கு ஆச்சரியத்தைத் தந்ததெனவும் கோஷி மாதை கூறினார்.

வாகனங்களின் இறக்குமதி அதிகரித்தமை பிரச்சினைக்கு ஒரு காரணமென்பதால், அது முன்னேற்றகரமான நடவடிக்கையெனவும், ஆனால், வரிகளில் மாற்றம் செய்வது இத்தகைய பிரச்சினைக்கு சரியான தீர்வாக அமையாதெனவும் அவர் தெரிவித்தார்.

http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=11603

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.