Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐரோப்பாவின் பொருளாதாரம்: தொடர்கிறது தற்கொலைகள்

Featured Replies

ஐரோப்பாவின் பொருளாதாரம்: தொடர்கிறது தற்கொலைகள்

ஐரோப்பாவை தாக்கிய பொருளாதார நெருக்கடி தனது மோசமான பிரதிபலிப்புக்களை இப்போது மெல்ல மெல்ல காட்ட ஆரம்பித்துள்ளது.

தனது கட்டிட நிறுவனம் வங்குரோத்து அடைந்துவிட்ட காரணத்தால் 59 வயதுடைய இத்தாலியர் ஒருவர் தனது தலையில் தானே வெடி வைத்து மரணமடைந்துள்ளார். இவர் எழுதிய கடிதத்தில் தனது தொழில் முடிவுக்கு வந்துவிட்டதால் வாழ்க்கையை முடிப்பதாக எழுதியுள்ளார்.

இதுபோல 78 வயது பெண்மணி ஒருவர் தனது ஓய்வூதியம் புதிய பொருளாதார மீதம்பிடிப்பால் குறைவதைத் தாங்க முடியாது தற்கொலை செய்துள்ளார்.

மறுபுறம் கிரேக்கத்தின் தலைநகர் எதென்சில் 77 வயதுடைய நபர் ஒருவர் பாராளுமன்றின் முன்பாக தலையில் வெடி வைத்து மரணித்துள்ளார். புதிய பொருளாதார நெருக்கடி, அதை சந்திக்க முடியாத விரக்தி, குடும்பங்களின் கஷ்டம் இவைகளை சகிக்க முடியாமல் தற்கொலை செய்துள்ளார். இதேபோல கடந்த திங்கள் புகைப்படம் பிறேம் போடும் தொழிலாளி ஒருவர் தற்கொலை செய்துள்ளார்.

பொருளாத நெருக்கடியும், அரசுகளின் மீதப்படுத்தலும், பெர்துத் துறை கொடுப்பனவுகளில் வீழ்ச்சியும், வேலை இழப்பும் ஐரோப்பா முழுவதும் தற்கொலைகளுக்கு மக்களை அழைத்து செல்வது கவனிக்கத்தக்கது.

http://www.alaikal.com/news/?p=101877

  • கருத்துக்கள உறவுகள்

ஏனய்யா பயப்படுத்துகிறீர்?

உங்கள் இது போன்ற பதிவுகள் தொடர்ந்தால்....

அழுதிடுவன்... :lol::D .

  • தொடங்கியவர்

எங்கள் அடுத்த தலைமுறையை நினைத்தால் கவலை. காரணம் அவர்கள் புலம்பெயர் நாடுகளில் மூன்றாம் தர பிரசைகள். அவர்களுக்கு என்று திரும்பி போக தாய் நாடு என்று ஒன்றும் இன்றுவரை இல்லை.

எனவே பொருளாதாரம் மேலும் சரியும் பொழுது இனவாதம் நிச்சயம் அதிகரிக்கும். அப்பொழுது எமது பிள்ளைகள் எம்மைப்பார்த்து ( நாம் உயிருடன் இருந்தால்) கேட்கக்கூடும் : ஏன் சொந்த நாட்டைவிட்டு ஓடி வந்தீர்கள்? என்று.

இவ்வாறு நடக்காவிட்டால் மகிழ்ச்சி அடைவேன். ஆனால், நடக்காது என யாரும் உறுதி அளிக்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

எமது அடுத்த தலைமுறைக்கு அப்படி வருமா எனத்தெரியவில்லை. அவர்களிடம் படிப்பும் கடின உழைப்பும் இருப்பதால் தப்பி விடுவார்கள் என்று தான் நினைக்கின்றேன். ஆனால் நீங்கள் குறிப்பிடுவதுபோல் ஒரு நிலையை நானும் கவனித்தேன். அதாவது இங்குள்ள வெள்ளைச்சமுதாய இளைய தலைமுறையினர் படிப்பு மற்றும் ஏனைய முக்கிய விடயங்களை மறந்து தான் தோன்றித்தனமாக எல்லாம் எல்லோருக்கும் கிடைக்கும்தானே என்ற மனப்பாங்குடன் வளர்வதைப்பார்த்திருக்கின்றேன். அந்தவகையில் எம்மைப்போன்று பிற சமூகங்கள் மேலுக்கு வந்து அவர்கள்வேலையற்ற பண வசதியற்று பாதிக்கப்படும்போது பழி வாங்குதல்களும் வன்முறைகளும் வெடிக்கக்கூடும்.

என் பிள்ளைகள் என்னைப்பார்த்து அப்படி ஒரு கேள்வியைக்கேட்கமாட்டார்கள். காரணம் தாயகத்துக்கான எனது கடின உழைப்பை அவர்கள் அறிவர்.

  • தொடங்கியவர்

எனது நண்பர் ஒருவர், அவர் சைவம், மனைவி கத்தோலிக்கர்.

ஒரு இத்தாலிய பகுதியில் வீடு வேண்டி சென்றனர். மூன்று பிள்ளைகளையும் கத்தோலிக்கர்களாக்கி பாடசாலையில் சேர்த்தார். மூத்த பிள்ளை, மகள் (வகுப்பில் இவர் ஒருவரை தவிர எல்லோரும் வெள்ளை) வகுப்பில் தனக்கு கையில் புத்தகத்தை தர மறுத்தாராம் ஒரு சக மாணவி. காரணம் - நிறம். நண்பர் தமிழர்களை விட்டு தள்ளிப்போய் இருக்க விரும்பினார், நல்ல பாடசாலையில் இளைக்க விரும்பினார்.... இப்பொழுது கவலைப்படுகின்றார்.

இன்னொருவர் தனது இரண்டு வயது மகளை வேலை முடிந்து ஏற்றி வர சென்றபொழுது சக சிறுமி இவரின் பிள்ளையைப்பார்த்து 'தேங்காய்' எனக்கூறியுள்ளார் (மண்ணிற தோல் நிறத்தை குறிப்பிட்டு). அந்த வெள்ளை நிற தோல் கொண்ட தாயோ ஒன்றுமே கூறவில்லை எனக்கவலைப்பட்டார். அந்த தாயிடம் இருந்தே பிள்ளை இதை கூற அறிந்திருக்கும்.

பொருளாதாரம் மோசமடைந்தால் இப்படியான நிகழ்வுகள் நிச்சயம் அதிகரிக்கும்.

  • தொடங்கியவர்

கனடாவில் அண்மைய மத்திய அரசில் வரவு செலவு திட்டத்தை அடுத்து அரசில் வேலை செய்யும் 400,000 பேரில் கிட்டத்தட்ட 12,000 பேரளவில் வேலையால் நீக்கப்படவுள்ளனர். அதிலும் பலருக்கு அந்த வேலையை விட்டுவிட்டு வேறு அரச திணைக்களங்களுக்குள் வேலை தேட சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. திறமையை விட உங்களுக்கு யாரைத்தெரியும் என்பதிலேயே உங்கள் வேலை தக்கவைக்கப்படுமா இல்லை எனத்தெரியும் என்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குத்தெரிந்த ஒருவர்

தமிழாக்களுடன் பேசமாட்டார். சோறுகள் என்பார். தாயகம் இயக்கம் என்றால் வெறுப்பு. அடித்து கதவைச்சாத்துவார்.

ஒரு பிள்ளை பிறந்ததும் பல நூறு மைல்தூரம் தாண்டி தமிழர்கள் இல்லாத இடமாக வீடுவாங்கிச்சென்றார்.

மகன் வளர்ந்ததும் பாடசாலையில் சேர்க்கப்பட்டான். இவன் மட்டுமே வெளிநாட்டினன். ஒருவரும் இவனுடன் விளையாடுவதில்லை. ஒவ்வொரு நாளும் வீடடுக்கு வந்து அழுவான். ஒரு நாள் தகப்பனிடம் கேட்டான். அப்பா என் நிறத்தில் எல்லோரும் இருக்கும் ஊர் எங்கு இருக்கு. அங்கு என்னைப்கொண்டு போங்கள் என்று. பாடசாலைக்குப்போக மறுத்துவிட்டான்.

மீண்டும் இங்கு பரிசுக்கு பக்கத்தில் வந்துள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

.குறிப்பிட்ட அளவு ஜேர்மனியர்கள்.... இப்போது நாடு, விட்டு அவுஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா, பிலிப்பைன்ஸ்? என்று புலம் பெயருகின்றார்கள்.

ஜேர்மன் அரசாங்கம் பிள்ளையை பெறுங்கள் என்று, ஊக்குவிக்க... ஒரு பகுதி, நாடு மாறுவது... பெரும் பிரச்சினை.

நான் ஈழம் கிடைத்தால்... மட்டுமே, நாடு மாறுவேன். இல்லாவிட்டால், இங்கேயே.... மண்டையை போட வேண்டியது தான்.

  • கருத்துக்கள உறவுகள்

.நான் ஈழம் கிடைத்தால்... மட்டுமே, நாடு மாறுவேன். இல்லாவிட்டால், இங்கேயே.... மண்டையை போட வேண்டியது தான்.

நானும் தான்.

தற்போதைய நிலையில் அக்கரைக்கு இக்கரைபப்பச்சை விளையாட்டு மட்டுமே இவை. பிரச்சினை சர்வதேசத்தில் எல்லோருக்குமே.

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

நானும் தான்.

தற்போதைய நிலையில் அக்கரைக்கு இக்கரைபப்பச்சை விளையாட்டு மட்டுமே இவை. பிரச்சினை சர்வதேசத்தில் எல்லோருக்குமே.

சரியாகச் சொன்னீர்கள் விசுகு.

அப்படி மாறிச்சென்ற ஜேர்மன்காரர், அங்கும் வாழ்க்கையில் எதிர் நீச்சல் போடமுடியாமல், இருக்கின்ற கைக்காசையும் செலவழித்து... ஏமாற்றத்துடன் திரும்புவதை...

ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில்... அழகாக காண்பிப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை, நான் கூடிய விரைவில் நாட்டுக்குத் திரும்ம்பிப் போய்விடுவேன். ஈழம் கிடைத்தால் மட்டுமே நான் நாட்டுக்குத் திரும்புவேன் என்பது ஒருவரை ஒருவர் ஏமாத்துவதாக அர்த்தம்.

  • தொடங்கியவர்

அரசியல் தீர்வு ஒன்று வந்தால் .... செல்லலாம்.

பிரித்தானியாவில் பொருளாதார நெருக்கடியால் கடந்த வருடங்களில் சிறுவர்கள், குழந்தைகள் உள்ள பல குடும்பங்கள் தற்கொலை செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

  • தொடங்கியவர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.