Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு...

Featured Replies

உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு...

ஜெனீவாவில் கூடிய ஐ.நா. மனித உரிமை ஆணையம் இலங்கை அரசுக்கு எதிராக நிறைவேற்றியுள்ள கண்டனத் தீர்மானம் கண்டு அதிபர் ராஜபட்சயும் அவரது அமைச்சர்களும் மிகக்கடுமையான கோபமும் ஆத்திரமும் அடைந்துள்ளனர்.

இதைக் காணும்போது பழந்தமிழ்ப் பாடல் ஒன்றுதான் நினைவுக்கு வருகிறது. குரங்கு ஒன்று தென்னை மரத்தில் ஏறியது, கள்ளிறக்குவதற்காக அதில் கட்டப்பட்டிருந்த கலயத்தில் இருந்த கள்ளைக் குடிப்பதற்காகத் தனது தலையை உள்ளே நுழைத்து ஓரளவு குடித்த நிலையில் உள்ளேயிருந்த தேள் ஒன்று அதைக் கொட்டிவிட்டது. அதுவே ஆயிரம் சேட்டை செய்யும் குரங்கு. கள்ளைக் குடித்ததால் ஏறிய போதை ஒருபுறம், தேள்கடியினால் ஏறிய விஷம் ஒருபுறம், அவற்றைப் பொறுக்க முடியாத அந்தக் குரங்கு ஆடிய வெறி ஆட்டம் எப்படி இருந்திருக்கும் என்பதை அந்தப் பாடல் சொல்லுகிறது. அதைப்போன்ற நிலையில் சிங்கள வெறியர்கள் ஆடாத ஆட்டம் எல்லாம் ஆடிக்கொண்டிருக்கிறார்கள்.

இந்தத் தீர்மானத்தை இந்தியா ஆதரித்தது என்பதற்காக மட்டக்களப்பில் இருந்த மகாத்மா காந்தி சிலையின் தலையை உடைத்து நொறுக்கியிருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, உலக சாரணர் இயக்கத்தின் நிறுவனரான ராபர்ட் பேடன்ட் பவல் என்பவரின் சிலையும் சுக்குநூறாக்கப்பட்டுள்ளது. துறவியான விவேகானந்தரின் சிலையையும் அவர்கள் விட்டுவைக்கவில்லை. மிகச்சிறந்த தமிழறிஞரான விபுலானந்த அடிகள், புலவர் மணி பெரிய தம்பி பிள்ளை ஆகியோரின் சிலைகளும் அடியோடு தகர்க்கப்பட்டுள்ளன.

தனது தேசத் தந்தையின் சிலைக்கும் இதர பெருமக்களின் சிலைகளுக்கும் இழைக்கப்பட்டிருக்கும் இந்த அவமதிப்பைக் கண்டு இந்திய அரசுக்கு நியாயமாக வரவேண்டிய கோபம் வந்ததாகத் தெரியவில்லை. வேறு ஒரு நாடாக இருந்தால் இது மிகப்பெரிய பிரச்னையாக்கப்பட்டிருக்கும்.

இந்தியாவின் இந்தச் செயலற்றத் தன்மை சிங்கள வெறியர்களுக்கு மேலும் மேலும் துணிவை அளித்திருக்கிறது. ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் சிங்களரான கீழ்க்கண்டவர்கள் கலந்து கொண்டனர். எல்லா வகையான இனவெறிக்கும் பாகுபாடுகளுக்கும் எதிரான சர்வதேச இயக்கத்தின் தலைவரும் இலங்கையில் அமைதிக்கான மகளிர் அமைப்பின் தலைவருமான நிமல்கா பெர்ணான்டோ, மனித உரிமை ஆவணங்களைப் பதிவு செய்யும் அமைப்பின் செயல் இயக்குநரான சுனிலா அபயசேகரா, மாற்றுக் கொள்கைகளின் மையத்தின் செயல் இயக்குநர் முனைவர் பாக்கியசோதி சரவணமுத்து, சுதந்திர ஊடக இயக்கத்தின் தலைவரான சுனானந்தா தேசப்பிரியா ஆகியோர் மீது சிங்கள வெறியர்கள் மிகக்கடுமையான கோபம் கொண்டிருக்கிறார்கள்.

ஏனென்றால், மேற்கண்ட நால்வரும் இனத்தால் சிங்களராக இருந்தும் சிங்கள அரசின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக உலக அரங்கில் குரல் கொடுத்தார்கள் என்பதற்காக அவர்களைப் பழிதீர்க்க வெறிகொண்டு திரிகிறார்கள்.

சிங்கள மக்கள் தொடர்பு அமைச்சரான மெர்வின் சில்வா கடந்த மார்ச் 24-ம் தேதியன்று பகிரங்கமாக பின்வருமாறு அறிவித்தார். ஜெனீவாவில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் என்று கூறிக்கொண்ட நான்கு பேரும் இலங்கைக்கு எதிராக பொய்யான தகவல்களைப் பரப்பியுள்னர்.

வெளிநாடுகளுக்குச் சென்று இலங்கைக்கு எதிராகச் செயல்பட்ட மேற்கண்டவர்களின் கை, கால்களைப் பகிரங்கமாக உடைப்பேன். நான் விடுத்த மிரட்டலினால்தான் சுதந்திர ஊடக இயக்கத்தின் தலைவரான சுனானந்தா தேசப்பிரியா 2009-ம் ஆண்டில் இலங்கையைவிட்டு ஓடிப்போனார் என்று வெறித்தனமாகப் பேசியுள்ளார்.

இச்செய்தியை அறிந்த ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் தலைவர் நவநீதம் பிள்ளை உடனடியாக இலங்கையைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்களுக்கு எதிராகப் பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடாது என இலங்கை அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

மேற்கண்ட மனித உரிமை போராளிகளில் நிமல்கா பெர்ணான்டோ, சுனிலா அபயசேகரா போன்றவர்கள் 2009-ம் ஆண்டில் முள்ளிவாய்க்கால் பகுதியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பதைக்கப் பதைக்கப் படுகொலைசெய்யப்பட்டபோது, அதற்கு எதிராகப் பகிரங்கமாக கண்டனக் குரல் எழுப்பினார்கள்.

தமிழ்நாட்டுக்கும் இந்தியாவின் பிறபகுதிகளுக்கும் சென்று இலங்கையில் நடைபெறும் இனப்படுகொலையையும் மனித உரிமை மீறலையும் அம்பலப்படுத்தினார்கள். இதன் விளைவாக, தாங்கள் தங்கள் நாட்டுக்குத் திரும்ப முடியாத சூழ்நிலை ஏற்படும். தங்கள் உயிருக்கு உலைவைக்க முயற்சிகள் நடைபெறும் என்பதை அவர்கள் அறியாமல் இல்லை. ஆனாலும் உண்மையான மனித உரிமைப் போராளிகளாகத் திகழ்ந்து தங்களது மனித நேயக் கடமையை அவர்கள் அஞ்சாமல் செய்தார்கள். அதன் உச்சக்கட்டமாக ஜெனீவாவுக்கும் சென்று மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் உண்மைகளைக் கூற அவர்கள் அஞ்சவில்லை.

இதைக் கண்டு கடும் கோபம் அடைந்த ராஜபட்சயின் அரசு தனது கட்டுப்பாட்டில் உள்ள தொலைக்காட்சி, வானொலி மற்றும் பத்திரிகைகளின் வாயிலாக இவர்களைக் குறித்து படுமோசமான வகையிலும் தேசத் துரோகிகள் என்ற குற்றம்சாட்டியும் பிரசாரம் செய்தது.

இந்த மனித உரிமைப் போராளிகளின் படங்கள் திரும்பத் திரும்ப தொலைக்காட்சியிலும் பத்திரிகைகளிலும் வெளியிடப்பட்டன. அதாவது இவர்களுக்கு எதிரான வன்முறை பகிரங்கமாகத் தூண்டப்பட்டது. அதிலும் ஜெனீவாவில் மார்ச் 22-ம் தேதியன்று இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு இவர்களுக்கு எதிரான ஆத்திரமும் எதிர்ப்பும் உச்சகட்டத்தை அடைந்தன.

இவற்றைக் கண்டு அவர்கள் கொஞ்சமும் அஞ்சவில்லை. பத்திரிகைகளுக்கு அவர்கள் கொடுத்த அறிக்கை ஒன்றினை மனித உரிமைப் போராளிகள் என்ற முறையில் தாங்கள் தங்களுடைய லட்சியங்களுக்கு ஏற்பவும் இலங்கையில் வலிமையான நீதி அமைப்புமுறை நிலவவும் மனித உரிமை மீறல்களுக்கு உரிய தண்டனை வழங்கப்படவும் தொடர்ந்து தொண்டாற்றுவோம் என அறிவித்தனர்.

1930-களில் ஜெர்மன் நாட்டில் ஹிட்லர் என்னென்ன செய்தாரோ அதையே இன்றைக்கு ராஜபட்ச செய்கிறார். 1931-ம் ஆண்டு மார்ச் 23-ம் தேதியன்று ஜெர்மன் நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்திலேயே தனது அரசுக்கு முழு அதிகாரம் வழங்கும் சட்டத்தை ஹிட்லர் கொண்டுவந்து நிறைவேற்றிக்கொண்டார்.

அதை அடுத்து முதலாவதாக கம்யூனிஸ்டுகள் ஒழிக்கப்பட்டனர். இரண்டாவது, பெரிய கட்சியாக சோசியல் டெமக்கிரடிக் கட்சி அடுத்துப் பலியானது. பிறகு தொழிற்சங்கங்கள் ஒழிக்கப்பட்டன.

1933-ம் ஆண்டு செப்டம்பர் 15-ம் தேதியன்று யூதர்களுக்கு எதிரான சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து ஜெர்மனியில் இருந்து வெளியேறும்படி யூதர்களுக்கு ஆணையிடப்பட்டது. வெளியேறாத யூதர்கள் திட்டமிட்ட இனப்படுகொலைக்கு ஆளாக்கப்பட்டார்கள்.

பத்திரிகைச் சுதந்திரம் அடியோடு பறிக்கப்பட்டது. அரசியல் கட்சிகளும் ஒழிக்கப்பட்ட நிலையில் எதிர்க்குரலுக்கு அன்று இடமில்லை. ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்கினார் ஹிட்லர். அதைப்போல ராஜபட்சயும் இன்று இலங்கையில் எதிர்க்கட்சிகளை ஒடுக்கி வைத்துள்ளார்.

இலங்கைச் சுதந்திராக் கட்சியின் தலைவரான சந்திரிகா உயிருக்கு அஞ்சி வெளிநாட்டில் வாழ்கிறார். முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி செயலற்றுக் கிடக்கிறது. ஏன் என்று கேட்பதற்கு யாரும் இல்லாத சூழ்நிலையில் ராஜபட்ச நினைத்ததை எல்லாம் செய்ய முடிகிறது.

சிங்கள அரசின் மிரட்டல்களுக்கு நடுவே ஜெனீவா சென்ற மனித உரிமைப் போராளிகள் தங்கள் தாயகம் திரும்பவும், வருவதைச் சந்திக்கவுமான மன உறுதியுடன் செயல்பட்டனர். அவர்கள்மீது பற்றுக்கொண்ட பலர் தாயகம் திரும்ப வேண்டாம் என அவர்களை வேண்டிக் கொண்டபோதிலும் உண்மையான மனித உரிமைப் போராளிகளான அவர்கள் அவற்றை ஏற்காமல் தாயகம் திரும்பிச் சென்றுள்ளனர். எந்த நேரமும் அவர்களுக்கு எதுவும் நடக்கலாம். அவர்கள் உயிருடன் வாழும் ஒவ்வொரு நாளும் முக்கியமான நாளாக விளங்கும்.

சிங்கள அரசின் எல்லையில்லாத கொலைவெறிக்கு 2004-ம் ஆண்டு முதல் இதுவரை 34 செய்தியாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 7 பேர் பத்திரிகைகளின் ஆசிரியர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

உலகளாவிய ஊடகவியலாளர்கள் பலர் சிங்கள அரசால் நாடுகடத்தப்பட்டு இருக்கிறார்கள். நூற்றுக்கணக்கான ஊடகவியலாளர்கள் காணாமல் போயிருக்கிறார்கள். இவர்கள் உயிருடன் உள்ளார்களா என்பது சிங்கள அரசுக்கே வெளிச்சம். எண்ணற்ற செய்தியாளர்கள் சிங்கள அரசுக்கு அஞ்சி வெளிநாடுகளில் தலைமறைவு வாழ்க்கை வாழ்கிறார்கள்.

நூற்றுக்கும் மேலான ஊடகவியலாளர்கள் பொய்க் குற்றச்சாட்டின்கீழ் விசாரணையின்றி சிங்கள அரசின் சிறைகளில் சித்திரவதைக்கு ஆளாகிவருகிறார்கள்.

இலங்கையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே எத்தகைய பாதுகாப்பும் கிடையாது. நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் பரராஜசிங்கம், நடராஜா ரவிராஜா, தியாகராஜா மகேசுவரன் ஆகியோர் பகிரங்கமாகப் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களை மட்டுமல்ல, உலகமறிந்த தமிழ்த் தலைவர்களான குமார் பொன்னம்பலம், நீலன் திருச்செல்வம் போன்றவர்களும் படுகொலை செய்யப்பட்டார்கள்.

நாடறிந்த இவர்களுக்கே இந்தக் கதி என்று சொன்னால், சாதாரண மக்களின் கதி என்ன? குறிப்பாக சிறுபான்மையினரான தமிழர்களின் கதி என்ன?

மனித உரிமைகளைப் பேணுவதில் மொத்தமுள்ள 192 நாடுகளில் 164-வது இடத்தில் இலங்கை இருக்கிறது. ஊடகவியலாளர்களுக்கு உயிர் அச்சுறுத்தலை உண்டாக்கும் நாடுகளில் முதல் இடத்தில் இராக்கும் இரண்டாம் இடத்தில் இலங்கையும் உள்ளன.

1970-களிலும் 1980-களிலும் இலத்தின் அமெரிக்க நாடுகளில் நடந்த சித்திரவதை, ஆள்கடத்தல், படுகொலைகள் இவற்றை மிஞ்சும் அளவுக்கு இலங்கையில் இத்தனையும் நடைபெறுவதாக நோபல் பரிசு பெற்ற அர்ஜென்டினா மனித உரிமைப் போராளி அடால்ப் பரேசு எஸ்கியூவெல் குற்றம் சாட்டியுள்ளார்.

இலங்கைக்குத் திரும்புவதற்கு முன் இவர்கள் குறுந்தகடு ஒன்றில் மனம்திறந்து பேசியுள்ளனர். இலங்கையில் தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ந்து நடைபெறும் படுகொலைகள், மனித உரிமை மீறல்கள், சித்திரவதைகள் ஆகியவை குறித்தும் இதற்கு எதிராகத் தாங்கள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் அப்பட்டமான பல உண்மைகளை அதில் வெளியிட்டுள்ளனர். இதை அவர்கள் உலகத்திலும் இந்தியாவிலும் உள்ள மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் செய்தியாளர்கள், ஊடகவியலாளர்கள் ஆகிய அனைவருக்கும் அனுப்பிவிட்டுத்தான் தங்கள் நாடு திரும்பியுள்ளனர். அவர்களுக்கு ஏதாவது நேர்ந்தால் இதுவே அவர்களின் மரண வாக்குமூலமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

இந்த மனித உரிமை வீராங்கனைகளின் உயிர்களைக் காக்க உலகம் என்ன செய்யப்போகிறது? இந்தியாவில் உள்ள மனித உரிமை ஆர்வலர்களும், பத்திரிகையாளர்களும், ஊடகவியலாளர்களும் எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன? எதைப்பற்றியும் கவலைப்படாமல் என் கடன் பணி செய்து கிடப்பதே என்ற நாவுக்கரசரின் வாக்கினுக்கேற்ப துன்பச் சேற்றில் உழலும் மக்களின் துயர் துடைக்க தங்கள் உயிரையும் துச்சமாக மதித்து இலங்கை திரும்பியுள்ள இந்த சகோதரிகளை நினைக்கும்போதெல்லாம் நெஞ்சம் நெகிழ்கிறது.

சிங்கள இனத்தில் பிறந்தும் தமிழ் மக்களின் நலனுக்காகத் தங்களைத் தாங்களே அர்ப்பணித்துக் கொண்டுள்ள இந்த வீராங்கனைகளை தமிழர்கள் தங்கள் நெஞ்சத்தில் வைத்துப் போற்ற வேண்டும். அவர்களைக் காக்க குரல் கொடுக்க வேண்டும்.

இந்த மனித உரிமை வீராங்கனைகளின் உயிர்களைக் காக்க உலகம் என்ன செய்யப்போகிறது? இந்தியாவில் உள்ள மனித உரிமை ஆர்வலர்களும், பத்திரிகையாளர்களும், ஊடகவியலாளர்களும் எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன?

http://dinamani.com/...nName=Editorial

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் உள்ள மனித உரிமை ஆர்வலர்களும், பத்திரிகையாளர்களும், ஊடகவியலாளர்களும் எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன?

அப்படியே இந்த மனித உரிமை செயல்பாட்டார்களை போட்டுவிட்டாலும் கிந்திய ஊடங்கள் குறிப்பாக என்ன செய்வார்கள். மவுண்ட் ரோடு மகாவிஸ்னூ , இந்த கிண்டியன் எக்ஸ்பிரஸ் இவன்கள் தமிழின எதிரிகள் உண்மையில் ஒரே நிலைபாடு... .பாராட்டணும்.. இந்த துரோகிகள் போலி பாதிரி பகத் பஸ்பர் " மனித உரிமை போராளிகளுடன் ஒரு வருடம்"..என்று கட்டுரை எழுதுவான். இவன் அங்க எங்காவது ஒருநாள் இவர்களுடன் டீ... + பிஸ்கட்டு.... சாப்பிட்டு இருப்பான்.. அதை வைத்து ஒரு வருடம் இழுப்பான்.. அந்த கட்டுரை (சொறி இதை அந்த கேட்டகிரியில் சேர்க்கமுடியாது).ராஜேஸ் குமார் திகில் நாவல் போலவெ இருக்கும். முடிக்கும் போது இப்படித்தான் இருக்கும் "சுற்றி சிங்களத்தின் வெடி குண்டுகள் விழுந்த நிலையிலும் அந்த மனித உரிமை போராளிகள் சொன்னது எனது மனதில் வைரமாக பதிந்தது" அது என்ன..? அடுத்த இதழில்

சரி .. அடுத்த இதழை வாங்கிபார்த்தால் .. டீக்கு சரியா டிக்கேசன் போடலை என்று சொல்லிடுவான்.

.அடுத்து கருநா

இதயம் வெடித்தது தம்பி

இமயத்தில் இருந்து கொண்டுவா நீ

நம்பிக்கையை வெம்பி..

எம்மின சீறார்கள் ஈழத்தில்..

காலையில் பிடிக்க போகிறான் தும்பி.

அவன் இருக்கிறான் . உன்னை அண்ணன் என நம்பி..

முரசொலியில் கவிதை..

இவனுங்க சக பத்திரிக்கையாள்ர்கள் செத்தாலும் அந்த வீட்டிலே கிடைத்த வரைக்கும் சுருட்ட கூடியவர்கள்..

http://www.youtube.com/watch?v=TnttfefEdLY

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்திய பார்சி கொங்கிரஸ் அட்மிசன் குடுத்து தான் முப்பத்திநாலு பேர் போனவை. 

போயும் போயும் இந்திய கொங்கிரஸ் கூட்டத்தை நம்பினார்கள். 

தமிழருக்கு எதிர் என்றால் பாதுகாப்பு கரண்டி. 

  • தொடங்கியவர்

சிங்கள மனித உரிமை ஊடகவியலாளர்கள் சார்பாக நாமும் குரல்கொடுப்பது பரப்புரை ரீதியாக எமக்கு நிச்சயம் பலம் சர்வதேச மட்டத்தில் சேர்க்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.