Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இருள் நிறைந்த பாதையில் வெளிச்சங்களாக ஒளிரும் தேசியத் தலைவரின் பத்திரிகையாளர் மாநாடு

Featured Replies

2002 ஏப்ரல் மாதத்தின் 10ம் நாள் சிங்கள தேசத்தின் ஊடகங்கள் அனைத்தும், இந்தியாவின் அச்சு, ஓலி, ஒளி, இலத்திரனியல் ஊடகங்கள் முழுதும், சர்வதேசத்தின் மிகமுக்கியமான ஊடகநிறுவனங்கள் எல்லாம் கிளிநொச்சியில் குழுமி இருந்தனர்.

தமிழர்களின் வரலாற்றில் ஒரு தமிழனின் செய்திக்காக அவர் சொல்லப்போகும் பதில்களுக்காக ஒரே நேரத்தில் இவ்வளவு பத்திரிகையாளர்களும், ஊடகங்களும் குழுமியது வரலாற்றில் முதலாவதானது. அதனைவிட சிங்களதேசத்தின் அதிபர்கள் நடாத்திய எந்தவொரு ஊடகவியலாளர் சந்திப்பிலும் அதுவரை இவ்வளவு பெருந்திரளாக வந்ததே இல்லையென்றே சிங்கள ஊடகங்கள்கூட வர்ணித்திருந்தன அந்தச் சந்திப்பை.

இந்த ஊடகவியலாளர் சந்திப்புக்கு திகதி குறித்த பின்னர் இது நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் வடக்கையும் சிங்கள தேசத்தையும் இணைக்கும் ஏ9 பாதை திறந்துவிடப்பட்டது.

தமிழர்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் இந்த நாள் மிக முக்கியமான நாளாகும். தமிழீழ விடுதலையின் மூல இயக்கு சக்தியான தேசியத் தலைவர் இதற்கு முன்னர் பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு ஊடகவியலாளர்களுக்கு பேட்டிகள் வழங்கி இருந்தாலும் 2002 ஏப்ரல் 10ம் நாள் தான் விடுதலைப் புலிகள் தமது தலைவருடன் உலக பத்திரிகையாளர்கள் அனைவரும் சந்திக்கும் ஒரு பெரும் அழைப்பை விடுத்திருந்தனர். உலக ஊடகங்களுக்கும் இது வித்தியாசமான ஒரு அனுபவமாகவே அவர்கள் பதிந்தார்கள்.

அது நாள் வரைக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் கொள்கைப் பிரகடனமாக, வேலைத்திட்ட அறிவிப்பாக, உலகத்துக்கு செய்தியாக உலகம் கணித்து வந்தது ஒவ்வொரு மாவீரர்நாளிலும் தேசியத்தலைவரின் குரலில் வெளிவரும் மாவீரர் உரையை வைத்துத்தான்.

10042012%20017.jpg

முதல்முறையாக தமது சந்தேகங்களைத் தமது கேள்விகளை தேசியத்தலைவரிடம் நேரடியாக கேட்பதற்கு கிடைத்த இந்தச் சந்தர்ப்பம் முக்கியமான ஒன்றாகவே கருதப்பட்டது. இது ஒரு புறம்இருக்க, இந்தச் சந்திப்பை சிங்கள தேசத்தின் ஆளும் தரப்பு அவ்வளவாக மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டதாக இல்லை. தேசியத் தலைவரின் இந்த ஊடகவியலாளர் சந்திப்பை நேரடியாக சிங்களதேசத்தின் தேசியத் தொலைக்காட்சியாக கருதப்பட்ட ரூபவாகினியில் நேரடியாக ஒலிபரப்பியே தீரவேண்டிய தவிர்க்கமுடியாத நிர்ப்பந்தமும் சிங்களத்துக்கு ஏற்பட்டது.

விடுதலைப் புலிகளை சுற்றி மர்மங்களையும் விடைகள் இல்லாத கேள்விகளையும் தொடர்ச்சியாக இருக்கவைப்பதன் மூலமே விடுதலைப் புலிகளை ஒரு பயங்கர சக்தியாக உலகின் கண்களுக்குள் தக்க வைக்கமுடியும் என்பதே சிங்களத்தின் எண்ணம். இத்தகைய மர்மங்கள் நீங்குவதிலோ, உலகின் கேள்விகளுக்கு விடுதலைப் புலிகளின் அதிஉச்சமான தலைவரே நேரடியாக பதில் வழங்குவதோ சிங்கள ஆட்சியாளர்களுக்கு பிடித்தமானதாக இருந்திருக்கவே முடியாது.

ஆனாலும் நிபந்தனை அற்ற பேச்சுவார்த்தை, போர்நிறுத்தம், மற்றும் முக்கியமாக மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் என்ற நாடகத்தில் அடுத்த தரப்பினரின் இத்தகைய ஊடகச் சந்திப்புகளை மறுப்பதோ தடை செய்வதோ முடியாது என்பதால்தான் சிங்களமும் இதற்கு ஒப்புகொள்வதாக சொல்லவேண்டி வந்தது.

ஆயுதந் தாங்கிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துவரும் ஒரு அமைப்பு என்ற முறையில் மாறிவரும் உலக நிலைமைகளில் தமது நிலைப்பாட்டை வெளி உலகத்துக்கு பகிரங்கமாக அதே நேரம் முடிவுகளை எடுக்கும் ஆற்றல்மிக்க ஒரே சக்தியான தேசியத் தலைவரின் குரலில் சொல்வதற்கான சந்தர்ப்பாக இதனை கணித்திருந்தார்கள். அதிலும் இந்த ஊடகவியலாளர் சந்திப்பு நடப்பதற்கு சரியாக ஏழு மாதத்துக்கு முன்னர் உலகின் அனைத்து சமநிலைகளையும் ஆயுதந் தாங்கிய போராட்டங்கள் பற்றிய கணிப்புகளையும் தலைகீழாக மாற்றிய இரட்டை கோபுர சம்பவம் 2001 செப்படம்பர் 11ல் நிகழ்ந்தேறி இருந்தது. (இந்த கேள்வியும் தலைவரின் ஊடகவியலாளர் சந்திப்பில் கேட்கப்பட்டது).

இராணுவ பலச் சமநிலையில் ஏறத்தாழ சிங்கள தேசத்துக்கு ஒப்பானதாக விடுதலைப்புலிகள் அந்நேரம் பலத்துடன் இருந்தாலும் செப்டம்பர் 11க்கு பின்னான உலகின் கேள்விகள் வித்தியாசமானதாக இருந்ததால், அதற்கு தேசியத் தலைவர்தான் பதில் அளிப்பது காத்திரமானதாக இருக்கும் என்பதாலும் நடாத்தப்பட்டது.

இந்த பத்திரிகையாளர் மாநாட்டில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் அதற்கான தேசியத் தலைவரின் பதில்களுக்கும் அப்பால் தேசியத் தலைவர் தன்னை நோக்கி கேட்கப்பட்ட கேள்விகளை உள்வாங்கும் முறைமையும் எந்தவொரு கட்டத்திலும் உணர்ச்சிவசப்படாமல் ஒரு மிகத்தேர்ந்த தலைவனுக்கு உரிய அணுமுறையைக் கையாண்டதாகவே, ஒரு பழுத்த இராஜதந்திரிக்கே உரிய வார்த்தை பிரயோகங்களை வெளிப்படுத்தியதாகவுமே ஆச்சர்யத்துடன் உலக ஊடகங்கள் எழுதின.

இந்தப் பத்திரிகையாளர் சந்திப்பு பற்றி அதில் கலந்துகொண்ட சிங்கள ஊடகவியலாளரான ரஞ்சன் பெரேரா கூறுகையில் ‘பிரபாகரனின் செய்தியாளர் மாநாடு வரலாறு காணாத நிகழ்வாகும். 300க்கும் மேற்பட்ட உள்நாட்டு-வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் மிகுந்த சிரமத்துடன் இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டனர். இந்த மாநாடு மூலம் உலகில் விடுதலைப் புலிகளுக்கு இருந்த முக்கியத்துவத்தை உணரமுடிந்தது.

பிரபாகரனைப் பற்றிய எவ்வளவோ கதைகளும் கற்பனைகளும் பரவி இருந்தவேளையில் செய்தியாளர்கள் மாநாட்டில் மிகச் சாதாரணமாக காட்சியளித்தார். அவரது ஒவ்வொரு சொல்லும் அவரைப் பற்றிய தவறான கருத்துகளைப் போக்கின என்றே சொல்ல வேண்டும்’ என்று சொன்னார்.

இந்தப் பத்திரிகையாளர் சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தலைவர் கொடுத்த பதில்கள் வெறுமனே அந்த ஊடகம் கேட்ட கேள்விக்கான பதில் என்பதாக மட்டும் இல்லாமல் அதனைப் பார்க்கும், கேட்கும், வாசிக்கும் உலக அரங்கிற்கு சொல்லப்பட்ட பதில்களாகவே மிகவும் அற்புதமாக அமைந்திருந்தன.

என்றுமே சிங்கள பேரினவாதம் அதன் அடக்குமுறை முகத்தை மாற்றிக்கொள்ளாது என்று வரலாற்று அனுபவங்கள் மூலம் தெரிந்துகொண்டிருந்தாலும் பிரிந்து செல்லும் முடிவை மாற்றுவதற்கான அணுகுமுறை சிங்களத்தின் நடைமுறையில்தான் இருக்கின்றது என சொல்லி இருந்தார்.

‘விடுதலைப் புலிகள் மீண்டும் ஆயுதந் தாங்கிப் போராடப் போகின்றார்கள்’ என்ற கருத்தை தேசியத் தலைவரின் வாயால் சொல்ல வைப்பதற்காக ‘பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால்.?’ என்று கேட்கப்பட்டபோது மிகவும் இலாவகமாக வார்த்தையை தெரிவுசெய்து ‘பேச்சுவார்த்தை தோல்வியடைந்தாலும் தொடர்ந்து சமாதான முயற்சிகளை மேற்கொள்வோம்’ என்று சொன்னதும், ‘பேச்சுவார்த்தையில் அதிபர் சந்திரிகா குழப்பம் ஏற்படுத்துவார் என்று நினைக்கிறீர்களா?’ என்று கேட்கப்பட்டபோது சிங்களதேசத்தின் ஒரு அதிபர் தமிழ் மக்களுக்கு உரிமை கொடுப்பதற்கு எத்தகைய தடங்கல்களைக் கொடுப்பார் என்று தெரிந்திருந்தும் ‘சந்திரிகா குழப்பம் ஏற்படுத்துவார் என்று நாங்கள் நினைக்கவில்லை.’ என்பதுடன் நின்றுவிடாமல் ‘அவர் அப்படி ஏதும் செய்தால் அதைப் பார்த்து கொள்வது ரணிலின் பொறுப்பு’ என்று சொன்னதன் மூலம் பதிலிலேயே ரணிலுக்கான செய்தியையும் சொல்லி இருந்தது இன்றும் ஆச்சர்யத்துடன் நோக்கப்படுகிறது.

ஏறத்தாழ இதே மாதிரியான கேள்வி ஒன்று இந்த ஊடகவியலாளர் சந்திப்புக்கு பதினெட்டு வருடங்களுக்கு முன்னர் 1984ம் ஆண்டு மார்ச் மாதம் ‘சன்டே’ இதழுக்காக அனிதா பிரதாப்பால் கேட்கப்பட்டபோது ‘ஜே.ஆர்.ஜெயவர்தனா ஒரு உண்மையான பௌத்தனாக இருந்திருந்தால் நான் ஆயுதம் ஏந்தி இருந்திருக்க மாட்டேன்’ என்று கூறி இருந்ததும் தலைவர் சிங்கள தேச அதிபர்களை எப்படிப் பார்க்கிறார் என்பதைக் காட்டி இருந்தது.

என்னை பொறுத்தவரையில் இந்த இனத்துக்கென்று தனியான ஏதும் கைகாட்டிநு£லோ, வழிகாட்டி புத்தகமோ தேவையில்லை. தேசியதலைவரின் அனைத்துப் பேட்டிகளையும் அவரது அனைத்து மாவீரர் உரைகளையும் தொகுத்தாலே அதற்குள் இந்த இனம் இப்போது செல்லவேண்டிய திசையும் பாதையும் அதற்கான பக்குவமான முறைகளும் பொதிந்து கிடக்கும்.

காணொளி

இருள் நிறைந்த இந்நேரத்தில் அவைகளே பாதை வெளிச்சங்களாக ஒளிதரக்கூடியவை.

- ச.ச.முத்து

(பத்தாண்டுகள் நிறைவில் ஒரு பார்வை)

நன்றி: ஈழமுரசு

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றிகள் யாழ் அன்பு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அருமைப்பெருமையான இணைப்பிற்கு நன்றி அன்பு!

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் காணொளியை தேடித் திரிஞ்சன்....இணைப்புக்கு கோடி நன்றி அண்ணை... :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.