Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அதிகாரபரவலாக்கலை பெருபான்மையான சிங்கள மக்கள் எதிர்ப்பதாக கூறுவது பொய் சந்திரிகா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

chandrika6_CI.jpg

தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வாக முன்மவைக்கப்படும் அதிகாரபரவலாக்கலை பெருபான்மையான சிங்கள மக்கள் எதிர்ப்பதாக தற்போதைய அரசாங்கத்தில் உள்ள சிலர் முன்னெடுத்து வரும் பிரசாரம் உண்மைக்கு புறம்பானது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாநாயக்க குமாரணதுங்க தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள அவர், இந்திய பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் இதனை குறிப்பிட்டுள்ளார். அதிகாரப்பரவலாக்கலை சிங்களவர்கள் எதிர்க்கின்றனர் என கூறுவது யார்?. நான் ஜனாதிபதியாக இருந்த போது, எம்லிப்பிட்டியவில் நடைபெற்ற தேர்தல் கூட்டம் ஒன்றின் போது, தமிழர்களுக்கு அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் எனக் கூறினேன். அப்போது மேடையில் இருந்த எமது கட்சியை சேர்ந்தவர்கள் இது குறித்து அதிகம் பேசவேண்டாம் என தெரிவித்தனர். வாக்குகள் கிடைக்காமல் போகும் என அவர்கள் காரணம் கூறினர். எனினும் நான் உரையை முடித்த பின்னர், மக்கள் எனது நிலைப்பாட்டு ஆதரவாக கரகோஷம் செய்தனர். இதன் பின்னர் தமிழ் மக்களுக்கு அரசியல் அதிகாரப்பரவலாக்கம் வழங்கப்பட வேண்டும் என நான் தொடர்ந்தும் கூறிவந்தேன். இதற்கு நல்ல ஆதரவு கிடைத்தது. தமிழ் மக்களுக்கு அதிகாரப்பரவலாக்கத்தை வழங்கக் கூடாது என எதிர்ப்பவர்கள் 5 வீதமான சிங்கள அடிப்படைவாதிகள் மாத்திரமே எனவும் சந்திரிகா குறிப்பிட்டுள்ளார்.

http://www.globaltam...IN/article.aspx

தமிழர் பிரச்னையை தீர்ப்பதற்கு சந்தர்ப்பம் கிடைத்த சிங்களத் தலைமைகள் எல்லாம்

சிங்கள வாக்குவங்கியைக் கணக்குப் பார்த்தே அதை செய்யாமல் தவிர்த்து வந்திருக்கின்றன.

இதற்கு சந்திரிகாவும் விதிவிலக்கில்லை.அவர் இதற்கும் ஒருபடி மேலே போய்

யாழ்ப்பானதின்மேல் மிலேச்சதனமான ஒரு யுத்தத்தை நடத்தி

லட்சக்கணக்கான அப்பாவி மக்களை அகதியாக வெளியேற்றிய பெருமைக்குரியவர்.

ஆனால் அவரின் அண்மைக்கால பேச்சுக்கள் இரண்டு விடயங்க்களை கோடிகாட்டுகின்றன.

ஒன்று, மீண்டும் ஒருதடவை சமாதானப் புறாவேடம் போட்டு சர்வ தேசத்தை

ஏமாற்றி அவற்றின் ஊடாக மகிந்தவுக்கு அழுத்தங்களை அதிகரிப்பது;

இரண்டாவது,அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் தான்

மகிந்தவுக்கு எதிராக நிறுத்தப்படலாமென நம்புவதால் தமிழ் மக்களின் ஆதரவைத் தேடுவது.

ஜனாதிபதித் தேர்தலில் யார் தொர்க்கவேண்டுமேன்று பார்ப்பதே

தமிழர்களின் அரசியலாகப் போய்விட்டது.அதை அவர்கள் பயன்படுத்துகிறார்கள் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆளும் தரப்பும் எதிர்த்தரப்பும் எப்போதும் தமிழர்களை (தமிழர்களுக்கு அரசியல் தீர்வை கொடுப்பதில்லை என்பதில் ஒருவருக்கு ஒருவர் குறைந்தவர்கள் இல்லை) என்பதை வைத்தே தமது அரசியலை நகர்திவருகின்றனர்.

இதில் இவர்களில் எந்த வித வேறுபாடும் கிடையாது, இதுவும் ஒரு நாடகத்தின் என்னும் ஒரு அங்கம்.

ஒரு போர்க்குற்றவாளியின் இன்னொரு புளுகு?

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நான் ஜனாதிபதியாக இருந்த போது, எம்லிப்பிட்டியவில் நடைபெற்ற தேர்தல் கூட்டம் ஒன்றின் போது, தமிழர்களுக்கு அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் எனக் கூறினேன்.

கூறினால் மட்டும் போதுமா?. ஏன் வழங்க வில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.