Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செங்கல்பட்டு உண்ணாவிரதிகளுக்கு ஆதரவாக முகாம் தலைவர் தற்கொலை செய்யப்போவதாக அறிவிப்பு (படங்கள்)

Featured Replies

விடுதலை வேண்டி 7ம் உண்ணாநிலை மேற்கொள்ளும் செங்கல்பட்டு சிறப்பு முகாம் வாசிகளுக்கு ஆதரவாக 55 வயது முகாம் தலைவர் 90 அடி உயரமுள்ள மரத்தின் மீதேறி தற்கொலை செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.

இது குறித்து தெரியவருவதாவது:

இன்றுடன் 7ம் நாளாக உண்ணாநிலையை மேற்கொள்ளும் செங்கல்பட்டு சிறப்பு முகாம் வாசிகளுக்கு ஆதரவாக 55 வயதுடையவரும், முகாமின் தலைவருமான திரு. விக்கிரமசிங்கம், இதுவரை அரசு தீர்வு எதுவும் அறிவிக்கப்படவில்லையென்பதால், பொறுமையிழந்து காலை 10 மணிக்கு தன்னிச்சையாக முகாமினுள் அமைந்துள்ள 100 அடி உயரமுள்ள மரத்தில், 90 அடி வரை ஏறிக் கொண்டு, முகாம்வாசிகளின் விடுதலைக்கு அரசு தீர்வு எட்டப்படவில்லையெனில், தான் மரத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாக அறிவித்து போராட்டம் நடத்தி வருகிறார்.

தனது தந்தை நிலையில் உள்ளவரான திரு. விக்கிரமசிங்கம் அவரது எழுச்சியை கண்டு, திரு. சிறீசெயின் (வயது 35) என்பவர் உண்ணாநிலையிலிருந்து வந்தவரும், மரத்தின் மீது ஏறியுள்ளார்.

இவர் தன்னுடன் ஒரு கயிற்றை மரத்தின் மீது கொண்டு சென்று, தூக்கு கயிறாக கட்டி, தானும் தூக்கு மாட்டி இறந்து விடுவேன் என அறிவித்துள்ளார்.

இவர்களுக்கு ஆதரவாக மரத்தின் கீழே மற்றைய முகாம்வாசிகளும் விடுதலை வேண்டி கோசமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

முகாமிற்கு வெளியே, ம.தி.மு.கா.வின் பொறுப்பாளர் திரு. மல்லை சத்தியா சில ஆதரவாளர்களுடன் முகாம்வாசிகளின் கோரிக்கைகளை அரசு ஏற்க வேண்டும் என ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். ஊடகவியலாளர்கள் முகாமிற்கு வெளியே செய்தி சேகரித்து வருகின்றனர்.

கடந்த 16ம் தேதி முதல் தங்களது விடுதலை வேண்டி செங்கல்பட்டு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள 32 பேரில், 10 பேர் நீர் மட்டும் அருந்தி நிலையில், உண்ணாநிலையை மேற்கொண்டு வருகின்றனர்.

உண்ணாநிலை தொடங்கி 4 நாட்கள் கடந்த பிறகு, செங்கல்பட்டு மாவட்ட வருவாய் கோட்ட அதிகாரி திரு. செல்லப்பா, முகாம் அமைந்துள்ள எல்லைக்குட்பட்ட காவல்துறை ஆய்வாளர் மற்றும் கியூ உளவுப்பிரிவு துணை ஆய்வாளர் திரு தனசேகரன் அடங்கிய குழு, உண்ணாநிலை மேற்கொள்வோரிடம் பேச்சுவார்த்தைக்கு வந்தது. அப்போது, முகாம் வாசிகளின் கோரிக்கைகளை உயர்மட்ட அதிகாரிகளுக்கு தெரிவிப்பதாகவும், உண்ணாநிலையை கைவிட வேண்டும் என்று அறிவுறுத்தினர். இதனை உண்ணாநிலை மேற்கொண்டுள்ள முகாம் வாசிகள் நிராகரித்தனர்.

இந்நிலையில் நேற்று முதல் உண்ணாநிலையில் மேலும் 3 பேர் தங்களை இணைத்துக் கொண்டு, தற்போது 13 பேர் உண்ணாநிலையில் இருந்து வருகின்றனர். அவர்களின் பெயர்களும், வயதும் வருமாறு:

1. செந்தூரன் (வயது : 30)

2. ரமேஷ்; (வயது : 35)

3. தமிழ்; (வயது : 35)

4. சதிஸ்; (வயது : 37)

5. சதிஸ் குமார் ; (வயது : 28)

6. சேகர்; (வயது : 32)

7. சதாசிவம் (வயது : 55)

8. சிவக்குமார்; (வயது : 33)

9. சுதர்சன் (வயது : 25)

10. பராகரன் (வயது : 39)

11. நந்தகுமார் (வயது : 32)

12. ஜெயதாசன் (வயது : 34)

13. சிறீ செயன் (வயது : 35)

வெள்ளிக்கிழமை பேச்சு வார்த்தைக்கு பின்னர் எந்தவொரு நடவடிக்கையையும் அரசு தரப்பிலிருந்து மேற்கொள்ளவில்லை. இதனாலேயே இன்று உண்ணாநிலையிலிருந்து வருவோரும் மற்ற இருவரும் தாங்கள் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக 90 அடி உயர மரத்தின் மீதேறி போராடி வருகின்றனர்.

2009ல் இறுதிகட்ட போரின் போது இலங்கை அரசால் நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கு பயந்து, உயிரை காப்பாறிக் கொள்ள, தாய் தமிழகம் நோக்கி தப்பி ஓடி வந்த அப்பாவி ஈழத்தமிழ் மக்களை, விசாரணை என்று அழைத்த தமிழக உளவுத்துறையினரால் சந்தேகிக்கப்படும் அப்பாவி மக்களைத்தான், தமிழகத்தில் உள்ள சிறப்பு முகாம் என்று பெயரை மாற்றியழைக்கப்பட்டு வரும் சிறப்பு சிறையில் அடைத்து வருகின்றனர்.

செங்கல்பட்டில் ஒன்றும், சென்னை பூவிருந்தவல்லியில் மற்றொன்று என இரு சிறப்பு முகாம்கள் இப்போது செயல்பட்டு வருகின்றன. தற்போது, செங்கல்பட்டு முகாமில் உள்ளவர்களே உண்ணாநிலை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

“மே, 2009-க்கு பிறகு விடுதலைப் புலிகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டு விட்டனர் என்று இலங்கை அரசே தொடந்து அறிவித்து வருகிற நிலையில், மே மாதம் முடிந்து தமிழகம் வந்த பொதுமக்களை, விடுதலைப்புலிகள் என உளவுத்துறையினர் பொய்யான குற்றம் சாட்டுவதை, தமிழக மக்கள் ஏளனமாக பார்வையுடன் தமிழக உளவுத்துறையினரை பார்க்கின்றனர்.

இப்படிப்பட்ட உளவுத்துறையினரின் பொய்யான அறிவுரைகளை ஆராயாமல், தமிழக அரசும் அப்பாவிகளை சிறப்பு முகாம் என்றழைக்கும் சிறப்பு சிறையினுன் அடைப்பது கண்டிக்கத்தக்கது. சிறப்பு முகாமில் உள்ள அனைவரையும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்,” என்று மனிதம் அமைப்பின் தலைவர் அக்னி சுப்பிரமணியம் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும், “முகாமில் உள்ள சிலர் மீது எவ்வித வழக்குகள் இல்லை. 10க்கும் மேற்பட்டோர் மீது நீதி மன்றத்தில் குற்றச்சாட்டு மட்டுமே பதியப்பட்டுள்ளது. இம்முகாமில் உள்ள பிற அனைவருக்குமே, நீதிமன்றம் பிணை வழங்கியுள்ள நிலையில், சிறப்பு முகாம் என்ற சிறப்பு சிறையினுள் வைத்திருப்பது மனித உரிமைக்கு முரணானது. இது தொடருமானால், மனிதம் அமைப்பு சென்னை உயர்நீதி மன்றத்தில் அரசுக்கு எதிராக வழக்கு தொடர உள்ளது”, என்று அக்னி சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

senkalpaddu02.jpgsenkalpaddu01.jpgsenkalpaddu03.jpg

http://thaaitamil.com/?p=16635

  • கருத்துக்கள உறவுகள்
:( :( :unsure:
  • கருத்துக்கள உறவுகள்

தேர்தலின்போது ஈழத்தமிழர்களுக்காக இன்றைய

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள்

எத்தனை வாக்குறுதிகளை அளித்தார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.