Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப் புலிகளின் தற்போதைய அமைதி சரியா????????????

Featured Replies

இந்த பொறுமை சிங்கள அரசாங்கத்துக்கு என்னொமொரு சந்தர்ப்பத்தை கொடுப்பதற்கு அல்லஇ உலக நாடுகளுக்கு நாங்கள் தமீழம் அமைக்கபோகிறோம்இ என்பதை அறிவிக்கவே..

ம் லகி உங்கள் கருத்துக்கு நன்றி,

புலிகளின் பொறுமைக்கு உண்டானா பலன் கிட்டாமல் விட்டால் அவர்கள் நிச்சயமாகப் போரை ஆரம்பிப்பார்கள்.

அதற்கு நீங்களும் உங்கள் ஆதரவை வழங்க வேண்டும்.ஏனெனில் அவர்கள் மிகவும் பொறுமை காத்தே, அமைதியைப் பேணி வருகின்றனர்.ஒரு நிலைக்கு மேல் இது சாத்தியப் படாதா ஒன்றாகவே இருக்கும்.ஏனெனில் தமிழ் மக்களை ராணுவ அழுத்தங்களுக்கு உள்ளாக்குவது, என்பது தமிழ் மக்களின் போராட்ட சக்திகளான புலிகளினால் ஏற்றுக் கொள்ள முடியாத நிலமையாகவே இருக்கும். பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண சிங்களத் தரப்பு தயார் இல்லாத நிலயே இன்று இருகிறது.சர்வதேசமும்,இந்திய அரசும் தேவயான அழுத்தங்களை பிரயோகித்தாலயே சிங்கள அரசு விட்டுக் கொடுக்கும்.இதற்கு சர்வதேசமும்,இந்திய அரசும் பேச்சுவார்த்தை நடத்தும் இரு தரப்பையும் சமாக நடத்த வேண்டும்.இந்திய அரசு விடுதலைப் புலிகள் மீதான தடயை நீக்கினால் அது சிங்களத் தரப்புக்கு ஒரு அழுத்ததைக் குடுத்து ,பேச்சுவார்த்தயை முன் நகர்த்தக் கூடியதாக இருக்கும்.விடுதலைப் புலிகளும் பேச்சுவார்த்தயில் முனைப்புடன் ஈடுபடுவர்.

ஆகவே இங்கே போர் நடை பெறாமல் இருக்க வேண்டுமாயின் சர்வதேசத்தினதும் ,இந்தியாவினதும் சிறிலங்கா அரசாங்க்கத்தின் மீதான அழுத்தங்கள்,விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கம் என்பவை முக்கியமானவை.

சிறிலங்கா அதிபர் தற்போது பாகிஸ்த்தானிக்கு விஜயம் செல்ல உள்ளார், பாகிஸ்த்தானிடம் ஆயித உதவி கோர உள்ளார்.இவற்றை இந்தியா கவனமாக அவதானித்து ,விடுதலைப் புலிகள் மீதான தடயை நீக்கி ,ஈழத் தமிழர்களுடனான நல்லுறவை வளர்க்க வேண்டும்.சிங்களத் தரப்பை விட, ஈழத் தமிழர்களே இந்தியாவின் பாதுகாப்பிற்கு என்றும் விசுவாசமாக இருப்பர்.

புலிகளின் பொறுமையை தவறாக உபயோகிக்க இலங்கை அரசு முயன்றால் உலகம் அவர்களை காறி உமிழும்.....

இரு தரப்பும் பேச்சுவார்த்தையில் விரைவில் தீர்வு காண்பார்கள் என்பதே என் கணிப்பு....

இலங்கை அரசும் போரை விரும்பாது... கடந்த 25 ஆண்டுகளில் சரிந்த அதன் பொருளாதாரத்தை நிமிர்த்தவே இன்னும் 25 ஆண்டுகள் பிடிக்கும்.... இன்னமும் போரைத் தொடர நினைத்தால் இலங்கை ஒரு சுடுகாடாக மாறும்.... இன்னொரு சோமாலியாவாக மாறினாலும் மாறும்.... இது இலங்கையை ஆள்வோருக்கு தெரியாதா என்ன?

விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கத்துக்கு இங்கே வாய்ப்பே இல்லை என்பது என் எண்ணம்....

சேது சமுத்திர திட்டம் வந்தபோதே அதை எதிர்த்த ஜெயலலிதா அதற்கு சொன்ன காரணம் புலிகளின் அச்சுறுத்தல் தான்...

அவர் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் புலிகள் மீதான தடை நீக்கத்துக்கு வாய்ப்பே இல்லை.... அவர் சட்டமன்றத்திலேயே இந்த தடையை நீட்டிக்க வேண்டும் என்று தீர்மானம் போட்டவர்....

கலைஞர் ஆட்சிக்கு வந்தாலும் இதை செய்ய மாட்டார்.... அவர் 15 ஆண்டுகளாக புலிகள் இயக்கத்துடன் எந்தத் தொடர்பும் வைத்திருக்கவில்லை... ஆனால் அவர் புலிகள் எதிர்ப்பாளர் அல்ல.... தடை நீக்கத்தை அவர் மத்திய அரசுக்கு கோரினால் மீண்டும் அவர் ஆட்சியைக் கலைக்க இங்கு எதிர்க்கட்சியாய் அமையும் ஜெ. போராட்டம் நடத்துவார்....

தமிழ் ஈழம் மலர்ந்தபிறகு தான் புலிகளுக்கும், இந்தியாவுக்குமான உறவு சீர்பட வாய்ப்பு இருக்கிறது....

புலிகளின் பொறுமையை தவறாக உபயோகிக்க இலங்கை அரசு முயன்றால் உலகம் அவர்களை காறி உமிழும்.....

இரு தரப்பும் பேச்சுவார்த்தையில் விரைவில் தீர்வு காண்பார்கள் என்பதே என் கணிப்பு....

இலங்கை அரசும் போரை விரும்பாது... கடந்த 25 ஆண்டுகளில் சரிந்த அதன் பொருளாதாரத்தை நிமிர்த்தவே இன்னும் 25 ஆண்டுகள் பிடிக்கும்.... இன்னமும் போரைத் தொடர நினைத்தால் இலங்கை ஒரு சுடுகாடாக மாறும்.... இன்னொரு சோமாலியாவாக மாறினாலும் மாறும்.... இது இலங்கையை ஆள்வோருக்கு தெரியாதா என்ன?

இலங்கையில் சிங்களத்தரப்பை பீடித்திருப்பது பேரினவாதம் என்கின்ற நோய்,இது அவர்களை சிந்திக்க விடாமால் செய்து வருகிறது.இவர்களால் நீங்கள் மேலே கூறியவாறு சிந்திக்க முடிந்தால் இந்தப் பிரச்சினை இவ்வளவு உயிர்களைக் காவு கொண்டிருக்க வேண்டியதில்லை.இன்றய சிங்கள, மற்றும் ஆங்கில பதிரிகைகளை வாசித்தீர்களே அனால், அல்லது மகிந்த அரசாங்கத்தை இயக்கும் ஜேவிபி மற்றும் ஜாதிக கெல உறுமயவின் கூற்றுக்களை வாசித்தீர்களே அனால் இது நன்றாக விளங்கும்.சர்வதேசத்திற்கும் இது இப்போது விளங்கி வருகிறது.சென்ற முறை பேச்சுவார்த்தயில் இணக்கம் காணப்பட்ட விடயங்களுக்கு முற்றிலும் மாறாகவே இலங்கை அரசாங்கம் நடந்து வருகிறது.இனி இதற்கு மேலும் பேச்சுவார்த்தைகளில் புலிகள் பங்கு பற்றுவதனால் என்ன பலன் என்பதை சர்வதேசம் தான் சொல்ல வேண்டும்?

ரணில் அதிபராக இருந்திருந்தால் கொஞ்சம் சுமூகமாக இருந்திருக்குமா?

தமிழகத் தமிழர்கள் அவர் இலங்கையின் அதிபராக வருவதை விரும்பினார்கள்.....

ரணில் அதிபராக இருந்திருந்தால் கொஞ்சம் சுமூகமாக இருந்திருக்குமா?

தமிழகத் தமிழர்கள் அவர் இலங்கையின் அதிபராக வருவதை விரும்பினார்கள்.....

ஆனால் இந்திய அரசு விரும்பவில்லையே..... ! :lol:

இரு முறை தவறாக பதிவாகி விட்டது...

1998ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவின் பார்வை இலங்கை பிரச்சினையில் மாறி இருக்கிறது....

ஈழம் கிடைத்தால் ஒகே.... கிடைக்காவிட்டாலும் அதற்காக கவலைப்படப்போவதில்லை.... இது தான் இந்தியாவின் எண்ணம்....

ஈழப்பிரச்சினையில் எந்த விதத்திலும் தாங்கள் மூக்கை நுழைக்க கூடாது என்று இந்தியா முடிவு செய்திருக்கிறது....

என்னைப் பொறுத்தவரை ரணில் இந்தியாவுக்கு சாதகமானவர் தான்.... அவரை இந்தியா விரும்பாமலிருக்க காரணமேயில்லை.....

புலிகள் தேர்தலை புறக்கணிக்காமல் இருந்திருந்தால் ரணில் வந்திருப்பார்....

ரணில் அதிபராக இருந்திருந்தால் கொஞ்சம் சுமூகமாக இருந்திருக்குமா?

தமிழகத் தமிழர்கள் அவர் இலங்கையின் அதிபராக வருவதை விரும்பினார்கள்.....

ரணில் அதிபராகவந்திருந்தால் என்ன செய்திருப்பார் என்று அவரது சமாதானத் தூதுவர்களில் ஒருவரான மிலிந்த மொராகாடா கடந்த தேர்தலின் போதுதெரிவித்திருந்தார்.பேச்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொறுமை காத்தார் உலகாழ்வார்!!!

பாகிஸ்தான் புலனாய்வுத்துறை உதவியுடனே முஸ்லிம் ஜிகாத் குழு: பாலசிங்கம் அதிர்ச்சித் தகவல்!

[திங்கட்கிழமை, 27 மார்ச் 2006, 17:58 ஈழம்] [ச.விமலராஜா]

கேள்வி: முஸ்லிம் ஜிகாத் குழு இயங்கிவருவதாக நீங்கள் கூறியிருந்தீர்கள். இந்தக் குழு பற்றி நீங்கள் சொல்ல முடியுமா? ஏனெனில் இந்தக் குழு கிழக்குப் பிரதேசத்தில் இல்லை என்று முஸ்லிம்கள் மறுத்து வருகின்றனர்..

பதில்: ஓம். முஸ்லிம் அரசியல் அமைப்புகளின் தலைவர்கள் ஏன் இதை மறுக்கிறார்கள் என்பதை நாங்கள் அறிவோம். சிறிலங்காவில் முஸ்லிம் பயங்கரவாதக் குழு இயங்குவதானது சர்வதேச சமூகத்தை நிச்சயம் பாரிய அளவில் கவலை கொள்ளச் செய்யும் என்பதாலே அவர்கள் இத்தகைய மறுப்பை வெளியிடுகின்றனர்.

இந்த ஜிகாத் அமைப்புக்கும் பாகிஸ்தானிய இராணுவ புலனாய்வுத்துறைக்கும் உள்ள உறவு தொடர்பான ஆதாரங்களை நாம் வைத்திருக்கிறோம். ஆகையால் அவர்கள் பொதுவாக நிராகரிக்கிறார்கள். ஆனால் எங்களிடம் போதுமான ஆதாரங்கள் உள்ளன. முஸ்லிம் தலைவர்கள் எங்களைத் தொடர்புகொண்டால் மேலதிக ஆதாரங்களை கையளிப்போம்.

கேள்வி: தற்போதைய சர்வதேசச் சூழலில் ஒரு அரசாங்கமே பாகிஸ்தானுடன் தொடர்புடைய இத்தகைய முஸ்லிம் ஜிகாத் குழு இயங்க அனுமதிப்பது...

பதில்: ஓம். அது ஆபத்தானது. ஆனால் சிறிலங்கா அரசாங்கமானது பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் நெருங்கிய உறவு வைத்துள்ளது என்பது எமக்கு வருத்தமளிக்கிறது. பாகிஸ்தானிடமிருந்து இராணுவ உதவி மற்றும் பயிற்சிகளை சிறிலங்கா பெற்றுக்கொண்டு வருகிறது. மேலும் சீனாவுடனும் நெருங்கிய உறவை சிறிலங்கா கொண்டிருக்கிறது.

ஆகையால் இந்த விடயத்தில் பாகிஸ்தானின் தலையீடு குறித்து நாம் பாரிய கவலை கொள்கிறோம். ஜிகாத் குழுவுக்கு பயிற்சியும் உதவிகளும் செய்வதானது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும். இந்த ஜிகாத் குழுக்கள் பற்றி மேலதிகமாக இந்தியா அறிந்துகொள்ளும் போது இந்தியாவிலும் பாரதூரமான விளைவுகள் ஏற்படும்.

கேள்வி: கடும்போக்கு அரச தலைவருடனான உறவு நிலை தொடர்பாக...

பதில்: உறுதிமொழிகளை அளித்துவிட்டு எதையும் செய்யாத மென்மையான போக்கு கொண்டவர்களைவிட கடும்போக்காளர்களுடன் உடன்பாட்டுக்குத் தயாராக இருக்கிறோம். ஆகையால்தான் இந்த சவாலான நிலைமையை எடுத்துக் கொண்டு கடும்போக்காளர்களுடன் பேசி வருகிறோம். இந்தப் பிரச்சனையை அவர்கள் எப்படி கையாள்கிறார் என்று பார்க்கிறோம்.

சிங்களக் கடும்போக்காளர்கள்தான் உண்மையில் தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதில் தடங்கலாக உள்ளனர் என்ற உண்மையை சர்வதேச சமூகம் உணரவேண்டும்.

கேள்வி: ஆகையால் அரசாங்கத்துக்கு எத்தகைய அழுத்தத்தை சர்வதேச சமூகம் கொடுக்க வேண்டும்?

பதில்: சிறிலங்காவின் அரசியல் அமைப்பு முறை மீதான செல்வாக்கை சர்வதேச சமூகம் செலுத்த வேண்டும். ஏனெனில் சிறிலங்கா அரசாங்கமானது முழுவதுமே வெளிநாட்டு நிதியை நம்பி, உதவி வழங்கும் நாடுகளை நம்பியே உள்ளது.

சர்வதேச சமூகத்தின் உதவி வழங்குகிற நாடுகளின் இணைத் தலைமை நாடுகள் போதுமான அழுத்தத்தை சிறிலங்கா அரசியல் தலைவர்களுக்குக் கொடுக்க வேண்டும். இதனால் ஓரளவாவது தமிழ்மக்களுக்கு சாதகமாக நடைபெறலாம். தற்போதைய இறுதி நிலைகளிலாவது இதை சர்வதேச சமூகம் செய்யலாம் என்றார் அன்ரன் பாலசிங்கம்.

நன்றி: ஏபிசி தொலைக்காட்சி

http://www.eelampage.com/?cn=25089

jkpoPoj;ij nghWj;jtiuapy; rpwpyq;fh ,uZt ,aj;jpj;jpuij vOjpy; tz;W tplhyk; Mdhy; Nkw;F cyfj;ij mth;fspd; gzpapyhNa nty;y Ntz;bah fl;lahNk; jkpoPoj;Jf;F cz;L ,ijNa Njrpaj;jiyth; mth;fs; murpay; MAjkhf Ve;jpAs;sh;

,jdhy; mjpfk; ,uj;jk; rpe;jkhy; vkJ ,yf;filahyhk; vd ek;GfpNwd;!

தமிழீழத்தை பொறுத்தவரையில் சிறிலங்கா இரணுவ இயத்தித்திரதை எழுதில் வேண்று விடாலம் ஆனால் மேற்கு உலகத்தை அவர்களின் பணியிலாயே வெல்ல வேண்டியா கட்டயாம் தமிழீழத்துக்கு உண்டு இதையே தேசியத்தலைவர் அவர்கள் அரசியல் ஆயுதமாக ஏந்தியுள்ளர்

இதனால் அதிகம் இரத்தம் சிந்தமால் எமது இலக்கடையாலாம் என நம்புகிறேன்!

அது ஒரு செயற்கையான அமைதி-!

தவிர்க்க முடியாத அமைதி!

எல்லா கோவமும் எங்களிட்ட இருந்தும் ஏதும் செய்ய முடியாம இருக்கே -

என்று - மனசெல்லாம் வெறுப்பு-!

அது சரி - இந்த தலைப்பை ஆரம்பிச்ச கவிதா யார்? :roll: 8)

புலிகளின் அமைதி ஆபத்தானது என்று பலருக்கு தெரியவில்லை( 41 நாட்கள் அமைதியாக இருந்து 3 நாட்கள் மட்டும் பதில் சொன்ன மறவர்கள்)

  • தொடங்கியவர்

நீங்கள் சொல்வது சரி ஆனால் இலங்கை அரசாங்கம் ஒரு பக்கம் கொலை செய்து கொண்டு மறு பக்கம் பேச்சு என்று காலத்தையும் வீன் செய்யும் செயல்

  • தொடங்கியவர்

வணக்கம் வர்ணன்

நான் தான் கவிதா என்ன இந்த தலைப்புக்கு என்ன?

இது தான் தற்போது தேவையான தலைப்பு

  • தொடங்கியவர்
  • தொடங்கியவர்

விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியான மூது}ரின் ஆதியம்மன்கேணி என்னும் இடத்திலுள்ள விடுதலைப்புலிகளின் முன்னரங்க காவரண்மீது நேற்று முன்தினம் சிறிலங்கா இராணுவத்தினரும் ஒட்டுக்குழுக்களும் இணைந்து நாடாத்திய தாக்குதல் விடுதலைப்புலிகளினால் முறியடிக்கப்பட்டது. இதில் விடுதலைப்புலிகளுக்கு எவ்வித இழப்புக்களும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக திருமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலன் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினரிடம் முறையிட்டுள்ளனர். இச்சம்பவம் விடுதலைப்புலிகளை வலிந்து போருக்கும் இழுக்கும் சம்பவம் எனவும் இது போர் நிறுத்த மீறல் எனவும் எழிலன் முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

  • தொடங்கியவர்

துணை இராணுவக் குழுவினரது ஆயுதங்களை புலிகளே களைந்தால் நிலைமை மோசமாகிவிடும்: ஹக்ரூப் ஹொக்லெண்ட்

[சனிக்கிழமை, 1 ஏப்ரல் 2006, 06:16 ஈழம்] [ச.விமலராஜா]

துணை இராணுவக் குழுவினரது ஆயுதங்களை சிறிலங்கா அரசாங்கம் களைய மறுத்து புலிகளே களைந்தால் நிலைமை மோசமாகிவிடும் என்று இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுத் தலைவர் பதவியிலிருந்து விலகும் ஹக்ரூப் ஹொக்லெண்ட் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் கூறியுள்ளதாவது:

இந்த நாட்டின் அனைத்து நீர்ப் பரப்புகளும் சிறிலங்காவின் கடற்படையின் கட்டுப்பாட்டில் உள்ளவை. கடற்புலிகளுக்கு எதுவித உரிமையும் இல்லை. இதை விடுதலைப் புலிகள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை.

மற்றொரு கடற்படை தொடர்பான சர்வதேச அளவில் நடைமுறைகள் இல்லை. இப்போதுதான் நாம் இது தொடர்பிலான பிரச்சனைக்கு முகம் கொடுக்கிறோம். இது தொடர்பில் மேலதிகமாக நான் பேசவிரும்பவில்லை. அது ஆபத்தானதாக அமையும்.

கடற்பிரதேசத்தில் சிறிலங்கா கடற்படையினர் நடமாட்டத்தைத் தடுக்கும் வகையிலான விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல் கவலையளிக்கிறது.

சிறிலங்கா அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் யுத்தத்துக்கு தயாராக உள்ளனர். இது இயற்கையானது. ஆனால் அவர்களைக் கேட்டால் இல்லை என்றுதான் சொல்வார்கள். ஆனால் அவர்கள் தயாராகிக் கொண்டுதான் இருக்கிறார்கள். டிசம்பர் மற்றும் சனவரி மாத வன்முறைகளின் போது யுத்த நிறுத்த ஒப்பந்தம் முறியும் என்று நினைத்தேன். ஆனால் அது காப்பாற்றப்பட்டுவிட்டதன் மூலம் இருதரப்பினரும் அமைதி வழித் தீர்வை விரும்புவதாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இங்கே இராணுவ வழித் தீர்வு ஏற்படாது. ஏப்ரல் பேச்சுக்கள் நடைபெறும் என்ற நம்பிக்கை உள்ளது.

யுத்த நிறுத்தம் என்பது நிரந்தரத் தீர்வு அல்ல. துணை இராணுவக் குழுவினரது ஆயுதங்களை அரசாங்கம் களையாவிட்டால் பாரிய அச்சுறுத்தலாக அமையும்.

இக்குழுவினருக்கு இராணுவம் உதவி செய்வதற்கான ஆதாரம் எதுவும் இல்லை. ஆனால் அப்படிச் செய்தால் அது மிகப் பெரிய தவறு. விடுதலைப் புலிகள் தாங்களே இப்பிரச்சனைக்குத் தீர்வு காண்பதாக அறிவித்துவிட்டால் அது மிக மோசமான சூழ்நிலையை உருவாக்கிவிடும் என்று அச்சப்படுகிறேன்.

இருதரப்பு உயர்நிலை சந்திப்பு மிக அவசியமானது. இதை தள்ளிப்போடக் கூடாது. மக்கள் நிறைய எதிர்பார்க்கிறார்கள். இனியும் தாமதித்தால் நிலைமை மேலும் மோசமடையும். இருதரப்பு உயர்நிலை அரசியல் சந்திப்பு விரைவில் நடைபெறும் என்று நம்புகிறேன். பிரார்த்திக்கிறேன் என்றார் ஹக்ரூப் ஹொக்லெண்ட்.

  • தொடங்கியவர்

வாகரை உள்ளிட்ட 3 இடங்களில் புலிகள் மீது சிறிலங்கா இராணுவம் தாக்குதல்: ஒரு போராளி படுகாயம்

ஜசனிக்கிழமைஇ 1 ஏப்ரல் 2006இ 16:20 ஈழம்ஸ ஜமட்டக்களப்பு நிருபர்ஸ

மட்டக்களப்பு வாகரைப் பிரசேம்இ சம்பூர் நோர்வேத் தீவு உள்ளிட்ட மூன்று இடங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது சிறிலங்கா இராணுவத்தினர் இன்று சனிக்கிழமை தாக்குதல் நடத்தினர்.

வாகரையில் புலிகள் மீது சிறிலங்கா இராணுவத்தினர் இன்று சனிக்கிழமை நடத்திய தாக்குதலில் போராளி ஒருவர் காயம் அடைந்துள்ளார்.

வாகரை பனிச்சங்கேணிக்கும் மருதங்கேணிக்கும் இடைப்பட்ட பகுதியில் இன்று காலை 8.30 மணியளவில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சிறிலங்காப் படையினரும் துணை இராணுவத்தினரும் அப்பகுதிக்கு தாக்குதல் நடத்தும் நோக்கில் வந்து தங்கியிருந்தனர்.

அப்போது அங்கு சென்ற போராளிகள் மீது படையினரும் துணை இராணுவக் குழுவினரும் தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிச் சென்றனர். இத்தாக்குதலில் போராளி ஒருவர் காயம் அடைந்தார்.

இதனிடையே வாகரை தோணிதாழ்ந்த கற்பகுதியிலும் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட தாக்குதலில் பல வீடுகள் சேதம் அடைந்துள்ளன. கால்நடைகள் சிலவும் கொல்லப்பட்டுவிட்டன.

அப்பகுதிக்கு வந்த சிறிலங்காப் படையினரும் துணை இராணுவக் குழுவினரும் ஆர்.பி.ஜி தாக்குதலை மேற்கொண்டு விட்டுத் தப்பிச் சென்றனர்.

சிறிலங்காப் படையினரின் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான இத்தகைய அத்துமீறிய தாக்குதல்ச் சம்பவங்கள் கடும் கண்டனத்துக்குரியன என்று போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழுவிடம் திருமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.எழிலன் முறையிட்டுள்ளார்.

சம்பூர் நோர்வேத் தீவுப் பகுதியிலும் கடற் பகுதியில் மீனவர்களை நோக்கி சிறிலங்காக் கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இச்சம்பவம் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெற்றுள்ளது.

இச்சம்பவம் குறித்தும் போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழுவிடம் எழிலன் முறைப்பாடு செய்துள்ளார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.