Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ரசிகனே.. என் அருகில் வா..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரசிகனே.. என் அருகில் வா.. - இளையராஜா

முதலில் காது ஒலிப்பான் முக்கியம்.. :D ரசிகனே என்னருகில் வா என்று இளையராஜா பாடும்போது அருகில் வரவேண்டாமா? :rolleyes:

ஒரு இறுவட்டு வாங்கியபோது இந்தப் பாட்டும் இருந்தது. பழைய பாட்டுத்தான்.. ஆனால் இப்போது வருவது எல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிட்டுவிடும்போல் இருக்கிறது.. :D அன்றைய ஒலிப்பதிவின் தரம் மிகக் குறைவானது.. இன்று உள்ள தரம் போல் இருந்திருந்தால்.. unsure.gif

பாடல் காரில் ரிப்பீட் மோடில் சில நாட்களாக இருக்கு.. :D

இந்தப்படம் வெளியாகவில்லை.. படம் மணிப்பூர் மாமியாராம்.. :wub: ஆரம்ப காலத்தில் இளையராஜாவின் பாடல்களுக்கு இருந்த சிறு எதிர்ப்பும் பாடலில் வருகிறது.. unsure.gif

பாடல்களின் வரிகளை நான் பொதுவில் அவதானிப்பதில்லை.. பின்னணியில் இசை கோர்க்கப்பட்டிருக்கும் விதம் மட்டுமே என் காதில் விழும்.. ஆனால் இந்தப் பாடலில் சரணங்கள் கவனிக்க வைக்கின்றன.. இளையராஜா ரசிகனான என்னை நோக்கிப் பாடுவது போல் இருக்கு.. :lol:

பாடல்:

சரணம் 1:

இதயமே நீ ஒரு மலர்..

உள்ளூர என்னென்ன வாசம்..

இனிமைகள் உன் நகைப்பிலே

இளமைகள் உன் அணைப்பிலே..

காணாத ஆனந்தம் ஊற்றாக ஆரம்பம்..

காலம் யாவும் இன்பம்.. இன்பம்..

சரணம் 2:

ஸ்வரங்களில் ஒரு அதிசயம்..

சொன்னாலும் கேட்டாலும் இன்பம்..

அலையிலும் ஒரு ஸ்ருதி வரும்..

அசைவிலும் ஒரு ஜதி வரும்..

ஆறோடும் நீரோட்டம்.. அங்கேயும் ஓர் ராகம்..

கேட்கும் யாவும்.. நாதம்.. கீதம்..

சரணம் 3:

ஆணும், பெண்ணுமாக முதல் இரண்டு சரணங்களும் பாடிய பின், இந்தச் சரணத்தில் ஆண்குரல் மட்டுமே வருகிறது.. biggrin.gif

தெரிந்ததை நான் கொடுக்கிறேன்..

தெம்மாங்கு ராகங்கள் சேர்த்து..

தெரிந்ததை நான் கொடுக்கிறேன்..

தெம்மாங்கு ராகங்கள் சேர்த்து..

இதயங்கள் சில எதிர்க்கலாம்..

எதிர்ப்பவர் அதை ரசிக்கலாம்.. :D

இதயங்கள் சில எதிர்க்கலாம்..

எதிர்ப்பவர் அதை ரசிக்கலாம்..

நாம் காணும் உள்ளங்கள் நல்வாழ்த்துச் சொல்லுங்கள்..

நாளும் நாளும்.. இன்பம் இன்பம்..

மூன்றாவது சரணத்திற்கு முந்திய இசையில், குரலின் சுரம் மாறும் இடத்தில் கிட்டாரின் சுரத்தையும் மாற்றாமல் பிந்தி மாற்றுவது இளையராஜாவின் தனி முத்திரை.. :rolleyes: நேரக்கணக்கு 3:32 இல் குரலின் சுரம் மாறுவதையும், கிட்டாரின் சுரம் இரண்டு வினாடிகள் கழித்து 3:34 இல் அந்த இடத்திற்கு வந்து சேர்வதையும் கவனியுங்கள்.. புல்லரிக்கச்செய்யும் இத்தகைய நொடிகளைத்தான் ஆங்கிலத்தில் Goosebump என்று சொல்வார்கள்.. :lol:

நீங்களும் கேட்டு ரசிக்கலாமே.. :D

இசைக்கலைஞன்,

ஒரு விளையாட்டாக இருக்கட்டும், ஆராய்ச்சியாக இருக்கட்டும், இசையாகட்டும் இலக்கியமாகட்டும் சாதாரண ஒரு நாளாந்த காட்சியாகட்டும், ஏதாயினும் அதன் நுணுக்கங்களை உணரும் அறிவு பார்வையாளனிற்கு இருக்கும்போதே அதன் உன்னதம் உச்சத்தில் உணரப்படும் என்பதற்கு உங்ளின் இந்தப் பதிவும் ஒரு உதாரணம். இசை எனக்குள் என்ன உணர்வினை உருவாக்குகின்றதோ அந்த உணர்வை மட்டுமே எனக்கு ரசிக்கத்தெரியும். அதைத் தவிர இசையின் அடிப்படைகள் கூடச் சற்றும் தெரியாது. அந்த வகையில் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் 3:32 நேரத்தில் நிகழும் மாற்றம் எல்லாம் இவ்வாறு யாராவது சுட்டிக்காட்டாது போயின் நிச்சயம் என்போன்றவர்களால் இலகுவில் அனுபவிக்க முடியாது. சுட்டிக்காட்டப்படும் போது எம்மாலும் ரசிக்க முடிகிறது. தொடருங்கள் இது போன்ற பதிவுகளை.

அண்மையில் ஒரு செய்தி படித்தேன். எத்தனை சிக்கலான இசைக்கோர்வையாக இருப்பினும் எமது மூளை அதனை எளிமையான வடிவமாகச் சுருக்கியே உணர்த்துமாம். ரெக்னோ, பொப் போன்றவை 80 வீதம் வரை எமது மூளையால் சுருக்கப்பட்டு உணர்த்தப்படக்கூடியனவாம். பேற்றோவன் போன்றவர்களின் நுணுக்கமான படைப்புக்களை அதிகபட்சம் நாற்பது வீதம் வரை தான் மூளையால் எளிமையாக்கி உணர்த்த முடியுமாம். எவ்வளவிற்கெவ்வளவு ஒரு இசை சுருக்கப்படக்கூடியதாக இருக்கின்றதோ அவ்வளவிற்கவ்வளவு அது அதிகபட்சம் மக்களால் கொண்டாடப்படுமாம். இது பற்றிய உங்கள் பார்வை எவ்வாறு இருக்கின்றது?

நீங்கள் இசையை முறையாகக் கற்றீர்களா? ஏதாவது இசை உபகரணம் வாசிபவரா?

நன்றி

Edited by Innumoruvan

பெரிதாகப் பெயரெடுக்காத நல்ல பாடல். அதே காலகட்டத்தில் வந்த இளையராஜாவின் பாடல்களின் பாணியிலிருந்து வேறுபட்டதாக இருப்பதை உணர்ந்திருக்கிறேன். ஏனென்று தெரியவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இசைக்கலைஞன்,

ஒரு விளையாட்டாக இருக்கட்டும், ஆராய்ச்சியாக இருக்கட்டும், இசையாகட்டும் இலக்கியமாகட்டும் சாதாரண ஒரு நாளாந்த காட்சியாகட்டும், ஏதாயினும் அதன் நுணுக்கங்களை உணரும் அறிவு பார்வையாளனிற்கு இருக்கும்போதே அதன் உன்னதம் உச்சத்தில் உணரப்படும் என்பதற்கு உங்ளின் இந்தப் பதிவும் ஒரு உதாரணம். இசை எனக்குள் என்ன உணர்வினை உருவாக்குகின்றதோ அந்த உணர்வை மட்டுமே எனக்கு ரசிக்கத்தெரியும். அதைத் தவிர இசையின் அடிப்படைகள் கூடச் சற்றும் தெரியாது. அந்த வகையில் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் 3:32 நேரத்தில் நிகழும் மாற்றம் எல்லாம் இவ்வாறு யாராவது சுட்டிக்காட்டாது போயின் நிச்சயம் என்போன்றவர்களால் இலகுவில் அனுபவிக்க முடியாது. சுட்டிக்காட்டப்படும் போது எம்மாலும் ரசிக்க முடிகிறது. தொடருங்கள் இது போன்ற பதிவுகளை.

உங்கள் கருத்திற்கும், ஊக்கத்திற்கும் நன்றிகள் இன்னுமொருவன்.. :D இதை முதலில் இளையராஜாவின் இனிய கானம் பகுதியில் சேர்க்க நினைத்தேன்.. பிறகு பத்தோடு பதினொன்றாகப் போய்விடுமே என்று அங்கு இணைக்கவில்லை.. :D

இதைப்போல பல நூறு பாடல்கள்.. ஒவ்வொன்றாக தனித்தனி திரியாக இணைக்கலாம் என்று இருக்கிறேன். உங்கள் ஆதரவு உள்ளதுதானே??!! :wub:

இசையமைப்பின் வெற்றியில் ஒருபெரும் பங்கு நான் உணர்ந்துகொண்ட வகையில், ரசிகன் எதிர்பார்க்கும் இடத்தில் அவன் எதிர்பார்க்கும் மெட்டோ அல்லது இசைக் கோர்வையோ வரக்கூடாது.. இந்தப் பாடலின் கிட்டார் இசையிலும் அதையே பயன்படுத்தியிருக்கிறார். 3:43 இல் இருந்து 3:45 வரை கூட அதே உத்திதான்.. :D

அண்மையில் ஒரு செய்தி படித்தேன். எத்தனை சிக்கலான இசைக்கோர்வையாக இருப்பினும் எமது மூளை அதனை எளிமையான வடிவமாகச் சுருக்கியே உணர்த்துமாம். ரெக்னோ, பொப் போன்றவை 80 வீதம் வரை எமது மூளையால் சுருக்கப்பட்டு உணர்த்தப்படக்கூடியனவாம். பேற்றோவன் போன்றவர்களின் நுணுக்கமான படைப்புக்களை அதிகபட்சம் நாற்பது வீதம் வரை தான் மூளையால் எளிமையாக்கி உணர்த்த முடியுமாம். எவ்வளவிற்கெவ்வளவு ஒரு இசை சுருக்கப்படக்கூடியதாக இருக்கின்றதோ அவ்வளவிற்கவ்வளவு அது அதிகபட்சம் மக்களால் கொண்டாடப்படுமாம். இது பற்றிய உங்கள் பார்வை எவ்வாறு இருக்கின்றது?

நீங்கள் இசையை முறையாகக் கற்றீர்களா? ஏதாவது இசை உபகரணம் வாசிபவரா?

நன்றி

நல்ல தகவல்கள்.. முதல்தரம் கேட்கும்போது சில பாடல்கள் எடுபடாமல் போவதற்கும், பிறகு கனகாலம் கழித்து அப்பாடல்கள் இனிமையாக இருப்பதற்கும் இந்த மூளையின் வேலைதான் காரணம் போல.. :unsure:

மேற்கத்தைய முறைப்படி இப்பாடலில் வரும் வாத்தியத்தைக் கற்று இருக்கிறேன்.. :D

பெரிதாகப் பெயரெடுக்காத நல்ல பாடல். அதே காலகட்டத்தில் வந்த இளையராஜாவின் பாடல்களின் பாணியிலிருந்து வேறுபட்டதாக இருப்பதை உணர்ந்திருக்கிறேன். ஏனென்று தெரியவில்லை.

கருத்துக்கு நன்றிகள் தப்பிலி.. :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.