Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ். மேதின கூட்டம்- தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு நல்ல படிப்பினை- சிறிதரன் எம்.பி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

sritharan_mp1.jpg

மேதினக் கூட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி துரோகம் செய்து விட்டதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு இது நல்ல படிப்பினை என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் கனடா வானொலி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.

பேரினவாத கட்சியுடன் சேர்ந்தால் என்ன நடக்கும் என்பதற்கு யாழ்ப்பாணத்தில் நடந்த மேதினக் கூட்டம் நல்ல பாடங்களைக் கற்று தந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நடத்திய மேதின கூட்டம் வரலாற்றில் மிகப்பெரிய தவறு என்றும் தலைமை எடுத்த முடிவுக்கு கட்டுப்பட்டு தானும் அந்த மேதின கூட்டத்தில் ஒரு பார்வையாளராக கலந்து கொண்டேன் என்றும் சிறிதரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் மாவை சேனாதிராசாவும், இரா.சம்பந்தனும் உரையாற்றியிருந்தனர். அதேசமயம் இந்தக் கூட்டத்தை யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கு மிகவும் முயற்சிகள் எடுத்திருந்த மனோ கணேசன் இந்தக் கூட்டத்தில் பேச அனுமதிக்கப்படவில்லை என்றும், விஜயகலா மகேஸ்வரன், யோகராஜன் போன்றவர்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டதாகவும் சிறிதரன் எம்.பி கூறினார்.

இது ஐக்கிய தேசிய கட்சியின் வரலாற்று ரீதியான துரோகத்தின் ஒரு கட்டமாகவே பார்க்க முடிகிறது என்றும் – நாங்கள் நல்ல பாடங்களை மேதினத்தில் கற்றிருக்கிறோம் என்றும் சிறிதரன் கூறினார். இந்த மேதினக் கூட்டத்தை விஜயகலாவும் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதேச பொறுப்பாளர்களுமே ஒழுங்கு செய்ததாக ரணில் விக்கிரமசிங்கவும் அங்கு குறிப்பிட்டதாகவும் அவர் கூட்டிக்காட்டினார்.

http://www.eeladhesa...chten&Itemid=50

  • கருத்துக்கள உறவுகள்

பள்ளிக்கூடத்தில சோதனையில கூட ஒரு தரம் பெயில் விட்டா வகுப்பு இறக்கி வைச்சிருப்பாங்க. ஆனால் நம்ம அரசியல்வாதிங்க.. மக்கள் சொல்லச் சொல்ல ஒரே தவறை ஆண்டாண்டா விட்டுக் கொண்டு.. திரும்பத் திரும்ப பாடம் படிப்பதாக அறிக்கை விடுவதை நினைச்சா அழுகிறதா சிரிக்கிறதா என்று தெரியல்ல.

பாவம் இவங்கள நம்பின.. தேசிய தலைவரும்.. போராளிகளும்.. மக்களும்..! :(:icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

தேசியத்தலைவரும் போராளிகளும் யாரையும் நம்பவில்லை.

மக்கள் நம்பும்படியாக அவர்கள் நடந்தார்கள்.

மக்கள் கூட்டமைப்பை நம்பினார்கள்.

கூட்டமைப்பு மக்களை ஏமாற்றியது.

சம்பந்தர் கூட்டமைப்பைத் தவறாக வழி நடத்துகின்றார்.

அதற்குரிய தண்டனையை மக்கள் அவருக்கு நிச்சயம் அளிப்பார்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

போராட்டத்தை அழிக்க சிங்கள அரசாங்கத்துக்கு இவர்கள் எப்படிஎல்லாம் உதவி இருப்பார்கள் என்பது இவர்களின் தற்கால நடவடிக்கைகளை பார்க்கும்போது தெரிகின்றது

போராட்டத்தை அழிக்க சிங்கள அரசாங்கத்துக்கு இவர்கள் எப்படிஎல்லாம் உதவி இருப்பார்கள் என்பது இவர்களின் தற்கால நடவடிக்கைகளை பார்க்கும்போது தெரிகின்றது

ஜனநாயக வேடம் போட்ட இந்த ஓநாய்களை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

நம்ம தந்தை செல்வா சொல்லிட்டு போனதை , எங்கட தேசியதலைவர் நீருபித்ததை

உலகம் , மற்றும் அனைவருக்கும் புரிந்ததை இந்த பண்ணிகள் எத்தனை நாளுக்குத்தான்

சொல்லி அரசியல் செய்வாங்கள் . சம்பந்தன் ஒரு விசமி, பயம் விட்டுபோயிட்டுது .....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.