Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆண்டவரின் எச்சங்கள் பாகம் 01

Featured Replies

" ஆண்டவர் " என்ற சொல் ஆன்மீகரீதியில் புனிதமானது . மாறாக அதே சொல் எமது இனத்தைப் பொறுத்தவரையில் பல ரணங்களையும் , ஆறாவடுக்களையும் விட்டுச் சென்றிருக்கின்றது . ஒரு தேசிய இனத்திற்கு அதன் விடுதலை வேட்கை எவ்வளவு அத்தியாவசியமானதோ அதேயளவு அந்த இனத்தின் பாரம்பரிய வரலாறும் அத்தியாவசியமாகின்றது . வரலாறுகள் தெரியாமல் நுனிப்புல் மேய்வது போல் குறுகியகண்ணோட்டத்தில் வரலாற்றைப் பார்த்து ஓர் இனம் அதற்கான விடுதலையை முன்னெடுக்குமனானால் , அது தற்கொலைக்கு ஒப்பானது என்பது என்னது தாழ்மையான அபிப்பிராயமாகும் . எம்மை ஆண்டவர்கள் ஆண்டது போதாதென்று " நீங்கள் யாவருமே எங்கள் அடிமைகள் " என்பதைத் தினமும் சொல்லாமல் சொல்கின்ற மௌனசாட்சிகளாகத் தங்கள் எச்சங்களை எமது பாரம்பரிய பூமியிலே விட்டு விட்டுச் சென்றுள்ளார்கள் . அந்த எச்சங்கள் சொல்கின்ற கதைகளை நான் படித்த , கேட்ட , வாசித்த நூல்கள் துணைகொண்டு இளையவர்களாகிய உங்களிடம் சேரப்பண்ணுகின்றேன் . இந்த "ஆண்டவரின் எச்சங்கள் " சொல்கின்ற கதைகளிற்கு போரட்டத்திலுள்ள நேரடிப் பங்காளிகளும் , அரசியல் பங்காளிகளும் தங்கள் " அனுபவங்கள் " என்கின்ற கருத்துக்களை முன் வைத்தார்களானால் இந்தப்பதிவு மேலும் சிறப்புறும் என்பது எனது தாழ்மையான எண்ணமாகும் .

நேசமுடன் கோமகன் .

**************************************************************************

கடற்கோட்டை ( அம்மன்னீல் கோட்டை ) .

Hammanheil_Fort.JPG

காரைநகர் தீவுக்கும், வேலணைத் தீவுக்கும் இடையில் அமைந்துள்ள ஒடுங்கிய கடற்பகுதியில் உள்ள சிறிய மணற்திட்டு ஒன்றில் இந்தக் கோட்டை அமைந்துள்ளது. இவ்வொடுங்கிய கடற்பகுதியே பாக்கு நீரிணைப் பகுதியில் இருந்து யாழ்ப்பாண நகரத்தையொட்டி அமைந்துள்ள நீரேரிப் பகுதிக்குள் வருவதற்கான முக்கிய வழியாகும். இந்த வழியைப் பாதுகாப்பதற்காகவே இந்தக் கோட்டை அமைக்கப்பட்டது.

1620 ஆம் ஆண்டில் போத்துக்கீசர் யாழ்ப்பாண இராச்சியத்தை முழுமையாகக் கைப்பற்றித் தமது ஆட்சியின்கீழ் கொண்டுவந்த பின்னர், பாக்கு நீரிணைப்பகுதியில் இருந்து யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குள் வருவதற்கான கடல்வழியின் பாதுகாப்புக்காக இக் கோட்டையை அமைத்தனர்.

1658 ஆம் ஆண்டில் ஒல்லாந்தர் யாழ்ப்பாணக் கோட்டையை முற்றுகை இட்டபோது இக் கோட்டையையும் முற்றுகை இட்டுக் கைப்பற்றிக் கொண்டனர். ஒல்லாந்தர் காலத்திலும் யாழ்ப்பாணத்தின் பாதுகாப்புக்கு இன்றியமையாததாக ஒன்றாக இந்தக் கோட்டை கருதப்பட்டு முற்றிலும் ஒல்லாந்தரைக் கொண்ட படையினர் இக்கோட்டையில் நிறுத்தப்பட்டனர்.

1796 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணம் பிரித்தானியரின் கைக்கு வந்தபோது , இந்தக் கோட்டையும் அவர்களின் ஆளுகைக்குள் வந்தது. எனினும் இவர்கள் காலத்தில் இதன் பாதுகாப்பு தொடர்பான முக்கியத்துவம் குறைந்து விட்டது. 1930களில் இது நோயாளர்களைத் தனிமைப்படுத்தும் நிலையமாகப் பயன்பட்டதாகும் .

இந்தக் கோட்டையானது எட்டுப் பக்கங்களைக் கொண்ட பல்கோண வடிவம் கொண்டது. இதன் தெற்குப் பக்கத்தில் உள்ள சுவரில் கோட்டைக்கான வாயில் அமைந்துள்ளது. வடகிழக்குப் பக்கச் சுவரில் முக்கோண வடிவிலான ஒரு நீட்சி காணப்படுகிறது. ஒல்லாந்தர் காலத்திலும் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரையிலும் உள்ளே இரண்டு சிறிய கட்டிடங்கள் அமைந்திருந்தன.

மூலம் விக்கிப்பீடியா

Edited by கோமகன்

18739488.jpg
  • தொடங்கியவர்

மேலதிகமாகப் படத்தை இணைத்துப் பதிவை மெருகேற்றிய ஈசனுக்கு மிக்க நன்றிகள் .

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பகிர்வுக்கு கோமகன், காரைநகர் நேவியின் பதுங்குமிடம்

Edited by உடையார்

  • தொடங்கியவர்

நன்றி பகிர்வுக்கு கோமகன், காரைநகர் நேவியின் பதுங்குமிடம்

உண்மைதான் உடையார் , ஆண்டவரின் ஆக்கிரமிப்பு இக்கோட்டையைப் போறுத்தவரையில் தொடர்கதையானது ஒன்று . 84 ற்குப் பின்பு காரைநகர் படைமுகாம் இந்தக் கோட்டையிலிருந்து ஈரோஸ் அமைப்பால் தாக்கப்பட்டதாக ஞாபகம் . ஆனால் அது தோல்வியில் முடிவடைந்தது . பின்பு பல தடவைகள் தாக்குதல்ள் மேற்கொள்ப்பட்டன . மிக்க நன்றிகள் உங்கள் கருத்துப்பகிர்வுகளுக்கு .

68,69 களில் உள்ளே  மூன்று நான்கு தடவை போயிருக்கின்றேன்.

  • தொடங்கியவர்

68,69 களில் உள்ளே மூன்று நான்கு தடவை போயிருக்கின்றேன்.

மிக்க நன்றிகள் உங்கள் அனுபவப் பகிர்விற்கு சிற்பி . 68 69களில் கோட்டையின் எப்படி இருந்தது என்று சொல்லமுடியுமா ? ஏனெனில் நாங்கள் பிறப்பதற்கு முன்பே நீங்கள் போய் பார்த்திருக்கின்றீர்கள் .

ஆம் .அப்போ கோட்டையின் உள்வாசலில் வாள் அதாவது சுறாமீனின் வாள் ஒவ்வொரு இடத்திலும் காணப்படும். உள்ளே வொலிபால் விளையாடினேன்.உள்ளேபிரமாண்டமான அறைகள் உள்ளது ஆனால் எல்லாமே பூட்டியிருந்தன அப்போ எந்தப்பிரச்சனையுமில்லாத காலம்.போன மாதம் போனபோது அதே கோட்டையை அம்மைஆஸ்பத்திரி இருந்த  இடத்திலிருந்துதான் பார்க்கமுடிந்தது.காலம் அப்படி.

அதுமட்டுமல்ல அங்குதான் சேகுவரா ( 1972 என்று நினைக்கின்றேன்)முக்கியபுள்ளிகள்

சிறை வைக்கப்பட்டார்கள்:

  • தொடங்கியவர்

மிக்க நன்றிகள் சிற்பி உங்கள் அனுபவப் பகிர்வுகளுக்கு . இப்படியான அனுபவக் கருத்துகளையே இந்தப் பதிவில் எதிர்பார்க்கின்றேன் . மிக்க நன்றிகள் சேகுவாராவையும் தொட்டதற்கு .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.