Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வெளிநாட்டு பரிந்துரைகள் மூலம் தீர்வு வழங்க முடியாது - ஜீ.எல்.பீரிஸ் வொஷிங்டனில் அறிவிப்பு (காணொளி)

Featured Replies

உள்நாட்டுத் தீர்வின் மூலம் இலங்கையில் நீடிக்கும் அமைதி, உறுதிப்பாடு மற்றும் வளர்ச்சி என்பன ஏற்படுத்தப்படும் எனவும் சர்வதேச பரிந்துரைகளால் அவை செயற்படுத்தப்பட மாட்டாதெனவும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

வொஷிங்கடன் சென்றடைந்துள்ள வெளிவிவகார அமைச்சர், அங்கு இடம்பெற்ற நிகழ்வொன்றில் கூடியிருந்தவர்கள் மத்தியில் உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது,

இலங்கையில் பயங்கரவாத புலிகள் அழிக்கப்பட்டு மூன்று வருடங்கள் கடந்துள்ளன. சிறந்த ஒரு வாய்ப்பை நாங்களே தற்போது ஏற்படுத்திக் கொண்டுள்ளோம். இனப்பிரச்சினையை தீர்க்க தீர்வு அவசியம் என்பதையும் அது உள்நாட்டு தீர்வாக இருக்க வேண்டும் என்பதையும் நாம் உணர்ந்துள்ளோம்.

அது வெளிநாட்டுக் கொடுப்பனவாகவோ வெளிநாட்டுத் தயாரிப்பாகவோ இருக்க முடியாது. அது வரலாற்றுத் தேவையை பூர்த்தி செய்ய நம்பிக்கை அளிப்பதாக இருக்காது. உள்நாட்டில் இருந்து கொண்டுவரப்படும் தீர்வு அனைவரும் விரும்பக்கூடியதாக இருக்கும்.

இலங்கை தமது கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்த ஆரம்பித்துள்ளது. அர்த்தமுள்ள முறையில் அதனை செயற்படுத்த விசேட குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

இடம்பெயர்ந்த மக்களில் 98% மீள்குடியேற்றப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வாழ்வாதார வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. முன்னாள் புலிகளும் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்டுள்ளனர். இன உறவை வலுப்படுத்த மொழி பயிற்சிகளை வழங்கி வருகிறோம். வடக்கில் மீன்படி, விவசாயம் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது.

சமரசத்தை ஏற்படுத்த முயற்சித்து வருகிறோம். அதேபோல் பொருளாதார வளர்ச்சியிலும் கவனம் செலுத்தி வருகிறோம். வடக்கு கிழக்கில் 22 சதவீத பொருளாதார வளர்ச்சியும் முழு இலங்கையில் 8.3 சதவீத பொருளாதார வளர்ச்சியும் 2011ம் ஆண்டு பதிவாகியுள்ளது.

இவ்வாறு வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டார்.

இதேவேளை, முன்னதாக கடந்த செவ்வாயன்று வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் அமெரிக்க செனட் சபை உறுப்பினர் ஜோன் மிக்கெய்னை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.

அதன் பின்னர் செனட்டர் ஜிம் வெப்யையும், ஜேம்ஸ் இன்ஹோப்பையும் இக்குழுவினர் சந்தித்து கலந்துரையாடினர்.

இதேவேளை, நாளை 17ம் திகதி வெள்ளிக்கிழமை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் மற்றும் அமெரிக்க இராஜாங்க செயலர் ஹிலாரி கிளின்டன் ஆகியோரை வெள்ளை மாளிகையில் சந்திக்கவுள்ளார்.

காணொளியை காண.....

http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=4555:2012-05-16-05-36-45&catid=1:latest-news&Itemid=18

கிளாரியின் முன்னால் கையைப் பிசைந்து கொண்டு நிற்கப் போகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

யார் கூட்டிய கூட்டம்? அமெரிக்கர்கள் கூட்டியதா அல்லது இலங்கையர்கள் கூட்டியதா? என்பதைத் தெளிவாக அறியாமல் கருத்துக் கூறமுடியாது. பேராசிரியர் பீரிஸ் சும்மா வாய்க்கு வந்தபடி பேசி முட்டாளாக முயற்சிக்கமாட்டார்;. வெளிநாட்டிலிருந்து இறக்கினாலும் உள்நாட்டிலேயே கண்டுபிடித்தாலும் பெரிய வேறுபாடுகளைக் காணமுடியாது என்பது அவருக்குத் தெரியும். அங்கே யாராவது முட்டாள்களைத் திருப்திப்படுத்தவே அவ்வாறு எதையாவது கூறித் தப்பிக்கப் பார்த்திருப்பார்.

இலங்கைக் குழுவிடம் தெளிவான தீர்வை எதிர்பார்த்துள்ளது அமெரிக்கா: நியுயோர்க் செய்தியாளர் தகவல்

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கான தெளிவான வரைபு ஒன்றுக்கு குறைவான எந்தவொரு திட்டத்தையும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் ஏற்றுக்கொள்ள வாய்ப்பில்லை என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றின் நியுயோர்க் செய்தியாளர் தகவல் வெளியிட்டுள்ளார்.வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசை நாளை சந்திக்கவுள்ள அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரன் இதுகுறித்து வலியுறுத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.இலங்கை குழுவிடம் இருந்து தெளிவானதொரு தீர்வை தாம் எதிர்பார்த்துள்ளதாகவும், அதற்குக் குறைவான எதையும் அவர்களிடம் இருந்து வாங்கமாட்டோம் என்றும் இலங்கையின் மனிதஉரிமைகள் குறித்து ஆர்வம் கொண்டுள்ள சில செல்வாக்குள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களிடம், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் கூறியுள்ளதாகவும், அந்த செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.இதற்கிடையே வெளிவிவகாரக் குழுவில் அங்கம் வகிக்கும் அமெரிக்க செனட்டர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை கடந்தவாரம் சந்தித்த அமெரிக்க தமிழ் அரசியல் நடவடிக்கைக் குழுவினர், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைத் தீர்மானத்தை இலங்கை நடைமுறைப்படுத்த, பீரிசிடம் அழுத்தம் கொடுக்குமாறு கேட்டுள்ளனர்.அத்துடன் ஜெனிவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்த உறுதியாக முடிவெடுக்கும்படி, வெளிவிவகார அமைச்சரிடம் வலியுறுத்துமாறு கோரும் கடிதம் ஒன்றை அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரனுக்கு அமெரிக்க தமிழ் அரசியல் நடவடிக்கை குழு அனுப்பி வைத்துள்ளது.அதேவேளை, வெளிவிவகார அமைச்சருடன் மனிதஉரிமை விவகாரங்கள் தொடர்பாக இறுக்கமாகப் பேச வேண்டும் என்று அனைத்துலக மனிதஉரிமை அமைப்புகள் ஹிலாரி கிளின்ரனுக்கு அழுத்தம் கொடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.http://news.lankasri.com/show-RUmqyFSbOVgr1.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.