Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிணறு வெட்ட கிழம்பிய பூதம். பாகம் 3

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிணறு வெட்ட கிழம்பிய பூதம். பாகம் 3

இந்த வார ஒரு பேப்பரிற்காக சாத்திரி

வாசகர்களே இந்தப் பாகத்தில் மிகுதி விடயங்களிற்குள் நுளைவதற்கு முன்னர். தாயகத்தில் போரால் பாதிக்கப் பட்ட மக்களிற்கு உதவுதாக கூறிக்கொண்டு இயங்கும் நம்பிக்கை ஒளி என்கின்ற அமைப்பை பற்றியும் சிறிது பார்த்துவிடுவோம். 2009 ம் ஆண்டு மேமாதம் தாயகத்தில் புலிகளின் ஆயுதப் போர் முடிவடைந்து விட்ட நிலையில் பெருமளவு போராளிகள் காயமடைந்தும் அங்கவீனர்களாகவும் இலங்கையரசிடம் சரணடைந்ததன் பின்னர். அவர்களிற்கு ஏதாவது உதவவேண்டும் என்கின்ற நோக்குடன் கனடாவில் இருக்கும் ஒரு புலிகள் அமைப்பின் முன்னைநாள் போராளியால் வெளிநாடுகளில் வாழும் முன்னை நாள் புலிகள் அமைப்பு போராளிகள் பலரையும் இணைத்து உருவாக்கபட்டதுதான் இந்த நம்பிக்யொளி அமைப்பு.இது பின்னர் பிரான்ஸ். பிரித்தானியா டென்மார்க் என்று ஜரோப்பா மற்றும் ஸ்கன்டிநேவிய நாடுகளிற்கும் விரிவாக்கப்பட்டு அந்தந்த நாடுகளில் ஒவ்வொரு குழுக்கள் அமைக்கப்பட்டு அதற்கென ஒரு பொறுப்பாளரும் நியமிக்கப் பட்டதோடு அந்தந்த நாடுகளில் அந்த அமைப்பை பதிந்து இயங்கவும். அதே நேரம் முன்னை நாள் போராளிகள் அல்லது புலிகள் என்கிற எவ்வித அடையாளங்களுமின்றி பாதிக்கப்பட்ட போராளிகளிற்கு உதவுவதுதான் இதன் நோக்கம். அன்றைய காலத்தில் நேசக்கரம் என்னும் அமைப்புடன் இணைந்து நானும் தாயகத்து மக்களிற்கு உதவிக்கொண்டிருந்த காலகட்டம்.(தற்சமயம் அந்த அமைப்பில் இல்லை)

நம்பிக்கையொளி அமைப்பினை உருவாக்குவதற்காகவும் அதன் சட்ட வரைபுகளிற்காகவும் எனது உதவியினையும் அந்த கனடிய நண்பர் நாடியிருந்தார். அதனடிப்படையில் நம்பிக்கையொளியின் உருவாக்கத்திற்கும் மற்றும்.உதவி கோருபவர்களின் விபரங்களை பரிமாறுதல் மற்றும் வழங்கப்பட்ட உதவிகள் ஒருவரிற்கே மீண்டும் கிடைக்கமல் அவற்றை சரிபார்த்தல் என பல வழிகளிலும் நம்பிக்கையொளி அமைப்பிற்கு உதவிகளும் செய்திருந்தேன். இப்படியான காலகட்டத்தில் தான் இலண்டனில் நம்பிக்கையொளி அமைப்பினை தான் பதிந்து தருவதாக ஸ்கந்தா முன்வந்திருந்தார். இவர் ஏற்கனவே புலிகள் அமைப்பு ஆதரவாளர் என்பதோடு பிரித்தானிய தமிழர் பேரவை உறுப்பினராக இருந்ததாலும் நன்கு அறியப்பட்டிருந்தார். எனவேதான் பதிவு பொறுப்பு அவரிடம் கொடுக்கப்பட்டிருந்தது. இதே நேரத்திலேயே ஸ்கந்தா ரிசியையும் பலரிற்கு அறிமுகப்படுத்தி ரிசியின் பொறுப்பில் I T S O ம் உருவாக்குகின்றார்.இதன்பின்னர் தாயகத்திலிருந்து முன்னை நாள் போராகளாகவிருந்து சரணடைந்தவர்கள் மற்றும் சரணடைந்து விடுதலை பெற்றவர்களை வைத்து நம்பிக்கையொளி நிறுவனம் பாதிக்கபட்டவர்களின் தகவல்களை சேகரிக்கதொடங்கியது. அப்படி சேகரித்த தகவல்களை வெளிநாடுகளில் வாழும் தமிழர்களிடம் கொண்டு சென்று உதவிகளை பெற்று வழங்கிவந்தனர்

.ஆரம்பத்தில் எல்லாம் நன்றாகவே நடந்தது. ஆனால் நாள் செல்லச் செல்ல நம்பிக்கையொளி அமைப்பின் இலண்டன் கிளை மற்றைய நாட்டு உறுப்பினர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தாமலும் கலந்தாலோசிக்காமலும். தன்னிச்சையாக செயற்பட ஆரம்பிக்கத் தொடங்குகின்றனர். பாதிக்கப்பட்ட காயமடைந்த போராளிகளின் படங்கள் மற்றும் ஒலிப்பதிவுகளை போட்டுக்hட்டி மக்களிடமும் வர்த்தகர்களிடமும் சேகரித் பெரும் தொகை பணத்தின் விடயங்களையோ தாயகத்திற்கு அனுப்பிய தொகை என்பனவற்றை அந்த அமைப்பை தொடங்கி இயக்கிவந்த கனடிய உறுப்பினரிற்கோ மற்றைய நாட்டு உறுப்பினர்களிற்கோ தெரிவிக்காமலும் தகவல்களை பரிமாறாமலும் நடக்க தொடங்கிவிட்டிருந்தனர். சேகரிக்கப்பட்ட பெருமளவு நிதியில் சிறிய தொகை மட்டுமே பாதிக்கப்பட்டவர்களிற்கு கொடுக்கப்பட்டு அவர்களிடமிருந்து கடிதங்களும் படங்களும் எடுக்கப்பட்டு சில தமிழ் இணைய ஊடகங்களில் விளம்பரப் படுத்தியிருந்தனர். இப்படி நம்பிக்கையொளி இலண்டன் பிரிவு ஸ்கந்தாவின் கைகளில் முழுதுமாய் வீழ்ந்த பின்னர் இவரால் தனது நம்பிக்கை பாத்திரமானவன் என நினைத்து ரிசியை முதன்மைப் படுத்தி உருவாக்கப்பட்ட I.T.S.O கிழக்கு மகாணத்தில் கடந்த வருடம் 2011 ம் ஆண்டு தைமாதமளவில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாகவும் பெருமளவு நிதியிளை நம்பிக்கையொளி அமைப்பும் I.T.S.O வம் சேர்த்தனர். இதற்காக பல தனியார் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் உதவியிருந்தார்கள். இதில் நம்பிக்கையொளி அமைப்பை விட ரிசியிடமே எம்மவர்கள் பெரும்தொகை பணத்தினை வெள்ளத்தால் பாதிக்கப் பட்டவர்களிற்காக கொடுத்திருந்தனர். காரணம் ரிசி தான் ஒரு பல்கலை கழக மாணவர் என்றும் இலண்டனிலும் தனது பல்கலைகழக படிப்பை தொடர்வதாகவுமே கதைவிட்டு திரிந்தவர். எனவேதான் படித்தவன் அதுவும் பல்கலைகழக மாணவன் என்றாலே எம்மவர்களிற்கு ஒரு ஈர்ப்பு பல்கலைகழக மாணவன் ஏமாற்றமாட்டான் என்கிற ஒரு மாயை. ஆனால் அப்படி சேர்த்த பணம் அத்தனையையும் ரிசி தனது இலங்கை வங்கி கணக்கிற்கு அனுப்பிவிட்டிருந்தார்.

பிரித்தானியாவில் பதிவு செய்யப்பட்டுள்ள தொண்டு நிறுவனமான தமிழர் நலவாழ்வு நிறுவனம்( tamil health orginitation) I T S O இன் இலங்கையிலுள்ள அதன் வங்கிழ கணக்கிற்கு ( commercial dilakanda srilanka)ஒரு இலட்சம் ரூபாயை வழங்கியுள்ளதாக அதன் இணைத்தளத்தில் கணக்கு காட்டியுள்ளது இலங்கையில் பதிவு செய்யப்படாத நிறுவனத்திற்கு எப்படி நிறுவனத்தின் பெயரில் வங்கி கணக்கு திறக்கப்பட்டது அந்த கணக்கில் பணம் எப்படி போடப்பட்டது என்பதனை தமிழர் நலவாழ்வு நிறுவனம்தான் விளக்கவேண்டும்.இந்த விடயத்தை அறிந்த ஸ்கந்தா தனக்கு பங்குதராமல் மொத்தமாய் ஆட்டையை போட்ட ரிசி மீது கடுப்பாகிறார். இங்கு இவர்கள் மோதல் தொடங்குகின்றது.இங்கு ஒருவர் மொல்லைமாரி என்றால் மற்றவர் முடிச்சவிக்கி எனவே இருவரும் உதவி நிறுவனத்தின் கணக்கு விபரங்களை பகிரங்கமாக கேட்க முடியாத நிலை எனவே யாரை எங்கே காலை வாரலாமென தருணம் காத்திருக்கின்றனர். ரிசி தொழிலுக்கு புதிது என்பதால் ஸகந்தா தனது அனுபவத்தையும் தொடர்புகளையும் பாவித்து ரிசியை ஓரம் கட்டதொடங்கியதோடு அவர் தொடர்ந்தும் தொழிலில் நீடித்து பணம் சுருட்டவிடாமல் அவரை தமிழின துரோகியாக்கி தமிழ் ஊடகங்கள் ஊடாக செய்தியை கசிய விடுகிறார்.

அப்பொழுதுதான் ஏற்கனவே ஸ்கந்தாவுடன் பிரச்சனை பட்டுக்கொண்டிருந்த உதயகலாவின் பெயரும் இலவச இணைப்பாக்கப்பட்டு செய்திகள் வெளியாகின்றது. ஆனால் செய்திகள் வெளியானதுமே இவை அனைத்திற்கும் பின்னணி ஸ்கந்தாவே என்பதனை அறிந்து முதன் முதலாக ஒரு பேப்பர் கிணறு தோண்டக் கிழம்பிய பூதம் முதலாவது பாகத்தில் அம்பலப்படுத்தியிருந்தது.. அதே நேரம் கடந்த ஒரு பேப்பரிற்கு பாகம் இரண்டினை எழுதி முடித்துவிட்டு ஸ்கந்தா தரப்பு நியாயங்களை தெரியப்படுத்துமாறு ஸ்கந்தா அவர்களிற்கு ஒரு மின்னஞ்சலை அனுப்பியிருந்தேன். ஆனால் அவர் அதற்கு நேரடியான பதில் எதனையும் தராது அந்த மின்னஞ்சலை தற்சமயம் யாழ்ப்பாணத்தில் வசிக்கும் ராதிகா என்பவரிற்கு அனுப்பி ராதிகா என்பவரிடமிருந்து எனக்கு ஒரு மின்னஞ்சலும் மேற்படி கட்டுரை சம்பந்தமாக சில விபரங்கள் தரவேண்டும் என்றும் தன்னுடன் தொடர்பு கொள்ளும்படி ஒரு தோ.பே இலக்கத்தையும் இணைத்திருந்தார். அவருடன் நான் தொலைபேசி இணைப்பினை ஏற்படுத்தியபொழுதுதன்பெயர் ராதிகா என்றும் தானும் அலுவலகத்தில் வேலை செய்தவர் என்றும் ஸ்கந்தா என்பவர் எந்த தவறும் செய்யவில்லையென்றும் உதயகலாவே பலரிடம் பணமோசடி செய்தார் அவரிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் நூறு பேரின் பெயர் விபரம் மற்றும் அவர்களது தொலைபேசி இலக்கங்கள்ஆதாரமாக இருப்பதாக கூறியதும். அவற்றை என்னிடம் அனுப்பி வைக்கும்படியும் நானே அவர்களுடன் நேரடியாக கதைத்து இருதரப்பு நியாயங்களையும் ஒரு பேப்பர் மூலமாக வெளிக்கொண்டு வருவேன் என சொல்லியிருந்தேன்.

அதற்கு அவரோ நூறு பேரின் பெர் விபரங்களும் உடனடியாக தரமுடியாது முதலாவதாக பத்துப்பேரின் விபரங்களை அனுப்புவதாகவும் இதில் செய்திகளில் தனது பெயர் வெளிவரக்கூடாது என்று பலமுறை வலியுறுத்தியிருந்தார். அவர் தரும் ஆதாரங்கள் உண்மையாக இருப்பின் அவரது பெயர் வெளியிடமாட்டேன் என கூறியிருந்தேன்.பின்னர் அவர் 17 பேருடைய பெயர்களையும் தொ.பே இலக்கங்களையும் இன்னொரு மின்னஞ்சல் முகவரியிலிருந்து அனுப்பியிருந்தார். அது யாருடைய மின்னஞ்சல் முகவரி என்பதனை பின்னர் பாக்கலாம். எனக்கு கிடைத்த 17 இலக்கங்களுடனும் தொடர்புகளை ஏற்படுத்த முனைந்தேன். பல இலக்கங்கள் வேலை செய்யவில்லை . அதில் இரண்டு இலங்கங்கள் ஒருவருடையது. அவர் மூலம் மேலும் பல தகவல்கள் கிடைத்தது அவரது தகவல்களின்படி ராதிகா மற்றும் அவரது காதலன் நியூ சீலன் ஆகியோரின் உதவியுடன் வவுனியாவை சேர்ந்த ஜேர்ச் மற்றும் கிரிஜா என்பவர்களது கணக்குகளிலும் நியூ சீலனின் கணக்கிலும் தாங்கள் பணத்தை வைப்பிலிட்டதாக கூறினார். நியூ சீலனின் கணக்கில் பணம் வைப்பிலிட்டதற்கான ஆதாரத்தினையும் இங்கு இணைக்கிறேன்.

rathikaseelan.jpg

ராதிகா என்பவர் அனுப்பிய விபரங்களில் ஒரேபெயர் இரண்டு தடைவை குறிப்பிட பட்டிருந்ததும் பல இலக்கங்கள் வேலை செய்யாததனாலும் மீண்டும் அவருடன் தொடர்பினை ஏற்படுத்தி விபரம் கேட்டபொழுது அந்த விபரங்களை தானும் குழலி என்பவருமே சேர்ந்து தயாரித்ததாகவும் அதே நேரம் தங்கள் வேலைபழு காரணமாக தவறுகள் நடந்து விட்டதாக சப்பை கட்டு கட்டினார்.

இனி உதயகலாவிற்கும் ரிசிக்கும் என்ன தொடர்பு என்பதனை பார்க்க முன்னர் செல்வி சபாரத்தினம் கஸ்தூரி என்பவரை அடுத்த தொடரில் உங்களிற்கு அறிமுகப்படுத்துகின்றேன்.

தொடரும் ...................

Edited by sathiri

பெரிய பூதமாய்த்தான் கிடக்கு .

  • கருத்துக்கள உறவுகள்

பாதாழக் கிணற்றினுள் பயங்கர மோட்டார் சைக்கிள் ஓட்டம்

கோ சொன்ன மாதிரிப் பெரிய பூதம் தான்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.