Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதற்கு..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க டயட்டில் இருப்பவர்கள் இன்று நிறைய பேர் உள்ளனர்.

உணவைக் குறைத்து உடலை அழகாக்க போகிறோம் என்ற தாரக மந்திரத்தை பின்பற்றும் இவர்களில் பலர் பட்டினி கிடந்து உடல் இளைத்துப் போவதும் உண்டு.

இப்படிப்பட்டவர்கள் ஆரோக்கியமான டயட் முறையை பின்பற்ற சில டிப்ஸ்:

1. தினமும் ஏதாவது ஒரு பழ ஜூஸ் குடியுங்கள். நீங்கள் குடிக்கும் பழ ஜூஸ் அப்போது தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். அதில் சர்க்கரை மற்றும் ஐஸ் சேர்க்காமல் சாப்பிடவும். சர்க்கரை சேர்த்தால் பழத்தின் முழு சத்தும் குறைந்து விடும்.

2. எண்ணெய் அதிகம் சேர்த்து தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை முடிந்தவரை தவிர்த்து விடுங்கள். முடிந்தவரை காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளவும்.

3. வேக வைத்த பயிறு வகைகள், தானியங்கள், காய்கறிகள் உங்கள் உணவு பட்டியலில் முதலிடம் பிடிக்கட்டும்.

4. இட்லி, இடியாப்பம், ஆப்பம், புட்டு போன்ற வேகவைத்த உணவுகளை அளவோடு சாப்பிடவும்.

5. உண்ணும் உணவில் அதிக காரம் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். காரத்திற்காக சேர்க்கும் பச்சை மிளகாய்க்கு பதிலாக மிளகு சேர்ப்பது நல்லது.

6. மாலை வேலையில் கண்ட கண்ட நொறுக்கு தீனிகளை வாயில் போட்டு நொறுக்காமல், வேக வைத்த தானிய வகைகள், சுண்டல் ஆகியவற்றை சாப்பிடவும்.

7. அவ்வப்போது பல வகை பழங்களை கொண்டு செய்யப்பட்ட சாலட் சாப்பிடுவதும் நல்லதுதான்.

8. புளிப்பான உணவுகளை முடிந்தவரை குறைத்துக்கொள்ளவும். அதுக்கு பதில் தக்காளி சேர்த்துக்கொள்ளுங்கள்.

பழங்கள் சாப்பிடும் முறை:

1. காலையில் படுக்கையில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிட்டால் உடலில் சேர்ந்திருக்கும் நச்சுப்பொருட்களை மலமாக வெளியேற்றும்.

2. இதனால் உடலுக்கு புத்துணர்ச்சியும், தெம்பும் கிடைக்கும்.

3. சாப்பிட்ட பின்பு பழம் சாப்பிட்டால் முதலில் பழம் தான் ஜீரணமாகும். உணவுகள் செரிக்க கூடுதல் நேரமாகும்.

4. உட்கொண்ட உணவுகள் செரிக்காத நிலையில் உடனே பழங்கள் சாப்பிடுவதால் வயிற்றுக்குள்ளே செரிமானமாகிக் கொண்டிருக்கும் உணவு கெட்டுப் போகும்.

அதனால் சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவோ அல்லது பின்னரோ பழங்கள் சாப்பிடுவதுதான் உடலுக்கு ஆரோக்கியம் தரும்.

5. பழங்களை தனியாக சாப்பிடாமல் அதனுடன் இனிப்பு சேர்த்து மிக்சியில் போட்டு அடித்து ஜூஸாக சாப்பிடும் வழக்கம் பலரிடம் உள்ளது. இது தவறு.

பழங்களை ஜூஸாக சாப்பிடுவதைவிட பழமாக அப்படியே சாப்பிடுவதுதான் நல்லது. அவ்வாறு சாப்பிடுவதால் நார்ச்சத்து நிறைய கிடைக்கும். சத்தும் முழுமையாக கிடைக்கும்.

http://www.kalucu.net/index.php?option=com_content&view=article&id=5235:2011-09-25-02-17-30&catid=51:2010-07-25-16-47-21&Itemid=149

இது கோமகனுக்கு..... :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இது கோமகனுக்கு..... :lol:

இந்தப் பொம்பிளையளின்ர வாயைக் கட்டுக் கோப்பா வச்சிருக்க ஆராவது வழி சொல்லுங்கப்பா.... :lol:

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் நோமலாயே வாட்டசாட்டமான உடம்புக்காரன்

:icon_mrgreen: ...உந்த டிப்ஸ் எனக்கு தேவையில்லை...இருந்தாலும் தம்பி சுபேசுக்கு நன்றி. :D

இணைப்பிற்கு நன்றி சுபேஸ்! :)

- மாலை 6, 7 மணிக்குப் பிறகு சாப்பாடு, முக்கியம் சோறு சாப்பிடக் கூடாது...

- beer அதிகம் குடிக்கக் கூடாது... :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றி சுபேஸ்! :)

- மாலை 6, 7 மணிக்குப் பிறகு சாப்பாடு, முக்கியம் சோறு சாப்பிடக் கூடாது...

- beer அதிகம் குடிக்கக் கூடாது... :D

மாலை ஆறு ஏழு மணிக்குப் பிறகு சோறு சாப்பிட்டால் வயிறு இருக்கும் இடத்தில் சோற்றுப் பாத்திரம் சீக்கிரம் இருக்கும்.... :lol:

நான் நோமலாயே வாட்டசாட்டமான உடம்புக்காரன்

:icon_mrgreen: ...உந்த டிப்ஸ் எனக்கு தேவையில்லை...இருந்தாலும் தம்பி சுபேசுக்கு நன்றி. :D

அந்த நேரம் பரிமளத்தை ஒரு பார்வையிலை மடக்கின உடம்பெல்லே... :D

ஏம்பா சுபேசு

இவ்வளவும் செய்து உடலை கட்டுக்கோப்பாய் வைத்துள்ளேன்.

இனியென்ன செய்வது :lol:

மாலை ஆறு ஏழு மணிக்குப் பிறகு சோறு சாப்பிட்டால் வயிறு இருக்கும் இடத்தில் சோற்றுப் பாத்திரம் சீக்கிரம் இருக்கும்.... :lol:

அந்த நேரம் பரிமளத்தை ஒரு பார்வையிலை மடக்கின உடம்பெல்லே... :D

:lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இணைப்பிற்கு நன்றி சுபேஸ்! :)

- மாலை 6, 7 மணிக்குப் பிறகு சாப்பாடு, முக்கியம் சோறு சாப்பிடக் கூடாது...

- beer அதிகம் குடிக்கக் கூடாது... :D

விடியப்பறம் 5 6 மணிக்கு நித்திரைக்கு போறவன்....எத்தினை மணிக்கு சாப்பிடலாம் எண்டுறியள்? :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏம்பா சுபேசு

இவ்வளவும் செய்து உடலை கட்டுக்கோப்பாய் வைத்துள்ளேன்.

இனியென்ன செய்வது :lol:

இவ்வளவு வெள்ளாந்தியாய் இருக்கிறியளே தப்பிலி அண்ணா....இனித்தான மெயின் மேற்றரே இருக்கு....உங்கள் பலம் உங்களுக்கே தெரியலை...நல்ல வெக்கை அண்ணை...வெளியாலை றோட்டுக்கு இறங்குங்கோ.......பெட்டையள் உங்கள் காலுக்கை சுத்துவாளவை... :D

Edited by சுபேஸ்

இவ்வளவு வெள்ளாந்தியாய் இருக்கிறியளே தப்பிலி அண்ணா....இனித்தான மெயின் மேற்றரே இருக்கு....உங்கள் பலம் உங்களுக்கே தெரியலை...நல்ல வெக்கை அண்ணை...வெளியாலை றோட்டுக்கு இறங்குங்கோ.......பெட்டையள் உங்கள் காலுக்கை சுத்துவாளவை... :D

வெக்கை தாங்காமல் வெளியில போனால் நாடங்காய்க்கு நார் சுத்தின மாதிரி ஒள்ளுப்பம் உடுப்பைப் போட்டுக் கொண்டு திரியிறாங்கள். :(

கலங்கி நின்றான் இலங்கை வேந்தன் Mr தப்பிலி.. :icon_mrgreen:

விடியப்பறம் 5 6 மணிக்கு நித்திரைக்கு போறவன்....எத்தினை மணிக்கு சாப்பிடலாம் எண்டுறியள்? :D

குறை நினைக்கக் கூடாது கு.சா அண்ணை நீங்கள் என்ன செய்கிறனீயள் 5,6 மணிவரை?

**** வசனம் திருத்தம் செயயப்பட்டுள்ளது!

Edited by அலைமகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெக்கை தாங்காமல் வெளியில போனால் நாடங்காய்க்கு நார் சுத்தின மாதிரி ஒள்ளுப்பம் உடுப்பைப் போட்டுக் கொண்டு திரியிறாங்கள். :(

கலங்கி நின்றான் இலங்கை வேந்தன் Mr தப்பிலி.. :icon_mrgreen:

நீங்கள் ஏன் அண்ணா உடுப்பைப் பாக்கிறியள்...உள்ளை இருப்பதைப் பாருங்கள்..நான் சொன்னது மனசை... :lol:

நீங்கள் ஏன் அண்ணா உடுப்பைப் பாக்கிறியள்...உள்ளை இருப்பதைப் பாருங்கள்..நான் சொன்னது மனசை... :lol:

உள்ள இருப்பது மனசு என்று எல்லோருக்கும் தெரியும் தானே சுப்பு!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உள்ள இருப்பது மனசு என்று எல்லோருக்கும் தெரியும் தானே சுப்பு!

இங்கை பார்ற்றா விளக்கத்தை....நான் திருக்குறள் எழுதி இருக்கன்..அலை அக்கா அதுக்கு பொழிப்புரை தாராங்க... :lol:

விடியப்பறம் 5 6 மணிக்கு நித்திரைக்கு போறவன்....எத்தினை மணிக்கு சாப்பிடலாம் எண்டுறியள்? :D

நித்திரைக்குப் போகும் முன்பு புல் கட்டு கட்டுவதால் உணவு செமிபாடடைவது சிரமமாக இருக்கும்.. அதே நேரம், சோறு சாப்பிட உடனே சிலருக்கு கண்ணைக் கட்டும், அதுவே தொப்பை வரக் காரணமாக இருக்கலாம்...

இரவில் வேலை செய்பவர்கள் இரவே சாப்பிட்டு வேலை செய்வதால் அது பெரிதாக பிரச்சனை இல்லை என்று நினைக்கிறன்.. :) (ஒரே இடத்தில் இருந்து வேலை செய்பவர்கள்/ இரவிரவாகக் குடித்து விட்டு பகலில் தூங்குபவர்களைத் தவிர...) :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.