Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முதியோருக்கு அடைக்கலமாகத் திகழும் கைதடி முதியோர் இல்லம்!

Featured Replies

kathaidi.jpg

பொருளாதார மேம்பாட்டுக்காக இன்று எல்லோரும் தொழில் செய்தே ஆக வேண்டிய கட்டாய நிலை. இதனால் இன்று ஓய்வின்றி உழைப்பதையே பிரதான நோக்காகக் கொண்டு பலரும் ஓடிக்கொண்டிருக்கின்றார்கள். வீட்டில் ஓய்வாக இருக்க அல்லது பிள்ளைகளை, தாய், தந்தையரைக் கவனிக்க நேரமின்றி பலரும் அல்லாடிக் கொண்டிருக்கின்றார்கள்.

ஊருக்கு ஊர் முதியோர் இல்லங்கள் உதயமாகிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் தென்மராட்சிப் பகுதியில் அமையப்பெற்றுள்ள கைதடி முதியோர் இல்லம் ஆதரவற்ற முதியவர்கள் பலருக்கு அடைக்கலம் கொடுத்துள்ளது. இங்கு 108 ஆண்கள், 82 பெண்கள் அடங்கலாக 190 பேருக்கு அடைக்கலம் கொடுத்து அளப்பரிய சேவையை ஆற்றி வருகின்றது.

1952ஆம் ஆண்டு இம்முதியோர் இல்லத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்ட பின்னர் 1958ஆம் ஆண்டு உத்தியோக பூர்வமாக இயங்கத் தொடங்கியது.

இங்கிருக்கும் முதியவர்கள் முக்கியமாக அன்பான அரவணைப்பையே எதிர்பார்க்கின்றனர். தாங்கள் வெளி மக்களுடன் கதைத்துப் பழக சந்தர்ப்பங்களை ஏற்படுத்தித் தர வேண்டும் என்பது இவர்களது அவாவாக உள்ளது.

இங்குள்ள முதியவர்கள் கிடைக்கும் நேரங்களில் தமக்குத் தெரிந்த வேலைகளை முதியோர் இல்ல வளாகத்திலேயே செய்கின்றனர். குறிப்பாக மொறட்டுவையிலிருந்து வந்து இணைந்து கொண்ட சிறில் ஸ்ரீபன் பெர்னாண்டோ இங்கு பராமரிக்கப்படுகின்றார். தான் ஒரு தச்சுத் தொழிலாளி எனவும் இவ்வில்லத்தின் பழுதடைந்த மரத்தளபாடங்களை சீர் செய்யும் பணியை மேற்கொள்வதாகவும் கூறினார். அவர் மேலும் கூறுகையில், தனது தச்சு வேலைக்குத் தேவையான ஆயுதங்கள் இல்லையென்று கூறிக் கவலையடைந்தார்.

இல்லத்தில் 30 மன நோயாளிகள் முதியோருடன் சேர்ந்து பராமரிக்கப்படுவதால் இங்கிருக்கும் முதியோர்களுக்கு இடையூறாக அமைகின்றது என்றும் இவ்வாறு அவர்களைப் பராமரிக்க மன நோயாளர் பராமரிப்பு நிலையம் ஒன்று இவ்வளாகத்தினுள் நிறுவப்படவுள்ளதாகவும் பணியாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

இவ்வில்ல மேற்பார்வையாளர்கள் மாதம் இரு முறை தம்மைச் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்வதாகவும் அது தமக்கு மகிழ்ச்சியாக இருப்பதாகவும் முதியோர்கள் தெரிவிக்கின்றனர். இவர்களை யாழ்ப்பாணத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஆலயங்களுக்கு அழைத்துச் செல்வதாகவும் எதிர்வரும் காலத்தில் வெளி இடங்களுக்கு அழைத்துச் செல்ல ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் நிறுவன ஊழியர் ஆருரன் குறிப்பிட்டார்.

இந்நிறுவனத்தின் அத்தியேட்சர் கிருபாகரன் கூறும் போது, வட மாகாணத்தில் 90,070 பேர் முதியவர்களாக உள்ளனர். அவர்களைப் பராமரிக்க ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவிலும் பகல் பராமரிப்பு நிலையம் அமைக்க ஏற்பாடுகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் இவற்றைச் செயற்படுத்த மக்களும் தமக்குத் துணைவர வேண்டும் என்றும் கூறினார்.

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=38398

கோ இப்பவே எதிர்காலப் பிளான் போடுகின்றார் போல் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

கோ இப்பவே எதிர்காலப் பிளான் போடுகின்றார் போல் :lol:

தூரம் அதிகமில்லை :lol::D :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.