Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வைகோவிற்கு பகிரங்க கேள்விகள் !

Featured Replies

தலா நைனா

மதிமுக தொண்டர்களே கொதித்துப் போய் என்னையா எங்களைக் காட்டி அம்மாவிடம் 40 கோடி வாங்கி விட்டீரே என்று கூட்டங்களிலேயே கூச்சலிடுவது பத்திரிகைகளில் வருவது உமக்குத் தெரிவதில்லைத்தான். வைகோவின் மனச்சாட்சியான நாஞ்சில் சம்பத்தே அம்மா எமக்கு நிறையப் பணம் தந்துள்ளா எனச் சொல்லியதும் தெரியாதா??

  • Replies 94
  • Views 9.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

புளுகே உன் மறு பெயர் தான் தூயவனா? வைகோ 89ஆம் ஆண்டில் கள்ளத்தோணியில் இலங்கை போனார்... ஆனால் அவர் நீக்கப்பட்டது 93ஆம் ஆண்டில்... இது கூட தெரியாம சில பேர் தமிழக அரசியல் பேச வந்துட்டாங்க.... கொஞ்சமாவது வெக்கம் வேணாம்.... ஒண்ணும் தெரியாம பேசுறோமேன்னு....... :lol::lol::lol:

ஆமாம். தூக்கி எறிவது என்பது அடுத்த நாள் தானே நடக்க வேண்டும். இல்லாவிட்டால் இரண்டுக்கும் சம்பந்தமில்லை என்ன கதை கதைக்கின்றீர்கள்? புலிகளுக்கு சுமார் ராஜீவ் கொல்லப்பட்டு, அடுத்த வருடம் தான் தடை வந்தது என்பதற்காக ராஜீவ் கொலையால் தடை வரவில்லை என்று பிதற்றலாமா??

புளுகிற்கு மறுபெயர் லக்கிலுக் என்பதே தெரியாமல் போச்சே உங்களுக்கு!! இது கூடத் தெரியாத சுத்த .......... இருக்கின்றீர்களே!!

  • கருத்துக்கள உறவுகள்

மதிமுக கட்சி தொடங்கி 13 வருடங்கள் ஆகிவிட்டது. நேற்றுத் தொடங்கிய விஜயகாந்தின் கட்சி கூட கருத்துக் கணிப்பில் 3 வது இடத்தில் இருக்கின்றது. ஏன் மதிமுகவால் இது சாத்தியப் படவில்லை. உமது வசதிக்கேற்ற மாதிரி புலம்புவதை நிறுத்தும். பார்க்கவே பாவமாக இருக்கின்றது. ஏனையா தெரியாத விடயங்களைப் பற்றி எல்லாம் புலம்ப வெளிக்கிடுகின்றீர். உமக்கு கருத்துக்களின் எண்ணிக்கையைக் கூட்டுவது தான் நோக்கம் என்றால் சும்மா முகக்குறிகளை மட்டும் போடும். :roll: ஒருவரிடமும் வாங்கிக் கட்ட வேண்டி வராது. :P

கருத்துக்கணிப்பை நம்பி வருகின்ற கூட்டமா நீங்கள்?? திமுகா எவ்வளவு பெரிய கட்சியாக வளர்ந்த பின்பும், எம்ஜிஆர் பிரிந்து போய் கேவலம் திமுகாவை ஒட ஓட அடிக்கவில்லையா?? அப்போது எங்கு போய் விட்டது இந்தத் தன்மானம்??

கடைசில் எம்ஜிஆர் தனக்கு ஆதரவு என்று சொல்லி தேர்தலில் போட்டி போட்ட வெட்கம் கெட்ட நிலையை எல்லாம் மறந்து விட்டீர்களா??. ஒரு முதல்வர் பதவிக்காக எப்படியெல்லாம் நாக்கைத் தொங்கப் போடுகின்ற கூட்டம்!!

கருத்துக்களின் எண்ணிக்கை கூட்டும் ஆளாக இருந்தால் வெறுமனே முகக்குறிகளையும், புத்திமதி சொல்லியும் :wink: காலத்தை ஓட்டியிருப்பேன்!! அல்லது ஒற்றை வசனத்தில் பதில் எழுதியிருப்பேன். :wink:

உமக்கு வக்களத்து வாங்க முடியாhவிட்hல் ஒதுங்கிக் கொள்ளும். அதை விட்டுவிட்டு சம்பந்தமில்லாமல் புலம்பவேண்டாம்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாட்டின் எந்த முதலமைச்சரும் செய்யாததை கலைஞர் துணிந்து செய்தார். அதுதான் தமிழ் நாட்டில் ஈழத்தமிழர்களுக்காக உயர் கல்வி வரை இட ஒதுக்கீடு செய்தது. அதன் பயனை நம்மவர் பலர் அனுபவித்துத்தான் வெளிநர்டுகளில் நன்றாக இருக்கின்றார்கள். இதனை என்றாவது வைகோவோ அல்லது நம்மவர்களோ நினைவு கூர்ந்தார்களா?? நினைவு முழுக்க சேலையில் இருந்தால் இவையெல்லாம் எப்படி ஞாபகம் வரும்??

எம்ஜிஆர் செய்ததை விடவா பெரிதாகச் செய்து செய்துவிட்டார்? சும்மா கதை விடாதீர்கள். வேறு ஒரு முதலமைச்சரும் செய்யதா அளவு என்று!

சந்திரிக்க அம்மையாரும் பெரிதாக இப்படித்தான் முன்பு கதை விடுவார். தமிழருக்கு பிரச்சனை இருக்கு என்பதை முதலில் ஒப்புக் கொண்டவள் தான் என்று? ஆனால் தமிழர் மிகவும் துன்பப்பட்ட காலமும் இவருடையது தான். ஆனால் பதவி விட்டுப் போகும்வரைக்கும் இவரது வசனம் மட்டும் கடைசி வரைக்கும் மாறவே இல்லை.

இத்தனை பிரச்சனைகள் இருக்க அதை நினைவு கூருதல் தான் பிரச்சனை இவருக்கு!! இது மட்டுமல்ல பல விடயங்களை நினைவு கூறுகின்றோம். அதைச் சொன்னால் தான் உங்களுக்கு பிடிப்பதில்லையே!!

:wink: :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயோ அப்ப வாங்கிய 40 இல் ஒன்று இழக்க வேண்டுமா??? :cry: :cry:

வைகோவிற்கு நாற்பது என்றால் நேரு குடும்பத்திற்கு மாறி மாறி பல தேர்தல்களில் ஆதரவு செய்ததற்கு, கூட்டணி அமைத்ததிற்கு எவ்வளவு பெற்றிருப்பார்கள். தற்போதைய மத்திய அரசுக்கு ஆதரவு வழங்குவதற்கு எவ்வளவு கிடைக்குமோ???

எல்லாம் சரி ஒரு அண்ணாச்சி கருத்துக்கணிப்பில மதிமுக மூன்றாம் இடத்திற்கு கூட வரவில்லை என்கிறார் பிறகேன் அதிமுகவை எதிர்க்காமல் மதிமுகவையே வசைபாடுகிறார்கள்.

ஏன் நாடாடுமன்றத் தேர்தலில் மதிமுகவை கூட்டணியில் இணைத்தனர். பயனில்லாதவர் கூட்டணியில் எதற்கு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் நாளை கவனிக்கேல்லை!!!

:lol::lol::lol::lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

மந மந மந பதவிக்காக வைகோ மட்டும் நாக்க தொங்க போடலையாக்கும்....செம ஜோக்பா... :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

அதுக்க இதுக்குள்ள mgr ர கொண்டுவாரிங்க இப்ப இருக்கிறதல கருணாநதி வந்தா நல்லதா ஜெ வந்தா நல்லதாண்னு பாத்தா.....ofcourse கருணாநிதி தான்...

  • கருத்துக்கள உறவுகள்

தலா நைனா

மதிமுக தொண்டர்களே கொதித்துப் போய் என்னையா எங்களைக் காட்டி அம்மாவிடம் 40 கோடி வாங்கி விட்டீரே என்று கூட்டங்களிலேயே கூச்சலிடுவது பத்திரிகைகளில் வருவது உமக்குத் தெரிவதில்லைத்தான். வைகோவின் மனச்சாட்சியான நாஞ்சில் சம்பத்தே அம்மா எமக்கு நிறையப் பணம் தந்துள்ளா எனச் சொல்லியதும் தெரியாதா??

40 கோடி தந்தால்களாம். அதை நாஞ்சில் ஒத்துக் கெர்ணடராம். என்னாமா கதை விடுகின்றார்கள். ரமேஸ் கொலை வழக்கிலும், மேம்பாலம் ஊழல் வழக்கிலும் தப்பிப்பதற்காக பெட்டிகள் பரிமாறப்பட்டன என்று செய்திகள் வந்தனவே!! அது உண்மையா??

  • கருத்துக்கள உறவுகள்

அதுக்க இதுக்குள்ள mgr ர கொண்டுவாரிங்க இப்ப இருக்கிற தல கருணாநதி வந்தா நல்லதா ஜெ வந்தா நல்லதாண்னு பாத்தா.....ofcourse கருணாநிதி தான்...

அந்த கருணாநிதியோ, ஜெயலலிதா வருவதோ எமக்குப் பிரச்சனை இல்லை. தமிழ்நாட்டு உறவுகள் முடிவெடுக்க வேண்டியது. ஆனால் வைகோவைப் பற்றி ஏன் கதைக்கின்றீர்கள் என்பது தான் எம் பிரச்சனை

அதில் எவ்வகையான சூழ்ச்சி இருக்கின்றது என்பதைத் தான் புரிய வைக்க முயல்கின்றோம்

  • கருத்துக்கள உறவுகள்

ke ke ke பதவிக்காக வைகோ மட்டும் நாங்க தொங்க போடலையாக்கும்....செம ஜோக்பா... :lol::lol:

வைகோவிற்காக நீங்கள் ஏன் தொங்கப் போடுகின்றீர்கள்?? :shock: :shock:

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப திருத்தியாச்சு...தவறுகளை உடணுக்குடன் சுட்டி காட்டும் தூயவனுக்கு நன்றிகள்.... :lol:

40 கோடி வாங்கியதை நிறுபிக்க சொல்லி வைகோ ஆதாரம் கேட்க்கிறாராம்.... வசம்பு வச்சிருக்கார் போல கிடக்கே.... :roll: :roll: :roll:

16_3.jpg

மேம்பாலம் ஊழல் வழக்கிலும் தப்பிப்பதற்காக பெட்டிகள் பரிமாறப்பட்டன என்று செய்திகள் வந்தனவே!! அது உண்மையா??

இவருக்கு மட்டும் செய்திகள் வரும்... ஆனால் அதுக்கு எந்த ஆதாரமும் இருக்காது.... "வந்தனவே" என்றால் எங்கு வந்தனவே? :lol::lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் செய்தி உண்மை என்பதை ஒப்புக் கொள்ளுங்கள். அதை விட்டு விட்டு 6 வருடங்களுக்கு முன்பு நடந்ததை நிருபி என்றால் "ஆதாரம்" வசம்புக்கிற்கு அடுத்த ஆளாக வருவீர்கள் போல இருக்கின்றதே!! :P

செய்தி பொய்... உங்கள் கற்பனை என்பதால் தானே ஆதாரம் கேட்கிறேன்..... உங்களுக்கு இதுபோல கதை எல்லாம் எழுத வரும் என்றால் அதற்கு தனிப்பகுதி இருக்கிறது.... 40 கோடியானுக்கு அடுத்த ஆளா இருக்கிங்களே?

தலா நைனா

மதிமுக தொண்டர்களே கொதித்துப் போய் என்னையா எங்களைக் காட்டி அம்மாவிடம் 40 கோடி வாங்கி விட்டீரே என்று கூட்டங்களிலேயே கூச்சலிடுவது பத்திரிகைகளில் வருவது உமக்குத் தெரிவதில்லைத்தான். வைகோவின் மனச்சாட்சியான நாஞ்சில் சம்பத்தே அம்மா எமக்கு நிறையப் பணம் தந்துள்ளா எனச் சொல்லியதும் தெரியாதா??

ஏனேய் தமிழ் வாசிக்க தெரியுமாவோய்...??? வைகோ கேக்கிறார் எண்டுதானே சொன்னனோய்... அதுக்கு எனக்கு ஏனோய் வந்து பினாத்துறீர்.... தயாநிதிமாறனைப்போல வைகோ கேஸ் போடுவாராம்... அப்ப போய் சாட்ச்சி சொல்லுமோய்... :lol::lol::lol:

நான் நாளை கவனிக்கேல்லை!!!

:lol::lol::lol::D:D

தரிசுநிலங்கள் பற்றி தவறரான தகவல்களை

தந்து மக்களை குழப்புவதா? கருணாநிதிக்கு முதல்வர் பதிலடி

" மூன்றைரை லட்சம் ஏக்கர்தான் அரசுக்கு

சொந்தம்_மற்றவை எல்லாம் பட்டா நிலங்கள்''

மதுரை,ஏப்.13_

நேற்று 12_வது நாள் சூறாவளி பிரசாரத்தை ஆறுமுகநேரியில் இருந்து தொடங்கி, சரியாக 3.30 மணிக்கு தெற்கு ஆத்தூர் வந்தார். அங்கு சாலையின் இருபுறமும் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களிடம் இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்துவிட்டு வடக்கு ஆத்தூர்வந்தார். அங்கு சாலையின் இருபுறமும் சுட்டெரிக்கும் வெயிலிலும் முதல்வர் ஜெயலலிதாவின் வருகைக்கு காத்திருந்தனர். பின்னர்சாலையின் இருமருங்கிலும் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களிடையே தனது ஐந்தாண்டு கால ஆட்சி செய்த சாதனைகளை விவரித்துப்பேசிவிட்டு திருச்செந்தூர் அ.தி.மு.க. வேட்பாளர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு இரட்டை இலையில் வாக்கு சேகரித்தார்.

பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:

கேள்வி: தமிழ்நாட்டில் 50 லட்சம் ஏக்கர் தரிசு நிலம் இருக்கிறது. அதை எடுத்து நிலமற்ற ஏழைகளுக்கு தலா 2 ஏக்கர் இலவசமாக கொடுக்கப்போவதாக தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால் அரசிடம் 3 லட்சத்து 57 ஆயிரம் ஏக்கர்தான் உள்ளது என்று நீங்கள் அதற்கு பதில் அளித்தீர்கள். ஆனால், நீங்கள் (ஜெயலலிதா) தாக்கல் செய்த பட்ஜெட்டிலேயே 20 லட்சம் ஹெக்டேர் தரிசு நிலம் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதன்படி பார்த்தால் 50 லட்சம் ஏக்கர் தரிசு நிலம் இருப்பதை நீங்களே ஒப்புக்கொண்டதாக தி.மு.க. தலைவர் கருணாநிதி ஒரு பேட்டியில் நிருபர்களிடம் கூறியிருக்கிறாரே...?

பதில்: ஏற்கனவே கருணாநிதி ஒரு தவறான வாக்குறுதியை தந்துவிட்டார். அதை நியாயப்படுத்த உண்மையில்லாத தகவல்களை தந்து கொண்டிருக்கிறார். அ.தி.மு.க. அரசு தாக்கல் செய்த நிதி நிலை அறிக்கையில், 50 லட்சம் ஏக்கர் தரிசு நிலம், 20 லட்சம் ஹெக்டேர் ஒருங்கிணைந்த தரிசு நில மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் கொண்டு வரப்பட்டது என்றுதான் கூறியிருக்கிறோமே தவிர அந்த 50 லட்சம் ஏக்கர் நிலமும் அரசுக்கு சொந்தம் என்று எங்கேயும் கூறவில்லை. (உடனே பட்ஜெட் காப்பியை எடுத்து வந்து இந்த காப்பியை பார்க்கிறீர்களா என்று நிருபர்களிடம் முதல்வர் ஜெயலலிதா காட்டி, அந்த பட்ஜெட்டில் கூறியிருப்பதை படித்துக்காட்டினார்)

பயிர் செய்ய ஏற்ற 20 லட்சம் ஹெக்டேர் பரப்பளவுள்ள தரிசு நிலங்களை வரும் ஐந்தாண்டுகாலத்திற்குள், மேம்படுத்திட மாண்புமிகு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள் தரிசு நில மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் மிகப்பெரும் அளவிலான தொலைநோக்கு திட்டம் ஒன்றை ஏற்கனவே அறிவித்துள்ளார் என்றுதான் அதில் உள்ளது. 20 லட்சம் ஹெக்டேர் என்றால் 50 லட்சம் ஏக்கர். ஆகவே தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் சொன்னதில் எந்த மாற்றமும் இல்லை. நான் சொன்னதை மீண்டும் வலியுறுத்துகிறேன். நாங்கள் தாக்கல்செய்த பட்ஜெட்டில், தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டில் உள்ள 50 லட்சம் ஏக்கர் தரிசு நிலம் சாகுபடியின் கீழ் கொண்டு வரப்படும் என்றுதான் சொல்லியிருக்கிறோமே தவிர, அந்த 50 லட்சம் ஏக்கர் நிலமும் அரசுக்கு சொந்தமானது என்று எங்கேயும் சொல்லவில்லை. அவர்களே வேண்டுமானால் படித்துப்பார்க்கலாம். மீண்டும் மக்களை திசைதிருப்ப கருணாநிதி முயற்சி செய்துகொண்டிருக்கிறார். நான் சொன்னது அவ்வளவும் உண்மை. 50 லட்சம் ஏக்கர் தரிசு நிலம் தமிழ்நாட்டில் உள்ளது. மூன்றரை லட்சம் ஏக்கர்தான் அரசுக்கு சொந்தமானது. மற்றவைகள் எல்லாம் பட்டா நிலங்கள். தனியாருடைய பட்டா நிலங்கள். ஒவ்வொருவரிடமும் 1 ஏக்கர், 2 ஏக்கர், 3 ஏக்கர் என்று சிறு விவசாயிகள் அந்த நிலத்தை வைத்திருக்கிறார்கள். சாகுபடி செய்ய முடியவில்லை ஏழ்மையின் காரணமாக, வறுமையின் காரணமாக.

கேள்வி: மத்திய அரசு ரேஷன் அரிசியை மாநிலங்களுக்கு ரூ 8.30_க்கு கொடுக்கிறது. அதை வாங்கி அரசு ரூ.3.50_க்கு ரேஷன் கடையில் கொடுக்கிறது. இந்த நிலையில் தொகுப்பு திட்டத்தின்கீழ் மத்திய அரசு ரேஷன் அரிசி விலையை மேலும் உயர்த்தியிருக்கிறது. இதற்கு எதிர்ப்பு வந்ததால் மத்திய அரசு விலை உயர்வை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிறது. இந்த சூழ்நிலையில் நான் ஆட்சிக்கு வந்தால் ரூ.2_க்கு அரிசி வழங்குவோம் என்று கருணாநிதி சொல்லியிருக்கிறாரே. இது மக்களை ஏமாற்றும் திட்டம் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

பதில்: நிச்சயமாக... திரு கருணாநிதி மக்களை ஏமாற்றப் பார்க்கிறார். கிலோ ஒன்று 2 ரூபாய் என்ற விலைக்கு கொடுப்பேன் என்று கருணாநிதி சொல்வது மக்களை ஏமாற்றும் வேலைதான். கருணாநிதியின் முந்தைய தி.மு.க. ஆட்சிகாலத்தில்தான் ரேஷன் கடையில் அரிசி விலையை ரூ.2_க்கு விற்ற அரிசியை ரூ.3.50_க்கு உயர்த்தினார். அப்படி இருக்கும்போது அவரால் ரூ.2_க்கு எப்படி அரிசியை கொடுக்க முடியும்? 99_ல் தி.மு.க. ஆட்சிகாலத்தில் திரு கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது அப்போது அரிசியின் விலை கிலோ ரூ.2. அதை ரூ.3.50_ஆக மாற்றியதே திரு.கருணாநிதிதான். அப்படியிருக்கும்போது இப்போது எப்படி அவரால் ரூ.2_க்கு கொடுக்க முடியும்? வழக்கம்போல் மக்களை ஏமாற்றுகிறார் கருணாநிதி. எனவே மக்கள் ஏமாறக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக வடக்கு ஆத்தூரில் ஸ்ரீவைகுண்டம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.பி.சண்முகநாதன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அப்போது ஷேக் தாவூது, நகரச் செயலாளர் ராஜகோபால் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் சுப்பிரமணியம், ஊராட்சி மன்றத் தலைவர் கில்டன், ம.தி.மு.க. சார்பில் லட்சுமணன் ஆகியோர் வரவேற்றனர்.

http://www.thinaboomi.com/aprr13/head.htm

www.mdmk.org.in -------------------------------------------------------- www.thedmk.org

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.