Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இப்படித்தான் வாழ்கிறோம்! (சிறுகதை)

Featured Replies

“சேர் உதால போகலாமோ” என நான் கேட்க, ம், ம் போங்க போங்க என அந்த ஆமிக்காரன்; கூறினான். நானும் நண்பனும் மோட்டார் சைக்கிளில் வெள்ளந்தியாய் சிரித்தபடி , “தாங்கியூ சேர்” என்று கூறியபடி கஸ்தூரியார் வீதியால் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியை நோக்கி விரைகின்றோம். யாழ். இந்து மைதானத்தை நெருங்கும்போது மைதானத்தில் ஒரே கூட்டம். வழமையாகப் பூட்டிக் கிடக்கும் மைதானத்து வைரவர் கோவில் கேற்றுக்கள் திறந்து விடப்பட்டிருந்தன. உள்ளே ஏகப்பட்ட மோட்டார் சைக்கிள்கள், சைக்கிள்கள் சகிதம் நிறைய பேர் கவலை தோய்ந்த முகத்துடன் கால் கடுக்க நின்று கொண்டிருந்தார்கள்.

ஏதோ விபரீதம் நடக்குது என்று, நானும் நண்பனும் மின்னல் நேரத்தில் மோட்டார் சைக்கிளை நீராவியடி பிள்ளையார் கோவிலடி வீதிக்கு திருப்பினோம். சந்தியில் நிண்ட ஆமிக்காரன் “அடோ தம்பி எங்க போறது? கிரவுண்டுக்கு உள்ள போங்க” என்றான். “இல்லை சேர் நாங்க இரண்டுபேரும் படிப்பிக்கிறம் பிள்ளையள் பாத்துக்கொண்டு இருப்பினம்” என்று கூறினோம். “அடோ திரும்ப கதைச்சு அடிவாங்கிறது” எண்டு அவன் உறுமினான். “இனி கதைச்சு வேலை இல்லை. இண்டைக்கு பின்னேரமோ இல்ல இரவோ வீட்ட போறது. கடவுளுக்கு தான் வெளிச்சம்” என்று நண்பன் அலுத்துக்கொண்டான்.

மோட்டார் சைக்கிளை உருட்டியபடி மைதானத்துக்குள் சென்றோம். அங்கே ஏற்கனவே எங்களைப் போல் மாட்டியவர்கள் சிலர் அனுதாபத்துடன் எங்களை நோக்கினர். மைதானத்தை ஒரு முறை நோட்டம் விட்டேன். அட யாழ்ப்பாணத்தில் இவ்வளவு பேர் இன்னும் உயிருடன் இருக்கினமே! அதுவும் இளம் பொடி பெட்டையள். ம். இது தெரிஞ்சுதான் இண்டைக்கு இவ்வளவு பேரையும் அள்ளிக் கொண்டு போகப்போறான்களாக்கும் என்று நான் நினைத்துக் கொண்டேன். “ஏன் மறிச்சவங்க, எப்ப விடுவாங்கள்” “நான் பிள்ளையை ஏத்த வந்து மாட்டுப்பட்டிட்டன்” “வீட்டில பிள்ளை தனிய அப்பாவுக்கு தெரியாது” இப்படியாக ஒவ்வொருவரும் தங்களுக்கு தாங்களே அலுத்து அங்கலாய்த்து கொண்டனர். மைதானத்தை சுற்றி படையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.

திடீரென்று கூட்டத்தில் சலசலப்பு. எல்லோரும் வாசலையே நோக்கினார்கள். ஒரு பவள் கவச வாகனம் வாசலில் வந்து நின்றது, எனக்கு பகீரென்றது. ஏனெனில் பவள் வந்தால் அதுக்குள்ள தலையாட்டி நிப்பானெண்டு எனக்கு மட்டுமில்ல உலகத் தமிழர்கள் அனைவருக்கும் தெரியும். எங்கட சின்னஞ்சிறுசுகள் ஆமி மாமா விளையாட்டு விளையாடும் விடயம் வரை, விபரீதமான வகையில் எங்கள் உயிரோடு கலந்துவிட்டது இந்த சனியன் பிடிச்ச ஆமி விவகாரம். “ எல்லோரும் லைனில நில்லுங்க வீட்ட விடப்போறம்” என்றான் பெரிய ஆமிக்காரன்.

ஒருத்தருக்கும் முகத்தில் ஈயாடவில்லை. பவள் வாகனத்தின் கறுப்புக் கண்ணாடிகள் எங்களையே கூர்ந்து பார்ப்பதாக எனக்குப்பட்டது. ஒவ்வொருவராகச் செல்கிறோம். பெரிய வரிசை அசைய மறுக்கிறது. கால்கள் முன்னோக்கி நடக்க மனம் பின்னோக்கி ஓட ஏங்குகின்றது. சம்பந்தமில்லாமல் அம்மா, அப்பா, வகுப்பில ஒன்றாக படிச்ச நண்பி ஆகியோரின் முகங்கள் மனத்திரையில் வந்து போகின்றன. கால்கள் கைகள் நடுங்கிக்கொண்டு இருந்தன. எனக்கு முன்னால மூன்றாவது ஆளாய் நிண்டவன மறிச்சுப் போட்டாங்கள். அவன் குளறி குளறி அழுகிறான். எனக்கு அவன தெரியும் கொஞ்ச நாள் இயக்கப் பொடியள் நடத்தின கூட்டங்களுக்கு அவங்களோட போறவன். பாவம் தேப்பன் இல்லாத தாய்க்கு ஒரேயொரு பிள்ளை. தாய் அவனை காணாட்டி ஏங்கியே செத்து போடும்.

எனது முறை வந்தது. எனது ஐ.சியை ஆமி வாங்கி பவளுக்குள் இருந்த தலையாட்டியிடம் கொடுத்தான். அவன் கறுப்பு துணிக்குள்ள கண்ணால் பார்த்தான். எனக்கு அடி வயிறு கலங்கியது. எங்க படுபாவி தலையை ஆட்டி விடுவானோ என்று, மரண பயம் என்ன என்று அன்று தான் தெரிந்துகொண்டேன். நான் யாருக்கும் கெடுதல் பண்ணவில்லை என்று, சமாதானம் செய்துகொண்டேன். விட்டுட்டாங்கள். எனது நண்பனும் கூட வந்துவிட்டான். “சோமாலியாவில் பிறந்தாலும் இலங்கை தமிழனாய் பிறக்கக்கூடாது” என மனதுக்குள் ஓலமிட்டபடியே வீட வந்து சேர்ந்தோம். இரண்டு பேருக்கும் அடுத்த நாள் சரியான காய்ச்சல்.

இரண்டு கிழமை காய்ச்சல் முடிந்து வாசிக சாலைக்குச் சென்று பத்திரிகையைப் புரட்டுகிறேன். நாங்கள் இரண்டு கிழமைக்கு முதல் மைதானத்தில் தலையாட்டி மறிச்ச அதே பொடியன். “கைக்குண்டு ஒன்றை வெடிக்க வைக்க முற்பட்டபோது படையினர் தற்பாதுகாப்புக்காக சுட்டதில் புலி உறுப்பினர் பலி” என்று கடைசி பக்கத்தில் சின்னதாக ஒரு செய்தி என் மனதில தேளாக கொட்டியது.

-யாழவன்

http://tamilleader.com/sirukathai/4591-2012-06-06-08-47-40.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.