Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்று அகதிகள் தினம்! உலகம் பூராக 44 மில்லியன் அகதிகள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[size=3]akathikal-100x100.jpg[/size]

[size=3][size=4]உள் நாடுகளிலும் வெளிநாடுகளிலும் இடம்பெயர்ந்து தற்போது உலகம் முழுக்க 44 மில்லியன் மக்கள் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர் என ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் அமையம் தெரிவித்துள்ளது.[/size][/size]

[size=3][size=4]இன்று 20 ம் திகதி சர்வதேச அகதிகள் தினம் நினைவு கூறப்படுகின்றது. அகதிகளின் மறுபெயர் இலங்கைத் தமிழர்கள் என்றால் அது தவறில்லை.[/size][/size]

[size=3][size=4]உலகின் 54 நாடுகளில் இலங்கைத் தமிழர்கள்அகதிகளாக வாழ்கின்றார்கள். உலகின் அதிக நாடுகளில் அகதிகளாக வாழும் ஒரே இனம் இலங்கைத் தமிழர்கள் என்று ஐ.நா வின் சேவை அமைப்பான யுனிசெப் கூறியுள்ளது.[/size][/size]

[size=3][size=4]தற்போது கூட இலங்கைத்தமிழர்கள் முல்வேளிகளுக்குள் வாழ்ந்து வருகின்றார்கள். அவர்கள் விரைவில் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம்.[/size][/size]

[size=3][size=4]உலகில் உள்ள எல்லா நாடுகளிலும் பல்வேறு அரசியல் மற்றும் பொருளாதாரம், உள்நாட்டு போர் ஆகிய காரணங்களால் அங்கு வாழும் மக்கள் அகதிகளாக வெளியேறுகின்றனர்.[/size][/size]

[size=3][size=4]எந்த ஒரு நாட்டிலும் உள்நாட்டு குழப்பம் ஏற்படும் போதோ, இனகலவரம் ஏற்படும் போதோ முதலில் பாதிக்கப்படுவது அப்பாவி மக்கள் தான். இவர்கள் அகதிகளாக இடம் பெயருகின்றனர்.[/size][/size]

[size=3][size=4]அந்த வகையில் முதன்முதலாக ஆப்ரிக்க கண்டத்தில் தான் முதன்முதலாக ஜூன் 20-ம் திகதி அகதிகள் தினமாக அணுசரிக்கப்பட்டது. ஆப்ரிக்க கண்டங்களில் உள்ள 50-ம் ‌மேற்பட்ட நாடுகளில் சோமாலியா, எத்தியேபியா போன்ற நாடுகளில் பசி, பஞ்சம், பட்டினி போன்றைவை தலைவிரித்தாடுகின்றன.[/size][/size]

[size=3][size=4]சில நாடுகளில் உள்நாட்டு போர், பயங்கரவாதிகளின் தாக்குதல் போன்ற பல்வேறு காரணங்களால் அங்குள்ள மக்களை பக்கத்து நாடுகளுக்கு இடம் பெயர வைத்துள்ளது. இந்நிலையில் கடந்த 2000-ம் ஆண்டு டிசம்பர் 4-ம் திகதி அன்று ஐ.நா.பொதுச்சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படி பல்வேறு காரணங்களால் இடம் பெயரும் மக்களுக்கு அகதிகள் அந்தஸ்து வழங்கப்பட்டது.[/size][/size]

[size=3][size=4]இதைத்தொடர்ந்து தான் ஐ.நா.வின் மனித உரிமை அமைப்பு சார்பில் ஓவ்வொரு ஆண்டும் ஜூன் 20-ம் திகதி சர்வதேச அகதிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.[/size][/size]

[size=3][size=4]சமீபத்தில் வங்‌கதேசம், மியான்மரில் நடந்த இன கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அகதிகளாக மியான்மரில் குடியேற முயன்ற போது அவர்களுக்கு அடைகலம் கொடுக்க மறுக்கப்பட்ட சம்பவமும் நிகழ்ந்துள்ளது.[/size][/size]

[size=3][size=4]சர்வதேச அகதிகள் தினத்‌‌தையொட்டி ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த 2011-ம் ஆண்டில் உலக முழுவதும் 8 லட்சம் அகதிகள் கட்டயமாக நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். இவற்றில் ஆசிய நாடான இந்தியாவில், பக்கத்துநாடான இலங்கை, திபெத் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் தான் 2 லட்சம் அகதிகளாக வந்துள்ளனர்.[/size][/size]

[size=3][size=4]தவிர பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளில் இருந்தும் அகதிகள் இடம் பெயர்ந்துள்ளதாக ஐ.நா. மனித உரிமை அமைப்பு கூறியுள்ளது.தற்போது ஐ.நா. மனித உரிமை அமைப்பு, உலக அகதிகள் தினமான இன்று புதிய பிரசாரத்தினை மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.[/size][/size]

[size=3][size=4]இது குறித்து ஐ.நா. பொதுச்செயலர் பான்கீமூன் கூறுகையில், வாழ வழியில்லாத காரணத்தால் தான் அவர்கள் அகதிகளாக ‌இடம் பெயர்கின்றனர். அதிகரித்து வரும் அகதிக‌ளை கட்டுப்படுத்த சம்மந்தப்பட்ட நாடுகளின் ‌அரசியல் ரீதியான முரண்பாடுகளை களைய தலைவர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்றார்.[/size][/size]

[size=3][size=4]http://www.saritham.com/?p=62453[/size][/size]

[size=5]புகலிடம் கோரி வரும் அகதிகளை எந்தவொரு நாடும் திருப்பி அனுப்பக் கூடாது ஐ.நா. செயலாளர் நாயகம்[/size]

[size=4]புகலிடம் கோரும் அகதிகளை எந்தவொரு நாடும் திருப்பி அனுப்பக் கூடாதென ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் சர்வதேச சமூகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். சமீபகாலமாக ஆபிரிக்க மேற்கு ஆசிய நாடுகளில் அகதிகளை திரும்ப அனுப்பும் பிரச்சினை அதிகரித்துள்ளது. இந்நிலையில் உலக அகதிகள் தினம் நேற்று புதன்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு பான் கி மூன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;[/size]

[size=4]தங்கள் உயிருக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையில் தான் சொந்த நாட்டை விட்டு வெளியேறி வேறு நாடுகளில் அகதிகள் தஞ்சமடைகின்றனர். எனவே அவர்களை வரவேற்க வேண்டும். உள் நாட்டில் பல்வேறு நிதிப் பிரச்சினைகள் இருந்தாலும் அகதிகளாக வருபவர்களை திரும்ப அனுப்பக்கூடாது. வேறு வழியில்லாத நிலையில் தான் அவர்கள் நம்மை நாடி வருகின்றனர். எனவே அவர்களுக்கு கண்டிப்பாக உதவி செய்ய வேண்டும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.[/size]

[size=4]கடந்த ஆண்டில் மட்டும் 43 இலட்சம் பேர் தங்கள் நாடுகளில் இருந்து வெளியேறி பிறநாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளவே நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர்.[/size]

[size=4]அகதிகளில் 5 இல் 4 பேர் வளரும் நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று ஐ.நா. வின் அகதிகள் மறுவாழ்வு பிரிவு தெரிவித்துள்ளது. அகதிகளுக்கான போதியசட்டங்கள் இல்லாத நிலையில் 2 இலட்சத்துக்கும் மேற்பட்ட இலங்கை, திபெத் அகதிகள் இந்தியாவில் உள்ளனர். இது தவிர வேறு பலநாடுகளில் இருந்து 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளனர்.[/size]

[size=4]ஆனால் 1940 ஆம் ஆண்டுகளில் உள்ள அகதிகள் சட்டத்தை வைத்துக்கொண்டு எதையும் செய்யமுடியாது.அகதிகள் இந்தியாவில் எளிதில் ஏற்றுக் கொள்ளப்படுகிறார்கள்.ஆனால் அவர்கள் பாதுகாப்பாக வசிக்க போதிய வசதிகள் செய்து தரப்படுவது இல்லை.எனவே அகதிகளை நிர்வகிக்க சரியான சட்ட நடைமுறைகளை இந்தியா கொண்டுவர வேண்டும் என்று தெற்காசிய மனிதஉரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.[/size]

[size=4]http://www.thinakkural.com/index.php?option=com_content&view=article&id=15697:2012-06-20-08-03-11&catid=290:world&Itemid=461[/size]

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய தினத்தில் தாயக மக்களுக்கு தங்களால் இயன்ற சிறு பங்களிப்பை வழங்க அனைவரும் உறுதி ஏற்க வேணும் :rolleyes: :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.