Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கில் இணையும் பொதுமக்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கில் இணையும் பொதுமக்கள்

தமிழீழத் தாயக விடுதலைப்போராட்டத்தில் 16 பேர் ஒட்டுமொத்தமாக தம்மை இணைத்துக்கொண்டுள்ளனர்.

கிளிநொச்சி பண்பாட்டு மண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை (13.04.06) மாலை நடைபெற்ற சமகால அரசியல் கருத்தாடல் நிகழ்வில் 16 பேர் தம்மை விடுதலைப்போராடத்தில் இணைத்துக்கொண்டனர்.

இளைஞர்கள்இ வயது முதிர்ந்தவர்கள் என 16 பேர் தம்மை விடுதலைப்போராட்டத்தில் இணைத்துக்கொண்டனர்.

விடுதலைப் போராட்டத்தில் இணைந்து கொண்ட அவர்கள்இ சிறிலங்கா அரசின் இழுத்தடிப்புகளுக்கு இனியும் விட்டுக்கொடுக்கமுடியாது- விரைவில் நாம் விடுதலையை வென்றெடுக்க வேண்டும் - சமாதானம் என்று சிறிலங்கா அரசு நடத்தும் ஏமாற்று நடவடிக்கையில் இருந்து நாம் தப்பி விடுதலையை வென்றெடுக்க தாம் விடுதலைப் போராட்டத்தில் இணைந்ததாகத் தெரிவித்தனர்

கடந்த சில நாட்களில் மன்னாரில் 217 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 107 பேரும் விடுதலைப் போராட்டத்தில் தம்மை இணைத்துக்கொண்டனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதான கனேடியத் தடை மற்றும் திருமலை இன வன்முறைகள் என்று சிறிலங்கா அரசாங்கமும் படைத்தரப்பும் வெறியாட்டம் நடத்துகிற நிலையில் தமிழ் மக்கள் தங்களை விடுதலைப் போராட்டத்தில் பெருமளவில் இணைத்துக் கொள்வது குறிப்பிடத்தக்கது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதான கனேடியத் தடை மற்றும் திருமலை இன வன்முறைகள் என்று சிறிலங்கா அரசாங்கமும் படைத்தரப்பும் வெறியாட்டம் நடத்துகிற நிலையில் தமிழ் மக்கள் தங்களை விடுதலைப் போராட்டத்தில் பெருமளவில் இணைத்துக் கொள்வது குறிப்பிடத்தக்கது.

தகவல்:புதினம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எந்த அதிகளவிலான அடக்குமுறைகளும் தான் மக்களை வீறு கொள்ள வைக்கும். கனடாவின் தடை, திருகோணமலைத் தாக்குதல்களால் மக்கள் மத்தியில் தாமே போராடித்தான் வெல்ல வேண்டும் என்ற எண்ணத்தை தோற்றுவிப்பதை மறுக்கமுடியாது.

இந்தியா தடை விதித்தபோது கூட போராளிகள் முடங்குவார்கள் என்று சிங்கள தேசமும், ஆக்கிரமிப்பு சக்திகளும் எண்ணினார்கள். ஆனால் அதன் பிற்பட்ட காலத்தில் தான் மரபுப் படையணிகள் வளர்ந்தன. தமிழீழத்திற்கான கட்டுமானங்கள் அமையப்பெற்றன.

அவ்வாறே கருணா பிளவின் போதும் ஆயிரக்கணக்கான மக்கள் தற்பாதுகாப்பு பயிற்சியைப் பெற்று எல்லைகளில் காவல் நிற்கின்றனர்.

அடக்குமுறைகளால் அல்லது நயவஞ்சக வலைகளால் தமிழ்மக்களை அடக்கலாம் என்று நினைத்தால் அது என்றுமே பகல் கனவாகத் தான் எதிரிகளுக்கு முடியும்.

தகவல் இணைப்பிற்கு நன்றி தூயவன். :lol:

விடுதலைப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கில் இணையும் பொதுமக்கள்

தமிழீழத் தாயக விடுதலைப்போராட்டத்தில் 16 பேர் ஒட்டுமொத்தமாக தம்மை இணைத்துக்கொண்டுள்ளனர்.

கிளிநொச்சி பண்பாட்டு மண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை (13.04.06) மாலை நடைபெற்ற சமகால அரசியல் கருத்தாடல் நிகழ்வில் 16 பேர் தம்மை விடுதலைப்போராடத்தில் இணைத்துக்கொண்டனர்.

இளைஞர்கள்இ வயது முதிர்ந்தவர்கள் என 16 பேர் தம்மை விடுதலைப்போராட்டத்தில் இணைத்துக்கொண்டனர்.

விடுதலைப் போராட்டத்தில் இணைந்து கொண்ட அவர்கள்இ சிறிலங்கா அரசின் இழுத்தடிப்புகளுக்கு இனியும் விட்டுக்கொடுக்கமுடியாது- விரைவில் நாம் விடுதலையை வென்றெடுக்க வேண்டும் - சமாதானம் என்று சிறிலங்கா அரசு நடத்தும் ஏமாற்று நடவடிக்கையில் இருந்து நாம் தப்பி விடுதலையை வென்றெடுக்க தாம் விடுதலைப் போராட்டத்தில் இணைந்ததாகத் தெரிவித்தனர்

கடந்த சில நாட்களில் மன்னாரில் 217 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 107 பேரும் விடுதலைப் போராட்டத்தில் தம்மை இணைத்துக்கொண்டனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதான கனேடியத் தடை மற்றும் திருமலை இன வன்முறைகள் என்று சிறிலங்கா அரசாங்கமும் படைத்தரப்பும் வெறியாட்டம் நடத்துகிற நிலையில் தமிழ் மக்கள் தங்களை விடுதலைப் போராட்டத்தில் பெருமளவில் இணைத்துக் கொள்வது குறிப்பிடத்தக்கது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதான கனேடியத் தடை மற்றும் திருமலை இன வன்முறைகள் என்று சிறிலங்கா அரசாங்கமும் படைத்தரப்பும் வெறியாட்டம் நடத்துகிற நிலையில் தமிழ் மக்கள் தங்களை விடுதலைப் போராட்டத்தில் பெருமளவில் இணைத்துக் கொள்வது குறிப்பிடத்தக்கது.

தகவல்:புதினம்

காலத்தின் தேவை.

தீலிபனின் உண்மையான விடுதலைக் கனவு இப்போ நிஜமாகின்றது.

தமிழீழ மகாத்மா தீலிபன் சொன்ன உண்மையான மக்கள் புரட்சி இதுதான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்று கிளிநொச்சியில் 34 பேர் விடுதலைப் போராட்டத்தில் இணைவு!!

இன்று கிளிநொச்சியில் 7 பெண்கள் உட்பட கிராம அலுவலர், பாடசாலை முதல்வர் ஆசிரியர்கள் பொதுமக்கள் என 34பேர் இன்று விடுதலைப் போராட்டத்தில் தம்மை இணைந்துள்ளனர். (படங்கள் இணைப்பு)

கிளிநொச்சி இந்துக்கல்லு}hயில் இன்று காலை 10.00 மணிக்கு கிளிநொச்சி மாவட்டம் மற்றும் பிரதேச மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலை அடுத்து இவர்கள் தம்மை விடுதலைப் போராட்டத்தில் இணைந்துள்ளனர்.

இதேபோன்று கடந்த 13 நாள் கிளிநொச்சி மாவட்ட தேசிய எழுச்சிப் பேரவை செயலாளர் உட்பட 16 பேர் விடுதலைப் போராட்டத்தில் இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று நடை பெற்ற இச்சந்திப்பில் அரசியல்துறைப் பொறுப்பாளர் திரு. சு.ப. தமிழ்ச்செல்வன் அரசியல்துறை துணைப்பொறுப்பாளர் சோ. தங்கன், விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர் கா.வே பாலகுமாரன், தமிழீழ மகளிர் அரசியல்த்துறைப் பொறுப்பாளர் தமிழினி, விடுதலைப்புலிகளின் கலை பண்பாட்டுக் கழகப் பொறுப்பாளர் புதுவை இரத்தினதுரை மற்றும் பொறுப்பாளர்கள் போராளிகள் எனப்பலர் கலந்து கொண்டு இன்றைய சமகால அரசியல் தொடர்பான கருத்துக்களை வழங்கினார்.

34ppl_join_ltte.jpg

34ppl_join_ltte1.jpg

34ppl_join_ltte2.jpg

34ppl_join_ltte3.jpg

தகவல்:சங்கதி

7 யுவதிகள் உட்பட 67 பேர் விடுதலைப் போராட்டத்தில் இணைவு

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் 67 பேர் பளையில் இன்று வெள்ளிக்கிழமை தம்மை முழுமையாக இணைத்துள்ளனர்.

பளை மத்தியக் கல்லூரியில் பிற்பகல் 4 மணிக்கு போராளி அமீர் தலைமையில் அரசியல் கருத்தரங்கு நடைபெற்றது.

அப்போது 7 யுவதிகள் உட்பட்ட 67 பேர் தம்மை முழுமையாக போராட்டத்தில் இணைத்துக்கொள்ள முன்வந்துள்ளனர்.

அண்மைய நாட்களாக தமிழீழத் தாயகப் பகுதியில் பெரும் எண்ணிக்கையில் மக்கள் வயது வேறுபாடு இன்றி போராட்டத்தில் இணைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

puthinam.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.