Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நம்பிக்கையும் காசில்லாமல் கனவாகிறது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[size=6]நம்பிக்கையும் காசில்லாமல் கனவாகிறது. [/size]

Posted by சாந்தி ரமேஷ் வவுனியன் Tuesday, June 26, 2012

அண்ணை இப்பத்தான் அண்மையில தடுப்பிலயிருந்து வெளியில வந்தவர். 25வரியம் இயக்கத்தில இருந்தவர். ஒரு நல்ல களமுனைச்சண்டைக்காரனும் கூட. அவருக்குத் தெரிஞ்சதெல்லாம் சுடுகலனும் , கனரகமும் அதுகளை இயக்கிற வகையளுமே.

ஆயுதங்களோடை அண்ணை காடுகளெல்லாம் நடந்து திரிஞ்சவர். தாயகக்கனவை நெஞ்சில சுமந்தபடி அண்ணை உருவாக்கிய போராளிகள் அண்ணையின் கையிலை வீரச்சாவான நேரங்களிலயெல்லாம் அண்ணை தன்ரை கண்ணீரை மறைச்சு இலட்சியத்தை இறுக்கமாவே வரிச்சுக் கொண்டு இயங்கின மனிசன்.

2006மாவிலாற்றில சண்டை துவங்கினோடனும் மாவிலாற்றில சண்டைக்களத்தில நிண்டார். பிறகு சம்பூர் , மூதூர் , கொக்கட்டிச்சோலை , தொப்பிகல எண்டு கிழக்க மாகாணத்தில அண்ணை நிக்காக களங்களில்லை. அண்ணைக்குப் பின்னாலை அவற்றை மனைவியும் , குழந்தையும் அலைச்சல்தான் அவைக்கும்.

கிழக்கை படைகள் கைப்பற்றி முடிய கிழக்கின்ரை இழப்புகளில அண்ணையும் இழந்தது நிறைய. களத்தில காயங்களாகியும் மனசில ஈ(வீ)ரம் காயமால் தான் விதைச்ச தான் வளத்த போராளிகள் மாவீரர்களைத்தான் நினைச்சு நினைச்சு உழைச்சவர். ஒரு நாளும் குடும்பம் குழந்தை வீட்டைப்பற்றி நினைச்சதேயில்லை. அவற்றை மனசைப்புரிஞ்ச மனைவி அவரோடை வாழக்கிடைச்சதுக்காக பெருமைப்பட்ட காலங்கள் அது.

கிழக்கை இழந்தப்பிறகு வடக்கிற்கு அண்ணையின்ரை அணி காடுகள் கடந்து நீண்ட நடைப்பயணம் செய்து வன்னிக்களமுனைக்குப் போய்ச்சினம். தான் போன வன்னிக்கு தன்ரை குடும்பத்தையும் இடம்பெயர வைச்சு அவையளுக்கும் தொடர் அகதி வாழ்வையே குடுத்த மனிசன். இப்ப கேட்டாலும் அது குற்றமெண்டு ஒத்துக் கொள்ளமாட்டார். கடினங்களோடை வாழப்பழகின தன்னை காதலிச்ச மனைவி அதையெல்லாம் அனுபவிச்சது பிழையில்லையெண்டு நாண்டுபிடிப்பார்.

கடைசியில 2009 அண்ணையும் சரணடைஞ்சார். இப்பவும் அதெல்லாம் ஒரு கனவுமாதிரியே அவருக்கு கனவுகளில வருகிறது. எந்த நம்பிக்கையில சரணடைஞ்சாரெண்டது இப்பவும் ஞாபகத்தில வருதில்லை. ஆனால் சரணடைஞ்சு சித்திரவதையள் அனுபவிச்சு நோஞ்சானாகி விடுதலையாகியிருக்கிற மனிசன் இன்றும் நல்லவனவாகவும் , நேர்மையானவனாகவும் வாழ நினைச்சு கஸ்ரப்படுறதைப் பாக்கிற ஊர்ச்சனம் இப்பிடித்தான் சொல்லுது...

'உலகத்தோடை ஒத்துவாழப்பழகுங்கோ'.

யாரிட்டையும் உதவி கேப்பம் எத்தினை நாளைக்கு இப்பிடி கஞ்சியும் வறுமையும் எங்களை வாழ வைக்கப்போகுது...? ஏன்று சலிக்கிற மனைவிக்கு ‚'வா நஞ்சைக்குடிச்சுச் செத்துப்போவம்'' எண்டு சொல்லி வாயை மூடப்பண்ணீடுவர்.

எத்தினை பேரை வாழ வைச்ச மனிசன் எத்தினையோ பேருக்கு வாழ வழிசெய்த மனிசன் தினக்கூலி வேலைக்கும் உரிய ஊதியம் கிடைக்காமற்போயும் வரம்பு கட்டியும் கரைவலைக்குப்போயும் தான் குடும்பச் சீவியத்தைக் காவாந்து பண்ணிக் கொண்டிருக்கிறார்.

எத்தனையோ வலிகளும் கடினங்களும் தாங்கிய உடல் வதைகளால் பாதிப்புற்று வலிமையும் இழந்து போய் இப்ப ஒரு நோயாளி. ரெண்டுநாள் வேலை மூண்டாம் நாள் படுக்கையிலென இதுதான் இப்ப மனிசன்ரை வாழ்க்கை.

வாழிறதுக்கு சொந்த வீடில்லை தகரக்குடில் அதுதான் அண்ணையின்ரை வசந்தமாளிகை. வெப்பத்தைச் சேகரிச்து வைச்சிருக்கிற தகரக்குடிலின் வெப்பியாரம் தாங்காமல்....,

‚'எப்பப்பா நாங்க வீடு கட்டுவம் ?'' என அழுகிற மகனுக்கு....என்ரை குஞ்சுக்குத்தான இந்த வீட்டை எழுதித்தாறது'' எனச் சொல்லுவார். 8வயசுப்பிள்ளையும் ஏதோ அப்பா பெரிய வில்லாவைத் தனக்கு முதிசமாத்தரப்போறாரெண்டு வில்லாக்கனவில் இருக்கிறான்.

வரப்புகட்டப்போறதிலும் வருவாயில்லாமல் போய்விட இப்ப ஆத்தில மீன் பிடிக்க இரவலுக்கு வலைவேண்டி மீன் பிடிக்கப்போய்வாறார். இப்ப மீன்படுற காலமாம் அதிலை ஏதும் முன்னேறிடலாமெண்ட கனவில பின்னேரம் 5மணிக்கு வீட்டைவிட்டு வெளிக்கிட்டுவிடுவார். மறுநாள் மதியம் ஒரு மணிக்குத்தான் வீட்டை வருவார். சிலநேரம் நித்திரை முளிப்புக்கும் 10மயில் சயிக்கிள் ஓடிப்போனதுக்கும் பயனில்லாமல் வெறுங்கையோடு திரும்பி வருவார். இப்போது தண்ணீர் வற்றுக்காலம் என்பதால் முதலைகள் அவர்கள் மீன்பிடிக்கும் ஆற்றில் வாழ்க்கையை ஆரம்பித்துள்ள காலமிது.

மீன்கள்பட்டதும் முதலைகள் வலைகளை அறுத்துவிடுகிறது. அறுபட்ட வலையை மீளக்கட்டி மீண்டும் தொழிலுக்குத் தயாராக கிடைக்கிற கொஞ்ச ஓய்வும் போய்விடுகிறது. முதலைகளைத் துரத்த இரவிரவாய் நித்திரை முளித்துக் ஆற்றங்கரையில் காவலிருக்கிறதே இப்போது வாழ்வாகிப் போயிருக்கிறது.

வலையும் சொந்தமாயில்லை ஆளம் மிகுந்த ஆற்றில் தொழில் செய்ய தோணியும் இல்லை. இந்த மீன்படும் காலத்தைப் பயன்படுத்த விரும்புகிற மனிசனுக்கு 40ஆயிரம் ரூபா கையிலிருந்தால் இருண்ட வாழ்க்கையை வெளிச்சமாக்க முடியுமென்ற நம்பிக்கையும் காசில்லாமல் கனவாகிறது.

„'உங்கடை கவுரவமும் நீங்களும் போங்கோ...' என்று அண்ணையின் கவுரவத்தை விட்டிட்டு அண்ணையின் மனைவி காயத்திரியக்கா எழுதிய கடிதம் அவர்களுக்காக எதையாவது செய்துவிட வேண்டுமென்றதைச் சொல்கிறது.

26.06.2012

காயத்திரியக்காவின் கடிதம் இது கருணையாளர்களிடம் விட்டுவிடுகிறேன்:-

Gayathiri.jpg

[size=6]http://mullaimann.blogspot.de/2012/06/blog-post_26.html[/size]

  • கருத்துக்கள உறவுகள்

அக்கா விபரத்தை அனுப்புங்க தனிமடலில் அதோட அவர்களது வங்கி இலக்கத்தையும் அனுப்புங்க

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அக்கா விபரத்தை அனுப்புங்க தனிமடலில் அதோட அவர்களது வங்கி இலக்கத்தையும் அனுப்புங்க

ஆதிபன் இக்குடும்பத்திற்கான வலைக்கான பணத்தை வழங்க முன்வந்துள்ளார்.(15000,00RS)

மீதி பாவித்த வள்ளம் ஒன்று வாங்குவதற்கான (25000,00RS) உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள் மீதியை இன்னொருவரை இணைத்து செய்வோம்.

உங்கள் மின்னஞ்சலுக்கு விபரங்கள் அனுப்புகிறேன்.

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மேற்படி குடும்பத்துக்கு களஉறவு ஆதிபன் 19000ரூபாவினை தொழில் முயற்சிக்கு வழங்கியுள்ளார். ஆதிபனுக்கு நன்றிகள்.

அக்கா விபரத்தை அனுப்புங்க தனிமடலில் அதோட அவர்களது வங்கி இலக்கத்தையும் அனுப்புங்க

புலிக்குரல், உங்கள் உதவி இன்னும் குறித்த குடும்பத்திற்கு கிடைக்கவில்லை. உங்களுக்கு என்ன இடைஞ்சல் என்பது தெரியவில்லை. ஆயினும் அவர்கள் உங்கள் உதவி கிடைக்குமென்று நம்பியிருக்கிறார்கள். அல்லது உங்களால் இப்போது உதவ முடியாது விட்டால் அதனை தெரிவியுங்கள் மாற்று ஏற்பாடு ஏதாவது செய்ய வேண்டும். எனது வேலைகளோடு உங்கள் உதவி கிடைத்திருக்குமென விட்டுவிட்டேன். இன்று தொடர்பாளரின் மாதாந்த முன்னேற்ற அறிக்கையில் மேற்படி குடும்பத்திற்கான உதவியில் உங்கள் உதவி கிடைக்காது அவர்கள் காத்திருப்பதாக வந்திருந்தது.

இடைஞ்சலுக்கு மன்னித்துக் கொள்ளுங்கள்.

அக்கோய் நீங்கள் எழுதின மாதிரியான ஒரு சண்டைக்காரனை வெளியில விட்டவங்களோ? அண்ணை 25 வரிசம் என்டால் 1984 இல இயக்கத்தில சேர்ந்திருப்பார். ஒரு கேணல் ரேஞ்சில இருந்திருப்பார்.

  • கருத்துக்கள உறவுகள்

அக்கோய் நீங்கள் எழுதின மாதிரியான ஒரு சண்டைக்காரனை வெளியில விட்டவங்களோ? அண்ணை 25 வரிசம் என்டால் 1984 இல இயக்கத்தில சேர்ந்திருப்பார். ஒரு கேணல் ரேஞ்சில இருந்திருப்பார்.

என்ன பிறப்புகளோ இதிலும் பார்க்க கருத்து எழுதாமல் இருக்கலாம் :wub:

Edited by நந்தன்26

  • 2 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இக்குடும்பத்தின் சுயதொழில் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஆதிபன் (கனடா) 19ஆயிரம்ரூபா , கருணாகரன் (அமெரிக்கா) 20ஆயிரம் ரூபாவும் வழங்கியிருந்தனர். இவர்களுக்கு உதவிய இருவருக்கும் இதயம் நிறைந்த நன்றிகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.