Jump to content

சேப்பங்கிழங்கு புளி குழம்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]சேப்பங்கிழங்கு புளி குழம்பு[/size]

img_6551.jpg

[size=5]தேவையானவை[/size]

  • சேப்பங்கிழங்கு - கால் கிலோ

  • வெங்காயம் - இரண்டு

  • தக்காளி - இரண்டு

  • புளி - ஒரு லெமென் சைஸ்
    தாளிக்க:

  • நல்லெண்ணெய் - மூன்று தேக்கரண்டி

  • கடுகு - அரை தேக்கரண்டி

  • சீரகம் - அரை தேக்கரண்டி

  • மிளகு - கால் தேகரண்டி

  • சோம்பு - அரை தேக்கரண்டி

  • வெந்தயம் - கால் தேக்கரண்டி

  • பூண்டு - ஐந்து பல்

  • கறிவேப்பிலை - ஒரு கைப் பிடி

  • சேர்க்க வேண்டிய பொடி வகைகள்:

  • மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி

  • தனியாத் தூள் - ஒரு தேக்கரண்டி

  • மஞ்சள் பொடி - கால் தேக்கரண்டி

  • வெந்தய பொடி - கால் தேக்கரண்டி

  • உப்பு தூள் - தேவைக்கு

  • தேங்காய் - மூன்று பத்தை

செய்யும் முறை

  • சேப்பங்கிழங்கை மண்ணில்லாமல் கழுவி குக்கரில் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் சேர்த்து வேக வைத்து தோலுரித்து இரண்டாக நறுக்கவும்.

  • தாளிக்க வேண்டிய அனைத்து பொருட்களையும் தாளித்து பூண்டை பொடியாக நறுக்கி போடவும். வெங்காயம் முதலில் வதக்கி விட்டு பிறகு பொடியாக தக்காளியை நறுக்கி சேர்த்து வதக்கவும், வதக்கி எல்லா தூள் வகைகளையும் சேர்த்து ஐந்து நிமிடம் சிம்மில் வைத்து விடவும்.

  • பச்ச வாசனை போனதும் புளியை கெட்டியாக கரைத்து ஊற்றி ஐந்து நிமிடம் கொதிக்க விடவும்.

  • நன்கு கொதித்ததும் தேங்காயை அரைத்து பால் எடுத்து ஊற்றி வெந்த சேப்பங்கிழங்கையும் சேர்த்து இறக்கவும்.

  • சுவையான சூப்பரான புளி குழம்பு ரெடி.

டிஸ்கி:

சேப்பங்கிழங்கு ரொம்ப கேஸ் ஆகையால் அதில் பூண்டு, சோம்பு சேர்த்தால் ஒன்றும் ஆகாது.

http://www.arusuvai.com/tamil/node/7128

1189421789_3bf2fded62.jpg

இதெல்லாம் செஞ்சி ஸ்பெசல் நீங்களும் சூடான சோற்றோடு பிசைந்து சாப்பிட்டு பாருங்கள் சூப்பராக இருக்கும்.. என்ன சேப்பைங் கிழங்கு முற்றி போய் விட்டது என்றால் நாக்கில் கொஞ்சம் நமைக்கும்.. வேற எழுதும் சைடு எபக்ட் கிடையாது :icon_idea: :icon_idea:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.