Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"படிப்பிற்கு தடையில்லை!'

Featured Replies

[size=5]"படிப்பிற்கு தடையில்லை!' [/size]

[size=4]

"சிறு துளிகள்' அமைப்பின் மூலம், ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவும், அண்ணா பல்கலைக்கழக மாணவி சைதன்யா: பொதுவாக, கல்லூரியில், பிறந்த நாள், பாஸ் செய்தால், அரியர் வாங்கினால், என, அனைத்திற்கும் நண்பர்களுக்கு, "பார்ட்டி' வைப்பது சம்பிரதாயம்.

அப்படி ஒரு நாள், என் பிறந்த நாள் பார்டிக்கும், சில ஆயிரங்களை செலவிட்டேன். அதில், பெரும்பாலான உணவு வகைகள், வீணாகியிருந்ததைப் பார்த்த போது,

இதற்கு ஏதாவது உபயோகமாக செய்திருக்கலாமே என தோன்றியது. எங்கள் கல்லூரியில், காலில் செருப்பு கூட போடாமல் வந்த, ஏழை மாணவருக்கு, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், தன் முழு சம்பளத்தையும் கொடுத்து உதவினார். அந்த உதவும் மனப்பான்மை, எப்போதும், நம்மிடம் இருக்க வேண்டும் என, எங்கள் "டீன்' கூறிய வார்த்தைகள் எங்களை இன்னும் உத்வேகமாக்கியது.

தினமும் கேன்டீனிலும், அவ்வப்போது நடைபெறும் நண்பர்கள் பார்ட்டியிலும், செலவு செய்யும் தொகையில் ஒரு பங்கை, எங்கள் அமைப்பிற்காக கேட்டோம். இந்தத் தொகை நம்முடன் படிக்கும் மாணவர்களுக்கு பயன்படும் என கூறி, ஒவ்வொரு வகுப்பிலும் பணம் சேகரித்தோம். கல்லூரியில், எங்கள் அமைப்பின் பெயரில் வங்கிக் கணக்கை ஆரம்பித்து, அதன் நடவடிக்கைகளை முதல்வர், மூத்த பேராசிரியர்கள் கொண்ட குழு மூலம், கண்காணிப்பது என, முறைப்படுத்தினோம்.

[/size]

[size=4]

பணம் கொடுத்தவர்களின் விவரங்களை, எங்கள் இணையதளத்தில் வெளியிட ஆரம்பித்தோம். இந்த வெளிப்படைத் தன்மை, எங்கள் மேல் நம்பிக்கையை ஏற்படுத்தியது. பத்து ரூபாயில் இருந்து, பல ஆயிரங்கள் வரை, மாணவர்கள் கொடுத்து உதவினர். "படிப்பிற்கும், மருத்துவச் செலவிற்கும், பிற அத்தியாவசிய செலவிற்கும் பணம் தேவையோ, அவர்கள் விண்ணப்பிக்கலாம்' என, கல்லூரியின் முக்கியமான இடங்களில், பெட்டிகளை வைத்தோம்.

[/size]

[size=4]

தக்கச் சான்றுகளுடன் விண்ணப்பித்த பலருக்கும் உதவினோம். எங்கள் கல்லூரியில் இனி யாருக்கும், படிப்பிற்கு குறுக்கே பணம் ஒரு பிரச்னையாக இருக்கக் கூடாது. அதை, "சிறுதுளிகள்' பார்த்துக் கொள்ளும்.

[/size]

[size=4]

-

[/size][size=4]முக நூல் ஊடாக [/size]

  • கருத்துக்கள உறவுகள்

படிப்பிற்கு தடையில்லைத் தான்...ஆனால் வறுமை என்ற ஒன்று எவரின் முன்னேற்திற்கும் தடையாக இருக்க கூடாது..மேல் உள்ள ஆக்கத்தில் குறிப்பிட்டு இருப்பது போல் வெளிநாடுகளில் எல்லாம் ஒவ்வொரு கிழமையும் ஏதாவது ஒரு விழா, கொண்டாட்டம் என்று மக்கள் ஓடிக் கொண்டே இருக்கிறார்கள்..இவற்றுக்கு செலவு பண்ணும் பணத்தில் ஒரு வீதத்தையாவது ஏழை மாணவர்களின் கல்விக் கண்ணைத் திறப்பதற்கு தன்னும் கொடுத்து உதவலாம் தானே...என் சிந்தனை எல்லாம் வீண் செலவுகள் செய்யும் போது படிக்க கஸ்ரப்படுகிற மாணவர்கள் பற்றியதாகவே இருக்கும்..யாருக்கு என்றாலும் உதவும் மனப் பாண்மை இயற்கையாகவே வர வேண்டும்..அப்துல் கலாம் உதவுறார் அவரைப் போல் எல்லாராலும் ஏலுமா என்று நினைக்க கூடாது ..நான் சொல்வது எங்கள் நாட்டில் உள்ள படிக்க கஸ்ரப்படடுற பிள்ளைகளைப் பற்றியது...செய்ய வேணும் என்று நினைத்தால் செய்யலாம்..ஊரில் உள்ள சில மாணர்களோடு பேசும் போது நிறையவே மக்கள் மத்தியில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக சொல்லிக் கவலைப்படுவார்கள்..

அதாவது யாருக்கும் எதுவும் கொடுத்து உதவும் மனப்பாண்மை அவர்களை விட்டு ரொம்ப தூரம் போய் விட்டதாகவே சொல்வார்கள்..சரி அது தான் போகட்டும் எங்காவது சிறிது நேரம் கதைப்பம் என்று கதைக்க வெளிக்கிட்டால் அவ்விடத்தை விட்டு போய் விடும் நிலையில் தான் தற்போதைய முன்னேற்றம் இருப்பதாக அறியக் கூடியதாக இருக்கிறது...நாங்கள் வாழும் நாடுகளில் அனேகமாக ஒவ்வொரு வீடுகளிலும் பல்கலைக்கழகத்திற்கோ இல்லை கல்லூரிகளுக்கோ ஒவ்வொரு துறைகளிலும் போய் வந்த பிள்ளைகள் இருப்பார்கள்,அல்லது இனி வரும் காலப்பகுதியில் போக இருப்பார்கள்....இங்கு எல்லாம் படித்தால் கல்லுரிக்கோ பல்கலைக்கோ போகும் வாய்ப்புக்கள் நிறையவே இருக்கிறது..ஊரில் பல்கலைக்கு போவது என்றால் எவ்வளவு சிரமத்தின் மத்தியில் உள் நுறைய வேணும் என்பதும் பலருக்கும் தெரிந்து இருக்கும்..ஆகவே எம்மால் முடிந்த மட்டுக்கு உதவி என்று கேட்டு நிக்கிற உறவுகளுக்கு கல்வி என்ற ஒன்றையாவது கொடுப்போமாக...

  • தொடங்கியவர்

[size=4]அண்மையில் தெரிந்தவர்கள் ஒருவர் வீட்டிற்கு போயிருந்தோம். அப்பொழுது அந்த குடும்பத்தலைவர் அண்மையில் கனடாவில் மரணித்த நமணன் பற்றியும் அவர் தாயக பிள்ளைகளின் கல்விக்கு உதவியதையும் பத்திரிகை வாயிலாக அறிந்ததாக கதைத்தார். [/size][size=1]

http://www.yarl.com/forum3/index.php?showtopic=102675[/size]

[size=1]

[size=4]இவ்வாறு தமது செயல்பாடுகள் மூலம் அவரவர் உதவும் பொழுது எம்மவர்கள் மத்தியில் இவ்வாறான விழிப்புணர்வுகள் அதிகமாக ஏற்படும். [/size][/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.