Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மறந்த நாயன்மார்கள் அறுபத்துமூவர் ( இறுதிப்பாகம் ).

Featured Replies

வணக்கம் கள உறவுகளே !

இந்த இறுதிப் பதிவுடன் " மறந்த நாயன்மார் அறுபத்துமூவர் " என்ற தொடரை முடிவுக்குக் கொண்டு வருகின்றேன் . இந்தத் தொடர் பலவாசகர்களை சென்றடைந்து , தொடரின் நோக்கம் நிறைவேறியதில் மிகவும் மகிழ்சி அடைகின்றேன் . இத்தொடருக்கு ஆதரவினை வளங்கிய அனைத்து கள உறவுகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் .

நேசமுடன் கோமகன்.

***************************************************************************

[size=5] 63 விறன்மிண்ட நாயனார் . [/size]

viranmindar.jpg

“விரிபொழில்சூழ் குன்றையர் விறன்மிண்டர்க் கடியேன்” – திருத்தொண்டத் தொகை .

சேரநாட்டுச் செங்குன்றூரில் வேளான்குடி விளங்க அவதரித்தவர் விறன்மிண்டர். அவர் சிவனடியே பற்றாகப் பற்றி ஏனையபற்றெல்லாவற்றையும் முற்றாகத் துறந்தவர். சிவனடியாரிடத்தே பெரும் பக்தி பூண்டவர்.

திருத்தலம் தோறும் சென்று வழிபாடாற்றும் வழக்கமுடைய இப்பக்தர் முதலில் திருக்கூட்டத்தை வணங்கிப் பின்னரே கோயிலுட் சென்று வழிபடும் நியமத்தினர். இக்கொள்கையை விடாதுபின்பற்றும் விறன்மிண்டர் சேரநாட்டுத் தலங்களை வழிபட்டு சோழநாட்டுத் திருத்தலங்களையும் வணங்கும் காதலால் திவாரூர்த்தலத்தை அடைந்து அங்கு சில நாள் தங்கினார். அந்நாளில் திருவாரூர்த் தேவாசிரிய மண்டபத்தில் வீற்றிருந்த திருக்கூட்டத்தைக் கண்டு ஒருவாறு ஒதுங்கிச் சென்ற சுந்தரமூர்த்தி சுவாமிகளைக் கண்ணுற்றதும், ‘இவன் திருக்கூட்டத்தாரை வழிபடாது கோயிலுட் செல்கின்றாதானதால் திருக்கூட்டத்திற்கு இவனும் புறகு; இவனையாண்ட சிவனும் புறகு என்று கூறினார். விறன்மிண்டரது அடியார் பக்தித் திறத்தை அறிந்த சுந்தரமூர்த்தி சுவாமிகள், திருவாரூர்க் கோயிலுட் புகுந்து தியாகராசப் பெருமானைக் கும்பிட்டு நிற்கும்போது “அடியேன் இவ்வடியார்க்கெல்லாம் அடியானாகும் நாள் என்று” வேண்டுதல் செய்தார். அப்பொழுது பெருமான் “நாம் அடியாருடன் உளோம்;

அடியாரைப்பாடு என்றருளி “தில்லைவாழந்தணர்” என அடியெடுத்துக் கொடுத்தார். சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேசமெல்லாம் உய்வதற்கு காரணமானதும், சைவநெறியின் சீலம் விளங்கச் செய்வதுமான திருத்தொண்டத் தொகைத் திருப்பதிகத்தை “தில்லைவாழந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்” என்பதை முதலாகக் கொண்டு பாடியருளினார்.

இவ்வண்ணம் சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருத்தொண்டத்தொகை பாடுவதற்குக் காரணமாய் அமைந்த விறண்மிண்டநாயனார், பெருமாள் அருளால் திருவடி நிழலை அடைந்து கணநாதராய் விளங்கும் பேற்றினைப் பெற்றார்.

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D

வணக்கம் கள உறவுகளே !

இந்த இறுதிப் பதிவுடன் " மறந்த நாயன்மார் அறுபத்துமூவர் " என்ற தொடரை முடிவுக்குக் கொண்டு வருகின்றேன் . இந்தத் தொடர் பலவாசகர்களை சென்றடைந்து , தொடரின் நோக்கம் நிறைவேறியதில் மிகவும் மகிழ்சி அடைகின்றேன் . இத்தொடருக்கு ஆதரவினை வளங்கிய அனைத்து கள உறவுகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் .

நேசமுடன் கோமகன்.

***************************************************************************

:) :) :)

மிகவும் பயனுள்ள ஒரு திரியை ஆரம்பித்து (முக்கியமாக பாடசாலையில் படிக்கும் மாணவர்களுக்கு) அதனை இடையில் கைவிடாது நிறைவு செய்தமையையிட்டு சக கள உறவு என்ற வகையில் உங்களுக்கு என் நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

நிச்சயமாக இத்திரியின் நோக்கம் பலரை சென்றடைந்திருக்கும். :)

  • தொடங்கியவர்

:) :) :)

மிகவும் பயனுள்ள ஒரு திரியை ஆரம்பித்து (முக்கியமாக பாடசாலையில் படிக்கும் மாணவர்களுக்கு) அதனை இடையில் கைவிடாது நிறைவு செய்தமையையிட்டு சக கள உறவு என்ற வகையில் உங்களுக்கு என் நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

நிச்சயமாக இத்திரியின் நோக்கம் பலரை சென்றடைந்திருக்கும். :)

மிக்க நன்றிகள் காதல் உங்கள் கருத்துக்களுக்கு . நீங்கள் கூறியவாறு பாடசாலை மாணவர்களையே குறிவைத்தேன் . எங்களுக்கே பல நாயன்மார்களது கதைகள் தெரியவில்லை . புத்தன் சொல்லியவாறு ஒருசில நாயன்மார்கள் நட்சத்திர அந்தஸ்த்து கொண்டவர்களாகவும் , இன்னும் பலர் பல குண இயல்புடையவர்களாகவும் வாழ்ந்திருக்கின்றார்கள் . அவர்களை வெளிச்சம் போட்டுக் காட்டுவது எங்களது கடமையாகும் . உங்கள் நேரத்திற்கும் வரவிற்கும் நன்றிகள் .

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் நன்றிகள், கோமகன்!

கசப்பான மாத்திரைகளை, இனிப்புடன் கலந்து குழந்தைகளுக்குக் கொடுப்பது போல, மிகவும் அழகாகத் தொகுத்தளித்துள்ளீர்கள்!

பெரும்பாலும், அற்புதங்களையே, நாயன்மார்கள் ஊடாக, இறைவன் நடத்திக்காட்டினார்!

இங்கேயும், அவரால் பாரபட்சங்கள் காட்டப் படுவதும் அப்பட்டமாகத் தெரிகின்றது!

அப்பர், ஒரு பிராமணரல்லாத நாயன்மாராவார்!

அதற்காக, அவர் மீது நடத்தப் பட்ட சோதனைகள், கருணை இல்லாதவை! சுண்ணாம்புச் சூளைக்குள் கூட விடப்பட்டார்! துருப்பிடித்த திருக்கதவு, திறக்கும் சம்பவத்தில், அவரே மனம் பொறுக்காமல் சம்பந்தரிடம், நேரில் கேட்டு விடுகின்றார்!

அடுத்தது, காரைக்காலம்மையார்!

ஒரு பெண்ணாகப் பிறந்ததற்காக, இவர் மீது நடத்தப் பட்ட சோதனைகள், ஏராளம்! இறுதியாகத் தனது பெண் வடிவம் துறந்து, பேய் வடிவமெடுத்த பின்பே நாயன்மாராகின்றார்!

ஆனால் சுந்தரர், பிராமண குலத்தில் பிறந்ததால், இரண்டாவது திருமணம் கட்டியது மட்டுமன்றி, அவருக்கு இறைவனால் இலவசமாக அளிக்கப் பட்ட, நெல்லுக்கு, அதைத் தன் வீட்டுக்குக் கொண்டுவந்து தரும்படி கேட்குமளவுக்கு, உரிமை இருந்திருக்கின்றது!

நீள நினைந்தடியேன், உனை நித்தலும் கை தொழுவேன்,

வாளன கண்மடவாள், அவள் வாடி வருந்தாமே,

கோளிலி எம்பெருமான்,குண்டையூர் சில நெல்லுப் பெற்றேன்,

ஆளிலை எம்பெருமானம், அதை அட்டித்தரப் பணியே!

இதே போல, எல்லாப் பிராமணரல்லாத நாயன்மாகளுக்கும், இது நடந்துள்ளது! கண்ணப்ப நாயனாரிலிருந்து, அடுக்கிக் கொண்டே போகலாம்! அவரவர் பிறந்த சாதிகளைப் பொறுத்தே, இறைவனது சோதனைகளின் கடுமையும் அமைந்திருக்கின்றதை, அவதானிக்கலாம்!

இந்தக் கருத்துக்கள், உங்கள் தொகுப்பைப் பற்றிய விமரிசனமல்ல!

எம்முடன், எமது சாபக் கேடாகச் சேர்ந்திருக்கும், இந்தச் சாதியமைப்பு, இந்த நாயன்மார் வரலாறுகளிலும், எதிரொலித்து இருக்கின்றது, என்னும் எனது ஆதங்கத்தின் வெளிப்பாடே! :wub:

Edited by புங்கையூரன்

  • தொடங்கியவர்

" இதே போல, எல்லாப் பிராமணரல்லாத நாயன்மாகளுக்கும், இது நடந்துள்ளது! கண்ணப்ப நாயனாரிலிருந்து, அடுக்கிக் கொண்டே போகலாம்! அவரவர் பிறந்த சாதிகளைப் பொறுத்தே, இறைவனது சோதனைகளின் கடுமையும் அமைந்திருக்கின்றதை, அவதானிக்கலாம்! "

மிக்க நன்றிகள் உங்கள் நேரத்திற்கும் , கருத்துக்களுக்கும் . உங்களைப் போலவே எனக்கு இந்த நாயன்மார்களது வரலாறுகளில் நிறையவே முரண்பாடுகள் இருந்தாலும் , " நீங்கள் யாராக இருந்தாலும் எனது சன்னிதானத்தில் சமமானவர்களே " என்ற செய்தி இறைவனால் வழங்கப்படுகின்றது . இடையில் வந்த வர்ணாச்சிரமக் கொள்கைகளே நாயன்மாரைப் பிரித்தது என்றே நினைக்கின்றேன் . இதற்காக சில சம்பவங்கள் மிகைப்படுத்தப்பட்டுள்ளன போல் உள்ளது . நந்தனாரை புலையனாக ஒதுக்கிய கூட்டம் பின்பு அதே நந்தனாரை நாயனார் ஆக்கியது முரண் நகை . வர்ணாச்சிரமம் அந்தப்பழியை சுலபமாக இறைவனில் போட்டது .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.